Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘lies’ Category

‘Why did Jaya bachan hide her asset details while competing for Rajya Sabha?’

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

சொத்து விவரங்களை மறைத்தது ஏன்? ஜெயாபச்சனுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

புதுடெல்லி, மார்ச். 18-

ஆதாயம் தரும் பதவி வகிக்கும் சர்ச்சை தொடர்பாக இந்தி நடிகர் அமிதாப்பச்சனின் மனைவியும், நடிகையுமான ஜெயாபச்சன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் அவர் சமாஜ் வாடி கட்சி சார்பில் உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது எம்.பி. பதவிக்கு மீண்டும் இப்போது ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பாராபாய்கி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் அமீர் ஹைதர் தேர்தல் கமிஷ னரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில் அவர், “கடந்த ஜுன் மாதம் நடந்த டெல்லி மேல்-சபை தேர்தலில் போட்டியிட்ட ஜெயாபச்சன் தனது வேட்புமனுவில் கணவர் அமிதாப்பச்சனுக்கு தவுலத் பூரில் 2 நிலங்கள் இருப்பதை தெரிவிக்காமல் மறைத்து விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தேர்தல் கமிஷன் ஏற்கனவே இதுபற்றி பதில் அளிக்கும்படி ஜெயாபச்சனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதற்கு அவர் பதில் அனுப்பவில்லை. இப்போது அவருக்கு மேலும் ஒரு நோட்டீசை தேர்தல் கமிஷன் அனுப்பி உள்ளது.

ஏப்ரல் 15-ந்தேதிக்குள் இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும். பதில் வரா விட்டால் நீங்கள் பதில் அளிக்க விரும்பவில்லை என கருதி தேர்தல் கமிஷன் தன் னிச்சையாக முடிவு எடுக்கும் என்று தேர்தல் அதிகாரி பாண்டே அந்த நோட்டீசில் கூறியுள்ளார். ஜெயாபச்சன் பதில் அளிக்காவிட்டால் அவரது எம்.பி. பதவி பறிபோகும் அபாயம் ஏற்படும்.

===================================================
முலாயம் சொத்து மதிப்பு ரூ. 2.25 கோடி

புடாவன் (உ.பி.), மார்ச் 29: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கைச் சந்தித்து வரும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் முலாயம் சிங் யாதவ், தமது மொத்த சொத்தின் மதிப்பு ரூ. 2.25 கோடி எனத் தெரிவித்துள்ளார்.

குனார் சட்டப்பேரவைத் தொகுதி வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

Posted in ABCL, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Assets, Bachchans, case, Corruption, Declaration, Declare, Disproportionate, Election, Hid, Hide, Jaya Bachan, Jayabachan, Jeya Bachan, Jeyabachan, kickbacks, Law, lies, MP, Mulayam, Order, Polls, Rajya Saba, Rajya Sabha, RS, Samajvadi, Samajvadi Party, Samajwadi, Samajwadi Party, UP, Uttar Pradesh, voter | Leave a Comment »

Hungary’s Prime Minister Ferenc Gyurcsany will not resign

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 19, 2006

ஹங்கேரி பிரதமர் ஃபெரன்ட்ஸ் ஜுவர்சான்யா
வன்முறை நடைபெற்ற இரவு “கருப்பு இரவு” என்கிறார் பிரதமர்

இராஜினாமா செய்ய ஹங்கேரி பிரதமர் மறுப்பு

ஹங்கேரி நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக தலைநகர் புதபெஸ்ட்டில் நேற்றிரவு ஆர்ப்பாட்டங்களும், வன்முறையும் நடைபெற்றுள்ள போதும், தான் பதவியினை இராஜினாமா செய்யப் போவதில்லை என ஹங்கேரி நாட்டு பிரதமர் ஃபெரன்ட்ஸ் ஜுவர்சான்யா கூறியுள்ளார்.

மறுதேர்தலில் வெற்றி பெறுவதற்காக தான் பொய் கூறியதினை பிரதமர் ஒப்புக்கொள்ளும் ஒலிநாடாப் பதிவு ஒன்று வெளியிடப்பட்டதினை தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும், வன்முறைகளும் நடைபெற்றன.

பேட்டிகளின் போது, தனக்கும், தன்னுடைய பொருளாதார கொள்கைகளுக்கும், தனது சோசலிஸ கட்சி ஆதரவு கொடுப்பதால், தான் வெளியேறுவதற்கான காரணங்கள் இல்லை என்றார் பிரதமர்.

நூறு காவல் துறையினரும், ஐம்பது ஆர்ப்பாட்டகாரர்களும் காயம் அடைவதற்கு காரணமான சூறையாட்டம் நடந்த குறிப்பிட்ட இரவு, கம்யூனிச ஆட்சி முடிவிற்கு வந்த பிறகு இடம்பெற்ற ஒரு கறுப்பு இரவு என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது புதபெஸ்ட்டின் வீதிகள் அமைதியாக காணப்பட்டாலும், ஒரு அரசியல் சர்ச்சை ஏற்படும் நிலை உணரப்படுவதாக அங்கிருக்கின்ற பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கின்றார். தலைநகரில் ஏற்பட்ட மோதல்களுக்கு வலதுசாரிகளே காரணம் என அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் குற்றம் சாட்டினார்.

Posted in anti government, Budapest, Communist, Ferenc Gyurcsany, Hungary, Left, lies, Prime Minister, resign, Right-wing, riots, Socialist Party, Tamil, voters | Leave a Comment »