இரானில் தாராளவாத போக்குடைய விரிவுரையாளர்கள் நீக்கப்பட வேண்டும் – இரான் அதிபர்
![]() |
![]() |
தாராளவாத ஆசிரியர்களை நீக்க மாணவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும் – இரான் அதிபர் |
இரானில் தாராளவாத மற்றும் மதச்சார்ப்பற்ற பல்கலைகழக விரிவுரையாளர்கள் நீக்கப்பட வேண்டும் என இரான் அதிபர் மெஹமுது அஹெமெதிநிஜத் அழைப்பு விடுத்துள்ளார்.
தாராளவாத சிந்தாந்தப் பேராசிரியர்கள் நீக்கபட வேண்டும் என்று கோரி கடந்த 1980ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பிரச்சாரத்தினை போன்று தற்போதைய பிரச்சாரங்களை ஒருங்கிணைக்கப்படவேண்டும் என்று மாணவர்கள் குழு ஒன்றிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இரானில் நூற்று ஐம்பது ஆண்டுகளாக இருக்கும் மதச்சார்பற்ற பாதிப்புகளை மாற்றியமைப்பது கடினமாக இருக்கின்றது எனக் குறை கூறிய இரான் அதிபர், ஆனால் மாற்றங்கள் ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாகவும் கூறினார்.
டெஹ்ரான் பல்கலைகழகத்தினை வழிநடத்த கடந்த ஆண்டு மதத் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டார். கடந்த சில மாதங்களில் ஏராளமான தாராளவாத போக்குடைய பேராசிரியர்கள் மற்றும் கல்விமான்கள் ஒய்வு கொடுத்து அனுப்பபட்டுள்ளனர்.