Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Kozhikode’ Category

Exposing the double standards of Kerala Govt – Inaction, Hypocrisy, Bureaucracy

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

கடிதங்கள் | காலச்சுவடு

கே. கணேசன்
கோயம்புத்தூர் – 27

சக்கரியாவின் ‘மாயாவித் திருடர்கள்’ என்னும் கட்டுரை குறித்து:

கேரளாவில் மார்க்சிஸ்டுகள் அம்மாநில மக்களை மூளைச்சலவை செய்துவைத்திருக்கிறார்கள். பிளாச்சி மடையிலுள்ள கொக்கோகோலோ மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ தொழில் நிறுவனங்கள் மார்க்சிஸ்டுகளால் கேரளத்தை விட்டு ஓடிவிட்டன.

  • கெல்ட்ரான்,
  • ரேயன்ஸ் மில்,
  • புனலூர் காகித ஆலை,
  • அலகப்பபுரம் டெக்ஸ்டைல்ஸ்,
  • அப்போலோ டயர் தொழிற்சாலை

ஆகிய அனைத்தும் மூடப்படுவதற்குக் காரணமாயிருந்தவர்கள், தம்மை முற்போக்காளர்கள் என்று கூறிக்கொள்ளும் மார்க்சிஸ்டுகளே. கேரளாவைச் சேர்ந்தவர்கள் மூளை உழைப்பாளிகளாகவும் உடல் உழைப்பாளிகளாகவும் மற்ற மாநிலங்களுக்கும் அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்கும் செல்லக் காரணகர்த்தாக்கள் மார்க்சிஸ்டுகளே.கேரளாவில் மலப்புரம் மாவட்டம் பொன்னானி என்னும் ஊரின் அருகேயுள்ள சம்றவட்டம் என்ற இடத்தில் பாரத புழா அரபிக்கடலில் கலக்கும் இடத்தில் தண்ணீரைத் தேக்கிவைக்கத் தடுப்பணையும் அதன்மேல் வாகனங்கள் செல்ல ஒரு பாலமும் கட்டத் திட்டமிட்டுக் கேரளாவில் மூன்று முதல்வர்கள் கடந்த 18 ஆண்டுகளில் மூன்று முறை கால்கோள் விழா நடத்தினார்கள். அத்திட்டத்தை என்ன காரணத்தினாலோ கைவிட்டார்கள்.

அந்தப் பாலம் அங்குக் கட்டப்பட்டால் மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் குடிநீர் தேவையும் நிறைவேறும் விவசாயம் செழிக்கும் வெயில் காலங்களில் நிலத்தடி நீரும் குறையாது. இது அப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றாமல் மார்க்சிஸ்டுகள் ஏமாற்றுகிறார்கள்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்தேக்கும் அளவை உயர்த்தினால் அணை உடைந்து ஐந்து மாவட்டங்கள் நீரில் மூழ்கிவிடும் என்று வெற்றுக் கூச்சல் போடுகிறார்கள். 4 டி.எம்.சி. தண்ணீரால் 5 மாவட்டங்கள் எப்படித் தண்ணீரில் மூழ்கும்?

ஒரு வேளை மார்க்சிஸ்டுகள் கூறியபடியே நடந்தாலும், அந்த நீர் 70 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இடுக்கி அணைக்கு அல்லவா சென்றுவிடும்? கேரள மாவட்டங்கள் என்ன பூந்தொட்டிகளா, நீரில் மூழ்க? அப்படியிருக்கக் காவிரி நதிநீர்த் தீர்ப்பாயம் கேரளாவிற்கு 30 டி.எம்.சி. வழங்கத் தீர்ப்பு கூறியுள்ளது.

எந்த ஆயக்கட்டு வசதியும் இல்லாமல் 30 டி.எம்.சி.யை எங்குத் தேக்குவார்கள்? அதுவுமில்லாமல் 30 டி.எம்.சி. நீர் தங்களது மாநிலத்திற்குப் போதாது என்றும் மேலும் தண்ணீர் விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள். இந்த 30 டி.எம்.சி. நீரால் கேரளா மூழ்காதா? மார்க்சிஸ்டுகள் முன்னுக்குப் பின் முரணான அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்கள்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் இருந்த திருவனந்தபுரத்தைத் தனிக் கோட்டமாக்கியபோது தமிழ்நாட்டில் எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை. ஆனால், சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டபோது மார்க்சிஸ்டு தொழிற்சங்கத்தினர் அம்மாநில மக்களைத் தேவையில்லாமல் தூண்டிவிட்டார்கள்.

கேரளாவில் உள்ள குருவாயூரிலிருந்து தானூர் என்னும் இடத்திற்குப் புதிய ரயில் பாதை அமைக்கக் கடந்த ரயில்வே பட்ஜெட்டில் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிலத்தைக் கையகப்படுத்தாமல், அத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறார்கள் மார்க்சிஸ்டுகள்.

திருவனந்தபுரம் அருகே விழிஞம் என்னும் இடத்தில் அதிநவீனத் துறை முகம் அமைக்கப் பல வெளிநாட்டுக் கம்பெனிகள் முயன்றன. ஆனால், மார்க்சிஸ்டு அரசு அதற்கு ஒத்துழைக்கவில்லை. எர்ணாகுளத்தை ஸ்மார்ட் சிட்டி ஆக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதற்கும் மார்க்சிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்துத் திட்டத்தைக் கிடப்பில் போட்டிருக்கிறார்கள்.

கேரளா பொருளாதார வளர்ச்சி பெற்றுச் சிறந்த மாநிலமாக உருவெடுத்தால், மார்க்சிஸ்டுகள் அம்மாநில மக்களை ஏமாற்ற முடியாது என்ற ஒரு காரணம்தான். இந்த ஆண்டு மார்ச் 14 அன்று மேற்கு வங்கம் நந்தி கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து 14 பேர் சுட்டுத் தள்ளப்பட்டார்கள். மார்ச் 14 நினைவுகூரத்தக்க தினம்தான்.

பொதுவுடமைச் சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் நினைவு தினம் மார்ச் 14. மார்க்சிஸ்டுகளின் அந்நிய நாட்டு அடி வருடித்தனத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் வரலாறும் மன்னிக்காது என்பது திண்ணம்.

கே. கணேசன்
கோயம்புத்தூர் – 27

—————————————————————————

தமிழகத்தின் உரிமைப் பிரச்னைகள்

பா. ஜெகதீசன்

தமிழகமும், கேரளமும் கடந்த பல தலைமுறைகளாகவே அண்ணன் – தம்பியைப் போன்ற உறவுடன் பாசத்துடன் பழகி வந்தன. ஆனால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே சமீபகாலத்தில் எழுந்த பிரச்னை விசுவரூபம் எடுத்து, இரு தரப்பினரையும் பகையாளிகளைப் போல பேச வைத்து விட்டது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையைப் போல, மேலும் பல பிரச்னைகளில் இரு மாநிலங்களுக்கு இடையே “இழுபறி’யான ரீதியில் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

உதாரணமாக, பரம்பிக்குளம் -ஆழியாறு ஒப்பந்தம் தொடர்பான பிரச்னை 1988-லிருந்து நீடித்து வருகிறது. 6.11.2004-ல் சென்னை தலைமைச் செயலகத்தில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் இரு மாநிலங்களும் பேச்சு வார்த்தையை தொடருகின்றன.

கஜினி முகமது தொடர்ந்து படை எடுத்து வந்த வரலாற்றை முறியடிக்கும் வகையில், இப்பிரச்னைக்குத் தீர்வு காண இதுவரை சுமார் 20 முறைக்கும் மேல் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், பாலாறு, ஆழியாறு ஆகியவற்றிலும், இவற்றில் இணையும் ஆறுகளிலும் உள்ள நீரை மின்சாரம் தயாரிக்கவும், பாசனம் மற்றும் குடிநீருக்குப் பயன்படுத்தவும் 9.11.1958 முதல் செயல்படக் கூடிய ஒப்பந்தம் இரு மாநிலங்களுக்கும் இடையே கையெழுத்தானது.

9.11.1988-ல் இந்த ஒப்பந்தம் மறு ஆய்வு செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யப்படவில்லை.

அதேபோல, பாண்டியாறு -புன்னம்புழா நதிகள் தமிழகத்தில் நீலகிரி மலையின் உயர்ந்த சிகரங்களில் தோன்றி, கூடலூருக்கு 5 கி.மீ. மேற்கே இணைகின்றன. இந்த இணைப்புக்குக் கீழே இந்த நதி புன்னம்புழா என்றே அழைக்கப்படுகிறது. கேரளத்தில் நீலாம்பூர் அருகே சாளியாற்றில் கலந்து, பேபூர் என்கிற இடத்தில் அரபுக் கடலில் இந்த நதி சங்கமம் ஆகிறது.

இந்தக் குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் கிடைக்கும் 14டி.எம்.சி. நீரில் குறைந்தபட்சம் 7 டி.எம்.சி.யையாவது தன் பக்கம் திருப்பி விட வேண்டும் என்று தமிழகம் விரும்புகிறது. மேற்கு நோக்கிப் பாயும் இந்த ஆற்றிலிருந்து கிழக்கு நோக்கி தண்ணீரைத் திருப்ப கேரளத்தின் ஒப்புதலைப் பெறும் முயற்சியைத் தமிழகம் மேற்கொண்டுள்ளது.

புன்னம்புழா திட்டத்தில் கிடைக்கும் தண்ணீரை பவானி ஆற்றின் கிளை ஆறான மோயாற்றில் இணைத்து, கோவை மாவட்ட விவசாயிகளுக்கு உதவ தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. ஆனால், இந்தக் கனவு எப்போது நனவாகும் என்று தெரியவில்லை.

தீபகற்ப நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் மகாநதி – கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – காவிரி – வைப்பாறு நதிகளை இணைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு தயாரித்து, அதுதொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகிறது. கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளின் நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது என்பது அந்தத் திட்டத்தின் ஒரு பகுதி.

பம்பா -அச்சன்கோயில் -வைப்பாறு இணைப்புத் திட்டம் என்பது கேரளத்தில் உள்ள பம்பா -அச்சன்கோயில் ஆறுகளின் உபரி நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது ஆகும். இந்தத் திட்டத்தினால் சங்கரன்கோவில், கோவில்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், தென்காசி வட்டங்களில் உள்ள 91,400 ஹெக்டேர் (ஒரு ஹெக்டேர் என்பது சுமார் 2.5 ஏக்கர்) நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 22 டி.எம்.சி. நீர் கிடைக்கும். பம்பா – அச்சன்கோயில் ஆறுகளில் கிடைக்கும் உபரி நீரில் இது 20 சதவீதம் மட்டுமே.

மேலும் இந்தக் குறிப்பிட்ட திட்டத்தின் மூலம் 500 மெகாவாட் மின்சாரத்தையும் எளிதாக உற்பத்தி செய்ய இயலும்.

ஆனால், இதர திட்டங்களைப் போலவே, இந்தத் திட்டத்தையும் கேரள அரசு ஏற்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைக்கும் வகையில், கண்ணகி கோயில் பிரச்னை அமைந்துள்ளது.

உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள வண்ணாத்திப்பாறைக் காடு தமிழகத்தைச் சேர்ந்தது. அந்தப் பகுதியில்தான் கண்ணகி கோயில் உள்ளது.

ஆனால், கண்ணகி கோயில் தனது எல்லைக்குள் உள்ளதாக கேரள அரசு கூறி வருகிறது. அத்துடன், அங்கு வழிபாடு நடத்தச் செல்லும் தமிழக மக்களை கேரள அரசு தடுத்து, பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் இடையே உள்ள எல்லையின் நீளம் சுமார் 830 கி.மீ. இதில் சுமார் 250 கி.மீ. தூரத்துக்குத்தான் இரு மாநிலங்களின் அதிகாரிகளும் ஆய்வு செய்து, எல்லைகளை நிர்ணயித்துள்ளனர்.

கேரள அதிகாரிகள் சரியாக ஒத்துழைக்காததால், எஞ்சிய தூரத்துக்கு எல்லையை வரையறுக்க முடியாத நிலை உள்ளது. அதைப் பயன்படுத்தி ஆங்காங்கே தமிழகத்தின் பகுதிகளைத் தனது பகுதிகள் என்று கேரளம் கூறி போலியாக உரிமை கொண்டாடி வருகிறது.

கேரளத்துடன் நல்லுறவை வளர்க்கவே எப்போதும் தமிழகம் விரும்புகிறது. ஆனால், அந்த விருப்பம் ஈடேறத் தடைகற்களாக இத்தனை பிரச்னைகள் அமைந்துள்ளன. இந்தத் தடைகள் தகர்க்கப்பட்டு, நல்லுறவு மேம்பட கேரளத்தின் பெருந்தன்மையான ஒத்துழைப்பு அவசியம்.

———————————————————————————————————————————

முல்லைப் பெரியாறும்-கேரளமும்!

என். சுரேஷ்குமார்

திருநெல்வேலி மாவட்டம், சுந்தரமலையில் உள்ள சிவகிரி சிகரத்தில் தோன்றும் பெரியாறு, பெருந்துறையாறு, சின்ன ஆறு, சிறு ஆறு, சிறுதோனி ஆறு, இடமலையாறு, முல்லையாறு ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு சுமார் 300 கி.மீ. தூரம் வடமேற்குத் திசையில் பாய்ந்து இறுதியில் கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே கடலில் கலக்கிறது.

பெரியாறு தமிழக எல்லைக்குள் 56 கி.மீ. தூரமும் கேரள எல்லைக்குள் 244 கி.மீ. தூரமும் பாய்கிறது.

மக்களின் குடிநீர் தேவைக்கும் பாசனத்திற்காகவும் பெரியாறு திட்டத்திற்கு முதன்முதலில் செயல்வடிவம் கொடுத்தது ஆங்கிலேயர்கள்.

அதன்படி, 1808-ம் ஆண்டு ஜேம்ஸ் கால்டுவெல் என்பவர் அணைகட்டும் திட்டத்தை ஆய்வு செய்து 1862-ல் 162 அடி உயர அணை கட்டும் திட்டம் மேஜர் ரைவீஸ் மற்றும் மேஜர் பேயின் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

பின்னர் 1882-ம் ஆண்டு 175 அடி உயரத்தில் அணை கட்ட பென்னி குயிக் நியமிக்கப்பட்டார். அதற்கு திட்ட மதிப்பீடு ரூ.65 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.

அதன்படி முல்லை ஆறும், பெரியாறும் இணையும் இடத்திற்கு அருகே அணை கட்ட முடிவெடுக்கப்பட்டது. அணை கட்டப்படவிருந்த பகுதியான தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் தமிழர் வாழும் பகுதிகளாகும். தற்போதும் அப்பகுதியில் வசிப்போர் பெரும்பாலும் தமிழர்களே.

இருப்பினும் அணை கட்டப்படவுள்ள பகுதி தமிழ்நாட்டு பகுதியா, திருவிதாங்கூர் சமஸ்தான பகுதியா என்பதில் தெளிவில்லாத ஆங்கிலேய அரசு, அணை கட்டப்பட உள்ள பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதி எனக் கொண்டு, 1886-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுக்கான ஒப்பந்தத்தை செய்தது.

மேலும், இந்த அணை நீரானது தமிழகத்திற்கு காலகாலத்திற்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய அரசு 999 ஆண்டு ஒப்பந்தத்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் செய்து கொண்டது.

அதன்படி 1241 அடி நீளத்தில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் அடித்தளத்திலிருந்து 172 அடி.

இதில் நீரைத் தேக்கும் உயரம் 155 அடி. ஆனால், திடீரென வரும் வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் 152 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்பட்டது.

இந்த அணையில் தேங்கும் நீரை, கிழக்குத் திசையில் 5765 அடி நீளமும், 60 அடி ஆழமும், 80 அடி அகலமும் கொண்ட பெரிய கால்வாய் மூலம் கொண்டுவந்து பின்பு அந்த நீரை மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட 5345 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்ட சுரங்கத்தின் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

அதற்குப் பிறகு 78 கி.மீ. நீளமுள்ள பெரியாறு கால்வாய் மூலம் வைகை ஆற்றுடன் இணைக்கப்படுகிறது. அணையிலிருந்து மேற்குறிப்பிட்ட சுரங்கத்தின் வழியாக வினாடிக்கு 2000 கன அடி அளவு தண்ணீரை மட்டுமே வெளியே எடுக்க முடியும்.

மேலும், 152 அடி உயரமுள்ள அணையில் 104 அடிவரை தேங்கும் நீரைத்தான் எடுக்க முடியும்.

பின்னர் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு அந்த அணையின் நீர் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதன்பின்னர்தான் கேரள அரசு முல்லைப்பெரியாறு அணையை முழுவதும் கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டது.

அதன்படி, 1956-ம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் வாழ்ந்து வந்த தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக கேரளத்தோடு இணைக்கப்பட்டன.

1978-ம் ஆண்டு அணை பலவீனமாகிவிட்டது என்று கேரள அரசு பொய் செய்தியைப் பரப்ப ஆரம்பித்தது. அதன்மூலம் அணையின் நீர்மட்டம் 145 அடியாக குறைக்கப்பட்டது.

பின்னர் அணை பலப்படுத்துவது தொடர்பாக கேரள- தமிழக அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, அணை பலப்படுத்தப்படும்வரை அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது.

இதற்கிடையே பெரியாறு நீர்பிடிப்புப் பகுதிகளில் கெவி அணை, ஆணைத்தோடு அணை, கட்கி அணை, பம்பா அணை போன்ற அணைகளை கட்டியெழுப்பி முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்தை கேரளம் குறைத்தது.

இதனால் ஒரு போகம் சாகுபடி செய்த சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் சுமார் 40,000 ஏக்கர் நிலங்கள் தரிசாக மாறின.

1979 ஆம் ஆண்டு மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னிலையில் இரு மாநில அரசுகளும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளை 1985-ம் ஆண்டே முடித்த பின்பும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு மறுத்தது.

இதனால் இப்பிரச்னையை தமிழக விவசாயிகள் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றனர்.

மத்திய நீர்வள ஆணையம், மத்திய மண் விசையியல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை சார்ந்த நிபுணர்கள் அணையைப் பார்வையிட்ட பிறகு, அணையை பலப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன என்று சான்று வழங்கியது. மேலும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என கேரள அரசு சொன்ன காரணங்கள் பொய்யானவை என்று ஆணையம் தெளிவாகக் கூறியது.

அதன் அடிப்படையில் 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை நீரை தேக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும், கேரள அரசு 1979-ம் ஆண்டு தமிழகத்தோடு செய்த ஒப்பந்தத்தை மீறியதோடு, நிபுணர் குழு அறிக்கையையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் உதாசீனப்படுத்தியது.

தீர்ப்புக்கு கட்டுப்பட மறுத்து அதே ஆண்டு மார்ச் மாதத்தில் கேரள அரசு நீர்ப்பாசனம், நீர்வளம் பாதுகாப்பு சட்டத்தை திருத்தி பெரியாறு அணையையும் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

இதன்மூலம் கேரள அரசு மேற்கொள்ளும் ஒரு தலைப்பட்சமான முடிவு நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக விடப்பட்டிருக்கும் அறைகூவல்.

மேலும், தற்போது பழைய அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்டப்போவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு கேரள அரசு கட்டினால் தமிழகத்தின் உரிமை முழுமையாகப் பறிபோகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Posted in Agriculture, Apollo, Bureaucracy, Cauvery, Coke, cola, Communism, Communist, Communist parties, Communist Party of India, Congress, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, Dam, Disaster, Drinking, Economy, Employment, Exports, Finance, Flood, GDP, Govt, Growth, Guruvaioor, Guruvaiyoor, Guruvaiyur, Guruvayoor, Guruvayur, Harbor, Harbour, Headquarters, Hype, Hypocrisy, Imports, Incentives, Industry, infrastructure, Integration, Irony, Irrigation, Jobs, Kaviri, Keltron, Kerala, Kozhikode, Labour, Literacy, Madurai, Malaappura, Malappura, Malappuza, Malappuzha, Malayalam, Manufacturing, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Mills, Mullai, Mullai Periyar, MullaiPeriyar, National, Palacaud, Palacaut, Palacode, Palaghat, Palagode, Palakode, Periyaar, Periyaaru, Periyar, Periyaru, Politics, Port, Prevention, Producation, promises, Railways, River, Salem, SEZ, Shipping, State, Tax, Textiles, THIRUVANANTHAPURAM, TMC, TN, Trains, Trivandrum | Leave a Comment »

101 farmers commits suicide in Kerala in last 10 months

Posted by Snapjudge மேல் மார்ச் 28, 2007

10 மாதங்களில் கேரளத்தில் 101 விவசாயிகள் தற்கொலை

திருவனந்தபுரம், மார்ச் 28: கடந்த 10 மாதங்களில் கேரளத்தில் 101 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இத்தகவலை கேரள வேளாண்துறை அமைச்சர் முல்லைக்கரை ரத்னாகரன் சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இந்தப் பட்டியலில் வயநாடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 46 விவசாயிகளும், கோழிக்கோட்டில் 11 விவசாயிகளும், திருவனந்தபுரத்தில் 10 விவசாயிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ரத்னாகரன் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட 549 விவசாயிகளின் குடும்பத்துக்கு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்கியுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டதாக ரத்னாகரன் கூறியுள்ளார்.

==============================================================
சிறு வியாபாரிகளைச் சீரழிக்கும் பன்னாட்டு மூலதனம்

இரா. செழியன்

இந்தியாவின் சிறு வியாபாரிகளை ஒடுக்கும் வகையில், உள்நாட்டு வர்த்தக நிறுவனங்களின் துணையுடன் வெளிநாட்டு பெரும் மூலதன நிறுவனங்கள் படையெடுத்துவர ஆரம்பித்துள்ளன.

இந்தியாவில் உள்ள 1 கோடி 20 லட்சம் வியாபாரிகளில் பெரிய அளவில் வர்த்தக நிறுவனங்கள் வைத்திருப்பவர்களின் அளவு 4 சதவீதம் என்று கூறப்படுகிறது. எஞ்சிய 96 சதவீதம் பேர் சிறு விற்பனையாளர்கள்.

சிறிய கடைகள் வைத்திருப்பவர்களிலிருந்து மார்க்கெட்டில் கூறுகட்டி காய்கறி, பழங்களை விற்பவர்கள் வரை ஒவ்வொருவரும், அதிகமான மூலதனம் இல்லாமல், தனிப்பட்டு தானே முதலாளியாக, தொழிலாளியாக, விற்பனையாளராக, தொழில் நடத்தி, நாள்தோறும் கிடைக்கும் குறைந்த வருமானத்தை வைத்து தனது குடும்பத்தைக் கட்டிக் காப்பதில் அவதிப்படுகின்றனர்.

தொடர் சில்லறைக் கடைகளை இந்தியாவில் அமைக்க பிரமாண்டமான வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ள நிலைமை, சிறு வியாபாரிகளை இந்திய வணிகத்துறையிலிருந்து அடியோடு அகற்றிவிடும்.

சில்லறைக் கடைகளை அமைக்க இந்திய ரிலையன்ஸ் நிறுவனம் ஆரம்பித்துவிட்டது. இந்த நிறுவனத்தின் முதலாளி முகேஷ் அம்பானி உலகப் பிரசித்த பெற்ற செல்வச் சீமான். 2007 ஆம் ஆண்டின் உலக செல்வந்தர்களின் பட்டியலில் அவர் 14-வது இடத்தில் இருக்கிறார். அவரிடம் உள்ள நிறுவனங்களின் சொத்து மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டாலர் – இந்திய மதிப்பீட்டில் அது 88 ஆயிரம் கோடி ரூபாய்.

“ரிலையன்ஸ் பிரெஷ்’ என்ற பெயரில் சில்லறைக் கடைகளை அம்பானி நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்டுள்ள முதலீடு 800 கோடி ரூபாய். தில்லியில் 8 சில்லறைக் கடைகள் திறக்கப்பட்டு விட்டன. சென்னையிலும் அதன் கடைகள் வந்துவிட்டன.

காய்கறிகள், பழங்கள், மாமிசம், மீன்வகை, உணவுப் பொருள்கள், அன்றாட அடிப்படைத் தேவைக்கான பண்டங்கள் அனைத்தையும் ஓரிடத்தில் விற்கும் இந்த அமைப்புகளுக்குத் தேவையான, குளிர் சாதனக் கிடங்குகள், குளிர்சாதன லாரிகள், குளிர்சாதன விற்பனைக்கூடங்கள், பாதுகாப்பு அறைகள், பனிப்பெட்டிகள், விளம்பரத் தட்டிகள் எல்லாவற்றையும் மேல்நாட்டு முறையில் அமைத்து, தோட்டத்தில் விளைந்த காய்கறி பழங்களை நேரடியாக, சில்லறைக் கடையில் “புதிதாக’த் தருவதால், அந்தக் கடைகளுக்கு, “ரிலையன்ஸ் பிரெஷ்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்தச் சில்லறைக் கடைகள் மூலம் நடைபெறும் விற்பனை இன்னும் மூன்றாண்டு காலத்தில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு வந்துவிடும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

ஹைதராபாத், ஜெய்ப்பூர், சென்னை ஆகிய மூன்று நகரங்களில் வைக்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் கடைகளுக்கு வரக்கூடிய 2 லட்சம் வாடிக்கையாளர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த “கர்ரேபோர்’ என்ற நிறுவனம் சில்லறை விற்பனையில் உலகத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அந்த நிறுவனத்திற்கு 30 நாடுகளில் 12 ஆயிரம் கடைகள் இருக்கின்றன. அதற்குச் சென்ற ஆண்டில் நடைபெற்ற வியாபாரத்தின் அளவு சுமார் 40 லட்சம் கோடி ரூபாய்! தாம் ஆரம்பித்த இந்திய நாட்டு சில்லறை வியாபாரத்துக்குத் துணைபுரிய அந்தப் பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் ரிலையன்ஸ் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளது.

பிரான்ஸ் நிறுவனத்துக்கு உலகில் இரண்டாவது இடம் என்றால், சில்லறை வியாபாரத்தில் உலகில் முதலிடத்தில் உள்ள “வால்மார்ட்’ என்ற பன்னாட்டு நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டு “பாரதி’ என்று மற்றோர் இந்திய நிறுவனம் சில்லறை வியாபாரத்தில் இறங்க முடிவு செய்துள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட “வால்மார்ட்’ உலக அளவில் சென்ற ஆண்டில் செய்த விற்பனையின் அளவு 350 பில்லியன் டாலர்; அதாவது 15 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்! நமது இந்திய அரசின் சென்ற ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தின் மொத்த அளவு 5 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய்!

111 கோடி மக்களை ஆட்சிசெய்யும் ஒரு நாட்டின் வரவு- செலவைவிட, சில்லறை வியாபாரத்தில் ஒரு நிறுவனத்தின் ஓர் ஆண்டு விற்பனையின் அளவு இரண்டரை மடங்குக்கும் மேலாக இருக்கிறது. சில்லறை வியாபாரம், ஆனால் கல்லாப்பெட்டி வசூல் உலக நாடுகளின் பலவற்றின் வருமானத்தைவிடப் பெரியது, பிரமாண்டமானது.

டாடா நிறுவனமும் சில்லறைக் கடைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த “உல்வொர்த்’ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட ஆரம்பித்திருக்கிறது. “உல்வொர்த்’ நிறுவனத்தின் ஆண்டு விற்பனை அளவு 1 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்!

பெருத்த அளவில் சில்லறைக் கடைகளை வைத்திருக்கும் வணிக முறை வெளிநாடுகளில் வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள வியாபாரத்தில் 85 சதவீதம் பெரிய நிறுவனங்களிடம் இருக்கிறது. அதன் அடிப்படையில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் சில்லறை வியாபாரத்தை பன்னாட்டு நிறுவனங்களின் சங்கிலித் தொடர் அமைப்புகளிடம் ஒப்படைப்பது, 96 சதவீதமுள்ள சிறு வியாபாரிகள் கை – கால்களில் இரும்புச் சங்கிலிகளைப் போட்டு வாழ்நாள் முழுவதும் வறுமைச் சிறையில் அவர்களை அடைத்து வைப்பதாக முடியும்.

2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு குறைந்தபட்ச பொதுசெயல் திட்டத்தை வெளியிட்டது. இதில் அரசின் ஆறு அம்ச அடிப்படைக் குறிக்கோள்களில் ஒன்றாகக் கூறப்பட்டிருப்பது: “”7 முதல் 8 சதவீத அளவில் வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில், எல்லோருக்கும் வேலை வாய்ப்பைத் தந்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் பாதுகாப்பான நிலையான நல்வாழ்க்கை அளிக்க முற்படுவோம்”.

ஆனால் இன்று உள்நாட்டு முதலாளிகளுடன் இணைந்து ஆயிரம் கோடி, லட்சம் கோடி என்று மூலதனம் உடைய பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைந்து, இந்தியப் பொருளாதாரத்தைச் சீரழிப்பதுடன், சிறு வியாபாரிகளின் வாழ்வை அடியோடு அழித்துவிட முயல்வது சரியா?

“”எல்லோருக்கும் வேலை”, “”ஒவ்வொரு குடும்பத்தின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்” என்று இக்கூட்டணியின் சார்பில் தரப்பட்ட வாக்குறுதிகள் என்ன ஆயிற்று? கிடைத்த வேலைகள் போகின்றன, இருந்த நல்வாழ்வு நாசமாகிறது!

நடுத்தரக் குடும்பத்தினரின் சுயவேலை வாய்ப்புத் திட்டமாக விளங்கும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது மிகுந்த வேதனையை அளித்து வருகிறது.

அன்னிய மூலதன உதவியுடன் ரிலையன்ஸ், பாரதி, டாடா என்று அடுத்தடுத்து இந்திய நிறுவனங்கள் தொடர் சில்லறைக் கடைகளை அமைக்க ஆரம்பித்துவிட்டன!

சிறிய மீன்களை பெரிய மீன்கள் விழுங்கிவிடுவதைப்போல, இந்தியாவின் சிறு வியாபாரிகளை விழுங்க பெரிய நிறுவனங்கள் வந்துவிட்டனவே! இந்தப் பேராபத்தைத் தடுக்க மத்திய – மாநில அரசுகள் என்ன செய்துள்ளன?

உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில், சில்லறைக் கடைகளில் நடைபெறும் விற்பனையில் நாளொன்றுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பெறுகிற “வால்மார்ட்’ இந்தியாவின் சில்லறை மார்க்கெட்டில் நுழைந்து விட்டதே! “வால்மார்ட்’ அமைப்புக்கு வால் பிடிக்கும் அமைப்பாக இந்திய அரசும் இந்தியப் பொருளாதாரமும் ஆகிவிட்டனவா?

சுதந்திர இந்தியாவில், சுயவேலையில், சுயமுதலீட்டில், சுயமாகப் பாடுபட்டு, சுயமரியாதையுடன் வாழ்வு நடத்தும் எண்ணற்ற சிறு வியாபாரிகள் வேலையிழந்து, வீடிழந்து, பொருளிழந்து, வாழும் வகை இழந்து, பிறந்த நாட்டில் அகதிகளாக, அநாதைகளாக, அலைய வேண்டிய நிலைமை வேகமாக வந்து கொண்டிருக்கிறது.

சுனாமிப் பேரலை தாக்கினால், கடலோரத்தில் உள்ள சிற்றூர்களும் சிறு குடிசைகளும் அழிக்கப்பட்டு மணல் மேடுகளாக மாறுவதைப்போல், உலகளாவிய பொருளாதாரப் பேரலை உழைப்பவர்களை, உழைத்துப் பிழைக்கும் சிறு வியாபாரிகளைக் கல்லறைகளுக்கு அனுப்பும் காலதேவனாக ஆகிவிடும்.

கடல் அலை கொந்தளித்தால், நாடு தாங்காது. ஏழைகளின் மனம் கொந்தளித்தால் நாடாளும் அரசு தாங்காது.

(கட்டுரையாளர்: நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்).


ரிலையன்ஸ் நிறுவனத்தால் சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு பாதிப்பு வராது என்கிறார் பொருளாதார வல்லுநர்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடையின் துவக்கம்
ரிலையன்ஸ் நிறுவனக் கடையின் துவக்க விழா-ஆவணப் படம்

ரிலையன்ஸ் நிறுவனம் காய்கனிகளை விற்க சென்னையில் சூப்பர் மார்க்கெட்டுகளை தொடங்கியது முதலே அரசியல் சர்ச்சை ஏற்பட்டது.

70 லட்சம் மக்கள் வசிக்கும் சென்னை மாநகரில் உள்ள பெருகி வரும் மத்தியதர மக்களிடையே உள்ள மேல்தட்டு மக்களை குறிவைத்துதான் இந்தக் கடைகள் திறக்கப்பட்டுள்ள எனவும், இதனால் சிறு வியாபாரிகளுக்கு எந்த பாதிப்பும் வராது எனகிறார் பொருளாதார வல்லுநர் பேராசிரியர் ஜனகராஜன்.

ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்லாமல், இது போன்ற வர்த்தகத்தில் பல நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன என்பதை சுட்டிக்காட்டிய அவர், வெளிநாட்டிலிருந்து பெரிய அளவில் அந்த நிறுவனங்கள் கொள்முதல் செய்வதால் நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்க முடிகிறது எனவும் கூறுகிறார்.

இது போன்ற நிறுவனங்கள், இடைத் தரகர்கள் இன்றி விவசாயிகளிடமிருந்து பொருட்களை நேரடியாக வாங்குவதால் விவசாயிகளும் பலனடைவார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

உலக மயமாக்கலில் ஒரு நாடு ஈடுபடும் போது, குறிப்பிட்ட துறைகளுக்குத் தான் தமது சந்தை திறந்திருக்கும் எனக் கூறமுடியாது என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Posted in Agency, Agents, Agriculuture, Ambani, Analysis, Business, Capitalism, Commerce, Consumers, Economy, Exploitation, Farmers, Farming, Farmlands, Finance, Foreign, Globalization, Industry, investors, Kerala, Kozhikode, Loans, Malayalam, Merchants, Middlemen, MNC, Mullakkara Ratnakaran, Reliance, service, SEZ, Small Biz, SSI, Suicide, THIRUVANANTHAPURAM, Trivandrum, Vendors, Wal-Mart, Walmart | Leave a Comment »