Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Local Body election’ Category

District Collectors: Sales Tax vs Income Tax – Loopholes, Corruption, Kickbacks in Local Administration

Posted by Snapjudge மேல் மார்ச் 10, 2008

புன்னகைக்கும் பொய் ரசீதுகள்

இரா. சோமசுந்தரம்

சில நாள்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா அலுவலகம் சென்றபோது, அங்கே ஒரு வட்டாட்சியரிடம் ஒருவர் கடுமையான கோபத்தில் திட்டிக் கொண்டிருந்தார்.

ஆனால் அந்த வட்டாட்சியரோ, “”ஒண்ணும் ஆயிடாதுங்க” என்று சமாதானம் செய்து, பேசுபவரின் குரலை மட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

இருந்தும்கூட, அடக்கமுடியாத கோபமும் அச்சமுமாக தொடர்ந்து கொட்டித் தீர்த்த அந்த நபர், “”இன்னும் எந்தெந்த டிபார்ட்மென்ட்லிருந்து எனக்கு என்கொயரி வருமோ? என் ரசீது புஸ்தகத்தை கொடுங்கய்யா” என்று கேட்டும் கிடைக்காததால், மறுபடியும் திட்டிக்கொண்டே வெளியேறினார்.

சுமார் அரைமணி நேரத்துக்கு அந்த அலுவலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இச்சம்பவம் குறித்து விசாரித்ததில் தெரியவந்தது இதுதான்:

2006-ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது, இந்த தாலுகா அலுவலகம் சில படிவங்களை அச்சிட்டதாக சுமார் ரூ.80 ஆயிரத்துக்கு ரசீதுகள் செலவுக் கணக்கில் காட்டப்பட்டுள்ளன.

உள்ளாட்சித் தணிக்கைத் துறை அலுவலர்கள் இதனைத் தணிக்கை செய்தபோது, யாரோ ஒரு நேர்மையான அலுவலர், இந்த செலவுக்கு ஆட்சேபக் குறிப்பை எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் – “”எல்லா படிவங்களும் தேர்தல் ஆணையம் அச்சிட்டுத் தரும்போது, தாலுகா அளவில் எத்தகைய படிவம் அச்சிடப்பட்டது என்பதற்கான சான்றுகள் அளிக்கப்படவில்லை. வாக்காளர்களுக்கு அறிவுரை என்ற நோட்டீஸ் அச்சிடப்பட்டதாக கூறப்பட்டபோதிலும், அதற்கு ரூ.2000-க்கு மேல் செலவாகியிருக்க வாய்ப்பு இல்லை. ஆகவே இந்தச் செலவினத்தை ஆட்சேபிக்கிறேன்” என்று அந்தக் குறிப்பில் அவர் எழுதியுள்ளார்.

உள்ளாட்சித் தணிக்கைத் துறையின் அறிக்கைகள் வழக்கமாக உயர்அதிகாரிகளுக்கும் அரசுக்கும் அனுப்பப்படும் என்பதோடு, தலைமை கணக்கு தணிக்கை (ஏ.ஜி.) அலுவலகத்துக்கும் ஒரு நகல் அனுப்பப்பட வேண்டும்.

அப்படி அனுப்பப்பட்ட இந்த ஆட்சேபக் குறிப்பை கண்ட, தலைமை கணக்கு தணிக்கை அலுவலக அதிகாரி ஒருவர், “”சுமார் 15 நாள்களில் ரூ.80 ஆயிரத்துக்கு அச்சிடும் இத்தகைய அச்சகம், ஓராண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கக்கூடும்! இந்த அச்சகம் முறையாக வருமான வரி செலுத்தியுள்ளதா என்பதை ஆய்வு செய்யலாம்” என்று மற்றொரு குறிப்புடன் வருமான வரித்துறைக்கு அனுப்பிவிட்டார்.

வருமான வரித்துறை இத்தனை விஷயங்களையும் குறிப்பிட்டு, மொத்தக் கணக்குகளுடன் நேரில் வரவும் என்று அச்சக உரிமையாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

வட்டாட்சியரிடம் கடும் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தவர் அச்சகத்தின் உரிமையாளர். அந்த அச்சகமோ அந்த நகரத்திலேயே மிகச் சிறிய அச்சு இயந்திரத்தை வைத்து, கல்யாணப் பத்திரிகை அச்சடித்து வருவாய் ஈட்டும் மிகச் சிறிய அச்சுக்கூடம். வருமானத்துக்கே திண்டாடும் அவருக்கு வருமான வரித்துறையின் நோட்டீஸ் வந்தால் எப்படி இருக்கும்?

இச்சம்பவம் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சியைத் தந்தது. நியாயம் செத்துப்போவதில்லை. உண்மைகள் கொஞ்ச காலம் உறங்கலாம். ஆனால் அது ஒரு நாள் விழிக்கவே செய்கிறது. “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகிறது’. ஆனால் அப்போதே, உடனே அல்ல. சரி, வாழ்க்கையொன்றும் திரைப்படம் அல்லவே, உச்சக் காட்சியில் நொடியில் தர்மம் வெற்றிபெற!

இது குறித்து மேலும் விசாரித்தபோது இன்னொரு தகவலும் தெரியவந்தது. இத்தகைய ரசீதுகள் தொடர்பான ஆட்சேபக் குறிப்புகளை, விற்பனை வரிப்பிரிவினர்தான் முதலில் கையில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் வருமான வரித்துறை கையில் எடுத்திருப்பதைப் பார்க்கும்போது, மாநில அரசு, விழிப்புடன் இல்லை என்றாகிறது.

இத்தகைய போலி ரசீதுகள் உள்ளாட்சி முழுவதிலும் அதிக அளவில் இருக்கின்றன. விற்பனை வரித் துறை அதிகாரிகள் விசாரித்தால், பல பூதங்கள் வெளிக்கிளம்பும் என்கிறார்கள்.

உள்ளாட்சித் துறைகளில் ரசீதுகள் மூலம் பல கோடி ரூபாய் திசைமாறுகிறது. இதற்கு அடிப்படையான காரணம் மாவட்ட ஆட்சியர் வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட விலைப்பட்டியல்தான்.
அரசுக்குத் தேவையான பொருள்கள் வாங்கும்போது கூட்டுறவுத் துறை நிறுவனங்கள் நீங்கலாக அங்கீகரிக்கப்பட்ட பிற நிறுவனங்கள் எவை, அவற்றில் எந்தெந்த பொருள்களுக்கு என்ன விலை என்று மாவட்ட ஆட்சியர் அங்கீகரிக்கும் இந்த விலைப்பட்டியலை ஆதாரமாக வைத்துத்தான் தணிக்கை செய்யப்படுகிறது.

நிறுவனம் பட்டியலில் உள்ளதா, விலை சரியா என்பதை மட்டுமே தணிக்கை அலுவலர்கள் சரிபார்க்க முடியும். இந்த நிறுவனம் வெறும் “”ரசீது நிறுவனமா” என்பதை ஆய்வு செய்ய இயலாது.

பொதுச்சந்தையில் ஒரு பொருள் விற்கப்படும் விலையைக் காட்டிலும் குறைந்தது 10 சதவீதம் கூடுதல் விலையே இந்த அங்கீகரிக்கப்பட்ட விலைப் பட்டியலில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதில் சந்தேகம் இருக்குமானால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரூ.10 செலுத்தி, அந்தப் பட்டியலை வாங்கிப் பார்த்தால் நிறுவனங்களும் விலைகளும் வெளிச்சமாகிவிடும் என்கிறார்கள்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத்தான் போறேன். வர்றீங்களா?

Posted in Administration, administrative units, Audit, Bribery, Bribes, Circle Inspector, Collections, Collector, Collectorate, Corruption, Departments, Dept, District, District Collectors, Elections, Govt, IAS, Income, Inefficiency, Inspection, Inspectors, Investigations, IT, kickbacks, local, Local Body, Local Body election, local body elections, Local Body Polls, Local Civic Body, Local Elections, Local Polls, Local self Governance, Loopholes, Notices, officers, Politics, Polls, revenue collection, Revenue District, Revenues, Reviews, sarkeel, Somasundaram, Somasundharam, Somasuntharam, ST, Tahsil, Taluk, Taluka, Taluq, Tax, Union, zilla collector | Leave a Comment »

Who will be the next Mayor of Chennai?

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006

சென்னை மாநகராட்சியின் புதிய மேயர் யார்?- 3 பேர் பெயர் அடிபடுகிறது

சென்னை, அக்.23-

சென்னை மாநகராட்சி தேர்தல் கடந்த 13 மற்றும் 15 தேதிகளில் நடந்து முடிந்தது. இதன் ஓட்டு எண்ணிக்கை கடந்த 20-ந்தேதி நடந்தது. மொத்தம் 155 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில்

  • 90 இடங்களில் தி.மு.க.வும்,
  • 38 இடங்களில் காங்கிரசும்,
  • 17 இடங்களில் பா.ம.க.வும்,
  • அ.தி.மு.க. 4 இடங்களிலும்,
  • இந்திய கம்ïனிஸ்டு,
  • விடுதலை சிறுத்தைகள் தலா 2 இடங்களிலும்,
  • ம.தி.மு.க.,
  • பகுஜன்சமாஜ் தலா ஒரு இடங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளன.

கடந்த 2001- ம் ஆண்டு மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. 67 இடங்களை கைப்பற்றியது. இதன் பின்பு மற்ற கட்சியில் இருந்து விலகி சில கவுன்சிலர்கள் அ.தி.மு.க.வில் சேர்ந்ததால் அதன் பலம் 77 ஆக உயர்ந்தது.

மாநகராட்சி மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தின் காரணமாக அவர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த தேர்தலில் 54 வார்டுகளை கைப்பற்றிய தி.மு.க. இந்த தேர்தலில் 90 வார்டுகளை கைப்பற்றி தனி மெஜாரிட்டி பெற்றுள்ளது.

சென்னை மாநகராட்சி மேயர்பதவி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மேயர், துணைமேயர் ஆகியோர் தி.மு.க. கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களால் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.

மேயர்பதவி தென்சென்னையை சேர்ந்த கவுன்சிலர் ஒருவருக்கும், துணைமேயர் பதவி வடசென்னையை சேர்ந்த கவுன்சிலருக்கும் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேயர் பதவிக்கு

  • மா.சுப்பிரமணியம்,
  • தனசேகரன்,
  • சுரேஷ்குமார் ஆகியோர் பெயர் அடிபடுகிறது.

மேயர் பதவிக்கு பெயர் அடிபடும் மா.சுப்பிரமணியம் தென்சென்னை மாவட்டத்தில் 140-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இவர் கடந்த முறை மாநகராட்சி மண்டலக்குழு தலைவராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் தி.மு.க. மாநில இளைஞரணி துணைச்செயலாளராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். சைதாப்பேட்டை சட்டமன்றத்திற்கு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ராதாரவியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அந்த தேர்தலில் இவரை ஆதரித்து கருணாநிதி பிரசாரம் செய்தபோது மா.சுப்பிரமணி மாசற்றவர் என்று பாராட்டி பேசினார். மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக பணியாற்றியபோது அவருடன் இணைந்து சிறப்பாக பணியாற்றியவர். எனவே சென்னை மாநகராட்சி மேயராக இவரை தேர்ந்தெடுக்க அதிகவாய்ப்புகள் இருப்பதாக தி.மு.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இது பற்றி மா.சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, “மேயர் பதவி பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் முதல்-அமைச்சர் கருணாநிதிதான் முடிவு செய்வார்” என்றும் கூறினார்.

இதேபோல் 130-வது வார்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தனசேகரன் மேயராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது. தனசேகரன் தி.மு.க. வுக்கு சோதனைஏற்பட்ட காலத்தில் எல்லாம் களத்தில் இறங்கி கட்சிக்காக தீவிரமாக பணியாற்றுபவர். தி.மு.க. பகுதிகழக செயலாளராக இருந்து வருகிறார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் குண்டர்கள் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆட்சியில் மழைக்காலத்தில் எம்.ஜி.ஆர் நகரில் வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு தனசேகரன் தான் காரணம் என்று கூறி போலீசார் அவரை கைதுசெய்தனர். இவர் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது என்று கூறி கருணாநிதி போராட்டம் நடத்தினார். உச்சநீதிமன்றம் வரை சென்று, இவர் மீது போடப்பட்டது பொய்வழக்கு என்பதை நிரூபித்து காட்டினார். கே.கே.நகர் பகுதியில் தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்காக அரும்பாடு பட்டவர். ஆகவே இவர் மேயராக தேர்ந்தெடுக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டுமில்லாமல் 86-வது வார்டில் இருந்து கவுன்சிலராக தேர்தெடுக்கப்பட்ட சுரேஷ்குமார் பெயரும் மேயர்பதவிக்கு அடிபடுகிறது. காரணம் அவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றிபெற்ற சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பகுதிகழக செயலாளராக இருந்து பொதுமக்களின் பல்வேறு பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு உதவினார்.

சென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்னும் 2 நாட்களில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் மேயர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று தி.மு.க. தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

துணைமேயர் பதவிக்கு

  • 111-வது வார்டு கவுன்சிலர் செல்வி,
  • 69-வது வார்டு சாந்திபாய்,
  • 68-வது வார்டு கவுன்சிலர் வசந்தி

ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. 25-ந்தேதி சென்னை மாநகராட்சி கவுன்சிலராக தேர்வுசெய்யப்பட்ட 155 பேரும் பதவியேற்றுக்கொள்கிறார்கள்.
29-ந்தேதி காலை சென்னை மாநகராட்சி மன்றத்தில் மேயர்தேர்தல் நடைபெறுகிறது.

Posted in Chennai, Chepauk, Civic Polls, Dhanasekaran, Elections, KK Nagar, Local Body election, Ma Subramaniam, Madras, Mayor, Radha Ravi, Saidapet, Santhi bai, Selvi, South Madras, Sureshkumar, Tamil Nadu, Vasanthi | Leave a Comment »

DMK Alliance apportions Tamil Nadu civic election leaderships

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006

நகரசபை தலைவர் பதவி: தி.மு.க. கூட்டணி கட்சிகள் தீவிரம்

சென்னை, அக். 23-

உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. கட்சி அடிப்படையில் தேர்தல் நடந்த சுமார் 20 ஆயிரம் உள்ளாட்சி பதவிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் தி.மு.க. வசமாகி உள்ளது.

6 மாநகராட்சிகளிலும் வெற்றி பெற்றுள்ள தி.மு.க., மொத்தம் உள்ள 152 நகர சபைகளில் சுமார் 120 நகர சபைகளில் ஜெயித்துள்ளது. இதே போல பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றிலும் தி.மு.க. சுமார் 70 சதவீத இடங்களில் ஆதிக்கம் செலுத்தி உள்ளது.

இதையடுத்து மாநகராட்சி மேயர் பதவி நீங்கலாக மற்ற பதவிகளுக்கான இடப்பங்கீடு பேச்சுவார்த்தையை கூட்டணிக் கட்சிகளுடன் தி.மு.க. நடத்தியது. அதில் உடன்பாடு எட்டப்பட்டது.

மொத்தம் உள்ள 152 நகர சபைகளில் 25 நகரசபை கள் காங்கிரசுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. 561 பேரூராட்சி களில் 95 பேரூராட்சி வழங்கப் பட்டுள்ளது. 29 மாவட்ட ஊராட்சிகளில் திருவள்ளூர், ராமநாதபுரம், சிவகங்கை, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய 5 மாவட்ட ஊராட்சிகள் காங்கிரசுக்கு கிடைத்துள்ளது.

அது போல 385 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளில் 72 ஊராட்சித் தலைவர்கள் பதவி காங்கிரசுக்கு வழங்கப் பட்டுள்ளது.
————————————————–
பா.ம.க.வுக்கு 14 நகர சபை தலைவர் பதவி கிடைத் துள்ளது. மேலும் காஞ்சீபுரம், சேலம், கடலூர், தர்மபுரி, விழுப்புரம் ஆகிய 5 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி யும் பா.ம.க.வுக்கு கிடைத்துள்ளது.

43 பேரூராட்சிகள், 51 ஊராட்சி ஒன்றியங்களும் பா.ம.க.வுக்கு கொடுக்கப் பட்டுள்ளது.

————————————————–

மார்க்சிஸ்ட் கம்ï னிஸ்டு கட்சிக்கு 7 நகர சபை, 1 மாவட்ட ஊராட்சி, 24 பேரூராட்சி, 9 ஊராட்சி ஒன்றியங்கள் ஒதுக்கப்பட்டுள் ளது.
————————————————–
இந்திய கம்ïனிஸ்டு கட்சிக்கு 4 நகரசபை, 2 மாவட்ட ஊராட்சி அமைப்பு, 8 பேரூராட்சி, 13 ஊராட்சி ஒன்றியங் கள் வழங்கப்பட்டுள்ளது. விடுலைசிறுத்தைகளுக்கு நெல்லிக்குப்பம், திண்டிவனம் ஆகிய 2 நகரசபைகளும், 5 பேரூராட்சிகள், 2 ஊராட்சி ஒன்றியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

————————————————–
புரட்சி பாரதம் கட்சிக்கு திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியமும்,

————————————————–
உழவர் உழைப் பாளர் கட்சிக்கு தாராபுரம் ஊராட்சி ஒன்றியமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதி உள்ள உள்ளாட்சி பதவிகளை தி.மு.க. தன் வசம் வைத்துள்ளது.

இடப்பங்கீடு முடிந்து விட்டதால் அடுத்தக்கட்டமாக தலைவர், துணைத் தலை வர் பதவியை பெற தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகி களிடம் கடும் போட்டி ஏற்பட் டுள்ளது. எப்படியாவது தலைவர் பதவியை பெற்று விட வேண்டும் என்று பலரும் தற்போது தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

சில இடங்களில் சுயேட்சை களை தங்களுக்கு ஆதரவாக இழுக்கும் மறைமுக வேலை யும் ரகசியமாக நடந்து வரு கிறது. இடப்பங்கீடு செய்யப் பட்டுள்ள இடங்களில் பதவி களை உரியவர்கள் பெறும் வகையில் ஒத்துழைக்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டணித் தலைவர்கள் அறிவுறுத் தினார்கள்.

எனவே தலைவர், துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் மோதல்களும், சிக் கல்களும் வராமல் இருக்க மாவட்ட அளவில் தி.மு.க. கூட் டணிக் கட்சிகளின் நிர்வாகி கள் பேசி வருகிறார்கள்.

நகரசபைகளில் 52ஐ கூட் டணிகளுக்கு ஒதுக்கி உள்ள தி.மு.க. சுமார் 70 நகரசபை தலைவர் பதவிகளில் போட்டி யிட உள்ளது. இந்த 70 நகரசபை தலைவர் யார், யார் என்பதை தேர்வு செய்யும் பணி மாவட்ட நிர்வாகிகள் துணையுடன் நடந்து வருகிறது.

பல இடங்களில் ஏற் கனவே இவர்தான் தலை வர் வேட்பாளர் என்று கூறப் பட்டிருந்தது. எனவே தலைவர், துணைத் தலைவர் பதவிகள் யார், யாருக்கு கிடைக்கும் என்பது இன்னும் ஓரிரு நாட் களில் அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும்.

இதே போல பா.ம.க., கம்ïனிஸ்டு கட்சிகளும் சிக்கலின்றி தங்களுக்குரிய நகரசபை தலைவர்களை அறிவிக்க உள்ளன. ஆனால் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை பிரித்துக் கொள்வ தில் காங்கிரசில் கடும் இழுபறி இப்போதே ஏற்பட்டு விட்டது.

காங்கிரசுக்கு ஒதுக்கப்பட் டுள்ள 25 நகரசபை தலைவர் பதவியை பெற அந்த கட்சி யில் உள்ள அனைத்து கோஷ் டியினரும் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

Posted in civic poll, Cong(I), Congress (I), CPI, CPI(M), DMK, Elections, leadership, Local Body election, Marxist Communist, PMK, Polls | Leave a Comment »