நறுக்கென்ற உச்சரிப்பு. அளவான பாவனை. இயல்பான நடிப்பு. வசீக ரிக்கும் புன்னகை. துணிச்சலான பெண் பாத்திரத்துக்கு தீபா வெங்கட் அத்தனை பொருத்தம் என்று பெயர் எடுத்திருக்கிறார். அடுத்து காமெடியில் கலக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
படப்பிடிப்பு இடைவேளையில் அவ ரைச் சந்தித்தோம்.
உங்களைப் பற்றி…?
நான் பிறந்தது சென்னையில்… 12 வயது வரை மும்பையில் இருந்தோம்.
பிறகு மீண்டும் சென்னை வந்துவிட் டோம். பாண்டிச்சேரி யுனிவர்சிட்டியில் மாஸ்டர் ஆஃப் ஃபைனான்ஸ் மேனேஜ் மெண்ட் படித்திருக்கிறேன். அம்மா பத்மா, அப்பா வெங்கட், தங்கை மீனா, பாட்டி என அன்பான குடும்பம்.
நடிப்புத்துறைக்கு வந்தது எப் படி?
நான் என்னுடைய 13 வயதிலேயே நடிக்கத் தொடங்கிவிட்டேன். எங்களு டைய குடும்ப நண்பர் மூலம் கிடைத்த அறிமுகத்தால் கே.பாலசந்தரின் “கைய ளவு மனசு’, “சின்னஞ்சிறு உலகம்’ சீரியல் களில் சிறுமியாக நடித்தேன். அப்படியே மூன்று வருடங்கள் தொடர்ச்சியாகப் பல சீரியல்களில் நடித்தேன். அதன்பிறகு லெவன்த், ப்ளஸ் டூ படிப்பு பாதித்துவி டக்கூடாது என்பதற்காக இரண்டு வரு டங்கள் நடிப்பதை நிறுத்திவைத்திருந் தேன்.
உங்களை பிரபலமாக்கிய தொடர்?
கே.பாலசந்தரின் “ரகுவம்சம்’ மெகா தொடருக்குப் பிறகுதான் எனக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது. பெற்றோரின் அரவணைப்பு இல்லாமல் போதைப் பழக்கத்துக்கு அடி மையான ஒரு பெண் கேரக் டர். அந்த சீரியலில் நடித்த பிறகுதான் பல பெரிய வாய்ப்புகள் வரத்தொடங்கின. அதன்பி றகு “சித்தி’, “பயணம்’, “கோபுரம்’, “விழுது கள்’, “வாரிசு’, “கீதாஞ்சலி’, “சாரதா’, “19-எ லவ் ஸ்டோரி’, “சூர்யா’, “அல்லி ராஜ்ஜி யம்’ உள்பட பல தொடர்களிலும் எனக்கு முக்கியமான கேரக்டர்கள் அமைந்தன. எல்லாவற்றிலும் நல்ல பெயர் கிடைத்தது. “கோலங்கள்’ சீரியல் வெற்றிகரமாகப் போய்க்கொண்டிருக்கி றது.
இந்தத் தொடர்களுக்கு மத்தி யில் சினிமா பிரவேசம் எப்படி?
டி.வி.யில் கிடைத்த நல்ல பெயரால் சினிமாவுலகத்திலும் அழைப்பு வந்தது.
“உல்லாசம்’ படம்தான் என்னுடைய முதல் படம். அதில் விக்ரமின் ஃப்ரண் டாக நடித்திருந்தேன். அதன்பிறகு “தினந் தோறும்’ படத்தில் முரளியின் தங்கை யாக நடித்தேன். பிறகு சிறுசிறு வேடங்க ளில் நடித்தேன். “தில்’ படத்தில் என்னு டைய கேரக்டர் நன்கு பேசப்பட்டது.
இப்போது “மலைக்கோட்டை’ படத்தில் நடித்துள்ளேன்.
சினிமாவில் இப்போது அதிக மாக நடிப்பதுபோல தெரியவில் லையே? வாய்ப்புகள் வரவில் லையா?
வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருந்தன. ஆனால் எல்லாரும் தங்கை, நாயகியின் தோழி, நான்கு பேரில் ஒருத்தி போன்ற ஒரே மாதிரியான கேரக்டர்க ளில் நடிக்கத்தான் அழைத்தார்கள். அத னால் நடிக்கவில்லை.
அப்படியானால் கதாநாயகியா கத்தான் நடிப்பீர்களா?
நான் அப்படிச்சொல்லவில்லை.
இரண்டு காட்சிகளில் வந்தால்கூட போதும்; ஆனால் அந்தக் கேரக்டர் பேசப்பட வேண்டும். அதுபோன்ற கேரக்டர்களில் மட்டும்தான் நடிக்க முடி வெடுத்திருக்கிறேன். அப்படி அமையும் படங்கள் சிறிய பட்ஜெட் படமாகவோ, பெரிய பட்ஜெட் படமாகவோ, ஓடும் படமோ, ஓடாத படமாகவோ எதுவாக இருந்தாலும் சரிதான்.
நீங்கள் டி.வி. சீரியல்களில் நடிப்பதையும் குறைத்து வருகிறீர் கள் என்று கூறப்படுவது பற்றி…?
குறைத்துக்கொள்கிறேன் என்பதை விட தேர்ந்தெடுத்த சிலவற்றில் மட்டும் நடிக்கிறேன் என்பதுதான் உண்மை; அங் கும் ஒரே மாதிரியாக நடிக்க வேண்டியி ருக்கிறது. என்னுடைய அடுத்த கட்ட டி.வி., சினிமா கேரியரை வித்தியாசமாக அமைக்க விரும்புகிறேன்.
வித்தியாசமாக என்றால்…?
மக்கள் நாளெல்லாம் உழைத்து விட்டு வீட்டுக்கு வந்து ரிலாக் ஸôக இருக்கவேண்டும் என நினைப்பார்கள். அந்த நேரம் பார்த்து நான் டி.வி.யில் கண் ணைக் கசக்கிக் கொண்டிருந் தால் நன்றாகவா இருக்கும்.
நானும் அழுதுபுரண்டு நடித் திருக்கிறேன். இனி மாற்றம் தேவை என இப்போது நினைக்கிறேன். குறிப்பாக “அல்லி ராஜ்ஜியம்’ தொட ரில் நடித்தபோது நானும் சிரித்து மற்றவர்களையும் சிரிக்க வைத்தேன். அந்தத் தொடருக்குக் கிடைத்த வர வேற்பு என்னை மிகவும் ஆச்சரி யப்படுத்தியது. அதனால் இனி மேல் என் வழியை காமெடி வழி யாக்கலாம் என நினைத்திருக்கி றேன். இல்லாவிட்டால் பெண்க ளுக்கு தன்னம்பிக்கையூட்டும்படியான சேலஞ்சிங்கான ரோல்களில் நடிக்க வேண்டும்.
உங்களுடைய பொழுது போக்கு?
புத்தகங்கள் படிப்பது… அதிலும் ஒவ் வொரு நாடுகளைப் பற்றிய வரலாற்றுப் புத்தகங்கள் மிகவும் பிடிக்கும். அதே போல நேரம் காலம் பார்க்காமல் இண் டர்நெட்டில் ப்ரவுஸிங்; எனக்கு உலகத் தில் நடக்கும் விஷயங்களை உடனுக்கு டன் தெரிந்துகொள்வதில் அதிக ஆர் வம். நெட்டிலேயே எல்லா நியூûஸயும் படித்துவிடுவேன்.
மிகவும் பிடித்த விஷயம்?
கர்நாடக இசை. பாடகி மஹதியின் தந்தை திருவையாறு சேகர்தான் என்னு டைய குரு. அவரிடம் 11 வருடங்கள் முறையாக கர்நாடக இசை கற்றிருக்கி றேன். பிரபலமான கர்நாடக மேதைக ளின் இசை ஆல்பங்களின் கலெக்ஷன் என்னிடம் இருக்கிறது. நேரம் கிடைக் கும்போதெல்லாம் அவற்றைக் கேட் பேன். சினிமாவில் மெலடி பாட்டுகளை விரும்பிக் கேட்பேன்.
உங்களுடைய ரோல் மாடல்?
சுஹாசினி, ரேவதி.
பிடித்த நடிகர்?
விக்ரம்.
உங்களுக்குப் பிடித்த ஆடை?
சேலைதான்; எப்போதாவது சுடிதார்.
அழகின் ரகசியம்?
மகிழ்ச்சி. மேக்-அப் இன்னொரு காரணம்.
திருமணம் எப்போது? காதல் திருமணமா?
எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லாரும் ஃப்ரண்டஸ் போலத்தான் பழகுவோம்.
யாரும் யாரிடமும் எதையும் மறைப்ப தில்லை. நான் காதல் வயப்பட்டால் வீட் டில் தைரியமாகச் சொல்வேன். அதை ஏற்றுக்கொள்ளும் அன்பும் பக்குவமும் என் குடும்பத்தினருக்கு உண்டு. ஆனால் நான் யாரையும் காதலிப்பதாக வீட்டில் சொல்லவில்லை. வீட்டில் வரன் பார்த் துக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த வரு டம் “டும் டும் டும்’ சத்தம் கேட்கலாம்.
-மனோஜ்கிருஷ்ணா