பிரான்ஸ் நாட்டுத் தேர்தலின் அடுத்த கட்ட போட்டிக்குத் தயாராகும் இரு வேட்பாளர்கள்
![]() |
![]() |
அடுத்த கட்டத் தேர்தலுக்குத் தயாராகும் வேட்பாளர்கள் |
பிரான்ஸில் மே மாதம் ஆறாம் திகதி நடக்கவுள்ள இறுதி முடிவுக்கான, இரண்டாவது கட்ட அதிபர் தேர்தல் வாக்களிப்புகளுக்கு முன்னதாக, முதற்சுற்றில் வெற்றி பெற்றவர்களான வலதுசாரி நிக்கொலஸ் சர்கோஷி மற்றும் சோசலிஸ எதிர்க்கட்சியைச் சேர்ந்த செகொலென் றோயல் ஆகியோர் தமது இரு வாரகால பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்கள்.
சர்கோஷி அவர்கள் டிஜொனிலும் றோயல் அவர்கள் தென்கிழக்கே வலன்ஸிலும் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்கள்.
முதற்சுற்றில் சர்கோஷி அவர்கள் 30 வீத வாக்குகளையும், றோயல் அவர்கள் 26 வீத வாக்குகளையும் பெற்று, போட்டியிட்ட 12 வேட்பாளர்களில் முதல் இரு இடங்களைப் பெற்றனர்.
ஆகவே அடுத்த வாக்கெடுப்பில் இவர்கள் இருவர் மாத்திரம் போட்டியிடுவார்கள்.
அதிரடி மாற்றத்துக்கான வேட்பாளராகப் பார்க்கப்படுகின்ற சர்கோஷிக்கும், தாராளவாத இடதுசாரியாகப் பார்க்கப்படுகின்ற றோயல் அவர்களுக்கும் இடையிலான போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது மே மாதம் 6 ஆம் திகதிதான் தெளிவாகும்.