Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘legal’ Category

Remembering a hero of liberty: Justice Hans Raj Khanna, former Supreme Court judge passes away – TJS George

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

சுதந்திர இந்தியாவின் துணிச்சல் மிக்க நீதிபதி

டி.ஜே.எஸ். ஜார்ஜ், பத்திரிகையாளர்

சுதந்திர இந்தியாவின் மிகத் துணிச்சலான நீதிபதி யார்? அந்தச் சிறப்புக்குத் தகுதியான நீதிபதி ஹன்ஸ் ராஜ் கன்னாதான். அவரது துணிச்சலை மதிப்பிடுவதற்கு, நெருக்கடிநிலைக் கால பயங்கரங்களை நாம் நினைவுகூர்ந்தாக வேண்டும்.

காவல் துறையினர் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்; சித்திரவதை செய்யலாம்; கொலைகூடச் செய்யலாம்; ஆனால், யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற சூழ்நிலை நிலவிய நாள்கள் அவை.

கைது செய்யப்பட்டவர்களைப் பற்றிய தகவலையும் நாம் தெரிந்துகொள்ள முடியாது; ஏனென்றால், அப்போது செய்திகள் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தன; தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டன. தெருமுனைகளிலும் டீக்கடைகளிலும் சந்தித்துப் பேசுவதற்கே மக்கள் அச்சப்பட்ட காலம் அது. நாடெங்கிலும் அச்சம் பரவி இருந்தது; அனைத்து இடங்களிலும் போலீஸýக்கு உளவு சொல்பவர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை நிலவியது என்பதை இன்றைய தலைமுறையால் நம்பக்கூட முடியாது. அத்தகைய கொடூரச் செயல்களைச் செய்ததோடு மட்டுமல்ல; இந்திரா காந்தியின் அன்றைய இந்தியா, அதை மூடிமறைக்காமல் பகிரங்கமாகவும் செய்தது.

நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டதற்கு மறுநாள், வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம் மற்றும் சமத்துவம் உள்ளிட்ட முக்கியமான அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் வகையில் ஓர் உத்தரவைப் பிறப்பித்தார் அன்றைய குடியரசுத் தலைவர். ஸ்டாலினின் ரஷியாவிலும் பினோசேவின் சிலியிலும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைப் போன்றது அது.

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஆனால், அதை எதிர்த்து அப்போதும் பலர் நீதிமன்றத்துக்குச் சென்றனர். “ஆள்கொணர் மனு’க்களை (ஹேபியஸ் கார்ப்பஸ்) விசாரிப்பதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 9 உயர் நீதிமன்றங்கள் தீர்ப்புக் கூறின. ஆனால், உச்ச நீதிமன்றம் வேறு விதமாகத் தீர்ப்பளித்தது. அரசாங்கத்தின் யதேச்சாதிகாரத்தை அது நியாயப்படுத்தியதுடன், நியாயம் கேட்டு நீதிமன்றத்தை அணுகுவதற்கான குடிமக்களின் உரிமையைப் பறித்ததையும் நியாயப்படுத்தியது.

5 நீதிபதிகள் அடங்கிய அந்த உச்ச நீதிமன்ற பெஞ்சில், 4 நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பளித்தனர். ஆனால், ஒரேயொரு நீதிபதி மட்டும் மாற்றுக் கருத்தைத் தெரிவித்தார். அவர்தான் நீதிபதி எச்.ஆர். கன்னா.

1978, ஆகஸ்ட் 28-ல் வழங்கப்பட்ட அத் தீர்ப்பு, நமது வரலாற்றின் களங்கமான ஆவணமாகவே இருந்துகொண்டிருக்கும். சட்டவிரோதமான சர்வாதிகார அரசைப் பாதுகாக்க வேண்டும் என்ற துடிப்பினால், அந்த 4 நீதிபதிகளும் உள்ளார்ந்த நீதிநெறிப் பார்வையை வெளிப்படுத்தத் தவறும் அளவுக்கு தமது பகுத்தறிவின் கதவுகளை மூடிக்கொண்டுவிட்டனர்.

“”கைதிகளை நல்ல அறைகளில் அடைத்துவைத்து, அவர்களுக்கு நல்ல முறையில் உணவளித்து, நல்ல முறையில் நடத்திவரும் அரசின் பரிவும் அக்கறையும் ஒரு தாயின் பரிவுக்கு இணையாக இருக்கிறது” என்னும் நீதிபதி எம்.எச். பெக்-கின் அதிர்ச்சிகரமான அறிவிப்பு அதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

தாயுள்ளத்தின் உன்னதப் பண்புகளை அவமதிக்கும் வகையில் அந்த வரிகளை அவர் எழுதிக்கொண்டிருந்தபொழுதுதான், கர்நாடகத்திலே ஜார்ஜ் பெர்னாண்டஸின் சகோதரர் சித்திரவதை செய்யப்பட்டுக்கொண்டு இருந்தார்; கேரளத்தில் பொறியியல் மாணவரான ராஜன் போலீஸôரால் அடித்துக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார். நாடு முழுவதும் இதைப்போல ஆயிரக்கணக்கான அட்டூழியங்கள் நடைபெற்றன.

அதற்குச் சில மாதங்கள் கழித்து, எவ்வித வெட்கமும் இன்றி இந்தியத் தலைமை நீதிபதி பதவியை ஏற்றுக்கொண்டார் நீதிபதி பெக். பணிமூப்பின்படி அப் பதவிக்கு உரியவரல்லர் அவர். நீதிபதி எச்.ஆர். கன்னாதான் அனைவரையும்விட மூத்த நீதிபதி. ஆனால் வரலாற்றில் படுமோசமான முறையில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட ஒரு நொடியினிலே, படுமோசமான முறையில் நீதியைக் குழிதோண்டிப் புதைத்த ஒரு நீதிபதி தனது துரோகத்துக்கான பரிசை ~ 30 வெள்ளிக்காசுகளை யூதாஸ் பெற்றதைப்போல ~ பெற்றுக்கொண்டார். ஆனால், யேசுவைக் காட்டிக் கொடுத்ததற்காக பின்னாளில் வருந்தினார் யூதாஸ் இஸ்காரியோத். அந்த நாகரிகமாவது நீதிபதி பெக்-க்கு இருந்ததா என்பது தெரியவில்லை.

அதைத் தொடர்ந்து கன்னாவும் தமது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். ஆனால், அவரால் தலைநிமிர்ந்து நடக்க முடிந்தது; ஏனென்றால், நீதித் துறையில் நாட்டின் குடிமக்கள் வைத்திருந்த நம்பிக்கையை, தனது மனசாட்சியின் குரலை, பதவியேற்கும் பொழுது தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நிலைநாட்டுவதற்கான துணிச்சலை, ஐந்து நீதிபதிகளில் தனியொருவராகக் காட்டியவர் அவர். வாழ்வதற்கான, சுதந்திரத்துக்கான மனிதனின் உரிமைகளை உயர்த்திப் பிடித்தவர் அவர். “”ஒரு நீதிமன்ற பெஞ்சின் பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு மாறான கருத்தை ஒரு நீதிபதி பதிவு செய்கிறார் என்றால், அது, நீதிமன்றம் தவறாக அளித்துவிட்டதாக அவர் கருதும் தீர்ப்பு என்றாவது ஒரு நாள் திருத்தப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், எதிர்கால மேதைமைக்கும், நீதிநெறி உணர்வுகளுக்கும் அவர் விடுக்கும் முறையீடாகும்” என்று அமெரிக்க நீதிபதி ஒருவர் கூறியிருப்பதையும் மேற்கோள் காட்டினார் நீதிபதி கன்னா.

எச்.ஆர். கன்னாவைப் போன்றோரின் நீதிநெறி உணர்வுகளின் காரணமாக இன்று நாம் சுதந்திரத்தை பெருமிதத்துடன் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். 95 வயதான நீதிபதி கன்னா, கடந்த வாரம் உறங்கிக்கொண்டிருந்த பொழுது அமைதியாக நல்மரணமடைந்தார். அவரை இறைவன் ஆசீர்வதித்தான். அவரது ஆத்மாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு நொடிப் பொழுது மெüனம் கடைப்பிடிப்போம்.

Posted in abuse, Arrest, Attorneys, Biosketch, Conservative, Correctional, Courts, Faces, HansRaj, HR, Interrogation, Jail, Judge, Justice, Khanna, Law, Lawyers, legal, Liberal, Liberty, names, Obituary, Order, people, rights, SC, Torture | 1 Comment »

Srinivasa Sasthri – Faces: Biosketch by V Sundaram

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007

ஆங்கிலேயருக்கு ஆங்கிலம் கற்பித்த இந்தியர்

வி. சுந்தரம்

“வெள்ளி நாக்கு படைத்த பேச்சாளர்’ (Silver tongued orator) என பிரசித்தி பெற்ற ரைட் ஆனரபிள் ஸ்ரீநிவாஸ சாஸ்திரி பார்க்காத உயர்ந்த பதவியில்லை – சிறந்த ஆசிரியர், சிறந்த “பார்லிமெண்டேரியன்’, சிறந்த ராஜதந்திரி, சிறந்த தூதுவர்..

1869 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ம் நாள் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள வலங்கைமான் கிராமத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். சங்கரநாராயண சாஸ்திரியின் மூத்த குமாரரான இவர் குடும்பத்தின் வறுமையை சிறு வயதிலேயே கண்டார். சட்டையை வெளுக்க சவுக்காரம் கூட வாங்க முடியாத வறுமை, இலவசமாகக் கிடைத்த மாங்காய்களை ஊறுகாய்போட தேவையான உப்பைக்கூட வாங்க முடியாத ஏழ்மை.

கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பு பின்னர் கல்லூரியில் படிக்கும்போது இரவில் தெருவிளக்கின் வெளிச்சத்தில் பாடங்களைப் படிக்கும்படி செய்த பணமின்மை! இப்பேர்ப்பட்ட குடும்ப நிலையிலிருந்து ஒரு பெரிய பேச்சுவன்மை நிறைந்த உலகம் போற்றும் ராஜதந்திரியாக மலர்ந்தது ஒரு சுவையான கதை.

பி.ஏ. தேர்வில் மாகாணத்தில் முதலிடம் பெற்று, சட்டக் கல்வி பயில பணமின்மையால் சென்னை சைதாப்பேட்டையிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். பிறகு பல பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றியபின் சென்னை ஹிந்து மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரானார்.

ஆங்கிலம், சமஸ்கிருதம் இவைகளைப் போதிப்பதில் சிறந்த ஆசிரியராகப் புகழ்பெற்றதுடன் மற்ற இரு தொண்டுகளிலும் புகழ் பெற்றார். ஒன்று ஆசிரியர்களின் நன்மைக்காக முதன்முறையாக ஒரு சங்கம் நிறுவியது (Madras Teacher’s Guild) மற்றொரு தொண்டு – இன்று பல கிளைகளுடன் கொழிக்கும் திருவல்லிக்கேணி அர்பன் கோவாப்பரேடிவ் சொûஸட்டி (Triplicane urban Co-operative Society)

கல்விப் பணியில் ஈடுபட்ட சாஸ்திரியாருக்கு தேசப்பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைத்தது. தேசத் தொண்டில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்குத் தேவையான பயிற்சியளிக்க தேச பக்தர் கோபாலகிருஷ்ண கோகலே இந்திய ஊழியர் சங்கம் (Servants of India Society) என்ற ஒரு ஸ்தாபனத்தை நிறுவியிருந்தார். கோகலேயின் நோக்கத்தால் கவரப்பட்ட சாஸ்திரியார், தன் நல்ல சம்பளத்தையும் பெரிய குடும்ப நிர்வாகப் பொறுப்பையும் விட்டுவிட்டு, நாட்டுப்பணியில் கோகலே அளித்த உதவித் தொகையை ஏற்றுக்கொண்டது மிக வியப்புக்குரிய செய்கையாகும்.

இச்சங்கத்தில்தான் பயிற்சிக்கு வந்த காந்திஜியை முதன்முதலில் சந்தித்தார். சாஸ்திரியின் ஆங்கில அறிவு காந்திஜியைக் கவர்ந்தது. பிற்காலத்தில் தான் தொடங்கிய “யங் இந்தியா’ என்ற பத்திரிகையின் முதல் பிரதியை சாஸ்திரியாரின் அபிப்ராயத்தை அறிய அனுப்பினார். அதில் 17 நுண்ணிய இலக்கணத் தவறுகளைச் சுட்டிக்காட்டினார். காந்திஜிக்கு சாஸ்திரியாரிடம் இருந்த மதிப்பு அதிகமாயிற்று.

மற்றொரு சமயம் தான் தொடங்க இருந்த சட்ட மறுப்பு போராட்டத்தைப் பற்றிக் கூறி சாஸ்திரியாரின் கருத்தைக் கேட்டார். இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்த சாஸ்திரியார், நோக்கம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தபோதிலும் சட்டத்தை மீறிப் போராடுவது எதிர்காலத்தில் ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும் என்று எச்சரித்தார். அந்த எச்சரிக்கை எவ்வளவு தீர்க்கதரிசனமுள்ளது என்பதை இப்பொழுது காண்கிறோமல்லவா!

சாஸ்திரியார் தன் சொற்பொழிவாற்றும் திறமையை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தினார். உலக அரங்கில் இந்தியாவுக்கு சுய ஆட்சி அளிக்க வேண்டுமென்று முதன்முதலில் பேசியவர் அவரே.

உலகில் எங்கெங்கெல்லாம் தீமைகள் நடந்தனவோ அவைகளுக்குப் பொறுப்பான நாடுகளை சாடினார்.

பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளுக்கு பிரயாணம் செய்து அங்கு லட்சக்கணக்கில் வாழும் இந்தியர்களுக்கு சமஉரிமை கிடைக்குமாறு செய்தார். இந்தியாவின் பெருமைகளை உலகம் அறியுமாறு செய்த முதல் இந்தியர் இவரே.

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி பிடித்த முன்னாள் பிரதமர் ஸ்மட்ஸ் அங்கு லட்சக்கணக்காக வசிக்கும் தமிழர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரிப் படிப்புக்கு எவ்வித வசதியும் செய்து தரவில்லை. சாஸ்திரியார் அங்குள்ள நகரங்களுக்குச் சென்று தன்னுடைய சொற்பொழிவுத் திறமையால் பல ஆயிரம் ரூபாய் வசூலித்து ஒரு கல்லூரியை நிறுவினார். அக்கல்லூரி டர்பன் நகரில் “சாஸ்திரி காலேஜ்’ என்ற பெயரில் சிறந்த பணி செய்து வருகிறது.

பிரிட்டிஷ் அரசு அவர் பணியைப் பாராட்டி “ரைட் ஆனரபிள்’ என்று அழைக்கப்படும் மன்னரின் “பிரிவிகவுன்சில்’ என்ற ஆலோசனை சபையின் அங்கத்தினராக்கியது.

மேலும் அவருடைய இனிய குரலில் அழகான ஆங்கிலத்தில் மயங்கிய பிரிட்டிஷ் மக்கள் “வெள்ளி நாக்கு படைத்த சொற்பொழிவாளர்’ என்று அழைத்தனர். சாஸ்திரியாரின் சொற்பொழிவு தங்குதடையற்ற பிரவாகமாகவும், பொதுவாகவும், தெளிவாகவும், வெள்ளி மணிகளின் ஓசைபோலவும் இனிய குரலில் அமைந்திருக்கும்.

அவர் பேச்சை முதன்முறையாக ஜெனிவாவில் கேட்ட பால்ப்ளோர் பிரபு (Lord Balflour) “எங்கள் இங்கிலீஷ் பாஷை மேன்மை எவ்வளவு உயரம் செல்லும் என்பதைப் புரிந்து கொண்டேன்’ என்று கூறுகிறார்.

ஒரு தடவை சாஸ்திரியாரின் சொற்பொழிவைக் கேட்க அழைக்கப்பட்டார் பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் மெக்டொனால்ட். ஐந்து நிமிஷமே இருக்க முடியும் என்று சொன்ன அவர் சாஸ்திரியாரின் பேச்சு முடியும் வரை இருந்தார் என்பது வியப்பளிக்கும் செய்தியாகும்.

சாஸ்திரியார் கடைசியாக வகித்தது அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியாகும். அங்கு அப்பதவிக்குரிய சம்பளத்தைப் பெறாமல் இந்திய ஊழியர் சங்கத்தில் சேரும்போது தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கிணங்க ரூ. 500 மட்டுமே கௌரவப்படியாக பெற்றுக்கொண்டார். அந்தத் தொகையிலும் பாதியை ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்காகவும் விடுதிச் செலவுக்காகவும் தன் தேவைகளைக் குறைத்துக் கொண்டு கொடுத்து விடுவார்.

கல்வி கற்பிப்பதில் விருப்பம் கொண்ட அவர் தன் தள்ளாத வயதில் ஆங்கில மொழிநடையைக் கற்பிப்பார். அந்த வகுப்புகளுக்கு முதல் வரிசையில் இடம் பிடிக்க மாணவர்களாகிய எங்களுடன் ஆசிரியர்களும் ஓடி வருவது வேடிக்கையாக இருக்கும்.

சாஸ்திரியாரின் கடைசித் தொண்டு மைலாப்பூரில் அவர் நிகழ்த்திய பிரசித்தி பெற்ற ராமாயண சொற்பொழிவுகளேயாகும். அவைகளும் அவருடைய பேச்சுகளும் எழுத்துகளும் அவர் நமக்கு விட்டுச் சென்ற பொக்கிஷங்களாகும்.

லண்டன் மாநகரில் உள்ள “கில்ட் ஹால்’ என்ற பிரசங்க மண்டபத்தில் நாடுகளின் தலைவர்கள் மட்டுமே பேசலாம். அங்கு பேசியவர்களின் பட்டியலில் சாஸ்திரியாரின் பெயர் முதலிடம் வகிக்கிறது. அத்துடன் அங்கு வைக்கப்பட்டிருக்கும் அவருடைய பெரிய உருவப்படத்தின் கீழ் காணப்படும் வாக்கியம் “ஆங்கிலேயருக்கு ஆங்கிலம் கற்பித்த இந்தியர்’.

(சாஸ்திரியாருக்கு நினைவாலயம் பல இடங்களில் இருப்பினும் அவர் பிறந்த வலங்கைமானில் இல்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கும் விஷயமாகும். மக்களின் விருப்பம் என்று நிறைவேறுமோ?)

Posted in AICC, Attorney, Biosketch, British, Commonwealth, Congress, Durban, Education, England, English, Faces, Gandhi, Gokale, Gokhale, Instructor, Law, Lawyer, Leaders, legal, Mahathma, Mahatma, Orator, parliament, Parliamentarian, people, Sanskrit, Sasthri, Sastri, Shasthri, Shastri, Speech, Srinivas, Srinivasa, Srinivasan, Sundaram, Teacher, Vice-chancellor | 1 Comment »

Kamal gets subpoenaed by Supreme Court regarding the export of ‘Kurudhi punal’ Tamil movie

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2007

நடிகர் கமல்ஹாசனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுதில்லி,நவ. 23: வருமான வரிச் சலுகை தொடர்பான வழக்கில் நடிகர் கமல்ஹாசனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கமல்ஹாசன், அர்ஜுன், கவுதமி நடித்த குருதிப்புனல் திரைப்படம் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. இப்படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை கமல்ஹாசன் வழங்கினார். ஒரு சரக்கை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் வருமான வரியில் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. வருமான வரிச் சட்டத்தின் 80 எச்சிசி பிரிவின்படி இந்த சலுகை வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ரூ.54.50 லட்சம் வருமான வரிச் சலுகைக் கேட்டார் கமல்ஹாசன்.

திரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை மட்டும்தான் குறிப்பிட்ட கமல்ஹாசன் வழங்கியுள்ளார். இது சரக்கு ஏற்றுமதி ஆகாது. திரைப்படத்தின் உரிமை என்பது சரக்கு அல்ல. எனவே வரிச்சலுகை வழங்க முடியாது என்று வருமான வரித்துறை கூறியது. இதை எதிர்த்து கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்தார்.

வருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயமும், சென்னை உயர் நீதிமன்றமும் இவ்வழக்கில் கமல்ஹாசனுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கின. இதை எதிர்த்து வருமான வரித்துறை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி அசோக் பான் தலைமையிலான பெஞ்ச், பதில் அளிக்குமாறு கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Posted in 420, Accounting, Accounts, Actor, America, Arjun, Ashok Baan, Ashok Ban, Ashok Bhan, Cinema, Claims, content, Courts, Dasavadharam, Dasavatharam, deductions, Evasion, Exports, Films, Finance, Forgery, Goods, Illegal, Income, Income Tax, IT, Judges, Justice, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, Kurudhippunal, Kurudhipunal, Kuruthippunal, Kuruthipunal, Law, legal, Loss, merchandise, Movies, Nadiadvala, Nadiadwala, Order, Pictures, Producer, Profit, rights, SC, Scam, subpoena, Tax, Taxes, telecast, US, USA | 1 Comment »

State of the Justice System in India (BMW case: NDTV exposes prosecution-defence nexus)

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

வழக்கறிஞர்களுக்கு “தண்டனையே’ கிடையாதா?

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

ஒரு சாலை விபத்து (பி.எம்.டபிள்யூ.) வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞரும், எதிரியின் வழக்கறிஞரும் சேர்ந்து சாட்சியத்தைக் குலைப்பது பற்றி பேசிக்கொண்டதை என்.டி.டி.வி. சில வாரங்களுக்குமுன் அம்பலப்படுத்தியதைப் பார்த்திருப்பீர்கள்.

அந்த வழக்கு 9 ஆண்டுகளுக்கு முன்னால் தில்லியில் நடந்த சாலை விபத்து பற்றியது. கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் குடிபோதையில் காரை ஓட்டி, பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த சிலரைக்கொன்றது பற்றியது அந்த வழக்கு. அவர் ஓட்டிய கார் பி.எம்.டபிள்யூ. என்ற வெளிநாட்டுக் கார். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒரே சாட்சி குல்கர்னி என்பவர். அரசுத் தரப்பு ஏதோ காரணத்துக்காக அவரை சாட்சிக் கூண்டில் ஏற்றவே இல்லை!

எதிரியின் வழக்கறிஞர் (பிரபலமான வழக்கறிஞர், காங்கிரஸ்காரரும் கூட), அரசுத் தரப்பு வழக்கறிஞர் (இவரும் பிரபலமான வழக்கறிஞர்தான். ஒரு ரூபாய் கட்டணம் மட்டுமே போதும், குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுவேன் என்று தானாக முன்வந்தவர்) இருவரும், முக்கிய சாட்சியுடன் ஏதோ அன்னியோன்னியமாகப் பேசிக்கொண்டிருந்ததை என்.டி.டி.வி.யின் ரகசிய கேமரா படம் பிடித்துக் காட்டியது. அரசுத் தரப்பு வழக்கறிஞர், சாட்சியாக இருப்பவருக்கு “”புளூ லேபிள்” ஸ்காட்ச் விஸ்கியைக் காட்டி, குடிக்கிறீர்களா என்று கேலியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். எதிரியின் வழக்கறிஞரோ, அந்த சாட்சியை ரகசியமாகச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

இந்தக் காட்சிகள் பல வட்டாரங்களிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. வழக்கறிஞர்கள், பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்பதை அவை உணர்த்தின. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொலைக்காட்சியின் கலந்துரையாடலில் கலந்து கொண்ட தில்லி பார் கவுன்சில் தலைவர் மனான் அறிவித்தார். அதெல்லாம் நடக்காது, இரண்டு வழக்கறிஞர்கள் மீதும் நடவடிக்கை இருக்காது, எல்லாவற்றையும் பூசி மெழுகிவிடுவார்கள் என்று அதே நிகழ்ச்சியில் நான் முடிவுரையாகத் தெரிவித்தேன். அந்த இருவரையும் சில நாள்களுக்கு மட்டும் “சஸ்பெண்ட்’ செய்து, மீண்டும் பணிக்குச் செல்ல அனுமதித்துவிட்டனர்.

அந்த வழக்கின் முழு விவரமும் என்னிடம் கிடையாது – இரு வழக்கறிஞர்களும் அவர்களுடைய பதவிக்குப் பொருந்தாத எதையும் செய்தார்களா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எதிர்காலத்தில் இதுபற்றிய சுவாரசியமான தகவல்கள் வரக்கூடும். இப்போது நம்முடைய கவலை இந்த வழக்கு எப்படிப் போகிறது என்பதல்ல.

நம் நாட்டில் எந்தத் தொழில் செய்கிறவர் ஆனாலும் அவர் மக்களால் அலசப்படுகிறார். அரசு அதிகாரிகள், டாக்டர்கள், பொறியாளர்கள் என்று அனைத்து தரப்பாரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மக்களால் விமர்சிக்கப்படுகிறார்கள். அதே போல வழக்கறிஞர்கள் சமூகத்தை யாரும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதில்லை. வழக்கறிஞர்களின் குணாதிசயங்கள், தொழில்நடத்தும் விதம், பொதுவாக அவர்கள் நடந்துகொள்ளும் முறை ஆகியவை குறித்து ஊடகங்களும், பொதுவிஷயங்களில் அக்கறை உள்ள அமைப்புகளும் வெகு நெருக்கத்திலிருந்து ஆராய வேண்டும்; அந்த ஆய்வு முடிவை மக்கள் அறிய வெளியிட வேண்டும்.

என்னுடைய இளவயதில் மாவட்டங்களில் மாஜிஸ்திரேட்டுகளுடன் எனக்கு முதல் பரிச்சயம் ஏற்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் கிராமங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள மக்கள் வழக்கறிஞர்கள் பற்றிச் சொன்னதன்மூலம் பல விஷயங்கள் தெரிந்தன. வட இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் வீடு, நிலம் தொடர்பாக ஏதாவது ஒரு வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. ராணுவத்திலோ, நகரில் கிடைக்கும் சிறு வேலைகளிலோ கிடைத்த சொற்ப வருவாயை மக்கள் இந்த வழக்குகளுக்காகச் செலவிட்டனர். அதாவது அவை வழக்கறிஞர்களின் பைகளை நிரப்பின.

சாதாரண வழக்குகூட ஆண்டுக்கணக்கில் நீடித்தன, அல்லது நீட்டிக்கப்பட்டன. சில வழக்குகளில் வாதி, பிரதிவாதியின் மறைவுக்குப் பிறகு கூட வழக்குகள் பைசலாகாமல் நீடித்தன. உள்ளூர் போலீஸôர், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் இவற்றில் பங்கு இருந்தது. நம் ஜனநாயகத்தில் எல்லா துறைகளுக்கும், நடைமுறைகளுக்கும் உள்ள சாபக்கேடு இதற்கும் வந்து சேர்ந்தது, அதாவது பணக்காரர்களுக்குச் சாதகமாகவே நீதிமன்ற நடவடிக்கைகள் அமைந்துவிடுகின்றன.

வழக்குகளில் வாய்தா வாங்குவதிலேயே திறமைசாலியான ஒரு வழக்கறிஞர் குறித்து, வழக்கு விசாரணையின்போது நீதிபதியே சுட்டிக்காட்டினாராம்; அதையே அவர் தனக்கு அளித்த சான்றிதழாகக் கருதி பிற வழக்கு விசாரணையின்போதும் குறிப்பிட்டு வாய்தா வாங்கிவிடுவாராம். இதை அந்த தொலைக்காட்சி கலந்துரையாடலில் பேசிய தில்லி பார் கவுன்சில் தலைவர் குறிப்பிட்டார்.

நம் நாட்டு நீதிமுறை குறித்து எழுதிய புத்தகத்திலும் இதைப்பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறேன். வழக்கறிஞர்கள், நீதிமன்றம் ஆகியவற்றுக்குத் தரப்படும் முக்கியத்துவம் வழக்கில் சம்பந்தப்படும் ஏழைகளுக்குத் தரப்படுவதில்லை.

தில்லி தந்தூர் வழக்கில், முக்கிய எதிரிக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியபோது மக்களிடம் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. கொலை நடந்து 8 அல்லது 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஒரே சாட்சி ஒரு போலீஸ்காரர்தான். அவருக்கு சம்பளம்கூட அதிகம் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் அவருக்கு எவ்வளவோ பணத்தாசை காட்டியிருக்க முடியும், அல்லது தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றிவிடுவோம் என்று மிரட்டியிருக்க முடியும். எது எப்படி இருந்தாலும் நீதிக்காக நிலைகுலையாமல் நின்ற அந்த ஒரே சாட்சி காரணமாகத்தான் எதிரிக்கு தண்டனை விதிக்க முடிந்தது. இதில் கேள்வி என்னவென்றால், எப்படி ஒரு சாதாரணமான வழக்கு இத்தனை ஆண்டுகளுக்கு இழுத்துக் கொண்டே போகிறது என்பதுதான்.

அமெரிக்காவில் நியூயார்க், வாஷிங்டன் நகரங்கள் மீது பயங்கரவாதிகளின் விமானத் தாக்குதல் நடந்தவுடன் அரிசோனா மாநிலத்தில் இந்திய சீக்கியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். 6 மாதங்களுக்குள் வழக்கு விசாரணை நடந்து முடிந்து தாக்கியவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது. நம் நாட்டிலும் இப்படி ஏன் விரைந்து வழக்குகளை முடிக்கக் கூடாது? கொலைவழக்காக இருந்தால் ஓராண்டுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதை ஏற்கிறீர்களா இல்லையா? மூத்த அரசியல்வாதி அல்லது அதிகாரி என்றால் அவர் மீதான லஞ்ச, ஊழல் வழக்கையும் ஓராண்டுக்குள் விசாரித்துத் தண்டிக்க வேண்டும் என்பதை ஏற்பீர்களா?

வழக்கறிஞர்களை மேற்பார்வையிடவோ, கண்காணிக்கவோ யாரும் இல்லை என்ற எண்ணமே சில வேளைகளில் தோன்றுகிறது. பார் அசோசியேஷன் என்பது வழக்கறிஞர்களுடன் தோழமை உள்ள அமைப்பு. பார் கவுன்சில் என்பது வழக்கறிஞர்கள் பணி சட்டத்துடன் தொடர்புள்ளது. அது வழக்கறிஞர்களின் வேலையில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கொண்டுவர எப்போதாவது முயற்சி செய்துள்ளதா? வழக்கறிஞர்களைக் கண்காணிப்பதை நீதிமன்றங்கள் செய்ய முடியும், ஆனால் அவையும் அப்படி எதையும் செய்வதில்லை.

1960கள் வரை நீதித்துறையும் நிர்வாகத்துறையும் தனித்தனியே பிரிக்கப்படவில்லை. அப்போது மாவட்ட நிர்வாகம் வழக்குகளைக் கண்காணித்து வந்தது. எத்தனை வழக்குகள் தாக்கலாகின, எத்தனை விசாரிக்கப்பட்டன, எத்தனையில் இறுதித் தீர்ப்பு வந்தது என்று தொடர்ந்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்பட்டவுடன் நிர்வாகம், கண்காணிப்பு வேலையை விட்டுவிட்டது.

டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்தியாவில் நீதித்துறையின் கீழ் நிலையில் ஊழல் இருக்கிறது, இதன் மதிப்பு ஆண்டுக்கு ரூ.25,000 கோடி என்று தெரிவித்தது.

வழக்கறிஞர் தொழிலில் என்ன நடக்கிறது என்று அக்கறை காட்டப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது. இது வழக்கறிஞர்களின் எதிர்காலத்துக்கு மிகவும் நல்லது. சூரிய வெளிச்சம் எங்கு பாயவில்லையோ அங்கு பாச்சைகளும் கரப்பான்களும் பெருகி வளர்கின்றன. சூரிய ஒளி பட்டால் இவையெல்லாம் விலகி அங்கே தூய்மை நிலவும்.

(கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர்.)

——————————————————————————————–

தேவை, நீதித்துறை சீர்திருத்தம்

உ .ரா. வரதராசன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் தெரிவித்துள்ள கருத்து ஆழமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று.

“”தரக்குறைவாகவும், அவமதிக்கும் வகையிலும் நீதிபதிகளை வசைபாடுவது, சிலரது பொழுதுபோக்காக உள்ளது. இத்தகைய அறிக்கைகள் நீதிமன்றங்களை அவதூறுக்கு உள்ளாக்கி, அவற்றின் எதிர்காலத்தை மதிப்பிழக்கச் செய்ய முற்படுகின்றன; இவற்றை அனுமதிக்கவே முடியாது”, என்று கூறி, சம்பந்தப்பட்ட வழக்கில் நீதிமன்ற அவமதிப்பைச் செய்த நபருக்கு இரண்டு மாதச் சிறைத்தண்டனையை அந்த நீதிபதிகள் வழங்கினர். அதே தீர்ப்பில், கண்ணியமான வார்த்தைகளில் ஒரு நீதிமன்றத்தின் கருத்தை நியாயமான முறையில் விமர்சிப்பதைப் பற்றி கேள்வி கேட்க முடியாது என்றும் தெளிவுபடச் சொல்லப்பட்டது.

இந்தத் தீர்ப்பு, நாளிதழ்களில் வெளியான அதே நாளில், உலக ஊழல் அறிக்கை – 2007 என்ற ஓர் ஆவணத்தை இணையதளத்தில் காண நேரிட்டது. சர்வதேச ஊடுநோக்கி ( பழ்ஹய்ள்ல்ஹழ்ங்ய்ஸ்ரீஹ் ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப்) என்ற அமைப்பின் அறிக்கை நீதித்துறையில் உள்ள ஊழலைப் பற்றியது.

உலகில் இன்று நிலவும் ஊழலின் பரிமாணம் மலைக்க வைப்பதாக உள்ளது. உலகம் முழுவதிலும் ஊழலில் கசிந்து விரயமாகும் நிதியைக் கணக்கிட்டால் அது ஆண்டொன்றுக்கு 30 லட்சம் கோடி டாலர்கள் என்ற வரம்பைத் தாண்டுகிறது என்று ஒரு கணிப்பு தெரிவிக்கிறது. இது ஒருவேளை மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடாக இருக்கலாம். ஆனால் உலக நாடுகள் அனைத்திலும் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு, நீதி ஆகிய அனைத்துத் துறைகளையும் இந்த ஊழல் கரையான் செல்லரித்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மை கசப்பானதும் கவலைக்குரியதுமாகும்.

இதில் நீதித்துறையில் ஊழல் என்பது, மற்ற அனைத்துத் துறைகளையும்விட அபாயகரமானது. மற்ற துறைகளில் நிலவும் ஊழலால் பாதிக்கப்படுகிற எவரும், அவற்றுக்கு எதிராக நீதித்துறையின் தலையீட்டையே நாடுவது இயல்பானது. ஆனால், பரிகாரம் தேடிப் போகும் நீதி தேவதையின் சன்னிதானமே ஊழல் கறை படிந்து காணுமானால், வேறு புகலிடம் ஏது?

ஒருவர் தமக்களிக்கப்படும் அதிகாரத்தைத் தனிப்பட்ட ஆதாயங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தும் எந்த நடவடிக்கையும் ஊழலேயாகும். அந்த ஆதாயங்கள் பணமாகவோ, பொருளாகவோ, வேறுவகைப்பட்டதாகவோ இருக்கலாம். நீதித்துறை ஊழல் என்பது நீதி பரிபாலன முறைமைக்கு உள்ளிட்டு செயல்படும் எவரும், அதன் பாரபட்சமற்ற செயல்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கும் செல்வாக்கு செலுத்துவதன் சகல அம்சங்களையும் உள்ளடக்கியதே! இதை அளவிட்டு அறிவதற்காக 62 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளே இந்த உலக ஊழல் அறிக்கையில் விரிவாக இடம் பெற்றுள்ளன.

நீதித்துறையில் ஊழல் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று, நீதித்துறையின் செயல்பாட்டில் அரசியல் தலையீடுகளால் நிகழ்வது; மற்றது, நீதித்துறையின் பல மட்டங்களில் புகுந்துவிடும் லஞ்ச லாவண்யம் காரணமாக நடைபெறுவது. நீதித்துறையை அணுகும்போது, நியாயமான பாரபட்சமற்ற தீர்ப்பைப் பெறுகிற அடிப்படை மனித உரிமையை இந்த இருவகை ஊழலும் மறுக்கிறது. எந்த ஒரு நாட்டிலும் நீதித்துறையில் ஊழல் மலிந்தால், அங்கே ஆட்சி அதிகாரத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுவது தவிர்க்க முடியாததாகி விடும். “”ஊழலா, அது எங்கள் நாட்டில் வாடிக்கையாகிப் போய்விட்ட விவகாரம்” என்று மக்கள் சகித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடும்.

தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறவில்லையானால், அங்கே நீதித்துறையில் நாணல்போல் வளைந்து, ஊழலுக்கு இடமளிக்கும் நீதிபதிகள் இடம்பெறுவது இயல்பாகிவிடும்.

நீதிபதிகளுக்கான சம்பளம், ஊதிய நிலைமைகள், பாதுகாப்பற்ற சூழல், இடமாற்றல் அச்சுறுத்தல் போன்றவையும் நீதிபதிகளையும் நீதிமன்ற அலுவலர்களையும் ஊழல் நடைமுறைகளுக்கு இட்டுச் செல்லும்.

தவறிழைக்கும் நீதிபதிகளைத் தண்டனைக்கு உட்படுத்தவோ, பதவிநீக்கம் செய்யவோ உரிய ஏற்பாடுகள் இல்லையென்றாலும், நீதித்துறை ஊழலுக்கு உறைவிடமாகி விடும்; நேர்மையாகச் செயல்படும் நீதிபதிகளை ஆட்சியாளர்கள் விருப்பம்போல் பந்தாடும் சூழலும் அதே நிலைமைக்கே இட்டுச் செல்லும்.

நீதிமன்ற நடவடிக்கைகள் ஒளிவு மறைவு அற்றதாகவும், ஊழல் நடைமுறைகளைக் கண்காணிக்கிற ஏற்பாட்டுக்கு இடமில்லாமலும் அமையும் நிலை, நீதித்துறையை ஊழல் அரிப்பதற்கு வாய்ப்பாகி விடும்.

இந்த நான்கு அம்சங்களிலும், நீதித்துறையில் ஊழல் பரவாமல் தடுக்க, பல்வேறு பரிந்துரைகளை உலக ஊழல் அறிக்கை பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் நீதித்துறை ஊழல் பற்றிய ஓர் ஆய்வும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. 2005ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு கருத்தாய்வில் வெளிவந்த சில விவரங்களை இந்த அறிக்கை தொகுத்தளிக்கிறது.

“நீதித்துறை ஊழலின்றி செயல்படுகிறதா?’ என்ற கேள்விக்கு “இல்லை’ என்று பதிலளித்தவர்கள் 85 சதவிகிதம் பேர்! நீதித்துறை ஊழல் காரணமாகக் கைமாறும் தொகை ஆண்டுக்கு ரூ. 2,360 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நீதித்துறை ஊழலுக்குப் பிரதான காரணங்களாக அமைவது, வழக்கு விசாரணையில் நேரிடும் காலதாமதம், நீதிபதிகளின் எண்ணிக்கைக் குறைவு, சிக்கலான நீதிமன்ற நடைமுறைகளேயாகும்.

2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் 33,635 வழக்குகள்; உயர் நீதிமன்றங்களில் 33,41,040 வழக்குகள்; நீதிமன்றங்களில் 2,53,06,458 வழக்குகள் நிலுவையில் இருந்தன. 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து – “”இனி புதிதாக ஒரு வழக்குகூடப் பதிவு செய்யப்படவில்லை என்றாலும்கூட, நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து முடிக்க இன்னும் 350 ஆண்டுகள் பிடிக்கும்” என்பதாகும்!

இந்த நிலைமையில் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்துவதற்கான குறுக்கு வழியாக ஊழல் இடம்பெற்று வருகிறது.

இந்தியாவில் சராசரியாக பத்து லட்சம் நபர்களுக்கு 12 அல்லது 13 நீதிபதிகள் என்ற எண்ணிக்கையிலேயே, நீதித்துறை நியமனங்கள் உள்ளன. இதே பத்து லட்சம் நபர்களுக்கு, அமெரிக்காவில் 107 நீதிபதிகள்; கனடாவில் 75; பிரிட்டனில் 51 என்ற அளவில் உள்ளனர். இதனால் தீர்ப்புகள் தாமதமடைகின்றன. நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

“தாமதித்து வழங்கிடும் நீதி, மறுக்கப்படும் நீதி’. ஆனால், சட்டத்தை மீறுகிறவர்களுக்கும், குற்றங்களைத் தொழிலாகக் கொண்டு செயல்படுபவர்களுக்கும், வழக்குகளின் தாமதம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விடுகிறது! நீதிபதிகளுக்கான “நீதித்துறை நன்னடத்தைக் கோட்பாடுகள்’ சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டது இந்தியாவில்தான்! 2002ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டில் உருவான இந்தக் கோட்பாடுகள்தான், பின்னர் 2006ஆம் ஆண்டில் ஐ.நா. சபை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், இந்தக் கோட்பாடுகள் நீதிபதிகளின் சுயவிருப்பத்திற்கிணங்கப் பின்பற்றப்பட வேண்டியவை மட்டுமே.

இதுமட்டுமல்ல, நீதித்துறை சீர்திருத்தம் தொடர்பான குழு அறிக்கைக்கும், நீண்ட நெடிய விவாதங்களுக்கும் நம் நாட்டில் பஞ்சமில்லை. ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு அறிகுறியே தென்படவில்லை!

நீதிமன்ற அவமதிப்பு அனுமதிக்கப்பட முடியாததுதான்; ஆனால், நீதித்துறையின் மதிப்பை உயர்த்துவது எப்படி, எப்போது?

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ)

————————————————————————————————–

நீதிதேவன் மயக்கம்
Dinamani – Op-ed (September 05 2007)

“”மக்களுக்கு நீதித்துறையின் மீது அதிருப்தி அதிகரித்து வருகிறது என்பது மட்டுமல்ல, தீர்வு காணப்படாமல் தேங்கிக் கிடக்கும் வழக்குகளால் நீதித்துறை மீதான நம்பிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மக்களுக்கு நீதிபதிகள் மீதும் நீதித்துறையின் மீதும் மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டுமானால், வழக்குகள் அதிக காலதாமதம் இன்றி விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்”~இப்படி சொல்லியிருப்பது அரசியல்வாதியோ, சமூக ஆர்வலரோ, பத்திரிகையாளரோ அல்ல; நீதிபதிகள்.

வித்தியாசமான, அதேசமயம் மக்களின் மனஓட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு வழங்குவதில் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கு நிகர் அவர்தான். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தீர்ப்பு வழங்குபவர் என்கிற பெயர் அவருக்கு எப்போதுமே உண்டு. 1957ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கு, அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து மேல் முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் மாத்தூரின் முன் விவாதத்துக்கு வந்தபோதுதான் மேற்கண்ட கருத்தை அவர்கள் தெரிவித்தனர்.

அரை நூற்றாண்டு காலம் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் தேங்கிக் கிடப்பது என்பது, நமக்கே எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தும்போது, சம்பந்தப்பட்டவர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

நாட்டிலுள்ள 21 உயர் நீதிமன்றங்களில் சுமார் 30 லட்சம் வழக்குகள் தீர்ப்பளிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இரண்டரைக் கோடிக்கும் அதிகமான வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. மிக அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில்தான் என்கிறது ஒரு புள்ளிவிவரம். உச்ச நீதிமன்றத்திலும் சரி, நிலைமையில் பெரிய அளவில் மாற்றமில்லை. சுமார் 39,780 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக 2006-ம் ஆண்டு புள்ளிவிவரம் கூறுகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 4,06,958. கடந்த ஆண்டு கடைசியில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம் இது. தமிழக விசாரணை நீதிமன்றங்களில் சுமார் மூன்றரை லட்சம் கிரிமினல் வழக்குகள் 31 மார்ச், 2007 நிலவரப்படி விசாரணையில் இருப்பதாகவும், இவற்றில் 26,800 வழக்குகள் சிறு குற்றங்கள் தொடர்பானவை என்றும் தெரிகிறது.

வழக்குகள் தேங்கிக் கிடப்பதால் இரண்டு பாதிப்புகள் ஏற்படுகின்றன. குற்றவாளிகள் பலர் தங்களுக்குப் பாதகமான தீர்ப்பு வராமல் வழக்கைத் தள்ளிப்போட்டுத் தப்பிக்க முயல்வது சகஜமாகிவிட்டது. சில வழக்குகளில் குற்றவாளிகள் மரணம்வரை தீர்ப்பு வழங்கப்படாமல் தப்பித்த சரித்திரங்கள் ஏராளம். இதனால், நீதியின் மீதும் நீதிமன்றங்களின் மீதும் அவநம்பிக்கை ஏற்படுகிறது.

அதேபோல, நிரபராதிகள் விடுவிக்கப்படாமல், அடிக்கடி நீதிமன்றங்களால் அலைக்கழிக்கப்படும்போது அது தர்மத்துக்கும் நியாயத்துக்கும் எதிரான செயல்பாடு என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. செய்யாத தவறுக்குத் தண்டனை பெறும் அவலநிலைக்கு நிகரானதுதான் இதுபோன்ற அலைக்கழிப்பு. நிரபராதி, தீர்ப்பு வழங்கப்படாமல் குற்றவாளி என்கிற களங்கத்துடன் காலவரையறையின்றித் தொடர்வது என்பது நீதிதேவனுக்கே அவமானம்.

உடனடி நீதி கிடைக்குமேயானால், லஞ்சமும் ஊழலும்கூடப் பெரிய அளவில் குறைய வாய்ப்பிருக்கிறது. ஒரு சராசரிக் குடிமகனுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் மறுக்கப்படும்போது, அவன் நீதிமன்றத்தின் மூலம் நியாயம் கேட்க முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டால், காலதாமதமின்றி அதுபோன்ற வழக்குகளை நீதிமன்றங்கள் பரிசீலித்துத் தீர்ப்பளிக்குமேயானால், அதிகாரத்தில் இருப்பவர்களிடம் பயமும் பொறுப்புணர்வும் ஏற்படும்.

தாமதமாகக் கிடைக்கும் நீதி என்பது கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம் செய்கிற கதையைப் போன்றதுதான். பொதுமக்களை மட்டும் வருத்திக் கொண்டிருந்த இந்தப் பிரச்னை இப்போது நீதிபதிகளையும் சிந்திக்கவும் செயல்படவும் வைத்திருக்கிறது என்பது ஆறுதலைத் தருகிறது. நீதிதேவன், மயக்கத்திலிருந்து விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது!

——————————————————————————————————————–
நாட்டின் தேவை 5 ஆயிரம் புதிய கோர்ட் : தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தகவல்

சென்னை : “நாடு முழுவதும் ஐந்தாயிரம் புதிய கோர்ட்டுகளை துவக்கினால் தான் வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும்’ என்று இந்திய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை ஜுடிசியல் அகடமி நடத்திய, “உரிய நேரத்தில் நீதி வழங்குவதற்கான தொழில்நுட்பம் மற்றும் கருவிகள்’ குறித்த மூன்று நாள் கருத்தரங்கின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.

தலைமை நீதிபதிபேசியதாவது :

நீதிபதிகள் தங்களுக்கு முன்பாக எந்த மாதிரியான வழக்குகள் வந்துள்ளன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நடக்காமல், அது போன்றவற்றில் நீதிபதிகளே ஆர்வம் எடுத்து விரைவாக தீர்வு காண வேண்டும். மிகச் சாதாரணமான வழக்குகளை விரைவாக தீர்த்து விட வேண்டும்.

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாநில நீதிபதிகள் மிகவும் மதிக்கப்படுவதோடு, தனித்தன்மையுடன் செயல்படுகின்றனர். சமுதாயத்துடன் நாம் செல்ல வேண்டும். வழக்கு தொடருபவர் நேரடியாக நம்மிடம் வருகிறார். அவர்களது பிரச்னையை நாம் அணுக வேண்டும். எவ்வளவு விரைவாக பிரச்னையை தீர்த்து வைக்கிறோமோ, அதற்கேற்ப அவர்கள் மகிழ்ச்சியடைவர். வழக்கு

மூலம் தங்களுக்கு ஏதாவது நிவாரணம் கிடைத்தால் அவர்கள் மகிழ்வர். எனவே, பிரச்னைகளை அறியும் கலையை நாம் தெரிந்திருக்க வேண்டும். இது போன்ற கருத்தரங்குகளால் நீதிபதிகள் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறவும், அனுபவங்களை பற்றி பேசிக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைக்கிறது. நமக்கு தெரியாமலேயே இதனால் நாம் பயனடைகிறோம்.

தமிழக அரசு 72 புதிய கோர்ட்டுகளை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. பல மாநில அரசுகளிடம் கோர்ட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சில முதல்வர்கள் உறுதியளிப்பர், ஆனால், விரைவில் நடைமுறைக்கு வராது.

புதிய கோர்ட்கள் :

வழக்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பிரச்னையை தீர்க்க வேண்டுமானால் புதிய கோர்ட்டுகளை ஆரம்பிக்க வேண்டும். வேறு எந்த வழியிலும் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. இந்தியாவில் 14 ஆயிரத்து 600 கோர்ட்டுகள் உள்ளன. மேலும் ஐந்தாயிரம் புதிய கோர்ட்டுகளை நாடு முழுவதும் அமைத்தால் தான், வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். இல்லாவிட்டால் வழக்குகள் குவிந்து கொண்டு தான் இருக்கும். மக்கள், நீதிபதிகள் மீது தான் குற்றம் சாட்டுவர். இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.
மாதத்துக்கு நுõறு வழக்குகள் நீதிபதிகள் உத்தரவாதம் : சென்னை:

“மாதத்துக்கு நுõறு வழக்குகளை முடிப்பதாக நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்’ என்று, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா கூறினார்.

நீதிபதிகளுக்கான பயிற்சி கருத்தரங்கில் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பேசியதாவது: நீதிபதிகளுக்கான கற்பித்தல் பணிமனைகளை மாவட்ட வாரியாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். சிறு விவகாரங்களுக்கான நீதிபதிகள் மற்றும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சென்னையில் உள்ள விரைவு நீதிமன்ற நீதிபதிகளிடம், வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் சராசரியாக எடுக்கப்படும் கால அளவு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. எவ்வாறு இவற்றை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீதிபதிகளிடம் எந்தளவு தங்களது செயல்பாட்டை மேம்படுத்த முடியும் என்று கேட்ட போது, மாதத்துக்கு தற்போது 50 வழக்குகளை முடித்து வருவதற்கு பதிலாக நுõறு வழக்குகளை முடிப்பதாக உறுதியளித்துள்ளனர். ஐகோர்ட்டில் இரண்டு நிரந்தர, “லோக் அதாலத்’கள் அமைக்கப்படும். இதுதவிர, மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்க மாதத்துக்கு இரண்டு, “லோக் அதாலத்’கள் தனியாக நடத்தப்படுகின்றன.

கோவை மற்றும் திருப்பூரில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட குறை தீர்ப்பு கூட்டத்தில், 143 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.1.54 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது; இது ஒரு சாதனை. கடந்த ஜூலை 5ம் தேதியில் இருந்து மாலைநேர கோர்ட்டுகள் செயல்படத் துவங்கிய பின், ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஒன்பதாயிரத்து 245 வழக்குகள் முடிக்கப்பட்டன.

ஐகோர்ட்டின் மத்தியஸ்தம் மற்றும் நிவாரண மையம் கடந்த ஜூன் முதல் மிக தீவிரமாக செயல்படுகிறது. இந்த மையத்தில் சென்னையில் 140 மத்தியஸ்தர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. “ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ்’ வழக்கை வெற்றிகரமாக மத்தியஸ்தம் செய்து முடித்ததற்காக கடந்த ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இரண்டாயிரத்து 196 தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட ரூ.70 கோடி மதிப்பிலான இந்த வழக்கு தான் இந்தியாவிலேயே மத்தியஸ்தம் மூலம் தீர்க்கப்பட்ட மிகப் பெரிய வழக்கு. இவ்வாறு ஏ.பி.ஷா பேசினார்.

Posted in 5000, AA, abuse, Accident, Alcoholism, Arms, Attorney, Balakrishnan, Blood, BMW, Bribery, Bribes, Capital, case, Congress, Corruption, Courts, dead, Delhi, Driver, Driving, Drunk, DUI, escape, Expose, Free, Guilty, HC, Hit, I U Khan, industrialist, Jail, Jethmalani, Judges, Justice, Launch, Law, Lawyer, legal, MP, Nanda, Nandha, NDTV, New, Order, Party, Police, Politics, Poor, Power, Prison, Prosecution, Punishment, R K Anand, Rich, Sanjeev, Sanjeev Nanda, Sanjiv, SC, Sentence, Sunil Kulkarni, Suspension, testimony, Wealthy, Witness | 1 Comment »

Funding change hurts Sarva Shiksha Abhiyan – Secondary education for all

Posted by Snapjudge மேல் ஜூன் 27, 2007

அனைவருக்கும் கல்வி

பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொடங்கப்பட்ட மிக நல்ல திட்டங்களில் “அனைவருக்கும் கல்வி’ முதன்மையானது. “சர்வ சிக்ஷா அபியான்’ என்கிற பெயரில் அறிவிக்கப்பட்ட இந்த “அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் மூலம், பள்ளிக்கூடம் இல்லாத கிராமமே இல்லை என்கிற நிலைமையும், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளே இல்லை என்கிற லட்சியமும் நிறைவேற வேண்டும் என்பதுதான் திட்ட கமிஷனின் நோக்கம்.

மத்திய அரசு 75 விழுக்காடும், மாநில அரசு 25 விழுக்காடும் இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் அவரவர் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்வது என்பதுதான் “அனைவருக்கும் கல்வி’ திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் தொடர்ந்த நடைமுறை. ஆனால் இப்போதைய 11-வது திட்டத்தில் இந்தப் பங்கீட்டில் திட்டக் கமிஷன் மாற்றம் செய்திருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் சம பங்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது திட்டக் கமிஷனின் புதிய தீர்மானம்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த “அனைவருக்கும் கல்வி’ என்கிற திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் பள்ளிக்கூட வசதிகள் பெருகி வருகின்றன. அதுமட்டுமல்ல, பல புதிய பள்ளிக்கூடங்கள் ஊராட்சி அமைப்புகளால் நிறுவப்பட்டு அந்தந்த பஞ்சாயத்துகள் மேற்பார்வையில் செயல்படத் தொடங்கியுள்ளன. 11-வது திட்டத்தில், நமது திட்டக் கமிஷன் செய்திருக்கும் மாற்றம் பல மாநிலங்களைத் திகைப்பில் ஆழ்த்தி இருப்பது மட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

குஜராத், உத்தரகண்ட், ஹரியாணா மற்றும் கேரளம் ஆகிய நான்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்கள் இந்த “அனைவருக்கும் கல்வி’ திட்டத்துக்கான நிதி ஆதாரங்களை ஒதுக்கவில்லை. அந்தந்த மாநிலங்கள் செயல்படுத்தும் இலவசத் திட்டங்களுக்கும், அவர்கள் மக்களுக்கு அறிவித்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குமே போதிய நிதியாதாரம் இல்லாமல் மாநில அரசுகள் தடுமாறும் நிலைமை. நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் திட்டத்துக்கு அதிக நிதியை ஒதுக்க மாநிலங்கள் தயங்குவது புரிகிறது.

கல்வி அறிவு இல்லாமை என்பதுதான் இந்தியாவின் மிகப் பெரிய பலவீனமாக இருந்து வருகிறது. எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் இன்னமும் கணிசமாக இருந்து வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களில் பலர் அவரவர் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமலும் இருக்கிறார்கள். பொருளாதார நிலைமை மட்டுமன்றி அருகில் பள்ளிக்கூடங்கள் இல்லாமையும் அதற்குக் காரணம்.

அப்படியே பள்ளிக்கூடங்கள் இருந்தாலும், முறையான கட்டடங்கள் இல்லாமல் இன்னும் மரத்தடியில் பாடம் நடத்தும் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் நாடு முழுவதும் இருக்கின்றன. கரும்பலகை இல்லாத பள்ளிகள் கூட இருப்பதாக மற்ற மாநிலங்களில் இருந்து செய்திகள் வருகின்றன. “அனைவருக்கும் கல்வி’ திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, கரும்பலகை போன்ற அடிப்படைத் தேவைகள் அநேகமாக எல்லாப் பள்ளிகளுக்கும் கிடைக்க வழிகோலப்பட்டது. இந்தத் திட்டத்தைத் தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்கள் முறையாகப் பயன்படுத்தி கிராமப்புற கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் செய்தன.

இந்த நிதியாண்டில் மத்திய அரசு “அனைவருக்கும் கல்வி’ திட்டத்துக்காக 21 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது. இரண்டரை மாதங்கள் கடந்தும் இன்னும் பல மாநிலங்கள் அவர்களது பங்காக 50 விழுக்காடு அளிக்காமல் இருக்கின்றன. அதற்கான ஒதுக்கீடு அவரவர் நிதிநிலை அறிக்கையில் இல்லவே இல்லை.

மத்திய அரசு இந்த விஷயத்தில் மாநில அரசுகளின் பிரச்னையைப் புரிந்துகொண்டு பழைய முறைப்படி தனது பங்குக்கு 75 விழுக்காடு நிதியை ஒதுக்க முன்வரவேண்டும். மாநில அரசுகள் அதிக நிதி தரவில்லை என்பதற்காக இதுபோன்ற நல்லதொரு திட்டம் தொய்வடைவதோ, நடைபெறாமல் இருப்பதோ சரியல்ல. “அனைவருக்கும் கல்வி’ என்பது இந்தியாவின் லட்சியமாக இருக்கும்போது, இந்த விஷயத்தை மத்திய அரசு அலட்சியமாக எதிர்கொள்வது முறையல்ல!

——————————————————————————————————————
ஆட்டம் காணும் ஆரம்பக் கல்வி

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நிச்சயமாகத் தமிழகம் கல்வியின் தரத்திலும் சரி, கல்விக்கூடங்களின் எண்ணிக்கையிலும் சரி முன்னணியில்தான் இருக்கிறது. இப்படி ஆறுதல்பட்டுக் கொள்வதால், நாம் கல்வித்துறையில் உலகத்தரத்தை எட்டிவிட்டோம் என்பது அர்த்தமல்ல.

இன்னும் அத்தனை கிராமங்களிலும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் அமைந்தபாடில்லை. முழுமையாக அத்தனை குழந்தைகளையும் பள்ளிக்குக் கொண்டுவந்து எழுத்தறிவிக்க முடிந்துவிட்டதா என்றால் அதுவும் இல்லை. நமது பள்ளிக்கூடங்களாவது அடிப்படை வசதிகளுடன் அமைந்தவையா என்றால், இன்னும் பெரும்பாலான பள்ளிகளுக்கு முறையான கட்டடங்கள்கூட இல்லை.

“சர்வ சிக்ஷா அபியான்’ எனப்படும் “அனைவருக்கும் கல்வி’ என்கிற மத்திய அரசின் திட்டப்படி கடந்த ஆண்டு மட்டும் ரூ. 15,000 கோடி ரூபாய் நமது நிதியறிக்கையில் ஒதுக்கப்பட்டிருந்தும், முப்பது சதவிகிதம் பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகளுக்குத் தனியான கழிப்பறைகள் இல்லாத அவல நிலை. இது அகில இந்திய நிலைமை. தமிழகத்தின் நிலைமை இந்த விஷயத்தில் கொஞ்சம் பரவாயில்லை, அவ்வளவுதான்.

தமிழகத்தில் மட்டும் ஐந்து முதல் பதினெட்டு வயதான குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் ஒன்றரைக் கோடி என்று சொல்லப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் முறையான கல்வி அளிக்கப்பட வேண்டுமானால், குறைந்தது 14,300 பள்ளிக்கூடங்கள் தேவை. அந்தப் பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகளை முழுமையாகச் செய்துதர வேண்டுமானால் அதற்கான நிதியாதாரம் மாநில அரசிடம் இல்லை.

அரசின் நேரடிப் பார்வையில் இயங்கும் பள்ளிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்து பள்ளிகள் என்று ஏற்பட்டிருப்பவை போதிய இடவசதியும் அடிப்படை சுகாதார வசதியும் பெற்றிருக்கின்றனவா என்றால் இந்த விஷயத்திலும் நிலைமை திருப்திகரமாக இல்லை. தனியார் பள்ளிகள் நன்கொடை வசூலிப்பதில் காட்டும் அக்கறையைப் பள்ளிகளைப் பராமரிப்பதில் காட்டுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் உண்டு.

நாளைய சமுதாயம் என்று உலகெங்கிலும் தனி கவனத்துடன் செயல்படும் கல்வித்துறை, இந்தியாவில் மட்டும் போதிய கௌரவத்துடனும் மரியாதையுடனும் தகுந்த முக்கியத்துவத்துடனும் செயல்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆசிரியர்கள் தரம் தாழ்ந்து விட்டனர் என்று குறை கூறும்போது நாம் மறந்துவிடும் உண்மை, அந்த ஆசிரியர்களின் சமூக அந்தஸ்தை அங்கீகரிக்காமல்விட்டதும், மாணவர்கள் அவர்களுக்குத் தரவேண்டிய மரியாதையைக் குறைத்ததும் நாம்தான் என்பதை. அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் ஆசிரியர்களுக்குத் தரப்பட்ட மரியாதை என்ன என்பதை நினைத்துப் பார்த்தால், கல்வி ஏன் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதற்குக் காரணம் புரியும்.

காமராஜர் முதலமைச்சராக இருந்த காலம் முதல், குக்கிராமம் வரை அடிப்படைக் கல்வி சென்றடைய வேண்டும் என்றும், எந்தவொரு குழந்தையும் கல்வி அறிவு பெறாமல் இருந்துவிடலாகாது என்றும் எல்லா முதலமைச்சர்களும் அவரவர் பங்கிற்குக் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தனர் என்பது உண்மை. ஆனால், கல்வித்துறையில் அரசியல் தலையீடுகளை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாமல் போனதால்தான் கல்வியின் தரமும், ஆசிரியர்களின் தரமும் குறைந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

அதேபோல, முந்தைய தலைமுறையில், கல்விக்கூடங்களுக்கு நன்கொடை அளிப்பது, கல்விச்சாலைகள் ஏற்படுத்துவது என்பதெல்லாம் தர்மமாகக் கருதி செய்யப்பட்டது. இப்போது, கல்வி என்பதே வியாபாரம் என்று கருதப்படுகிறது. இந்தப் போக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பது மட்டுமல்லாமல், கல்வியின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.

நாளைய இந்தியா, இன்றைய கல்வித்துறையின் கையில்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆரம்பப் பள்ளிக்கூடங்கள்தான் நாளைய இந்தியாவின் அடித்தளங்கள். அந்த அடித்தளம் ஆட்டம் காண்பதுபோலத் தெரிகிறது. ஆட்சியாளர்கள் உடனடியாக விழித்துக் கொள்ளாவிட்டால், நாளைய தலைமுறையின் சாபத்தை நாம் சுமக்க நேரிடும்!

Posted in Abhiyan, Allocations, Bihar, Budget, Center, Centre, Constitutional, Education, elementary, Females, Finance, Funds, Government, Govt, Gujarat, Haryana, HSC, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, Kerala, legal, Madhya Pradesh, MadhyaPradesh, MP, Op-Ed, Orissa, Quality, Rajasthan, Sarva Shiksha Abhiyan, Schools, She, SSA, State, Students, Study, Teacher, Utharakand, Utharakhand, Utharkhand, Uttarakand, Uttarakhand, Uttaranchal, Uttarkand, Uttarkhand, Uttrakand, WB, Welfare, West Bengal, WestBengal | Leave a Comment »

Pakistan ‘same-sex’ couple jailed

Posted by Snapjudge மேல் மே 22, 2007

பாகிஸ்தான் திருமணம் ஒன்றில் சர்ச்சை

பிரச்சினையை எதிர்நோக்கும் தம்பதிகள்
பிரச்சினையை எதிர்நோக்கும் தம்பதிகள்

பாகிஸ்தானில் திருமணம் செய்து கொண்ட இருவரில், கணவனாகக் கருதப்பட்டவர் உண்மையில் ஒரு பெண் என்று தீர்ப்பளித்த லாகூர் நீதிமன்றம் ஒன்று, அந்த இருவரையும் நீதிமன்றக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.

கணவர் என்று சொல்லிக் கொள்பவரது பாலின மாற்று அறுவை சிகிச்சை சரியாக, முறையாக நடக்காத நிலையில், இந்த இருவரும், அவரது பாலினத்தைப் பற்றி பொய் சொல்லிவிட்டார்கள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மணப்பெண்ணின் தந்தை, இரண்டு பெண்கள் திருமணம் செய்துகொள்வது என்பது இஸ்லாத்துக்கு விரோதமானது என்ற காரணத்தால், தனது மகளின் திருமணம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று கோருகிறார்.

Posted in couple, Female, Gender, GLBT, Husband, Identity, Islam, Law, legal, Lesbian, male, Marriage, Muslim, Nikkah, Operation, Order, Pakistan, Relation, Relationship, same-sex, Sex, sex-change, Spouse, surgery, Transgender, Wedding, Wife | 1 Comment »

Arcot Veerasamy criticises Madras HC judges – ‘Judges want to rule Tamil Nadu’

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 5, 2007

முதல்வரை விமர்சிக்க நீதிபதிகளுக்கு அதிகாரம் இல்லை: ஆர்க்காடு வீராசாமி கடும் தாக்கு

சென்னை, பிப். 5: தமிழ்நாட்டையே ஆள வேண்டும் என்று நீதிபதிகள் நினைப்பது சரியல்ல. முதல்வரை விமர்சிக்க நீதிபதிகளுக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை என்று மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி கடுமையாக விமர்சித்தார்.

முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் தபேதார் ஏழுமலை இல்ல திருமண விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது:

நீதிபதிகள் எல்லாம் ஏதோ ஆகாயத்திலிருந்து குதித்தவர்களைப் போல் சில பேர் நடந்து கொள்கிறார்கள். நான் எந்த நீதிபதியையும் பற்றி குறிப்பிட்டு குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை இருக்கின்றது. அந்த எல்லையோடு அவர்கள் நிற்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை விமர்சிப்பதற்கு, அரசாங்கத்தைப் பற்றி தேவையில்லாமல் விமர்சித்து யோசனை கேட்பதற்கு சட்டப்படி அதிகாரம் கிடையாது.

ஜனநாயகத்தில் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை விட உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிக அதிகாரம் பெற்றவர்கள் என்று நான் எண்ணவில்லை.

ஓமலூர் பள்ளி விவகாரம் தொடர்பாக மக்கள் முறையிட்டதன் காரணமாக ஒரு விசாரணை கமிஷன் அமைக்க முதல்வர் உத்தரவிடுகிறார். அதற்கு அந்த நீதிபதி என்ன சொல்கிறார், எப்படி நீதிபதிகளைக் கேட்காமல் ஒரு கமிஷனை அமைக்கலாம் என்று கேட்கிறார். முதலமைச்சரின் அதிகாரத்தை எல்லாம் நீதிபதிகள் எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றத்துக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? முதலமைச்சருக்கு இல்லாத பொறுப்பு உயர் நீதிமன்றத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளதா? முதல்வர் அவருடைய அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். உயர் நீதிமன்றமோ சட்டப்படி உள்ள விதிமுறைகளின்படி தீர்ப்புகள் வழங்க வேண்டும். அதைவிடுத்து தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று நினைப்பார்களேயானால் அது சரியல்ல என்றார் ஆர்க்காடு வீராசாமி.
நீதிமன்றம் கட்டைபஞ்சாயத்தாக ஆகிவிடக் கூடாது: அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி

சென்னை, பிப். 5: நீதிமன்றங்கள் கட்டைப் பஞ்சாயத்துக்களாக ஆகிவிடக் கூடாது என்று மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி கடுமையாக விமர்சித்தார்.

முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் தபேதார் ஏழுமலையின் இல்ல திருமண விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது:

நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சிக்கக் கூடிய உரிமை நமக்கு இருக்கிறது. அவர்களைத் தனிப்பட்ட முறையில் குறை கூறக் கூடாதே தவிர, தீர்ப்புகளைப் பற்றி விமர்சிக்கலாம்.

சென்னை மாநகராட்சித் தேர்தலை எதிர்த்து அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வழக்கு தொடுத்தார்கள். அந்தத் தீர்ப்பில் ஒரு நீதிபதி, இந்த வழக்கை நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது. தேர்தல் நடந்து முடிந்துவிட்ட காரணத்தால் மொத்தத்தில் தேர்தலை விசாரிப்பது என்பது தவறு என்று சொன்னார். மற்றொரு நீதிபதியான இப்ராஹிம் கலிபுல்லா, 99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று சொன்னார். 99 வார்டுகளில் என்னென்ன தவறுகள் நடைபெற்றன என்று ஒவ்வொரு வார்டுக்கும் அவர் காரணம் எழுத வேண்டும். ஆனால் அவர் அப்படி காரணங்களை எழுதினாரா என்றால் இல்லை. அவர் மொத்தத்தில் என்ன சொல்கிறார் என்றால் பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் பார்த்து இந்த 99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிடுவதாகக் கூறினார்.

பத்திரிகைளில் வருகின்ற செய்திகளின் அடிப்படையில் நீதிபதிகள் தீர்ப்பு கொடுக்கக் கூடாது என்று 21 தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் அளித்திருக்கிறது. ஆனால் பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் 99 வார்டுகளில் மறு தேர்தல் என்று சொல்லியிருக்கிறார். அது முடிவான தீர்ப்பா என்றால்- இல்லை. இரண்டு நீதிபதிகள் இரண்டு விதமான தீர்ப்பு அளித்தனர். இருப்பினும் முதல்வர் கருணாநிதி ஜனநாயகத்தைப் பெரிதும் மதித்து, 99 கவுன்சிலர்களையும் ராஜிநாமா செய்ய சொல்லிவிட்டு நாங்கள் தேர்தலைச் சந்திக்கிறோம் என்று சொன்னார்.

இந்த நிலையில், இந்த தேர்தல் ஆணையர் தேர்தலை நடத்தக் கூடாது. அவரை மாற்ற வேண்டும் என்று அதிமுக வழக்கு போட்டது. அதை விசாரித்த தலைமை நீதிபதி, இந்தத் தேர்தலை நடத்தக் கூடாது என்று தடை விதிக்க எனக்கு அதிகாரம் இல்லை. தேர்தல் ஆணையரை மாற்றுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை என்றெல்லாம் சொல்லிவிட்டு, அரசாங்க வழக்கறிஞர் கலிபுல்லாவை பார்த்து, தேர்தல் பார்வையாளர்களை நியமிப்பதற்கு அரசு ஒத்துக்கொள்கிறதா என்று கேட்டுச் சொல்லுங்கள் என்று கூறுகிறார்.

சட்டம் என்ன சொல்கிறதோ, அந்த சட்டத்தின்படி நீதிபதி நடக்க வேண்டுமே தவிர நீதிபதியே, இந்தத் தேர்தலுக்கு தடை விதிக்க எனக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லிவிட்ட பிறகு, தமிழக அரசிடம் என்ன யோசனை கேட்பது? சமரச உடன்பாடு என்ன காண்பது எனக்குள்ள கவலையெல்லாம் நீதிமன்றங்கள் கட்டைப் பஞ்சாயத்துக்களாக ஆகிவிடக் கூடாது என்பதுதான்.

இப்படி நீதி மன்றங்கள் தமிழகத்திலே தொடர்ந்து செயல்படுமேயானால் மக்களுக்கு நீதிமன்றங்களின் மீதுள்ள நம்பிக்கை போய்விடும் என்ற நிலை தான் ஏற்படும். அந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்றார் ஆர்க்காடு வீராசாமி.


ீதித்துறையை ‘அவமதிக்கும்’ வகையிலான அமைச்சரின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை உயர்நீதிமன்ற வளாகம்
நீதித்துறை அவமதிப்பு?

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சமீபத்தில் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய விமர்சன கருத்துக்கள், நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாட்டில் அரசியல்வாதிகள் தலையிடுவதை காட்டுவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று புதன்கிழமை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஒரு பிரிவினர் நீதிமன்றத்தைப் புறக்கணித்தனர்.

பெரும்பாலான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்தனர். அதேசமயம் அரசு வழக்கறிஞர்கள் வழக்கம்போல் நீதிமன்றத்தில் வாதாட வந்தனர். ஆனால், வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் ஊர்வலமும் கண்டன கோஷங்களும் நீதிமன்றங் களின் செயல்படுகளை பெருமளவு ஸ்தம்பிக்கச்செய்தது. இதையும் மீறி சில நீதிமன்றங்களில் இன்று காலை வழக்கு விசாரணைகள் நடைபெற்றன. ஆனால் அங்கும் கூட மதியத்திற்குள் வழக்கறிஞர்களின் புறக்கணிப்பு காரணமாக விசாரணைகள் நடக்கவில்லை.

அதிமுக வழக்கறிஞர் அணியைச்சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றபோது அவர்களுக்கும் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும் இடையில் மோதல்
சூழல் ஏற்பட்டு பின்னர் நிலைமை தணிந்ததாக
காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயர்நீதிமன்றத்தை போலவே, சென்னையின் சைதாப்பேட்டை,
எழும்பூர்,ஜார்ஜ்டவுன் நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள்
நீதிமன்றங்களை புறக்கணித்தனர். தமிழகத்தின் மாவட்ட அளவிலான நீதிமன்றங்களிள் நீதிமன்ற புறக்கணிப்பு விடயத்தில் தி.மு.க. அ.தி.மு.க. வழக்கறிஞர்களுக்கிடையே வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை மாநராட்சிக்கான உள்ளாட்சித்தேர்தலில் நடந்ததாகக்
கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான இருவேறு வழக்குகளில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசு குறித்து தெரிவித்திருந்த கருத்துக்களை எதிர்த்தும், கடுமையாக விமர்சித்தும் ஆற்காடு வீராசாமி சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதே மேடையில் பேசிய முதல்வர் மு கருணாநிதியும் இதை மறைமுகமாக ஆமோதிக்கும் விதத்தில் பேசியிருந்தார்.
இது நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் அவமதிப்பதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.


Posted in Arcot Veerasamy, Chennai, Courts, Crow, electricity minister, Government, HC, High Court, Judge, Judges, Judiciary, Jury, Justice, Law, legal, M Karunanidhi, Madras, Manipulation, Minister, N Veerasamy, Omalur, Order, outburst, Power, Quote, Tamil Nadu, TN, treasurer, Veerachami, Veerasami, Veerasamy | 1 Comment »