Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Kotturpuram’ Category

Slum Clearance Board housing collapses – Daily Routine of the Poor

Posted by Snapjudge மேல் மே 30, 2007

விழுந்து நொறுங்கும் வீடுகள்: அலறும் குடும்பங்கள்

சென்னை, மே 30: 5-ம் வகுப்பு படிக்கும் மீனா, நண்பர்களுடன் தனது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென வீட்டின் மேற்கூரை விழுந்து நொறுங்கியது. சாப்பாட்டில் மண். அலறியடித்து, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இந்தச் சம்பவம் சென்னை சாந்தோம் அருகே உள்ள நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மேற்கூரை விழுந்து நொறுங்கும் சம்பவம் அந்தப் பகுதியில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வாகி விட்டது என்பதால் யாரும் அவ்வளவு கவலைப்படவில்லை. காரணம், மேற்கூரை இடிந்து விழும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

6 மாதங்களுக்கு முன்பு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் மாதவராஜ் என்பவர் உயிரிழந்தார்.

“”சென்னையில் குடிசைகளை அகற்றி அப்பகுதியில் குடியிருப்புகளை கட்டும் திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது நொச்சிக்குப்பத்தில் தான். 786 வீடுகள் கொண்ட குடியிருப்புகள், கடந்த 1972-ல் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. கால மாற்றங்களால் தற்போது கட்டடங்கள் சேதமடைந்து வருகின்றன” என்றார் 75 வயதான ஆர்.எஸ்.மணி.

வசதி படைத்தவர்கள் தங்களின் சேதமடைந்த வீடுகளை சரி செய்து கொள்கின்றனர்.

“”கடந்த 6 ஆண்டுகளாக எங்களின் வீடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன. வீடுகளை முற்றிலும் இடித்து விட்டு புதிதாக கட்டித் தருவதாக அரசு அறிவித்துள்ளது. பயனாளிகள் பட்டியலை எடுத்தார்கள். அதன்பின்பு, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார் ஜெயசீலி.

குடிசைப் பகுதி தடையா? நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பை ஒட்டி, நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் உள்ளன. குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிப்போரின் வாரிசுகள், குடிசை வீடுகளில் வசிப்பதாகக் கூறப்படுகிறது.

“”புதிதாக கட்டித் தருவதாக அரசு உறுதி அளித்துள்ள வீடுகளில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என குடிசைப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், அவர்களிடம் ரேஷன் அட்டை உள்ளிட்ட சான்றுகள் இல்லை. இதனால், வருவாய்த் துறை சார்பில் இரண்டு முறை பயனாளிகள் பட்டியல் வெளியிட்ட போதும், அப்பகுதியில் பெரும் குழப்பம் நிலவியது.

இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்” என்றார் அப்பகுதியைச் சேர்ந்த சேகர்.

மாற்று இடம் வழங்கப்படவில்லை: “”நொச்சிக்குப்பத்தில் உள்ள சேதமடைந்த வீடுகளை இடிப்பதற்கு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால், அங்கு இருப்பவர்களை வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான மாற்று இடம் வழங்கப்படவில்லை என்பதால், அப்பகுதி மக்கள் அங்கேயே குடியிருந்து வருகின்றனர்” என்கிறார் தென்னிந்திய மீனவர் நலச்சங்கத்தைச் சேர்ந்த பாரதி.

இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது,””சேதமடைந்த கட்டடங்களை இடித்து, புதிய கட்டடங்களை கட்டுவதற்கான வரைபடம் தயாராக உள்ளது. விரைவில் குடியிருப்புகள் கட்டப்படும்” என்றனர். எப்போது என்பதை தெளிவுபடுத்தவில்லை.

——————————————————————————————————————-

குறட்டை விடும் குடிசை மாற்று வாரியம்

எம். மார்க் நெல்சன்

Kalainjar DMK Slum Clearance board abuse power Karunanidhi banner

சென்னை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்கள்.

சென்னை, ஜூலை 15: சென்னையில் குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சுவர்கள் வருமானம் ஈட்டித் தருபவையாக மாறி வருகின்றன.

ஆனால், வருமானம் தொடர்பான வரவு -செலவு கணக்குகளைப் பராமரிப்பதில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் இருந்தாலும், கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அங்குள்ள பிளாக் ஹெச்-8 முதல் ஹெச்-15 வரையுள்ள குடியிருப்புச் சுவர்களில் தனியார் விளம்பரங்களும், ஹெச்-5, 6, 7, 16 மற்றும் பிளாக் ஆர் -18, 19 ஆகிய குடியிருப்புச் சுவர்களில் முதல்வர் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களும் இடம்பெற்றுள்ளன.

சுவர் விளம்பரங்களுக்கு ஆண்டுக்கு, சதுர அடிக்கு அதிகபட்சமாக ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விளம்பரப் பலகைகளை வைக்க ஆண்டுக்கு, சதுர அடிக்கு ரூ. 26 வசூலிக்கப்படுகிறது.

இந்தக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் உயர்த்தப்படுகின்றன. பெரும்பாலும், இந்த விளம்பரங்கள் அனைத்தும் 1,200 சதுர அடி அளவில் அமைக்கப்படுகின்றன.

இதன்படி, கோட்டூர்புரம் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஆறு விளம்பரப் பலகைகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 2 லட்சமும், எட்டு சுவர் விளம்பரங்கள் மூலம் ரூ. 1 லட்சமும் அரசுக்கு வருமானம் வருகிறது.

இதே பகுதியில் தனியார் இடத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 60 முதல் 70 வரை வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் 1200 சதுர அடி கொண்ட ஒரு விளம்பரத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 84 ஆயிரம் வருமானம் தனியாருக்குக் கிடைக்கிறது.

ஆனால், குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்துக்கு ஆண்டுக்கு ரூ. 32 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

பராமரிக்கப்படாத கணக்குகள்: இந்நிலையில் குடிசைப் பகுதி மாற்று வாரிய அலுவலகக் கணக்குப் பதிவேட்டில் இந்த விளம்பரங்கள் குறித்த சில கணக்குகள் 1-4-2003 வரை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

விளம்பரக் கட்டணங்கள் வசூலிப்பது, விளம்பரக் காலம் முடிந்ததும், அந்த விளம்பரங்களை அழிப்பது உள்ளிட்ட பணிகளை கே.கே. நகரில் அமைந்துள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தினரும், எஸ்டேட் அலுவலரும் (ஈ.ஓ.7) செய்து வருவதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்த கணக்குகளையும், விவரங்களையும் அவர்கள் குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு சரிவர தெரிவிக்காததால் கணக்குப் பதிவேட்டில் சரிவர இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதனால் விளம்பரங்களுக்கு பணம் வசூலிக்கப்படுகிறதா அல்லது வசூலிக்கப்படும் பணம் வேறு வகையில் செலவழிக்கப்படுகிறதா என்பது மர்மமாக உள்ளது.

ஆளுங்கட்சி என்பதால்… அங்கு வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை எனத் தெரிகிறது.

பொன்விழா முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், அந்த இடங்களில் தனியார் விளம்பர பலகைகளுக்கு அனுமதி அளித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பது அதிகாரிகளின் கருத்து.

ஆனால், ஆளுங்கட்சி என்பதால் அந்த விளம்பரங்களை அகற்றுவதற்கு பயந்து அப்படியே விட்டுவைத்துள்ளனர் அதிகாரிகள்.

ஏற்கெனவே குறைந்த விலைக்கு விளம்பரங்களை வைக்க அனுமதிக்கும் நிலையில், வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களுக்கு முறையாக பணத்தை வசூலிக்காமலும், வசூலித்த பணத்தை சேர்க்கவேண்டிய இடத்தில் சரிவர சேர்க்காமலும் அரசுக்கும், குடிசை மாற்று வாரியத்துக்கும் இழப்பை ஏற்படுத்துவது ஏன் என்பதுதான் கேள்வி.

Posted in 50, Ad, Advt, Affordability, Area, Banner, Board, Celebrations, City, Civil, Clearance, collapses, Construction, Cost, Daily, Disabled, DMK, Dwelling, Education, eligibility, encroachments, Engineering, Eviction, facilities, facility, Flats, Floods, Free, Functions, Government, Govt, Handicapped, Hoardings, Home, Houses, Housing, Huts, Hygiene, improvement, Income, infrastructure, Issues, Jobs, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kottoor, Kottur, Kotturpuram, kutcha, Labor, Labour, Lands, Loss, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maintenance, migration, Mu Ka, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, multistorey, Necessity, NGO, Party, Plots, Politics, Poor, Poster, Power, Problems, Rain, Rehabilitation, Rent, revenue, Routine, Rural, sanitation, Santhome, settlements, shelter, Sleep, Slum, Society, Structure, Tenements, TN, TNSCB, TV, unhygienic, Worker, Youth | 1 Comment »

Tamil Actor Srikanth’s Wedding imbroglio – Engagement canceled?

Posted by Snapjudge மேல் மே 20, 2007

நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூன் 18-ல் திருமணம்

சென்னை, மே 13: நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூன் 18-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

srikanth Wedding pictures vandhana issueரோஜாக் கூட்டம் என்ற தமிழ்ப் படம் மூலம் அறிமுகமான ஸ்ரீகாந்த், அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில், கனா கண்டேன், பார்த்தீபன் கனவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது இயக்குநர் சசி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கும் புதுச்சேரியில் பிறந்து சென்னையில் குடியேறிய, சாரங்கபாணி மற்றும் ஷாலினி ஆகியோரது மகள் வந்தனா என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 18-ம் தேதி இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற உள்ளது.

வந்தனா

  • ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ. படிப்பையும்,
  • ஸ்விட்சர்லாந்தில் ஹோட்டல் மேலாண்மைப் படிப்பையும் முடித்துள்ளார்.

———————————————————————————————

நடிகர் ஸ்ரீகாந்த் திருமணம் ரத்து

சென்னை, மே 20: நடிகர் ஸ்ரீகாந்த் மணமுடிக்கவிருந்த வந்தனாவின் குடும்பத்தினர் மோசடிப் புகாரில் சிக்கியதையடுத்து இந்தத் திருமணம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம்:

“ரோஜாக்கூட்டம்’ படத்தில் அறிமுகமாகி “ஏப்ரல் மாதத்தில்’, “பார்த்திபன் கனவு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சாரங்கபாணி என்பவரின் மகள் வந்தனாவுக்கும் வரும் ஜூன் 18-ம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.

கடந்த வாரம் முதல் திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் வந்தனாவின் சகோதரர் ஹர்ஷவர்தன், தந்தை சாரங்கபாணி ஆகியோர் மீது பல மோசடிப் புகார்கள் வெளிவந்துள்ளன.

சென்னையில் உள்ள காலி மனைகள் மீது போலி ஆவணங்கள் தயாரித்து அவற்றை விற்கவும், அந்த சொத்துக்களின் மீது கடன் பெற்று ஏமாற்றியதாகவும் ஹர்ஷவர்தன் மீது வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வேளச்சேரி, வள்ளுவர் கோட்டம், தி.நகர், கோட்டூர்புரம் போன்ற இடங்களில் நில மோசடி செய்ததற்காக ஏற்கெனவே கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கிறார் ஹர்ஷவர்தன்.

மேலும் உதகையில் “மெரிட் இண்டர்நேஷனல் எஜுகேஷனல் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் வந்தனா குடும்பத்துக்கு ஒரு கல்லூரி இருக்கிறது. வந்தனாதான் இக்கல்லூரியின் செயல் இயக்குநராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்தக் கல்லூரியை விரிவுபடுத்த சென்னையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சுமார் 12 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுள்ளனர். அதற்கான தவணையும் சில மாதங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. அதற்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இவற்றையெல்லாம் மறைத்த வந்தனாவின் குடும்பத்தினர் தங்களுடைய மகளை ஸ்ரீகாந்துக்கு திருமணம் செய்ய நிச்சயித்துள்ளனர். இதுபற்றி தெரிந்தவுடன் ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் மணமகள் வீட்டாரிடம் விசாரித்துள்ளனர். ஆனால் மணமகள் குடும்பத்தாரின் சமரச பேச்சுவார்த்தை எதுவும் பலனளிக்கவில்லை எனத் தெரிகிறது.

இதுகுறித்து ஸ்ரீகாந்தின் தந்தையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

திருமண வேலைகள் வேகமாக நடந்துவந்தன. இந்தச் சமயத்தில் அவர்களைப் பற்றி வெளிவரும் செய்திகள் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வந்தன. அதையும் நிறுத்த சொல்லிவிட்டோம். என் மகனின் எதிர்காலம்தான் முக்கியம் என தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைகளால் ஸ்ரீகாந்த்-வந்தனா திருமணம் நடைபெறுவது சாத்தியமில்லை என்றே ஸ்ரீகாந்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

—————————————————————————————-

ஸ்ரீகாந்தையே மணப்பேன்:வந்தனா சபதம்

சென்னை, மே 21: என் மீதான களங்கத்தைப் போக்கி குற்றமற்றவள் என நிரூபித்து, ஸ்ரீகாந்தை மணம் முடிப்பேன் என்று வந்தனா நம்பிக்கையுடன் கூறினார்.

இந்நிலையில் நிருபர்களிடம் வந்தனா ஞாயிற்றுக்கிழமை கூறியது:

கடந்த சில நாள்களாக, என் குடும்பத்தினர் பற்றி வெளிவரும் செய்திகளால் அதிர்ச்சி அடைந்துள்ளேன். மணப்பெண் என்ற முறையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். என் மீது எந்த வழக்கும் இல்லை. என்னிடம் போலீஸôர் விசாரணை நடத்தவில்லை.

நான் எந்தவொரு வங்கியிலும் கடன் பெறவில்லை. யார் வாங்கிய கடனுக்கு ஒப்புதலோ, உத்தரவாதமோ கொடுக்கவில்லை. கடன் பத்திரத்தில் கையெழுத்து கூட போடவில்லை. அப்படியிருக்கும்போது எப்படி என் மீது வழக்குத் தொடர முடியும்.

எனக்கும், ஸ்ரீகாந்துக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தைத் தடுத்து நிறுத்த யாரோ திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புகிறார்கள் என நினைக்கின்றேன்.

சகோதரருடன் தொடர்பில்லை: எனது சகோதரர் ஹர்ஷவர்தன், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக எங்களைப் பிரிந்து தனியாக வாழ்கிறார். எனது நிச்சயதார்த்தத்துக்குகூட அவர் வரவில்லை. அவரோடு எனக்கோ, எங்கள் குடும்பத்துக்கோ எந்தவித தொடர்பும் இல்லை. அப்படி இருக்கும்போது அவரது செயல்பாடுகளை எங்களோடு இணைத்து பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

எனது குடும்பமும், ஸ்ரீகாந்த் குடும்பமும் ஒன்றாக உட்கார்ந்து பேசித்தான் திருமணத்தை முடிவு செய்தோம். அதேபோன்று இப்போது புதிதாக தோன்றியுள்ள பிரச்சினைகளையும் இரண்டு குடும்பமும் உட்கார்ந்து பேசி முடிவு செய்வோம்.

என் மீது இப்போது ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்கி, குற்றமற்றவள் என்பதை நிரூபித்து, ஸ்ரீகாந்த்தை மணப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஸ்ரீகாந்த் புத்தி கூர்மை உள்ளவர். இப்போதுள்ள சூழ்நிலையை அவர் நன்கு புரிந்து கொண்டு, என்னையும் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன் என்றார் வந்தனா.

———————————————————————————————

நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும்: போலீஸ் அதிகாரி தகவல்

சென்னை, ஜுன். 15-

நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும் என்று ஒரு போலீஸ் உயர் அதிகாரி கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:-

நடிகர் ஸ்ரீகாந்துக்கும், வந்தனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்துள்ளது. இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றித்திரிந்துள்ளனர்.

அப்போது தங்கள் காதலுக்கு அடையாளமாக இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற போட்டோக்கள் எடுத்துள்ளனர். அந்த போட்டோக்கள் அனைத்தையும் வந்தனா பத்திரமாக வைத்துள்ளார்.

இடையில் ஏற்பட்ட சிறு, சிறு குழப்பங்களால் எங்கே ஸ்ரீகாந்தை திருமணம் செய்ய முடியாமல் போய் விடுமோ என்று வருத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் அவர்கள் பிரிய நேரிட்டது.

ஆனால் நடிகர் ஸ்ரீகாந்த்தை பிரிந்து இருக்க வந்தனாவால் முடியவில்லை. எனவே நேற்று முன்தினம் (13-ந்தேதி) காலை பெட்டி, படுக்கைகளுடன் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வந்தனா வந்து விட்டார்.

இதை ஸ்ரீகாந்த் பெற்றோர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வந்தனாவிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறி உள்ளனர். அப்போது நடிகர் ஸ்ரீகாந்தும் வீட்டில்தான் இருந்துள்ளார்.

காதலியின் இந்த திடீர் நடவடிக்கையால் நடிகர் ஸ்ரீகாந்த் கடும் அதிர்ச்சி அடைந் தார். அவர் வந்தனாவிடம் சமரசம் செய்துள்ளார்.

“இப்போது எந்த பிரச்சினையும் செய்யாதே, எல்லா வற்றையும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். தயவு செய்து வீட்டை விட்டு வெளியில் சென்று விடு” என்று கெஞ்சி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வந்தனா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தான் தயாராக வைத்து இருந்த போட்டோக்களை எடுத்து ஸ்ரீகாந்த் பெற்றோரிடம் காட்டி உள்ளார்.

அப்போது அவர், “ஸ்ரீகாந் துக்கும் எனக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. ஊர் அறிய திருமணம் செய்யத்தான் நான் காத்து இருந்தேன். எங்களைப் பிரித்து விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்” என்று மிரட்டல் தொனியில் பேசி உள்ளார்.

இதனால் பயந்து போன ஸ்ரீகாந்த் வீட்டை விட்டு கோபத்துடன் வெளியேறி உள்ளார். அவர் தற்போது திருப்பதியிலோ அல்லது ஐதராபாத்திலோ இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

வந்தனா சொல்வது போல ஸ்ரீகாந்துடன் திருமணம் நடந்துள்ளதாக என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரியவரும். எனவே அவர் இருக்கும் இடைத்தை தேடி கண்டுபிடித்து அவரிடமும் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளோம்.

அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து இருந்தால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.
———————————————————————————————
பேசி தீர்க்க வேண்டியதை தெருவுக்கு இழுத்து விட்டனர்: ஸ்ரீகாந்த் சித்தப்பா பேட்டி

சென்னை, ஜுன். 15-

வந்தனாவின் அதிரடி வருகையால் ஸ்ரீகாந்தும் அவர் பெற்றொரும் வீட்டை காலி செய்து விட்டு வெளியேறி விட்டனர். தற்போது அங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் சித்தப்பா நரசிம்மன் மட்டுமே உள்ளார்.

அவர் கூறியதாவது:-

எங்களது சொந்த ஊர் திருப்பதி. நாங்கள் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்கள் குடும்பத்தில் யாராவது இறந்தால் கூட திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான மரியாதையுடன் தான் இறுதிச் சடங்குகள் நடைபெறும். அந்த அளவுக்கு எங்கள் குடும்பம் ஆச்சாரமானது.

ஸ்ரீகாந்த் வந்தனாவை மிகவும் விரும்பினான். எனவேதான் நாங்கள் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தோம். பிறகுதான் வந்தனா குடும்பத்தினர் மீது வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து வந்தனாவிடம் கேட்டபோது, “எனக்கு எதுவும் தெரியாது” என்று மறைத்து விட்டார். திருமணத்துக்கு முன்பே இப்படி உண்மைகளை மறைப்பவர் திருமணத்துக்குப் பிறகு எப்படி இருப்பாரோ என்ற பயம் எங்களுக்கு ஏற்பட்டது. எனவேதான் திருமணத்தை தடை செய்தோம்.

நேற்று முன்தினம் வந்தனா திடீரென்று எங்கள் வீட்டுக்குள் புகுந்து விட்டார். பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினையை தெருவுக்கு கொண்டு வந்து விட்டார். நாங்கள் அவமானத்தால் தலைகுனிந்து நிற்கிறோம்.

இவ்வாறு நரசிம்மன் வேதனையுடன் கூறினார்.

மனித உரிமைகள் கழக மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் கல்பனா கூறியதாவது:-

வந்தனா எங்களிடம் நடந்த சம்பவங்கள் குறித்து ஏற்கனவே புகார் கூறி இருந்தார். திடீரென அவர் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு சென்றதை இன்று காலை பத்திரிகைகளில் பார்த்து அறிந்தோம். இன்று காலை அவரை சந்தித்துப் பேசினோம். அப்போது அவர் தனக்கும் ஸ்ரீகாந்துக்கும் திருமணம் நடந்து விட்டதாக கூறினார். ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணத்துக்கு ஆதாரம் உள்ளது.

எனவே நாங்கள் ஸ்ரீகாந்துடன் வந்தனாவை சேர்த்து வைப்போம். போலீஸ் இதில் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை அறிய காத்து இருக்கிறோம்.

இவ்வாறு கல்பனா கூறினார்.
——————————————————————————————-
கோவிலில் தாலி கட்டினார்: நடிகர் ஸ்ரீகாந்த் திருமண படங்கள் வந்தனா வெளியிட்டார்- பரபரப்பு பேட்டி

சென்னை, ஜுன். 15-

ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில் உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த்.

இவர் வடபழனி குமரன் காலனியில் தந்தை கிருஷ்ணமாச்சாரி, தாயார் ஜெயந்தி ஆகியோருடன் வசித்து வருகிறார்.

நடிகர் ஸ்ரீகாந்த் சென்னை அண்ணாநகர் `கே’ பிளாக்கில் வசித்து வரும் சாரங்கபாணியின் மகள் வந்தனா (வயது24)-வை காதலித்து வந்தார். முதலில் இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. பிறகு சமரசம் ஏற்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் ஸ்ரீகாந்த்- வந்தனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன. இந்த நிலையில் வந்தனாவின் பெற்றோர் சாரங்கபாணி- ஷாலினி, அண்ணன் ஹர்ஷவர்த்தன் மீது சி.பி.ஐ. போலீசில் மோசடி வழக்குகள் இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதனால் ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணம் நடைபெறவில்லை. திருமணம் நடக்காது என்று ஸ்ரீகாந்த் பெற்றோர் அறிவித்தனர்.

திருமண முறிவு ஏற்பட்டதால் ஸ்ரீகாந்த் அதிர்ச்சி அடைந்தார். காதலி வந்தனாவுடன் பேசுவதையும் நிறுத்தி விட்டார். வந்தனா எவ்வளவோ முயன்றும் ஸ்ரீகாந்த் பேசவில்லை. என்றாலும் மனம் தளராத வந்தனா “ஸ்ரீகாந்தை திருமணம் செய்தே தீருவேன். நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று சபதம் செய்தார்.

கடந்த சில தினங்களாக அவர் நிறுபூத்த நெருப்பு போல மனம் குமுறியபடி இருந்தார். நேற்று முன்தினம் பெட்டி படுக்கைகளுடன் அதிரடியாக ஸ்ரீகாந்த் வீட்டுக்குள் புகுந்து விட்டார்.

ஸ்ரீகாந்துக்கும் தனக்கும் திருமணம் நடந்து விட்டதாக கூறிய அவர் இனி இந்த வீட்டில்தான் இருப்பேன் என்றார். ஸ்ரீகாந்த் மனைவி போல அந்த வீட்டில் சுற்றி வந்தார். அதோடு ஸ்ரீகாந்த் பெற்றோரையும் மிரட்டும் வகையில் பேசினார்.

வந்தனா இந்த ரகளையில் ஸ்ரீகாந்த் மட்டுமின்றி அவர் பெற்றோரும் ஆடி போய் விட்டனர். இது தொடர்பாக அவர்கள் வடபழனி போலீசில் நேற்று புகார் செய்தனர்.

பெண் இன்ஸ்பெக்டர் வயோலாபாய் மனுவை ஏற்றுக்கொண்டு விசாரித்தார். நேற்றிரவு நேரமாகி விட்டதால் இன்று காலை அவர்கள் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.

வந்தனாவிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து வெளியேற வந்தனா மறுத்து விட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இது தொடர்பாக ஒரு போலீஸ் உயர்அதிகாரி கூறியதாவது:-

நடிகர் ஸ்ரீகாந்துக்கும், வந்தனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்துள்ளது. இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றித்திரிந்துள்ளனர்.

அப்போது தங்கள் காதலுக்கு அடையாளமாக இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற போட்டோக்கள் எடுத்துள்ளனர். அந்த போட்டோக்கள் அனைத்தையும் வந்தனா பத்திரமாக வைத் துள்ளார்.

இடையில் ஏற்பட்ட சிறு, சிறு குழப்பங்களால் எங்கே ஸ்ரீகாந்தை திருமணம் செய்ய முடியாமல் போய் விடுமோ என்று வருத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் அவர்கள் பிரிய நேரிட்டது.

ஆனால் நடிகர் ஸ்ரீகாந்த்தை பிரிந்து இருக்க வந்தனாவால் முடியவில்லை. எனவே நேற்று முன்தினம் (13-ந்தேதி) காலை பெட்டி, படுக்கைகளுடன் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வந்தனா வந்து விட்டார்.

இதை ஸ்ரீகாந்த் பெற்றோர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வந்தனாவிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறி உள்ளனர். அப்போது நடிகர் ஸ்ரீகாந்தும் வீட்டில்தான் இருந்துள்ளார்.

காதலியின் இந்த திடீர் நடவடிக்கையால் நடிகர் ஸ்ரீகாந்த் கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் வந்தனாவிடம் சமரசம் செய்துள்ளார். “இப்போது எந்த பிரச்சினையும் செய்யாதே, எல்லா வற்றையும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். தயவு செய்து வீட்டை விட்டு வெளியில் சென்று விடு” என்று கெஞ்சி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வந்தனா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தான் தயாராக வைத்து இருந்த போட்டோக்களை எடுத்து ஸ்ரீகாந்த் பெற்றோரிடம் காட்டி உள்ளார்.

அப்போது அவர், “ஸ்ரீகாந்துக்கும் எனக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. ஊர் அறிய திருமணம் செய்யத்தான் நான் காத்து இருந்தேன். எங்களைப் பிரித்து விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்” என்று மிரட்டல் தொனியில் பேசி உள்ளார்.

இதனால் பயந்து போன ஸ்ரீகாந்த் வீட்டை விட்டு கோபத்துடன் வெளியேறி உள்ளார். அவர் தற்போது திருப்பதியிலோ அல்லது ஐதராபாத்திலோ இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

வந்தனா சொல்வது போல ஸ்ரீகாந்துடன் திருமணம் நடந்துள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரியவரும். எனவே அவர் இருக்கும் இடைத்தை தேடி கண்டுபிடித்து அவரிடமும் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளோம்.

அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து இருந்தால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

இந்நிலையில் வந்தனாவின் தாய் ஷாலினி வடபழனி போலீசில் புகார் செய்துள்ளார். அதில் எனது மகளை ஸ்ரீகாந்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும், வந்தனாவின் பெற்றோர் ரூ. 10 லட்சம் பணம் கேட்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

இந்த புகார் மனு மீது இன்று மதியம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வயோலாபாய் விசாரணை நடத்தினார். ஸ்ரீகாந்தின் வீட்டுக்கு சென்ற அவர் அங்கு தங்கிருந்த வந்தனாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

ஸ்ரீகாந்தின் பெற்றோர் ரூ. 10 லட்சம் பணம் கேட்டனர் என்று கூறியிருப்பதால் அவர்கள் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது. எனவே ஸ்ரீகாந்தின் பெற்றோர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.srikanth marriage pictures vandhana issue

கணவன்- மனைவியாக வாழ்ந்தனர் வந்தனா தாயார் பேட்டி

ஸ்ரீகாந்தும் வந்தனாவும் கணவன்- மனைவியாக வாழ்ந்தனர் என்று வந்தனாவின் தாய் கூறினார்.

ஸ்ரீகாந்தின் வீட்டில் வைத்து வந்தனாவின் தாய் ஷாலினி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருமணம் முடிந்த பிறகு ஸ்ரீகாந்த் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து தங்கினார். அப்படி தங்கும் நாட்களில் ஸ்ரீகாந்தும், வந்தனாவும் கணவன்- மனைவி போலவே வாழ்ந்து வந்தனர்.

எங்களை பொறுத்தவரை ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணம் முடிந்து விட்டது. எனவே இதில் நாங்கள் மறுப்பு எதுவும் சொல்ல முடியாது. எங்கள் குடும்பத்தினர் மீது வழக்கு இருப்பதாக குற்றச்சாட்டு கூறி உள்ளனர். ஆனால் ஸ்ரீகாந்த், அக்கா என்று அழைக்கும் கீதாவின் மீதும் வழக்கு உள்ளது.

எனவே ஸ்ரீகாந்தின் பெற்றோர் எனது மகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போது எனது மகளிடம் இருந்து ஸ்ரீகாந்தை பிரித்து விவாகரத்து வாங்கும் முயற்சி நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
———————————————————————————————-

Posted in abuse, Affair, Alimony, Annul, Annulment, Apartments, April Mathathil, Assets, bank, Bride, Bridegroom, Charangabani, Charankabani, Cheat, Cinema, Divorce, Dowry, Engagement, family, Female, Finance, Flat, Harshavardhan, Housing, HR, Human Rights, Images, Justice, Kid, Kisukisu, Kotturpuram, Law, Loan, Love, Marriage, Merit International, Movies, Order, Photos, Pictures, Police, Prathiban Kanavu, Proof, Puthucherry, Real Estate, Relation, Roja koottam, Rojakoottam, Rumour, Sarangabani, Scandal, Shaalini, Shalini, Shrikant, Shrikanth, Snaps, Srikant, Srikanth, Status, T nagar, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Thirumala, Thirupathi, Thirupathy, TTD, Valluvar Kottam, Vandana, Vandhana, Velachery, Vows, Wedding | 6 Comments »