Posted by Snapjudge மேல் ஜூன் 15, 2007
காங்கிரஸில் மேலும் ஒரு புதிய கோஷ்டி
சென்னை, ஜூன் 16: ஏற்கெனவே பல்வேறு கோஷ்டிகள் நிறைந்து காணப்படும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மேலும் ஒரு புதிய அணி உதயம் ஆகிறது.
மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்தின் தலைமையில் இந்த அணியை உருவாக்கும் தீவிர முயற்சியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வெள்ளிக்கிழமை இறங்கினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில்
- மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தலைமையிலான பழைய த.மா.கா. அணி,
- கட்சியின் மாநிலத் தலைவர் எம். கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்கள் அணி,
- மத்திய அமைச்சர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அணி,
- முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆர். பிரபு,
- கே.வீ. தங்கபாலு,
- ஜெயந்தி நடராஜன் போன்றவர்களின் தலைமையிலான அணிகள் என்று பல அணிகள் இயங்கி வருகின்றன.
வேற்றுமையில் ஒற்றுமை: மாநிலங்களவைத் தேர்தல், மதுரை மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் ஆகியவற்றுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியைக் கட்சியின் அகில இந்திய மேலிடம் சமீபத்தில் மேற்கொண்டது.
அப்போது இந்தக் கோஷ்டிப் பூசல் பூதாகாரமாக விசுவரூபம் எடுத்தது. வாசனின் ஆதரவாளர்களை வேட்பாளர்களாக மேலிடம் தேர்வு செய்துவிடக் கூடாது என்கிற நோக்கத்தில் இதர அணிகள் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ. போளூர் வரதனின் தலைமையில் ஒன்றுபட்டன. ரகசிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தின. வாசன் அணிக்கு எதிராக மேலிடத்தில் புகார்களைத் தெரிவித்தன.
ஆனால், இறுதியில் வாசனின் “கை’யே ஓங்கியது. மாநிலங்களவைத் தேர்தலிலும், மதுரை மேற்கு இடைத் தேர்தலிலும் வாசனின் தீவிர ஆதரவாளர்களுக்கே மேலிடம் வாய்ப்பு அளித்தது.
கட்சிக் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டும், மேலிடத்தின் அறிவுரையை ஏற்றும், வாசன் அணிக்கு எதிரான அணிகளைச் சேர்ந்தவர்கள் தற்போது மதுரை மேற்குத் தொகுதியில் முகாமிட்டு, பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
காமராஜர் இல்லம் அருகே…: இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் காமராஜரின் இல்லத்துக்கு அருகே உள்ள ஓட்டலில் கார்த்தி சிதம்பரத்தின் தலைமையில் புதிய அணியின் மதிய விருந்து -ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
- மூத்த நிர்வாகி தமிழருவி மணியன்,
- மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன்,
- சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் கே.எஸ்.அழகிரி,
- வி.ராஜசேகரன்,
- சட்டப் பேரவை உறுப்பினர்கள் திருவாடானை கே.ஆர்.ராமசாமி,
- காரைக்குடி சுந்தரம்,
- முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஆ. கோபண்ணா,
- கிருஷ்ணசாமி வாண்டையார்,
- சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே ஆர். தியாகராஜன் உள்ளிட்ட 20 முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.
Posted in Analysis, Backgrounders, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Divisions, Elangovan, Elankovan, Elections, Faction, Fights, Ilangovan, Ilankovan, Internal, Jayanthi, Jayanthy, Jeyanthi, Jeyanthy, Kaarthi, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, Karthi, Krishnasaamy, Krishnasami, Krishnasamy, Krishnaswamy, Leaders, Madurai, Manmohan, Members, MLAs, MPs, Party, PC, Petty, PMK, Politics, Polls, Sonia, Thangabaalu, Thangabalu, Thankabalu, TMC | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 16, 2006
ஜனநாயக படுகொலை என்று விமர்சித்து உள்ளாட்சி தேர்தலை குறை சொல்வதா? காங்.தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஜனநயாக படுகொலை நிகழ்த்தப்பட்டதாக சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இரா.செழியன் உள்ளிட்ட சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள
- 4 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள்,
- 80 ஆயிரம் வாக்குசாவடிகள் மூலமாக
- 4லட்சம் பேர் வேட்பாளர்களாக போட்டி யிட்டு
- 1 லட்சத்து 31 ஆயிரம் பதவிகளுக்கு தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு பதவியில் அமர்ந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள
- 472 மாநகராட்சி வார்டுகளில் 62பேரும்,
- 4 ஆயிரத்து 374 நகராட்சி வார்டுகளில் 1016பேரும்,
- 8 ஆயிரத்து 780 வார்டுகளில் 1643 வார்டுகளிலும்,
- 6589 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 1417 வார்டுகளிலும்
- மாவட்ட ஊராட்சி வார்டுகளில் 157 வார்டுகளிலும் அ.தி.மு.க. கட்சியின் சார்பாக போட் டியிட்டவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட் டுள்ளார்கள்.
நடந்து முடிந்த தேர்தலிலே ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டதாக குரல் எழுப்புகிற இவர்களின் வாதத்தில் உண்மை இருக்குமேயானால் அ.தி. மு.க.வை சேர்ந்தவர்கள் இந்த அளவு எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருக்க முடியுமா என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு இருக் கிறது.
சென்னை மாநகராட் சிக்குட்பட்ட சில வார்டுகளில் கலவரங்கள் நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத் திற்கு கொண்டு செல்லப்பட்டு 17 வாக்குசாவடிகளில் மறு தேர்தல் நடத்தப்பட்டன. அதற்குப் பிறகு நீதிமன்ற ஆணைக்கேற்ப சென்னை மாநகராட்சியில் உள்ள 155 வார்டுகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த தேர்தல் முடிவு என் பது நீதிமன்ற ஆணையின் அடிப்படையில்தான் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டது என் பதை உணராமல் தேர்தல் முடிவுகளை கொச்சைப் படுத்துகிற வகையில் பேசு வது உயர்நீதிமன்றத்தை அவமதிக்கிற செயலாகும்.
மக்களை திசை திருப்ப உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்ற 3கோடி வாக்காளர் களை அவமதிக்கும் செயலாக வும் கருதப்படும்.
இவ்வாறு கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
Posted in ADMK, AIADMK, Chennai, Civic Polls, Condemn, Congress, Congress (I), Corporation, Era Sezhiyan, Indira Congress, Iraa Sezhiyan, Jayalalitha, Krishnasaamy, Krishnasamy, Krishnaswamy, local body elections, Madras, Meeting, Municipality, seats, Tamil Nadu | Leave a Comment »