Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Labour’ Category

Staff strength in government hospitals vs secondary health centres in Tamil Nadu: Healthcare

Posted by Snapjudge மேல் ஜனவரி 6, 2008

இது என்ன விபரீதம்?

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கிராமப்புற சேவையில் ஈடுபடுவது தொடர்பான சர்ச்சை இன்னும் முற்றுப்பெறாத நிலையில், ஒரு புதிய சர்ச்சைக்குப் பிள்ளையார்சுழி போட்டிருக்கிறார் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.

அரசு மருத்துவமனைகளில் தேவைக்குக் குறைவான செவிலியர்கள் இருக்கும்நிலையில், அதற்குப் பரிகாரம் தேடுவதை விட்டுவிட்டு துணை சுகாதார நிலையங்களில் எட்டாயிரம் செவிலியர்களை நியமிக்கப் போவதாக அறிவித்திருப்பது ஏன் என்பது புதிராக இருக்கிறது.

தமிழகத்தில் 1,417 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 8,683 துணை சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்தத் துணை சுகாதார நிலையங்களில், கிராமப்புற மக்களுக்குச் சேவையாற்றுவதற்குத் தனிப்பயிற்சி பெற்ற கிராம சுகாதார செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

சுமார் 5,000 பேருக்கு ஒருவர் என்கிற விகிதத்தில் நியமிக்கப்படும் இந்தக் கிராம சுகாதார செவிலியர்கள்தான், கிராமப்புறங்களில் வீடுவீடாகச் சென்று அரசின் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துபவர்கள். கிராம மக்கள் மத்தியில், குறிப்பாக, அதிகம் படிப்பறிவோ வசதியோ இல்லாத அடித்தட்டு மக்கள் மத்தியில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் தடுப்பூசி போடுதல், பிரசவம் பார்த்தல் போன்ற பணிகளில் ஈடுபடுபவர்கள் இவர்கள்தான். இவர்கள் செயல்படும் விதமும் செயல்படும் சூழலும் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களின் செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலைமை பாராட்டும்படியாக இருக்கிறதா என்றால் இல்லை. துப்புரவுப் பணியாளர்களில் தொடங்கி மருத்துவமனைப் பணியாளர்கள், ஆய்வகப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் என்று இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் பணியிடங்கள் நிறையவே இருக்கின்றன. ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டு அதை ஓட்டுவதற்கு ஓட்டுநர் இல்லாத நிலைமைகூட சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ளது.

இது ஒருபுறமிருக்க, அரசு மருத்துவமனைகளில் கடுமையான செவிலியர் பற்றாக்குறை நிலவுகிறது. பல இடங்களில் மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாமல் நோயாளிகள் வேதனைப்படுவது அரசு மருத்துவமனைக்குப் போய் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். பயிற்சி மருத்துவர்களைப் போன்று செவிலியர் படிப்பு முடித்தவர்களைத் தாற்காலிக ஊழியர்களாக அரசு மருத்துவமனைகளில் நியமித்து குறைந்தது இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிப்பது என்று அரசு முடிவெடுத்தால் அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

அதையெல்லாம் செய்யாத மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8,000 செவிலியர்களை ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப் போவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தச் செவிலியர்கள் கிராம சுகாதார நிலைய செவிலியர்களைப்போல வீடுவீடாக, தெருத்தெருவாக, கிராமம் கிராமமாகச் சென்று பணியாற்றுவார்களா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அனுபவம் இல்லாத ஒப்பந்தப் பணியாளர்களாக செவிலியர்களை நியமிப்பதன் மூலம் கிராமப்புற அடித்தட்டு மக்களுக்குத் தரமற்ற மருத்துவ சேவையை வழங்குவதுதான் அரசின் நோக்கமா என்கிற கேள்வி எழுகிறது.

தாற்காலிகமாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு அந்தச் செவிலியர்கள் மீண்டும் மருத்துவத் துறைக்கே சென்று விடுவார்கள் என்கிறார் அமைச்சர். அப்படியானால் அனுபவம் இல்லாத இந்த செவிலியர்களைக் கொண்டு கிராமப்புறங்களில் பிரசவம் பார்க்க அனுமதிப்பது என்பது ஏழை மக்களுக்கு அரசு தெரிந்தே செய்யும் துரோகம் என்று ஏன் கருதக்கூடாது?

இதுபோன்ற முன்யோசனையே இல்லாத, எடுத்தோம் கவிழ்த்தோம் முடிவுகள் மிகப்பெரிய விபரீதங்களுக்கு வழிகோலுமே தவிர, மக்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்காது. சேவையைப் பற்றிக் கவலைப்படாமல் செய்யப்படும் தேவையற்ற நியமனங்கள், அரசின் செயல்பாடு பற்றி தேவையில்லாத உள்நோக்கம் கற்பிக்க வழி வகுக்கும் என்பது அமைச்சருக்கு ஏன் புரியவில்லை?

——————————————————————————————————–

ஆரம்ப சுகாதார நிலையங்களில்
1000 செவிலியர்கள் புதிதாக நியமனம்

ஜன.6-இல் முதல்வர் கலைஞர் ஆணை வழங்குகிறார்

சென்னை. ஜன. 5- தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யங்களில் புதிதாக 1000 செவி லியர்கள் நாளை (6-1-2008) நியமிக்கப்படுகிறார்கள். இதற்கான நியமன ஆணை களை முதல்வர் கலைஞர் அவர் கள் தலைமைச் செயலகத்தில் வழங்குகிறார்.
சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இதனைத் தெரிவித்ததோடு, மேலும் கூறியதாவது:
தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, தமிழ கம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம் படுத்தப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறைக்குக் கூடு தல் நிதி ஒதுக்கி, வருமுன் காப் போம், கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பு ஆகிய திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கப் புதிதாக மருத்துவர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். பேறுகால மரணத்தைத் தடுக்கவும், கிராமப்புறச் சேவை யைச் சுகாதாரத் தறை மேம் படுத்தியுள்ளது.

அதன் அடிப் படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேலும் 1000 செவிலியர்கள் நியமிக்கப் பட உள்ளனர். கிராமப்புற மக்க ளுக்கு அடிப்படை மருத்துவ வசதி கிடைக்கவேண்டும் என் பதில் முதல்வர் தீவிரமாக உள் ளதால், கிராமப்புற மருத்துவ சேவையை விரிவு படுத்தி வருகி றோம்.

6 ஆம் தேதி முதல்வர் 5 மருத் துவத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். 10 லட்சம் குழந்தை களுக்கு போலியோ சொட்டு அளிக்கும் திட்டத்தை அன்று காலை தனது இல்லத்தில் அவர் தொடங்கி வைக்கிறார்

11.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பு ஊசித் திட்டம், கிராமப்புற மருத்துவ சேவைக்கு 100 ஆம் புலன்ஸ், புதிதாக 1000 செவிலி யர்கள் நியமன ஆணைகளை வழங்குதல், 1036 ஆரம்ப சுகா தார நிலையங்களுக்கு ரூ 5 . 2 கோடி செலவில் கணினி மற் றும் இணையதள வசதி போன் றவற்றை தலைமைச் செயல கத்தில் காலை 10 மணிக்கு முதல்வர் வழங்குகிறார்.
ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு 660 பேரும், அரசு மருத்துவமனைகளுக்கு 340 பேரும் 98 மய்யங்களில் அவசர சிகிச்சைகளுக்காகவும் இந்தப் புதிய செவிலியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இது தவிர 66 சுகாதார ஆய்வாளர்களுக்கு நியமன ஆணைகளையும் வழங்குகிறார். 380 வட்டாரங் களுக்கு மொபைல் ஆம்புலன்ஸ் வழங்கப்படுகிறது. ரூ 6 கோடி செலவில் செயல்படுத் தப்படும் இத்திட்டத்தில் ஒவ் வொரு குழுவிலும் ஒரு மருத் துவர், ஒரு செவிலியர், ஓட்டுநர் ஆகியோர் இடம் பெறுகின் றனர்.

பேறு சாரா மற்றும் குழந்தைகள் நலன் காப்பதற் காக இக் குழுவினர் கிராமங்களுக்குச் சென்று சிகிச்சை அளிப்பார்கள். இதன் முதல் கட்டமாக இன்று 100 வட்டா ரங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங் கப்படுகிறது. பின்னர் படிப் படியாக மற்ற வட்டாரங் களுக்கு வழங்கப்படும்.

——————————————————————————————————————
ஆரம்பமே சுகாதாரமாக இல்லை!

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுவதைப் பெரும்பாலான ஏழைகள் கூட தவிர்க்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

அதற்கு முக்கியமாக 4 காரணங்கள் கூறப்படுகின்றன. 1. டாக்டர், நர்ஸ், மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட ஊழியர்கள் கிராமப்புற மையங்களுக்குச் சரியாக வேலைக்கு வருவதில்லை. 2. அப்படியே வந்தாலும் நோயாளிகளைக் கனிவாகக் கவனிப்பதில்லை. 3. அவசரத்துக்கு இங்கே வந்துவிட்டோம், அருகில் உள்ள நகரத்துக்குச் சென்றிருந்தால் இன்னும் நன்றாகக் கவனித்திருப்பார்கள் என்றே பெரும்பாலான நோயாளிகள் நினைக்கின்றனர், 4. சுகாதார நிர்வாகத்தில் நிலவும் ஊழல் மற்றொரு முக்கியமான காரணம்.

ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல், வியாதி வந்துவிட்டால் உடனே நாடுவது தனியார் மருத்துவமனைகளைத்தான். டாக்டர் இல்லை, மருந்து இல்லை, படுக்கை இல்லை என்றெல்லாம் அவர்கள் திருப்பி அனுப்புவதில்லை. “முதலில் நீ, அப்புறம் உன் பணம்’ என்று தனியார் மருத்துவமனைகளில் அக்கறை காட்டி வசூலித்துவிடுகிறார்கள். எனவே நோயாளிகளும் செலவைப்பற்றி கவலைப்படுவதில்லை.

மேலை நாடுகளில் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கு மாத ஊதியம் என்ற முறையைக் கைவிட்டு, அவர்கள் எத்தனை நோயாளிகளைப் பார்க்கின்றனர் என்ற கணக்கை வைத்து ஊதியம் தருகின்றனர். எனவே டாக்டர்களும் அக்கறை காட்டுகின்றனர். அதை இங்கேயும் அமலுக்குக் கொண்டுவரலாம்.

சுகாதாரம் என்பது தடுப்பூசி போடுவது, முகாம்களில் கண், பல், காது-மூக்கு-தொண்டையைச் சோதிப்பது மட்டும் அல்ல. கிராமம் ஆனாலும், நகரம் ஆனாலும் சாக்கடைகள் தேங்காமல் பார்த்துக் கொள்வது, குப்பைகள் சேராமல் அகற்றுவது, கொசுக்கள் பெருகாமல் மருந்து தெளிப்பது, அடிப்படைச் சுகாதாரம் குறித்து மக்களுக்குக் கற்றுத்தருவது போன்றவையுமாகும். டாக்டர்கள், நர்சுகள் மட்டும் அல்ல; ஆசிரியர்கள், பொறியாளர்கள், அரசு ஊழியர்கள் சேர்ந்து இயக்கமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை இது.

நம்முடைய ராணுவத்துக்கும், கல்விக்கும் ஒதுக்கும் தொகையைவிட அதிகத்தொகையை சுகாதாரத்துக்கு ஒதுக்க வேண்டும்.

பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருள்கள், கைனி, ஜர்தா போன்ற போதை பாக்குகள், விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், பீர் போன்ற மதுபானங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அனுமதித்துவிட்டு பிறகு சிகிச்சை அளிப்பதென்பது தும்பைவிட்டு வாலைப்பிடிக்கிற கதை. மக்கள் நலனில் அக்கறை உள்ள, நலவாழ்வை நாடும் முற்போக்கு ஜனநாயக அரசுகள் இவற்றுக்குத் துணிச்சலாக தடை விதித்து மக்களின் சுகாதாரத்துக்கே முன்னுரிமை தர வேண்டும். வருமான இழப்பை ஒரு பொருட்டாகவே கருதக்கூடாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, வயதுவந்த எல்லோரும் மருத்துவ இன்சூரன்ஸ் செய்துகொள்வது கட்டாயம் என்று சட்டம் இயற்றி, மிகக் குறைந்த பிரீமியத்தை வசூலிக்க வேண்டும். இதனால் திரளும் கோடிக்கணக்கான ரூபாயில் ஏழை நோயாளியின் சிகிச்சைக்குக்கூட எத்தனை லட்சம் செலவானாலும் அதை இன்சூரன்ஸ் நிறுவனமே ஏற்கும் நிலை வேண்டும். அப்படிச் செய்தால்தான் அனைவருக்கும் மருத்துவ வசதி என்பது வெறுங்கனவாக நிற்காமல் நனவாக முடியும்.

நகர்ப்புறங்களில் பெரிய மருத்துவமனைகளில் வேலைபார்ப்பது டாக்டர்களுக்கு மன மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது. அத்துடன் தங்களுடைய குழந்தைகளின் எதிர்கால படிப்புக்கும், எப்போதாவது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் குடும்பத்துடன் பொழுது போக்கவும் நகரமே ஏற்றது என்று டாக்டர்கள் கருதுகின்றனர். இதனாலேயே கிராமங்களுக்குச் செல்லத் தயக்கம் காட்டுகின்றனர். இந்தநிலை மாற கிராமப்புற சேவைகளுக்கு பண ஊக்குவிப்பு முதல், பதவி உயர்வு வரை பலவிதமான சலுகைகளை அளிப்பதே விவேகமான வழிமுறையாக இருக்கும்.

வளமான நாட்டின் சொத்து, வலிமையான அதன் மக்கள்தான். இதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் அல்ல நம்முடைய நிதி அமைச்சர் ப. சிதம்பரமும், சுகாதார அமைச்சர் அன்புமணியும். எனவே வரும் பட்ஜெட்டில், ஏழைகளுக்கும் முதியோருக்கும் 100% பலன் கொடுக்கும் எளிமையான மருத்துவ இன்சூரன்ஸ் திட்ட அறிவிப்பை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Posted in Anbumani, Awareness, Birth, Care, Chennai, Child, Childbirth, Children, City, Contract, Contractors, DMK, Doc, Docs, doctors, Employment, Experience, Free, Full-time, GH, Govt, Health, Healthcare, Hospital, Hygiene, Immunization, Jobs, Kids, Labor, Labour, M.R.K.Paneerselvam, Madras, medical, Medicine, Metro, MRK Paneerselvam, newborns, Nurses, Pamphlets, Paneerselvam, Panneerselvam, Pannirselvam, Part-time, PMK, Policy, Polio, Poor, Pregnancy, Prenatal, Ramadoss, Rural, service, Shortage, TN, vaccinations, Vaccines, Villages, Work, workers | 1 Comment »

Fr Jegath Gasper Raj & Tamil Mayyam’s December Music Celebrations: Festival of Love

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

அன்பின் திருவிழா!

கிருஸ்து பிறந்த தினத்தையொட்டி டிச.20 முதல் 28 வரையான எட்டு தினங்களை “அன்பின் காலம்’ என்று கொண்டாடுகிறது தமிழ் மையம் அமைப்பு. இந்தத் திருநாளின் மைய அம்சம் கிருஸ்து பிறந்த நாளாக இருந்தாலும் இதை ஒரு தமிழ்த் திருவிழாவாக- எல்லோருக்குமான விழாவாகக் கொண்டாடுவதுதான் இதில் சிறப்பம்சம்.

அட என்று ஆச்சர்யப்படுகிறவர்களுக்கு இதோ மேலும் ஆச்சர்யங்கள்…

“”சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் பள்ளி மைதானத்தில் நடைபெறும் இந்த அன்பின் திருவிழாவில் முதல் நாள் விழாவில் இறைவாழ்த்தாக அங்கு இசைக்க இருப்பது திருவள்ளுவரின் “அகரமுதல எழுத்தெல்லாம்’.

இரண்டாவது, மண் வாழ்த்து. உலகுக்கே முதலில் ஒற்றுமையை வலியுறுத்திய “யாதும் ஊரே யாவரும் கேளிர்’. அடுத்தது உழைப்பவர் வாழ்த்து… கம்பர் எழுதிய ஏரெழுபது பாடல்.. மார்கழி மாதம் என்பதால் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களும் அரங்கேறுகிறது” என்கிறார் விழா ஒருங்கிணைப்பாளர் ஃபாதர் ஜெகத் காஸ்பர் ராஜ்.

பாம்பே ஜெயஸ்ரீ, கார்த்திக் பாடிய பிரத்யேக ஆடியோ சி.டி. ஒன்றும் வெளியிடப்படுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துப் பாடிய “ப்ரே ஃபார் மீ, பிரதர்’, 100 கிருஸ்துமஸ் தாத்தாக்கள் தமிழகம் முழக்கச் சென்று பரிசுப் பொருட்கள் வழங்குகிறார்கள். பதிலாக நாம் பரிசுப் பொருட்கள் வழங்கினாலும் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள் என்று செய்தி வெளியாகியிருந்தது. அதை என்ன செய்வதாக உத்தேசம் என்று கேட்டோம் காஸ்பர் ராஜிடம்.

“”அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு வழங்குகிறோம். இதைத் தவிர கட்டடத் தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்கான திட்டம் ஒன்றும் இந்த விழாவுடன் சேர்ந்து செயல்பட இருக்கிறது. கட்டடத் தொழிலாளர்கள் எல்லா நேரங்களிலும் ஒரே இடத்தில் வசிப்பதில்லை. இடம் மாறிக் கொண்டே இருப்பதால் அவர்களுக்குக் கல்வி பயில வாய்ப்பு இல்லாமலேயே போய்விடுகிறது. அதனால் அவர்களைப் பள்ளிக்கு அழைப்பதைவிட அவர்கள் இருக்கும் இடத்துக்கு ஆசிரியரை அனுப்பிப் பாடம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இதற்கு அந்தந்த கட்ட உரிமையாளர்கள், பில்டர்களின் தயவு தேவை. அவர்கள் கட்டடம் கட்டும் இடத்திலேயே சற்று இடம் ஒதுக்கித் தந்தால் நாங்களே ஆசிரியர் அனுப்பி பாடம் நடத்தத் தயாராக இருக்கிறோம். இதன் மூலம் ஓரளவுக்குக் கல்வி கிடைக்க வசதி செய்ய முடியும் என்று நம்புகிறோம்.”

“”இது தவிர வேறு திட்டங்கள் உண்டா?” என்றோம்.

“”சென்னை நகரத்தில் வீடடற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிராமப்புரத்தில் இருந்து வாழ்வாதாரம் இழந்து நாள்தோறும் சென்னைக்கு வந்த வண்ணமிருக்கிறார்கள். சாலையோரங்களில், நகரத்துச் சேரிகளில் வாழும் அவர்களைப் பற்றிய கணக்கெடுப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்” என்று கூறும் காஸ்பர், கணக்கெடுப்பு முடிந்த பின்னர் இது சம்பந்தமாக என்ன செய்ய முடியும் என்று அரசாங்க ரீதியாக கோரிக்கை வைப்பது சமூக ரீதியாக ஆதரவு திரட்டுவது என செயல்படுவோம் என்கிறார்.

திருவிழா நடைபெறும் இந்த எட்டு தினங்களும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை நாட்டுப்புற கலைகள் பயிற்சிப் பட்டறை ஒன்றும் நடத்தப்பட இருக்கிறது. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கம்புச் சண்டை, சிலம்பு ஆகியவை அங்கு பயிற்றுவிக்கப்பட இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்களுக்கு இலவசமாகவே பயிற்றுவிக்கப்படும் என்பதுதான் இதன் சுவாரஸ்ய அம்சம்.

இது தவிர 70 அடி உயர கிருஸ்துமஸ் மரம், 100 மீட்டர் நீளமுள்ள கேக், 100 கிருஸ்மஸ் தாத்தாக்கள் என்று விழாவைக் கலகலக்க வைக்கும் அம்சங்கள் ஏராளமிருக்கிறது இந்த நிகழ்ச்சியில்.

தமிழ்மகன்

Posted in Andaal, ARR, Arts, Birthday, Bombay Jayashree, Carnatic, Casper, Casperraj, Celebrations, Christ, Christian, Christianity, Christmas, Classical, Culture, December, Faith, Folk, Fr Jegath Gasper Raj, Gasper, Gasper Raj, Gasperraj, Heritage, Homeless, Jayashree, Jayashri, Jayasri, Jegath, Jegath Gasper Raj, Jesus, Jeyashree, Jeyashri, Kanimoli, Kanimozhi, Kanimozi, Labor, Labour, Labourers, music, Orphans, Performance, Rahman, Rehman, Religion, Sangam, Sangamam, Santa, Shows, Stage, Thiruppaavai, Thiruppavai, Thiruvembavai, Thiruvempavai, Trees, workers, Xmas | Leave a Comment »

Rice prices & food security plan – Veera Jeeva Prabhakaran & KS Radhakrishnan

Posted by Snapjudge மேல் நவம்பர் 30, 2007

நெல்லுக்கு “நோ’?

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

நெல் குவிண்டாலுக்கு ரூ. 1,000 விலை கேட்டு ரயில் மறியல்! தஞ்சை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இதுகுறித்துப் போராடிய விவசாயிகள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

தில்லி நாடாளுமன்றத்தின் முன் நெல்லைக் குவித்துப் போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் ரயிலில் தில்லி பயணம் என்ற போராட்டச் செய்திகள் கடந்த இரண்டு நாள்களாக வந்தவண்ணம் இருக்கின்றன.

விவசாய இடுபொருள்களின் விலை ஏறிவிட்டதால், நெல்லுக்குக் கட்டுப்படியான விலை வேண்டுமென்று விவசாயிகள் போராடுகின்றனர்.

நெல் மற்றும் கோதுமைக்கு இந்த ஆண்டுக்கான கொள்முதல் விலையை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. கோதுமைக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 800 அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஊக்கத்தொகையாகக் குவிண்டாலுக்கு ரூ. 200 அளிக்கப்படும் என்றும் மத்திய வேளாண் அமைச்சகம் அறிவித்தது. இதன் மூலம் கோதுமைக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,000 விலையாகக் கிடைக்கும்.

ஆனால், சாதாரண ரக நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 645-ம் சூர்ப்பர்பைன் எனப்படும் உயர் ரக நெல்லுக்கு ரூ. 675-ம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊக்கத்தொகை 100 ரூபாயையும் சேர்த்து நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 745 முதல் ரூ. 775 மட்டுமே கிடைக்கும்.

இந்த அறிவிப்பு நெல் விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நெல்லுக்குக் குறைந்தபட்சம் குவிண்டாலுக்கு ரூ. 1,000 வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நடப்பு குறுவை சாகுபடி காலத்தில் குவிண்டாலுக்கு 1,000 ரூபாயும், சம்பா சாகுபடி நெல்லுக்கு 1,500 ரூபாயும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

ஆந்திரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இதுகுறித்து கடும் போராட்டங்களை நடத்தி வருகிறார். தென்மாநிலங்கள் முழுவதும் இதுகுறித்தான விவாதங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவாரும், குவிண்டாலுக்கு ரூ. 1,000 கோதுமைக்கு வழங்கியது சரிதான் என்றும், நூறு சதவீதம் கோதுமை பயன்பாட்டில் உள்ளது என்றும், 65 சதவீதம்தான் நெல் பயன்பாட்டில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

1996 – 97-ல் நெல்லுக்கும் கோதுமைக்கும் இணையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 380 நிர்ணயிக்கப்பட்டது. 1997-98-ல் குவிண்டால் ஒன்றுக்கு நெல்லுக்கு ரூ. 415, கோதுமைக்கு ரூ. 475 என்றும் வித்தியாசப்பட்டு பின் ஒவ்வோர் ஆண்டும் நெல்லைவிட, கோதுமைக்கு விலை கூடுதல் தரப்பட்டது.

இந்த விலை நிர்ணயம் செய்யும் அமைப்பு நடந்து கொள்ளும் விதம் நெல் உற்பத்தி விவசாயிகளின் முதுகில் குத்துகின்ற காரியம்தான். பலமுறை இதுகுறித்து எடுத்துச் சொல்லியும் செவிடன் காதில் சங்கு ஊதுகின்ற அவலநிலைதான். தற்போது கோதுமைக்கு ரூ. 750 + 250 (போனஸ்) = 1,000 என்றும் அரிசிக்கு 645 + 50 (போனஸ்) = 695 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த பாரபட்சமான போக்கு தென்மாநிலங்களை பாதிக்கின்றது. மாற்றாந்தாய் போக்கில் மத்திய அரசு நடந்து கொள்வதைக் கண்டித்து தமிழக அரசும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. தமிழக உணவுத்துறை அமைச்சர் ஒரு குவிண்டாலுக்கு சன்ன ரக அரிசி ரூ. 725-ம், சாதா ரக அரிசி ரூ. 695 என்றும் கூறி 75 ரூபாய் அரிசிக்குக் கூட்டிள்ளோம் என்ற அவருடைய அறிவிப்பு வேதனையாக இருக்கிறது.

மத்திய அரசு ஆயிரம் ரூபாய் தரவில்லை என்பதைக் குறித்த எவ்விதக் கருத்துகளும் அவர் அறிவிப்பில் இல்லை. நெல் உற்பத்தி பஞ்சாபில் அதிகமாக இருந்தாலும், பயன்பாடு தென்மாநிலங்களில்தான் அதிகம்.

நெல் சாகுபடி ஏக்கர் ஒன்றுக்குச் செலவு 1997-2007-ல் விதை நெல் ரூ. 267 – ரூ. 400. உரம் ரூ. 1,200 – ரூ. 1,700. பூச்சிக்கொல்லி மருந்து வகைகள் ரூ. 150 – ரூ. 300. பணியாள் கூலி செலவு ரூ. 4,600 – ரூ. 7,000. அறுவடை செலவு ரூ. 230 – ரூ. 950.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயச் சங்க செயலர் வே.துரைமாணிக்கம் கணக்கீட்டின்படியும், வேளாண்மைத் துறையின் பரிந்துரையின்படியும் கீழ்குறிப்பிட்டவாறு ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு ஆகும் செலவு விவரம்.

நெல்விதை கிலோ ரூ. 15 வீதம் 15 கிலோவிற்கு ரூ. 450. 8 சென்ட் நாற்றங்கால் தயார் செய்ய இரண்டு ஆண் கூலி ரூ. 240. ஒரு பெண் கூலி ரூ. 80. தொழுஉரம் ஒரு டன் ரூ. 200. அசோஸ்பைரில்லம் 7 பாக்கெட் பாஸ்யோபாக்டீரியா 7 பாக்கெட் ரூ. 84. ரசாயன உரம் டி.ஏ.பி. 30 கிலோ, யூரியா 20 கிலோ ரூ. 400. நாற்றுப்பறித்து வயலில் எடுத்து வைக்க ஆள் கூலி ரூ. 1,100. நடவு வயல் உழவு டிராக்டர் 2 சால் டிராக்டர் உழவு ரூ. 550. நடவு வயலுக்கான தொழு உரம் 3 டன் ரூ. 600.

வரப்பு மற்றும் வயல் சமன் செய்ய 3 ஆள் கூலி ரூ. 360. நெல் நுண்ணூட்டம் 5 கிலோ ரூ. 93. ரசாயன உரம் டி.ஏ.பி. 50 கி. யூரியா 75 கி. பொட்டாஷ் 50 கி. ரூ. 1,125. நடவுப் பெண்கள் 18 பேருக்கு ரூ. 80 சதவீதம் ரூ. 1,440. 2 தடவை களை எடுக்கச் செலவு ரூ. 980. பூச்சிமருந்துச் செலவு ரூ. 250. காவல் மற்றும் தண்ணீர் பாசனம் செய்ய ஆள் செலவு ரூ. 250. அறுவடை ஆள்கள் கூலி ரூ. 1,750. கதிர் அடிக்கும் இயந்திர வாடகை ரூ. 525. ஓர் ஏக்கருக்கான கடன் பெறும் தொகைக்கான வட்டி கூட்டுறவு என்றால் 7 சதவீதம் (5 மாதம்) ரூ. 245. தனியார் என்றால் ரூ. 500. காப்பீடு பிரிமியம் தொகை 2 சதவீதம் ரூ. 167. விலை மதிப்பீட்டுக்குழு பரிந்துரைப்படி பார்த்தால் நிலமதிப்பிற்கான வட்டி 7 சதவீதம் ரூ. 3,500. மொத்தம் ரூ. 14,689.

இவ்வளவு செலவு கடன் வாங்கிச் செய்தாலும், விலை இல்லை. சிலசமயம் தண்ணீர் இல்லாமல், பூச்சித் தாக்குதலாலும் நெல் பயிர்கள் கருகி விடுகின்றன. பயிர் இன்சூரன்ஸ் என்பது வெறும் வெட்டிப்பேச்சாக உள்ளது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

நாட்டின் முதுகெலும்பு விவசாயம்தான். ஆனால் அதை நம்பியுள்ள 65 சதவீத விவசாயிகளின் நிலைமை மிகவும் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. இதுவரை இந்தியாவில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடந்த 1960 களில் ஒரு மூட்டை நெல் ரூ. 50. அன்றைக்கு இது ஒரு கட்டுபடியான நல்ல விலை. அதைக் கொண்டு சிரமம் இல்லாமல் விவசாயிகள் நிம்மதியாக வாழ்ந்தனர். அன்று உழவு மாடு ஒரு ஜோடி ரூ. 800தான். ஆனால், இன்றைக்கு ஒரு ஜோடி ரூ. 20,000. அன்று டிராக்டர் ரூ. 25,000 இன்றைக்கு அதன் விலை லட்சங்களாகும். ஆலைகளில் உற்பத்தியாகும் நுகர்வோர் பொருள்கள் நாற்பது மடங்கு அதிகரித்துள்ளன. அரசு ஊழியர்களின் ஊதியம் ஆறு மடங்கு வரை கூடுதலாகி உள்ளது. ஆனால், நெல்லின் விலை திருப்தியாக கூடுதலாக்கப்படவில்லை.

நெல் உற்பத்திச் செலவு கோதுமையைவிட அதிகம். உழைப்பும் அதிகம். நெல் நன்செய் பயிர்; கோதுமை புன்செய் பயிர். நெல் உற்பத்திக்கு பஞ்சாபில் ரூ. 816-ம், மகாராஷ்டிரத்தில் ரூ. 937-ம் செலவாகிறது.

ஒரு குவிண்டால் நெல்லை அரைத்தால் 65 கிலோ அரிசி கிடைக்கும். 35 கிலோ தவிடு மாட்டுத் தீவனமாகப் பயன்படும். நான்கு லிட்டர் எண்ணெய் கிடைக்கும். எண்ணெய் கழிவுகளை மீன்களுக்கு உணவாகப் பயன்படுத்தலாம். இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் உற்பத்தி செய்யப்படும் நெல் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் அதற்கான விலையும் அதை ஊக்குவிக்கின்ற அக்கறையும் மத்திய – மாநில அரசுகளுக்கு இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு விவசாயிகளின் வேதனை குறித்த அக்கறை இல்லை. பெரிய தொழிலதிபர்களுக்கு ரூ. 1,400 கோடி வரை சலுகைகள் வழங்கி உள்ளார். கொள்ளை லாபம் ஈட்டும் இந்த முதலாளிகளுக்கு கடன் வட்டியை 45 சதவீதம் குறைத்துள்ளார்.

நாட்டின் விவசாய வளர்ச்சி வெறும் 2.3 சதவீதம். மேற்கொண்டு வளர்ச்சி இல்லை. இன்னும் வேதனை என்னவென்றால், அதிகார வர்க்கத்தில் உள்ள சிலர் விவசாயத்தை விட்டு ஒழியுங்கள் என்ற இலவச ஆலோசனை வழங்குவதுதான் கொடுமையிலும் கொடுமை.

நெல்லைப் போன்றே கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலைமையும் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு விவசாயி தான் வளர்த்த கரும்பை கட்டுபடியான விலை இல்லாததால் யார் வேண்டுமானாலும், வெட்டி எடுத்துச் செல்லலாம் என்று தண்டோரா போட்டு கூவி அழைத்தார். அப்படியாவது அந்தக் கரும்பு நிலத்தை விட்டு அகன்றால்போதும் என்ற அவலநிலை.

நெஞ்சு பொறுக்கவில்லை என்ற நிலையில் நெல் விலை கேட்டு விவசாயிகள் களத்தில் போராடுகின்றனர். நீரிழிவு நோயாளிகள், “நெல் அரிசிக்கு நோ’ என்று சொல்வதைப்போல மத்திய அரசும், “நெல்லுக்கு நோ’ என்று சொல்லிவிட்டதோ என்ற ஏக்கம்தான் நமக்கு ஏற்படுகிறது.

வள்ளுவர் சொன்னதைப்போல, “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்’ – என்ற நிலை மாறி விவசாயிகளுடைய பொருளாதார நிலைமை மட்டுமல்லாமல் அவர்களுடைய சமூக, சுயமரியாதையும் அடிபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. இதற்கு யார் காரணம்? ஆட்சியாளர்கள்தான்.

புதிய பொருளாதாரம் தாராளமயமாக்கல் என்ற நிலையில் விளைநிலங்கள் யாவும் அழிக்கப்பட்டு சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், நிலங்களும் நீர்ப்பாசன ஏரிகளும்கூட வீடுகளாக மாறிவிட்ட நிலை. இந்நிலையில் எப்படி விவசாயம் இந்தியாவில் முதுகெலும்பாக இருக்க முடியும்?

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)
———————————————————————————————————————————————————-

சவாலாகும் உணவுப் பாதுகாப்பு!

வீர. ஜீவா பிரபாகரன்

உலகளவில், மக்கள்தொகை வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் நமது நாட்டில், உணவுப் பாதுகாப்பு என்பது மாபெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் விவசாயத் துறையின் பங்கு பல ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது. இருப்பினும், மொத்த மக்கள்தொகையில் சுமார் 65 சதவீதம் பேர் தங்கள் வாழ்வாதாரமாக விவசாயத்தையே நம்பியுள்ளனர்.

உணவுத் துறையில் பிற நாடுகளைச் சார்ந்திராமல் இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை. 1960-களில் உணவுப் பொருள்களுக்கு வெளிநாடுகளை நாம் எதிர்பார்த்த நிலை இருந்தது. ஆனால், முதலாவது பசுமைப் புரட்சியால் தன்னிறைவு காணப்பட்டது. பின்னர் ஏற்பட்ட சூழல்களால் நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.

குறிப்பாக, விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழில் நிறுவனங்களாகவும், புதிய நகரங்களாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. ஒரு சில இடங்களில் இத்தகைய நடவடிக்கைகளை விவசாயிகள் எதிர்த்தாலும் அரசுகள் அதை கண்டுகொள்வதில்லை. இதனால், விளைநிலப் பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

விவசாயத்துக்கு நீராதாரமாக விளங்கிய கண்மாய்கள் காணாமல் போய்விட்டன. பாசனத்துக்கான நீர்த் தேவையை பூர்த்தி செய்வதில் அரசுகளுக்குப் போதிய ஆர்வம் இல்லை.

நமது நாட்டில் போதிய நீர்வளம், நில வளம் இருந்தும் அதை முறைப்படுத்தி முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டுவருதற்கான முயற்சிகள் ஏட்டளவிலேயே உள்ளன.

வேளாண் இடுபொருள்கள் விலை அதிகரிக்கும் அளவுக்கு விளைபொருள்களுக்கு, போதிய விலை கிடைப்பதில்லை. இதனால், வேளாண் பணிக்கு போதிய கூலி வழங்க இயலுவதில்லை. எனவே, கிராம மக்கள் அதிக வருவாய் கிடைக்கும் நகர்ப்புறப் பணிகளுக்குச் செல்லும் நிலை உருவாகிவிட்டது. கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கிய இடப்பெயர்வு அதிகரித்து வருகிறது.

விவசாயிகள் விளைவித்த பழம், காய்கறி உள்ளிட்ட விளைபொருள்களைச் சேமித்து, பதப்படுத்தி, பொதிவு (பேக்கிங்) செய்து விற்பனை வாய்ப்பைப் பெருக்கும் திட்டங்கள் முழுவீச்சில் நடைபெறவில்லை.

கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆறுதலான விஷயமாக இருந்தபோதிலும், விவசாயத்துக்கான பயிர் காப்பீட்டுத் திட்டங்கள், அதன் விதிமுறைகளால் பயனளிக்காத நிலையிலேயே உள்ளன.

நமது விவசாயப் பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகள், சாதனைகள் கீழ்நிலை விவசாயிகளைச் சென்றடைவதில் மிகுந்த இடைவெளி உள்ளது.

இத்தகைய கடுமையான சோதனைகளையும் தாண்டி நாம் உணவு உற்பத்தியில் போதிய சாதனைகள் நிகழ்த்தி வருகிறோம்.

இருப்பினும், கோதுமை உள்ளிட்ட சில விளைபொருள்கள் கூடுதல் விலை கொடுத்து வெளிநாடுகளிலிருந்து நடப்பாண்டில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

விவசாய நிபுணர்களின் கணக்கெடுப்புப்படி, நமது நாடு வரும் 2010-ம் ஆண்டில் 1.41 கோடி டன் உணவு தானியம் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். அதையடுத்து ஒவ்வோர் ஆண்டும் 2 சதவீதம் இறக்குமதி அளவு உயரும் என மதிப்பிடப்படுகிறது.

மக்கள்தொகை வளர்ச்சியையும் கருத்தில் கொண்டால் 2020-ம் ஆண்டில் நமது நாட்டின் உணவுப்பொருள்கள் தேவை 34 கோடி டன்னாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நமது நாட்டில் உணவுப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது. மனித உரிமைகளில் உணவு உரிமையே தலையாய உரிமை என்பது விவாதத்துக்கு இடமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், நமது நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பலருக்கு ஒரு வேலை உணவு கிடைப்பதே அரிதாக உள்ளது.

இது ஒருபுறம் என்றால், அதிக வருவாய் ஈட்டுவதற்காக உணவுப் பொருள்களை வாங்கி “எத்தனால்’ தயாரிப்பில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இது வறுமை, பட்டினிச்சாவு, கிராமப் பொருளாதாரப் பாதிப்பு உள்ளிட்ட எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என சில அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்நிலையில் நாட்டின் வளம் பெருக்கும் வேளாண்மையில் போதிய கவனம் செலுத்தாவிடில், உணவு மானியச் செலவு அதிகரிக்கும். உணவுப் பாதுகாப்பு என்பது பெரும் சவாலாகிவிடும்.

—————————————————————————————————–

தேவையா மார்க்கெட் கமிட்டி செஸ்?

பி. சுபாஷ் சந்திரபோஸ்


தமிழக வணிக, விவசாயப் பெருங்குடி மக்களின் தலையாய பிரச்னையாக “மார்க்கெட் கமிட்டி செஸ்’ கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது.

முன்யோசனையோ, விவசாயிகள் மீது அக்கறையோ இல்லாத குழப்பான சட்டப்பிரிவுகள், விதிமுறைகள் மூலம் கடுமையான பிரச்னைகளை விவசாயிகளும், வணிகர்களும் தினமும் சந்திக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது இந்த “மார்க்கெட் கமிட்டி செஸ்.’

உணவு உற்பத்திக்காக அல்லும், பகலும் பாடுபட்டு உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கவும், உற்பத்தியான உணவுப்பொருள்களை சேமிக்கவும், உரிய விலை கிடைக்கும்போது விற்று பயன் பெறவும் வேளாண்மை விளைபொருள் விற்பனைச் சட்டம் முதலில் 1933-ல் இயற்றப்பட்டு, 1959, 1987, 1991-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.

இந்தச் சட்டத்தின்படி, அறிவிக்கப்பட்ட விற்பனை பகுதியில், அறிவிக்கப்பட்ட வேளாண் விளைபொருள் எதுவும் வாங்கப்பட்டாலோ அல்லது விற்பனை செய்யப்பட்டாலோ விற்பனைக் குழு (Marketing Committee) ஒரு சதவீத கட்டணம் (Fee/Cess) விதிக்கிறது.

விற்பனைக் கூடங்களை ஏற்படுத்தி அதில் செய்யப்படும் சேவைகளுக்குத்தான் இக்கட்டணம். ஆனால், தமிழகத்தில் மார்க்கெட் கமிட்டி விற்பனைக் கூடங்கள் இல்லாமல், வெளியே கடைகளில் நடக்கும் விற்பனைக்கும் இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதுதான் வேடிக்கை.

தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களும் இந்தச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட விற்பனைப் பகுதிகளாகும். அந்தந்தப் பகுதியில் உள்ள மார்க்கெட் குழு இந்தச் சட்ட விதிகளை அமலாக்கம் செய்கிறது.

ஆனால், நடைமுறைகளுக்கு ஒவ்வாத குழப்பமான சட்டப் பிரிவுகள், விதிமுறைகள், அதிகாரிகளின் குழப்பமான விளக்கங்கள் காரணமாக மேற்கண்ட சட்ட விதிமுறைகளால் விவசாயிகள், வணிகர்கள் இரு பிரிவினருமே கடுமையான பிரச்னைகளைச் சந்திக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சேவை புரியாமல் வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம்: பிற மாநிலங்களில் 200 முதல் 300 ஏக்கர் பரப்பளவில் விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டு, அங்கு வணிகர்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, அதற்கான கட்டணம் மார்க்கெட் கமிட்டி செஸ் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

விவசாயிகள் தங்கள் சரக்கைக் கொண்டுவந்து வைப்பதற்கான கிடங்குகள், உலர வைப்பதற்கான களங்கள், தரம் பிரித்தல், தராசுகள், ஏலம் மூலம் விற்பனை, வணிகர்களுக்கு அலுவலகம், ஓய்வு அறைகள், விவசாயிகளுக்குப் பயிற்சி வகுப்புகள், குளிர்பதன கிடங்கு, சரக்கை வாங்கிய வியாபாரிகளிடம் பணத்தைப் பெற்று விவசாயிகளுக்குப் பட்டுவாடா செய்யும் வசதி ஆகிய பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், நமது மாநிலத்தில் அத்தகைய விற்பனைக்கூடங்கள் ஏதும் குறிப்பிடத்தக்க அளவில் அமைக்கப்படாமல் பெயரளவில் மிகச் சில மார்க்கெட் பகுதியில் கிடங்குகளும், உலர் களங்களும் அமைக்கப்பட்டு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படாமல் செஸ் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வேளாண் விளைபொருள்கள் -மார்க்கெட் கமிட்டி செஸ் சட்டங்களில் உரிய மாற்றங்களைச் செய்ய பரிந்துரை செய்துள்ளது. அதில் மிக முக்கியமான மாற்றம், எந்த ஒரு வேளாண் விளைபொருளுக்கும் வேளாண் விற்பனைக் குழுவால் ஏற்படுத்தப்பட்ட விற்பனைக் கூடத்திற்குள் (மார்க்கெட்) நடக்கும் வணிகத்துக்கு மட்டுமே செஸ் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதாகும். ஆனால், தமிழகத்தில் வேளாண் பொருள் விற்பனை எங்கே நடந்தாலும் அதற்கு மார்க்கெட் கமிட்டி செஸ் வசூலிப்பது எதனால் என்பது புரியாத புதிர்.

தற்போது மாநில அரசு சட்டத் திருத்தத்தின் மூலம் பல விளைபொருள்களை அறிவிக்கும்போது அதை உருமாற்றம் செய்து பெறப்படும் ஆலைத் தயாரிப்பு பொருள்களையும் சேர்த்து “அறிவிக்கப்பட்ட பொருளாக’ அறிவிக்கிறது. உதாரணமாக, “உளுந்து’, “உளுந்தம் பருப்பு’ இரண்டுமே அறிவிக்கையிடப்படுகிறது.

இதுவே துவரைக்கும், துவரம் பருப்புக்கும் பொருந்தும். உளுந்தம் பருப்பும், துவரம் பருப்பும் விளைபொருள்கள் அல்ல. அவை பருப்பு ஆலையில் தயாரிக்கப்படும் உற்பத்திப் பொருளாகும். வேளாண் விளைபொருள்களின் விற்பனையை ஒழுங்குபடுத்தி விவசாயிகளுக்கு நன்மை செய்வதுதான் மார்க்கெட் கமிட்டி சட்டத்தின் நோக்கம். வேளாண் விளைபொருள்களுக்கு மட்டுமே செஸ் விதிக்கப்பட வேண்டும். அதிலிருந்து தயாரிக்கப்படும் உப பொருள்களுக்கு செஸ் விதிப்பது எந்த விதத்தில் நியாயம்?

பயறு, பருப்பு பற்றாக்குறையைத் தவிர்க்கும் பொருட்டு, மதுரையிலோ, திருச்சி, கோவையிலோ அல்லது விருதுநகரிலோ உள்ள ஒரு வணிகர் அயல்நாடுகளிலிருந்து உளுந்து, துவரையை இறக்குமதி செய்யும்போது அந்தக் கப்பல் சென்னைத் துறைமுகத்தில் வந்தடைந்து சரக்கு இறங்கினால், அங்கு செஸ் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அதே சரக்குக் கப்பல் சென்னைக்குப் பதிலாக தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகளை இறக்கினால் அங்கு செஸ் கட்டணம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் ஒரே சரக்குக்கு செஸ் கட்டண விதிப்பிலும் இரண்டு வித அளவுகோல் கையாளப்படுகிறது என்பது வேடிக்கை.

விற்பனைக்கூட நடைமுறைகளைப் பொருத்தவரை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதி வணிகர்களையும், விவசாயிகளையும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்கி வருவது அனுமதிச் சீட்டு (பெர்மிட்) முறைதான். விற்பனை செய்யப்பட்ட வேளாண் பொருளை ஒரு மார்க்கெட் பகுதியிலிருந்து அடுத்த பகுதிக்கு எடுத்துச் செல்ல அரசு அலுவலரிடம் பெர்மிட் வாங்கித்தான் கொண்டு செல்ல வேண்டும்.

அரசு அலுவலக நேரம் முடிந்த பின்னரும் கூட, விடுமுறை நாள்கள் உள்பட வர்த்தக பரிமாற்றம் நடந்துகொண்டே இருக்கும். அவ்வப்போது அவசரத் தேவைக்கு தொலைபேசியில் வரும் ஆர்டர்களுக்கு ஏற்ப, இரவு, பகல் பாராமல் உடனுக்குடன் சரக்குகளை அனுப்பி வைப்பது நடைமுறை வழக்கம்.

இது போன்று ஒவ்வொரு நேரமும் முன் அனுமதிச் சீட்டுபெற வேண்டும் என்ற தற்போதைய விதிமுறை லஞ்சத்துக்கு உதவுமே தவிர, எந்த விதத்திலும் விவசாயிக்கோ, வியாபாரிக்கோ உதவாது என்பது நிச்சயம்.

விவசாயம் செய்வோரும், விவசாயத் தொழிலும் நாளும் நலிவடைந்துவரும் இந்நாளில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் ஒரு குன்றிமணி அளவு உணவு தானியங்களோ, காய்கறி, பழ வகைகளோ வீணாக அனுமதிக்கக்கூடாது. அனைத்து வகையான விளைபொருள்களுக்கும் முறைப்படி உலர வைக்க, தரம் பிரிக்க, பாதுகாக்கப்பட்ட களங்களும், கிடங்குகளும், குளிர்பதனக் கூடங்களும் மாநிலம் எங்கும் அமைக்கப்படவேண்டும்.

விவசாயிகள் அவர்கள் பாடுபட்ட உழைப்பிற்கான பலனாக, நல்ல விலை கிடைப்பதற்கு மார்க்கெட் கமிட்டி கூடங்கள் ஏற்பாடு செய்யுமானால் செஸ் கட்டணம் செலுத்த தமிழகத்தில் யாருமே தயங்கமாட்டார்கள்?

வெளிமாநிலங்களில் இந்த நடைமுறை வெற்றிகரமாக நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தில் மார்க்கெட் கமிட்டி செஸ் என்கிற பெயரில் விவசாயிகளும், வியாபாரிகளும் அரசால் சுரண்டப்படுகிறார்கள் என்பதுதான் வேதனையான விஷயம்.

(கட்டுரையாளர்: கௌரவ செயலர், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம்)

Posted in Agriculture, Andhra, AP, Basmathi, Basmati, Bullion, cargo, Cess, Committee, Cultivation, Demand, Distribution, Distributors, Economy, Exporters, Exports, Farmers, Farming, Fee, Fees, Field, Finance, Food, Foodgrains, godowns, Grains, Growth, harvest, Imports, Jeeva Prabhakaran, JeevaPrabhakaran, Labor, Labour, Land, Marketing, markets, Naidu, Nayudu, Packaging, Packing, Paddy, PDS, peasants, Poor, Prabhakaran, Prices, procurement, Production, quintal, Radhakrishnan, Ration, Reddy, retail, retailers, rice, Rich, sacks, Security, SEZ, Suicides, Suppliers, Supply, Veera. Jeeva Prabhakaran, Villages, Wheat, Wholsale, workers | Leave a Comment »

Child and juvenile labour force in Tamil Nadu – Dinamani Op-ed

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 15, 2007

இது நியாயமா?

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும், நாளைய தலைமுறை கல்வியறிவும் ஆரோக்கியமும் உடைய சமுதாயமாக உருவாக வேண்டும் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமான, கிராமப்புற வளர்ச்சி பெரிய அளவில் ஏற்படாத நாடுகளில் தவிர்க்க முடியாத களங்கம் ஒன்று இருக்குமேயானால், அது கல்வி கற்க வேண்டிய வயதில் எடுபிடி வேலைகளைச் செய்யும் நிலைக்குக் குழந்தைகள் ஆளாக்கப்படுவதுதான்.

சமீபத்தில் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தங்களது மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்திய குற்றத்திற்காக 28 நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து 68 வழக்குகளும் பதிவு செய்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காகவே அமைக்கப்பட்ட 32 கல்விச்சாலைகளில், மீட்கப்பட்ட 1,198 குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கப்படுவதாக அந்த மாவட்டச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதேபோல, மற்ற மாவட்டங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கும் மாவட்ட ஆட்சியாளர்கள் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக முனைப்பாகச் செயல்படுகின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இது ஏதோ தமிழகமோ, இந்தியாவோ மட்டுமே எதிர்நோக்கும் பிரச்னை என்று கருதிவிட வேண்டாம். வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் – அதாவது, பின்தங்கிய நாடுகளில் – ஐந்து முதல் பதினான்கு வயதுவரை உள்ள 25 கோடிக் குழந்தைகள், கல்வி கற்க முடியாமல் ஏதாவது வேலையில் ஈடுபட்டு வருவதாக 1998-ல் வெளியான ஐ.நா. செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. சமீபத்திய ஒரு புள்ளிவிவரப்படி உலகில், எட்டு குழந்தைகளில் ஒரு குழந்தை தனது வருங்காலத்தை வளமாக்க முடியாத, கல்வி கற்க முடியாத நிலைமை.

இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கல்வியறிவு பெற வழியில்லாமல், குடும்பத் தொழிலிலோ அல்லது வேறு ஏதாவது வேலையிலோ ஈடுபடுத்தப்படுவதாகவும், தமிழகத்தில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இன்னும் கல்விச்சாலைகளுக்குச் செல்லாமல் ஏதாவது வேலை செய்து குடும்பத்துக்கு உதவ வேண்டிய நிலையில் இருப்பதாகவும், மத்திய அரசின் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக, இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் பல சட்டங்களை இயற்றி வந்திருக்கிறோம். குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்குக் கல்வியறிவு அளிப்பதற்கு நிதிநிலை அறிக்கைகளில் தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது. 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மட்டும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்காக 228 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முனைப்பாகச் செயல்பட்டு அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பும் நல்கி வருகின்றன என்பதுதான் உண்மை. பெருந்தலைவர் காமராஜரின் மதிய உணவுத் திட்டமும் சரி, எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு இன்று வரை செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டமும் சரி, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மிகப்பெரிய முயற்சிகள் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை செய்தும், குழந்தைத் தொழிலாளர் முறையை ஏன் கட்டுப்படுத்தவோ, முற்றிலும் அகற்றவோ முடியவில்லை? குழந்தைகள் படித்தே தீர வேண்டும் என்கிற வைராக்கியம் ஏன் பெற்றோர் மத்தியில் ஏற்படவில்லை?

இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள்.

முதலாவது காரணம், கிராமப்புற வறுமை. விவசாயம் வெற்றிகரமாக நடக்காத வரையில் கிராமப்புற வறுமையை ஒழிக்க முடியாது. வறுமை இருக்கும்போது குழந்தைகளைக் கல்விக்கூடங்களுக்கு அனுப்புவதைவிட, குடும்ப வருமானத்தை அதிகரிக்கப் பயன்படுத்துவதற்குத்தான் பெற்றோர்கள் முயல்வார்கள் என்பது இயல்பு. இந்த விஷயத்தில் நமது ஆட்சியாளர்கள்தான் நல்ல தீர்வைத் தர முடியும்.

இரண்டாவது காரணம், இந்தப் பிரச்னை பற்றிய விழிப்புணர்வும் அக்கறையும் படித்தவர்கள் மத்தியில் இல்லாதது. குழந்தைத் தொழிலாளர்களைக் குறைந்த கூலிக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்கிற மனப்போக்கிலேயே தவறு இருக்கிறது. குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்பவர்களைச் சமுதாயம் புறக்கணிக்க முற்படுமேயானால், இந்த சமூகக்கேடு பெரிய அளவில் தடுக்கப்படும். நாமே மறைமுகமாக இந்தக் கொடுமையை அங்கீகரிக்கிறோமே, இது நியாயமா?

Posted in Center, Centre, Child, Children, City, Dharmapuri, Education, Employment, Exploit, Exploitation, Females, Food, girls, Govt, Hotels, Hunger, Hungry, Illiteracy, Income, juvenile, Kids, Labor, Labour, Literacy, Metro, Needy, Policy, Poor, Read, Restaurants, Rich, Rural, She, State, Student, Suburban, Tharmapuri, Village, Wealthy, Women, Work, Worker | Leave a Comment »

Blair departs, leaving Brown to rebuild their New Labour

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

கார்டன் பிரவுன் கடந்துவந்த பாதை

கார்டன் பிரவுன் டோனி பிளேர்ருக்கு அடுத்தபடியாக பிரதமராக வரக்கூடிய அதிகபட்ச சாத்தியக்கூறுள்ளவர் என்று பல ஆண்டுகளாக கருதப்பட்டவர்.

கடந்த 10 ஆண்டுகளாக, அவர் பிரிட்டனின் நிதித்துறையின் பொறுப்பை வகித்து வந்தார். சுமார் இருநூறு ஆண்டுகளில் இந்த அளவு அதிக காலம் நிதித்துறை அமைச்சராக இருந்தவர் இவர்தான்.

சான்சலராக ( பிரிட்டிஷ் நிதியமைச்சர் அவ்வாறுதான் அழைக்கப்படுகிறார்) அவர் இருந்த காலத்தில், வெகு நீண்ட காலம் பிரிட்டனில், பொருளாதார வளர்ச்சி நீடித்தது. கடந்த மாதம் தனது இறுதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து பேசிய பிரவுன், வர்த்தக முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டுமே அதிகரித்து வருவதாகவும், கடன் வாங்குவது குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஆனால்,பிரவுனை விமர்சிப்பவர்களும் இல்லாமல் இல்லை. ஆளும் தொழிற்கட்சியின் சில உறுப்பினர்கள், சில சமயங்களில், பிரவுன் வெளிப்படுத்துகின்ற உற்சாகமற்ற – முசுட்டுத்தனமான தோற்றம், இளமையான, ஊடகங்களுக்கு நட்பான, எதிர்க்கட்சித் தலைவர், டேவிட் கேமரூனுடன் சாதகமாக கருதப்படாது போகலாம் என்று அஞ்சுகின்றனர்.

பிரவுன், ஸ்காட்லாந்தில் பிறந்து அங்கேயே கல்வி பயின்றவர். அரசியலில் அவருக்கு இருந்த ஆர்வம், எடின்பரோ பல்கலைக்கழகத்தில் அவர் படித்த காலத்திலேயே வெளிப்பட்டது. 1992ல் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்த போது, எதிர்க்கட்சியின் நிழல் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றபின்னர், அவர் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற முன்வரிசையில், கஜானவுக்கு அதாவது திரைசேரிக்கு, நிழல் தலைமைச்செயலாரகவும், வர்த்தக மற்றும் தொழில் துறை நிழல் செயலராகவும் இரண்டு மூத்த பொறுப்புகளை வகித்தார்.

புதிய தொழிற்கட்சி என்று அறியப்பட்ட கட்சியை புதுமையாக்கும் முயற்சியின் மையமாக டோனி பிளேரும் கார்டன் பிரவுனும் இருந்தனர். வழமையான சோசலிசத்தை கைவிட்டு அவர்கள் ஒரு மைய இடது சாரி அணுகுமுறையை கைக்கொண்டனர். ஆயினும், இருவருக்கும் இடையே, கருத்து வேற்றுமைகளும் வெளிவந்தன. அவர்களது ஆதரவாளர்கள் முறையே பிளேரைட்ஸ் மற்றும் பிரவுனைட்ஸ் என்று குறிப்பிடப்பட்டனர்.

சர்வதேச அரங்கில், பிரவுன் ஆப்ரிக்காவில் வறுமையைக் குறைக்கும் பிரிட்டனின் முயற்சிகளில் ஒரு முக்கியமான பங்கை வகித்தார். அவரது பரவலான அனுபவம் அவருக்கு கை கொடுக்கும் என்கிறார் பி பி சியின் பொருளாதார செய்தி ஆசிரியர் ஆண்ட்ரூ வாக்கர்


பிரிட்டிஷ் பிரதமராக கார்டன் பிரவுன் பொறுப்பேற்பு

பிரிட்டனில், புதிய பிரதமராக கார்டன் பிரவுன் அவர்கள் முறைப்படி பதவியேற்றுள்ளார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராகப் பதவி வகித்த டோனி பிளேயர் தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு கார்டன் பிரவுன் பதவியேற்றுள்ளார்.

அனைவரும் தங்களுக்குரிய நல்வாயப்புக்களை அடையக் கூடிய நிலையை உருவாக்குவது தனது முக்கியப் பணியாக இருக்கும் என்று எலிசபெத் ராணியால் புதிய அரசு அமைக்குமாறு அழைக்கப்பட்ட பிரவுன் கூறினார்.

தனது பதவியை ராஜினாமா செய்யும் முன்பாக, பிளேயர் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்த பிறகு, உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். இது ஒரு அபூர்வ நிகழ்வாகும்.


மனைவியுடன் கார்டன் பிரவுன்மனைவியுடன் கார்டன் பிரவுன்

குடும்பத்தினருடன் கார்டன் பிரவுன்

குடும்பத்தினருடன் கார்டன் பிரவுன்


மத்திய கிழக்கு பகுதிக்கு சிறப்புத் தூதராக டோனி பிளையர் நியமனம்

டோனி பிளயரும் பாலத்தீன அதிபர் அப்பாஸும்
டோனி பிளயரும் பாலத்தீன அதிபர் அப்பாஸும்

பிரிட்டனின் பிரதமராக புதன்கிழமை பதவி விலகிய டோனி பிளயர் மத்திய கிழக்கு பகுதிக்கான சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்கா, ரஷியா, ஐ நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நால்வர் அணியால், மத்திய கிழக்கு பகுதிக்கான சிறப்பு தூதர் என புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பதவியில் டோனி பிளையர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அதிகார்வபூர்வ அறிவிப்பை ஐநா வெளியிட்டுள்ளது.

டோனி பிளயருக்கு உதவியாக ஒரு சிறு வல்லுநர் குழு ஜெரூசலத்திலிருந்து செயல்படும். மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையே ஒரு அமைதியை ஏற்படுத்தி அந்தப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவது டோனி பிளையரின் முக்கிய பணியாக இருக்கும்.

இந்தப் பொறுப்பிற்கு டோனி பிளையர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அரபு உலகத்தில் இது குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன என பிபிசியின் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

இது குறித்த பெட்டகத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்


பிரிட்டனின் புதிய அமைச்சரவை அறிவிப்பு

புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்
புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்

பிரிட்டனின் புதிய பிரதமாரக பதவியேற்றுள்ள கார்டன் பிரவுன், தனது அலுவலின் முதல் முழு நாளான இன்று தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார்.

டோனி பிளையரிடமிருந்து நேற்று கார்டன் பிரவுன் பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

டோனி பிளயரின் அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் அனைவருமே கிட்டத்தட்ட மாற்றப்பட்டுள்ளனர்.

ஆலிஸ்ட்டர் டார்லிங் புதிய நிதியமைச்சாரிகிறார். புதிய உள்துறை அமைச்சாராக ஜாக்கி ஸ்மித் நியமிக்கப்பட்டிருக்கிறார். முதல் முறையாக ஒரு பெண்மணிக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

வெளியுறவுத் துறையில் புதிய அமைச்சராகிறார் டேவிட் மிலிபேண்ட். இவர் முன்னதாக சுற்றுச் சூழல் துறையின் அமைச்சராக இருந்தவர்.

இராக் மீதான போர் மற்றும் லெபனான் மீது இஸ்ரேலின் தாக்குதல் ஆகியவை குறித்து தனிப்பட்ட முறையில் அவர் மாற்றுக் கருத்துக்களை கொண்டிருந்தார்.

பொறுமையும் பயனுள்ளதாகவும் இருக்கக் கூடிய இராஜதந்திர வழிகளை தாம் கையாளவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.


Posted in africa, Arab, Biosketch, Blair, Britain, Brown, Cabinet, Cameron, Chancellor, Charles, Commons, Commonwealth, Conflict, Conservative, Diana, Downing, Dubai, Egypt, Election, England, EU, Faces, Fatah, Finance, financial, Gordon, Gordon Brown, Government, Govt, Gulf, Hamas, Iraq, Ireland, Islam, Israel, Jerusalem, Kuwait, Labor, Labour, Leader, London, Mid-east, Mideast, NATO, Opposition, Palestine, Party, people, PM, Polls, Post, Prime Minister, Ruler, Russia, Saudi, Scotland, Shuffle, Thatcher, Tony, Tory, Treasury, UAE, UK, UN, War | Leave a Comment »

Exposing the double standards of Kerala Govt – Inaction, Hypocrisy, Bureaucracy

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

கடிதங்கள் | காலச்சுவடு

கே. கணேசன்
கோயம்புத்தூர் – 27

சக்கரியாவின் ‘மாயாவித் திருடர்கள்’ என்னும் கட்டுரை குறித்து:

கேரளாவில் மார்க்சிஸ்டுகள் அம்மாநில மக்களை மூளைச்சலவை செய்துவைத்திருக்கிறார்கள். பிளாச்சி மடையிலுள்ள கொக்கோகோலோ மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ தொழில் நிறுவனங்கள் மார்க்சிஸ்டுகளால் கேரளத்தை விட்டு ஓடிவிட்டன.

  • கெல்ட்ரான்,
  • ரேயன்ஸ் மில்,
  • புனலூர் காகித ஆலை,
  • அலகப்பபுரம் டெக்ஸ்டைல்ஸ்,
  • அப்போலோ டயர் தொழிற்சாலை

ஆகிய அனைத்தும் மூடப்படுவதற்குக் காரணமாயிருந்தவர்கள், தம்மை முற்போக்காளர்கள் என்று கூறிக்கொள்ளும் மார்க்சிஸ்டுகளே. கேரளாவைச் சேர்ந்தவர்கள் மூளை உழைப்பாளிகளாகவும் உடல் உழைப்பாளிகளாகவும் மற்ற மாநிலங்களுக்கும் அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்கும் செல்லக் காரணகர்த்தாக்கள் மார்க்சிஸ்டுகளே.கேரளாவில் மலப்புரம் மாவட்டம் பொன்னானி என்னும் ஊரின் அருகேயுள்ள சம்றவட்டம் என்ற இடத்தில் பாரத புழா அரபிக்கடலில் கலக்கும் இடத்தில் தண்ணீரைத் தேக்கிவைக்கத் தடுப்பணையும் அதன்மேல் வாகனங்கள் செல்ல ஒரு பாலமும் கட்டத் திட்டமிட்டுக் கேரளாவில் மூன்று முதல்வர்கள் கடந்த 18 ஆண்டுகளில் மூன்று முறை கால்கோள் விழா நடத்தினார்கள். அத்திட்டத்தை என்ன காரணத்தினாலோ கைவிட்டார்கள்.

அந்தப் பாலம் அங்குக் கட்டப்பட்டால் மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் குடிநீர் தேவையும் நிறைவேறும் விவசாயம் செழிக்கும் வெயில் காலங்களில் நிலத்தடி நீரும் குறையாது. இது அப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றாமல் மார்க்சிஸ்டுகள் ஏமாற்றுகிறார்கள்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்தேக்கும் அளவை உயர்த்தினால் அணை உடைந்து ஐந்து மாவட்டங்கள் நீரில் மூழ்கிவிடும் என்று வெற்றுக் கூச்சல் போடுகிறார்கள். 4 டி.எம்.சி. தண்ணீரால் 5 மாவட்டங்கள் எப்படித் தண்ணீரில் மூழ்கும்?

ஒரு வேளை மார்க்சிஸ்டுகள் கூறியபடியே நடந்தாலும், அந்த நீர் 70 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இடுக்கி அணைக்கு அல்லவா சென்றுவிடும்? கேரள மாவட்டங்கள் என்ன பூந்தொட்டிகளா, நீரில் மூழ்க? அப்படியிருக்கக் காவிரி நதிநீர்த் தீர்ப்பாயம் கேரளாவிற்கு 30 டி.எம்.சி. வழங்கத் தீர்ப்பு கூறியுள்ளது.

எந்த ஆயக்கட்டு வசதியும் இல்லாமல் 30 டி.எம்.சி.யை எங்குத் தேக்குவார்கள்? அதுவுமில்லாமல் 30 டி.எம்.சி. நீர் தங்களது மாநிலத்திற்குப் போதாது என்றும் மேலும் தண்ணீர் விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள். இந்த 30 டி.எம்.சி. நீரால் கேரளா மூழ்காதா? மார்க்சிஸ்டுகள் முன்னுக்குப் பின் முரணான அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்கள்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் இருந்த திருவனந்தபுரத்தைத் தனிக் கோட்டமாக்கியபோது தமிழ்நாட்டில் எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை. ஆனால், சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டபோது மார்க்சிஸ்டு தொழிற்சங்கத்தினர் அம்மாநில மக்களைத் தேவையில்லாமல் தூண்டிவிட்டார்கள்.

கேரளாவில் உள்ள குருவாயூரிலிருந்து தானூர் என்னும் இடத்திற்குப் புதிய ரயில் பாதை அமைக்கக் கடந்த ரயில்வே பட்ஜெட்டில் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிலத்தைக் கையகப்படுத்தாமல், அத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறார்கள் மார்க்சிஸ்டுகள்.

திருவனந்தபுரம் அருகே விழிஞம் என்னும் இடத்தில் அதிநவீனத் துறை முகம் அமைக்கப் பல வெளிநாட்டுக் கம்பெனிகள் முயன்றன. ஆனால், மார்க்சிஸ்டு அரசு அதற்கு ஒத்துழைக்கவில்லை. எர்ணாகுளத்தை ஸ்மார்ட் சிட்டி ஆக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதற்கும் மார்க்சிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்துத் திட்டத்தைக் கிடப்பில் போட்டிருக்கிறார்கள்.

கேரளா பொருளாதார வளர்ச்சி பெற்றுச் சிறந்த மாநிலமாக உருவெடுத்தால், மார்க்சிஸ்டுகள் அம்மாநில மக்களை ஏமாற்ற முடியாது என்ற ஒரு காரணம்தான். இந்த ஆண்டு மார்ச் 14 அன்று மேற்கு வங்கம் நந்தி கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து 14 பேர் சுட்டுத் தள்ளப்பட்டார்கள். மார்ச் 14 நினைவுகூரத்தக்க தினம்தான்.

பொதுவுடமைச் சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் நினைவு தினம் மார்ச் 14. மார்க்சிஸ்டுகளின் அந்நிய நாட்டு அடி வருடித்தனத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் வரலாறும் மன்னிக்காது என்பது திண்ணம்.

கே. கணேசன்
கோயம்புத்தூர் – 27

—————————————————————————

தமிழகத்தின் உரிமைப் பிரச்னைகள்

பா. ஜெகதீசன்

தமிழகமும், கேரளமும் கடந்த பல தலைமுறைகளாகவே அண்ணன் – தம்பியைப் போன்ற உறவுடன் பாசத்துடன் பழகி வந்தன. ஆனால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே சமீபகாலத்தில் எழுந்த பிரச்னை விசுவரூபம் எடுத்து, இரு தரப்பினரையும் பகையாளிகளைப் போல பேச வைத்து விட்டது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையைப் போல, மேலும் பல பிரச்னைகளில் இரு மாநிலங்களுக்கு இடையே “இழுபறி’யான ரீதியில் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

உதாரணமாக, பரம்பிக்குளம் -ஆழியாறு ஒப்பந்தம் தொடர்பான பிரச்னை 1988-லிருந்து நீடித்து வருகிறது. 6.11.2004-ல் சென்னை தலைமைச் செயலகத்தில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் இரு மாநிலங்களும் பேச்சு வார்த்தையை தொடருகின்றன.

கஜினி முகமது தொடர்ந்து படை எடுத்து வந்த வரலாற்றை முறியடிக்கும் வகையில், இப்பிரச்னைக்குத் தீர்வு காண இதுவரை சுமார் 20 முறைக்கும் மேல் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், பாலாறு, ஆழியாறு ஆகியவற்றிலும், இவற்றில் இணையும் ஆறுகளிலும் உள்ள நீரை மின்சாரம் தயாரிக்கவும், பாசனம் மற்றும் குடிநீருக்குப் பயன்படுத்தவும் 9.11.1958 முதல் செயல்படக் கூடிய ஒப்பந்தம் இரு மாநிலங்களுக்கும் இடையே கையெழுத்தானது.

9.11.1988-ல் இந்த ஒப்பந்தம் மறு ஆய்வு செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யப்படவில்லை.

அதேபோல, பாண்டியாறு -புன்னம்புழா நதிகள் தமிழகத்தில் நீலகிரி மலையின் உயர்ந்த சிகரங்களில் தோன்றி, கூடலூருக்கு 5 கி.மீ. மேற்கே இணைகின்றன. இந்த இணைப்புக்குக் கீழே இந்த நதி புன்னம்புழா என்றே அழைக்கப்படுகிறது. கேரளத்தில் நீலாம்பூர் அருகே சாளியாற்றில் கலந்து, பேபூர் என்கிற இடத்தில் அரபுக் கடலில் இந்த நதி சங்கமம் ஆகிறது.

இந்தக் குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் கிடைக்கும் 14டி.எம்.சி. நீரில் குறைந்தபட்சம் 7 டி.எம்.சி.யையாவது தன் பக்கம் திருப்பி விட வேண்டும் என்று தமிழகம் விரும்புகிறது. மேற்கு நோக்கிப் பாயும் இந்த ஆற்றிலிருந்து கிழக்கு நோக்கி தண்ணீரைத் திருப்ப கேரளத்தின் ஒப்புதலைப் பெறும் முயற்சியைத் தமிழகம் மேற்கொண்டுள்ளது.

புன்னம்புழா திட்டத்தில் கிடைக்கும் தண்ணீரை பவானி ஆற்றின் கிளை ஆறான மோயாற்றில் இணைத்து, கோவை மாவட்ட விவசாயிகளுக்கு உதவ தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. ஆனால், இந்தக் கனவு எப்போது நனவாகும் என்று தெரியவில்லை.

தீபகற்ப நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் மகாநதி – கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – காவிரி – வைப்பாறு நதிகளை இணைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு தயாரித்து, அதுதொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகிறது. கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளின் நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது என்பது அந்தத் திட்டத்தின் ஒரு பகுதி.

பம்பா -அச்சன்கோயில் -வைப்பாறு இணைப்புத் திட்டம் என்பது கேரளத்தில் உள்ள பம்பா -அச்சன்கோயில் ஆறுகளின் உபரி நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது ஆகும். இந்தத் திட்டத்தினால் சங்கரன்கோவில், கோவில்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், தென்காசி வட்டங்களில் உள்ள 91,400 ஹெக்டேர் (ஒரு ஹெக்டேர் என்பது சுமார் 2.5 ஏக்கர்) நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 22 டி.எம்.சி. நீர் கிடைக்கும். பம்பா – அச்சன்கோயில் ஆறுகளில் கிடைக்கும் உபரி நீரில் இது 20 சதவீதம் மட்டுமே.

மேலும் இந்தக் குறிப்பிட்ட திட்டத்தின் மூலம் 500 மெகாவாட் மின்சாரத்தையும் எளிதாக உற்பத்தி செய்ய இயலும்.

ஆனால், இதர திட்டங்களைப் போலவே, இந்தத் திட்டத்தையும் கேரள அரசு ஏற்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைக்கும் வகையில், கண்ணகி கோயில் பிரச்னை அமைந்துள்ளது.

உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள வண்ணாத்திப்பாறைக் காடு தமிழகத்தைச் சேர்ந்தது. அந்தப் பகுதியில்தான் கண்ணகி கோயில் உள்ளது.

ஆனால், கண்ணகி கோயில் தனது எல்லைக்குள் உள்ளதாக கேரள அரசு கூறி வருகிறது. அத்துடன், அங்கு வழிபாடு நடத்தச் செல்லும் தமிழக மக்களை கேரள அரசு தடுத்து, பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் இடையே உள்ள எல்லையின் நீளம் சுமார் 830 கி.மீ. இதில் சுமார் 250 கி.மீ. தூரத்துக்குத்தான் இரு மாநிலங்களின் அதிகாரிகளும் ஆய்வு செய்து, எல்லைகளை நிர்ணயித்துள்ளனர்.

கேரள அதிகாரிகள் சரியாக ஒத்துழைக்காததால், எஞ்சிய தூரத்துக்கு எல்லையை வரையறுக்க முடியாத நிலை உள்ளது. அதைப் பயன்படுத்தி ஆங்காங்கே தமிழகத்தின் பகுதிகளைத் தனது பகுதிகள் என்று கேரளம் கூறி போலியாக உரிமை கொண்டாடி வருகிறது.

கேரளத்துடன் நல்லுறவை வளர்க்கவே எப்போதும் தமிழகம் விரும்புகிறது. ஆனால், அந்த விருப்பம் ஈடேறத் தடைகற்களாக இத்தனை பிரச்னைகள் அமைந்துள்ளன. இந்தத் தடைகள் தகர்க்கப்பட்டு, நல்லுறவு மேம்பட கேரளத்தின் பெருந்தன்மையான ஒத்துழைப்பு அவசியம்.

———————————————————————————————————————————

முல்லைப் பெரியாறும்-கேரளமும்!

என். சுரேஷ்குமார்

திருநெல்வேலி மாவட்டம், சுந்தரமலையில் உள்ள சிவகிரி சிகரத்தில் தோன்றும் பெரியாறு, பெருந்துறையாறு, சின்ன ஆறு, சிறு ஆறு, சிறுதோனி ஆறு, இடமலையாறு, முல்லையாறு ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு சுமார் 300 கி.மீ. தூரம் வடமேற்குத் திசையில் பாய்ந்து இறுதியில் கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே கடலில் கலக்கிறது.

பெரியாறு தமிழக எல்லைக்குள் 56 கி.மீ. தூரமும் கேரள எல்லைக்குள் 244 கி.மீ. தூரமும் பாய்கிறது.

மக்களின் குடிநீர் தேவைக்கும் பாசனத்திற்காகவும் பெரியாறு திட்டத்திற்கு முதன்முதலில் செயல்வடிவம் கொடுத்தது ஆங்கிலேயர்கள்.

அதன்படி, 1808-ம் ஆண்டு ஜேம்ஸ் கால்டுவெல் என்பவர் அணைகட்டும் திட்டத்தை ஆய்வு செய்து 1862-ல் 162 அடி உயர அணை கட்டும் திட்டம் மேஜர் ரைவீஸ் மற்றும் மேஜர் பேயின் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

பின்னர் 1882-ம் ஆண்டு 175 அடி உயரத்தில் அணை கட்ட பென்னி குயிக் நியமிக்கப்பட்டார். அதற்கு திட்ட மதிப்பீடு ரூ.65 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.

அதன்படி முல்லை ஆறும், பெரியாறும் இணையும் இடத்திற்கு அருகே அணை கட்ட முடிவெடுக்கப்பட்டது. அணை கட்டப்படவிருந்த பகுதியான தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் தமிழர் வாழும் பகுதிகளாகும். தற்போதும் அப்பகுதியில் வசிப்போர் பெரும்பாலும் தமிழர்களே.

இருப்பினும் அணை கட்டப்படவுள்ள பகுதி தமிழ்நாட்டு பகுதியா, திருவிதாங்கூர் சமஸ்தான பகுதியா என்பதில் தெளிவில்லாத ஆங்கிலேய அரசு, அணை கட்டப்பட உள்ள பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதி எனக் கொண்டு, 1886-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுக்கான ஒப்பந்தத்தை செய்தது.

மேலும், இந்த அணை நீரானது தமிழகத்திற்கு காலகாலத்திற்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய அரசு 999 ஆண்டு ஒப்பந்தத்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் செய்து கொண்டது.

அதன்படி 1241 அடி நீளத்தில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் அடித்தளத்திலிருந்து 172 அடி.

இதில் நீரைத் தேக்கும் உயரம் 155 அடி. ஆனால், திடீரென வரும் வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் 152 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்பட்டது.

இந்த அணையில் தேங்கும் நீரை, கிழக்குத் திசையில் 5765 அடி நீளமும், 60 அடி ஆழமும், 80 அடி அகலமும் கொண்ட பெரிய கால்வாய் மூலம் கொண்டுவந்து பின்பு அந்த நீரை மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட 5345 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்ட சுரங்கத்தின் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

அதற்குப் பிறகு 78 கி.மீ. நீளமுள்ள பெரியாறு கால்வாய் மூலம் வைகை ஆற்றுடன் இணைக்கப்படுகிறது. அணையிலிருந்து மேற்குறிப்பிட்ட சுரங்கத்தின் வழியாக வினாடிக்கு 2000 கன அடி அளவு தண்ணீரை மட்டுமே வெளியே எடுக்க முடியும்.

மேலும், 152 அடி உயரமுள்ள அணையில் 104 அடிவரை தேங்கும் நீரைத்தான் எடுக்க முடியும்.

பின்னர் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு அந்த அணையின் நீர் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதன்பின்னர்தான் கேரள அரசு முல்லைப்பெரியாறு அணையை முழுவதும் கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டது.

அதன்படி, 1956-ம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் வாழ்ந்து வந்த தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக கேரளத்தோடு இணைக்கப்பட்டன.

1978-ம் ஆண்டு அணை பலவீனமாகிவிட்டது என்று கேரள அரசு பொய் செய்தியைப் பரப்ப ஆரம்பித்தது. அதன்மூலம் அணையின் நீர்மட்டம் 145 அடியாக குறைக்கப்பட்டது.

பின்னர் அணை பலப்படுத்துவது தொடர்பாக கேரள- தமிழக அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, அணை பலப்படுத்தப்படும்வரை அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது.

இதற்கிடையே பெரியாறு நீர்பிடிப்புப் பகுதிகளில் கெவி அணை, ஆணைத்தோடு அணை, கட்கி அணை, பம்பா அணை போன்ற அணைகளை கட்டியெழுப்பி முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்தை கேரளம் குறைத்தது.

இதனால் ஒரு போகம் சாகுபடி செய்த சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் சுமார் 40,000 ஏக்கர் நிலங்கள் தரிசாக மாறின.

1979 ஆம் ஆண்டு மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னிலையில் இரு மாநில அரசுகளும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளை 1985-ம் ஆண்டே முடித்த பின்பும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு மறுத்தது.

இதனால் இப்பிரச்னையை தமிழக விவசாயிகள் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றனர்.

மத்திய நீர்வள ஆணையம், மத்திய மண் விசையியல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை சார்ந்த நிபுணர்கள் அணையைப் பார்வையிட்ட பிறகு, அணையை பலப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன என்று சான்று வழங்கியது. மேலும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என கேரள அரசு சொன்ன காரணங்கள் பொய்யானவை என்று ஆணையம் தெளிவாகக் கூறியது.

அதன் அடிப்படையில் 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை நீரை தேக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும், கேரள அரசு 1979-ம் ஆண்டு தமிழகத்தோடு செய்த ஒப்பந்தத்தை மீறியதோடு, நிபுணர் குழு அறிக்கையையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் உதாசீனப்படுத்தியது.

தீர்ப்புக்கு கட்டுப்பட மறுத்து அதே ஆண்டு மார்ச் மாதத்தில் கேரள அரசு நீர்ப்பாசனம், நீர்வளம் பாதுகாப்பு சட்டத்தை திருத்தி பெரியாறு அணையையும் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

இதன்மூலம் கேரள அரசு மேற்கொள்ளும் ஒரு தலைப்பட்சமான முடிவு நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக விடப்பட்டிருக்கும் அறைகூவல்.

மேலும், தற்போது பழைய அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்டப்போவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு கேரள அரசு கட்டினால் தமிழகத்தின் உரிமை முழுமையாகப் பறிபோகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Posted in Agriculture, Apollo, Bureaucracy, Cauvery, Coke, cola, Communism, Communist, Communist parties, Communist Party of India, Congress, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, Dam, Disaster, Drinking, Economy, Employment, Exports, Finance, Flood, GDP, Govt, Growth, Guruvaioor, Guruvaiyoor, Guruvaiyur, Guruvayoor, Guruvayur, Harbor, Harbour, Headquarters, Hype, Hypocrisy, Imports, Incentives, Industry, infrastructure, Integration, Irony, Irrigation, Jobs, Kaviri, Keltron, Kerala, Kozhikode, Labour, Literacy, Madurai, Malaappura, Malappura, Malappuza, Malappuzha, Malayalam, Manufacturing, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Mills, Mullai, Mullai Periyar, MullaiPeriyar, National, Palacaud, Palacaut, Palacode, Palaghat, Palagode, Palakode, Periyaar, Periyaaru, Periyar, Periyaru, Politics, Port, Prevention, Producation, promises, Railways, River, Salem, SEZ, Shipping, State, Tax, Textiles, THIRUVANANTHAPURAM, TMC, TN, Trains, Trivandrum | Leave a Comment »

Slum Clearance Board housing collapses – Daily Routine of the Poor

Posted by Snapjudge மேல் மே 30, 2007

விழுந்து நொறுங்கும் வீடுகள்: அலறும் குடும்பங்கள்

சென்னை, மே 30: 5-ம் வகுப்பு படிக்கும் மீனா, நண்பர்களுடன் தனது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென வீட்டின் மேற்கூரை விழுந்து நொறுங்கியது. சாப்பாட்டில் மண். அலறியடித்து, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இந்தச் சம்பவம் சென்னை சாந்தோம் அருகே உள்ள நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மேற்கூரை விழுந்து நொறுங்கும் சம்பவம் அந்தப் பகுதியில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வாகி விட்டது என்பதால் யாரும் அவ்வளவு கவலைப்படவில்லை. காரணம், மேற்கூரை இடிந்து விழும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

6 மாதங்களுக்கு முன்பு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் மாதவராஜ் என்பவர் உயிரிழந்தார்.

“”சென்னையில் குடிசைகளை அகற்றி அப்பகுதியில் குடியிருப்புகளை கட்டும் திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது நொச்சிக்குப்பத்தில் தான். 786 வீடுகள் கொண்ட குடியிருப்புகள், கடந்த 1972-ல் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. கால மாற்றங்களால் தற்போது கட்டடங்கள் சேதமடைந்து வருகின்றன” என்றார் 75 வயதான ஆர்.எஸ்.மணி.

வசதி படைத்தவர்கள் தங்களின் சேதமடைந்த வீடுகளை சரி செய்து கொள்கின்றனர்.

“”கடந்த 6 ஆண்டுகளாக எங்களின் வீடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன. வீடுகளை முற்றிலும் இடித்து விட்டு புதிதாக கட்டித் தருவதாக அரசு அறிவித்துள்ளது. பயனாளிகள் பட்டியலை எடுத்தார்கள். அதன்பின்பு, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார் ஜெயசீலி.

குடிசைப் பகுதி தடையா? நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பை ஒட்டி, நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் உள்ளன. குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிப்போரின் வாரிசுகள், குடிசை வீடுகளில் வசிப்பதாகக் கூறப்படுகிறது.

“”புதிதாக கட்டித் தருவதாக அரசு உறுதி அளித்துள்ள வீடுகளில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என குடிசைப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், அவர்களிடம் ரேஷன் அட்டை உள்ளிட்ட சான்றுகள் இல்லை. இதனால், வருவாய்த் துறை சார்பில் இரண்டு முறை பயனாளிகள் பட்டியல் வெளியிட்ட போதும், அப்பகுதியில் பெரும் குழப்பம் நிலவியது.

இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்” என்றார் அப்பகுதியைச் சேர்ந்த சேகர்.

மாற்று இடம் வழங்கப்படவில்லை: “”நொச்சிக்குப்பத்தில் உள்ள சேதமடைந்த வீடுகளை இடிப்பதற்கு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால், அங்கு இருப்பவர்களை வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான மாற்று இடம் வழங்கப்படவில்லை என்பதால், அப்பகுதி மக்கள் அங்கேயே குடியிருந்து வருகின்றனர்” என்கிறார் தென்னிந்திய மீனவர் நலச்சங்கத்தைச் சேர்ந்த பாரதி.

இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது,””சேதமடைந்த கட்டடங்களை இடித்து, புதிய கட்டடங்களை கட்டுவதற்கான வரைபடம் தயாராக உள்ளது. விரைவில் குடியிருப்புகள் கட்டப்படும்” என்றனர். எப்போது என்பதை தெளிவுபடுத்தவில்லை.

——————————————————————————————————————-

குறட்டை விடும் குடிசை மாற்று வாரியம்

எம். மார்க் நெல்சன்

Kalainjar DMK Slum Clearance board abuse power Karunanidhi banner

சென்னை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்கள்.

சென்னை, ஜூலை 15: சென்னையில் குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சுவர்கள் வருமானம் ஈட்டித் தருபவையாக மாறி வருகின்றன.

ஆனால், வருமானம் தொடர்பான வரவு -செலவு கணக்குகளைப் பராமரிப்பதில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் இருந்தாலும், கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அங்குள்ள பிளாக் ஹெச்-8 முதல் ஹெச்-15 வரையுள்ள குடியிருப்புச் சுவர்களில் தனியார் விளம்பரங்களும், ஹெச்-5, 6, 7, 16 மற்றும் பிளாக் ஆர் -18, 19 ஆகிய குடியிருப்புச் சுவர்களில் முதல்வர் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களும் இடம்பெற்றுள்ளன.

சுவர் விளம்பரங்களுக்கு ஆண்டுக்கு, சதுர அடிக்கு அதிகபட்சமாக ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விளம்பரப் பலகைகளை வைக்க ஆண்டுக்கு, சதுர அடிக்கு ரூ. 26 வசூலிக்கப்படுகிறது.

இந்தக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் உயர்த்தப்படுகின்றன. பெரும்பாலும், இந்த விளம்பரங்கள் அனைத்தும் 1,200 சதுர அடி அளவில் அமைக்கப்படுகின்றன.

இதன்படி, கோட்டூர்புரம் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஆறு விளம்பரப் பலகைகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 2 லட்சமும், எட்டு சுவர் விளம்பரங்கள் மூலம் ரூ. 1 லட்சமும் அரசுக்கு வருமானம் வருகிறது.

இதே பகுதியில் தனியார் இடத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 60 முதல் 70 வரை வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் 1200 சதுர அடி கொண்ட ஒரு விளம்பரத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 84 ஆயிரம் வருமானம் தனியாருக்குக் கிடைக்கிறது.

ஆனால், குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்துக்கு ஆண்டுக்கு ரூ. 32 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

பராமரிக்கப்படாத கணக்குகள்: இந்நிலையில் குடிசைப் பகுதி மாற்று வாரிய அலுவலகக் கணக்குப் பதிவேட்டில் இந்த விளம்பரங்கள் குறித்த சில கணக்குகள் 1-4-2003 வரை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

விளம்பரக் கட்டணங்கள் வசூலிப்பது, விளம்பரக் காலம் முடிந்ததும், அந்த விளம்பரங்களை அழிப்பது உள்ளிட்ட பணிகளை கே.கே. நகரில் அமைந்துள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தினரும், எஸ்டேட் அலுவலரும் (ஈ.ஓ.7) செய்து வருவதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்த கணக்குகளையும், விவரங்களையும் அவர்கள் குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு சரிவர தெரிவிக்காததால் கணக்குப் பதிவேட்டில் சரிவர இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதனால் விளம்பரங்களுக்கு பணம் வசூலிக்கப்படுகிறதா அல்லது வசூலிக்கப்படும் பணம் வேறு வகையில் செலவழிக்கப்படுகிறதா என்பது மர்மமாக உள்ளது.

ஆளுங்கட்சி என்பதால்… அங்கு வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை எனத் தெரிகிறது.

பொன்விழா முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், அந்த இடங்களில் தனியார் விளம்பர பலகைகளுக்கு அனுமதி அளித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பது அதிகாரிகளின் கருத்து.

ஆனால், ஆளுங்கட்சி என்பதால் அந்த விளம்பரங்களை அகற்றுவதற்கு பயந்து அப்படியே விட்டுவைத்துள்ளனர் அதிகாரிகள்.

ஏற்கெனவே குறைந்த விலைக்கு விளம்பரங்களை வைக்க அனுமதிக்கும் நிலையில், வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களுக்கு முறையாக பணத்தை வசூலிக்காமலும், வசூலித்த பணத்தை சேர்க்கவேண்டிய இடத்தில் சரிவர சேர்க்காமலும் அரசுக்கும், குடிசை மாற்று வாரியத்துக்கும் இழப்பை ஏற்படுத்துவது ஏன் என்பதுதான் கேள்வி.

Posted in 50, Ad, Advt, Affordability, Area, Banner, Board, Celebrations, City, Civil, Clearance, collapses, Construction, Cost, Daily, Disabled, DMK, Dwelling, Education, eligibility, encroachments, Engineering, Eviction, facilities, facility, Flats, Floods, Free, Functions, Government, Govt, Handicapped, Hoardings, Home, Houses, Housing, Huts, Hygiene, improvement, Income, infrastructure, Issues, Jobs, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kottoor, Kottur, Kotturpuram, kutcha, Labor, Labour, Lands, Loss, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maintenance, migration, Mu Ka, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, multistorey, Necessity, NGO, Party, Plots, Politics, Poor, Poster, Power, Problems, Rain, Rehabilitation, Rent, revenue, Routine, Rural, sanitation, Santhome, settlements, shelter, Sleep, Slum, Society, Structure, Tenements, TN, TNSCB, TV, unhygienic, Worker, Youth | 1 Comment »

Pavannnan – The divide between wealthy & needy

Posted by Snapjudge மேல் மே 23, 2007

இருவேறு உலகங்கள்

பாவண்ணன்

அதிகாலை நடை முடிந்து திரும்பும் தருணத்தில் வழக்கமாக என் கண்களில் படும் முதல் காட்சி கீரைக்கட்டுகளை விற்றுமுடித்த ஆண்களும் பெண்களும் ஊர்திரும்பும் உற்சாகத்தோடு கூடைகளுடன் நிற்கும் தோற்றமாகும்.

வாய்நிறைய வெற்றிலைச் சாறும் புகையிலையுமாக ஒரு மூதாட்டி எனக்காக எடுத்து வைத்திருந்த கீரைக்கட்டுகளைக் கொடுத்து வியாபாரத்தை முடித்துக்கொள்வது அதற்கடுத்த காட்சி.

ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து பார்வையில் தென்படும் இக்காட்சிகளில் இந்த ஒன்றிரண்டு மாதங்களாக ஏற்பட்ட மாற்றங்கள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. பலருடைய கீரைக்கட்டுகள் எடுத்துப் பார்க்க ஆளின்றிக் கூடைகளில் முடங்கிக் கிடக்கின்றன.

பிரித்து வைத்த கூறுகள் இளஞ்சூரியனின் ஒளியை உள்வாங்கி வாடத் தொடங்குகின்றன. விற்றது பாதி, விற்காதது பாதி என்கிற நிலை சிலருக்கு. காலையிலேயே தெரு உலாவைத் தொடங்கிவிட்ட நகரத்து மாடுகளின் பக்கம் அரைமனத்தோடு கீரைக்கட்டுகளை வீசிவிட்டு அவசரமாக ஊர் திரும்புகிறார்கள் சிலர்.

இந்த எல்லா மாற்றங்களுக்கும் குழப்பங்களுக்கும் அதிர்ச்சிகளுக்கும் காரணம் பணக்கார நிறுவனங்களால் குளிரூட்டப்பட்ட மாபெரும் கட்டடங்களில் அக்கம்பக்கத்தில் தொடங்கப்பட்ட சில்லறை வணிக விற்பனை.

பணக்கார நிறுவனங்கள் நினைத்த நேரத்தில் நினைத்த தொழிலை மிக எளிதாக இந்த நாட்டில் தொடங்கிவிட முடிகிறது. பெட்ரோல் முதல் தேங்காய் எண்ணெய் பாக்கெட் வரை அனைத்தையுமே அவை விற்று வருகின்றன.

இன்சூரன்ஸ் துறை முதல் தொலைபேசித் துறை வரை எல்லாத் துறைகளிலும் கூடாரத்தில் ஒட்டகம் நுழைந்த கதையாக முன்னங்கால்களை ஊன்றிவைத்தாகிவிட்டது. உப்பையும் தண்ணீரையும்கூட விட்டுவைக்கவில்லை.

கோதுமை மாவு, கொழுப்பு அகற்றப்பட்ட எண்ணெய், விதவிதமான குழம்புகளுக்குத் தேவையான விதவிதமான மசாலாப் பொடிகள் எனப் பல சில்லறைப் பொருள்கள்கூட கடைகளில் கண்ணாடிப் பேழைகளிலும் தாங்கிகளிலும் விற்பனைக்காக அடுக்கப்பட்டுவிட்டன. இந்த வரிசையில் இப்போது கீரைக்கட்டுகளும் காய்கறிகளும் இடம்பெறத் தொடங்கிவிட்டன.

காலம் முன்னகரும் வேகத்தில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பது உண்மை. மாற்றம் என்னும் காந்தம் குறிப்பிட்ட ஒருசில கூட்டத்தினரை மட்டுமே ஈர்த்துத் தன்னுடன் இணைத்துக் கொள்கிற சக்தியாக மட்டுமே இயங்குகிறது என்பதுவும் உண்மை.

ஈர்க்கப்பட்டவர், ஈர்க்கப்படாதவர் என இருபெரும் பிரிவுகளாக உலகம் பிளவுபட்டுத் துண்டுகளாக மாறத் தொடங்கிவிட்டது என்பது மிகவும் கசப்பான உண்மை.

செக்கடிக்குச் சென்று எண்ணெய் வாங்கியது ஒரு காலம். பலசரக்குக் கடைகளில் எண்ணெய்யும் ஒரு விற்பனைச் சரக்காக இடம்பெறத் தொடங்கியது இன்னொரு காலம். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைத்திருக்கிற காலம் இன்று.

உப்பு முதல் புளி வரையான பல பொருள்களின் விற்பனை முறைகள் உருமாறி உருமாறி இன்று வேறொரு விதமாக மாறிவிட்டன. காலந்தோறும் ஒவ்வொரு விற்பனை முறையும் மாற்றமடையும்போதெல்லாம் விற்பனைமுறைகளில் ஈடுபட்டிருந்தவர்களின் பிழைப்புக்கான வழியில்தான் முதல் அடி விழுகிறது. அந்த அடியின் வேகத்தில் பாதியளவினர் சிதறி வேறு வாழ்க்கை முறையைத் தேடிப் போகிறார்கள். மீதியுள்ளவர்கள் புதுமுறையின் நவீனப் பகுதிகளுக்குத் தகுந்தபடி தம்மைத் தகவமைத்துக் கொண்டு மீண்டுமொரு வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள்.

இன்றுவரை உருவாகிவந்த மாற்றங்கள் ஏற்படுத்தித் தந்திருக்கும் சில வசதிகளைப்போலவே இன்று உருவாகும் மாற்றத்திலும் சில வசதிகள் உள்ளதை மறுப்பதற்கில்லை. வேலைநேரம் என்பதே அடியோடு மாறிவிட்ட சூழலில் இருபத்திநாலு மணி நேரமும் இயங்க வேண்டிய நெருக்கடிகளில் சிக்கி நகரங்கள் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் காலம் இப்போது.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளைச் சேர்ந்த அலுவலகங்களின் கிளை அலுவலகங்களால் நிரம்பத் தொடங்கிவிட்டன இந்திய நகரங்கள். ஒன்பது அல்லது பத்து மணிக்குத் தொடங்கி ஐந்து அல்லது ஆறு மணிக்கு வீடு திரும்பிய சூழல் இப்போது இல்லை.

“”சிக்காகோவின் தெருக்களிலே சிந்திய ரத்தம் போதாதா?” என்னும் தொழிற்சங்க முழக்கங்கள் நினைவூட்டும் எட்டு மணி நேர வேலைத் திட்டம் இன்று கண் முன்னிலையிலேயே குளிரூட்டப்பட்ட அலுவலகச் சுவர்களிடையே சிதைந்து கொண்டிருக்கிறது. கசக்கிப் பிழிய ஆளில்லாமலேயே கசங்கிப் போகவும் மணிக்கணக்கில் கண் விழிக்கவும் பழகிவிட்ட இளந்தலைமுறையினரை இந்த அலுவலகங்கள் உருவாக்கிவிட்டன.

இன்றைய தனியார் வணிகத்தின் மாபெரும் இலக்கு இந்த இளந்தலைமுறை. மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள செருப்புமுதல் மூன்று ரூபாய் மதிப்புள்ள கீரைக்கட்டுவரை இனி எதை விற்றாலும் இவர்களை நோக்கிதான் விற்க வேண்டும்.

அகால நேரத்தில் வேலைக்குச் சென்று திரும்புகிற இந்தக் கூட்டத்தினருக்கு ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்க நேரமில்லை.

எல்லாமே ஒரே கூரையின் கீழ் இருக்க வேண்டிய வசதியை எதிர்பார்க்கிறது அவர்கள் மனம். தேவையானவற்றையெல்லாம் அள்ளி ஒரு பெரும் உறையிலிட வேண்டும். எடுத்துச்செல்ல ஒரு வாகனமும் வேண்டும். அவ்வளவுதான். நாள்கணக்கில் பாதுகாக்க குளிர்அறைப்பெட்டி இருக்கும்வரை எக்கவலையும் இல்லை. பதப்படுத்தப்பட்ட கீரைக்கட்டுகள் குளிரூட்டப்பட்ட அடுக்குகளில் வைக்கப்பட்டு விற்கப்படுவது இவர்களுக்காகவே.

வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ சில மாற்றங்கள் இவ்விதத்தில் மௌனமாக நிகழ்ந்தபடியேதான் உள்ளன. இந்த மாற்றங்களை இன்று சப்தம் போட்டு விளம்பரப்படுத்தும் ஊடகங்களின் பெருக்கத்தாலும் நிறுவனங்களின் குறைந்தவிலைத் தந்திரங்களாலும் இது ஏதோ ஒரு மாபெரும் புரட்சியாக உருப்பெருக்கிக் காட்டப்படுகிறது.

இந்த வியாபார அமைப்பு புதிய இளந்தலைமுறையினரையே பிரதான இலக்காகக் கொண்டதாக இருப்பினும் அந்த இலக்கில் விழும் இரையோடு மட்டுமே நிறைவடைய வியாபார நிறுவனங்கள் தயாராக இல்லை. கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஒற்றை இலக்கை மட்டுமே அடைவதில் என்ன லாபம் என்னும் கணக்கால் உருவானதுதான் விலைக்குறைப்புத் தந்திரம்.

ஒரு பொருளுக்கு இரண்டு ரூபாய் என்பது அடக்கவிலையில் பாதிதான் என்பது வாங்குகிறவனுக்கே தெரிகிற நிலையில் விற்றுக்காட்டும் சாகசத்தில் நடுத்தட்டு மக்களையும் அடித்தட்டு மக்களையும் இரையாக்கி உண்ண விரும்பும் வேகமே வெளிப்படுகிறது. முந்தைய மாற்றங்களுக்கும் இன்றைய மாற்றத்துக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இது.

மலிவாகக் கிடைக்கிறவரை வாங்கி அனுபவித்துக் கொள்ள வேண்டியதுதான் என்னும் நடுத்தட்டின் மனக்கணக்கு நிறுவனங்களுக்குப் புரியாத புதிரல்ல. வாங்குதல் என்னும் தற்செயல் நிகழ்ச்சி கைப்பழக்கமாகவும் மனப்பழக்கமாகவும் மெல்லமெல்ல மாறும்வரை இந்த மலிவுவிலை நாடகம் தொடரும்.

நாடகம் முடிந்து என்றாவது ஒருநாள் ஒரு கீரைக்கட்டு பத்து ரூபாய் என்று விலைத்தாள் தொங்கவிடப்படும்போது பிரதான இலக்கான இளந்தலைமுறைக்கு அது எவ்விதமான ஆச்சரியத்தையும் தரப்போவதில்லை. கடன் அட்டையில் பதியப்படும் எண்களைக் கவனிக்கக்கூட அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

மூன்றுக்கும் பத்துக்குமான வேறுபாடு பொருள்படுத்தத் தேவையற்ற ஒன்றாக எடுத்துக்கொள்ளக்கூடிய மனநிலையைத் தொட்டுவிட்ட அவர்களுக்கு அந்த உயர்வு ஒரு விஷயமாகவே இருக்கப் போவதில்லை.

அதிர்ச்சியில் குலைந்து சொல்லிச்சொல்லி ஆதங்கப்படப்போவது நடுத்தட்டும் அடித்தட்டும் மட்டுமே. ரோஷத்தில் வெளியேறி மீண்டும் பழைய பழக்கத்தைத் தொடர ஒருபுறம் அவர்கள் மனம் இடம் தரலாம்.

ஆனால் இன்னொரு புறத்தில் பிழைப்பைத் தொடர முடியாத தள்ளுவண்டிக்காரர்களும் கூடைக்காரர்களும் பிழைப்புக்காக மாற்று வழியைக் கண்டறிந்தவர்களாக மாறிவிட்டிருப்பார்கள்.

விலை ஏறும்போது விலகிவிடலாம் என்று மாற்றுத் தந்திரத்தோடு இயங்கியவர்கள் இரண்டு பக்கங்களிலும் திகைப்பையே எதிர்கொள்ள நேரும்.

சூழல்களின் நெருக்கடிகளால் வணிகத்துறை நிர்ணயித்த இலக்குக்குக் கூடுதல் இரைகளாக இவர்களும் படிப்படியாக மாறக்கூடும்.

மாபெரும் சாகசமாக இந்த வணிகச் சாதனையைத் திரித்துக் காட்டும் ஊடகமே இன்னொரு திசையில் நிகழும் வேலை இழப்பை மாபெரும் வலியாக உருக்கமாகக் காட்டுகிறது.

சாகசம், உருக்கம் என்பன அனைத்தும் ஊடகங்கள் அவ்வப்போது அணியும் புனைவுகள். மண் மீது நிகழும் அனைத்தையும் தன் படக்காட்சிகளாக மாற்றிவிடத் துடிக்கிறது நவீன ஊடகம். உண்மையில் வணிகச்சாதனையால் உருவாகத் தொடங்கிவிட்ட சமூகவலி என்பது வேறு விதமானது.

தனியார் நிறுவனங்களின் கட்டற்ற பங்கேற்பு என்பது எவ்வித பேதங்களுமற்று எல்லாவிதத் துறைகளிலும் தன் அசுரக்கால்களை ஊன்றத் தொடங்கிவிட்ட நிலையில் இந்த உலகம் இரு பெரும் பிரிவுகளாகப் பிளவுபட்டு நிற்பது துல்லியமாகத் தெரியத் தொடங்கிவிட்டது.

இன்று பணமுள்ளவர்கள் உலகம் வேறு. பணமற்றவர்கள் உலகம் என்பது வேறு. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், களியாட்டக்கூடங்கள், உணவு விடுதிகள், விளையாட்டு மைதானங்கள், திரையரங்கங்கள் எனச் சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் பணமுள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்டுவிட்ட பெரும்பட்டியலில் இன்னோர் அம்சமாக இன்று விற்பனை நிலையங்களும் சேர்ந்துவிட்டன.

Posted in Analysis, Backgrounder, Bangalored, Call Center, City, Commodity, Communism, Compensation, Consumer, Customer, Deflation, Divide, Economy, Education, Finance, GDP, Globalization, Healthcare, Hospitals, Inflation, InfoTech, Insights, IT, Jobs, Labor, Labour, Marxism, Media, Metro, MNC, Needy, Offshoring, Op-Ed, Outsourcing, Pavannnan, Poor, Prices, Private, Recession, Reliance, Reliance Fresh, Rich, Rural, Salary, Socialism, Spinach, Stagflation, Suburban, Union, Urban, Village, Wal-Mart, Walmart, Wealth, Wealthy, Work, Young, Youth | Leave a Comment »

May Day – Labour Holiday – Workers, Socialism

Posted by Snapjudge மேல் மே 1, 2007

உலகம் போற்றும் உழைப்பின் திருநாள்

உதயை மு. வீரையன்

அமைதியான உலகம், அன்பான உறவுகள், ஆனந்தமான வாழ்க்கை – இதுதான் பெரியோர்களின் கனவு; ஞானிகளின் ஆசை; முனிவர்களின் தவம். இது ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ சமுதாயத்தில்தான் சாத்தியம்.

“எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வம் எய்தலாலே இல்லாரும் இல்லை உடையாரும் இல்லை மாதோ’ என்றார் கம்பர். ஏழை, செல்வர் என்ற வேறுபாடு இல்லாத நாட்டை அவர் அப்படி கற்பனை செய்து பார்க்கிறார்; பாடுகிறார். அதைவிடவும் பெரிதாக வளர்ந்து நிற்கும் சாதி, சமய வேறுபாடுகளை அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

ஏற்றத் தாழ்வுகள் விரிவடைந்து போவதால் புரட்சி வெடிக்கிறது. பிரெஞ்சுப் புரட்சி இப்படி ஏற்பட்டதுதான். “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்னும் தாரக மந்திரங்கள் பிறந்ததும் அப்போதுதான்.

ஆமைகளாய் – ஊமைகளாய் அடங்கிக் கிடக்கும் மக்கள் எத்தனை காலம்தான் இப்படி இருக்க முடியும்? எல்லாவற்றுக்கும் எல்லையுண்டு. “சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பது பழமொழி. பொங்கி எழும் மக்களின் எழுச்சியே புதிய சமுதாயத்தின் வளர்ச்சி; புதிய உலகத்தின் முன்னேற்றம்; புதிய மனிதனின் பிறப்பு.

தனிமனிதனாக இருந்தாலும் சரி, ஊராக தேசமாக – உலகமாக இருந்தாலும் சரி, உழைக்காமல் உயர்வு கிடையாது. “உழைத்தால் உயர்வடையலாம்; சரி, யார் உழைத்தால் யார் உயர்வடையலாம்?’ இப்படி ஒரு கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. அறிவு உழைப்பாயினும் சரி, உடல் உழைப்பாயினும் சரி, அவை சுரண்டப்படுகின்றன. அதனால் போராட்டம், கலகம், வன்முறை என இது தொடர்கிறது.

1820}30களில் அமெரிக்க முதலாளிகள் தொழிலாளர்களை வாட்டி வதைத்து ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் வேலை வாங்கினர். துயர் தாங்கொணாத சிகாகோ நகரின் ரொட்டித் தொழிலாளர்கள், 1834}ம் ஆண்டு ஒன்றுகூடி, ஒரு நாளைக்குப் பத்து மணி நேர வேலைக்குக் குரல் கொடுத்தனர். போராட்டத்தின் கடுமை தாளாமல், 1837}ல் பத்து மணி நேர வேலையென்பதை அப்போதைய அமெரிக்க அதிபர் அறிவித்தார்.

இதுவும் தொழிலாளர்களைத் திருப்தி செய்யப் போதுமானதாக இல்லாததால் 1886 மே முதல் நாளன்று அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பின் வேண்டுகோளான எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தங்கள் பெரும் எழுச்சியோடு தொடங்கின.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, லூயிஸ்வேலி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதில் 1200-க்கும் மேற்பட்ட சங்கங்கள் கலந்து கொண்டன.

சிகாகோ நகரில் “ஹேமார்க்கெட்’ சதுக்கத்தில் நடந்த கண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் எவ்வளவுபேர் கொல்லப்பட்டனர் என்பது இதுவரை வெளிவராத ரகசியக் கணக்கு. தொழிலாளர் ரத்தத்தால் “ஹேமார்க்கெட்’ சதுக்கமே குருதிக் குளமானது.

1887 நவம்பர் 11 அன்று தொழிலாளர் சங்கத் தலைவர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிஸ்ஸர் ஆகிய நால்வரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்கள் தூக்கிலிடுவதற்கு ஒருநாள் முன்னதாக 21 வயதேயான இளைஞர் லூயிஸ் லிங் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிகழ்ச்சி உலகத்தையே குலுக்கியது.

அமெரிக்கத் தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமுமே இன்றைக்கு மேதினமாக – உழைப்பாளர் திருநாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டத்தோடு இணைந்ததாக தொழிலாளர் போராட்டங்கள் அமைந்தன.

கப்பலோட்டிய தமிழன் வ.உ . சிதம்பரனார் இதில் பெரும் பங்கு கொண்டார். 1908 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற “கோரல் மில்’ தொழிலாளர்களின் போராட்டம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்தது.

1918 ஏப்ரல் 27 அன்று “மெட்ராஸ் லேபர் யூனியன்’ என்ற தொழிற்சங்கம் சென்னையில் உருவானது. இதுவே தமிழ்நாட்டில் அமைப்பு முறையில் தொடங்கப் பெற்ற முதல் தொழிற்சங்கமாகும்.

இதன் தலைவராக வாடியாவும், செயலாளராக செல்வபதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவியாக திரு.வி.க., சர்க்கரைச் செட்டியார் மற்றும் சிங்கார வேலர் ஆகியோர் செயல்பட்டனர்.

1923 மே முதல்நாள் – இந்தியாவிலேயே முதன்முதலில் மேதினத்தைக் கொண்டாடிய பெருமை சிங்காரவேலரையே சேரும். உயர் நீதிமன்றத்திற்கு எதிரேயுள்ள கடற்கரையில் இவர் தலைமையிலும், திருவல்லிக்கேணி கடற்கரையில் கிருஷ்ணசாமி சர்மா தலைமையிலும் மேதினக் கூட்டங்கள் நடைபெற்றன.

இதுவே உழைப்பாளர் வெற்றி பெற்ற உழைப்பின் வரலாறு. “உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?’ என்ற கேள்விக்கு “இல்லை’ என்பதே எக்காலத்தும் விடையாகும்.

(இன்று மேதினம்)

Posted in Analysis, Backgrounder, History, Information, Labor, Labour, Socialism, Worker, workers | Leave a Comment »

May Day 2007 – International Child Worker Day

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 30, 2007

ஊரும் தெரியாது; உறவும் புரியாது!

வசீகரன்

நம் ஒவ்வொருவர்க்குள் ஓர் அதிகாரி ஒளிந்து கொண்டிருக்கிறார்.

நாடு முழுக்க வீடுகள் இருக்கின்றன. அவரவர் வசதி, வளமைக்குத் தக்கவகையில் வீடுகள் சிறிதாகவோ, பெரிதாகவோ, ஆடம்பரமாகவோ இருக்கின்றன. வீட்டைப் பராமரிப்பது மிகப்பெரிய பணிதான். எனவே இச்சுமையைக் குறைக்க பணியாள் ஒருவரோ, ஒன்றுக்கு மேற்பட்டவரோ தேவைப்படுவர். இந்த எடுபிடி வேலைக்கு ஆள் கிடைப்பது மிகவும் சிரமம். கிடைத்தாலும் நம் விருப்பப்படி நடப்பாரா என்பது தெரியாது. எதிர்த்துப் பேசலாம். அதிக சம்பளம் கேட்கலாம்!

இந்தத் தொல்லையெல்லாம் இல்லாதவாறு ஆள் வேண்டுமே? யார் கிடைப்பார்கள்.

அப்படிக் கிடைப்பவர் வறுமையில் உழல வேண்டும். வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் இருக்க வேண்டும். ஊதியத்தை மிகக் குறைவாகக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டும். அண்டை அசலில் ஆதரவாளர்கள் யாரும் இருக்கக் கூடாது. அப்போதுதான் சொன்ன பேச்சைக் கேட்பார்கள்.

அவர்கள் யார்? குழந்தைகள்!

வறுமையின் காரணமாக துரத்தப்பட்டவர்கள். விளையாடும் பருவம் அது. ஆனால் விளையாட முடியாது. ஓடியாடும் வயது அது. ஆனால் கால்கள் கட்டப்பட்டிருக்கும். சிரித்து மகிழ அவர்களுக்குச் சுதந்திரம் கிடையாது.

கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இழுத்து வரப்பட்டிருப்பார்கள். ஏன் மாநிலம் மாறி கூட கடத்தப்பட்டிருப்பார்கள்.

ஊரை ஒழுங்காகத் தெரியாது. உறவு யாரென்றும் புரியாது. பல குழந்தைகளுக்கு மொழிகூட விளங்காது.

பங்களாக்கள், நடுத்தர இல்லங்கள் என்று அமர்த்தப்பட்டு பணியில் பம்பரமாகச் சுழன்று கொண்டிருப்பார்கள். வியர்வையும் கண்ணீருமாய் ஈரமாக இருப்பார்கள். ஆனால் வயிறு உலர்ந்து போய் இருக்கும்.

அந்த வீட்டின் எஜமானாக நாம் இருக்கிறோம். வேலை செய்ய சேர்ந்திருப்பவள் ஒரு சிறுமி. அந்தச் சிறுமியிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம்?

அதே வயதுடைய சிறுமி நம் அடுத்த வீட்டுத் தொழிலதிபரின் குழந்தையாகவோ, நம் உறவினர் ஒருவரின் வாரிசாகவோ இருந்துவிட்டால் நம் கொஞ்சலே மிக அழகாக இருக்கும்.

வேலை செய்ய வந்த சிறுமியிடமோ நம் கேள்விகள் நேரெதிராக இருக்கும்.

“”என்ன திருதிருவென்று முழிக்கிறாய். ஒழுங்காக வேலையைப் பார்!” விரட்டுவோம்.

“”சுறுசுறுப்பே இல்லையே . சரியான சோம்பேறி” என மண்டையில் குட்டுவோம்.

போனால் போகிறதென்று அளவுச்சாப்பாடு போடுவோம். இதோடு அல்ல. இன்னும் இருக்கிறது அந்தக் குழந்தைக்குக் கொடுமை.

வீடு என்றால் நாம் ஒருவர் மட்டும்தானா? சிறுசும் பெருசுமாக உருப்படிகள் ஐந்துக்குமேல் தேறாதா? அத்தனை பேர்களுமே அந்த வேலைக்கார சிறுமிக்கு பம்பரக் கயிறுகள்தான்.

ஒருவர் மாற்றி ஒருவர் வேலை சொல்லி ஆட்டுவிப்பர். ஒரே நேரத்திலேயே கூட பலரின் கட்டளைகளை ஏற்றுச் செய்வதறியாது திகைத்து நிற்பாள் அச்சிறுமி. கைக்குழந்தை உள்ள வீடு என்றால் குழந்தை தூங்கும் நேரம் போக மீதி நேரம் தூக்கிச் சுமந்து கொண்டிருக்க வேண்டும். பள்ளிக்கூடத்திலிருந்து குழந்தைகளை அழைத்து வர வேண்டும்.

அவர்கள் விளையாடுவதற்குத் தேவையான வேலைகளைச் செய்து கொடுத்துவிட்டு, விளையாட்டை வேடிக்கை பார்க்காமல் வேலை செய்ய வேண்டும். வீட்டின் உறுப்பினர்கள் கேளிக்கை தேடி வெளியில் சென்றால் வீட்டுக்கு காவலாய் இருக்க வேண்டும்.

அதே வயதுடைய நம் குழந்தை பெரிய பள்ளியில் படிக்கிறது. விதவிதமாய் ஆடை அணிகிறது. பூப்பந்து விளையாடுகிறது. திரைப்படம், கடற்கரை, கேளிக்கைத்தலங்கள் என்று அழைத்துச் செல்கிறோம். சிரித்து மகிழ்கிறது. சிறுவேலைகூட ஏவ மாட்டோம்.

இத்தனை இன்பங்களையும் தொலைத்துவிட்டு அக்குழந்தை நம் உருட்டல், மிரட்டல்களுக்கு அடிபணிந்து மிரளுகிறது. அத்தனைக்கும் ஒரு பாராட்டாவது வழங்குகிறோமா? அப்படியே பாராட்டிவிட்டாலும் கூட அது மேலும் வேலை செய்ய வைக்கும் உத்தியாகவே இருக்கும்.

ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். அங்கும் கூட அதிகாரி தாண்டவமாடும் நிலை உண்டு.

குழந்தைகளை ஏழ்மை வாட்டுகிறது. நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பசி அரக்கனின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர். ஒருவேளை சோற்றுக்காக அவர்களை வதைக்க நாம் துணியலாமா? நாம் நல்லவர்கள்தான். இது தீமை என்பதை உணராமல் செய்து விடுகிறோம். வேண்டாம் அந்த காட்டு நிர்வாகம்! பிஞ்சுக் குழந்தைகளிடமா நம் மேலாண்மையைக் காட்டுவது!

மற்ற குழந்தைகளைப்போல் அவர்கள் கற்க, விளையாட, நடக்க, சிரிக்க, உண்ண, உறங்க உரிமை உள்ளது.

உண்மையைப் புரிந்து கொண்டவர்களாயின் இனி நாம் குழந்தைகளை வேலைக்கு வைக்க மாட்டோம். ஒருவேளை வாய்ப்புக் கிடைத்தால் அக் குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தையையாவது நம் குழந்தையைப் போலவே கருதி மேற்கண்ட உரிமைகளை அக்குழந்தையும் அனுபவிக்க வழிவகை செய்யும் பொறுப்பை ஏற்கலாமல்லவா!

(இன்று சர்வதேச குழந்தைத் தொழிலாளர் தினம்).

Posted in abuse, Child, Children, Concern, Day, Employment, Exploit, Exploitation, Home, Household, International, Kid, Labor, Labour, Poor, Rich, Society, Worker | Leave a Comment »

Labour Unions – Industry workers association need to get rejuvenated

Posted by Snapjudge மேல் மார்ச் 23, 2007

துயிலெழ வேண்டும் தொழிலாளர் துறை

எஸ். சம்பத்

தொழிலாளர்களுக்கும், தொழிலக நிர்வாகிகளுக்கும் இடையே பாலமாக, சமரச அலுவலராக, நீதித்துறை இணை அதிகாரத்துடன் செயல்பட்டு பிரச்சினைகளை விரைவாக தீர்த்துவைக்க வேண்டியது தொழிலாளர் நலத்துறை.

அந்த அமைப்பு இப்போது “”அதிகாரமற்ற அமைப்பு போல” தூக்கத்தில் இருப்பதால் ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாகிவிட்டது.

தொழிலாளர் நலச் சட்டங்களிலேயே முக்கியமானது 1947-ல் இயற்றப்பட்ட தொழில் தகராறுகள் சட்டம்தான்.

தொழிலாளர்கள் தரப்பில் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி எளிதாகப் பலன்களைப் பெற முடிகிறதா என்று பார்த்தால், இல்லை என்ற பதிலே விடையாகக் கிடைக்கும். இது கடந்த பத்தாண்டு காலமாக தமிழகத்தில் நிலவும் நிலைமை.

தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவது, தொழிலாளர்களுக்கு விரோதமாகச் செயல்படுவது, தொழிலகத்தில் அமலில் உள்ள நடைமுறைகளை முன் அறிவிப்பின்றி மாற்றுவது, தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பிக்கும் தீர்ப்புகளை அமல்படுத்துவது, நிர்வாகத்துக்கும் தொழிலாளிக்கும் இடையே வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது தொழிலாளியை வேலை நீக்கம் செய்வதாக இருந்தால் (தொழிலாளர் நலத்துறையிடம்) முன் அனுமதி பெறுவது, நியாயமாக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பயன் நிலுவையைக் கோருவது போன்றவை தொடர்பாகத்தான் அடிக்கடி தகராறுகள் எழுகின்றன.

சமீப கணக்கெடுப்புகளின்படி சென்னையில் மட்டும் கடந்த ஆண்டில் சுமார் 7,600 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்தால் நூற்றுக்கணக்கில் வருகின்றன.

தொழில் தகராறு சட்டங்கள் பொருந்தி வருகிற நிறுவனங்களில் பணிபுரிகிற தொழிலாளர்கள், தங்கள் பிரச்சினைகளுக்காக நேரடியாக உயர் நீதிமன்றம் செல்ல முடியாது.

மாறாக, சமரச அலுவலர் முன்பு இப் பிரச்சினையை எழுப்பி அதில் சமரச முறிவு ஏற்பட்ட பின்னர், இதை நீதிமன்றத் தீர்ப்புக்கு விடலாமா, கூடாதா என்று அரசின் தொழிலாளர் துறை முடிவு செய்த பின்னரே வழக்கு தொடுக்க முடியும். அப்படியே தொடுத்தாலும் அந்த வழக்கில் தீர்ப்பு வர பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

அப்படியே தொழிலாளர் நீதிமன்றமோ, தீர்ப்பாயமோ ஒரு தீர்ப்பை தொழிலாளருக்குச் சாதகமாக வழங்கிவிட்டாலும், உடனடியாக நிர்வாகத்தின் தரப்பில் அதற்கு மேல் முறையீடு செய்யப்பட்டு நியாயம் கிடைப்பது மேலும் தாமதப்படுத்தப்படும்.

நடுநிலையான தொழிலாளர்துறை ஆணையர்கள் பணியில் இருந்தபோது தொழிலாளி மீதும் நிர்வாகத்தின் மீதும் தமது அதிகாரத்தை சரியாகப் பிரயோகப்படுத்தும் நிலைமை முன்னர் இருந்தது. அவற்றை நிர்வாகங்களும் ஏற்கும் நிலைமையும் இருந்தது.

இப்போது தொழிலாளி தரப்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டால், எதிர் மனுதாரராகிய நிர்வாகத்திடம் ஒருமுறைக்கு இருமுறை கேட்டுக் கொண்ட பிறகே வழக்கை விசாரணைக்கு எடுப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்யப்படுகிறது.

இதையெல்லாம் மீறி ஒரு வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்று பல வருடங்கள் வாதிட்ட பிறகு, “”அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று தீர்ப்பு வருவது தொழிலாளர்களுக்கு பேரிடியாக அமைகிறது. சமீப காலத்தில் இப்படிச் சில தீர்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

அரசு போக்குவரத்துக் கழகங்கள் தோன்றி 23 ஆண்டுகளுக்குப் பிறகு, 1995-ல் பொது நிலையாணைகள் உருவாக்கி சான்றிடப்பட்டது. அதில் சில அம்சங்களை எதிர்த்து நிர்வாகமும், தொழிற்சங்கங்களும் தனித்தனியே மேல்முறையீடு செய்தன.

கடந்த 11 வருடங்களாக தொழிலாளர் துறையால் அவை விசாரிக்கப்பட்டு முடிவுக்கு வராததால், போக்குவரத்துக் கழகங்கள் தோன்றி 34 ஆண்டுகள் ஆனபிறகும் பொது நிலையாணை ஏற்படாத அவல நிலை தொடர்கிறது.

2001-ல் போனஸ் தொடர்பான வழக்கு நிலுவையிலிருக்கும்போது போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் அனைத்திலும் சுமார் 600 பேர் வரை பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

அது தொடர்பாக, தொழில் தகராறு சட்டப்பிரிவு 33 (1) (ஏ)-ன்படி வேலை நீக்கத்துக்கு ஒப்புதல் கேட்ட மனுக்கள் மீது இன்னமும் முடிவெடுக்கப்படாமல் நிலுவையில் இருக்கின்றன. இதனால் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இந்த உதாரணம் அரசுத்துறை நிறுவனத்தைப் பொறுத்தது. தனியார் துறை தொடர்பாக எப்படி இருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.

தொழிலாளர் நலத்துறையை தட்டி எழுப்பி, நிலுவையிலிருக்கிற வழக்குகளை முடித்து வைத்தால் மட்டுமே, “”தொழில் தாவா சட்டம்” இயற்றப்பட்டதன் நோக்கம் நிறைவேறும்.

(கட்டுரையாளர்: தொழிற்சங்க நிர்வாகி).

Posted in Benefits, Biz, Commerce, Communism, Communist, employee, Employer, Employment, Factory, Finance, Fire, HR, Human Resources, Industry, Insurance, Jobs, Judge, Justice, Labor, Labour, Law, Layoff, Management, Minister, Ministry, Order, Permanent, Strike, Temporary, Union, Wages, workers | Leave a Comment »

Indian Government spends 0.035% of budgetary funds on Child Development Programmes

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

குழந்தைகள் பாதுகாப்புக்கு அற்பத் தொகையை செலவிடும் அரசு

புது தில்லி, பிப். 12: குழந்தைகள் பாதுபாப்புக்காக அற்பத் தொகையையே அரசு செலவிடுகிறது என்பது அதன் செலவின விவரத்தை ஆராய்ந்தால் தெரியவருகிறது.

ஆனால், உத்தரப் பிரதேசம் நிதாரியில் குழந்தைகள் மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நமக்கு உணர்த்துவது குழந்தைகள் பாதுகாப்புக்கு அதிக நிதியை அரசு செலவிடவேண்டும் என்பதே.

2005-06-ம் ஆண்டில் குழந்தைகள் பாதுகாப்புக்கு என பல திட்டங்களுக்கு செலவிடப்பட்ட தொகை நாட்டின் மொத்த செலவில் 0.035 சதவீதமே. இதிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் அரசு காட்டும் அக்கறை மிகக் குறைவாக உள்ளது என்பது புரியும்.

கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு பட்ஜெட் மூலம் ஒதுக்கப்படும் நிதி பற்றி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வு செய்தது.

இதன்படி குழந்தைகள் பாதுகாப்புக்காக நிதி ஒதுக்கீடு அதிகரித்துக் காணப்பட்டாலும் அது மிக குறைவானதே என்பது தெரிய வந்துள்ளது.

2005-06ல் குழந்தைகள் பாதுகாப்புக்காக பட்ஜெட்டில் 0.035 சதவீத நிதி ஒதுக்கப்பட்டது. இது 2001-02ல் 0.027 சதவீதமாக இருந்தது.

குழந்தைகள் பாதுகாப்புக்காக அற்பத்தொகையை மத்திய அரசுக்கு ஒதுக்குவது பற்றி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 2005-06ம் ஆண்டுக்கான தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.

குழந்தைகள் நல திட்டத்துக்காக பத்தாயிரம் கோடி ரூபாய் தேவை!

புது தில்லி, பிப். 17: குழந்தைகள் நல திட்டத்துக்காக மத்திய பட்ஜெட்டில் இம் முறை பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடமும் திட்டக்குழுவிடமும் முறையிட்டிருக்கிறார் மகளிர்-குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் ரேணுகா செüத்ரி. மத்திய பட்ஜெட்டில் தொழில்வாரியாக, பிரதேச வாரியாக, சமூகவாரியாக முக்கியத்துவம் தந்து நிதி ஒதுக்கக் கோரிக்கைகள் வந்துள்ளன. ஆனால் குழந்தைகளுக்கென்று தனி முக்கியத்துவம் தந்து போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரேணுகா தான் முதலில் வலியுறுத்தியுள்ளார்.

“குழந்தைகள் நலம் என்பது சாதாரண விஷயம் அல்ல; சமுதாயத்தின் முக்கிய அங்கமான குழந்தைகள்தான் மனித ஆற்றல் வளத்தில் முக்கிய பங்குதாரர்கள். எதிர்காலம் அவர்களைத்தான் நம்பியிருக்கிறது. இப்போது நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் 14 வயதுக்கு உள்பட்டவர்கள். 2020-ல் நமது நாடு இந்தத் தலைமுறையினரைத்தான் பெரிதும் சார்ந்திருக்கப் போகிறது. எனவே இப்போதே அவர்களுடைய நலனுக்கு சிந்தித்து செலவு செய்வது நல்லது.

“ஊட்டச் சத்து இல்லாத குழந்தைகளை வளரவிட்டு, பிறகு அவர்களுக்கு ஊட்டச் சத்து வழங்குவதற்கும், நோய்த்தடுப்பு மருத்துகளைத் தருவதற்கும் அரசுக்கு 3 மடங்கு செலவாகிறது. அதற்குப் பதிலாக சிறு வயதிலேயே அவர்களுக்கு சத்துள்ள உணவு கிடைக்க செலவிடுவது நிரந்தரப் பலன்களைத்தரும்.

“2005-06-ல் மத்திய பட்ஜெட்டில் குழந்தைகள் நலனுக்காக என்று மொத்தம் ரூ.3,550 கோடி மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. இது மொத்த பட்ஜெட் செலவில் 0.69 சதவீதம்தான். அதாவது ஒரு சதவீதம் கூட இல்லை.

மத்திய அரசு மட்டும் அல்ல, மாநில அரசுகளும் குழந்தைகளின் நலனுக்காக என்று தனி ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி எல்லா மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்.

குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அரசு அதிக அளவில் செலவிட வேண்டும். ஊட்டச் சத்து குறைவாக உள்ள குழந்தைகளின் சுகாதாரத்தை மேம்படுத்த, முதலில் செய்திருக்கக்கூடிய சாதாரணச் செலவைப் போல 32 மடங்கு செய்ய வேண்டியிருக்கிறது என்று அரசின் ஆய்வு தெரிவிக்கிறது. எனவே முதலிலேயே குழந்தைகள் நலனுக்கு நேரடியாகச் செலவிடுவது நல்லது. குழந்தைகளின் ஊட்டச்சத்து, படிப்பு என்று தனித்தனியாகவோ, அல்லது தவணை முறையிலோ செலவிடாமல், குழந்தை வளர்ப்பின் அனைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கி அதை அமல் செய்வது அவசியம். எங்களுடைய அமைச்சகம் அத்தகைய திட்டத்தைத் தயாரித்துவருகிறது.

இப்போதுள்ள அங்கன்வாடிகளையும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களையும் எல்லா மாவட்டங்களிலும் தொடங்க விரும்புகிறோம். குழந்தைகளின் ஊட்டச்சத்தை, குறைபாடுள்ள பகுதிகளில் மட்டும் மேம்படுத்தாமல் எல்லா பகுதிகளிலும் மேம்படுத்த திட்டம் தீட்டியிருக்கிறோம். எனவே இவற்றுக்கெல்லாம் மேலும் அதிக நிதி தேவைப்படுகிறது. இதை மத்திய நிதி அமைச்சகத்திடமும், திட்டக் குழுவிடமும் கேட்டிருக்கிறோம்’ என்றார் ரேணுகா செüத்ரி.

=============================================================
அமலுக்கு வந்து 6 மாதங்களாகியும் ஏட்டுச் சுரைக்காயாக செயலற்றுக் கிடக்கும் குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம்

புதுதில்லி, ஏப். 10: வீடுகளில் சிறார்களை பணிக்கும் அமர்த்தும் போக்கு இன்னும் தொடர்கிறது. அமலுக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் ஏட்டுச் சுரைக்காயாக செயலற்றுக் கிடக்கிறது குழந்தைத் தொழிளாளர் தடைச் சட்டம்.

உலகிலேயே குழந்தைத் தொழிலாளர்கள் மிகுந்த நாடு இந்தியாதான். இங்கு, சமூக அக்கறையற்ற நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகச் சிந்திப்பதற்குப் பதிலாக அதை ஊக்குவிக்கும் போக்கு உள்ளது.

தில்லி, சென்னை போன்ற பெருநகரங்களின் பங்களாக்களில், நடுத்தர வர்க்க வீடுகளில் தரை துடைக்க, வீடு கழுவ, பத்துப் பாத்திரம் தேய்க்க சிறுமிகளை வேலைக்கு அமர்த்தும் போக்கு சர்வ சாதாரணமாக உள்ளது.

துள்ளித் திரிந்து படித்து மகிழும் வயதில் சிறுவர், சிறுமியர்க்கு வீட்டு வேலை என்பது கொடூரமல்லவா? ஆனால் “செல்வச் செழிப்புள்ள அல்லது நன்கு பணம் சம்பாதிக்கும், கல்வி கற்ற, நவீனமான, சிறார் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுள்ள மனிதர்கள்தான் சிறார்களை வேலைக்கு அமர்த்துகின்றனர் என்பது வேதனையான உண்மை’ என்கிறார் யுனிசெஃப் அமைப்பைச் சேர்ந்த கார்லட்டோ பார்கரோ.

தொழிற்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் பிற ஆபத்தான பணிகளில் 14 வயதுக்குட்பட்ட சிறார்களை பணிக்கு அமர்த்துவதை 1986-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் தடை செய்கிறது. 1986-லேயே குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம் வந்து விட்டாலும், வீடுகள் மற்றும் உணவகங்களில் சிறார்களை வேலைக்கு அமர்த்தும் விவகாரத்தில் கடந்த சில ஆண்டுகளாகத்தான் கவனம் திரும்பியுள்ளது.

“நீதித்துறை மற்றும் அதிகார வர்கத்தைச் சேர்ந்த பலரது வீடுகளில் சிறார்களை வேலைக்கு வைத்திருப்பது எந்த விதத்திலும் வியப்புக்கு இடமில்லாத சாதாரணமான செய்தி’ என்கிறார் குழந்தை உரிமைகளுக்காகப் போராடும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்.

குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தை மீறுபவர்களுக்கு ரூ.20 ஆயிரம் வரை அபராதம், 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை என்பது வலிமையான ஆயுதமாகத் தோன்றினாலும் அதிகாரிகள் அதை ஏன் பிரயோகிப்பதில்லை?

“இந்தத் தடை அமலுக்கு வந்து சில மாதங்களே ஆகியுள்ளது. முதல்கட்டமாக, பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்கள் வழியாக தொடர் பிரசாரத்தின் மூலம் இது குறித்து விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை செய்துள்ளோம். இதன் பிறகே மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு எங்களுக்கு சிறிது அவகாசம் வேண்டும்’ என்கிறார் தொழிலாளர் துறையைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி.

அரசு ஊழியர்கள் தங்கள் வீடுகளில் சிறார்களை பணிக்கு அமர்த்தக் கூடாது என்ற விதி 1999-ல் இருந்து அமலில் உள்ளது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் இது தொடர்பாக ஒரு வழக்குக் கூட பதிவாகவில்லை. தங்கள் கடமையைச் சரிவரச் செய்யாத ஆய்வாளர்களுக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது? சட்டத்தின் அமல் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடக்கூடாது? பிரச்சினை என்னவெனில் ஆய்வாளர்களைப் பொருத்தவரையில் இந்தக் கணக்கெல்லாம் காட்ட வேண்டியதில்லை.

அது மட்டுமன்றி, குழந்தைத் தொழிலாளர் முறை என்பது தனித்த பிரச்சினை அல்ல. தொழிலாளர், கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
=============================================================

Posted in Analysis, Anganwadi, Backgrounder, Budget, Child Abuse, Child Protection, Child Welfare, Children, Development Funds, Domestic, Economy, Finance, Healthcare, Help, History, Household, HR, Human Resources, Kid, Kids, Labor, Labour, Law, Nutrition, Order, Percentage, Plan, Police, Reference, Renuka Choudhry, Renuka Chowdhry, Rich, Schemes, Society, UNICEF, Welfare | 1 Comment »

Solutions – K Loganathan: Strategy & Planning required for improvement in Village Life

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

தேவை கிராமப்புற வாழ்விட கொள்கை

கே. லோகநாதன்

ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்பது அனைத்துத் தரப்பு மக்களின், குறிப்பாக, அடித்தள ஏழை மக்களின் முன்னேற்றத்தை வைத்தே மதிப்பிடப்படும்.

11 ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றியும்கூட, கிராமப்புறங்களில் வாழ்விட வசதி என்பது பெயரளவில்தான் உள்ளது.

நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் கிராமப்புறங்களில்தான் வசிக்கின்றனர். ஆனால் அவர்களின் முன்னேற்றத்தில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை.

ஐந்தாண்டுத் திட்டங்களில் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. தொழிற்துறை வளர்ச்சியை மட்டுமே பிரதான குறிக்கோளாகக் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டன.

இந்தியாவைப் பொறுத்தமட்டில், வாழ்விட முன்னேற்றம் என்பது மக்களின் நடவடிக்கையாகவே இருந்து வருகிறது. பழைய வீடுகளை பழுதுபார்த்தலும் விரிவுபடுத்துதலும் நடைபெற்று வருகின்றன. பணவசதி இருப்பவர்கள் மட்டுமே புதிய வீடுகளை கட்டிக் கொள்கின்றனர். நகர்ப்புறங்களில் உள்ளதைப் போன்று அரசுத் தரப்பில் கிராமப்புறங்களில் வாழ்விட முன்னேற்றத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை. இதனால் கிராமமக்கள் குடிசைகளிலும் அடிப்படை வசதியற்ற வீடுகளிலும் வாழ வேண்டிய நிலையில் இருந்து வருகின்றனர்.

ஆனால் செல்வந்த நாடுகளிலும் வளர்ச்சி பெற்றுவரும் நாடுகளிலும் கிராமப்புற வாழ்விட முன்னேற்றத்தில் அரசுகளின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் வாழ்விட முன்னேற்றத்துக்கும் நேரடியான தொடர்பு உண்டு. இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

நமது நாட்டில் வீடற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப வாழ்விட கொள்கைத் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.

கிராமப்புறங்களில் வீட்டுவசதி பற்றாக்குறை 65 சதவீதமாக உள்ளது. வாழ்வாதாரமான வாழ்விட கொள்கைத் திட்டம் குறித்து பரந்த அளவிலான கண்ணோட்டம் அரசிடம் இல்லை. 1998-ல் தேசிய வாழ்விட கொள்கை வெளியிடப்பட்டது. ஆனால் வழக்கம்போல் இதிலும் கூட கிராமப்புறங்களின் தனித்தன்மை மற்றும் அங்குள்ள மக்களின் தேவைகள் குறித்து தெளிவாக ஏதும் குறிப்பிடப்படவில்லை.

கிராமங்களில் ஏழ்மை தாண்டவமாடுவதற்கு விவசாயப் பொருளாதாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டதே முக்கியக் காரணம். இதன் விளைவாக கிராமங்களில் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. கிராமமக்கள் வேலைவாய்ப்பு தேடி நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்வது அதிகரித்துவிட்டது. இதனால் பெருநகரங்களில் மக்கள் நெருக்கம் அதிகரித்து வருகிறது.

இதற்குத் தீர்வுதான் என்ன?

கிராமப்புறப் பொருளாதாரத்தை முன்னேற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும். வாழ்விட கொள்கை என்பதை வெறும் கட்டுமான நடவடிக்கையாக கருதிவிடக்கூடாது. வாழ்விட கொள்கைக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் நேரடித் தொடர்பு உண்டு. வீடு கட்டும் தொழில் மறைமுக வேலை வாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்கும்.

கட்டுமானத் துறையில் மட்டும் நாட்டின் 16 சதவீத தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதனைக் கொண்டே “வீடு கட்டுதல்’ என்பது நாட்டின் முன்னேற்றத்தோடு நேரடியாகச் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை அறியலாம். கிராமப்புறங்களில் 22 சதவீத மக்களுக்குக் குடிநீர் வசதி இல்லை. சுமார் 67 சதவீத மக்களுக்கு சுகாதார வசதி இல்லை. எனவே, கிராமப்புறங்களுக்கென பிரத்தியேக வாழ்விட கொள்கை தேவை.

மத்திய, மாநில அரசுகள், கிராமப் பஞ்சாயத்துகள், பொதுநல அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், நிதியுதவி நிறுவனங்கள், தொழில்நுட்ப மையங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும் விதத்தில் தேசிய கிராமப்புற வாழ்விடக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.

வாழ்விடம் (இருப்பிடம்) என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகும். இதற்கேற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசின் முக்கியக் கடமையாகும்.

Posted in Analysis, City, Dinamani, Divide, Economy, HR, Human Resources, improvement, K Loganathan, Labour, Life, Luxury, Necessity, Op-Ed, Opinion, Planning, Poor, solutions, Strategy, Village | Leave a Comment »

Trade union strike shuts down three communist-ruled states

Posted by Snapjudge மேல் திசெம்பர் 14, 2006

பொது வேலைநிறுத்தத்துக்கு நாடு முழுவதும் ஓரளவு ஆதரவு: மேற்கு வங்கம், கேரளத்தில் முழு வெற்றி – ரூ.2000 கோடி இழப்பு: “அசோசெம்’ தகவல்

புது தில்லி, டிச. 15: மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பொருளாதார மற்றும் தொழிற் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதித்தது.

குறிப்பாக இடதுசாரிகள் ஆளும் மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களில் வேலைநிறுத்தம் முழு அளவில் நடைபெற்றது.

அமைப்புசாரா துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு விரிவான சட்டம் இயற்றுவது, அரசுப் பணிகளை அவுட்சோர்சிங் முறையில் நிறைவேற்றுவதைத் தடை செய்வது, லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தத்துக்கு இடதுசாரிகள் அழைப்பு விடுத்திருந்தன.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் ரயில், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. அதேபோல் மருந்து தயாரிக்கும் நிறுவன ஊழியர்கள் மற்றும் சிறு வணிகர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

நாட்டின் சில இடங்களில், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில்லறை வணிகர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

குறிப்பாக மேற்கு வங்கத்தில் சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மாநிலத்தில் தொழில் நகரங்களான பாரக்பூர், துர்காபூர் மற்றும் ஹூக்ளியில் தொழிற்சாலைகள் முற்றிலும் மூடப்பட்டிருந்தன. விவசாயிகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். நிலக்கரி சுரங்கங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தேயிலைத் தோட்டங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

இந்த வேலைநிறுத்தத்தில் அனைத்துத் தரப்பினரும் தாங்களாகவே முன்வந்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கது என்று சிஐடியு.வின் மேற்கு வங்க மாநிலத் தலைவர் ஷியாமளா சக்கரவர்த்தி தெரிவித்தார். அதேசமயம் மாநிலத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எவ்வித பாதிப்புமின்றி வழக்கம்போல் இயங்கின.

கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தில் வேலைநிறுத்தம் முழு அளவில் நடைபெற்றதால் ரூ.2000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில்துறை கூட்டமைப்பான “அசோசெம்’ தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள 39 ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகள் மற்றும் தபால்துறைப் பணிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் அமைப்பு ரீதியிலான தொழிலாளர்கள் 30 லட்சம் பேர் பங்கேற்றனர். மாநிலத்தில் தடையுத்தரவை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற 25 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

பொது வேலைநிறுத்தம்: திருப்பூரில் ரூ.30 கோடி உற்பத்தி பாதிப்பு

திருப்பூர், டிச. 15: மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை நடந்த பொது வேலை நிறுத்தத்தின் காரணமாக திருப்பூரில் 60 சதத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் செயல்படாததால் சுமார் ரூ.30 கோடி மதிப்பிற்கு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த பொது வேலைநிறுத்தத்தால் திருப்பூரில் 60% பனியன் நிறுவனங்கள், சார்பு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. நகரில் நடந்த பொது வேலைநிறுத்தத்திற்கு சிஐடியூ, ஏஐடியூசி ஆகிய 2 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.

எம்எல்எப், ஏடிபி, ஐஎன்டியூசி, எல்பிஎப் ஆகிய தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்கவில்லை.

பொது வேலைநிறுத்தத்தினால், பனியன் நிறுவனங்களில் சுமார் ரூ.30 கோடிக்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஒருநாள் சம்பள இழப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கிகள் முழுஅளவில் செயல்படாததால், அன்னியச் செலாவணி பரிமாற்றமும் தடைப்பட்டது.
பொது வேலைநிறுத்தம்: 38 ஆயிரம் பேர் கைதாகி விடுதலை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை

சென்னை, டிச. 15: தமிழகம் முழுவதும் நடந்த பொதுவேலை நிறுத்தம் தொடர்பான மறியல் போராட்டத்தில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் நடந்த மறியல் போராட்டத்தில் 4,417 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

பொது வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பெரும்பாலான பஸ்கள், ஆட்டோக்கள் ஓடின. மாநில அரசு அலுவலகங்கள் பெரும்பாலும் வழக்கம் போல் இயங்கின.

ஆனால் வங்கி, இன்சூரன்ஸ் அலுவலங்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து, தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

மாநிலம் முழுவதும்: மாநிலம் முழுவதும் 340 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. 13 இடங்களில் ரயில் மறியல் நடந்தது. இதுதொடர்பாக, 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மறியல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் சிவபுண்ணியம், உலகநாதன், ராஜசேகரன் ஆகியோர் கைதாகினர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

சென்னையில் அண்ணா சாலை, அண்ணா சிலை, தி.நகர், பாரிமுனை, குன்றத்தூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் மேற்கொண்டனர்.

Posted in Activists, AITUC, Arrest, Banks, Chennai, CITU, Communism, Communist parties, Communists, CPI, CPI(M), Disruption, Economy, Factory, Finance, Imapct, India, Insurance, Kerala, Kolkata, Labor, Labour, Law, Left, Madras, Mraxist Communist, Order, Orissa, Police, PSU, SBI, Strike, Tamil, Tiruppur, trade unions, Tripura, unemployment, UPA, WB, West Bengal, Worker | Leave a Comment »

Haniya cuts short Arab tour amid Hamas-Fatah tension

Posted by Snapjudge மேல் திசெம்பர் 14, 2006

பாலத்தீனப் பிரதமர் காசா செல்வதை தடுத்தது இஸ்ரேல்

பாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா
பாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா

மத்திய கிழக்கில் காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலுள்ள ரஃபாஹ் பாதையை ஹமாஸ் தீவிரவாதிகள் தகர்த்துள்ளார்கள்.

பாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா காசாவிற்கு திரும்புவதை தடுப்பதற்காக இஸ்ரேல் அந்த எல்லைப்புறப் பாதையை மூடியது.

அந்த எல்லையின் பாலத்தீனப் பகுதியில் உள்ள நிலையை தகர்த்து சென்ற ஹமாஸ் தீவிரவாதிகள் அவர்கள் தற்போது அதனை முழுமையாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார்கள்.

காசா பகுதிக்குள் 30 மில்லியன் டாலர் பணத்தை இஸ்மாயில் ஹனியா எடுத்துச் செல்வதை தவிர்க்கும் முகமாகத்தான் இந்த எல்லை மூடப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக ஹமாஸ் தலைமையிலான பாலத்தீன நிர்வாகம் தனது பல ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க இயலாத நிலையில் உள்ளது.

————————————————————————————–

புதுப்பிக்கப்பட்ட நாள்: 13 ஜூன், 2007 – பிரசுர நேரம் 16:40 ஜிஎம்டி

காசா மோதல்கள் மேற்குக்கரைக்கும் பரவியுள்ளன

காசாவில் நடக்கும் கடுமையான மோதல்கள் இப்போது மேற்குக்கரை நகரான நப்லஸுக்கும் பரவியுள்ளன.

அங்கு ஹமாஸ் அமைப்பினருக்கும், பத்தா அமைப்புக்கு ஆதரவான அல் அக்ஸா பிரிகேட் உறுப்பினர்களுக்கும் இடையில் மோசமான துப்பாக்கி மோதல்கள் இடம்பெற்றதை பிபிசி செய்தியாளர் பார்த்திருக்கிறார்.

காசாவில், பிராந்தியம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித்தடைகள், தான் அந்த ஸ்தம்பித நிலையில் இருந்து தப்பிவருவதற்கு தடையாக இருந்ததாக உள்ளூர்வாசி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தெற்கு காசாவில் பத்தா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்புச் சேவையின் கட்டிடம் ஒன்றை ஹமாஸ் அமைப்பினர் வெடிவைத்துத் தகர்த்ததில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பின் மீது, ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய கிழக்குக்கான மூத்த இணைப்பாளர் மைக்கல் வில்லியம்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.


சண்டைகளை நிறுத்துமாறு பல தரப்பினரும் கோரிக்கை

 

காசாவில் தற்போது இடம்பெறுகின்ற, குறைந்தது 60 பேர் பலியாகக் காரணமான சண்டைகளை, மூடத்தனமான சண்டை என்று வர்ணித்துள்ள பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அவர்கள், சண்டையில் ஈடுபடும் தரப்பினரை மோதலை நிறுத்துமாறு கோரியுள்ளார்.

பத்தா அமைப்புக்குத் தலைமை தாங்கும் அப்பாஸ் அவர்கள், இந்த வன்செயல்கள் காசாவை ஒரு வீழ்ச்சி நிலைக்கு இட்டுச் செல்லலாம் என்று கூறியுள்ளார்.

இந்தச் சண்டைகள் பாலத்தீனர்களின் லட்சியத்துக்கு ஒரு அழிவாக அமையும் என்று அரபு லீக்கின் தலைவரான அம்ர் மௌஸா கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ரஷ்யா ஆகியவையும் மோதல் நிறுத்தம் தேவை என்று கோரியுள்ளன.

காசாவில் தமது பாலத்தீன நிவாரணப் பணியாளர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு தமது நிவாரணப் பணிகளை இடைநிறுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.


இஸ்ரேலிய அதிபரானார் ஷிமொன் பெரஸ்

பெரஸ்
பெரஸ்

இஸ்ரேலின் மூத்த அரசியல்வாதியான ஷிமோன் பெரஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்று வாக்கெடுப்புக்குப் பிறகு அந்த நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முதல் சுற்றில் பெரஸ் அவர்களுக்கு அதிக அளவு வாக்குகள் கிடைத்ததன் காரணமாக, அவரை எதிர்த்து நின்ற இரண்டு வேட்பாள்களும் போட்டியில் இருந்து விலகிக் கொண்டனர்.

பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறை தொடர்பான பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியதன் பிறகு, தற்போதைய இஸ்ரேலிய ஐனாதிபதி மோஷே கட்சவ், பணிக்கு செல்லாமல் விடுப்பில் உள்ளார்.

7 ஆண்டுக்கு முன்பு நடந்த தேர்தலில் ஆளும் கதீமா கட்சியைச் சேர்ந்த பியர்ஸ், காட்சவ்விடம் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 16 ஜூன், 2007 – பிரசுர நேரம் 15:02 ஜிஎம்டி

பாலஸ்தீன நாடாளுமன்றத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர் ஃபத்தா அமைப்பினர்

மேற்குக்கரை நகரான ரமல்லாவில் உள்ள பாலத்தீன நாடாளுமன்ற கட்டிடத்தில் ஃபத்தா பிரிவைச் சேர்ந்த ஆயுதபாணிகள் அதிரடியாக நுழைந்தனர்.

அந்தக் கட்டிடத்தில் தமது கொடியை ஏற்ற முனைந்த பத்தா ஆதரவாளர்களைத் தான் தடுக்க முனைந்த போது, தன்னை அவர்கள் அடித்துத் தாக்கியதாக ஒரு சுயேச்சையான துணை சபாநாயகர் பிபிசி க்கு கூறியுள்ளார்.

அந்தக் கட்டிடத்தில் இருந்த கல்வி அமைச்சு உட்பட ஹமாஸுடன் தொடர்புடைய அதிகாரபூர்வ கட்டிடங்களையும் மற்றும் நப்லஸில் உள்ள நகரக் கவுன்ஸில் கட்டிடத்தையும் ஃபத்தா போராளிகள் துவம்சம் செய்தனர்.

ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட காசாவில், தற்போது அமைதி நிலவுகிறது, ஆனால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.


Posted in Arab, Arms, Avital, Award, Blast, Bombs, Britain, Colette, Colette Avital, Crisis, dead, Erez, Escalation, Fata, Fatah, Fatha, Fathah, Freedom, Galilee, Gaza, Hamas, Haniya, Independence, Ismail Haniyeh, Israel, Jerusalem, Jimmy Carter, Kadima, Katsav, Knesset, Labor, Labour, Leader, Likud, Mid-east, Middle East, Moshe, Moshe Katsav, Negev, Nobel, Nuclear, Palestine, Palestine: Peace Not Apartheid, Party, Peace, Peres, Perez, PM, Poland, President, Prez, Prime Minister, Prize, Rafah, Reuven, Reuven Rivlin, Rivlin, Shimon, Simon, Simone, UK, Violence, War, Weapons, WWII | 1 Comment »