Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Kushboo’ Category

‘Where is the sanctity for personal space & opinions?’ – Actress Kushbu

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

தனி மனித சுதந்திரம் எங்கிருக்கிறது? குஷ்பு ஆவேசம்

சென்னை, ஜூன் 19: இந்தியாவில் தனி மனித சுதந்திரம் என்பது துளிகூட கிடையாது. அதிலும் கருத்துச் சுதந்திரம் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் இந்தியாவில் வளர்ச்சி என்பதே சாத்தியமில்லை என்று நடிகை குஷ்பு ஆவேசமாகக் குறிப்பிட்டார்.

சென்னையில் இந்தியத் தொழில் வர்த்தக சபை சம்மேளனத்தின் (ஃபிக்கி) மகளிர் பிரிவு “நீதி -உரிமையா அல்லது சலுகையா?’ என்ற தலைப்பில் கருத்தரங்கை திங்கள்கிழமை நடத்தியது. இதில் பங்கேற்று நடிகை குஷ்பு பேசியது:

“”நீதி என்பது உரிமையா? அல்லது சலுகையா? என்று கேட்டால் அது சாதாரண மக்களுக்கு உரிமை, அதேசமயம் பதவியில் உள்ளவர்களுக்கு சலுகை என்றே கூற வேண்டும்.

கருத்துச் சுதந்திரம் இந்தியாவில் உண்டு என்றால், எனது கருத்தைத் தெரிவித்ததற்காக என்மீது 32 வழக்குகள் போடப்பட்டுள்ளதே, அது ஏன்? இவற்றில் 8 வழக்குகள் மட்டுமே முடிவுற்றுள்ளன. எஞ்சியுள்ள 24 வழக்குகள் எப்போது முடிவடையும் என்றே தெரியாது.

கொலைக் குற்றவாளிக்கு பிறப்பிக்கப்படுவதைப் போல ஜாமீனில் வெளிவர முடியாத (என்பிடபிள்யூ) வாரண்ட் எனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டது. அதுவும் வெள்ளிக்கிழமை மாலை.

எவ்வித அறிவிப்பும் இன்றி திங்கள்கிழமை மாலை நீதிமன்றத்தில் ஆஜரானபோது, செவ்வாய்க்கிழமை காலை ஆஜராகுமாறு என்னிடம் கூறப்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலை நீதிமன்றம் வந்தபோது, அங்கு கூடியிருந்த போதையிலிருந்த அரசியல்வாதிகளும் அவர்களுடைய ஆதரவாளர்களும் ஆத்திரத்தோடு செருப்புகளையும் முட்டைகளையும் தக்காளியையும் என் மீது வீசினர். போலீஸôர்தான் என்னை அவர்களிடமிருந்து காத்தனர்.

ஜெஸ்ஸிகா லால் கொலை வழக்கில் தீர்ப்பு வருவதற்கு 8 ஆண்டு காலம் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. இது சாதாரண பாமரனுக்கு சாத்தியமா?.

எனக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலுவாக உள்ள வட மாவட்டங்களில்தான் தொடுக்கப்பட்டுள்ளன.

முதலில் பெண்களுக்கெதிரான பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எது சரி, எது தவறு என்று அவர்களிடம் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

பிகாரில் 2 வயது சிறுவனுக்கெதிரான வழக்கு. அவன் 26 வயது பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக அந்த வழக்கு. 6 ஆண்டுகளாக நடைபெறுகிறது. இப்போது 8 வயதாகும் அச்சிறுவன் தொடர்ந்து நீதிமன்றம் முன் ஆஜராகிறான், தன் மீது எத்தகைய வழக்கு சுமத்தப்பட்டுள்ளது என்றே அவனுக்குத் தெரியவில்லை. பிகாரில் மட்டும் அல்ல, பல இடங்களில் இதுதான் நிலை. இந்த நிலை தொடரும்போது இந்தியா எப்படி வளர்ச்சி அடையும்” என்று கேட்டார் குஷ்பு.

Posted in Censor, Censorship, Crime, Freedom, India Today, Jail, Kusbu, Kushboo, Kushbu, Law, Media, Opinions, Order, Police, Prison, Thoughts, Today | Leave a Comment »

Periyar Movie Celebrations – Processions, Theater Specials

Posted by Snapjudge மேல் மே 2, 2007

சாரட் வண்டியில் “பெரியார்’ ஊர்வலம்

ஈரோடு, மே 2: ஈரோட்டில் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் “பெரியார்’, “ராவணன்’ வேடமணிந்து திராவிடர் கழகத்தினர் ஊர்வலம் சென்றனர்.

தமிழகம் முழுவதும் பெரியார் திரைப்படம் மே 1-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பெரியாராக நடிகர் சத்யராஜ், மணியம்மையாக குஷ்பு நடித்துள்ளனர். பெரியார் திரைப்படம் வெளியானதையொட்டி தி.க.வினர் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை கொல்லம்பாளையத்தில் இருந்து தேவி அபிராமி திரையரங்குக்கு ஊர்வலமாகச் சென்றனர்.

குதிரை பூட்டிய சாரட் வண்டியில் திராவிடர் கழக ஈரோடு நகரச் செயலர் தியாகு பெரியார் வேடமணிந்தும், இளைஞர் அணி அமைப்பாளர் ராசு ராவணன் வேடமணிந்தும் சென்றனர்.

ஊர்வலம் கொல்லம்பாளையம், காளைமாட்டுச் சிலை, மணிக்கூண்டு, பஸ்நிலையம் வழியாக திரையரங்கை அடைந்தது. பெரியார், ராவணன் வேடமணிந்தவர்கள் சாரட் வண்டியில் செல்வதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். திரையரங்கில் பெரியார், ராவணன் வேடமணிந்தவரை தி.க.வினர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

Posted in Celebrations, Cinema, Fan, Fan Clubs, Kushboo, Kushbu, Manram, Movie, Periyar, Rasigar, Rasikar, Ravanan, Sathyaraj, Satyaraj, Tamil Cinema, Tamil Movie, Tamil Movies, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Theater, Tamil Theatres, Theater, Theatre | 1 Comment »

‘Lyricist Snehan is raping Tamil culture by innovative marriage ceremonies’

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

கற்பை கொச்சைப்படுத்துவதாக எதிர்ப்பு: கவிஞர் சினேகன் வீட்டில் முற்றுகை போராட்டம்

சென்னை, மார்ச்.16-

பறையர் பேரவை பொதுச் செயலாளர் ஏர்போர்ட் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கவிஞர் சினேகன் டைனமிக் திருமணம் என்ற பெயரில் புதுக்கோட்டை கொத்தமங்களம் கிராமத்தில் திருமணம் நடத்தி வைத்துள்ளார். திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக்கொள்ள ஒருவரை முறையே இல்லாமல் புரட்சி சிந்தனை என்ற பெயரில் காமகளியாட்ட கேவலங்களை தலைமையேற்று நடத்தியுள்ளார்.

நடிகை குஷ்பு, கற்பு பற்றியும் தமிழக ஆண், பெண்கள் பற்றி கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை உண்டு பண்ணியது. அதைவிடமோசமாக தற்போது தமிழர்களின் கலாச்சாரத்தை ஒழித்துக்கட்ட கவிஞர் சினேகன் இன்று முற்படுகிறார்.

கற்புக்கு இலக்கணம் கண்ட முன்னோடி இனமே தமிழினம்தான். பெண்ணானவள் தானாக தனித்துப் போராடி பெற்ற அவளுக்கு மட்டுமேயான உரிமையே கற்பு என்னும் உரிமை, அதை ஆண் அப்பெண்ணின் மீது திணிக்கவில்லை. ஆய்வுகள் இப்படி இருக்க தமிழர்களின் கற்பு நெறியை கொச்சைப்படுத்தும் விதமாக சினேகன் பேச்சும் பேட்டிகளும் அமைந்துள்ளன.

கட்டிப்பிடித்து மகிழ்ந்தால் கற்பு பறிபோய் விடுமா? தொடுவதால் கற்பு என்கிற புனிதம் தொலைந்து போய்விடும் எனச் சொன்னால், கற்புள்ளவர்களை விரல்விட்டு எண்ணி விடமுடியும். தமிழகத்தில் எத்தனை ஆண்கள் ஒருத்திக்கு ஒருவனனாக இருக்கிறார்கள்? என ஒட்டுமொத்த தமிழர்களையும் தமிழ் கலாச்சாரத்தையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறார்.

திரைப்படங்களில் பாடல்கள் எழுதும்போது பெண்களை பாலியல் வக்கிரங்களாய் உருவகப்படுத்தி, சின்னவீடா வரட்டுமா? பெரியவீடா வரட்டுமா? கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிகிலாமா? என இளைஞர்களை தவறான பாதையில் திசை திருப்புவது போல பாடல் எழுதிவரும் கவிஞர் சினேகன் போன்ற பன்னாட்டு உலகமயமாக்கல் ஏஜென்டுகளாய் தமிழர் கலாச்சாரத்தை சீரழிக்கும் சக்திகளுக்கு சரியான பாடம் புகட்டுவோம்.

வரும் 22.03.07 அன்று காலை 11.00 மணிக்கு பறையர் பேரவை சார்பில் 100 இளைஞர்கள், கோயம்பேடு வணிகவளாகம் அருகில் வெங்கடேசுவரா பிரதான சாலை, விருகம்பாக்கத்தில் உள்ள சினேகன் வீட்டிற்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Posted in Airport Murthy, Arts, Audio, Ceremony, Cinema, Conservative, Culture, Culture Police, Films, Heritage, Kiss, Kushboo, Kushbu, Liberal, Love, Lust, Lyricist, Lyrics, Marriage, Moorthee, Moorthy, Moral, Morality, Movies, Murthy, music, Relationship, rights, Sex, Snegan, Snehan, Songs, Tradition, Traditional, Vows, Wedding, Wrongs | 1 Comment »

‘Lalitha’s Paattukku Paattu – Kushbu TV Advertisement should be banned’

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

குஷ்பு நடிக்கும் விளம்பரத்தை எதிர்த்து தலைமை நீதிபதியிடம் புகார்

சென்னை, ஜன.24: நீதித்துறையை அவமதிக்கும் நோக்கில் டிவியில் வெளியாகும் தங்க நகை விளம்பரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் டி. ரவிகுமார் புகார் கொடுத்துள்ளார்.

அவரது புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 21-ம் தேதி காலை 8.30 மணிக்கு சன் டிவியில் லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் லலிதா ஜுவல்லரியின் விளம்பரம் இடம் பெற்றது. அதில் நடிகை குஷ்பு நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நின்று கொண்டு லலிதா ஜுவல்லரியின் சலுகைகளைப் பற்றி எடுத்துக் கூறுவார். அதைக் கேட்ட நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் திடீரென காணாமல் போவது போல (நீதிமன்றமே காலியாக இருப்பது போல) விளம்பரக் காட்சி இடம் பெறுகிறது.

இந்த விளம்பரம் நீதித்துறையையும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களைக் கேவலப்படுத்துவது போல உள்ளது. எனவே இந்த விளம்பரத்தை மீண்டும் ஒளிபரப்பாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் வழக்கறிஞர் ரவிகுமார் கூறியுள்ளார்.

Posted in Ads, Advertisement, Advt, case, Court, Gangai Amaran, Gangai Amaren, Judge, Justice, Kushboo, Kushbu, Lalitha, Lalitha's Paattukku Paattu, Law, Lawsuit, Paattukku Paattu, Sun TV, TV | Leave a Comment »

Kushbu hit with class action – Brother Abdulla vs TM Varghi

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2007

பண மோசடி செய்ததாக புகார்: நடிகை குஷ்புவுக்கு முன் ஜாமீன்

சென்னை, ஜன. 10: நடிகை குஷ்புவுக்கு உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

குஷ்புவின் சகோதரர் அப்துல்லாவின் மாமனார் டி.எம். வர்கி அமெரிக்காவில் வசிக்கிறார். ரூ.7 லட்சம் பண மோசடி செய்ததாகக் குஷ்புவுக்கு எதிராக வர்கி கொடுத்த புகாரின் அடிப்படையில், அவரிடம் சென்னை போலீஸôர் விசாரணை நடத்தினர்.

இப்புகாரின்பேரில் தன்னை போலீஸôர் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் குஷ்பு மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி ஆர். ரகுபதி, சில நிபந்தனைகளுடன் குஷ்புவுக்கு முன் ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.

ரூ.10,000 ஜாமீன் வழங்க வேண்டும். அதே தொகைக்கு இரு நபர்கள் குஷ்புவுக்காக ஜாமீன் செலுத்த வேண்டும். தினமும் காலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஆஜராகி அவர் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார் நீதிபதி.

மனுவில் குஷ்பு கூறியிருப்பதாவது:

பெங்களூரில் கே.ஆர். சாலையில் எனக்கு சொந்தமான அடுக்குமாடி வீடு உள்ளது. என் சகோதரர் அப்துல்லா கான், கன்னட மொழியில் ஜனனி என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். அதற்காக ரூ.7.80 லட்சம் ரூபாயை அமெரிக்காவில் இருந்து அவரது மாமனார் வர்கி அனுப்பினார். அத் தொகை என் மூலமாக என் சகோதரருக்கு அனுப்பப்பட்டது.

தற்போது என் சகோதரருக்கும் அவரது மாமனாருக்கும் உறவு சரியில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் ரூ.7.80 லட்சம் தர வேண்டும் என்றும் இல்லையெனில் பெங்களூரில் உள்ள என் வீட்டை தனது பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என்றும் வர்கி கூறுகிறார்.

அவருக்கும் அவரது மருமகனுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்காக என்னைத் துன்புறுத்துகிறார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை போலீஸôர் என்னிடம் விசாரணை நடத்துகின்றனர் என்று மனுவில் குஷ்பு கூறியிருந்தார்.

Posted in Abdulla, Abdullah, Assets, Kushboo, Kushbu, Lawsuit, Litigation, Money, Mun Jaameen, Mun Jaamin, Police, Tamil Actress, Tamil Cinema, TM Varghi, Transaction, Warghi, Warki | Leave a Comment »

Trisha Fan clubs record 20,000 Members; Namitha – 3,000

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

திரிஷா ரசிகர் மன்றத்தில் 20,000 உறுப்பினர்கள்; நமீதா மன்றத்தில் 3000 பேர்

ரஜினி, கமல், விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. விஜயகாந்த் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றினார்.

நடிகர்களைப் போல் நடிகைகளுக்கும் ரசிகர் மன்றங்கள் முளைத்துள்ளன.

முதல் முறையாக குஷ்பு வுக்கு 1991-ல் திருச்சி ரசிகர் கள் கோவில் கட்டினர். தற்போது திரிஷா, நமீதா ஆகி யோருக்கு ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.

திரிஷா ரசிகர் மன்ற தலைவியாக ஜெஸி பொறுப் பேற்றுள்ளார். இம் மன்றத் துக்கு புதிய உறுப் பினர் சேர்ப்பு பணி முடுக்கி விடப் பட்டுள்ளது. கல்லூரி மாண விகள், குடும்பத் தலை விகள் என 20 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந் துள்ளனர். ஒரு லட்சம் பேரை உறுப்பினராக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர.

திரிஷா படங்கள் ரிலீசாகும் போது அவர் ரசிகர்கள் தியேட் டர்களில் கட்அவுட், கொடி தோரணங்கள் அமைத்து அமர்க்களப்படுத்தி வரு கிறார்கள். திரிஷா பிறந்த நாளில் அடையாறு புற்று நோய் ஆஸ்பத்திரியில் குழந்தை களுக்கு உணவு, உடைகள் வழங்குவதையும் வழக்க மாக வைத்துள்ளனர்.

திரிஷா தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவருக்கு ஆந்திர அரசின் நந்தி விருது கிடைத்துள்ளது. தமிழில் சாமி, கில்லி படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கின. ஜெயம் ரவியுடன நடித்த உனக்கும் எனக்கும் படம் ரிலீசாகி 100 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

நமீதா `ஏய்’ `கோவை பிரதர்ஸ்’ `பச்சக்குதிர’ உள் ளிட்ட படங்களில் நடித்துள் ளார். சமூக சேவைகளில ஈடுபாடுள்ள அவர் அவ்வப் போது குடிசைப் பகுதிகளுக்கு சென்று ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார்.

நமீதாவுக்கு முதன்முதலாக செல்வம் என்பவர் ரசிகர் மன்றத்தை தொடங்கினார். தற்போது இவர் நமீதா ரசிகர் மன்றங்களின் அகில இந்திய தலைவராகி உள்ளார்.

சென்னையில் நமீதாவுக்கு 50 ரசிகர் மன்றங்கள் உள் ளன. இவற்றில் 3000 பேர் உறுப்பினர்களாக சேர்ந் துள் ளனர். இவர்களில் பெரும் பாலானோர் கல்லூரி மாண விகள். நமீதா ரசிகர் மன்றமும் சமூக சேவை பணிகளில் தீவிரமாக களம் இறங்கி உள்ளது.

முதல்கட்டமாக 20 ஆயி ரம் பேரை மன்றத்தில் உறுப் பினராக்க முடிவு செய் துள்ளனர்.

Posted in Fan Clubs, Kushboo, Movies, Namitha, Tamil Cinema, Telugu, Thrisha, Tollywood, Trisha | 3 Comments »

‘Maniammai’ Kushboo – Thangar Bhachaan refuses to handle camera duty

Posted by Snapjudge மேல் நவம்பர் 3, 2006

பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் குஷ்பு எதிர்ப்பை கைவிட்டனர்: மணியம்மை படப்பிடிப்பு தீவிரம்

கற்பு பற்றி கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்கியவர் குஷ்பு. அவர் தற்போது `பெரியார்’ படத்தில் மணியம்மையாக நடிக்கிறார்.

`மணியம்மை’ கேரக்டரில் குஷ்பு நடிக்க ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பியது. `பெரியார்’ படத்தில் குஷ்பு நடிக்க கூடாது என்றும் மீறி நடித்தால் படிப்பிடிப்பை நடத்த விடமாட்டோம் என்றும் இரு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் குஷ்பு இடம்பெறும் காட்சிகள் திருச்சியில் படமாக்கப்பட்டு வருகின்றன. பா.ம.க., விடுதலை சிறுத்தைகளால் படப்பிடிப்புக்கு பாதிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே போலீசாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

ஆனால் இரு கட்சித்தொண்டர்களாலும் எதிர்ப்பு வரவில்லை. எதிர்ப்பு நடவடிக்கையை அவர்கள் கைவிட்டு விட்டனர்.

தங்கர்பச்சான் மட்டும் கோபத்தில் பிடிவாதமாக இருந்தார். குஷ்பு காட்சிகளை படமாக்க மறுத்து விட்டார். அவரது உதவியாளர் ஒளிப்பதிவு செய்கிறார். குஷ்பு நடிக்கும் காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.

மணியம்மை கேரக்டரில் நடிப்பது பெருமையாக உள்ளது என்றார் குஷ்பு.

கடவுள் நம்பிக்கை தனக்கு கிடையாது என்றும் தெரிவித்தார்.

Posted in Cameraman, cinematographer, Dalit Panthers, EVR, Kushboo, Kushbu, Maniammai, Periyaar, PMK, Sathyaraj, Thangar Bachan, Thangar Bhachaan, Viduthalai Siruthaigal | Leave a Comment »