கேரளத்தில் போக்குவரத்து வாகனங்கள் வேலைநிறுத்தம்
திருவனந்தபுரம், ஜன. 26: வாகனங்களுக்கான இன்ஸþரன்ஸ் பிரீமியம் தொகையை கடுமையாக உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
மோட்டார் பிரிவு சங்கங்கள் இந்த ஒரு நாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்தன.
கேரள அரசு போக்குவரத்து பஸ்களைத் தவிர அனைத்து ரக வாகனங்களும் இந்த வேலைநிறுத்தத்தில் தீவிரமாக இறங்கின.
தனியார் பஸ்கள், டாக்சிகள், ஆட்டோ-ரிக்ஷாக்களுடன் சரக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களும் ஓடவில்லை.
இருப்பினும் சொந்தமாக கார் அல்லது வாகனம் வைத்திருப்போர் செல்வதற்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை. இந்நிலையில் அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்கவில்லை.
தனியார் பஸ்களையே பெரிதும் சார்ந்திருக்கும் வடமாவட்டங்கள் இந்த வேலைநிறுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டன. மாநிலத்தின் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களிலும் வேலைநிறுத்தத்துக்கு முழு ஆதரவு இருந்தது.
கோட்டயம் மாவட்டம் மீனாச்சில் தாலுகாவில் உள்ளூர் தேவாலயத்தில் திருவிழா நடைபெறுவதால் இந்த தாலுகாவுக்கு மட்டும் வேலைநிறுத்தத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.