ரூ.150 கோடியில் புதிய மகாபாரத படம்: பாஞ்சாலியாக ராணிமுகர்ஜி; பீஷ்மராக அமிதாப்
தொலைக்காட்சி தொடரில் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியது மகா பாரதம் தொடர். 1988-ம் ஆண்டு ஒளிபரப்பாகி இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மகா பாரதத் தொடர் 120 இந்திய மொழிகளிலும், 88 வெளிநாட்டு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ஒளிபரப் பப்பட்டது.
ரவி சோப்ரா இந்த மெகா தொடரை இயக்கி தொலைக் காட்சி சரித்திரத்தில் இடம் பிடித்தார்.
இந்த “மகாபாரதம் சீரியலை அப்படியே சினிமாவாக தயா ரிக்க முடிவு செய்துள்ளார். இந்திப் பட உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரை இந்த படத்தில் நடிக்க வைக்க திட்ட மிட்டுள்ளனர்.
மகா பாரதத்தின் முக்கிய கதாபாத்திரமான பாஞ்சாலி வேடத்தில் ராணிமுகர்ஜியை நடிக்க வைக்கவும், பீஷ்மர் வேடத்தில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்கவும் முயற்சித்து வரும் சோப்ரா அதற்காக அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
சினிமா உலகிலேயே இது வரை இல்லாத அளவுக்கு மிக நீண்ட நேரம் ஓடும் படமாக இப் படம் தயாராக உள்ளது. குறைந்தது ஆறு மணி நேரம் ஓடும் அளவுக்கு மகாபாரத படம் தயாரிக்க உள்ளது.
இந்தி மொழியில் தயாராகும் இப் படத்திற்கு ரூ.150 கோடி வரை செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹாலிவுட்டிலிருந்து ஸ்பெஷல் எபெக்ட் கலைஞர்கள் வர வழைக்கப்பட்டு மந்திர தந்திர காட்சிகள் உருவாக்கப்பட உள்ளன.
அடுத்த ஆண்டு மகாபாரதம் படத்தின் ஷுட்டிங்கை சோப்ரா தொடங்க உள்ளார்.