Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘local body elections’ Category

District Collectors: Sales Tax vs Income Tax – Loopholes, Corruption, Kickbacks in Local Administration

Posted by Snapjudge மேல் மார்ச் 10, 2008

புன்னகைக்கும் பொய் ரசீதுகள்

இரா. சோமசுந்தரம்

சில நாள்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா அலுவலகம் சென்றபோது, அங்கே ஒரு வட்டாட்சியரிடம் ஒருவர் கடுமையான கோபத்தில் திட்டிக் கொண்டிருந்தார்.

ஆனால் அந்த வட்டாட்சியரோ, “”ஒண்ணும் ஆயிடாதுங்க” என்று சமாதானம் செய்து, பேசுபவரின் குரலை மட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

இருந்தும்கூட, அடக்கமுடியாத கோபமும் அச்சமுமாக தொடர்ந்து கொட்டித் தீர்த்த அந்த நபர், “”இன்னும் எந்தெந்த டிபார்ட்மென்ட்லிருந்து எனக்கு என்கொயரி வருமோ? என் ரசீது புஸ்தகத்தை கொடுங்கய்யா” என்று கேட்டும் கிடைக்காததால், மறுபடியும் திட்டிக்கொண்டே வெளியேறினார்.

சுமார் அரைமணி நேரத்துக்கு அந்த அலுவலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இச்சம்பவம் குறித்து விசாரித்ததில் தெரியவந்தது இதுதான்:

2006-ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது, இந்த தாலுகா அலுவலகம் சில படிவங்களை அச்சிட்டதாக சுமார் ரூ.80 ஆயிரத்துக்கு ரசீதுகள் செலவுக் கணக்கில் காட்டப்பட்டுள்ளன.

உள்ளாட்சித் தணிக்கைத் துறை அலுவலர்கள் இதனைத் தணிக்கை செய்தபோது, யாரோ ஒரு நேர்மையான அலுவலர், இந்த செலவுக்கு ஆட்சேபக் குறிப்பை எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் – “”எல்லா படிவங்களும் தேர்தல் ஆணையம் அச்சிட்டுத் தரும்போது, தாலுகா அளவில் எத்தகைய படிவம் அச்சிடப்பட்டது என்பதற்கான சான்றுகள் அளிக்கப்படவில்லை. வாக்காளர்களுக்கு அறிவுரை என்ற நோட்டீஸ் அச்சிடப்பட்டதாக கூறப்பட்டபோதிலும், அதற்கு ரூ.2000-க்கு மேல் செலவாகியிருக்க வாய்ப்பு இல்லை. ஆகவே இந்தச் செலவினத்தை ஆட்சேபிக்கிறேன்” என்று அந்தக் குறிப்பில் அவர் எழுதியுள்ளார்.

உள்ளாட்சித் தணிக்கைத் துறையின் அறிக்கைகள் வழக்கமாக உயர்அதிகாரிகளுக்கும் அரசுக்கும் அனுப்பப்படும் என்பதோடு, தலைமை கணக்கு தணிக்கை (ஏ.ஜி.) அலுவலகத்துக்கும் ஒரு நகல் அனுப்பப்பட வேண்டும்.

அப்படி அனுப்பப்பட்ட இந்த ஆட்சேபக் குறிப்பை கண்ட, தலைமை கணக்கு தணிக்கை அலுவலக அதிகாரி ஒருவர், “”சுமார் 15 நாள்களில் ரூ.80 ஆயிரத்துக்கு அச்சிடும் இத்தகைய அச்சகம், ஓராண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கக்கூடும்! இந்த அச்சகம் முறையாக வருமான வரி செலுத்தியுள்ளதா என்பதை ஆய்வு செய்யலாம்” என்று மற்றொரு குறிப்புடன் வருமான வரித்துறைக்கு அனுப்பிவிட்டார்.

வருமான வரித்துறை இத்தனை விஷயங்களையும் குறிப்பிட்டு, மொத்தக் கணக்குகளுடன் நேரில் வரவும் என்று அச்சக உரிமையாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

வட்டாட்சியரிடம் கடும் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தவர் அச்சகத்தின் உரிமையாளர். அந்த அச்சகமோ அந்த நகரத்திலேயே மிகச் சிறிய அச்சு இயந்திரத்தை வைத்து, கல்யாணப் பத்திரிகை அச்சடித்து வருவாய் ஈட்டும் மிகச் சிறிய அச்சுக்கூடம். வருமானத்துக்கே திண்டாடும் அவருக்கு வருமான வரித்துறையின் நோட்டீஸ் வந்தால் எப்படி இருக்கும்?

இச்சம்பவம் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சியைத் தந்தது. நியாயம் செத்துப்போவதில்லை. உண்மைகள் கொஞ்ச காலம் உறங்கலாம். ஆனால் அது ஒரு நாள் விழிக்கவே செய்கிறது. “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகிறது’. ஆனால் அப்போதே, உடனே அல்ல. சரி, வாழ்க்கையொன்றும் திரைப்படம் அல்லவே, உச்சக் காட்சியில் நொடியில் தர்மம் வெற்றிபெற!

இது குறித்து மேலும் விசாரித்தபோது இன்னொரு தகவலும் தெரியவந்தது. இத்தகைய ரசீதுகள் தொடர்பான ஆட்சேபக் குறிப்புகளை, விற்பனை வரிப்பிரிவினர்தான் முதலில் கையில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் வருமான வரித்துறை கையில் எடுத்திருப்பதைப் பார்க்கும்போது, மாநில அரசு, விழிப்புடன் இல்லை என்றாகிறது.

இத்தகைய போலி ரசீதுகள் உள்ளாட்சி முழுவதிலும் அதிக அளவில் இருக்கின்றன. விற்பனை வரித் துறை அதிகாரிகள் விசாரித்தால், பல பூதங்கள் வெளிக்கிளம்பும் என்கிறார்கள்.

உள்ளாட்சித் துறைகளில் ரசீதுகள் மூலம் பல கோடி ரூபாய் திசைமாறுகிறது. இதற்கு அடிப்படையான காரணம் மாவட்ட ஆட்சியர் வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட விலைப்பட்டியல்தான்.
அரசுக்குத் தேவையான பொருள்கள் வாங்கும்போது கூட்டுறவுத் துறை நிறுவனங்கள் நீங்கலாக அங்கீகரிக்கப்பட்ட பிற நிறுவனங்கள் எவை, அவற்றில் எந்தெந்த பொருள்களுக்கு என்ன விலை என்று மாவட்ட ஆட்சியர் அங்கீகரிக்கும் இந்த விலைப்பட்டியலை ஆதாரமாக வைத்துத்தான் தணிக்கை செய்யப்படுகிறது.

நிறுவனம் பட்டியலில் உள்ளதா, விலை சரியா என்பதை மட்டுமே தணிக்கை அலுவலர்கள் சரிபார்க்க முடியும். இந்த நிறுவனம் வெறும் “”ரசீது நிறுவனமா” என்பதை ஆய்வு செய்ய இயலாது.

பொதுச்சந்தையில் ஒரு பொருள் விற்கப்படும் விலையைக் காட்டிலும் குறைந்தது 10 சதவீதம் கூடுதல் விலையே இந்த அங்கீகரிக்கப்பட்ட விலைப் பட்டியலில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதில் சந்தேகம் இருக்குமானால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரூ.10 செலுத்தி, அந்தப் பட்டியலை வாங்கிப் பார்த்தால் நிறுவனங்களும் விலைகளும் வெளிச்சமாகிவிடும் என்கிறார்கள்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத்தான் போறேன். வர்றீங்களா?

Posted in Administration, administrative units, Audit, Bribery, Bribes, Circle Inspector, Collections, Collector, Collectorate, Corruption, Departments, Dept, District, District Collectors, Elections, Govt, IAS, Income, Inefficiency, Inspection, Inspectors, Investigations, IT, kickbacks, local, Local Body, Local Body election, local body elections, Local Body Polls, Local Civic Body, Local Elections, Local Polls, Local self Governance, Loopholes, Notices, officers, Politics, Polls, revenue collection, Revenue District, Revenues, Reviews, sarkeel, Somasundaram, Somasundharam, Somasuntharam, ST, Tahsil, Taluk, Taluka, Taluq, Tax, Union, zilla collector | Leave a Comment »

99 Chennai Corpn councillors to resign – DMK, allies ready to face re-election in 99 wards

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2007

300 ஆண்டுகளைக் கடந்த சென்னை மாநகராட்சியில் 5 ஆண்டுகளில் 2-வது முறையாக மேயர் இல்லாத நிலை

பா. ஜெகதீசன்

99 கவுன்சிலர்கள் ராஜிநாமாவால் மாநகராட்சி மன்றம் செயல் இழந்தது

சென்னை, ஜன. 18: சென்னை மாநகராட்சியில் மேயர் இல்லாத நிலை கடந்த 5 ஆண்டுகளில் 2-வது முறையாக உருவாகிள்ளது.

தற்போது 99 கவுன்சிலர்களும் ராஜிநாமா செய்வதால், மாநகராட்சி மன்றம் அடியோடு முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவர், 99 வார்டுகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார். அதன் எதிரொலியாக மேயர் உள்பட 99 கவுன்சிலர்கள் ராஜிநாமா செய்கின்றனர்.

300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட சென்னை மாநகராட்சியில் இப்படி ஒட்டுமொத்தமாக-ஒரே நேரத்தில் 99 கவுன்சிலர்கள் ராஜிநாமா செய்வது என்பது இதுவே முதல்முறை.

வரலாறு: தமிழகத்தில் 1967-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, 1959-ல் சென்னை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றி, ஆளும் கட்சி ஆகியது.

24.4.1959-ல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அ.பொ. அரசு வென்றார். சென்னை மாநகராட்சியின் முதல் தி.மு.க. மேயர் அவர்.

பிறகு, 30.11.1971-ல் நடைபெற்ற மேயர் தேர்தலில் காமாட்சி ஜெயராமன் (தி.மு.க.) வென்றார்.

ஒட்டுமொத்த கலைப்பு: மாநகராட்சியில் எழுந்த ஊழல் புகாரை அடுத்து, மாநகராட்சி மன்றத்தைக் கலைப்பதாக 20.11.1973-ல் சட்டப் பேரவையில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

சென்னை மாநகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதன் பிறகு பல ஆண்டுகளாகத் தேர்தல் நடத்தப்படவில்லை. இவை தனி அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் பல ஆண்டுகள் இயங்கின.

எம்.ஜி.ஆர். ஆட்சியில் 23.2.1986-ல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. சென்னை மாநகராட்சிக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.

தேர்தல் வந்தது: 23 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த சென்னை மாநகராட்சித் தேர்தலையும், பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த இதர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களையும் 1996 அக்டோபரில் தி.மு.க. அரசு நடத்தியது.

அதில் தி.மு.க.-த.மா.கா. அணி வென்றது. சென்னையின் 44-வது மேயராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2001 உள்ளாட்சித் தேர்தலின்போது சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் ஸ்டாலின் 2-வது முறையாக வென்றார். ஆனால், மன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் அ.தி.மு.க. அணி அதிக இடங்களை வென்று, ஆளும் கட்சியாகியது. அதனால் நிர்வாக ரீதியாக சிக்கல்கள் எழுந்தன.

ஒருகட்டத்தில் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மேயர் பதவியில் இருந்து ஸ்டாலின் நீக்கப்பட்டார். துணை மேயராக இருந்த கராத்தே தியாகராஜன் மேயர் பொறுப்பை வகித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருந்தும் மேயர் இல்லாத நிலை மாநகராட்சியில் முதல்முறையாக ஏற்பட்டது.

தற்போதைய நிலை: மன்றத்தில் ஏற்கெனவே அ.தி.மு.க. உறுப்பினர்கள் ராஜிநாமா செய்ததால் 2 இடங்கள் காலியாக உள்ளன. தற்போது 99 பேர் ராஜிநாமா செய்வதை அடுத்து, காலியிடங்களின் எண்ணிக்கை 101-ஆகிறது. மேயர் இல்லாத நிலையில் -எஞ்சிய 54 கவுன்சிலர்களைக் கொண்டு மன்றக் கூட்டத்தை நடத்த முடியாது. எனவே, காலியாக உள்ள 101 வார்டுகளிலும் தேர்தல் நடைபெற்று, கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை மன்றம் செயல்பட முடியாது என மாநகராட்சி மன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னை மாநகராட்சி ராஜிநாமா செய்யும் 99 கவுன்சிலர்களில் திமுக-58; காங்-25; பா.ம.க-13 பேர்

சென்னை, ஜன. 18: உயர் நீதிமன்ற நீதிபதி கலிஃபுல்லா அளித்த தீர்ப்பின் எதிரொலியாக சென்னை மாநகராட்சியில் இருந்து ராஜிநாமா செய்யும் 99 கவுன்சிலர்களில் 58 பேர் திமுகவினர்.

திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் 25 பேர். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 13 கவுன்சிலர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 2 கவுன்சிலர்களும் ராஜிநாமா செய்கின்றனர்.

தி.மு.க. கூட்டணியைச் சாராத பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் ராஜிநாமா செய்கிறார்.

சென்னை மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

இதைத் தொடர்ந்து அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த 2 நீதிபதிகளில் ஒருவரான கலிஃபுல்லா சென்னை மாநகராட்சியில் 99 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்ப்பு கூறினர்.

மாநகராட்சியின் 155 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியினர் 149 இடங்களில் வெற்றி பெற்றனர். மற்ற கட்சிகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றனர். அதன் விவரம்:

  • திமுக- 90,
  • காங்கிரஸ் -38,
  • பாமக -17,
  • அதிமுக -4,
  • இந்திய கம்யூனிஸ்ட் -2,
  • விடுதலைச் சிறுத்தைகள் -2,
  • மதிமுக -1,
  • பகுஜன் சமாஜ் -1.

தற்போது மேயர் மா. சுப்பிரமணியன் உள்பட 99 கவுன்சிலர்களும் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

ராஜிநாமா செய்தவர்களைத் தவிர மன்றத்தில் தற்போது இடம் பெற்றுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை விவரம்:

  • திமுக-36,
  • காங்கிரஸ்-13,
  • பாமக- 4,
  • சுயேச்சை -1,
  • காலியிடங்கள் -2

முக்கியமானவர்கள்: 140-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மேயர் மா. சுப்பிரமணியன், எம்.ஜி.ஆர். நகரில் 130-வது வார்டில் வெற்றி பெற்ற கே. தனசேகரனும் ராஜிநாமா செய்கின்றனர்.

மாநகராட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வென்று பின்னர் திமுகவில் இணைந்த சுபாஷ் சந்திரபோஸ், மதிமுக சார்பில் வென்று பின்னர் திமுகவில் இணைந்த கன்னியப்பன் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்கின்றனர்.

Posted in 99, ADMK, AIADMK, Assembly Election, Backgrounder, Bahujan Samaj Party, BSP, bypoll, Chennai, Civic Polls, Court, CPI, CPI (M), Dalit Panthers, DMK, Elections, History, Judge, Justice, Karunanidhi, local body elections, M Subramanian, Madras, Mayor, MDMK, MLC, Order, Pattali Makkal Katchi, PMK, Re-election, Tamil Nadu, TN, Viduthalai Chiruthaigal, Viduthalai Siruthaigal | Leave a Comment »

Can Sharad Pawar become Prime Minister of India?

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

சரத் பவார் பிரதமர் ஆக முடியுமா?

நீரஜா செüத்ரி – தமிழில்: லியோ ரொட்ரிகோ

கடந்த வாரம் பிரிட்டனின் பிபிசி வானொலிக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார். அதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை வெகுவாகப் புகழ்ந்திருந்தார். காங்கிரஸ் கட்சிக்கு சோனியா ஆற்றியுள்ள சேவையையும், அவரது துணிச்சலையும் இந்திய நாட்டின் பிரச்சினைகளை அவர் புரிந்துகொண்டிருப்பதையும் பவார் பெரிதும் பாராட்டியிருந்தார். அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறியதால் தான் “ஒரு விலையைக் கொடுக்க’ நேர்ந்தது என்று அவர் ஒப்புக்கொண்டுமிருந்தார்.

மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பவாரின் கட்சியும் அங்கம் வகிக்கிறது; மத்திய வேளாண் துறை அமைச்சராகவே இடம்பெற்றுள்ளார் பவார். எனவே, சோனியாவை அவர் புகழ்ந்து பேசியிருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்த வேண்டிய காரணம் ஏதும் இல்லை. ஆனால், அதற்கு மாறாக, அவரது பேட்டிக்குப் பலப்பல அர்த்தங்கள் கூறப்படுகின்றன.

நேரு ~ காந்தி குடும்பத்தினருடன் பவாருக்கு அவ்வளவு சுமுக உறவு இருந்ததில்லை. வெளிநாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட சோனியா எப்படி நமது நாட்டின் பிரதமர் ஆகலாம் என்று கேள்வி எழுப்பியதன் காரணமாக காங்கிரûஸ விட்டு வெளியேறியவர் பவார். இருந்தபோதிலும் மகாராஷ்டிரத்திலும் தேசிய அளவிலும் மக்கள் அளித்த தீர்ப்பைப் புரிந்துகொண்டு பக்குவத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார். இந் நிலையில், சோனியாவைப் புகழ்ந்து பவார் பேசியிருப்பது பல ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

ஒன்று: காங்கிரஸ் கட்சியில் அவர் மீண்டும் இணைவதற்கான அடித்தளத்தை அமைக்கவே அவர் இவ்வாறு பேசியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால், இது முற்றிலும் ஏற்புடையதாக இல்லை. மகாராஷ்டிரத்தில் சிவ சேனைக் கட்சி பிளவுபட்டு, பால் தாக்கரேயின் செல்வாக்கு சரிந்துகொண்டு இருக்கும் நிலையில், மாநிலத்தின் தனிப் பெரும் தலைவராக உயர்ந்து நிற்பவர் சரத் பவார் மட்டுமே ஆவார். தேசியவாத காங்கிரஸ் என்றாலே சரத் பவார்தான். மிகப் பெரும் செல்வாக்குடனும் தனித்துச் செயல்படும் சுதந்திரத்துடனும் இருக்கும் அவர், மீண்டும் காங்கிரஸில் இணைய வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை.

இரண்டு: மும்பை மாநகராட்சித் தேர்தல் வரவிருப்பதால், அதை மனத்தில் கொண்டு சோனியாவை அவர் புகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கேரளத்தின் பட்ஜெட்டுக்குச் சமமான வரவு ~ செலவுகளைக் கொண்டதாக மும்பை மாநகராட்சி இருக்கலாம்; ஆனால், மாநகராட்சி அரசியலைக் கடந்த பெரிய தலைவராகிவிட்டார் பவார்; எனவே, சிவசேனை ~ பாஜக கூட்டணியிடமிருந்து மும்பை மாநகராட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், காங்கிரஸிடமிருந்து ஒருசில சீட்டுகளை அதிகம் பெறுவதற்காக பவார் அவ்வாறு பேசியிருப்பார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம்.

மூன்று: அண்மையில் மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது மகள் சுப்ரியா சுலேவின் அரசியல் எதிர்காலத்தை மனத்தில் வைத்து சோனியாவை பவார் புகழ்ந்து பேசியிருக்கலாம் என்னும் கருத்து. தேசியவாத காங்கிரஸ் போன்ற பிராந்தியக் கட்சிக்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்வது சுப்ரியாவுக்குப் பெரும் சவாலான பிரச்சினை. அதோடு, இத்தனை ஆண்டுகளாக சரத் பவாரால் வளர்த்து உருவாக்கப்பட்டுள்ள அவரது சகோதரர் மகன் அஜீத் பவாருக்கும் கட்சியில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. அதிகாரத்துக்காக அவருடன் போட்டியிட வேண்டிய நிலைகூட சுப்ரியாவுக்கு ஏற்பட்டுவிடலாம். மேலும், பல ஆண்டுகள் வெளிநாட்டில் வாழ்ந்ததால் உலக நடப்புகளை நன்கு அறிந்துவைத்திருப்பவர் சுப்ரியா சுலே; ஆங்கிலத்தில் நல்ல திறமை உடையவர்; ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றில் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் உடையவர்; தொண்டர்கள் எளிதில் அணுகக்கூடியவராக இருப்பவர்; இந்த அனுபவங்களால், இப்பொழுதே அவரிடம் நல்ல அரசியல் முதிர்ச்சி தெரிகிறது. எனவே, தேசிய அரசியலுக்கே அவர் மிகவும் ஏற்றவராக இருப்பார் என சரத் பவார் கருதியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஆனால், மகாராஷ்டிர அரசியலில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ அவருக்குத்தான் தில்லியிலும் செல்வாக்கு இருக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதோடு, மகாராஷ்டிரத்தில் ஒருவர் ~ தில்லியில் ஒருவர் என கட்சியின் அதிகாரத்தை மகளுக்கும் சகோதரர் மகனுக்கும் இடையே பங்கு போடுவதும் நடைமுறையில் சாத்தியமில்லாதது என்பதை அறியாதவரல்லர் சரத் பவார்.

நான்கு: பவார் ஒன்றைச் சொல்கிறார் என்றால், அதற்கு நேர் எதிரானதையே அவர் மனத்தில் நினைத்திருக்கிறார் என்று பொருள் என்று இன்னொரு விளக்கத்தை அளிக்கின்றனர் அவரது அதிருப்தியாளர்கள். சோனியா காந்தியை அவர் புகழ்ந்து பேசுகிறார் என்றால், அவருக்கு எதிரான தாக்குதலை அவர் தீவிரப்படுத்தத் திட்டமிடுகிறார் என்று அர்த்தம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு எத்தனையோ விளக்கங்கள் கூறப்படுகின்றன. ஆனால் அதிகம் பேசாதவரான பவார், தனது உள்ளத்தில் இருப்பதை அவ்வளவு சுலபமாக வெளிப்படுத்திவிடக் கூடியவரல்லர். பலவிதத் திட்டங்கள் அவர் சிந்தனையில் இருக்கக்கூடும். 2009ம் ஆண்டிலோ அல்லது தேர்தல் நடக்கும் பொழுதோ என்னென்ன நிகழக்கூடும் என்பதை அவர் இப்பொழுதே கூறுவார் என எதிர்பார்க்க முடியாது. எத்தகைய சாத்தியக்கூறானாலும் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே அது அமையும்; என்றபோதிலும் சிறிது வாய்ப்புக் கிடைத்தால்கூட அதைப் பயன்படுத்தி நாட்டின் பிரதமர் பதவியை அடைய முடியுமா என்ற முயற்சியில் இறங்காமல் விடமாட்டார் பவார்.

அவ்வாறு அவர் பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறதா? பிராந்தியக் கட்சிகளின் ஒட்டுமொத்த பலம் கணிசமாக அதிகரித்து, பாஜகவும் பலவீனமான நிலையில் இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை தேர்தலுக்குப் பின்பு ஏற்பட்டால், நிச்சயமாக பிரதமர் ஆவதற்கான ஒரு வாய்ப்பு பவாருக்குக் கிடைக்கக்கூடும்; ஒருவேளை, காங்கிரஸýக்கும் பாஜகவுக்குக்கும் தலா 100 இடங்களுக்குக் குறைவாகக் கிடைத்து, பிராந்தியக் கட்சிகளும் இடதுசாரிக் கட்சிகளும் சேர்ந்து ஓர் அரசை அமைக்கக்கூடிய சூழ்நிலை உருவானாலோ; அல்லது, மிகவும் பலவீனமான நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டு, பாஜகவை அதிகார பீடத்திலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டிய கட்டாயத்தின் காரணமாக பிராந்தியக் கட்சிகள் அரசு அமைக்க ஆதரவு கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டாலோகூட சரத் பவாருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

இன்றைய நிலையில், பிராந்தியக் கட்சித் தலைவர்களிலேயே பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தலைவராக இருப்பவர் அனேகமாக பவாராகத்தான் இருக்கக்கூடும். முலாயம் சிங் யாதவ், ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு ஆகியோரிடையே ஒரு புதிய கூட்டணி ஏற்பட்டு இருப்பது தொடர்பான செய்திகள் அண்மை நாள்களாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்போதைக்கு “மூன்றாவது அணி’க்கு வாய்ப்பு இல்லை என்று பவார் கூறினாலும்கூட, அந்தப் புதிய கூட்டணியுடன் பவாரின் பெயரும் சேர்த்தே பேசப்படுகிறது. நிர்வாகத் திறன் மிக்கவரான பவாருக்கு, பல்வேறு கட்சித் தலைவர்களுடனும் நல்லுறவு உண்டு. எனவே, மேற்கூறிய சூழ்நிலைகள் உருவானால், பாஜகவுக்கும்கூட அவர் ஏற்புடையவராகவே இருப்பார். எனவே, சோனியா காந்தியுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள அவர் விரும்புவார் என்று கூறுவது வியப்பளிப்பதாக இருக்கிறது.

நரசிம்மராவ் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்திலிருந்தே அவர் ஒரு தேசியத் தலைவராக உருவெடுத்துவிட்டார். மகாராஷ்டிரத்தை அங்குலம் அங்குலமாக அறிந்த, மாநிலத்தின் மக்கள் தலைவராக இருக்கும் அதே நேரத்தில், அவரது அரசியல் பாணியானது மேல்நிலைக்குச் சென்றுவிட்டது.

பிரதமர் பதவி தனக்குக் கிட்டாமல் போய்விட்டால்கூட பரவாயில்லை; தனது மகளின் அரசியல் பாதை வலுவானதாக அமைக்கப்பட்டுவிட வேண்டும் என்று சரத் பவார் விரும்பக்கூடும். கட்சியில் அடுத்த தலைமுறைத் தலைவர்களை வளர்த்து உருவாக்குவதுதான் தனது முக்கிய கடமை என்று பிபிசி வானொலிக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தியை பவார் பாராட்டியிருப்பதை எந்தக் கோணத்தில் பார்த்தாலும், அதை நல்லுறவு நடவடிக்கையாகவும் பவாரின் பண்பட்ட அரசியலின் அடையாளமாகவுமே கருத முடியும்.

Posted in Agriculture, Bal Thackeray, BJP, Cabinet, Chandrababu Naidu, Civic Polls, Cong (I), Congress, Dinamani, Foreigner, Indira Congress, Jayalalitha, Lalloo, Lalu prasad Yadav, local body elections, maharashtra, Minister, Mulayam Singh Yadav, Mumbai, Narasimha Rao, NCP, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Nehru, New Delhi, Op-Ed, PM, Politics, Prime Minister, Sharad Pavaar, Sharad Pawar, Shiv Sena, Sonia Gandhi, Supriya Sule, Tamil | 1 Comment »

Congress Krishnasamy – ‘How many seats did AIADMK win in Tamil Nadu Civic Polls?’

Posted by Snapjudge மேல் நவம்பர் 16, 2006

ஜனநாயக படுகொலை என்று விமர்சித்து உள்ளாட்சி தேர்தலை குறை சொல்வதா? காங்.தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஜனநயாக படுகொலை நிகழ்த்தப்பட்டதாக சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இரா.செழியன் உள்ளிட்ட சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள

  • 4 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள்,
  • 80 ஆயிரம் வாக்குசாவடிகள் மூலமாக
  • 4லட்சம் பேர் வேட்பாளர்களாக போட்டி யிட்டு
  • 1 லட்சத்து 31 ஆயிரம் பதவிகளுக்கு தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு பதவியில் அமர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள

  • 472 மாநகராட்சி வார்டுகளில் 62பேரும்,
  • 4 ஆயிரத்து 374 நகராட்சி வார்டுகளில் 1016பேரும்,
  • 8 ஆயிரத்து 780 வார்டுகளில் 1643 வார்டுகளிலும்,
  • 6589 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 1417 வார்டுகளிலும்
  • மாவட்ட ஊராட்சி வார்டுகளில் 157 வார்டுகளிலும் அ.தி.மு.க. கட்சியின் சார்பாக போட் டியிட்டவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட் டுள்ளார்கள்.

நடந்து முடிந்த தேர்தலிலே ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டதாக குரல் எழுப்புகிற இவர்களின் வாதத்தில் உண்மை இருக்குமேயானால் அ.தி. மு.க.வை சேர்ந்தவர்கள் இந்த அளவு எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருக்க முடியுமா என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு இருக் கிறது.

சென்னை மாநகராட் சிக்குட்பட்ட சில வார்டுகளில் கலவரங்கள் நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத் திற்கு கொண்டு செல்லப்பட்டு 17 வாக்குசாவடிகளில் மறு தேர்தல் நடத்தப்பட்டன. அதற்குப் பிறகு நீதிமன்ற ஆணைக்கேற்ப சென்னை மாநகராட்சியில் உள்ள 155 வார்டுகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த தேர்தல் முடிவு என் பது நீதிமன்ற ஆணையின் அடிப்படையில்தான் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டது என் பதை உணராமல் தேர்தல் முடிவுகளை கொச்சைப் படுத்துகிற வகையில் பேசு வது உயர்நீதிமன்றத்தை அவமதிக்கிற செயலாகும்.

மக்களை திசை திருப்ப உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்ற 3கோடி வாக்காளர் களை அவமதிக்கும் செயலாக வும் கருதப்படும்.

இவ்வாறு கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

Posted in ADMK, AIADMK, Chennai, Civic Polls, Condemn, Congress, Congress (I), Corporation, Era Sezhiyan, Indira Congress, Iraa Sezhiyan, Jayalalitha, Krishnasaamy, Krishnasamy, Krishnaswamy, local body elections, Madras, Meeting, Municipality, seats, Tamil Nadu | Leave a Comment »

Sathyabama – Biosketch : Chennai’s New Deputy Mayor

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

துணை மேயர் சத்யபாமாவின் எதிர் நீச்சல் வாழ்க்கை: குடிசைப் பகுதியில் இருந்து ரிப்பன் மாளிகை வந்தார்

சென்னை, நவ. 1-

சென்னையின் `வெள்ளை மாளிகை’ என்றழைக்கப்படும் மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டிடம் வரலாற்று சின்னம் மட்டும் அல்ல. பெரிய பெரிய தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மேயராக, துணை மேயராக அமர்ந்து அலங்கரித்த இடம்.

அந்த ரிப்பன் மாளிகையில் சாதாரண சாமானிய ஏழைப் பெண் அதுவும் தலித் இனத்தைச் சேர்ந்த ஒருவர் துணை மேயராக அமர்ந்து சென்னை நகர மக்களுக்கு சேவை செய்ய வந்திருக் கிறார்.

44 வயதாகும் சத்யபாமா எழுதப்படிக்கத் தெரியாதவர். நெருக்கடி மிகுந்த பிராட்வே அருகே உள்ள ஆசீர்வாதபுரம் இவர் வசிக்கும் இடம். இது பங்களாக்கள் நிறைந்த இடம் அல்ல. குடிசைகள் நிறைந்த இந்தப் பகுதியில்தான் 10 அடி நீளம் 10 அடி அகலம் உள்ள சிறிய வீட்டில் சத்யபாமா வசிக்கிறார்.

தலித் இனத்தைச் சேர்ந்த இவர் வறுமையால் சிறு வயதில் பள்ளிக்கு சென்று படிக்க முடியவில்லை. ஊது வத்தி தயார் செய்து கணவர் ரூபனுடன் வீடுகள், கடைகளில் படியேறி விற்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.

இவர்களுக்கு ராஜா (21) என்ற மகனும், ரம்யா (18) மகளும் உள்ளனர். ஊதுவத்தி விற்பனை மூலம் மாதம் ரூ. 2 ஆயிரம் வருமானம் வரும். இதை வைத்து சென்னை நகரின் குடும்பம் நடத்துவது கஷ்டம் என்பதால் மகன் ராஜா ஒரு நகை கடையில் வேலை பார்த்து ரூ. 2 ஆயிரம் சம்பாதிக்கிறான். ரம்யாவும் கடையில் வேலை செய்து தன் பங்குக்கு குடும்பத்துக்கு பண உதவி செய்கிறார்.

சத்யபாமாவும், கணவர் ரூபனும் ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க.வின் அனுதாபிகள். இந்த நிலையில் மாநகராட்சி தேர்தலில் தான் வசிக்கும் 25-வது வார்டுக்கு சீட் கிடைத்து வெற்றியும் பெற்றார்.

155 கவுன்சிலர்களுடன் இவரும் ஒருவராகத்தான் இருந்தார். வெற்றி பெற்ற பின்பு ஒருநாள் வீட்டில் குடும்பத்துடன் அமர்ந்து போர்ட்டபிள் டி.வி.யில் பார்த்துக் கொண்டு இருந்த போதுதான் சத்யபாமா துணை மேயராக அறிவிக்கப் பட்ட தகவலை தெரிந்து கொண்டார்.

குடிசைப் பகுதியில் இருந்து ரிப்பன் மாளிகைக்கு வந்தி ருக்கும் சத்யபாமா, தனது 44 ஆண்டு கால வாழ்க்கையில் பசி, பட்டினி, வறுமையை கண்டு கலங்காமல் எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்தவர்.

இனி சென்னை நகர மக் களுக்காக உழைத்து முதல்- அமைச்சர் கருணாநிதி, அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நல்ல பெயர் எடுத்துக் கொடுப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறினார் சத்யபாமா.

Posted in Biosketch, Chennai, Civic Polls, Dalit, Deputy Mayor, DMK, local body elections, Madras, Sathyabama, Tamil, Tamil Nadu | Leave a Comment »

M Karunanidhi : ‘No injustice to Alliance partners in the TN civic elections’

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2006

கூட்டணி கட்சிகளுக்கு திமுக துரோகம் செய்யவில்லை: கருணாநிதி

சென்னை, அக். 30: பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக துரோகம் செய்யவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவால் தோற்கடிக்கப்பட்ட இடங்கள் என்று ஒரு பட்டியல் பாமக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 29 மாவட்ட ஊராட்சித் தலைவர்களுக்கான இடங்களில் பாமகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சித் தலைவருக்கான தேர்தலில் பாமக வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார் என்று தெரிவித்திருக்கிறார்கள். பாமக வேட்பாளர்களைத் தோற்கடிப்பது தான் திமுகவின் நோக்கம் என்றால் காஞ்சிபுரம் தவிர்த்த கடலூர், தருமபுரி, விழுப்புரம், சேலம் ஆகிய 4 இடங்களிலும் அதாவது ஐந்தில் 4 மாவட்ட ஊராட்சித் தலைவர்களாக பாமகவினர் தான் திமுக கூட்டணி ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

காஞ்சிபுரத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக 14, அதிமுக 8, காங்கிரஸ் 5 இடங்களிலும் பாமக ஓரிடத்திலும் வெற்றி பெற்றிருந்தது. திமுக 14 இடங்களில் வெற்றிபெற்றிருந்த போதிலும் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தையின்போது காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி பாமகவுக்கு வேண்டும் என்று வலியுறுத்தியதன் பேரில் அவர்களுக்கே அந்த இடம் ஒதுக்கப்பட்டது. அங்கே போட்டி திமுக வேட்பாளர் ஒருவர் நின்று வெற்றி பெற்றிருக்கிறார். அவர் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கவிருக்கிறது.

ஒவ்வொரு கட்சியிலும் இருப்பதைப் போல் திமுகவில் உள்ள ஒரு சிலர் தவறு செய்திருக்கலாம். அப்படி செயல்பட்டவர்கள் மீது தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த நேரத்திலேயே பாமக அறிக்கை வெளியிடுவதற்கு முன்பாகவே திமுக எம்.எல்.ஏ.க்கள் அப்பாவு, உதயம் சண்முகம், கே.பி. ராமசாமி ஆகியோர் மீதும் மற்றும் ஒன்றியச் செயலர்கள், வெற்றிபெற்ற போட்டி வேட்பாளர்கள் உள்பட 20 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து அவர்களை நீக்க முடிவெடுத்து அனைத்து பத்திரிகையிலும் அச் செய்தி வெளிவந்திருக்கிறது.

காஞ்சிபுரம் நகராட்சித் தலைவராக திமுக சார்பில் போட்டியிட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஆறுமுகம் தோற்கடிக்கப்பட்டுள்ளார். அவரது தோல்விக்கு பாமகவும் தான் காரணம் என்று கூறப்பட்டாலும்கூட நான் ஏட்டிக்குப் போட்டியாக அவ்வாறு குற்றஞ்சாட்ட விரும்பவில்லை.

திண்டிவனம் நகராட்சியில் உறுப்பினர் பதவிக்கு பாமகவைச் சேர்ந்த ஒருவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் திமுகவைச் சேர்ந்த பூபாலன் சுயேச்சையாகப் போட்டியிட்டார் என்பதற்காக கட்சியிலிருந்து அவரை நீக்க முயற்சி எடுத்துக் கொண்ட நிலையில் அவரை பாமக தங்கள் கட்சியில் உறுப்பினராக ஆக்கி கொண்டது. திண்டிவனம் நகராட்சித் தலைவர் பதவி பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், திமுகவிலிருந்து நீக்கப்பட இருந்த பாமகவை தோற்கடித்த பூபாலனை பாமகவில் சேர்த்துக் கொண்டு அவரைத் தான் தற்போது பாமக வேட்பாளராக நிறுத்தி அவருக்கே திமுக உறுப்பினர்கள் எல்லாம் வாக்களித்து வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள். இந் நிலையில் முதலில் விடுதலைச் சிறுத்தைகளுக்காக ஒதுக்கப்பட்ட திண்டிவனம் நகராட்சி அவர்களுக்குத் தர இயலாமல் போய்விட்டது.

எனவே கூட்டணியின் வெற்றிக்காகவும் அவர்களின் நியாயத்துக்காகவும் திமுக எந்தக் காலத்திலும் தவறு செய்யாது. ஒரு மிகப் பெரிய தேர்தலில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஓரிருவர் தவறு செய்வதை இரு தரப்பினரும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர உடனடியாக அறிக்கை வாயிலாக திமுக எங்களை தோற்கடித்துவிட்டது என்பதைப் போல செய்தி வெளியிட்டு இரு கட்சி தோழர்களிடத்திலும் வெறுப்பை ஏற்படுத்த முயல்வது நல்லதல்ல. இந்த அறிக்கைகூட ஒரு விளக்கமாகத் தரப்படுகிறதே தவிர கூட்டணிக் கட்சியினர் யாரையும் விமர்சிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு வெளியிடப்படும் ஒன்றல்ல.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Posted in Alliance, Civic Polls, DMK, Kanchipuram, local body elections, M Karunanidhi, Partners, Party, PMK, Tamil Nadu, Thindivanam | 2 Comments »

ADMK functionary called for Inquiry – Gets heart attack and dies

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 27, 2006

போலீஸ் விசாரணைக்கு பயந்து அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகி சாவு

சென்னை, அக். 28: சென்னை ஓட்டேரியில் வழக்கு தொடர்பாக காவல் நிலையத்தில் ஆஜராக அழைக்கப்பட்டதை அறிந்த அதிமுக நிர்வாகி மாரடைப்பால் இறந்தார்.

சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலு. இவர், 39-வது டிவிஷன் அதிமுக வட்டப் பிரதிநிதியாக இருந்தார். உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது, மாநகர பஸ் மீது கல்வீசி தாக்கியதாக வடிவேலு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகும்படி அவரது குடும்பத்தாரிடம் போலீஸôர் தெரிவித்திருந்தனர். இதுதெரியவந்த வடிவேலுவுக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது.

சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேலு, அங்கு இறந்தார்.

Posted in ADMK, AIADMK, Civic Polls, FIR, functionary, heart attack, Inquiry, Jayalalitha, local body elections, Otteri, Ottery, Police, Tamil Nadu | Leave a Comment »

Procession condemning the violence in Civic Elections taken out by CPI(M)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 26, 2006

தேர்தல் வன்முறையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டக்காரர்கள்
ஆர்ப்பாட்டக்காரர்கள்

தமிழக தலைநகர் சென்னையின் மாநகராட்சி மன்றத்துக்கு அக்டோபர் 13ஆம் தேதி நடந்த தேர்தல் வாக்குப் பதிவின்போது நடந்த வன்முறையை கண்டித்து ஆளும் திமுகவின் தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று வியாழக்கிழமை சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள்.

இந்த வன்முறைகளுக்கு ஆளும் திமுகவைச் சேர்ந்த முன்னணி கட்சியினர் சிலரே தலைமைதாங்கி நடத்தியதாகவும் அவர்கள் மீதும், வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய காவல்துறை மீதும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் என்.வரதராஜன் சென்னை மாநகராட்சித் தேர்தலில் நடந்த வன்முறை சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நடந்தால், அது தமது கட்சிக்கும் திமுகவுக்கும் இடையிலான கூட்டணியையே பாதிக்கும் என்று எச்சரித்தார்.

Posted in Alliance, Chennai, civic elections, CPI(M), DMK, local body elections, Madras, N varadharajan, partner, Procession, Tamil Nadu, varadarajan, Violence | Leave a Comment »

C Vaiyapuri :: Local body elections’ rules & regulations

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 24, 2006

கடும் தேர்தல் விதிமுறைகள்

சி. வையாபுரி

இரண்டு கட்டமாய் நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் அரங்கேறிய உறவுகள், உறவு முறிவுகள் கட்சித் தாவல்கள் முதல் நடமாடும் கஜானாக்களாக மாறிய வேட்பாளர் பட்டாளங்கள், வேட்பு மனுத் தாக்கல் என்கிற முளைப்பாரி சடங்குகளோடு தள்ளுமுள்ளு வெட்டுக் குத்து ரத்தக்களரி வரையிலும் நிம்மதி கெடச் செய்த மிருகச் சண்டைகள் நம்மைத் தலை குனிய வைத்துள்ளன.

இன்று

  • 246 வாக்காளர்களைக் கொண்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் தலா ரூ. 50 ஆயிரம் வரையிலும்,
  • 2850 பேர்களைக் கொண்ட தலைவர் தேர்தலில் தலா ரூ. 6 லட்சம் வரையும் செலவழித்ததாகத் தகவல்கள் வருகின்றன. ஏன் இவ்வளவு பணத்தைக் கொட்டி விரயமாக்குகிறார்கள்?

இந்தக் கேள்விக்கு விடையாக ஒரு வேட்பாளர் சொன்னார்:

“”ஐந்து ஆண்டுகளில் உள்ளாட்சித் திட்டங்களுக்காக அரசாங்கப் பணம் குறைந்தது ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரையிலும் ஒதுக்கீடுகள் வரும் போது 10 சதவீத பர்சன்டேஜ் கிடைத்தால் ரூ. 5 முதல் 10 லட்சம் வருகிறதல்லவா?

இதைத் தவிர வேறு எந்த விதத்திலும் லஞ்ச ஊழல் செய்ய மாட்டேன்” என்று சத்தியப் பிரமாணமும் செய்தார்.

அதாவது, 10 சத “பர்சன்டேஜ்’ என்பது லஞ்ச ஊழல் என்கிற குற்றத்திற்கு அப்பாற்பட்ட ஒரு வருவாயாகவே கருதப்பட்டு சகல கட்சியினராலும் அங்கீகாரமும் பெற்றுள்ளது என்பதையே இது காட்டுகிறது. இப்படிப்பட்டவர்களால் அவர்களது தொகுதிகள் அடிப்படை வசதிகளைப் பெற்று தன்னிறைவடைந்து விடும் என்று எப்படி நம்ப முடியும்?

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடையும் சம்பா நடவும் மட்டுமன்றி, தாமிரபரணி, ஈரோடு, காலிங்கராயன் ஆயக்கட்டுகளில் விவசாயப் பணிகள் தீவிரமாய் இயங்கிய நேரத்தில் வந்த உள்ளாட்சித் தேர்தல், உழவுப் பணிகளை முடக்கி வைத்தது. ஆள் பற்றாக்குறையினால் விவசாயிகள் அல்லாடிப் போனார்கள்.

ஊராட்சி நிர்வாகங்களெல்லாம் விவசாயம், நெசவு, கிராம சிறு தொழில் புரிகின்ற மேன்மக்களிடமிருந்து தடிக் கொம்பு பேர்வழிகளுக்கு எப்போது கைமாறத் தொடங்கியதோ அப்போதே துளித் துளியாய் இருந்த ஊழல், அருவியாய் பெருகி விட்டது. நம் கிராமங்கள் எப்படி உருப்படும்?

ஐ.நா. சபையின் உலக மக்கள்தொகைக் கண்காணிப்புக் குழு அண்மையில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. 2008-ம் ஆண்டு இறுதியில் கிராமங்களில் தற்போது 60 சதமாய் இருக்கின்ற மக்கள்தொகை 50 சதமாகச் சுருங்கி நகரங்களில் தற்போது 40 சதமாக உள்ளது 50 சதமாக உயரும் என்று அது எச்சரிக்கை செய்துள்ளது.

வழிகாட்டுதல்களும் சமூக சகோதர வாழ்வும் விவசாயம் மற்றும் கிராமத் தொழில்கள் புத்துயிர் பெறுவதும் கிராமங்களில் தெளிவில்லாமல் உள்ளன. தரமான கல்வி, நம்பகமான சுகாதார மருத்துவ வசதி, தொடர்ந்த வேலைவாய்ப்புகள் இவையும் இங்கு அரிதாகி வருவதுமே கிராமங்களிலிருந்து மக்கள் சாரைசாரையாய் நகரங்களை முற்றுகையிடக் காரணமாகின்றன என்றும் அந்த அறிக்கை விவரிக்கின்றது.

இப்படித் தொடரும் இந்த அவலங்களுக்கு இனி ஒரு தீர்வு வேண்டும். நாட்டில் 60 லட்சம் டன் கோதுமையும் 30 லட்சம் டன் பருப்பு வகைகளும் இறக்குமதியாகியுள்ளன. சென்ற ஆண்டு ஏற்றுமதியில் முதல்நிலை வகித்த இந்தியா இந்த ஆண்டு இறக்குமதியில் முன்னிலை வகிக்கின்றது.

ஆகவே, அடுத்த தேர்தல்களில் வேட்பாளர்கள் வேட்பு மனு செய்வதிலும் ஊரைச் சுற்றுவதிலும் மந்தை மந்தையாய் மக்களைத் திரட்டி கிராமத் தன்னிறைவுக்கான உற்பத்திகள் அனைத்தையும் கூசாமல் முடமாக்கி வெட்டித்தனமாய் காலத்தை விரயமாக்குவதையும் கட்டுப்படுத்த நடத்தை விதிகள் கடினமாக்கப்பட வேண்டும்.

குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் பிரசாரங்களை அரசாங்கமே ஏற்க வேண்டும். எவரும் தனித்தனியாகத் தனி மேடை அமைத்து ஏறி இறங்க அனுமதிக்கக் கூடாது. ஒரே ஊர்க்காரர்கள்தானே? ஒன்றாக ஒரே மேடையில் நின்று தங்களது கொள்கை, வேலைத் திட்டங்களைப் பிரகடனம் செய்வதோடு பிரசாரம் முடிவடைய வேண்டும்.

வாக்குச் சீட்டின் மாதிரிகளை அரசாங்கமே அச்சிட்டு பெரிய அளவில் ஊரில் முக்கியப் பகுதிகளில் விளம்பரம் செய்து விட்டு நேராக வாக்குப் பதிவை முடித்து விட வேண்டும்.

இந்தவிதமான தேர்தல் நடத்தை நெறிகள் மற்றும் விதிகள் யாவும் மாநகரம் வரைக்கும் பொருந்துவதாய் இருத்தல் வேண்டும்.

நடைபெற்று முடிந்துள்ள இந்தத் தேர்தல் மாபெரும் ஒரு ஜனநாயகத்தின் அடையாளம். ஆமாம்! அப்படித்தான் நாம் எண்ண வேண்டும். ஆனால், நடைபெற்ற விதங்களை எண்ணும்போது நாம் நாகரிகமடைந்த ஒரு சமூக மக்களா அல்லது காட்டு விலங்குகளா என்கிற வருத்தமான கேள்வி மனத்தைக் கோரப்படுத்துகிறது.

இப்படி ஒரு தேர்தல் மறுபடியும் வருமானால், எல்லாமே பாழ்பட்டு அமைதி, நிம்மதி, கலாசாரம் என்பதன் அடையாளங்கள் முற்றிலுமாய் அழிக்கப்பட்டுவிடும்.

Posted in C Vaiyapuri, Civic Polls, Corruption, Dinamani, Election Reform, Expenses, local body elections, Op-Ed, regulations, rules, Rural, Suggestions, Tamil Nadu, Thoughts, Villages | 2 Comments »

Tamil Nadu Civic polls & Local Body Election Results – ADMK’s Victories

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 24, 2006

உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க. வெற்றி பெற்ற வார்டுகள் 

சென்னை, அக். 24-

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலை மைனாரிட்டி தி.மு.க. அரசு எவ்வாறு கேலிக் கூத்தாக்கியது என்பதை இந்த நாடே நன்கு அறியும்.

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வினர் நடத்திய வன் முறைகளுக்கு இடையேயும், அ.தி.மு.க. 21 சதவீத இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை இதன் மூலம் தெரி வித்துக் கொள்கிறோம்.

உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட வாரியாக கழகம் வெற்றி பெற்றுள்ள இடங்களின் பட்டியல் வருமாறு:-

வ. மாவட்டத்தின் மாநகராட்சி நகரசபை 3-ம்நிலை பேரூராட்சி வார்டு ஊராட்சி மாவட்ட மொத்தம்

எண் பெயர் கவுன்சிலர்கள் கவுன்சிலர்கள் நகரசபை உறுப்பினர்கள் ஒன்றிய வார்டு பஞ்சாயத்து வார்டு

கவுன்சிலர்கள் உறுப்பினர்கள் உறுப்பினர்கள்

1. காஞ்சீபுரம் 63 26 80 53 8 230

2. திருவள்ளூர் 59 35 47 44 6 191

3. வேலூர் 69 19 62 74 4 228

4. திருவண்ணாமலை 29 32 64 6 131

5. கடலூர் 47 38 67 11 163

6. விழுப்புரம் 17 5 61 99 14 196

7. கிருஷ்ணகிரி 14 27 46 7 94

8. தர்மபுரி 9 31 31 4 75

9. சேலம் 16 19 9 111 67 5 227

10. நாமக்கல் 38 5 54 37 5 139

11. ஈரோடு 44 26 151 52 5 278

12. கோவை 10 36 34 170 74 8 332

13. நீலகிரி 5 6 27 12 3 53

14. திருச்சி 10 8 2 57 62 8 147

15. பெரம்பலூர் 7 11 36 6 60

16. கரூர் 14 8 36 30 2 91

17. தஞ்சாவூர் 28 53 40 1 122

18. நாகப்பட்டினம் 23 6 30 56 6 121

19. திருவாரூர் 24 19 22 1 66

20. புதுக்கோட்டை 16 22 46 3 87

21. மதுரை 9 28 15 34 58 10 154

22. தேனி 50 8 98 31 3 190

23. திண்டுக்கல் 19 71 52 7 149

24. விருதுநகர் 31 12 48 47 8 146

25. சிவகங்கை 13 14 32 59

26. ராமநாதபுரம் 20 10 23 37 2 92

27. திருநெல்வேலி 13 27 4 95 74 5 218

28. தூத்துக்குடி 16 2 56 60 8 142

29. கன்னியாகுமரி 11 84 14 1 110

மொத்தம் 58 777 239 1643 1417

Posted in ADMK, AIADMK, Calculations, Civic Polls, Clinch, Election, Final, local body elections, Percentage, Results, Tally, Tamil Nadu, Victory, Vote | 1 Comment »

DMDK >> MDMK, CPI(M) + CPI & BJP

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006

உள்ளாட்சி தேர்தலிலும் விஜயகாந்த் கட்சிக்கு புதிய செல்வாக்கு: ம.தி.மு.க., கம்ï. கட்சிகளை விட கூடுதல் ஓட்டுகள்

சென்னை, அக். 23-

விஜயகாந்த் தொடங்கியுள்ள தே.மு.தி.க. கட்சி சட்டசபை தேர்தலில் முதன் முதலாக அடியெடுத்து வைத்தது. விருத்தாசலத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் எம்.எல்.ஏ. வாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

போட்டியிட்ட மற்ற தொகுதிகளில் விஜயகாந்த் கட்சி வெற்றிபெறவில்லை என்றாலும் அனைத்து தொகுதிகளிலும் இந்த கட்சி வேட்பாளர்கள் அதிக ஓட்டுகளைப் பெற்று முக்கிய இடத்தைப் பிடித்தனர். இது போல மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலிலும் தே.மு.தி.க. வுக்கு 3-வது இடம் கிடைத்தது.

முதன் முறையாக உள்ளாட்சி தேர்தலை சந்தித்துள்ள இந்த கட்சி அதிரடியாக 607 உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றி தனது புதிய செல்வாக்கை நிரூபித்துள்ளது.

தே.மு.தி.க சார்பில் போட்டியிட்ட 16 பேர் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஆகி இருக்கிறார்கள். நகராட்சி கவுன்சிலர் பதவி 71 பேருக்கும், மூன்றாம் நிலை நகராட்சி பதவி 27 பேருக்கும், பேரூராட்சி கவுன்சிலர் பதவி 234 பேருக்கும் கிடைத்துள்ளது. இதுவரை 244 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவியும் 15 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியும் இந்த கட்சிக்கு கிடைத்திருக்கிறது.

பல தேர்தல்களை சந்தித்துள்ள

  • ம.தி.மு.க. 527 இடங்களிலும்,
  • மார்க்சிஸ்டு கம்ïனிஸ்டு 349 இடங்களிலும்,
  • பா.ஜனதா கட்சி 228 இடங்களிலும்,
  • இந்திய கம்ïனிஸ்டு கட்சி 196 இடங்களிலும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளன.

ஆனால் தே.மு.தி.க. 607 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பெரிய கட்சிகளின் வெற்றி வாய்ப்பை கேள்விக்குறி ஆக்கிய விஜயகாந்த் கட்சி உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க., கம்ïனிஸ்டு, பாரதீய ஜனதா கட்சிகளின் வெற்றியை தட்டிப் பறித்துள்ளது.

இந்த கட்சியின் புதிய செல்வாக்கை எடுத்துக் காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் ëகருத்து தெரிவிக்கின்றனர்.

Posted in BJP, Civic Polls, CPI, CPI(M), DMDK, local body elections, MDMK, Tamil Nadu, Vijayakanth, Vijayganth | 6 Comments »