Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Liver’ Category

Ayurvedha Corner – S Swaminathan: Natural therapy for Diabetes (High Sugar)

Posted by Snapjudge மேல் நவம்பர் 30, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை நோய் வருவது எதனால்?

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

வயது 63. கடந்த 25 வருடங்களாக சர்க்கரை நோயாலும், உயர் ரத்த அழுத்தத்தாலும் சிரமப்படுகிறேன். தற்போது வலது கை, இடது கால் மரத்துப் போகிறது. கால் பாத எரிச்சலும் உள்ளது. கூடவே மலச்சிக்கலும். பிராஸ்டெட் சுரப்பி வீக்கத்தின் காரணமாக இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் தூக்கமும் கெடுகிறது. இவை நீங்க வழி என்ன?

“குணகர்மவிகல்பம்’ என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. அதாவது நாம் உண்ணும் உணவாகட்டும், செய்யும் செயலாகட்டும், சாப்பிடும் மருந்தாகட்டும் இவை அனைத்திலும் குணமும்; கர்மமும் நிறைந்துள்ளன. குணத்திற்கு உதாரணமாக எளிதில் செரிக்காதவை, எளிதில் செரிக்கக்கூடியவை, குளிர்ச்சியானவை, சூடானவை, எண்ணெய்ப் பசையை உடலுக்குத் தருபவை, வறட்சியை ஏற்படுத்துபவை போன்ற உணவு வகைகளைக் குறிப்பிடலாம். கர்மம் என்றால் செயலைச் செய்பவை, உதாரணமாகக் கடுக்காய்த் தோலைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்குகிறது, தேன் சற்று தூக்கலாகவும், நெய் சற்று குறைவாகவும் குழைத்து வாய்ப்புண்ணில் பூச அது விரைவில் குணமடைவதும் செயல்திறனால் ஏற்படுகின்றன.

இந்தக் குணமும் கர்மமும்தான் சர்க்கரை வியாதியையும் தோற்றுவிக்கின்றன. ஒரே இருக்கையில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்யும் உத்யோகம், அதிக நேரம் படுக்கையில் படுத்து உறங்குதல், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, நீர்வாழ் மிருகங்களையும் அதிகமாக உணவில் சேர்த்துச் சாப்பிடுதல், அடிக்கடி பால் சாப்பிடுதல், புதிய அரிசி, வெல்லத்தினால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிடுதல் போன்ற காரணங்களால் நம் உடலில் நெய்ப்பு, குளிர்ச்சி, உடல்கனம், மந்தநிலை, ரத்தத்திலும், சதையிலும் கொழுப்பு, வழுவழுப்பு போன்ற குணங்கள் அதிகரிக்கின்றன. இதை வெளியேற்றுவதற்கான வழியை உடல் தேடுகிறது. சிறுநீரகம் இந்தக் குணங்களை இழுத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. இதை அறியாது காரணத்தைத் தொடரும்போது இந்தக் குணங்கள் ரத்தத்திலும் சிறுநீரிலும் மிகைப்பட்டு காணுவதால் ரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர்ப் பரிசோதனையில் நாம் சர்க்கரை நோயாளி என்ற தீர்ப்பு வழங்கப்பட்டு அதன்பிறகு தினமும் ஒரு பயம் காலந்த வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.

முன் குறிப்பிட்ட காரணங்களுக்கு நேர் எதிரான செயல்களைச் செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறோம். அதாவது ஓர் இருக்கையில் அதிகம் அமர வேண்டாம், குறைந்தது ஒருமணிநேரமாவது நடக்கவேண்டும். பகல் தூக்கம் கூடாது, மாமிச உணவில் கட்டுப்பாடு, அரை லிட்டர் அளவுதான் பால், அரிசியைக் குறை, இனிப்புப் பண்டங்கள் வேண்டாம் போன்ற மருத்துவரின் கட்டளைகளை ஏற்று அவற்றிற்கு நேர் எதிரான கசப்பு, துவர்ப்பு, காரச் சுவைகளை உணவில் சேர்க்கத் தொடங்கும்போது பல ரஸôயன மாற்றங்களை நம் உடல் சந்திக்கிறது. இந்தச் செயல்களின் வாயிலாக, குடலில் வாயுவின் சீற்றம் மிகைப்படுகிறது. காரம், கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை வாயுவிற்கு மிகவும் அனுகூலமானவை. வாயுவின் சீற்றம் ஏற்படுவதால் நீங்கள் குறிப்பிடும் மரத்துப் போதல், கால் பாத எரிச்சல், மலச் சிக்கல், பிராஸ்டேட் சுரப்பி வீக்கம் போன்றவை ஏற்படும்.

குடலில் வாயுவின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த விளக்கெண்ணெய் நல்ல மருந்தாகும். விளக்கெண்ணெய்யை இளஞ்சூடாக வயிற்றின் மீது உருட்டித் தேய்க்கவும். வலது கீழ் வயிற்றுப் பகுதியில் தொடங்கி இடது பக்கமாகக் கீழ் வயிற்றுப் பகுதி வரை சுமார் 20-25 நிமிடங்கள் தடவி விடவும். தொப்புளின் உள்ளேயும் நன்றாக எண்ணெய்யை ஊறவிடவும். கை, கால் மரத்துப் போன பகுதிகளிலும், கால் பாதத்திலும் விளக்கெண்ணெய்யை வெதுவெதுப்பாகத் தடவவும். நன்றாக ஊறிய பிறகு வெது வெதுப்பான தண்ணீரில் குளிக்கவும்.

விளக்கெண்ணெய்யைக் கலந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளும் தங்களுக்கு நல்ல பலனைத் தரக்கூடும். சுகுமாரம் கஷாயத்துடன் 1/4, 1/2 ஸ்பூன் ஹிங்குதிரிகுணம் எனும் எண்ணெய் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட நல்லது. இம்மருந்து மலச்சிக்கலைப் போக்கி, பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். குடல் வாயுவின் சீற்றத்தை அடக்கி, நரம்புகளுக்கு வலுவூட்டும்.

Posted in Alternate, Blood sugar, Bloodsugar, Body, Cures, diabetes, Disease, Disorder, Doctor, Gas, insulin, Liver, medical, Natural, Potassium, Prostate, Restroom, Sodium, Sugar, Swaminathan, Therapy, Toilet, Urine, Water | 1 Comment »

Healthcare: Blood Pressure

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

முதுமையும் ரத்த அழுத்த நோயும்

கு.கணேசன்

உயர் ரத்த அழுத்த நோய்க்கு நவீன சிகிச்சைகள் பல இருந்தாலும் ஆரோக்கிய உணவின் மூலம் சரியான அளவில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதைப் பொதுமக்களுக்குப் புரிய வைப்பதே மருத்துவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று “உலக நலவாழ்வு நிறுவனம்’ வலியுறுத்தி வருகிறது.

ஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம். இளைஞரானாலும் சரி, முதியவரானாலும் சரி, ஒருவருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ. வரை ரத்த அழுத்தம் இருந்தால் பாதிப்பு வராது. இதற்கு மேல் அளவு அதிகரித்தால் அதை “உயர் ரத்த அழுத்தம்’ என்கிறோம். இந்நோயைத் தொடக்கத்திலேயே கவனிக்கத் தவறினால் இதயம், மூளை, சிறுநீரகம், கண்கள் ஆகியவற்றுக்கு எமனாக அமைந்துவிடும்.

மாரடைப்புக்கு உயர் ரத்த அழுத்தம் ஒரு முக்கியக் காரணம். இது தவிர, இதயம் வீங்கிச் செயலிழத்தல், கண்களின் விழித்திரையில் ரத்தம் கசிந்து பார்வை இழத்தல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்பு. ஆகவே உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு போதுமானது. சிறுநீரக நோய் உள்ளவர்கள் 3 கிராம் வரை சேர்த்துக் கொள்ளலாம். உப்பு மிகுந்த உணவுப் பொருள்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம், வடாம், சிப்ஸ், பாப்கார்ன், முந்திரிப் பருப்பு, புளித்த மோர் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

கொழுப்பு அதிகமுள்ள இறைச்சி, முட்டை, இறால், தயிர், நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம், சாஸ் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. பூரி, வடை, சமோசா, முறுக்கு, பஜ்ஜி, வறுவல் போன்ற எண்ணெயில் பொரித்த வறுத்த, ஊறிய உணவுகள் மற்றும் சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகள் வேண்டாம்.

தேங்காய் எண்ணெயும் பாமாயிலும் ஆகவே ஆகாது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றைக்கூட குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகப்படுத்தினால் நல்லது. நார்ச்சத்து, ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள், கொய்யா, தர்பூசணி, மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள், பீன்ஸ், பட்டாணி, கொண்டைக்கடலை போன்ற பயறுகள், வெந்தயம், பாகற்காய் போன்ற காய்கள், புதினா, கொத்துமல்லி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம்.

பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய தாதுச் சத்துககளுக்கு உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. பழங்கள், காய்கறிகள், கீரைகள் குறிப்பாக காரட், தக்காளி, உருளைக்கிழங்கு, பட்டாணி, அன்னாசி, அவரை போன்றவற்றில் இச்சத்துகள் அதிகம்.

உடலின் உயரத்துக்கு ஏற்ப உடல் எடையைக் பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். தினமும் 40 நிமிடங்கள் நடப்பது ரத்த அழுத்தம் சீராக இருக்க மட்டுமல்ல, மாரடைப்பையும் தடுக்கவல்லது.

சிகரெட், பீடி, சுருட்டு போன்றவற்றைப் புகைக்கும் பழக்கத்தால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது. உடனே இப்பழக்கத்தை நிறத்துங்கள். மதுவுக்கும் விடை கொடுங்கள். யோகாசனம், தியானம் போன்றவை மன அழுத்தத்தைக் குறைத்து மனதுக்கு அமைதியைத் தரக்கூடியவை.

முதுமையில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்படும் மற்றொரு முக்கியப் பிரச்னை “நிலை மயக்கம்’ முதுமை காரணமாக இவர்களுக்கு ரத்தக் குழாய்களின் உட்சுவர் கடினமாகி சுருங்கி விரியும் தன்மையை இழந்துவிடும். உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து மேல்பகுதிக்கு ரத்தம் செல்ல சிரமப்படும். இதனால் திடீரென ரத்த அழுத்தம் குறைந்து, மூளைக்கு செல்லும் ரத்தம் குறையும். அப்போது மயக்கம் வரும்.

இதனைத் தவிர்க்க கட்டிலின் தலைப் பகுதியை அரை அடி உயர்த்திக் கொள்ளலாம். தொடர்ந்து நீண்ட நேரம் படுப்பதையும் ஒரே இடத்தில் உட்காருவதையும் தவிர்ப்பது நல்லது. சட்டென்று நேராக எழுந்திருக்காமல் தலையைப் பக்கவாட்டில் திருப்பிக்கொண்டு மெதுவாக எழுந்திருக்க வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்த அழுத்த மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

உலக அளவில் 100 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்த நோய் உள்ளது. இந்தியாவில் 100-ல் 20 பேருக்கு இந்த நோய் உள்ளது. அதிலும் 60 வயதைக் கடந்தவர்களிடம் பாதிப் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

முதுமை என்பது இயற்கையான விஷயம். தாழ்வு மனப்பான்மை மற்றும் முதுமையின் காரணமாக ஏற்படும் இயலாமையை வெற்றி காண்பதுதான் ரத்த அழுத்தத்தை எதிர்கொள்ள முக்கியமான வழி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

(கட்டுரையாளர், பொதுமருத்துவர்).

Posted in Advice, Aged, Angina, anginoplasty, Artificial, Attack, BP, Cigarette, cure, Death, diabetes, Diet, Disabled, Disease, Disorder, Doctor, Exercise, Food, Health, Healthcare, Heart, insulin, Jeeva, Kidney, Liver, medical, Obesity, oil, Old, Operation, Organs, Pain, paralysis, Run, smoking, Stroke, Sugar, Tips, Walk, WHO, Youth | 2 Comments »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series

Posted by Snapjudge மேல் ஜூன் 8, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பித்தம் – சுத்தம்!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

எனக்குப் பித்தப்பை (Gall bladder) கற்கள் சேர்க்கையால் ஆபரேஷன் மூலம் எடுக்கப்பட்டது. இந்த நிலைமையில் பித்தநீர் எப்படிச் சுரக்கிறது அல்லது சுரக்கவில்லையா என்று எனக்குத் தெரியவில்லை. மீண்டும் பித்தநீர் சுரக்க வழிமுறை என்ன? எனக்கு அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கழுத்து எலும்பு தேய்மான உபாதைகளும் உள்ளன. எடை 82 கிலோ. எடையைக் குறைக்க வேண்டும். வயது 63.

தா.விஷ்ணு கஜேந்திரன், புதுவை.

பித்தநீர் சுரப்பை கல்லீரல்தான் செய்கிறது. கல்லீரலின் சீரான செயல்பாடுகளின் மூலம் பித்தநீர் சரியான அளவில் குடலுக்குள் சென்று நாம் சாப்பிடும் உணவைச் செரிக்கச் செய்கிறது. பித்தநீர் சுரப்பை கல்லீரலின் வழியாகப் பெற ஒரு பல் பூண்டை நசுக்கி ஒரு டீ ஸ்பூன் (5 மிலி) ஆலிவ் எண்ணெய்யுடன் கலந்து இரவில் படுக்கும் முன் தொடர்ந்து 14 நாள்கள் சாப்பிட ஏதுவாகும். அதுபோலவே எலுமிச்சம் பழச்சாறுடன் சிறிது உப்பு கலந்து, சூடான சாதத்தில் சேர்த்து, காலையில் முதல் உணவாகச் சாப்பிட கல்லீரல் செயல்பாடுகள் அனைத்தும் மேம்படும். ஒரு கிளாஸ் ஆப்பிள் ஜூஸýடன் ஒரு டீ ஸ்பூன் கற்றாழைச்சாறு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து ஒரு நாளில் 3 வேளை வெறும் வயிற்றில் சாப்பிட, கல்லீரலின் உட்புற குழாய்கள் அனைத்தும் சுத்தமடைவதுடன் அதன் வேலைத்திறனும் சுறுசுறுப்பாகும்.

பித்தநீர் பற்றிய ஆராய்ச்சிகள் பலவும் இன்று நவீன மருத்துவத்தில் செய்யப்பட்டிருந்தாலும், ஆயுர்வேதம் பசித் தீயை ஒரு “வ்ரீஹி பிரமாணம்’ அதாவது “நெல்மணி அளவே’ எனும் ஆச்சரியமான ஒரு தகவலைக் குறிப்பிடுகிறது. ஆத்மாவை எந்த ஆராய்ச்சியின் வழியாகவும் நவீன விஞ்ஞானத்தின் மூலம் அறிய முடியவில்லை. அதுபோலவே இந்த நெல்மணி அளவிலான ஒரு சுடரை நம்மில் இறைவன் மறைத்து வைத்திருக்கிறார் போலும். மனிதனின் மரணத்தில் இந்தச் சுடர் அணைந்து விடுகிறது. அதனால் உடல் சில்லிட்டு விடுகிறது. உயிருள்ள நிலையில் இந்தச் சுடர் வழியாகத்தான் பித்த நீர் சுரக்கிறது. பஞ்சமஹாபூதங்களில் வாயுவும், ஆகாயமும், அதிக அளவில் சேரும் பொருட்களால் வாயு தோஷமும், நெருப்பை அதிக அளவில் கொண்டுள்ள பொருட்கள் மற்றும் செய்கைகளால் பித்ததோஷமும், நிலம் மற்றும் நீரின் அம்சம் அதிகம் கொண்டுள்ள பொருட்களாலும் செய்கைகளாலும் கபதோஷமும் பாதுகாக்கப்படுவதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

உங்கள் விஷயத்தில், கல்லீரலின் பாதுகாப்பு மிகவும் அவசியமாகும். சர்க்கரை உபாதையும் தங்களுக்கு இருப்பதால் நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் பாகற்காய் சாறு குடிப்பதால் உங்களுக்கு இரு நன்மைகள் ஏற்பட வாய்ப்புண்டு. ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதுடன், கல்லீரல் பித்தநீர் சுரப்பும் நன்றாக இருக்கும்.

கசப்பும் துவர்ப்புச் சுவையும் கொண்ட மணத்தக்காளிக் கீரை, சுண்டைக்காய், அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, வாழைப்பூ போன்றவை நீங்கள் அதிகம் உணவில் சேர்க்க உடல் பருமன் குறைவதுடன் சர்க்கரையின் அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும். ரத்த அழுத்தம் சீராகும். ஆனால் இந்த இரு சுவைகளால் உடலில் வாயுவின் சீற்றம் அதிகரிக்கக்கூடும். கழுத்து எலும்பு தேய்மானத்திற்கு இந்தச் சுவைகள் அனுகூலமானவை அல்ல. அதனால் தேய்மானம் மேலும் வளராமலிருக்க, கழுத்துப் பகுதி எலும்புத் குருத்தில் விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், வேப்பெண்ணெய் ஆகியவற்றை 4:2:1 என்ற விகிதத்தில் கலந்து இளஞ்சூடாகத் தடவி ஒரு மணி நேரம் ஊறவிடவும். அதன் பின்னர் வெந்நீர் ஒத்தடம் கொடுத்து துடைத்துவிடவும். கல்லீரல் வேலைத் திறன் மேம்பட, உயர் ரத்த அழுத்தம் குறைய சர்க்கரையை ரத்தத்தில் கட்டுப்படுத்த, உடல் இளைக்க நீங்கள் ஆயுர்வேத மருந்தாகிய வாஸôகுடூச்யாதி கஷாயம் சாப்பிடவும். 15 மிலி கஷாயம் + 60 மிலி கொதித்து ஆறிய தண்ணீர் + 2 சொட்டு சுத்தமான தேன், காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். சாப்பிட்ட இந்த மருந்து ஒரு மணி நேரத்தில் ஜீரணமாகிவிடும். அதன் பின்னர் பாகற்காய் ஜூஸ் அருந்தலாம்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Bitter Gourd, Gall bladder, Health, Healthcare, Intestines, Liver, Medicine, palak | 1 Comment »

Diarrhea – Solutions by Ayurvedha

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிற்றுக் கடுப்புக்கு முடிவு!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அடிக்கடி வயிற்றுக் கடுப்பு அத்துடன் வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது. ஆங்கில மருந்துகள் தற்காலிக நிவாரணம் மட்டுமே தருகின்றன. IRRITABLE BOWEL SYNDROME என ஆங்கில மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த உபாதை நீங்க ஆயுர்வேத மருத்துவம் கூறவும்.

கே.இராசேந்திரன், வாலாட்டியூர், வேலூர்.

வயிற்றுக் கடுப்புடன் சிறிது சிறிதாக வெண்மையான கொழகொழப்பு திரவக் கசிவுடன் வயிற்றுபோக்கு காணும் இந்த உபாதைக்கான முக்கிய காரணங்களாக மைதா மாவினால் செய்யப்படும் பரோட்டா, எண்ணெய்யும் காரமும் கலந்து அதற்கு சைடு டிஷ்ஷாகக் குருமா சாப்பிடுவது, அதன் மேல் சூடான காபி குடிப்பது, அடிக்கடி குளிர்பானங்களைக் குடிப்பது, ஒவ்வாமை உணவுப்பொருட்களாகிய பாலுடன் உப்பையும், முள்ளங்கியுடன் உளுத்தம்பருப்பையும், வாழைப்பழத்தை தயிர், மோருடனும் மணத்தக்காளிக் கீரையுடன் மிளகையும், வெண்கலப் பாத்திரத்தில் பத்து இரவுகள் வைத்த நெய்யையும் சூடான தண்ணீரில் தேனைக் கலந்து பருகுவதும், பசலைக் கீரையுடன் எள்ளுப் பொடியும், வெயிலில் அலைந்துவிட்டு வந்தபின் திடீரென்று குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது, குடிப்பது போன்றவற்றாலும் இந்த உபாதை ஏற்படுகின்றது.

இதுபோன்ற உணவு மற்றும் செய்கைகளால் நம் உடலிலுள்ள நீர்மயமான வஸ்துக்கள் அனைத்தும் சீற்றமடைகின்றன. குடலில் பசியை மந்தப்படுத்தி மலத்துடன் இந்தக் கெட்டுப்போன நீர் கலந்து குடல் வாயுவினால் கீழ் நோக்கித் தள்ளப்பட்டு, நீங்கள் குறிப்பிடும் வயிற்றுக் கடுப்பையும், வயிற்றுப் போக்கையும் ஏற்படுத்துகின்றது. இதில் மலம் சொற்பம் சொற்பமாக அடிக்கடி, முக்கலுடனும், முனகலுடனும் வெளியேறும்.

மேற்குறிப்பிட்ட காரணங்களைத் தவிர்த்து காலையில் ஒரு டீஸ்பூன் தேயிலை ஒரு கப் நீரில் போட்டு நன்றாக வெந்ததும் எடுத்து வடிகட்டி சிறிது சர்க்கரை கலந்து பருகலாம். சிறந்த தேயிலையில் காஃபின் ஒரு பங்கும் துவர்ப்பு மூன்று பங்கும் உள்ளன. துவர்ப்பு வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும், சிறுநீரைப் பெருக்கும் செய்கை கொண்டது.

காலை உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாக வில்வக்காயின் உள்ளேயிருக்கும் பிசின் போன்ற சுளைப்பகுதி 1/2 ஸ்பூன் (2 1/2 கிராம்) + வெல்லம் 1/4 ஸ்பூன் + நல்லெண்ணெய் 1/2 ஸ்பூன் + அரிசித் திப்பிலித்தூள் 1/4 ஸ்பூன் + சுக்குப் பொடி 1/4 ஸ்பூன். இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் குழைத்து நக்கிச் சாப்பிடவும்.

காலை உணவாக சூடான புழுங்கலரிசி சாதத்தில் புதினாக்கீரையைச் சட்னியாகச் சேர்த்து சிறிது நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். புதினாக்கீரை ஜீரணமாகாமல் வரும் பெருமலப் போக்கைக் கட்டுப்படுத்தும் குணம் வாய்ந்தது. காலை உணவிற்குப் பிறகு ஆயுர்வேத மருந்தாகிய முஸ்தாரிஷ்டம் 15 மிலி + ஜீரகாரிஷ்டம் 15 மிலி + 1 வில்வாதி மாத்திரையை அரைத்துச் சேர்த்துச் சாப்பிடவும்.

மதிய உணவிற்கு ஒரு மணிநேரம் முன்பாக தாடிமாஷ்டகம் எனும் சூரணத்தை 1/2 ஸ்பூன் (2.5 கிராம்) அளவில் எடுத்து, ஒரு ஸ்பூன் சுத்தமான தேனில் குழைத்து நக்கிச் சாப்பிடவும். மதிய உணவின் முன் பாதியில் மிளகு சீரகப்பொடி அல்லது பருப்புப்பொடி, ஐங்காயப்பொடி போன்றவற்றில் ஒன்றை சூடான புழுங்கலரிசி சாதத்துடன் சிறிது ஆயுர்வேத மருந்தாகிய தாடிமாதி கிருதம் எனும் நெய் மருந்துடன் பிசைந்து சாப்பிடவும். மாங்காய் விற்பனைக்கு வந்துள்ள இந்த நேரத்தில் அதனுள்ளே இருக்கும் மாம்பருப்பை உலர்த்தி அத்துடன் கறிவேப்பிலையையும் சிறிது மிளகும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துச் சூடாக்கித் தாளித்து சிறிது உப்பு கலந்து கடைசியில் சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும். வயிற்றுக்

கடுப்பு, வயிற்றோட்டத்தைக் குறைக்கும்.

மாலையில் டீ ஒரு கப்பும், இரவு உணவிற்கு ஒரு மணிநேரம் முன்பாக வில்வாதி லேஹ்யத்தை 5 கிராம் (ஒரு ஸ்பூன்) நக்கிச் சாப்பிடவும். இரவில் கூவைக்கிழங்கு எனும் ஆரோரூட் மாவுக்கஞ்சி சிறிது மோர் கலந்து சாப்பிடவும். அதன்பிறகு காலை உணவிற்குப் பிறகு குறிப்பிட்ட மருந்தை மறுபடியும் 30 மிலி 1 வில்வாதி மாத்திரையுடன் சாப்பிடவும். இந்த உணவுமுறைகளையும் மருந்துகளையும் தொடர்ந்து 48 நாட்களாவது சாப்பிட வேண்டும்.

Posted in Alternate, Ayurvedha, Ayurvetha, Crap, Diarrhea, Food, IRRITABLE BOWEL SYNDROME, Liver, Loose Motion, medical, Medicine, Shit, solutions, Stomach, Tablets, Ulcer | Leave a Comment »