Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Khalisthan’ Category

Massacres, Encounters, Jail Deaths, TADA, POTA, Torture killings – TSR Subramanian

Posted by Snapjudge மேல் மே 30, 2007

மோதல்களா, படுகொலைகளா?

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

குஜராத்தில் நடந்த “”போலி மோதல்” சம்பவம் எல்லோருடைய மனதையும் பாதித்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியையும் வேறு சில தலைவர்களையும் தீர்த்துக்கட்ட வந்ததாகக் கூறப்பட்ட “”தீவிரவாதி” சோரபுதீன் என்பவர் போலீஸôருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. சோரபுதீனுடன் அப்போது இருந்த அவருடைய மனைவி கெüசர் பீவி பிறகு காணாமல் போய்விட்டார்; சோரபுதீன் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த மற்றொரு சாட்சி அச் சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்குப் பிறகு கொல்லப்பட்டார்.

குஜராத் மாநில அரசின் சி.ஐ.டி. போலீஸôர் இப்போது இச் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். முழு உண்மைகளும் இன்னும் தெரியவில்லை. ரத்த வெறிபிடித்த திரைப்பட கதாசிரியர் கூட கற்பனை செய்யத் தயங்கும் ஒரு “”கோரமான கதை” அரங்கேறி முடிந்திருக்கிறது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே கொலைகாரர்களாக மாறும்போது, சமூகம் தன்னுடைய பாதுகாப்புக்கு யாரை நாடும்?

“”மோதல்கள்”, அதிலும் “”போலி மோதல்கள்” சமீபகாலத்தில்தான் இந்திய சமுதாயத்தில் இடம்பெறத் தொடங்கியுள்ளன. சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய படுகொலைகளை எதற்காகவும் மன்னிக்க முடியாது.

1960-களிலும் 1970-களிலும் மேற்கு வங்க மாநிலத்தில் சித்தார்த்த சங்கர் ராய் முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்தான், நக்ஸல்களை வேட்டையாடும் போலி மோதல்கள் ஆரம்பித்தன. சாரு மஜும்தார் என்ற நக்ஸலைட் தலைவரையும் அவருடைய ஆதரவாளர்களையும் ஒழிக்க, மேற்கு வங்கப் போலீஸôர் சட்டத்துக்குப் புறம்பான இந்த வழிமுறையைக் கையாண்டனர்.

நக்ஸல்கள் பலர் கொல்லப்பட்டபோதும், நக்ஸல்பாரி இயக்கமும் வளர்ந்தது; நக்ஸல்கள் உருவாகக் காரணம் வெறும் சட்டம், ஒழுங்கு பிரச்னை மட்டும் அல்ல. சமூக, பொருளாதார நிலைகளில் மக்களிடையே பெரும் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போதெல்லாம் இம் மாதிரியான வன்செயல்கள் மக்களிடமிருந்து வெடிக்கும்.

நக்ஸல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் தீவிரம் காட்டிய பிறகு, பஞ்சாப்பில் காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க ஆளுநராக சித்தார்த்த சங்கர் ராய் நியமிக்கப்பட்டார். காவல்துறைத் தலைவராக இருந்த கே.பி.எஸ். கில் அவருடன் சேர்ந்து காலிஸ்தான் தீவிரவாதிகள் பலரை இப்படிப்பட்ட மோதல்களில் வெற்றிகரமாக அழித்தனர். அதே சமயம் இருதரப்பிலும் ஏராளமாக ரத்தம் சிந்த நேர்ந்தது.

அதன் பிறகு இந்த “”மோதல்” முறை ஒழிப்பு, உத்தரப்பிரதேசத்தின் பண்டல்கண்ட் பகுதியில் கொள்ளைக்காரர்களைத் தீர்த்துக் கட்ட பயன்படுத்தப்பட்டது. இதிலும் ஓரளவுக்குத்தான் வெற்றி கிடைத்தது. உண்மையான வெற்றி எப்போது கிடைத்தது என்றால், கொள்ளைக்காரர்களுக்கென்று உழைத்துப் பிழைக்க அரசே நிலம் கொடுத்தபோதுதான் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் குறைந்தன.

ஆனால் இத்தகைய முறை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பலன் தரவில்லை. அங்கு ராணுவம், போலீஸôரின் அடக்குமுறையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராகச் சண்டையிடும் மனோபாவத்திலேயே இருந்தனரே தவிர சமாதான வழிமுறைகளை ஏற்கத் தயாராக இல்லை.

வட இந்திய மாநிலங்களில் சமூக விரோதிகளை ஒடுக்க துணை நிலை ராணுவப் படைகளைச் சேர்ந்த இடைநிலை அதிகாரிகளும் ஜவான்களும் இதே போலி மோதல் முறையைக் கையாண்டனர். அத்துடன் சிறந்த போலீஸ் அதிகாரி என்ற பதக்கத்தையும் பாராட்டையும் வாங்க இந்த மோதல்களை ஒரு கருவியாகவும் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

முதலில் சில சமூக விரோதிகள் கொல்லப்பட்டாலும் சில அப்பாவிகளும் தவறுதலாக பலியாக ஆரம்பித்தனர். பிறகு, திட்டமிட்டே “”இந்த மோதல்கள்” மூலம் பலரைக் கொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

போலி மோதல்கள் மூலம் அப்பாவிகள் கொல்லப்படுவது அதிகரித்ததால்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் வட-கிழக்கு மாநிலங்களிலும் பாதுகாப்புப் படையினர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட ஆரம்பித்தது. இப்போதோ போலி மோதல்கள் என்பது பாதுகாப்புப் படையினருக்கு பணம் கொடுத்தால் நடைபெறும் “”கூலிக்குக் கொலை” என்றாகிவிட்டது. காக்கிச் சீருடையில் இருப்பவர்கள் பண ஆதாயத்துக்காகக் கொல்லும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

இங்கே கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் இருக்கின்றன. சட்டத்தை மீறுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடனே, கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த நீதித்துறை தவறிவிட்டது.

பயங்கரவாதிகளும் கொள்ளைக்காரர்களும் போலீஸôரால் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆவதும் பிறகு தலைமறைவு ஆவதும் பின்னர் அதே குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதும் தொடர்கதையாகிவிட்டதால், இது நேரத்தை விரயமாக்கும் வேலை, நீதித்துறைக்கு முன்பிருந்த தண்டிக்கும் அதிகாரம் போய்விட்டது, இனி நாமே தண்டித்துவிடலாம் என்ற முடிவுக்கு போலீஸôரையும் பாதுகாப்புப் படையினரையும் தள்ளியது.

இத்தகைய போலி மோதல்கள் அதிகரிக்க, இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் நீதிமன்ற நடைமுறைகள் முக்கிய காரணம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நோக்கம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதை அடைவதற்கான நடைமுறையும் என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார்.

பயங்கரவாதிகள், கொள்ளைக்காரர்கள், தீவிரவாதிகள், சமூகவிரோதிகள் போன்றவர்களைத் தண்டிப்பதில் நீதித்துறை தவறினாலும் சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய படுகொலைகளைச் செய்வதில் நியாயமே இல்லை.

சட்டத்தை அமல் செய்ய வேண்டியவர்களுக்கு தரப்படும் அதிகாரம் அல்லது அவர்களே தங்களுக்கு வழங்கிக் கொள்ளும் அதிகாரம், அதிகார துஷ்பிரயோகமாகவே முடியும் என்பதுதான் இயற்கை.

1970-களில் “மிசா’, “காஃபிபோசா’ போன்ற சட்டங்களையும், பின்னாளில் “தடா’ சட்டத்தையும் அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தியதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு தரும் இதைப்போன்ற அதிகாரங்களுக்குக் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும், மேல் அதிகாரிகளின் கண்காணிப்பும் இருக்க வேண்டும்; இல்லையென்றால் இவை தவறாகவே பயன்படுத்தப்படும்.

சோரபுதீன் விஷயத்தில் அவரைப் போலீஸôர் போலி மோதலில் சுற்றி வளைத்துக் கொன்றுள்ளனர். அவரைப் போலீஸôர் தடுத்து அழைத்துச் சென்றபோது உடன் இருந்த அவருடைய மனைவி கொல்லப்பட்டு எரிக்கப்பட்டுவிட்டார். சோரபுதீனைக் கொன்றதை நேரில் பார்த்த சாட்சியும் கொல்லப்பட்டுவிட்டார்.

இச் சம்பவத்தில் குஜராத் போலீஸôர் மட்டும் சம்பந்தப்படவில்லை, வேறு மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகளும் காவலர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

இதே அளவுக்கு இல்லாவிட்டாலும், இத்தகைய போலி மோதல்கள் இன்று நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எங்காவது நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

ஜம்மு-காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில் இத்தகைய போலி மோதல்கள் நடைபெறுகின்றன என்றால்கூட அதைப் புரிந்து கொள்ளமுடியும், ஆனால் அவற்றை நியாயப்படுத்திவிட முடியாது. ஆனால் இதை பிற மாநிலங்களில் அரங்கேற்றுவதை சகித்துக் கொள்ளவே முடியாது.

நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்ட இச் சூழலில் இதுபோன்ற மோதல் சம்பவங்களையும், படுகொலைகளையும் மக்களும், பத்திரிகைகளும் கண்டுகொள்ளாமல் விடுவது கவலையை அளிக்கிறது. இந்த விசாரணைகளே குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிரானவை என்று சிலர் நினைப்பது அதைவிட வேதனையாக இருக்கிறது.

சமூகவிரோதிகளை ஒழிக்க புனிதமான நடவடிக்கையாக போலீஸôரால் கருதப்பட்ட இச் செயல் பணத்துக்காகக் கொலை செய்வது என்ற நிலைக்குத் தாழ்ந்துவிட்டது. இதை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒழிக்க வேண்டும்.

(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்)

Posted in Agitation, Army, Bengal, Blast, Bomb, Bundelkand, Bundelkhand, Cell, Chaaru Majumdar, COFEEPOSA, COFEPOSA, Convict, conviction, Correctional, deaths, defence, Defense, Democracy, Encounter, escape, Federal, Force, Freedom, Govt, Gujarat, Independence, India, Innocent, J&K, Jail, Jammu, Judge, Justice, Kashmir, Khalistan, Khalisthan, killings, KPS Gill, Law, Leninist, Liberation, Majumdar, Majumdhar, massacre, Mazumdar, Mazumdhar, Military, Misa, ML, Modi, Naxal, Naxalbari, Order, Police, POTA, Power, Protest, Punjab, regulations, Shorabudhin, Sidhartha Sankar Roy, Sorabudheen, Sorabudhin, Srinagar, SS Roy, State, Subramanian, Suppression, TADA, terrorist, Thief, Torture, UP, Uttar Pradesh, Victim, WB, West Bengal | 2 Comments »

B Kanagaraj: Border dispute between Karnataka & Maharashtra – Belgaum: Analysis, History, Backgrounder

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

சிக்கலாகும் எல்லைப் பிரச்சினை

பி. கனகராஜ்

கர்நாடகம், மகாராஷ்டிரம் இடையே பெல்காம் எல்லைப் பிரச்சினை நீண்டகாலமாக நீடித்து வருகிறது.

பெல்காம் மட்டுமல்ல; நமது நாட்டின் பல மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினைகள் தீராத தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன.

வரலாற்றிலேயே முதன்முறையாக கர்நாடக சட்டமன்றத்தின் கூட்டம் தலைநகரான பெங்களூரை விட்டு பெல்காமில் கூட்டப்பட்டது. கர்நாடக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் பெல்காமை கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் ஆண்டுதோறும் சட்டமன்றக் கூட்டத்தை இங்கு கூட்டவும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்குப் போட்டியாக பெல்காம் மாவட்ட மராட்டியர்கள் அமைப்பான “மகாராஷ்டிர ஏகிகரண் சமிதி’ ஒரு எதிர்ப்புக் கூட்டத்தை நடத்தியது. மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இவ்வாறு பெல்காம் எல்லைப் பிரச்சினை இரண்டு மாநிலங்களிடையே அரசியல் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது.

கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் கோவா ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் முக்கோணமாக பெல்காம் மாவட்டம் உள்ளது. “மூங்கில் கிராமம்’ என்ற பொருள்படும் சமஸ்கிருதப் பெயரைப் பெற்றிருக்கும் பெல்காம் 1956ஆம் ஆண்டு வரை மராட்டியர்கள் அதிகம் வாழ்ந்த பம்பாய் மாநிலத்தில்தான் இருந்தது.

பஸல் அலி கமிஷன் பரிந்துரையால் ஏழாவது அரசியல்சாசன திருத்தச் சட்டம் மொழிவாரி மாநில சீரமைப்பை அமல்படுத்தியதால் பெல்காம் மாவட்டம் அண்டை மாநிலமான மைசூருக்கு வழங்கப்பட்டது.

அன்று முதல் இன்றுவரை “மகாராஷ்டிர ஏகிகரண் அமைப்பு’ பெல்காம் மீட்பு போராட்டத்தை மராட்டியர்களுக்காக நடத்தி வருகிறது. மராட்டியர்களின் “சம்யுக்த மஹாராஷ்டிரம்’ என்ற நீண்டகால கனவின் முக்கிய துருவமாக பெல்காம் உள்ளது.

“மகாராஷ்டிர ஏகிகரண் அமைப்பு’ இம்மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான இடங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இம்மாவட்டத்தின் உள்ளாட்சி அமைப்புகளிலும் இவ்வமைப்பு ஆதிக்கம் செலுத்துகிறது. பெல்காம் மாநகராட்சி மன்றம் சென்ற ஆண்டு மகாராஷ்டிரத்துடன் இணைய தீர்மானம் இயற்றியது. எரிச்சலுற்ற கர்நாடக மாநில அரசு மாநகராட்சி மன்றத்தையே கலைத்து விட்டது.

இந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையே இப் பிரச்சினை வெடிப்பதற்கு மொழி, பொருளாதார, மற்றும் கலாசார காரணங்கள் உள்ளன. மராட்டியர்கள் தற்போது தங்களது கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்துவதற்கு கர்நாடக மாநில அரசின் மொழிக் கொள்கை முக்கியக் காரணமாகும்.

கர்நாடகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கன்னட மொழியில் கட்டாயமாக பாடம் போதிக்கப்பட வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. பெல்காமில் பெரும்பான்மையாக உள்ள மராட்டியர்கள் கன்னட மொழித் திணிப்பை எதிர்க்கின்றனர்.

நமது அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மை மொழியினருக்கு அவர்களது தாய்மொழியிலேயே கல்வி வழங்கப்பட வேண்டும் என்று மாநிலங்களை அறிவுறுத்துகிறது. கர்நாடக அரசின் மொழிக்கொள்கை அரசியலமைப்புச் சட்டத்தின் இப்பிரிவை மீறுவதாக பெல்காம் மாவட்ட மராட்டியர்கள் எதிர்க்கின்றனர். மராட்டிய மொழியைப் பாதுகாக்க போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

பொருளாதாரக் காரணமும் இப்பிரச்சினையைப் பெரிதாக்குகிறது. இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் பெல்காம் மாவட்டம் இதமான தட்பவெப்ப நிலையில் அமைந்துள்ளது. விவசாய வளத்தைப் பெற்றுள்ள இம்மாவட்டம் கரும்பு உற்பத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவேதான் விவசாய ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் பெல்காமை மகாராஷ்டிரத்துடன் இணைக்க மராட்டியர்கள் விரும்புகின்றனர்.

இரண்டு மாநிலங்களும் பெல்காமின் மேல் விருப்பம் காட்டுவதற்கு பெல்காமின் கல்வி வளர்ச்சியும் ராணுவ முக்கியத்துவமும் காரணமாக உள்ளன. பெங்களூருக்கு அடுத்தபடியாக கல்வி வளர்ச்சி பெற்ற நகரம் பெல்காமாகும். மேலும் இந்திய ராணுவத்தின் பல பயிற்சி மையங்கள் இங்கு உள்ளன. இதனை “தரைப்படையின் தொட்டில்’ என்றே பலர் வர்ணிக்கின்றனர்.

ஆகவே மகாராஷ்டிரம் இம்மாவட்டத்தைப் பெறுவதற்கு ஆரம்பம் முதலே தீவிரம் காட்டி வருகிறது. 1956-ம் ஆண்டு மொழிவாரி மாநில சீரமைப்புச் சட்டம் அமலானபோது உருவான குழுவின் முன் தனது கோரிக்கையை வைத்தது. மேலும் 1966ம் ஆண்டு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மகாஜன் தலைமையில் நடுவர் குழுவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. ஆனால் மகாஜன் குழு தனது பரிந்துரையில் பெல்காம் மாவட்டம் கர்நாடகத்தில்தான் இருக்க வேண்டும் என கூறிவிட்டது.

இம்மாவட்டத்தில் மகாராஷ்டிரம் கோரும் 864 கிராமங்களில் 264 கிராமங்களை அதற்கு வழங்க இக்குழு பரிந்துரை செய்தது. மேலும் மகாராஷ்டிரத்தில் இருந்து கர்நாடகம் கோரும் 516 கிராமங்களில் 247 கிராமங்களை அதற்கு வழங்கவும் இக்கமிஷன் அறிவுறுத்தியது. இக்கமிஷனின் பரிந்துரைகளை கர்நாடகம் ஏற்றுக்கொண்டாலும் மகாராஷ்டிரம் நிராகரித்து விட்டது.

இல கார்புசர் என்ற கட்டட வல்லுநரால் நிர்மாணிக்கப்பட்ட, சண்டி என்ற கிராம காவல் தெய்வத்தின் பெயரால் வழங்கப்படும் சண்டீகர் ஒரு நீண்ட கால எல்லைப் பிரச்சினை ஆகும். 1966ம் ஆண்டு முதல் ஹரியாணா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு இடையே, சண்டீகர் யாருக்குச் சொந்தம் என்பதில் தீராத பிரச்சினை இருந்து வருகிறது. சீக்கிய தீவிரவாதிகள் காலிஸ்தான் என்ற தனி நாடு கோரியபோது சண்டீகர் நகரம் அரசியல் சச்சரவின் மையமாக இருந்தது. தற்போது தீவிரவாதம் தணிந்து போனாலும் பஞ்சாபியர்களின் நீண்ட கால ஏக்கமாகவே உள்ளது சண்டீகர் நகரம்.

கர்நாடகத்தில் உள்ள மங்களூரை கேரளம் கோரி வருகிறது. கேரளத்தில் உள்ள காசர்கோடு பகுதியை கர்நாடகம் கோருகிறது.

அண்மையில்கூட அசாம் மற்றும் அதனுடைய அண்டை மாநிலங்களில் இடையிலான எல்லைப் பிரச்சினையை தீர்க்க ஒரு கமிஷனை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற எல்லைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பரஸ்பர பேச்சுவார்த்தைதான் சரியான வழிமுறைகளாகும். விட்டுக்கொடுக்கும் மனநிலையில் இப்பேச்சுவார்த்தைகள் அமைய வேண்டும். விடவும் மாட்டேன், கொடுக்கவும் மாட்டேன் என்ற குறுகிய மனப்பான்மையுடன் மாநிலங்கள் செயல்படக் கூடாது. பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

“கூட்டுறவு கூட்டாட்சி’ என்ற உயரிய கொள்கையை நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்குகிறது. தேசிய வலிமைக்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் அமைதிக்கும் இக் கொள்கை அவசியமானதாகும்.

(கட்டுரையாளர்: விரிவுரையாளர், அரசியல் அறிவியல் துறை, அரசு கலைக் கல்லூரி, கோவை).

Posted in Analysis, Backgrounder, Belgaum, Bombay, Border, British, Chandigarh, Civic body, Climate, Commerce, Conflict, Coop, Cooperative, Defense, Dispute, Economy, Education, Facts, Goa, Growth, Haryana, History, India, Industry, Issues, Kannada, Karnataka, Kasargode, Kerala, Khalisthan, Language, Mahajan, maharashtra, Mangalore, Marathi, Military, Mumbai, Municipality, Op-Ed, Province, Punjab, Race, Region, Research, Rural, Society, State, Unity, Village | Leave a Comment »