சிலம்பொலி செல்லப்பனுக்கு சிறந்த தமிழறிஞர் விருது
மணிவாசகர் பதிப்பக நிறுவனர் ச.மெய்யப்பனின் பவள விழாவை முன்னிட்டு மெய்யப்பன் அறக்கட்டளை சார்பில் சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா சிதம்பரம் கீழவீதி ராசி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரு.இலக்குமணன் தலைமை வகித்து விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்குகிறார். விழா நிறைவில் சாலமன் பாப்பையா தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது. விழாவில் சிலம்பொலி செல்லப்பனாருக்கு சிறந்த தமிழறிஞர் விருது ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.
2006-ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் நூல்களான பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி எழுதிய “தமிழ் வளர்ச்சி -மேம்பாடு + பயன்பாடு = வளர்ச்சி’ என்ற நூலும், நரசய்யா எழுதிய “மதராசபட்டணம்-ஒரு நகரத்தின் கதை’ என்ற நூலும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு ரூ.5 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படுகிறது.
சிறந்த நூல்களைப் பதிப்பித்த பாரதி பதிப்பகம், பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை மெய்யப்பன் பதிப்பக உரிமையாளர் ச.மெ.மீனாட்சிசோமசுந்தரம் செய்துள்ளார்.