Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Kaviri’ Category

Shankar, Rajni & AVM’s Sivaji release details in Puthuseri & Karnataka

Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007

சினிமா டிக்கெட் வெளியிட்ட புதுவை முதல்வர்

ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி’ திரைப்படத்தின் டிக்கெட்டை புதன்கிழமை வெளியிடுகிறார் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி (வலது). உடன் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.

புதுச்சேரி, ஜூன் 14: புதுச்சேரியில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இரு கோஷ்டிகளாகப் பிரிந்து தனித்தனியாக ரசிகர் மன்றக் காட்சிகளுக்கான சிவாஜி பட டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இந்த இரு கோஷ்டியினரின் டிக்கெட்டுகளையும் புதுவை முதல்வர் என். ரங்கசாமி புதன்கிழமை வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் பிரபலமான நடிகர்களின் படங்கள் திரையிடப்படும்போதும் ரசிகர் மன்றக் காட்சியின்போதும் பல்வேறு விதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

இதனை அடுத்து புதுச்சேரி திரையரங்குகளில் ரசிகர் மன்றக் காட்சிகளைத் தடை செய்ய புதுச்சேரி அரசு முடிவு செய்தது.

ஆனால் பெரும் வரவேற்புடன் வரும் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் புதுச்சேரி அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளை ஏற்று சிவாஜி படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிகளை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மூன்று திரையரங்குகளில் சிவாஜி படம் வெளியாவதால் ஆங்காங்கே கட்-அவுட்கள், பேனர்கள் என்று வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் புதுச்சேரியில் புதுச்சேரி மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்ற பெயரில் ஒரு கோஷ்டியாகவும், புதுவை மாநில அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டு வருகின்றனர்.

நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்று புதுச்சேரி மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தினர் கூறுகின்றனர். நாங்கள்தான் முறையாகத் தலைமையின் உத்தரவுப்படி செயல்படும் அமைப்பு என்று புதுவை மாநில அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை சிவாஜி படம் திரையிடப்படும் மூன்று திரையரங்குகளிலும் ரசிகர் மன்றக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ரஜினிசங்கர் உள்ளிட்டோர் வந்து ஒரு திரையரங்குக்கான ரசிகர் மன்றக் காட்சிக்கான டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இதனை புதுவை முதல்வர் என். ரங்கசாமி வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து புதுவை மாநில அனைத்து ரஜினிகாந்த் மன்றங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஞானேவேல், கோபி, காமராஜ் உள்ளிட்டோர் மற்றொரு குழுவாக வந்து மற்ற இரு திரையரங்குகளின் ரசிகர் மன்றக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இதனையும் புதுவை முதல்வர் என். ரங்கசாமியே வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

இரு தரப்பினரும் ரஜினிகாந்த் திரைடப்படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிகள் நடத்திக்கொள்ள அனுமதி அளித்ததற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ரங்கசாமிக்கு மாலை அணிவித்தனர்.

ரஜினிகாந்த் ரசிகர்கர்கள் திரையரங்கில் சேர்களை உடைத்தல், திரைகளை கிழித்தல், குறிப்பிட்ட காட்சிகளை அடிக்கடி ஒளிபரப்ப திரையரங்கு ஊழியர்களை வற்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று ரசிகர் மன்றங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகள் ரசிகர் மன்றக் காட்சி டிக்கெட்டுகளின் பின்பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளன.

——————————————————————————
சிவாஜி திரைப்படத்தை கர்நாடகத்தில் நான்கு தியேட்டர்களுக்கு மேல் திரையிட அனுமதிக்க மாட்டோம்: கன்னட சங்கத் தலைவர் அறிவிப்பு

பெங்களூர், ஜூன் 14: நடிகர் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி’ திரைப்படத்தை கர்நாடகத்தில் 4 தியேட்டர்களுக்கு மேல் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட ரக்ஷணா வேதிகே அறிவித்துள்ளது.

ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ~ ஷ்ரேயா நடித்த “சிவாஜி’ தமிழ் திரைப்படம் வெள்ளிக்கிழமை முதல் உலகம் முதல் திரையிடப்படுகிறது.

சங்கர் இயக்கத்தில் இப்படம் பல கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டிருப்பதால் இப் படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி நீர்ப் பிரச்சினை காரணமாக கர்நாடகத்தில் தமிழ் திரைப்படங்கள் திரையிடுவதை கன்னட சங்கங்கள் சில மாதங்களாக தடுத்து வந்தன.

இதையும் மீறி தமிழ் படம் திரையிட்ட திரையரங்குகள் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

அண்மையில்தான் தமிழ்ப்படங்கள் கர்நாடகத்தில் மீண்டும் திரையிடப்பட்டு வருகிறது.

இந் நிலையில் சிவாஜி படத்தை திரையிட கர்நாடகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம் போன்ற பெரிய நடிகர்கள் படங்கள் கர்நாடகத்தில் திரையிடப்படும்போது பெங்களூரில் 10-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இவர்களது படங்கள் திரையிடப்படும்.

ஆனால் சிவாஜி படத்தை கர்நாடகம் முழுவதும் நான்கு தியேட்டர்களிலேயே திரையிட வேண்டும் என்று கன்னட ரக்ஷணா வேதிகே கூறி வருகிறது.

இதுகுறித்து ரக்ஷணா வேதிகேயின் தலைவர் நாராயண கெüடா கூறியதாவது:

பிறமொழிப்படங்கள் கர்நாடகத்தில் திரையிடப்படும்போது சில கட்டுப்பாடுகளை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை விதித்துள்ளது.

இதன்படி கர்நாடகத்தில் திரையிடப்படும் கன்னடம் அல்லாத பிற மொழிப்படங்களை நான்கு தியேட்டர்களில் மட்டுமே திரையிட வேண்டும்.

மேலும் சுவரொட்டிகள் கன்னடத்தில் மட்டுமே அச்சிடப்பட்டு ஒட்டப்பட வேண்டும். இதுபோல் பிற விளம்பரங்கள் அனைத்தும் கர்நாடகத்தில் கன்னடத்திலேயே வெளியிடப்பட வேண்டும்.

இந்த நிபந்தனைகள்படி ரஜினிகாந்த் படத்தை திரையிட நாங்கள் எதிர்க்கவில்லை.

இதை மீறி பல தியேட்டர்களில் திரையிட்டால் அந்த தியேட்டர்களில் படச்சுருளை கன்னட ரக்ஷணா வேதிகே தொண்டர்கள் பறிமுதல் செய்வர்.

இயக்குநர் சங்கரின் 23-வது புலிகேசி திரைப்படம் கர்நாடகத்தைச் சேர்ந்த புலிகேசி மன்னனை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டிருந்தது.

இதனால் இப்படத்தை கர்நாடகத்தில் திரையிட நாங்கள் அனுமதிக்கவில்லை.

அதுபோல் சிவாஜி திரைப்படத்திலும் ஏதாவது ஆட்சேபகரமான காட்சிகள் இருந்தால் அதற்கு எங்களது எதிர்ப்புகளைத் தெரிவிப்போம்.

இதற்காக ரக்ஷணா வேதிகே தொண்டர்கள் டிக்கெட் எடுத்து தியேட்டருக்குச் சென்று கண்காணிப்பார்கள் என்றார் அவர்.

13 தியேட்டர்களில் திரையிட நடவடிக்கை: இதற்கிடையே சிவாஜி படத்தை பெங்களூரில் 13 தியேட்டர்களில் திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 13 தியேட்டர்களிலும் வியாழக்கிழமை முன்பதிவு செய்யப்படுகிறது.

Posted in ARR, AVM, Bangalore, Cauvery, Cinema, Fans, Films, Kannada, Karnataka, Kaviri, Movies, Mysore, Pondicherry, pondichery, Pondy, Pondycherry, Previews, Pudhucherry, Puducherry, Puthucehrry, Puthucherry, Puthuchery, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Rehman, release, River, Shankar, Shivaji, Shreya, Shriya, Sivaji, Sivaji Fans, Sivaji Story, Sivaji the Boss, Sreya, Sriya, State, Theaters, Theatres | 2 Comments »

Exposing the double standards of Kerala Govt – Inaction, Hypocrisy, Bureaucracy

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

கடிதங்கள் | காலச்சுவடு

கே. கணேசன்
கோயம்புத்தூர் – 27

சக்கரியாவின் ‘மாயாவித் திருடர்கள்’ என்னும் கட்டுரை குறித்து:

கேரளாவில் மார்க்சிஸ்டுகள் அம்மாநில மக்களை மூளைச்சலவை செய்துவைத்திருக்கிறார்கள். பிளாச்சி மடையிலுள்ள கொக்கோகோலோ மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ தொழில் நிறுவனங்கள் மார்க்சிஸ்டுகளால் கேரளத்தை விட்டு ஓடிவிட்டன.

  • கெல்ட்ரான்,
  • ரேயன்ஸ் மில்,
  • புனலூர் காகித ஆலை,
  • அலகப்பபுரம் டெக்ஸ்டைல்ஸ்,
  • அப்போலோ டயர் தொழிற்சாலை

ஆகிய அனைத்தும் மூடப்படுவதற்குக் காரணமாயிருந்தவர்கள், தம்மை முற்போக்காளர்கள் என்று கூறிக்கொள்ளும் மார்க்சிஸ்டுகளே. கேரளாவைச் சேர்ந்தவர்கள் மூளை உழைப்பாளிகளாகவும் உடல் உழைப்பாளிகளாகவும் மற்ற மாநிலங்களுக்கும் அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்கும் செல்லக் காரணகர்த்தாக்கள் மார்க்சிஸ்டுகளே.கேரளாவில் மலப்புரம் மாவட்டம் பொன்னானி என்னும் ஊரின் அருகேயுள்ள சம்றவட்டம் என்ற இடத்தில் பாரத புழா அரபிக்கடலில் கலக்கும் இடத்தில் தண்ணீரைத் தேக்கிவைக்கத் தடுப்பணையும் அதன்மேல் வாகனங்கள் செல்ல ஒரு பாலமும் கட்டத் திட்டமிட்டுக் கேரளாவில் மூன்று முதல்வர்கள் கடந்த 18 ஆண்டுகளில் மூன்று முறை கால்கோள் விழா நடத்தினார்கள். அத்திட்டத்தை என்ன காரணத்தினாலோ கைவிட்டார்கள்.

அந்தப் பாலம் அங்குக் கட்டப்பட்டால் மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் குடிநீர் தேவையும் நிறைவேறும் விவசாயம் செழிக்கும் வெயில் காலங்களில் நிலத்தடி நீரும் குறையாது. இது அப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றாமல் மார்க்சிஸ்டுகள் ஏமாற்றுகிறார்கள்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்தேக்கும் அளவை உயர்த்தினால் அணை உடைந்து ஐந்து மாவட்டங்கள் நீரில் மூழ்கிவிடும் என்று வெற்றுக் கூச்சல் போடுகிறார்கள். 4 டி.எம்.சி. தண்ணீரால் 5 மாவட்டங்கள் எப்படித் தண்ணீரில் மூழ்கும்?

ஒரு வேளை மார்க்சிஸ்டுகள் கூறியபடியே நடந்தாலும், அந்த நீர் 70 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இடுக்கி அணைக்கு அல்லவா சென்றுவிடும்? கேரள மாவட்டங்கள் என்ன பூந்தொட்டிகளா, நீரில் மூழ்க? அப்படியிருக்கக் காவிரி நதிநீர்த் தீர்ப்பாயம் கேரளாவிற்கு 30 டி.எம்.சி. வழங்கத் தீர்ப்பு கூறியுள்ளது.

எந்த ஆயக்கட்டு வசதியும் இல்லாமல் 30 டி.எம்.சி.யை எங்குத் தேக்குவார்கள்? அதுவுமில்லாமல் 30 டி.எம்.சி. நீர் தங்களது மாநிலத்திற்குப் போதாது என்றும் மேலும் தண்ணீர் விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள். இந்த 30 டி.எம்.சி. நீரால் கேரளா மூழ்காதா? மார்க்சிஸ்டுகள் முன்னுக்குப் பின் முரணான அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்கள்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் இருந்த திருவனந்தபுரத்தைத் தனிக் கோட்டமாக்கியபோது தமிழ்நாட்டில் எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை. ஆனால், சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டபோது மார்க்சிஸ்டு தொழிற்சங்கத்தினர் அம்மாநில மக்களைத் தேவையில்லாமல் தூண்டிவிட்டார்கள்.

கேரளாவில் உள்ள குருவாயூரிலிருந்து தானூர் என்னும் இடத்திற்குப் புதிய ரயில் பாதை அமைக்கக் கடந்த ரயில்வே பட்ஜெட்டில் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிலத்தைக் கையகப்படுத்தாமல், அத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறார்கள் மார்க்சிஸ்டுகள்.

திருவனந்தபுரம் அருகே விழிஞம் என்னும் இடத்தில் அதிநவீனத் துறை முகம் அமைக்கப் பல வெளிநாட்டுக் கம்பெனிகள் முயன்றன. ஆனால், மார்க்சிஸ்டு அரசு அதற்கு ஒத்துழைக்கவில்லை. எர்ணாகுளத்தை ஸ்மார்ட் சிட்டி ஆக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதற்கும் மார்க்சிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்துத் திட்டத்தைக் கிடப்பில் போட்டிருக்கிறார்கள்.

கேரளா பொருளாதார வளர்ச்சி பெற்றுச் சிறந்த மாநிலமாக உருவெடுத்தால், மார்க்சிஸ்டுகள் அம்மாநில மக்களை ஏமாற்ற முடியாது என்ற ஒரு காரணம்தான். இந்த ஆண்டு மார்ச் 14 அன்று மேற்கு வங்கம் நந்தி கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து 14 பேர் சுட்டுத் தள்ளப்பட்டார்கள். மார்ச் 14 நினைவுகூரத்தக்க தினம்தான்.

பொதுவுடமைச் சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் நினைவு தினம் மார்ச் 14. மார்க்சிஸ்டுகளின் அந்நிய நாட்டு அடி வருடித்தனத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் வரலாறும் மன்னிக்காது என்பது திண்ணம்.

கே. கணேசன்
கோயம்புத்தூர் – 27

—————————————————————————

தமிழகத்தின் உரிமைப் பிரச்னைகள்

பா. ஜெகதீசன்

தமிழகமும், கேரளமும் கடந்த பல தலைமுறைகளாகவே அண்ணன் – தம்பியைப் போன்ற உறவுடன் பாசத்துடன் பழகி வந்தன. ஆனால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே சமீபகாலத்தில் எழுந்த பிரச்னை விசுவரூபம் எடுத்து, இரு தரப்பினரையும் பகையாளிகளைப் போல பேச வைத்து விட்டது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையைப் போல, மேலும் பல பிரச்னைகளில் இரு மாநிலங்களுக்கு இடையே “இழுபறி’யான ரீதியில் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

உதாரணமாக, பரம்பிக்குளம் -ஆழியாறு ஒப்பந்தம் தொடர்பான பிரச்னை 1988-லிருந்து நீடித்து வருகிறது. 6.11.2004-ல் சென்னை தலைமைச் செயலகத்தில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் இரு மாநிலங்களும் பேச்சு வார்த்தையை தொடருகின்றன.

கஜினி முகமது தொடர்ந்து படை எடுத்து வந்த வரலாற்றை முறியடிக்கும் வகையில், இப்பிரச்னைக்குத் தீர்வு காண இதுவரை சுமார் 20 முறைக்கும் மேல் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், பாலாறு, ஆழியாறு ஆகியவற்றிலும், இவற்றில் இணையும் ஆறுகளிலும் உள்ள நீரை மின்சாரம் தயாரிக்கவும், பாசனம் மற்றும் குடிநீருக்குப் பயன்படுத்தவும் 9.11.1958 முதல் செயல்படக் கூடிய ஒப்பந்தம் இரு மாநிலங்களுக்கும் இடையே கையெழுத்தானது.

9.11.1988-ல் இந்த ஒப்பந்தம் மறு ஆய்வு செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யப்படவில்லை.

அதேபோல, பாண்டியாறு -புன்னம்புழா நதிகள் தமிழகத்தில் நீலகிரி மலையின் உயர்ந்த சிகரங்களில் தோன்றி, கூடலூருக்கு 5 கி.மீ. மேற்கே இணைகின்றன. இந்த இணைப்புக்குக் கீழே இந்த நதி புன்னம்புழா என்றே அழைக்கப்படுகிறது. கேரளத்தில் நீலாம்பூர் அருகே சாளியாற்றில் கலந்து, பேபூர் என்கிற இடத்தில் அரபுக் கடலில் இந்த நதி சங்கமம் ஆகிறது.

இந்தக் குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் கிடைக்கும் 14டி.எம்.சி. நீரில் குறைந்தபட்சம் 7 டி.எம்.சி.யையாவது தன் பக்கம் திருப்பி விட வேண்டும் என்று தமிழகம் விரும்புகிறது. மேற்கு நோக்கிப் பாயும் இந்த ஆற்றிலிருந்து கிழக்கு நோக்கி தண்ணீரைத் திருப்ப கேரளத்தின் ஒப்புதலைப் பெறும் முயற்சியைத் தமிழகம் மேற்கொண்டுள்ளது.

புன்னம்புழா திட்டத்தில் கிடைக்கும் தண்ணீரை பவானி ஆற்றின் கிளை ஆறான மோயாற்றில் இணைத்து, கோவை மாவட்ட விவசாயிகளுக்கு உதவ தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. ஆனால், இந்தக் கனவு எப்போது நனவாகும் என்று தெரியவில்லை.

தீபகற்ப நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் மகாநதி – கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – காவிரி – வைப்பாறு நதிகளை இணைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு தயாரித்து, அதுதொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகிறது. கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளின் நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது என்பது அந்தத் திட்டத்தின் ஒரு பகுதி.

பம்பா -அச்சன்கோயில் -வைப்பாறு இணைப்புத் திட்டம் என்பது கேரளத்தில் உள்ள பம்பா -அச்சன்கோயில் ஆறுகளின் உபரி நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது ஆகும். இந்தத் திட்டத்தினால் சங்கரன்கோவில், கோவில்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், தென்காசி வட்டங்களில் உள்ள 91,400 ஹெக்டேர் (ஒரு ஹெக்டேர் என்பது சுமார் 2.5 ஏக்கர்) நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 22 டி.எம்.சி. நீர் கிடைக்கும். பம்பா – அச்சன்கோயில் ஆறுகளில் கிடைக்கும் உபரி நீரில் இது 20 சதவீதம் மட்டுமே.

மேலும் இந்தக் குறிப்பிட்ட திட்டத்தின் மூலம் 500 மெகாவாட் மின்சாரத்தையும் எளிதாக உற்பத்தி செய்ய இயலும்.

ஆனால், இதர திட்டங்களைப் போலவே, இந்தத் திட்டத்தையும் கேரள அரசு ஏற்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைக்கும் வகையில், கண்ணகி கோயில் பிரச்னை அமைந்துள்ளது.

உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள வண்ணாத்திப்பாறைக் காடு தமிழகத்தைச் சேர்ந்தது. அந்தப் பகுதியில்தான் கண்ணகி கோயில் உள்ளது.

ஆனால், கண்ணகி கோயில் தனது எல்லைக்குள் உள்ளதாக கேரள அரசு கூறி வருகிறது. அத்துடன், அங்கு வழிபாடு நடத்தச் செல்லும் தமிழக மக்களை கேரள அரசு தடுத்து, பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் இடையே உள்ள எல்லையின் நீளம் சுமார் 830 கி.மீ. இதில் சுமார் 250 கி.மீ. தூரத்துக்குத்தான் இரு மாநிலங்களின் அதிகாரிகளும் ஆய்வு செய்து, எல்லைகளை நிர்ணயித்துள்ளனர்.

கேரள அதிகாரிகள் சரியாக ஒத்துழைக்காததால், எஞ்சிய தூரத்துக்கு எல்லையை வரையறுக்க முடியாத நிலை உள்ளது. அதைப் பயன்படுத்தி ஆங்காங்கே தமிழகத்தின் பகுதிகளைத் தனது பகுதிகள் என்று கேரளம் கூறி போலியாக உரிமை கொண்டாடி வருகிறது.

கேரளத்துடன் நல்லுறவை வளர்க்கவே எப்போதும் தமிழகம் விரும்புகிறது. ஆனால், அந்த விருப்பம் ஈடேறத் தடைகற்களாக இத்தனை பிரச்னைகள் அமைந்துள்ளன. இந்தத் தடைகள் தகர்க்கப்பட்டு, நல்லுறவு மேம்பட கேரளத்தின் பெருந்தன்மையான ஒத்துழைப்பு அவசியம்.

———————————————————————————————————————————

முல்லைப் பெரியாறும்-கேரளமும்!

என். சுரேஷ்குமார்

திருநெல்வேலி மாவட்டம், சுந்தரமலையில் உள்ள சிவகிரி சிகரத்தில் தோன்றும் பெரியாறு, பெருந்துறையாறு, சின்ன ஆறு, சிறு ஆறு, சிறுதோனி ஆறு, இடமலையாறு, முல்லையாறு ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு சுமார் 300 கி.மீ. தூரம் வடமேற்குத் திசையில் பாய்ந்து இறுதியில் கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே கடலில் கலக்கிறது.

பெரியாறு தமிழக எல்லைக்குள் 56 கி.மீ. தூரமும் கேரள எல்லைக்குள் 244 கி.மீ. தூரமும் பாய்கிறது.

மக்களின் குடிநீர் தேவைக்கும் பாசனத்திற்காகவும் பெரியாறு திட்டத்திற்கு முதன்முதலில் செயல்வடிவம் கொடுத்தது ஆங்கிலேயர்கள்.

அதன்படி, 1808-ம் ஆண்டு ஜேம்ஸ் கால்டுவெல் என்பவர் அணைகட்டும் திட்டத்தை ஆய்வு செய்து 1862-ல் 162 அடி உயர அணை கட்டும் திட்டம் மேஜர் ரைவீஸ் மற்றும் மேஜர் பேயின் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

பின்னர் 1882-ம் ஆண்டு 175 அடி உயரத்தில் அணை கட்ட பென்னி குயிக் நியமிக்கப்பட்டார். அதற்கு திட்ட மதிப்பீடு ரூ.65 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.

அதன்படி முல்லை ஆறும், பெரியாறும் இணையும் இடத்திற்கு அருகே அணை கட்ட முடிவெடுக்கப்பட்டது. அணை கட்டப்படவிருந்த பகுதியான தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் தமிழர் வாழும் பகுதிகளாகும். தற்போதும் அப்பகுதியில் வசிப்போர் பெரும்பாலும் தமிழர்களே.

இருப்பினும் அணை கட்டப்படவுள்ள பகுதி தமிழ்நாட்டு பகுதியா, திருவிதாங்கூர் சமஸ்தான பகுதியா என்பதில் தெளிவில்லாத ஆங்கிலேய அரசு, அணை கட்டப்பட உள்ள பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதி எனக் கொண்டு, 1886-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுக்கான ஒப்பந்தத்தை செய்தது.

மேலும், இந்த அணை நீரானது தமிழகத்திற்கு காலகாலத்திற்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய அரசு 999 ஆண்டு ஒப்பந்தத்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் செய்து கொண்டது.

அதன்படி 1241 அடி நீளத்தில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் அடித்தளத்திலிருந்து 172 அடி.

இதில் நீரைத் தேக்கும் உயரம் 155 அடி. ஆனால், திடீரென வரும் வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் 152 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்பட்டது.

இந்த அணையில் தேங்கும் நீரை, கிழக்குத் திசையில் 5765 அடி நீளமும், 60 அடி ஆழமும், 80 அடி அகலமும் கொண்ட பெரிய கால்வாய் மூலம் கொண்டுவந்து பின்பு அந்த நீரை மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட 5345 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்ட சுரங்கத்தின் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

அதற்குப் பிறகு 78 கி.மீ. நீளமுள்ள பெரியாறு கால்வாய் மூலம் வைகை ஆற்றுடன் இணைக்கப்படுகிறது. அணையிலிருந்து மேற்குறிப்பிட்ட சுரங்கத்தின் வழியாக வினாடிக்கு 2000 கன அடி அளவு தண்ணீரை மட்டுமே வெளியே எடுக்க முடியும்.

மேலும், 152 அடி உயரமுள்ள அணையில் 104 அடிவரை தேங்கும் நீரைத்தான் எடுக்க முடியும்.

பின்னர் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு அந்த அணையின் நீர் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதன்பின்னர்தான் கேரள அரசு முல்லைப்பெரியாறு அணையை முழுவதும் கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டது.

அதன்படி, 1956-ம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் வாழ்ந்து வந்த தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக கேரளத்தோடு இணைக்கப்பட்டன.

1978-ம் ஆண்டு அணை பலவீனமாகிவிட்டது என்று கேரள அரசு பொய் செய்தியைப் பரப்ப ஆரம்பித்தது. அதன்மூலம் அணையின் நீர்மட்டம் 145 அடியாக குறைக்கப்பட்டது.

பின்னர் அணை பலப்படுத்துவது தொடர்பாக கேரள- தமிழக அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, அணை பலப்படுத்தப்படும்வரை அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது.

இதற்கிடையே பெரியாறு நீர்பிடிப்புப் பகுதிகளில் கெவி அணை, ஆணைத்தோடு அணை, கட்கி அணை, பம்பா அணை போன்ற அணைகளை கட்டியெழுப்பி முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்தை கேரளம் குறைத்தது.

இதனால் ஒரு போகம் சாகுபடி செய்த சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் சுமார் 40,000 ஏக்கர் நிலங்கள் தரிசாக மாறின.

1979 ஆம் ஆண்டு மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னிலையில் இரு மாநில அரசுகளும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளை 1985-ம் ஆண்டே முடித்த பின்பும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு மறுத்தது.

இதனால் இப்பிரச்னையை தமிழக விவசாயிகள் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றனர்.

மத்திய நீர்வள ஆணையம், மத்திய மண் விசையியல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை சார்ந்த நிபுணர்கள் அணையைப் பார்வையிட்ட பிறகு, அணையை பலப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன என்று சான்று வழங்கியது. மேலும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என கேரள அரசு சொன்ன காரணங்கள் பொய்யானவை என்று ஆணையம் தெளிவாகக் கூறியது.

அதன் அடிப்படையில் 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை நீரை தேக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும், கேரள அரசு 1979-ம் ஆண்டு தமிழகத்தோடு செய்த ஒப்பந்தத்தை மீறியதோடு, நிபுணர் குழு அறிக்கையையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் உதாசீனப்படுத்தியது.

தீர்ப்புக்கு கட்டுப்பட மறுத்து அதே ஆண்டு மார்ச் மாதத்தில் கேரள அரசு நீர்ப்பாசனம், நீர்வளம் பாதுகாப்பு சட்டத்தை திருத்தி பெரியாறு அணையையும் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

இதன்மூலம் கேரள அரசு மேற்கொள்ளும் ஒரு தலைப்பட்சமான முடிவு நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக விடப்பட்டிருக்கும் அறைகூவல்.

மேலும், தற்போது பழைய அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்டப்போவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு கேரள அரசு கட்டினால் தமிழகத்தின் உரிமை முழுமையாகப் பறிபோகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Posted in Agriculture, Apollo, Bureaucracy, Cauvery, Coke, cola, Communism, Communist, Communist parties, Communist Party of India, Congress, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, Dam, Disaster, Drinking, Economy, Employment, Exports, Finance, Flood, GDP, Govt, Growth, Guruvaioor, Guruvaiyoor, Guruvaiyur, Guruvayoor, Guruvayur, Harbor, Harbour, Headquarters, Hype, Hypocrisy, Imports, Incentives, Industry, infrastructure, Integration, Irony, Irrigation, Jobs, Kaviri, Keltron, Kerala, Kozhikode, Labour, Literacy, Madurai, Malaappura, Malappura, Malappuza, Malappuzha, Malayalam, Manufacturing, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Mills, Mullai, Mullai Periyar, MullaiPeriyar, National, Palacaud, Palacaut, Palacode, Palaghat, Palagode, Palakode, Periyaar, Periyaaru, Periyar, Periyaru, Politics, Port, Prevention, Producation, promises, Railways, River, Salem, SEZ, Shipping, State, Tax, Textiles, THIRUVANANTHAPURAM, TMC, TN, Trains, Trivandrum | Leave a Comment »

Municipality power consumption – Self sufficiency, Water Distribution, Alternate Energy

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

கட்டிக் கொடுத்த சோறு

உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண நிலுவை மீதான அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்வதென தமிழக அரசு மேற்கொண்டுள்ள முடிவு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிச் சுமையை ஓரளவு குறைப்பதாக அமையும்.

ஆனால், மின் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலைமைதான் அபராதம் செலுத்தும் நிலைமைக்குக் காரணம் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, இந்தப் பிரச்சினை முடிவுக்கு வருமா என்பது சந்தேகமாக இருக்கிறது. கட்டணத்தைச் செலுத்த முடியாத அதே நிலை நீடிக்குமானால், அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்தும் பயன் ஏற்படாது. கட்டிக் கொடுத்த சோறு ஓரிரு வேளைக்கு மட்டுமே உதவும்.

உள்ளாட்சி அமைப்புகள் (பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி) நிலுவை வைத்துள்ள ரூ.204 கோடியை அரசே இப்போதைக்கு செலுத்துவதும், இனிமேல் அவர்களது மின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும்தான் நிரந்தரத் தீர்வாக அமையும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படும் மின் செலவில் பெரும்பகுதி தெருவிளக்குகள் மற்றும் நீரேற்று நிலையங்கள் மூலமாக ஏற்படுகிறது.

தெருவிளக்குகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் கிடைப்பதில்லை. வெறும் செலவு மட்டுமே. ஒவ்வொரு மின்கம்பத்துக்கும் மின்வாரியம் நிர்ணயிக்கும் ஒட்டுமொத்த தொகையை உள்ளாட்சி அமைப்புகள் செலுத்துகின்றன.

இரண்டாவதாக, குடிநீர் விநியோகத்தில் நீரேற்று நிலைய மின்செலவைத் தவிர்க்கவே முடியாது. நீரேற்றும் மின்செலவுக்கும் குடிநீர் கட்டணம், குழாய் வரி மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் பற்றாக்குறை இடைவெளி பெரிதாக உள்ளது.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் விநியோகத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலவு போக, சிறிது வருவாய் கிடைத்திருக்கலாம். இப்போது நிலைமை தலைகீழ். விரிந்துவிட்ட நகரின் அனைத்து மக்களுக்கும் தண்ணீர் கிடைக்க பல்வேறு இடங்களில் ஆழ்துளை போட்டு தண்ணீர் எடுப்பதால் மின்செலவு மேலும் கூடிவிட்டது. ஆனால் அதற்கேற்ப குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடியவில்லை. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

உள்ளாட்சிகளுக்கான மின்கட்டணத்தை ரூ.5-லிருந்து ரூ.2-ஆகக் குறைக்க வேண்டும் என்பதுகூட, சுமையை இன்னொரு தலைமேல் ஏற்றிவிடுவதாகவே அமையும்.

உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் புதிய வழிகளைக் காண்பதும் புதிதாக குடிநீர் கட்டண முறைகளை வகுத்துக்கொள்வதும்தான் தீர்வாக இருக்கும்.

குடிநீர் இணைப்புகளில் மீட்டர் இருந்தாலும் அவரவர் பயன்படுத்தும் நீரின் அளவுக்கு ஏற்ப (மின்சாரம் கணக்கிடுவதைப்போல) கணக்கிடப்படுவதில்லை. இதனால், உள்ளாட்சி அமைப்புகள் சுத்திகரித்து நீரேற்றம் செய்யும் குடிநீரில் 80 சதவீதம் துணி துவைக்கவும், குளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பயன்படுத்தப்படும் நீரின் அளவுக்கு ஏற்ப, அடுக்குமுறையில் (ஸ்லாப் சிஸ்டம்) கட்டணமும் உயரும் வகையில் திருத்தி அமைக்கப்பட்டால், பயன்படுத்தப்படும் குடிநீர் அளவு தானாகக் குறையும். மின்கட்டணமும் மிச்சமாகும். உள்ளாட்சிக்கு வருவாயும் கிடைக்கும்.

சூரியஒளி அதிகமாகக் கிடைக்கும் தமிழகத்தில் தெரு மின்விளக்குகள் அனைத்தையும் சூரிய விளக்குகளாக மாற்றிவிட முடியும். நகரங்களில் முக்கிய வீதிகளில் உள்ள மின்விளக்குகளை சூரிய விளக்குகளாக மாற்றும்போது, குறிப்பிட்ட தொகையை அந்தந்தத் தெரு மக்களிடம் பங்கேற்புத் தொகையாகப் பெற்று, பராமரிப்புப் பணிகளை அந்தந்தத் தெருவின் மக்கள் குழுக்களிடமே ஒப்படைத்துவிடலாம்.

====================================================================
தமிழகத்தில் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்த ரூ. 2547 கோடியில் நீர்வள – நிலவளத் திட்டம்: பொதுப்பணித் துறை அமைச்சர்

சென்னை, ஏப். 5: நீர்ப் பாசன வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நீர்வள – நில வளத் திட்டம் ரூ. 2547 கோடியில் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் புதன்கிழமை அறிவித்தார்.

பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைக்கான கொள்கை விளக்க குறிப்பை அவையில் தாக்கல் செய்து அமைச்சர் கூறியது:

நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை நவீனப்படுத்தி கால்வாய்கள், ஏரிகள் ஆகியவற்றைப் புனரமைத்து, நீர் மேலாண்மையை மேம்படுத்துவது அவசியம். அதற்கேற்ப நீர் மற்றும் வேளாண்மையைச் சார்ந்த அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் வண்ணம் நீர்வள – நில வளத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி கடனுதவியுடன் செயல்படுத்தப்படும் இத் திட்டத்தின் மொத்த ஒதுக்கீடு ரூ. 2547 கோடி. இதனை ஆறு ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 63 உப வடிநிலங்களில் அணைகள், கால்வாய்கள், கிளைக் கால்வாய்கள் அவற்றின் கட்டுமானங்கள் ஆகியவை சீரமைத்து மேம்படுத்தப்படும்.

இத் திட்டத்தின் மூலம் 5763 ஏரிகளை புதுப்பித்து புனரமைத்து சீர்படுத்துவதற்காக ரூ. 1068 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த செலவில் 75 சதவிகிதம் தமிழக அரசும் 25 சதவிகிதம் மத்திய அரசும் ஏற்கும்.

ஒருங்கிணைந்த நீர்வள – நிலவளத் திட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டு 12 உப வடிநிலங்கள் தேர்தெடுக்கப்பட்டு அவற்றில் 9 உப வடிநிலங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் ரூ. 399 கோடியில் 71 ஒப்பந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்த நிதியாண்டுக்கு ரூ. 160 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதர 3 உப வடிநிலங்களுக்கான விரிவான திட்ட மதிப்பீடு அந்தந்த துறைகளுடன் இணைந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 51 உப வடிநிலங்களுக்கு திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கும் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன.

நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் 6.17 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசன, நீர் உபயோகிப்போர் சங்கங்கள் 2600 அமைக்கப் பெற்று பாசன மேலாண்மையில் பாசனதாரர்களே பங்கேற்க வழிவகை செய்யப்படும்.
====================================================================
காவிரிப் படுகை மாவட்டங்களில் கால்வாய்களைச் சீரமைக்க ரூ. 40 கோடி: அமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஏப். 5: காவிரிப் படுகை மாவட்டங்களில் ரூ. 40 கோடியில் சிற்றாறு வாய்க்கால்கள் தூர்வாரப்படும் என்று சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம், கிருஷ்ணகுப்பம் கிராமத்தில் புதிய குட்டை ரூ. 16 லட்சத்தில் அமைக்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் ராசசிங்கமங்கலம் கிராமத்தில் உள்ள ஆர்.எஸ். மங்கலம் ஏரி ரூ. 5.5 கோடியில் புனரமைக்கப்படும்.

நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து வருகிறது. செயற்கை முறையில் சிறிய குட்டைகளில் நீரைத் தேக்கி நீர் வளத்தை மேம்படுத்த கோயம்புத்தூர் மாவட்டத்தில் 5 குட்டைகள் ரூ. 93 லட்சத்துக்கும், ஈரோடு மாவட்டத்தில் 3 குட்டைகள் ரூ. 63 லட்சத்துக்கும், நாமக்கல் மாவட்டத்தில் ஒரு குட்டை ரூ. 12 லட்சத்துக்கும், வேலூர் மாவட்டத்தில் 11 குட்டைகள் ரூ. 1 கோடிக்கும் ஆக மொத்தம் 20 குட்டைகள் ரூ. 2.72 கோடிக்கு நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் இந்த நிதியாண்டில் சீரமைக்கப்படும்.

காவிரிப் படுகை மாவட்டங்களில் உள்ள சிற்றாறுகளையும் வாய்க்கால்களையும் தூர்வாருவதற்கு இந்த அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. தூர்வாரவும் கட்டுமானங்களை புதுப்பிப்பதற்காகவும் ரூ. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ. 1.75 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வெண்ணாறு தொலைகல்லில் மட்ட சுவர் அமைத்து ரகுநாத காவிரி வாய்க்காலின் பாசன நிலங்களுக்கு தடையின்றி தண்ணீர் வழங்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் கீழ்வளம் கிராமத்தின் அருகில் புக்கத்துறை ஓடையின் குறுக்கே ரூ. 45 லட்சத்தில் தடுப்பணை செயல்படுத்தப்படும்.

விழுப்புரம் மாவட்டம் கரடிசித்தூர் கிராமத்தில் உள்ள குமாரபாளையம் வரத்து கால்வாய்க்கு நீர் வழங்க முக்தா நதியின் குறுக்கே ரூ. 25 லட்சத்தில் தடுப்பணை அமைக்கப்படும்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம், கோமல் கிராமத்தில் வீரசோழன் ஆற்றின் குறுக்கே தொலைகல் 118 கி.மீ. யில் தரை மட்டச்சுவர் கட்டும் திட்டம் ரூ. 40 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.

தஞ்சாவூர் மாவட்டம் சோழகம்பட்டி வாரி குறுக்கே தடுப்பணை ரூ. 20 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம், ரெட்டியாபட்டியில் இருந்து கரிகாலி உத்தன்டாம்பாடி வரையில் உள்ள வழங்கு கால்வாய் மற்றும் உத்திராட்ச கோம்பையில் உள்ள அணைக்கட்டுகளை சீரமைக்கும் திட்டம் ரூ. 1.98 கோடியில் செயல்படுத்தப்படும்.

========================================================================
இணைந்தால் வளர்ச்சி

ஒரு பக்கம் வறட்சி, மறு பக்கம் வெள்ளம். இவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரண உதவிகள். இது, ஆண்டுதோறும் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் ஒரு நிகழ்வாகிவிட்டது. இதற்கு முடிவு கட்ட முக்கிய நதிகளை இணைக்கலாம் என்று பல ஆண்டுகளாகக் கூறப்பட்டுவரும் யோசனை இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. இத் திட்டத்தை நிறைவேற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்பதும், பல்வேறு மாநிலங்கள் சம்பந்தப்பட்டதால் அவற்றுக்கிடையே கருத்தொற்றுமை காண்பதில் உள்ள சிக்கலுமே இதன் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ள முக்கிய அம்சங்களாகும்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஓடும் ஆறுகளில் உள்ள தண்ணீர்ப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு சில ஆறுகளை இணைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து திட்டங்களை மேற்கொள்ள உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆறுகளில் மட்டுமன்றி ஏரி, குளங்களில் தொடர்ந்து நீரின் அளவைப் பராமரிக்கவும், பெரும்பாலான மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைப் போக்கவும் இத் திட்டம் உதவும்.

முதற்கட்டமாக கோரையாற்றில் இருந்து அக்னியாறு வரை புதிய கால்வாய், பெண்ணையாற்றை செய்யாற்றுடன் இணைப்பது, தாமிரபரணியில் வெள்ளம் ஏற்படும்போது வரும் நீரை நம்பியாறு, கருமேனியாறு வரை எடுத்துச் செல்வது ஆகியவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டங்கள் மூலம் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு பலன் கிடைக்கும் என்று விளக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை நீர்வள ஆதாரத்தில் எப்போதும் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கிறது. இங்கு மேற்பரப்பு நீர் அனைத்தும் ஏறக்குறைய பயன்படுத்தப்பட்டுவிட்ட நிலையில் நிலத்தடி நீரை முற்றிலும் நம்பி இருக்க வேண்டியுள்ளது. ஆனால் அதுவும் விவசாயம் மற்றும் பொது உபயோகங்களுக்குத் தொடர்ந்து உறிஞ்சப்படுவதால் காலப்போக்கில் அதற்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஆனால் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், மற்றும் ஆந்திரத்தில் கணிசமான நீர் ஆதாரங்கள் உள்ளன. எனவே பற்றாக்குறையைப் போக்க அந்த மாநிலங்களின் உபரி நீரை நம்பியிருக்க வேண்டியுள்ளது.

இதற்குத் தீர்வு காண தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை ஒரு யோசனை தெரிவித்துள்ளது. உபரி மற்றும் பற்றாக்குறை படுகையைத் தேர்வு செய்து மகாநதியிலும், கோதாவரியிலும் கிடைக்கும் உபரிநீரை கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, வைகை மற்றும் குண்டாறு படுகைகளுக்குத் திருப்பிவிடலாம் என்பதே அந்த யோசனையாகும். இதன்படி மகாநதி, கோதாவரியின் உபரி நீர் கிருஷ்ணா மற்றும் பெண்ணாற்றுக்குத் திருப்பி விடப்படும். அங்கிருந்து கல்லணைக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படும். இத்தகைய இணைப்புகளை மேற்கொண்டால் அது அந்த நீர் வரும் வழியில் உள்ள மாநிலங்களில் சாகுபடிக்கும் குடிநீருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது அரசின் கருத்து. இத்தகைய திட்டத்தினால் நீர்வழிச் சாலையை உருவாக்கலாம் என்று ஒரு நிபுணர் தெரிவித்துள்ள கருத்தும் பரிசீலனைக்குரியது.

இது தவிர ஏரிகளைப் பாதுகாக்கச் சட்டம் கொண்டு வரவும் அரசு உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் விளைநிலங்களும், ஏரிகளும் குடியிருப்புகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் சாகுபடி நிலங்களின் அளவு படிப்படியாகக் குறைந்து ஒரு நேரத்தில் கடும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். இதற்கு முடிவு கட்ட மேற்கண்ட திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
=====================================================================

————————————————————————————————-
தாகம் தணியும் நாள் எந்நாளோ?

உ.ரா. வரதராசன்

வெளிநாட்டுப் பயணம் ஒன்றின்போது, விமானத்தில் படிக்கக் கிடைத்த லண்டன் நாளேடு ஒன்றில் ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட விளம்பரம் ஒன்று, அதிர்ச்சி அளிக்கும் ஓர் உண்மையைப் பளிச்சென்று பறைசாற்றியது.

“லண்டன் நகரின் ஆடம்பரக் குடியிருப்புகளில் வசிப்பவர்களை விட, குடிதண்ணீருக்கு அதிக விலை கொடுப்பவர்கள் எங்கே இருக்கிறார்கள்?’ என்ற கேள்வியை எழுப்பிய அந்த விளம்பரம் அதற்கான பதிலையும் தந்தது: – அது – “”வளரும் நாடுகளின் வறுமைமிக்கக் குடிசைப்பகுதிகளில்தான்!” ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் – 2006-ஆம் ஆண்டின் மனித வளர்ச்சி அறிக்கை தண்ணீர்ப் பிரச்னையை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.

“உணவு இல்லாமல் பட்டினி கிடக்க நேரிட்டால்கூட, 21 நாள்கள் வரை உடலில் உயிர் ஒட்டிக் கிடக்க முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் 10 நாள்களுக்கு மேல் உயிர் வாழ்வது அரிது; பிராணவாயு இல்லாமல் எட்டு நிமிடங்களுக்கு மேல் உயிர் தாங்காது’, என்பது ஒரு கருத்து. தண்ணீரும், பிராணவாயுவும் இன்றி மக்கள் உயிர் வாழ முடியாது என்பதால்தான், ஐ.நா. சபை 2002-ஆம் ஆண்டில் “தண்ணீர் – ஒரு மனித உரிமை, என்று அறிவித்தது. அந்த தண்ணீர் போதுமானதாகவும், பாதுகாப்பானதாகவும், ஏற்புடையதாகவும், எளிதில் எட்டக் கூடியதாகவும் மற்றும் வாங்கும் சக்திக்கு உட்பட்டதாகவும் – அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியது.

மக்கள்தொகைப் பெருக்கம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட 19-ஆம் நூற்றாண்டின் விஞ்ஞானி தாமஸ் மால்த்தூஸ், உணவுப் பற்றாக்குறை எதிர்காலத்தில் உலக நாடுகளை மிரட்சியில் ஆழ்த்தும் பரிமாணத்தை எட்டிவிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். “மால்தூசின் தத்துவம்’ என்றே மக்கள்தொகை பற்றிய அவரது ஆய்வு சுட்டப்படுகிறது. இதே கோணத்தில்தான் தண்ணீர் பற்றிய சர்வதேச அரங்கிலான விவாதங்களில் கருத்துகள் இடம்பெற்று வந்துள்ளன. “மக்கள்தொகை பெருகப்பெருக, தண்ணீர் தேவையும் அதிகமாகிறது; விளைவு – எதிர்காலத்தில், தண்ணீர் பற்றாக்குறை தவிர்க்க முடியாதது” என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

மனித வளர்ச்சி அறிக்கை – 2006 இந்த வாதத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறது. “ஒரு சில நாடுகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு கவலைதரும் பிரச்னையாக இருக்கலாம்; ஆனால் சர்வதேச ரீதியில், பற்றாக்குறையும், நெருக்கடியும் எழுவதாகச் சொல்ல முடியாது. வறுமையும், ஏற்றத்தாழ்வும், அரசியல் அதிகாரம் யாருடைய நலனுக்காகச் செயல்படுகிறது என்பவையே, உலக தண்ணீர் நெருக்கடியின் மையமான பிரச்னைகள்’ என்று ஆய்வின் அடிப்படையிலான ஏராளமான விவரங்களைக் கொண்டு நிலைநாட்ட முற்படுகிறது அந்த அறிக்கை.

உயிர் வாழ்வதற்கான தண்ணீர்ப் பிரச்னை மூன்று அம்சங்களை உள்ளடக்கியது. அவை ~

  1. சுத்தமான குடிநீர் வழங்குவது,
  2. கழிவு நீரை அகற்றுவது,
  3. உடற்கழிவுகளை (சிறுநீர், மலம்) வெளியேற்றுவதற்கான சுகாதாரமான ஏற்பாடு.

மனித வாழ்வின் மேம்பாட்டுக்கு இவை மூன்றும் இன்றியமையாதவை. ஆனால், உண்மையான நிலவரம் என்ன?
வளரும் நாடுகளில் 110 கோடிபேர் போதுமான தண்ணீருக்கு வழியில்லாமல் திண்டாடுபவர்கள்; 260 கோடிபேர் கழிப்பறை வசதிகள் இன்றி அவதிப்படுபவர்கள். இது வளரும் நாடுகளின் மக்கள்தொகையில் பாதிக்குமேல். இது தண்ணீர்ப் பற்றாக்குறையால் நேரிடும் கொடுமையா என்றால், இல்லை.

வீட்டு உபயோகத்திற்காக மட்டும் தேவைப்படுகிற தண்ணீரின் அளவு, உலகளாவிய நீர்வளத்தில் 5 சதவிகிதத்திற்கும் குறைவுதான். அடிப்படையான மனிதத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 20 லிட்டர் தண்ணீர் அவசியமானது. தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்ய முடியாத நிலைக்குக் காரணம் பற்றாக்குறை அல்ல; இன்றைய ஆட்சி அமைப்பும், அரசியல் அதிகாரத்தைச் செலுத்துவோரின் தலைகீழான முன்னுரிமைகளுமே.

உலக நாடுகள் பெரும்பாலானவற்றின் பெருவாரி மக்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகள் மறுக்கப்படுவதன் கோர விளைவுகள் சில வருமாறு:

வாந்திபேதியால் ஆண்டுக்கு 18 லட்சம் குழந்தைகள் இறக்க நேரிடுகிறது; அதாவது – நாளொன்றுக்கு 4900 சாவுகள். 1990-களில், ஆயுத மோதல்களில் இறந்தோரைவிட அசுத்தமான குடிநீர், சுகாதாரமின்மை காரணமான நோய்களில் இறந்த குழந்தைகள் எண்ணிக்கை ஆறு மடங்காக உயர்ந்தது.

தண்ணீர்ப் பிரச்னை தொடர்பான உடல்நலப் பாதிப்பு காரணமாக பள்ளிக்குச் செல்ல முடியாத பள்ளி நாள்கள் ஆண்டொன்றுக்கு 44 கோடிக்கு மேல்.

வளரும் நாடுகளின் மக்கள்தொகையில் பாதிக்குமேல் தண்ணீர் – சுகாதாரக் குறைபாடுகளால் ஏதாவதொரு வியாதியால் பீடிக்கப்பட்டு அவதியுறுவது அன்றாட நிகழ்வு. ஒவ்வொரு நாளும், தண்ணீருக்காக லட்சக்கணக்கான பெண்கள் பல மணி நேரம் செலவிட நேரிடுகிறது.

இளமையில் தண்ணீர் – சுகாதாரமின்மை காரணமாக நோய்வாய்ப்பட்டும், கல்வி வாய்ப்பை இழந்தும் பாதிப்புறுகிற லட்சக்கணக்கான குழந்தைகள், வளர்ந்த நிலையில் வறுமையைத் தழுவ நேரிடுகிறது. இவ்வாறெல்லாம் பாதிப்புற்று இழக்கப்படுகிற மனித வள ஆதாரங்கள் காரணமாக, உலக நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதார இழப்புகள் அளவிட முடியாதவை.

இந்த நிலைமைகளுக்கு மாற்றமே இல்லையா?

20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் ஒன்று கூடி 21-ஆம் நூற்றாண்டுக்கான மனித வளர்ச்சி இலக்குகளை வரையறை செய்தனர். 2015-ஆம் ஆண்டுக்குள் வறுமை, பட்டினி, குழந்தை இறப்புகள், கல்வியின்மை, பாலின சமத்துவமின்மை ஆகியவற்றை, சரிபாதியாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. “பாதுகாப்பான குடிநீரும், அடிப்படை சுகாதார வசதிகளும் தொடர்ச்சியாகக் கிடைக்கப்பெறாத உலக மக்களின் எண்ணிக்கையை 2015-க்குள் சரிபாதியாகக் குறைக்க வேண்டும்’ என்பது திட்டவட்டமான இலக்கு.

ஆனால், இந்த இலக்குகளை எட்ட நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு பத்தாண்டுகளுக்கும் குறைவாகவே உள்ள இன்றைய தருணத்தில், இதற்கான முயற்சிகள் காததூரத்திலேயே உள்ளன என்பதுதான் வேதனையான அம்சம்.

தாகத்தால் நா வறண்டு நிற்கும் மக்களின் தண்ணீர்த் தேவைகளை நிறைவேற்றுவதற்குக் குறுக்கே நிற்பது எது? நிதிப்பற்றாக்குறையா?

குடிதண்ணீர், சுகாதாரத் தேவைகளை மட்டுமல்ல, வளர்ச்சி இலக்குகள் அனைத்தையுமே 2015-க்குள் எட்டுவதற்குத் தேவையான நிதி ஆயிரம் கோடி டாலர்கள். (சுமார் ரூ. 40 ஆயிரம் கோடி)

“ஓ, இவ்வளவு பெரிய தொகையா? என்று மலைக்கத் தேவையில்லை. இது, உலகநாடுகள் ராணுவத்திற்காகச் செலவிடும் தொகையில், ஐந்தே நாள்களுக்கான செலவுக்கு மட்டுமே ஈடான தொகைதான்! பணக்கார நாடுகள் ஆண்டுதோறும் “மினரல் வாட்டருக்காக’ச் செலவிடும் தொகையில் சரிபாதிக்கும் குறைவே! எனவே, இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவது, அவற்றை வரையறுத்த உலக நாடுகளின் தலைவர்களின் உறுதியான நிலைப்பாடு என்ற உரைகல்லைப் பொருத்த விஷயம்தான்.

2015-ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளி நிர்வாகம் இன்னோர் இலக்கையும் நிர்ணயித்திருக்கிறது. வியாழன் கிரகத்தின் பனிநிலவுகள் பற்றிய ஆராய்ச்சிக்காக விண்கலத்தை அனுப்பி, அந்த சந்திர மண்டலங்களின் பனிப்படலங்களுக்கு அடியில் உள்ள உப்புநீர் ஏரிகளை ஆய்வு செய்து, அங்கு உயிரினங்கள் வாழ்வது சாத்தியமா என்று அறிவது அதன் நோக்கம். அதற்காகச் செலவிடப்படும் ஆயிரம்கோடி டாலர்கள் – அதற்குத் தேவைப்படும் தொழில் நுணுக்கம் – இவற்றோடு ஒப்பிடுகையில், மனித வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான செலவும், முயற்சியும், அற்பசொற்பமானவையே!

உலக மக்களின் தாகம் தணியும் நாள் எந்நாளோ?..

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ)

Posted in Alternate, Analysis, Aquafina, Arms, Backgrounder, Backgrounders, Bathroom, Bills, Bio, Bottled, Budget, Cauvery, Charges, Coke, Crap, Dasani, defecate, Developed, Developing, Diarrhea, Distribution, Drinking, Electricity, energy, Environment, Excrement, Expensive, Exploit, Fights, Finance, Fine, Gold, Govt, Ground, HR, Hunger, Income, Interlink, Interlinking, Kaviri, Local Body, Loss, Municipality, Nations, oil, Op-Ed, Options, Pee, Pepsi, Plans, Pollution, Poop, Power, Private, Privatization, PWD, Restroom, Revenues, River, Sand, Schemes, Shit, Soda, Solar, solutions, Tax, Toilets, Urine, Water, Weapons, World | 4 Comments »

Wheat vs Rice – TN farmers seek sweet sugar price

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

கோதுமைக்கு அதிக விலை; நெல்லுக்கு குறைவா?: விவசாயிகள் விரக்தி

சென்னை, மார்ச் 21: பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கோதுமைக்கு அரசின் கொள்முதல் விலை அதிகமாக உள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில் நெல்லுக்கு அரசின் கொள்முதல் விலை மிகக் குறைவாக உள்ளது என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இதுபோன்ற 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதுகுறித்த விவரம்:

காவிரி டெல்டா பகுதிகளில் உள்ளது போன்று, தமிழகத்தின் பிறபகுதிகளிலும் நேரடி நெல் கொள் முதல் நிலையங்களை அரசு அமைக்க வேண்டும்.

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளின் செயலாளர்கள் மூன்று ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றக் கூடாது. வேளாண் மின் இணைப்பு கேட்கும் அனைத்து விவசாயிகளுக்கும் உடனடி மின் இணைப்பு வழங்க வேண்டும்.

பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து விவசாயக் கடன்களுக்கும் 4 சதவீதம் வட்டியில் கடன் வழங்க பொதுத் துறை வங்கிகளும், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளும் முன்வர வேண்டும்.

மேலும், ஒவ்வொரு வங்கிக் கிளையும் தனது எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில் 10,000 மூட்டைகளை சேமிக்கக் கூடிய கிடங்குகளை ஏற்படுத்த வேண்டும்.

பிற மாநிலங்களில் சர்க்கரைக்கு டன்னுக்கு ரூ. 1,500 வரை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் ரூ. 1,025 மட்டுமே அளிக்கப்படுகிறது. மேலும், எரிசாராய ஆலைகளுக்குப் பயன்படும் கரும்புச் சக்கை, பிற மாநிலங்களில் டன்னுக்கு ரூ. 2,500 வரை விற்கப்படுகிறது. தமிழகத்தில் மிகக் குறைந்த அளவு தொகைக்கே விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு, உரிய விலை நிர்ணயத்தை அரசு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. கோரிக்கை மனு, தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் வழங்கப்பட்டது.

==========================================
தமிழகத்தில் அதிக உணவு உற்பத்தி: அமைச்சர் தகவல்

சென்னை, ஏப். 5: தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகபட்சமாக 95.4 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார்.

பேரவையில் வேளாண் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு செவ்வாய்க்கிழமை பதிலளித்து அமைச்சர் பேசியது:

நல்ல இடுபொருள், சீரிய ஆலோசனைகள் போன்றவற்றின் காரணமாக திமுக ஆட்சியில் அதிக அளவு உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உணவு உற்பத்தி செய்யப்பட்டாலும் நமது தேவை 115.2 லட்சம் மெட்ரிக் டன்னாகும். உற்பத்தி 95 லட்சத்தை எட்டினாலும் பற்றாக்குறை 19 லட்சம் டன்னாக உள்ளது.

நெல் சாகுபடி குறைந்துவிட்டது. புதிய வீரிய ரக விதைகள் மூலமும் புதிய தொழில்நுட்ப மூலம் அதிக அளவு உற்பத்தியை பெருக்க வேண்டியுள்ளது. சாகுபடி நிலப்பரப்பு குறைந்தபோதிலும் உணவு உற்பத்தி குறையவில்லை.

விவசாயிகள் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 கோடியே 15 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 73 லட்சம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

நிலமுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மஞ்சள் வணிக வளாகம்: ஈரோடுக்கு அருகில் நசியனூர், வில்லரசம்பட்டி ஆகிய கிராமங்களில் ரூ. 36.32 கோடியில் மஞ்சள் வணிக வளாகம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் கோயம்புத்தூர் மாவட்டம் பொங்கலூரில் வெங்காயத்துக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரியில் மாங்கனிக்கும் குளிர்பதன வசதியுடன் கூடிய வணிக வளாகம் தலா ரூ. 2 கோடியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் வீரபாண்டி ஆறுமுகம்.
==========================================

Posted in Agriculuture, Cauvery, Commodities, Commodity, ethanol, Exchanges, Farmer, Farming, Food, Grains, Interest, Interest Rates, Kavery, Kaviri, Loans, markets, minimum support price, molasses, MSP, Needs, Paddy, Price, Production, Punjab, Request, rice, SAP, state advised price, Sugar, Sugarcane, support, tonne, Trading, Union, Veerapandi Aarumugam, Veerapandi Aarumukam, Veerapandi Arumugam, Wants, Wheat | 1 Comment »

Fund allocations for River water inter-linking project – Pe Chidhambaranathan

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

நதிகள் இணைப்புக்கு நிதி இல்லையா?

பெ. சிதம்பரநாதன்

நமது நாடு 6 லட்சம் கிராமங்களைக் கொண்டது.

110 கோடி இந்திய மக்களில் விவசாயத்தைச் சார்ந்து இருப்பவர்கள் ஏறக்குறைய 70 கோடி பேர். இவர்களில் பெரும்பாலானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருந்து வருகின்றனர். வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் 70 கோடிப் பேரை முன்னேற்றிவிட முடியும்.

உத்தமர் காந்திஜி, “”இந்தியாவின் உயிர், கிராமங்களில்தான் உள்ளது” என்று அறிவித்தார். தான் காண விரும்பிய ராஜ்யம் சின்னஞ்சிறு கிராம ராஜ்யம்தான் என்றே அறிவித்தார். அதை மேலும் அழகுபடுத்தி, அதுதான் தனது “ராமராஜ்யம்’ என்றும் கூறினார்.

அவரது சிந்தனைக்கு முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு செயல்வடிவம் கொடுக்க முற்பட்டார்.

முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மைக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் ரூ. 2 ஆயிரத்து 69 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.

அத்தொகையில் 1956-க்குள் கட்டப்பட்டதுதான் ஆசியாவிலேயே மிகப்பெரிய பஞ்சாப் மாநில பக்ராநங்கல் அணைக்கட்டு.

ஆனால் 1957-க்குப் பிறகு வேளாண்மை முன்னேற்றத்துக்கு அரசின் முக்கியத்துவம் வெகுவாகக் குறைந்துவிட்டது. தொழில் வளர்ச்சிதான் முதன்மையானது.

சென்ற 5 ஆண்டுக்காலத்தில் வேளாண்மை வளர்ச்சி நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4 சதவீதம்தான். தொழில்துறை வளர்ச்சியோ 8.5 சதவீதம். விவசாயம் வீழ்ச்சியடைந்தது, தாழ்ச்சியடைந்தது.

இன்றைய உண்மை நிலை என்ன?

மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்ப்பா பிராந்தியம், கர்நாடகத்தின் சில பகுதிகள், ஆந்திரத்தின் தெலங்கானா பகுதி, தமிழகத்தின் தஞ்சைப் பகுதி ஆகிய இடங்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் விவசாயிகள், வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 2001-2006 க்கு இடைப்பட்ட ஐந்தாண்டுக் காலத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவங்கள் இவை.

கடன் சுமையால் சென்ற ஆண்டு மட்டும் 15 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதில் பெரும்பாலானோர் ஆந்திர மாநிலப் பருத்தி விவசாயிகள்.

இந்தப் பின்னணியில் மத்திய நிதியமைச்சர் சமர்ப்பித்த மத்திய நிதிநிலை அறிக்கை, விவசாயத்திற்கு முதலிடம் தருகிற அறிக்கை என கூறப்பட்டது.

ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடனாக விவசாயிகளுக்கு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் அறிவித்திருந்தார். கேட்பதற்கு இது ஆனந்தமாகத்தான் இருக்கிறது. நடைமுறையில் இந்த ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்கு உரிய பலன் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் இதேபோல ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி விவசாயக் கடனுக்கு ஒதுக்கப்பட்ட பிறகு, அந்த ஓராண்டில் மட்டும் 15 ஆயிரம் பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது ஏன்?

ஐந்து காரணங்களால் நமது நாட்டின் விவசாயம் இத்தகைய இழிநிலைக்கு வந்துவிட்டதாக மத்திய நிதியமைச்சர் கூறுகிறார்.

முதல் காரணம், அதிக வட்டிக்கு விவசாயி கடன் வாங்கியதால்தான் தற்கொலை செய்து கொள்கிறான். ஆகவே 7 சதவீதம் வட்டிக்கு விவசாயக் கடன் கிடைக்க வங்கிகளின் வாசல்கள் திறந்துவிடப்பட்டிருக்கின்றன என்று அறிவிக்கிறார்.

இரண்டாவதாக, அவர்களுக்குத் தரமான விதைகள் கிடைக்காத காரணத்தால்தான், அதிக உற்பத்தியைச் செய்ய முடியவில்லையென்றார். இதற்காக தரமுள்ள விதைகள் கிடைக்க வழி வகுத்துத் தந்துள்ளதாகக் கூறுகிறார்.

மூன்றாவதாக, விவசாயப் பயிர்களுக்கு உரம் தேவை. உர விலையோ உயர்ந்து கொண்டே போகிறது. விவசாயிக்கோ வாங்கும் சக்தி இல்லை. ஆகவே, உரத்திற்கான ஒரு பாதி விலையை அரசே மானியமாகக் கொடுத்து, குறைந்த விலையில் உரம் கிடைக்கச் செய்ய ரூ. 22 ஆயிரத்து 450 கோடியை உர மானியமாக அரசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

நான்காவதாக, விவசாயிகளுக்கு முறையான மின்சாரம் இலவசமாகத் தருவதாகவும் அறிவித்துள்ளார்.

ஐந்தாவதாக, பாசன நீர் வசதி. இந்தியாவின் 6 லட்சம் கிராமங்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் கிணறுகள் மற்றும் ஏரி, குளங்களைத் தூர்வாரி, ஆழப்படுத்தி, அதிக மழை நீரைத் தேக்கி விவசாயம் செய்வதற்காக சுமார் ரூ. 12 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.

உண்மையில், விவசாயத்திற்குத் தேவையான பாசனநீர் மழையால் மட்டும் கிடைப்பதாகக் கருதி, மழை வரும்பொழுதே கிணறுகள், ஏரிகள், குளங்களில் மழை நீரை நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியமா? அவ்வாறு செய்தாலும் ஆண்டு முழுவதும் பாசனத்துக்குத் தேவையான நீர் போதிய அளவில் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

எனவே, தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்க ஒரு சிறப்பான மாற்றுத் திட்டம் உள்ளது. அதுதான் நதிகள் இணைப்பு.

“”இந்திய நதிகளை எல்லாம் இணைத்து விடுங்கள். வெள்ளச் சேதத்தையும் தடுக்கும் – வறட்சியையும் அது போக்கும்” என கடந்த ஐந்து ஆண்டுகளாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறி வருகிறார்.

அவர் மட்டுமல்ல, வடமாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கையே தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் மத்திய அரசு சமர்ப்பித்த பதில் மனுவில் 2045-ஆம் ஆண்டுக்குள் நதிகள் இணைப்புக்கு ஆவன செய்யப்படும் என குறிப்பிடப்பட்டது.

நதிகளை இணைக்க 40 ஆண்டுகளா என்று ஆச்சரியப்பட்ட தலைமை நீதிபதி, 10 ஆண்டுக் காலத்திற்குள் இணைத்தாக வேண்டும் என்றும் அதற்கான ஒரு வரைவுத் திட்டத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

முந்தைய பாஜக ஆட்சியில் அப்படி வந்ததுதான் தேசிய நதிகளை இணைப்பதற்கான குழு. ஆனால் 2004-ல் ஆட்சி மாறியது. அதன்பிறகு சமர்ப்பிக்கப்பட்ட மூன்று மத்திய பட்ஜெட்களிலும் நதிகள் இணைப்பிற்கு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதே உண்மை.

தேசிய நதிகளுக்குப் பதிலாக தென்னக நதிகளான மகாநதி முதல் காவிரி வரையாவது நதிகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுமாறு கோரிக்கைகள் பல வந்தன. ஆனால் நதிகள் இணைப்புத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

தென்னக நதிகளை இணைத்தால்தான் தென்மாநில விவசாயத்திற்கான பாசன நீர் பன்மடங்கு அதிகரிக்கும் என்ற உண்மையும் உணரப்படுகிறது.

அவ்வாறு தென்னக நதிகளை இணைத்தால், தென்மாநிலங்களில் ஏறக்குறைய 150 லட்சம் ஏக்கரில் இரு போக சாகுபடி செய்யலாம். விவசாயம் செழிப்படையும்போது கிராமப்புற மக்கள் அனைவருக்கும் போதிய அளவில் வேலை கிடைக்கும். நூல் ஆலைகளுக்குத் தேவையான மூலப் பொருளான பஞ்சுப் பற்றாக்குறையும் தீரும். எண்ணெய் வித்து உற்பத்தியிலும் தன்னிறைவு பெற முடியும்.

விவசாயத்திற்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மத்திய நிதிநிலை அறிக்கையில், நதிகள் தரும் பாசன நீரை மறந்துவிட்டால், ஆகாயத்தில்தான் விவசாயத்தை வளர்ச்சி அடையச் செய்ய முடியும்!

=========================================

நதிகள் இணைக்கப்படுவது எதற்காக?

சி.எஸ். குப்புராஜ்

இந்திய நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்து கடந்த 150 ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது.

சர் ஆர்தர் காட்டன் என்ற பிரபல பொறியாளர் இக் கருத்தை 19-ம் நூற்றாண்டிலேயே தெரிவித்தார். ஆனால் அப்போதிருந்த கிழக்கு இந்திய கம்பெனியாரின் அரசு அதை ஏற்கவில்லை. அதற்குப் பின் பிரிட்டிஷ் அரசும், சுதந்திர இந்திய அரசும்கூட இந்தத் திட்டத்தை பரிசீலித்தன. ஆனால் செயல்படுத்த முற்படவில்லை.

இறுதியாக 1982 ஆம் ஆண்டு இதற்காகவே தேசிய நீர்வள மேம்பாடு நிறுவனம் உருவாக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வரைபடங்களும் மதிப்பீடும் தயாரிக்கப்பட்டன. இத் திட்டத்தை உடனடியாக எடுத்துக் கொண்டு விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆணையிட்டுள்ளது.

இத்திட்டத்தின் அடிப்படைத் தத்துவம் என்னவென்றால், தண்ணீர் அதிகமாக ஓடிக் கடலில் கலந்து வீணாகும் நதிப்படுகைகளிலிருந்து, பற்றாக்குறையாக உள்ள நதிப்படுகைகளுக்குத் திருப்பி விட்டு வீணாகும் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்பதே. இந்த அடிப்படையில் தான் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வடநாட்டு நதிகளை இணைப்பதற்கு, அயல்நாட்டு அரசுகளின் சம்மதம் பெற வேண்டி இருப்பதால் தாமதம் ஆகிறது. எனவே தென்னாட்டு நதிகளையாவது முதல் கட்டமாக இணைத்து விடலாம் என்று ஆலோசனை கூறப்பட்டது.

இதுவும் தாமதம் ஆவதால் தமிழ்நாடு நதிகளையாவது இணைத்து விடலாம் என்று நமது குடியரசுத் தலைவர் யோசனை தெரிவித்தார். இந்த அடிப்படையில் பார்த்தால் மூன்று இணைப்புகள் செயல்படுத்தலாம் என்றும் இவற்றைத் தமிழ்நாடு அரசே செயல்படுத்தும் என்றும் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டப் பேரவையில் கூறினார். இந்த மூன்று இணைப்புகள் எவை என்றால்;

  • 1. தென் பெண்ணை ஆற்றையும் செய்யாற்றையும் இணைத்தல்.
  • 2. கோரை ஆற்றையும் அக்கினியாற்றையும் இணைத்தல்.
  • 3. தாமிரபரணி ஆற்றையும் நம்பியாற்றையும் இணைத்தல்

தமிழ்நாட்டில் உள்ள நதிகள் எல்லாம் பற்றாக்குறை நதிகளே; உபரி நீர் உள்ள நதிகள் எவையும் இல்லை. எனவே இரண்டு பற்றாக்குறை நதிகளை இணைப்பதால் பயன் ஒன்றுமில்லை.

ஆனால் ஒரு சில நதிகளில் 25 சதவீத நம்பகத்தன்மையின் அடிப்படையில் பார்த்தால் ஓரளவு உபரி நீர் இருப்பதாக 2001 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழு 2002 ஆம் ஆண்டில் ஓர் அறிக்கையை அரசுக்கு அளித்தது. அக் குழுவின் அறிக்கையில் கீழ்க்கண்ட நதிகளில் இருக்கும் உபரி நீர் பற்றியும் அந்த உபரி நீரை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன.

25 சதவீத நம்பகத்தன்மையின் அடிப்படையில் உபரி நீர் உள்ள நதிப்படுகைகள் பின்வருமாறு:

  • 1. பாலாறு – 24.34 டி.எம்.சி.
  • 2. வெள்ளாறு – 41.21 டி.எம்.சி.
  • 3. தென் பெண்ணையாறு – 26.40 டி.எம்.சி.
  • 4. காவிரி நதி – 103.56 டி.எம்.சி.
  • 5. தாமிரபரணி நதி – 24.0 டி.எம்.சி.

இந்த உபரி நீர் எல்லாம் ஆற்றின் கடைசிப் பகுதியில் தான் உள்ளன. இந்த நதிகளை இணைப்பதற்கு அந்தக் குழு எந்த ஆலோசனையும் கூறவில்லை. எனவே இந்த இணைப்புகள் பற்றித் தெரிந்து கொள்வதற்காக, பொதுப்பணித்துறையில் விசாரித்து கீழ்க்கண்ட விவரங்கள் பெறப்பட்டன.

இணைப்பு – 1: சாத்தனூர் உயர்நிலைக் கால்வாய் திட்டம்

சாத்தனூர் அணையிலிருந்து உயர்நிலைக் கால்வாய் அமைத்து பல ஏரிகளுக்குத் தண்ணீர் அளித்துவிட்டு இறுதியாக விழுப்புரம் வட்டத்தில் உள்ள நந்தன் கால்வாயுடன் இணைத்தல். தென்பெண்ணை ஆற்றில் சாத்தானூரில் உபரி நீர் இல்லை. திருக்கோவிலூர் அணைக்கட்டிற்கு கீழேதான் உபரிநீர் உள்ளது.

இணைப்பு – 2: கோரையாறு தனிப்படுகையல்ல, காவிரியின் உபநதி. வெள்ளக் காலங்களில் திருச்சி நகரத்திற்கு வெள்ள அபாயம் உண்டாக்குகிறது. எனவே கோரையாற்றையும் ஆரியாற்றையும் கால்வாய் மூலம் இணைத்து அதிலிருந்து 15 ஆயிரம் கனஅடி வெள்ள நீரை அக்னியாறு படுகைக்குத் திருப்புதல்.

இணைப்பு – 3: தாமிரபரணி ஆற்றின் வெள்ள நீரைச் சாத்தான்குளம் மற்றும் திசையன்வினை பகுதிகளுக்குத் திருப்புதல்.

சில பொறியாளர்கள் நதிகள் இணைப்பின் தத்துவத்தை உணராமல் இந்தியாவின் நதிகள் அனைத்தையும் சமமட்டக் கால்வாய்கள் மூலம் இணைக்க முடியும் என்றும், அவற்றில் இரண்டு பக்கமும் தண்ணீர் பாயும் என்றும், இத்திட்டம் மத்திய அரசு தயாரித்துள்ள திட்டத்தைவிட மேலானது என்றும் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இது செயல்முறைப்படுத்த முடியாத திட்டம். ஓர் ஆற்றிலோ அல்லது கால்வாயிலோ, தண்ணீர் ஓட வேண்டும் என்றால் அடிமட்டச் சாய்வு இருக்க வேண்டும். சாய்வு இல்லாத கால்வாய் எப்படி செயல்படும்? வெறும் பிரசாரத்தால் மட்டும் தண்ணீர் ஓடாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

———————————————————————————————————————————————————–

100 கோடிக்கு 36 லட்சம் கோடி!

பதினோராவது ஐந்தாண்டுத் திட்ட ஆவணத்துக்கு தேசிய வளர்ச்சிமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து மாநில முதலமைச்சர்களும் ஒப்புதல் அளித்துவிட்டனர். 5 ஆண்டுகளில் மொத்தம் 36 லட்சம் கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நம் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியை பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் 4 ஆண்டுகளில் 9% என்றும், கடைசி ஆண்டில் (2011-12) 10% என்றும் பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை திட்டக்குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா பின்னர் நிருபர்களிடம் விவரித்தார்.

கல்வி, சுகாதாரம், வறுமையை ஒழிப்பதற்கான வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் ஆகியவற்றின் மூலம் சமூக அடித்தளக் கட்டமைப்பை வலுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அலுவாலியா கூறியுள்ளார்.

நம்முடைய ஐந்தாண்டுத் திட்ட இலக்குகளை எட்ட முடியாதவாறு 3 விஷயங்கள் தடுக்கின்றன.

1. ஐந்தாண்டுத் திட்டங்களை வகுப்பதிலும், அமல் செய்வதிலும், அதன் பலன்களைத் தணிக்கை செய்வதிலும் மக்களை ஈடுபடுத்தத் தொடர்ந்து தவறி வருகிறோம்.

2. அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் கூடி தயாரித்து, நிதி ஒதுக்கி, நிறைவேற்றும் திட்டங்களாகவே இவை நீடிக்கின்றன.

3. திட்டங்களை வகுப்பதில் காட்டும் ஆர்வத்தை அமல்படுத்துவதில் தொடர்ச்சியாகக் காட்டத் தவறுவதால் எல்லா திட்டங்களும் தொய்வடைந்து, பிறகு தோல்வியைத் தழுவுகின்றன.

நதிநீர் இணைப்பு சாத்தியமா என்பது ஒருபுறம் இருக்கட்டும், இருக்கும் நீர்நிலைகளைக் குறைந்த செலவில் பராமரிக்க நம்மிடம் உள்ள தேசியத் திட்டம்தான் என்ன?

ஐந்தாண்டுத் திட்டத் தயாரிப்பு என்பது இன்றளவும் வெறும் சடங்காக மட்டுமே இருக்கிறது. குறைந்த செலவில் அதிக பலன்களைப் பெறும் வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும். கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழித்து, ஆயிரக்கணக்கில் பணத்தைத் திருப்பி எடுப்பதாகவே திட்டங்கள் முடிகின்றன. திட்ட அமல்களில் ஏற்படும் காலதாமதத்தால்தான் கோடிக்கணக்கான ரூபாய்கள் விரயம் ஆகின்றன என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில் பேசியிருக்கிறார். அதைத் தவிர்க்க என்ன திட்டத்தை இந்தக் கூட்டம் பரிசீலித்தது?

“”கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கிவிட்டது, இது மாநில முதலமைச்சரின் -நிதி அமைச்சரின் வாதத்திறமைக்குச் சான்று” என்று போலியாக பெருமைப்படுவதே வழக்கமாகி வருகிறது.

நபர்வாரி வருமானம் எவ்வளவு உயர்ந்தது, அணைகள் எத்தனை உயர்ந்தன, எத்தனை லட்சம் ஏக்கர்கள் கூடுதலாக பாசன வசதி பெற்றன, எத்தனை ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி ஆனது, எத்தனை லட்சம் பேருக்குக் கூடுதலாக, நிரந்தர வேலைவாய்ப்புக் கிடைத்தது, தொழில், வர்த்தகத்துறையில் ஒட்டுமொத்த விற்றுமுதல் எத்தனை லட்சம் கோடி ரூபாய்கள் அதிகரித்தன என்ற ஆக்கபூர்வமான முடிவுகளே இந்த திட்டங்களின் வெற்றிக்கு உரைகல். அப்படியொரு அறிக்கையையும் இந்த தேசிய வளர்ச்சி மன்றக் கவுன்சிலில் முன்வைத்தால், ஐந்தாண்டுத் திட்ட வெற்றியை நம்மால் மதிப்பிட முடியும்.

நீர்நிலைகளையும், நிலத்தடி நீரையும் பாழ்படுத்தும் தோல் தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள், பின்னலாடைத் தொழிற்சாலைகள், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ரசாயன ஆலைகள் போன்றவைதான் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறுகின்றன. இப்படிப்பட்ட வளர்ச்சி மாநிலத்துக்கு மட்டும் அல்ல, நாட்டுக்கே தேவை இல்லை என்பதை தேசிய அளவில் விவாதிக்க வேண்டும்.

குறிப்பிட்ட சில இனங்களில் மட்டும் வரிவிதிப்பு அதிகாரத்தை வைத்திருந்த மத்திய அரசு மதிப்புக் கூட்டப்பட்ட விற்பனை வரி (வாட்), சேவை வரி மூலம் தன்னுடைய கரத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டுவிட்டது. இனி போகப்போக ஐந்தாண்டுத் திட்டமிடல் என்பது மத்திய அரசின் தனியுரிமை ஆனாலும் வியப்பதற்கு ஏதும் இல்லை.

Posted in 11, 5, Agriculture, Budget, Cauvery, Cheyaar, Cheyyaar, Cheyyaaru, Civil, Connection, CS Kuppuraj, Damirabarani, Dhamirabharani, doctors, Drinking Water, Economy, Education, Farming, Farmlands, Finance, Five Year Plans, Floods, Food, Fund, Government, Govt, harvest, Health, Healthcare, Hospital, Hygiene, IAS, inter-link, IPS, Kaviri, Korai, Lakes, medical, Nambiyar, officers, Paalar, Paddy, Palaar, Palar, peasants, Pennai, Planning, Plans, Politics, Poor, Project, Rain, rice, River, Sathanoor, Sathanur, service, Seyaar, Seyyaar, Seyyaaru, South Pennai, Tamirabarani, Tamirabharani, Thamirabarani, Thamirabharani, Vellaar, Village, Water, Watersources, Wheat, Year | 1 Comment »

Ganga-Cauvery water inter-linking – National River Integration

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

கங்கை-காவிரி இணைப்பு-பலிக்குமா பாரதியின் கனவு?

இராமசாமி

“”இந்திய நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்தாலும், கங்கை – காவிரி இணைப்பு என்பது இன்னும் ஒரு கனவாகவே இருந்து வருகிறது.

செயற்கைக்கோள் படங்களை வைத்து இக் கட்டுரையாளர் மற்றும் அவருடைய ஆராய்ச்சி மாணவர்களும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தொலையுணர்வு மையத்தில் இந்திய விண்வெளி நிறுவனத்தின் நிதி உதவியுடன் நடத்திய ஆய்வுகளின்படி, காவிரி நதி சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஒக்கேனக்கல்லில் இருந்து (1) வடகிழக்காக தர்மபுரி-ஆம்பூர்-வாணியம்பாடி-வாலாஜாபேட்டை-திருவள்ளூர் வழியாக ஓடி, சென்னைக்கு வடக்கே கடலில் கலந்தது தெரியவருகிறது.

அப்போது சென்னைப் பகுதியில் பூமி மேலே எழும்பிய காரணத்தால் இப்பாதையை, காவிரி விட்டு விட்டு தற்போது மேட்டூர் அணையிருக்கும் இடத்திலிருந்து தோப்பூர் ஆறு – வாணியாறு(2) – பொன்னையாற்றின் தற்போதைய பாதை(3) வழியாக, பல ஆண்டுகளுக்கு முன்பு ஓடி கடலூர் பகுதியில் கடலில் கலந்திருக்கிறது.

இக்கால கட்டத்தில், அடிக்கடி ஏற்பட்ட கடல் அலைகளின் சீற்றத்தாலும், மேலும் இன்றைய மேட்டூர் அணையிலிருந்து ஈரோடு வழியாக வடக்கு – தெற்காக ஒரு பெரிய பூமி வெடிப்பு (4) உருவான காரணத்தாலும், இந்த இரண்டாவது பாதையையும் விட்டுவிட்டு, தற்போதைய மேட்டூர் அணைப்பகுதியில் இருந்து தெற்காகத் திரும்பி அப்பூமி வெடிப்பின் வழியாக ஓடி, கரூர் – திருச்சி பகுதியை சுமார் 2300 ஆண்டுவாக்கில் அடைந்து இருக்கிறது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.

பின்னர், திருச்சியில் இருந்து கிழக்காக பல கிளை நதிகளாகப் பிரிந்து ஓடிக் கடலில் கலந்து இருக்கிறது. இக்கிளை நதிகள் தெற்கே தற்போது உள்ள புதுக்கோட்டை வெள்ளாறு(5), அம்புலியாறு, அக்னியாறு பகுதிகளில் இருந்து வடக்கே தஞ்சாவூர், கும்பகோணம், பூம்புகார் வரை வியாபித்து ஓடியிருக்கிறது.

தற்போதுள்ள கொள்ளிடம் (6) பாதையின் வயது சுமார் 750 ஆண்டுகள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சென்னைப் பகுதியில் ஓடிய காவிரி கொஞ்சம் கொஞ்சமாக தெற்கே புதுக்கோட்டை வரை தடம் மாறி ஓடி, பின் வடக்காகத் திரும்பி கொள்ளிடமாக நிலை பெற்ற பின், காவிரி விட்டுச் சென்ற பழைய பாதைகளைத்தான் பாலாறு, பொன்னை ஆறு புதுக்கோட்டை வெள்ளாறு, அக்னி ஆறு, அம்புலியாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி போன்ற பல நதிகள் பின்னாளில் ஆக்கிரமித்துக் கொண்டன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வைகை நதி(7) முன்பு குண்டாறு வழியே ஓடி பின் வடப் பக்கமாகத் திசைமாறி ஓடி, தற்போது ராமேசுவரம் அருகே கடலை அடைகிறது.

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலகட்டத்தில், நதிகளை இணைப்பதற்காக மிகப் பெரிய இணைப்புக் கால்வாய்களை வெட்டுவதற்குப் பதிலாக, நிலவியல் மாற்றங்கள், நதிகளின் செயல்பாடுகள் ஆகியவற்றை ஆராய்ந்து பல புதையுண்ட நதிகளைப் பயன்படுத்தி இந்திய நதிகளை இணைக்கலாம் என்று இவ்வாய்வு கூறுகிறது.

ஏனெனில், இப்புதையுண்ட பாதைகளைத் தேர்ந்தெடுப்பதால் குறைந்த அளவே ஆழப்படுத்தும் பணி தேவைப்படும் என்பதோடு மட்டுமல்லாமல் புதிய கால்வாய்களை உருவாக்குவதால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்புகளும் இருக்காது.

மேலும் இப்புதையுண்ட பழைய பாதைகள், ஏற்கெனவே நதிகள் ஓடும் பாதைகளாக இருந்ததனால், எளிதாக புதிய நீர்வளத்தை ஏற்றுக்கொள்ளும். வெள்ளமோ அல்லது சுற்றுப்புறச்சூழல் கேடோ ஏற்படுத்தாது. ஆகவே இவ்வாய்வின் மூலம் முதற்கட்டமாக எவ்வாறு தமிழக நதிகளை இணைக்க முடியும் என்ற மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அ. ஒக்கேனக்கல் பகுதிகளில் காவிரியில் வரும் வெள்ளத்தை சென்னைக்கு காவிரியின் பழைய புதையுண்ட பாதை(1) வழியாகக் கொண்டு செல்லுதல்.

1. ஒக்கேனக்கல் – வாணியம்பாடி இடையே சுரங்கப்பாதை (8) ஏற்படுத்தி காவிரி நீரைக் கொண்டு செல்லுதல்.

2. வாணியம்பாடி – வாலாஜாபேட்டை இடையே பாலாற்றில் (9) காவிரி நீரை ஓடச் செய்தல்

3. வாலாஜாபேட்டை வரை பாலாற்றில் கொண்டு வந்த காவிரி நீரை வாலாஜாபேட்டைக்கு கிழக்கே ஒரு தடுப்பு அணையைக்கட்டி நீரின் ஒரு பகுதியை வாலாஜாபேட்டை – திருவள்ளூர் – சென்னை வரை, காவிரியின் புதையுண்ட பாதையை (10) சற்று ஆழப்படுத்தி, அதன் வழியாகக் கொண்டு செல்லுதல். மீதி காவிரி நீரை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியின் மேம்பாட்டிற்காக பாலாற்றில் ஓடச் செய்தல்.

ஆ. ஒக்கேனக்கல்லில் இருந்து – சென்னைக்கு காவிரி நீரைக் கொண்டு செல்ல மாற்று வழிப்பாதை

4. மேற்கூறிய (பகுதி அ-வில் கூறப்பட்டவை) இணைப்பு சாத்தியமில்லையெனில் கீழ்க்கண்ட மாற்று வழியைப் பயன்படுத்தலாம். மேட்டூர் நீர்த் தேக்கத்திற்கு கிழக்காக காவிரியின் பழைய பாதையில் தற்போது ஓடும் தொப்பூர் ஆறு மற்றும் வாணியாறுகளை (2) சிறிது ஆழப்படுத்தி, காவிரியின் நீரை மேட்டூர் அணையிலிருந்து சாத்தனூர் நீர்த்தேக்கத்துக்குக் (11) கொண்டு செல்லுதல்.

5. சாத்தனூர் அணையில் இருந்து சுமார் 8 – 10 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கே அமைந்துள்ள முட்டனூர் வரை ஒரு கால்வாய் அமைத்து, காவிரி நீரை செய்யாற்றுக்கு கொண்டு சென்று செய்யாற்றில் (12) ஓடச் செய்தல்.

6. இவ்வாறு செய்யாற்றுக்கு கொண்டு வந்த காவிரி நீரை, பூனாம்பலம் அருகே செய்யாற்றில் ஒரு தடுப்பு அணையைக் கட்டி, அதோடு பூனாம்பலத்தில் இருந்து வடக்கே வாலாஜாபேட்டை (8) வரை ஒரு கால்வாயை சுமார் 10 – 12 கிலோ மீட்டருக்கு (13) அமைத்து, காவிரி நீரை பாலாறுக்கு கொண்டு செல்லுதல். வாலாஜாபேட்டையில் இருந்து இந்நீரை திருவள்ளூர் – சென்னை வரை காவிரியின் பழைய பாதையில் கொண்டு செல்லுதல்.

7. சாத்தனூர் அணையிலிருந்து (11) மீதம் உள்ள காவிரி நீரை பொன்னையாறு (3) வழியாகக் கொண்டு சென்று விழுப்புரம் பகுதியை வளமுறச் செய்தல்.

இ. காவிரியை புதுக்கோட்டை வெள்ளாற்றோடு இணைத்தல்

8. எஞ்சியுள்ள காவிரி வெள்ள நீரின் ஒரு பகுதியை, திருச்சி – முக்கொம்பு அருகே ஒரு சிறிய தடுப்பு அணையை அமைத்து, முக்கொம்பு – வெம்பனூர் இடையே காணப்படும் காவிரியின் புதையுண்ட ஒரு கிளை நதி வழியாகக் கொண்டு சென்று, புதுக்கோட்டை வெள்ளாறு (5) வழியாக ஓடச் செய்து, வறட்சிப் பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தின் நீர் வளத்தை மேம்படுத்துதல்.

ஈ. காவிரியை அம்புலியாறு – அக்னியாறோடு இணைத்தல்

9. மேற்கூறியவாறே, திருச்சிராப்பள்ளிக்கு கிழக்கே மேலும் ஒரு தடுப்பு அணையை அமைத்தோ அல்லது கல்லணையைப் பயன்படுத்தியோ கல்லணைக்கு தெற்கே காணப்படும் காவிரியின் புதையுண்ட இக்கிளை நதிகளின் வழியாக காவிரி நீரை புதுக்கோட்டை வெள்ளாற்றிற்கு வடக்கே உள்ள காவிரியின் புதையுண்ட கிளை நதிகளில் தற்போது ஓடும் அக்னியாறு மற்றும் அம்புலியாறுக்கு திருப்பி விடுதல்.

உ. தஞ்சை வண்டல் பகுதியில் நீர் வளத்தை மேம்படுத்துதல்

10. மேலும் தஞ்சை பகுதிகளில் காவிரியின் புதையுண்ட பழைய கிளை நதிகளில் தற்போது ஓடும் வெண்ணாறு, வெட்டாறு, அரசலாறு மற்றும் குடமுருட்டி ஆறுகளை ஆழப்படுத்தி காவிரி வெள்ள நீரின் வரத்தை அதிகம் செய்து நீர்வள மேம்பாடு செய்தல்.

ஊ. காவிரியை மணிமுத்தாறு – வைகையோடு இணைத்தல்

11. புதுக்கோட்டைக்கு மேற்கே வேம்பனூர் அருகே புதுக்கோட்டை வெள்ளாற்றில் ஒரு தடுப்பு அணையை அமைத்து, வேம்பனூர் – பொன்னமராவதி – சேந்தலப்பட்டி வழியாக மதுரைக்கு வடமேற்கு வரைக்கும் கால்வாய் அமைத்து (14), காவிரியை வைகையாறோடு இணைத்து, அந்நீரை வறட்சி மாவட்டங்களான சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் காணப்படும் புதையுண்ட கிளை நதிகளின் மூலம் கொண்டு சென்று அம்மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏரி/ குளங்களில் சேமித்து நீர் வளத்தை மேம்படச் செய்தல்.

12. தேவகோட்டைக்கு மேற்கே சேந்தலப்பட்டியில் இருந்து மேற்கூறிய வேம்பனூர் – பொன்னமராவதி – சேந்தலப்பட்டி – மதுரை கால்வாயில் இருந்து ஒரு பகுதி காவிரி நீரை மணிமுத்தாறில் (15) ஓட வைத்து தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் காணப்படும் ஆயிரக்கணக்கான ஏரி / குளங்களில் சேமித்து நீர் வளத்தை மேம்படச் செய்தல்.

இந்த ஆய்வு தமிழக நதிகளை இணைத்து அதன் மூலம் காவிரியின் மிகுந்து வரும் வெள்ளத்தைக் கடலில் வீணாக்காமல் நீர் வள மேம்பாடு செய்வதில் ஒரு புதிய கண்ணோட்டத்தை வெளிக் கொணர்ந்துள்ளது.

காவிரியின் வெள்ளத்தோடு கோதாவரி, கிருஷ்ணா அல்லது கங்கை போன்ற எந்த ஒரு நதியில் இருந்து தமிழகத்துக்கு நீர் கொண்டு வந்தாலும் அதன் நுழைவு வாயில் ஒக்கேனக்கல்லாகத்தான் இருக்க வேண்டும் என்பது புவியியல் அமைப்பு கூறும் ஒரு மிகப் பெரிய உண்மை.

அப்போதுதான் தமிழ்நாடு முழுவதும் மேற்கூறியவாறு நீர்வள மேம்பாடு செய்ய இயலும். அதைவிடுத்து, இந்நதி இணைப்புத் திட்டத்தில், கடலோரத்தில் கால்வாய் அமைத்து, பெண்ணாறு – காவிரி இணைப்பு செய்தால், வண்டல் மற்றும் கடலோர மக்கள் மட்டுமே பயன் பெற முடியும். தமிழ்நாட்டின் பெரும்பகுதிகள் பயனடையாது.

இவ்வாறு தமிழக நதிகளை இணைப்பது சாத்தியமானதாக இருப்பதால், புவியியல் மற்றும் பொறியியல் வல்லுநர்கள் இணைந்து செயலாற்றி, நதிகள் இணைப்புத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும்.

(கட்டுரையாளர்: இயக்குநர் மற்றும் தலைவர், தொலையுணர்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி).

திருப்தி அளிக்காத தீர்ப்பு

ஆர். கருப்பன்

வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத காவிரி என்கிற இளங்கோவடிகளின் கூற்று 1974ம் ஆண்டு முதல் இன்றுவரை பலமுறை பொய்த்துக் கொண்டே வந்திருக்கின்றது.

1974ம் ஆண்டு, காவிரி ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என கர்நாடகம் பொய்ப்பிரசாரம் செய்தது. இதை தமிழ்நாட்டுத் தலைவர்களும் நம்பினார்கள்.

அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் வற்புறுத்தலால், கர்நாடக அரசின் விடாப்பிடி போக்கினால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டது. அவசியமானால் மீண்டும் தாக்கல் செய்யும் உரிமையோடு வாபஸ் பெறவில்லை எனக் கூறி மீண்டும் வழக்கைத் தாக்கல் செய்ய முடியாது என்கிற சட்ட ஆலோசனையால் தமிழகம் தவித்தது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகஜீவன்ராம் நடத்திய பேச்சுவார்த்தையின்போது தமிழகத்துக்கு 377 டி.எம்.சி. தண்ணீர் தர கர்நாடகம் ஒப்புக்கொண்டது. அதை அன்று ஏற்க மறுத்துவிட்டனர். அதுவும் சரியே. காரணம் தமிழகத்தின் பங்கு 533 டி.எம்.சி.க்கு மேல் எனக் கருதி வந்தோம்.

கர்நாடகம் அதிவேகமாக காவிரி நதி நீரை முழுமையாகப் பயன்படுத்த எண்ணி ரகசியமாக புதிய அணைகளையும், புதிய பாசனத் திட்டங்களையும் தொடங்க ஆரம்பித்தது. மேட்டூருக்கு தண்ணீர் திறந்து விடுவது நின்று போனது. கர்நாடகம் தன் தேவைக்கு மேல் தண்ணீரைத் தேக்கி வைக்க ஆரம்பித்தது. பயிர்களைப் பாதுகாக்க கொஞ்சம் தண்ணீர் தாருங்கள் என கர்நாடக அரசிடம் தமிழக அரசு கெஞ்சுவதும், கர்நாடகம் மறுப்பதும் பின்னர் ஏதோ பிச்சை போடுவது போல சில டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுவதும் வாடிக்கையாகப் போனது.

கர்நாடகத்தின் போக்கு நியாயத்திற்கும் தர்மத்திற்கும் மாறாக இருப்பதும் அதனால் தமிழக விவசாயிகள் தொடர்ந்து பாதிப்பிற்கு உள்ளாவதையும் பொறுக்க இயலவில்லை. 1924ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் கர்நாடகம் புளுகிவருவதுபோல காலாவதியாகவில்லை என்பது புலனானது.

1924ம் ஆண்டின் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என்று வாதத்திற்காக ஒப்புக் கொண்டாலும் அனைத்துலக நதிநீர்ச் சட்டத்தின்படி, உருவெடுக்கும் நாட்டிற்கு மட்டும் நதி சொந்தமில்லை. அது ஓடிப் பாய்ந்த கடைசி நாடு வரை பங்கு கோரலாம் என்ற விதி நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தக் காரணங்களை முன்னிறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் 1983ம் ஆண்டு முதல் கர்நாடகம் முரண்டு பிடிக்கும் போதெல்லாம் வழக்குத் தொடுத்து வந்தேன். காக்காய் உட்கார பனம்பழம் விழுந்ததுபோல் மேட்டூருக்கு தண்ணீர் வருவதும், வழக்கு தள்ளுபடியாவதும் வழக்கமானது.

இத்தகைய சூழலில் 1988ம் ஆண்டு ஒரு பொது நல வழக்கைத் தொடுத்தேன். கர்நாடகம் இம்முறை இசைந்து வரவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசை திருப்பி அனுப்பிவிட்டு, விசாரணையின்போது ஆஜராக மறுத்துவிட்டது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டப்படி மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்ப் பிரச்சினை குறித்து நதிநீர்த் தீர்ப்பாயம்தான் விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு தள்ளுபடி செய்துவிட்டது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு கர்நாடகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மறுவிசாரணைக்குள் அவசர அவசரமாக கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தை அணுகி இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது. உச்ச நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என வேண்டியது. அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு வழக்கு தில்லிக்கு மாற்றப்பட்டது.

காவிரி வழக்கு புத்துயிர் பெற்றது. தமிழக அரசும் இவ்வழக்கில் ஆர்வம் காட்டியது. இதையடுத்து எல்லாப் பிரச்சினைகளையும் தீர்ப்பாயத்தில் முறையிட்டு நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் முடிவெடுத்து, தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

தீர்ப்பாயம் பல்வேறு நிலைகளை ஆய்வுசெய்து 1991-ம் ஆண்டு தனது இடைக்கால உத்தரவை வெளியிட்டது.

கர்நாடக சட்டமன்றம் கூடி, காவிரி தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவை ஏற்கமறுத்து அதை ரத்துசெய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. காவிரி நதிநீர்ப் பாதுகாப்பு என்கிற அவசரச் சட்டத்தையும் பிறப்பித்தது.

தீர்ப்பாயம் இந்திய அரசியலைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டது. அதில் அங்கம் வகித்தவர்கள் நீதிபதிகள்.

இந்நிலையில் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு வெளிவந்தது. கர்நாடக அரசியல்வாதிகள் ஒருமித்த குரலில், தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்கிற அறிவிப்பினை வெளியிட ஆரம்பித்தனர்.

உறுதியான நீர்வரத்து 50 சதவீதம் என்கிற அடிப்படையில் பங்கீடு செய்துள்ளதாக தீர்ப்பாயம் கூறியுள்ளது. முழு அளவு நீர் அதாவது 100 விழுக்காடு அளவு வந்தால் உபரியாக வரும் 50 சதவீதம் அளவு நீர் கர்நாடகத்திற்கு அல்லவா போய்ச் சேரும். அது எப்படி நியாயமாகும்?

சரி தீர்ப்பாயப்படி தமிழகத்திற்குத் தேவையான அளவு வெறும் 200 டி.எம்.சி. அளவுதான் என்றாலும் உபரியான 350 டி.எம்.சி. நதிநீர் தமிழகத்தின் பங்கு அல்லவா? 1976 முதல் 2007 வரை கணக்கிட்டு காவிரிப்படுகை விவசாயிகளுக்கு வழங்கிட உத்தரவிட்டிருக்க வேண்டுமல்லவா?

தமிழகத்தின் நீரை கர்நாடகத்திற்கு தீர்ப்பாயம் தாரை வார்ப்பது கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்ததுபோல் அல்லவா இருக்கிறது.

கர்நாடகம் ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கால் தமிழகத்துக்கு நேரிட்ட சேதத்துக்கு இழப்பீடு ஏதும் கொடுக்காதது ஏன்?

1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி புதிதாக விவசாயத்திற்கு கொணர்ந்த நன்செய் நிலங்களில் சாகுபடி செய்யக் கூடாது என உத்தரவு கோரியிருந்த வேளையில், புதிய நன்செய் சாகுபடியை கர்நாடகம் ஆமோதித்தது. அத்துடன் அத்துமீறி புன்செய் சாகுபடியையும் விரிவுபடுத்தியது.

அதே தருணம் தமிழகத்தில் விரிவுபடுத்திய புதிய சாகுபடி நிலங்களைப் பயிரிட வேண்டாம் என்றல்லவா கூறிவிட்டது. இதன் மூலம் தெளிவாவது என்னவென்றால், காவிரியின் நீர்வரத்து 1000 டி.எம்.சி. அளவுக்கு இருக்கும்; அதை வேண்டுமென்றே குறைவாக மதிப்பிட்டு மிகக் குறைவான பங்கீட்டை தமிழகத்திற்கு கொடுக்க நடந்த மோசடி நாடகத்தின் முடிவுதான் இறுதித் தீர்ப்பு.

தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு நம்முடைய எழுச்சியையும், எதிர்ப்பையும் கர்நாடகத்துக்கு காட்ட வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்க வழிபிறக்கும்.

ஆரம்ப நாள் முதலே கர்நாடகம் செய்வது அடாவடித்தனம்; சட்டரீதியான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை; நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்பட மாட்டேன்; அதைத் தள்ளுபடி செய்து விட்டோம் எனப் பிரகடனப்படுத்துவது, கர்நாடக வாழ் தமிழர்களுக்கு எதிராக தாக்குதலை கட்டவிழ்த்துவிடுவது. இவற்றையே கர்நாடகம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

எனவே உரிய நிவாரணங்களைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உடனே வழக்குத் தொடர வேண்டும். தீர்ப்பாயத்திடம் மறு ஆய்வுக்குச் செல்லுவதால் எந்தப் பலனும் நேராது. வெறும் கால இழப்புதான் மிஞ்சும். தவறான தீர்ப்பை மறு ஆய்வு என்கிற பேரால் எந்தத் தீர்ப்பாயம் திருத்தி எழுதும்?

முன்போல் காவிரிப்படுகை விவசாயிகளின் பிரதிநிதிகள், தீர்ப்பாயத்தின் உத்தரவைத் தள்ளுபடி செய்து, அவர்கள் கோரிய நிவாரணம் வேண்டும் எனத் தனியாக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்).

——————————————————————————-

சிக்கலில் சிந்து நதிநீர் ஒப்பந்தம்

எம். மணிகண்டன்

சிந்து மற்றும் அதன் கிளை நதிகளின் நீர்ப்பங்கீடு குறித்த உடன்பாடு 1960-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டபோது, அத்துடன் இருநாடுகளுக்கு இடையே நிலவிவந்த நீர்ப்பங்கீட்டு பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாகவே அனைத்துத் தரப்பினரும் நினைத்தனர். ஆனால் 1980க்குப் பிறகு எழுந்த நவீன காலப் பிரச்னைகள் அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

சிந்து மற்றும் அதன் கிளை நதிகளான

* ஜீலம்,
* சீனாப்,
* பியாஸ்,
* ரவி,
* சட்லெஜ்

ஆகியவற்றில் மேற்கு பக்கம் இருக்கும் சிந்து, ஜீலம், சீனாப் ஆகியவை பாகிஸ்தானுக்கும், மற்ற மூன்று நதிகள் இந்தியாவுக்கும் “உரிமையானவை’ என சிந்து நதிநீர் ஒப்பந்தம் கூறுகிறது.

இந்த நதிகளின் போக்கை மாற்றாமல் அணைகளைக் கட்டிக் கொள்ளலாம் எனவும் இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பிரச்னை இங்குதான் ஆரம்பிக்கிறது. வளர்ச்சிப் பணிகளைக் காரணம் காட்டி பாகிஸ்தான் உரிமை பெற்ற நதிகளின் குறுக்கே இந்தியா அணைகளைக் கட்டுவதும், அதற்குப் பாகிஸ்தான் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

ஜீலம் நதியில் கோடைக்காலத்தில் படகுப் போக்குவரத்தை சீரமைப்பதற்காக கட்டப்பட்ட ஊலர் தடுப்பணை, பக்லிஹார் மற்றும் கிஷன்கங்கா நீர்மின் திட்டங்கள் ஆகியவை இந்தியாவின் “பிரச்னைக்குரிய’ திட்டங்கள். தற்போது ஊரி நீர்மின் திட்டமும் இப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட எந்தத் திட்டத்திலும் பாசனத்துக்காக நதிநீரை இந்தியா பயன்படுத்தவில்லையே? பிறகு ஏன் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்று ராஜதந்திரம் தெரியாதவர்கள் அப்பாவியாகக் கேட்கக் கூடும்.

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் அரசியல் எழுச்சியைக் கண்டு பொறாமை கொண்ட பாகிஸ்தான் இது போன்ற தேவையற்ற வேலைகளில் ஈடுபடுகிறது என்றுகூட நம்மில் சிலர் நினைக்கலாம். இவற்றைப் பற்றி பார்ப்பதற்கு முன் பாகிஸ்தான் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் பார்ப்போம்.

சிந்து நதிநீர் ஒப்பந்தப்படி பாகிஸ்தானுக்கு உரிமையான நதியின் வேகத்தை அணையைக் கட்டி இந்தியா தடுக்கக்கூடாது. அதாவது பாகிஸ்தானுக்குள் செல்லும்போது அந்த நதி சீரான வேகத்தில் செல்ல வேண்டும். ஆனால் ஊலர் தடுப்பணை, பக்லிஹார் நீர்மின் திட்டம், ஊரி நீர்மின் திட்டம் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள அணைகள், நீரின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன என்பதே பாகிஸ்தானின் குற்றச்சாட்டு.

சாதாரணமான நேரங்களில் இந்த அணைகளைக் கொண்டு பாகிஸ்தானுக்கு பிரச்னை எதையும் ஏற்படுத்தாமல் சமர்த்தாக நடந்து கொள்ளும் இந்தியா, போர்க்காலங்களில் இவற்றையே ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது என்று பாகிஸ்தான் பலமாகச் சந்தேகிக்கிறது. கடந்த 2005-ம் ஆண்டில் பக்லிஹார் அணை திடீரெனத் திறக்கப்பட்டதால் பாகிஸ்தான் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அந்நாடு சுட்டிக் காட்டுகிறது. இது தவிர, விவசாயத்தை நம்பியிருக்கும் பாகிஸ்தானின் சிந்து, பஞ்சாப் மாகாண மக்கள் இந்த அணைகளால் பாதிக்கப்படுவார்கள் என்ற பிரச்னையையும் பாகிஸ்தான் முன்வைக்கிறது.

இந்தியாவைக் கடந்துதான் பாகிஸ்தானுக்குள் இந்த நதிகள் செல்ல வேண்டும் என்பதுதான் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு மிகவும் சாதகமான அம்சம். உலக அரங்கில், ஒப்பீட்டளவில் செல்வாக்கு மிகுந்த நாடான இந்தியாவுக்கு உலக நாடுகள் ஆதரவளிக்கும் என்பது பாகிஸ்தானை எரிச்சலடைய வைக்கும் மற்றொரு விஷயம். ஏற்கெனவே, பக்லிஹார் நீர்மின் திட்ட விவகாரத்தில் “கிட்டத்தட்ட’ வெற்றியைப் பெற்றுவிட்ட இந்தியாவுக்கு, தற்போது ஊரி நீர்மின் திட்டத்துக்கு எழுந்திருக்கும் எதிர்ப்பு ஒன்றும் தலைபோகும் விஷயமல்ல.

பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எழுந்த பிரச்னைகள் எதுவும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. இரு நாடுகளும் அணுஆயுத சக்திகளாக மாறிவிட்ட பிறகு இந்த பிரச்னைகளின் வீரியம் கூடியிருக்கிறதே தவிர, குறைந்தபாடில்லை. இந்நிலையில், புதிய பிரச்னைகள் உருவாவது அல்லது உருவாக்குவது போன்றவை, ஏற்கெனவே பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவுக்கு இப்பிரச்னைகள் தீராத தலைவலியாக இருக்கும் என்பதுதான் நிபுணர்கள் கருத்து.

அதனால் சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பாக தொடர்ந்து அதிகரித்து வரும் பிரச்னைகளை தீர்ப்பதில் இந்தியா வளைந்து கொடுப்பதுதான் சரியான ராஜதந்திரமாக இருக்கும். அதுமட்டுமல்ல, மின்திட்டங்கள் அமைப்பதற்காக வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் நிவாரண மற்றும் மறுவாழ்வுப் பணிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சிக்கு நல்ல சேதி இல்லை.

Posted in 1974, Byas, Cauvery, Chenab, Dam, Devakottai, Ganga, Hogenakal, Hogenakkal, Interlink, Issue, Jhelum, Karnataka, Karuppan, Kaviri, Kollidam, Pakistan, Pyas, R Karuppan, Rain, Ravi, River, Sathanoor, Sathanur, Season, Seyyar, Sindhu, Sutlej, Tamil Nadu, Thiruchirappalli, TMC, Trcihy, Vaaniyambadi, Wallajapet, Water | Leave a Comment »

Cauvery: Kannada film industry stage protest march

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு: பெங்களூரில் நடிகர்-நடிகைகள் ஊர்வலம்: ஆளுநரிடம் மனு

பெங்களூர், பிப். 14: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை சார்பில் பெங்களூரில் நடந்த ஊர்வலத்தில் நடிகர்-நடிகைகள் திரளாக கலந்து கொண்டனர்.

காவிரியில் தமிழகத்தக்கு 192 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பிப்ரவரி 5-ம் தேதி நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது.

இதற்கு கர்நாடகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் கடந்த 9 நாட்களாக கர்நாடகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும், திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் முழுஅடைப்பு நடந்தது. இந்நிலையில் நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை திரைப்படத் துறையினர் போராட்டம் நடத்தினர். நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், நடனக்கலைஞர்கள், சண்டைப் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்ற இந்தப் பேரணி குமாரபார்க்கில் உள்ள கர்நாடக திரைப்பட வர்த்தக சபையிலிருந்து தொடங்கி ஆளுநர் மாளிகையை அடைந்தது.

இப்பேரணியில் பிரபல கன்னட

  • நடிகர் விஷ்ணுவர்தன்,
  • மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார்,
  • ராகவேந்திர ராஜ்குமார்,
  • புனித் ராஜ்குமார்,
  • நடிகை தாரா,
  • மாலாஸ்ரீ,
  • ஜெயந்தி,
  • ஜெயமாலா,
  • அனுபிரபாகர்,
  • சுதாராணி மற்றும் புதுமுக நடிகர்-நடிகைகளும் கலந்துகொண்டனர்.

திரைப்படக் கலைஞர்களின் பேரணியை முன்னிட்டு விரைவு அதிரடிப்படை உள்ளிட்ட சுமார் 2 ஆயிரம் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பேரணி காரணமாக பெங்களூரில் எப்போதும் வாகன நெரிசல் இருக்கும் ரேஸ் கோர்ஸ் சாலை, குமார குருப்பா சாலை மற்றும் ராஜ்பவன் சாலை போன்ற சாலைகளில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இப்பேரணியில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்தும், “காவிரி கர்நாடகத்துக்கே சொந்தம்’ போன்ற கோஷங்களை திரைப்படக் கலைஞர்கள் எழுப்பினர். பேரணியில் கலந்துகொண்ட கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் தல்லம் நஞ்சுண்டஷெட்டி கூறியதாவது:

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து நடைபெறும் இப்பேரணி இத்துடன் நிறைவடைந்து விடாது. இது போராட்டத்தின் தொடக்கமே. கர்நாடகத்துக்கு நீதி கிடைக்கும் வரை கர்நாடக திரைப்படத்துறை போராடும் என்றார்.

பேரணி ஆளுநர் மாளிகையை அடைந்தவுடன்

  • நடிகர் விஷ்ணுவர்தன்,
  • திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் தல்லம் நஞ்சுண்டா ஷெட்டி,
  • துணைத் தலைவர் சாரா கோவிந்து,
  • திரைப்படத் தயாரிப்பாளரும்,
  • மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவியுமான பர்வதம்மா ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு ஆளுநர் மாளிகைக்குச் சென்றது.

கர்நாடக மாநில ஆளுநர் டி.என். சதுர்வேதியைச் சந்தித்து காவிரி பிரச்சினையில் கர்நாடகத்துக்கு நீதி கிடைக்க மத்திய அரசை வலியுறுத்துமாறு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை சார்பில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Posted in Actors, Actresses, Anu Prabhakar, Bandh, Cauvery, Cauvery Waters Dispute Tribunal, Cinema, delegation, Film Association, Film Chamber, Jayamala, Jayanthi, Jayanthy, Jeyamala, Jeyanthi, Jeyanthy, Judgment, Kannada, Kannada Movies, Karnataka, Karnataka Film Chambers of Commerce, Kaviri, Malashree, Malasri, Nanjunda Shetty, Parvathamma, Procession, Protest, Rajkumar, Sa Ra Govindu, Stars, Sudharani, Thara, TN Chathurvethi, Vajreshwari Combines, Vishnuvardhan | 1 Comment »

Cauvery: Tamil Nadu to get 419 tmcft water, Karnataka 270

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 5, 2007

‘தமிழகத்துக்கு 192 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் தரவேண்டும்’- நடுவர் மன்றம் தீர்ப்பு

 

தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் இன்று தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

தமிழகத்துக்கு மொத்தமாக காவிரியில் இருந்து 419 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள காவிரி நடுவர் மன்றம், அதில் 192 டிஎம்சி தண்ணீர் கர்நாடகம் தரவேண்டும் என்றும், மீதி காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் இருந்து கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

காவிரி பாசனப்பகுதியில் 740 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது என்று கணக்கிட்டு, அதில் 419 டிஎம்சியும், கர்நாடகாவுக்கு 270 டிஎம்சியும், கேரளாவுக்கு 30 டிஎம்சியும், பாண்டிச்சேரிக்கு 7 டிஎம்சியும் வழங்கப்பட வேண்டும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த நீர்ப் பங்கீட்டைப் பொறுத்தவரை பொதுவாக காவிரி நீரைப் பங்கீடு செய்வது பிரச்சினையில்லாமல் இருக்கும் என்றும்,கோடைகாலத்தில், நீர்வரத்துக் குறையும் போது, இரு மாநிலங்களும் அறுவடைக்காகக் காத்திருக்கும் நிலையும் காணப்படுவதால் அந்தக் காலப்பகுதியிலேயே நீர்ப்பங்கீட்டில் பிரச்சினை உருவாகும் என்றும் கூறுகிறார் நீர்ப்பாசனத் துறை நிபுணரான ஜனகராஜ்.

இதேவேளை காவிரி நடுவர் மன்றத்தின் இந்தத் தீர்ப்பை தமிழக அரசு வரவேற்றுள்ளது.

இப்போதாவது நியாயம் கிடைத்ததே என்று தான் ஆறுதலடைவதாக தமிழக முதல்வர் மு. கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும் இதனை வரவேற்றுள்ளார்.

காவிரி விவசாயிகள்
காவிரி விவசாயிகள்

இந்தத் தீர்ப்பு தமக்கு மிகுந்த மனத்திருப்தியைத் தருவதாக அவர் தமிழோசையிடம் கூறியுள்ளார்.

ஆனால் இந்தத் தீர்ப்பு தமக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக கர்நாடக அரசு கூறியுள்ளது. இதனை எதிர்த்து தாம் மேன்முறையீடு செய்யப்போவதாகவும் அது அறிவித்துள்ளது.

இதேவேளை இந்தத் தீர்ப்பை அடுத்து கர்நாடகப் பகுதிகளில் பெருமளவு பதற்றம் இல்லையாயினும், சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டதாகவும், வேறு சில இடங்களில் சில எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.


காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக் குறித்து தமிழக அரசியல்வாதிகள் கருத்துகள்

காவிரி
காவிரி

காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை விட தற்போது வந்துள்ள தீர்ப்பானது தமிழகத்துக்கு சாதகமாக இருக்கிறது என்ற தொனிப்பட தமிழக அரசு காவிரி நடுவர் மன்றத்தின் இன்றையத் தீர்ப்புக் குறித்து இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதேவேளை இந்தத் தீர்ப்புக் குறித்து தமிழகத்தின் அனேகமான அரசியல் கட்சிகள் தமது கருத்தை இன்னும் வெளியிடாவிட்டாலும் இரண்டு இடதுசாரிக் கட்சிகளான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

ஆளும் திமுக இதனை வரவேற்றுள்ளது.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் எம். வரதராஜன் அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியனும் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள போதிலும், ஒருவித எச்சரிக்கை உணர்வுடனே அவர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.

இவர்களின் கருத்துக்கள் அடங்கிய பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



இதுவரை கிடைத்த நீர்சென்னை, பிப். 6: காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு வெளியான பிறகு கடந்த 17 ஆண்டுகளில் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்த காவிரி நீர் (டி.எம்.சி. அளவில் -ஆண்டுவாரியாக):1991-92 ….. 334.96

1992-93 ….. 351.69

1993-94 ….. 223.37

1994-95 ….. 373.16

1995-96 ….. 183.09

1996-97 ….. 244.05

1997-98 ….. 268.05

1998-99 ….. 237.27

1999-2000.. 268.60

2000-01 ….. 306.20

2001-02 ….. 162.74

2002-03 ….. 94.87

2003-04 ….. 65.16

2004-05 ….. 163.96

2005-06 ….. 399.22

2006-07 ….. 227.76

(பிப்.2 வரை)

இவ்விவரங்களைப் பார்க்கும்போது நடுவர் மன்ற இடைக் காலத் தீர்ப்பில் கூறப்பட்ட 205 டி.எம்.சி.யைக் காட்டிலும் அதிக நீரை அவ்வப்போது கர்நாடகம் திறந்து விட்டதைப் போல தோன்றும். ஆனால், பெரு மழை காரணமாக தனது அணைகளுக்கு வந்த உபரி வெள்ள நீரைக் கர்நாடகம் திறந்து விட்டதால் தான் அதிக நீர் காவிரியில் தமிழகத்துக்கு வந்தது.

ஒரு வகையில் பார்த்தால், தனது வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான வடிநிலமாக தமிழகக் காவிரிப் பகுதிகளைக் கர்நாடகம் பயன்படுத்தி வந்துள்ளது என்பதே தமிழகப் பொதுப் பணித் துறையினரின் கருத்து.


காவிரி பயணம் செய்யும் பாதைகர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த பிரம்மகிரி மலையில், தலைக்காவிரி என்னும் இடத்தில் காவிரி தோன்றுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தி ஆகும் ஹேமாவதி, ஹேரங்கி, லட்சுமணதீர்த்தம், கபினி, சுவர்ணவதி போன்ற துணை நதிகள் கர்நாடகத்தில் காவிரியில் கலக்கின்றன. பீடபூமியின் உட்பரப்பில் தோன்றும் சிம்ஷா, அர்க்காவதி ஆகியவை காவிரியின் இடப் பக்கத்தில் சேருகின்றன.கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியைக் கடக்கும்போது மேட்டூருக்குக் கீழே தெற்கு நோக்கி காவிரி திரும்புகிறது. பவானி, நொய்யல், அமராவதி போன்ற துணை நதிகள் கலக்கின்றன. பவானி நதி காவிரியுடன் இணைந்த பிறகு, காவிரியின் அகலம் விரிவு அடைகிறது. திருச்சியில் மேல் அணைக்கு மேற்புறத்தில் 2 கி.மீ. அளவுக்கு அது அகன்று, “அகண்ட காவிரி’யாகக் காட்சி தருகிறது.

மேல் அணையில் இரு பிரிவுகளாகப் பிரிந்து, வட பிரிவு கொள்ளிடம் என அழைக்கப்படுகிறது. கல்லணைப் பகுதியில் காவிரியிலிருந்து வெண்ணாறு பிரிகிறது. இவை இரண்டும் தொடர்ந்து பல கிளைகளாகவும், உட்கிளைகளாகவும் பிரிந்து, மொத்தம் 36 கிளை நதிகளாகப் பரவிப் பாய்கின்றன. இறுதியில் பூம்புகாருக்கு அருகே குறுகிய ஓடையாகக் கடலில் கலக்கிறது காவிரி.

மொத்தம் 800 கி.மீ. நீளம் உள்ள காவிரியில் 320 கி.மீ. கர்நாடகத்திலும், 416 கி.மீ. தமிழகத்திலும் ஓடுகிறது. இரு மாநிலங்களிடையேயான எல்லையாக 64 கி.மீ. தூரம் ஓடுகிறது.


காவிரி – தமிழகத்தின் பல நூற்றாண்டுத் தொடர் கதை: ராஜராஜ சோழன் காலத்தில் தொடங்கிய பிரச்சினை

பா. ஜெகதீசன்சென்னை, பிப். 6: தமிழகத்தைப் பொறுத்தவரை காவிரிப் பிரச்சினை என்பது பல நூற்றாண்டுகளாகவே நீடிக்கும் தொடர்கதையாக இருந்து வருகிறது.காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு திங்கள்கிழமை வெளியாகியது. இந்நிலையில் இப்பிரச்சினையில் தமிழகம் கடந்து வந்த பாதையை இங்கு காணலாம்.

இப்பிரச்சினை 11-ம் நூற்றாண்டிலேயே தலைதூக்கியது. காவிரியின் குறுக்கே மைசூர் அரசு கட்டிய அணையை 2-வது ராஜராஜ சோழன் உடைத்து, நீரைத் திறந்து விட்டார்.

17-ம் நூற்றாண்டில் மைசூர் அரசு மீண்டும் கட்டிய அணையை உடைக்க தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் தமது படைகளுடன், ராணி மங்கம்மாளின் படைகளையும் அழைத்துச் சென்றார். சரியாகக் கட்டப்படாத அணை அதற்குள் உடைந்தது.

கி.பி. 2-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சிறப்பான பாசனக் கட்டமைப்புகள் தமிழகக் காவிரி பகுதியில் இருந்தன.

காவிரியின் இடது கரையில் உடைப்பு ஏற்படுவதைத் தடுக்க உடைப்பின் குறுக்கே இன்றும் உலகமே வியக்கும் பழமையான கல்லணை, கரிகால் சோழனால் கட்டப்பட்டது.

ஒப்பந்தத் தொடர் கதை: காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் அரசுக்கும் இடையே 1890-லிருந்து 1892 வரை பேச்சு வார்த்தை -கடிதப் போக்குவரத்து நடைபெற்றது. அதன் விளைவாக ஒப்பந்தம் ஏற்பட்டது.

“சென்னை அரசின் முன் அனுமதியின்றி மைசூர் அரசு புதிய அணை அல்லது புதிய ஆயக்கட்டு அல்லது பாசன விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது’ என்கிற விதி அதில் இடம் பெற்றது.

கிருஷ்ணராஜ சாகர் அணை: காவிரியின் குறுக்கே கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்ட சென்னை அரசின் இசைவை மைசூர் அரசு கோரியது. அத்திட்டம் தமிழகத்தைப் பாதிக்கும் என்பதால் இசைவு அளிக்க சென்னை அரசு மறுத்தது.

“கோலார் தங்கச் சுரங்கப் பணிகளுக்கு மின் சக்தியைத் தரும் சிவசமுத்திரத் திட்டத்துக்குத் தடையின்றி நீர் வழங்கும் நிர்பந்தம் உள்ளது. முதலில் 11 டி.எம்.சி. நீரையும், பிற்காலத்தில் அனுமதி கிடைக்கும்போது 41 டி.எம்.சி. நீரையும் தேக்குவதற்கான உயரத்துக்கு ஏற்ற அகலமான அடித்தளம் கொண்ட அணை கட்டிக் கொள்கிறோம். அகலமான அடித்தளம் அமைப்பதைப் பிற்காலத்தில் பெரிய அணையைக் கட்ட அனுமதி கோருவதற்குக் காரணமாக வலியுறுத்த மாட்டோம்’ என மைசூர் அரசு உறுதி கூறியது.

1924 ஒப்பந்தம்: மைசூர் அரசு சிறிய அணையைக் கட்டிக் கொள்ள சென்னை அரசு இசைவு அளித்தது. 1911 செப்டம்பரில் பணியைத் தொடங்கிய மைசூர் அரசு, தனது உறுதிமொழியைக் காற்றில் பறக்க விட்டது.

இரு அரசுகளுக்கும் இடையே 1913-ல் பிரச்சினை ஏற்பட்டது. பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, 18.2.1924-ல் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டது.

44.827 டி.எம்.சி. கொள்ளளவுத் திறன் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டவும், 1.25 லட்சம் ஏக்கர் புதிய பாசன வசதியை ஏற்படுத்தவும் சென்னை அரசு இசைவு அளித்தது.

அதே நேரத்தில் 93.50 டி.எம்.சி. கொள்ளளவுத் திறன் கொண்ட மேட்டூர் அணையைக் கட்டி, புதிதாக 3.01 லட்சம் ஏக்கர் நிலத்துக்குச் சென்னை அரசு பாசனம் அளிக்கலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

சென்னை அரசு புதிய பாசன நீர்த் தேக்கங்களை அமைக்கலாம். பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய நதிகளில் நீர்த்தேக்கம் அமைத்தால், அதற்கு ஈடாக அதன் கொள்ளளவில் 60 சதவீதத்துக்கும் மேற்படாத ஓர் அணையைத் தனது எல்லைக்குள் காவிரியின் துணை நதிகளில் மைசூர் அரசு அமைக்கலாம்.

எதைச் செய்தாலும், சென்னை மாகாணத்துக்குச் சேர வேண்டிய நீரின் அளவு குறைந்து விடாதபடி மைசூர் அரசு செயல்பட வேண்டும் என ஒப்பந்தம் தெளிவுபடுத்தியுள்ளது.

நடுவர்மன்றக் கோரிக்கை: பிற்காலத்தில் கர்நாடக அரசு தன்னிச்சையாக அணைகளைக் கட்டி, பாசனப் பரப்பை அதிகரித்தது. இத்தகராறைத் தீர்க்க 1968-லிருந்து காவிரிப் படுகை மாநில முதல்வர்களிடையே பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன.

பிரச்சினையை நடுவர்மன்றத் தீர்வுக்கு விடும்படி 17.2.1970-ல் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. பிறகு, நடுவர்மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடும்படி கோரி 1971-ல் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தாக்கல் செய்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அளித்த அறிவுரை -உத்தரவாதத்தின் பேரில் அவ்வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

1974-லிருந்து கர்நாடகம் தன்னிச்சையாக 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதைக் கைவிட்டது. காவிரி நீரைத் தடுத்து, தனது அணைகளில் தேக்கிக் கொண்டு, மழைக் காலத்தில் உபரி வெள்ள நீரை மட்டுமே திறந்து விட்டது.

நடுவர் மன்றத்தை நியமிக்கக் கோரி 29.05.75-ல் மீண்டும் தமிழக அரசு வலியுறுத்தியது.

விவசாயிகள் ரிட் மனு: நடுவர்மன்றம் அமைக்கக் கோரி தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருள் விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்புச் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த ரிட் மனுவுக்குத் தமிழக அரசு ஆதரவு அளித்தது.

16.6.1986-ல் பெங்களூரில் மத்திய அமைச்சர் நடத்திய கூட்டத்தில் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததாக அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அறிவித்தார். “நடுவர் மன்றத்துக்குப் பிரச்சினையை விடுவதைத் தவிர இனி வேறு வழி இல்லை’ என்றார் அவர். அதற்கான மனு 6.7.1986-ல் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

நடுவர்மன்றம்: நடுவர்மன்றம் அமைப்பது பற்றிய அறிவிப்பை ஒரு மாதத்துக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 4.5.1990-ல் உத்தரவிட்டது. அதையடுத்து 2.6.90-ல் நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது.

தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. நீரைக் கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்கிற இடைக்காலத் தீர்ப்பை 21.3.1991-ல் நடுவர்மன்றம் அளித்தது.

தமிழகத்துக்கு முதலில் தண்ணீரைத் திறந்து விட்ட பிறகே கர்நாடகம் தனது அணைகளில் நீரைத் தேக்க வேண்டும் என இடைக்காலத் தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டதைக் கர்நாடகம் கண்டு கொள்ளவே இல்லை.

ஹேமாவதி, ஹேரங்கி, கபினி ஆகிய 3 நதிகளின் குறுக்கே கர்நாடகம் கட்டிய அணைகள் விதிமுறைகளின்படி கட்டப்படவில்லை என மத்திய அரசின் வல்லுநர் குழுவே கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அணைகளைக் கட்டும்போது தமிழக அரசின் முன் இசைவையோ, மத்திய அரசின் அனுமதியையோ கர்நாடகம் பெறவில்லை.

ஆனால், தமிழகமோ மேட்டூர் அணைக்குப் பிறகு, பவானி, அமராவதி போன்ற அணைகளைக் கட்டியபோது மத்திய அரசின் அனுமதியைப் பெற்றது.

1974-க்குப் பிறகு பல்வேறு நிலைகளில் 40 முறை இரு மாநில அரசுகளும் பல்வேறு கட்டங்களில் பேச்சு வார்த்தை நடத்தின.


உபரி நீர் கர்நாடகத்துக்கு சொந்தமா?ஏ. தங்கவேல்புதுதில்லி, பிப். 6: பலத்த மழை பெய்யும் காலங்களில், காவிரியில் உற்பத்தியாகும் உபரி நீரைப் பற்றி காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

உபரி நீர் மூலம், ஆண்டுக்கு சராசரியாக 40 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். நடுவர் மன்றம் அது யாருக்குச் சொந்தம் என்று சொல்லாத நிலையில், உபரி நீர் முழுவதையும் கர்நாடகம் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

உபரி நீரைத் தேக்கி வைப்பதற்காக புதிய அணை கட்டலாம் என்ற யோசனைகூட இப்போதே வந்துவிட்டது. அணை கட்டினால், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை முறைப்படுத்தலாம். மின்சாரம் தயாரிக்கலாம். பெங்களூருக்கு குடிநீர் விநியோகம் செய்யலாம் என்று திட்டமிடப்படுகிறது.

ஆனால், இந்த உபரி நீர் தொடர்பாக கர்நாடக வழக்கறிஞர்கள் மத்தியிலேயே ஒருமித்த கருத்து இல்லை.

உபரி நீர் முழுவதற்கும் கர்நாடகம் சொந்தம் கொண்டாடுமானால், தமிழகம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா?

அண்டை மாநிலம் அணை கட்ட வேண்டுமானால் தனது அனுமதியைப் பெற வேண்டும் என்ற நிலையில், தமிழகம் இதுவரை உறுதியாக இருந்துவந்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டும் நேரத்தில்கூட, தண்ணீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்ட பிறகே சம்மதம் தெரிவித்தது.

திங்கள்கிழமை அறிவிக்கப்பட்ட நடுவர் மன்றத் தீர்ப்பில், ஒவ்வொரு மாநிலமும் காவிரியைப் பயன்படுத்தி பாசனம் செய்ய வேண்டிய பரப்பளவு எவ்வளவு என்பதைத் தெரிவிக்கவில்லை.

தொடரும் போராட்டம்: இறுதித் தீர்ப்பு வந்துவிட்டாலும், மறு ஆய்வு செய்யக் கோரி மாநிலங்கள் மீண்டும் மனுத்தாக்கல் செய்யும் நிலையில், சட்டப் போராட்டம் தொடரும். நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யும் அதே நேரத்தில், மன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யலாம்.

பஞ்சாப் -ஹரியாணா மாநிலங்களிடையே ராபி -பியாஸ் நதிநீர் பிரச்சினையில் 1987-ம் ஆண்டு எராடி கமிஷன் இறுதித் தீர்ப்பு வழங்கிவிட்டது. அதன்பிறகு 19 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், பிரச்சினை முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில், காவிரியின் நிலை என்னவாகும் என்பதை யாராலும் சொல்ல முடியாது.


எல்லையில் நீர் மின் திட்டம் வந்தாலும் தமிழகத்தின் பங்கு குறையக் கூடாது: காவிரி நடுவர் மன்றம் உத்தரவு

Dinamani சிறப்பு நிருபர் புதுதில்லி, பிப். 6: தமிழக -கர்நாடக எல்லையில் நீர் மின் திட்டம் அமைக்கப்பட்டாலும், நடுவர் மன்றம் குறிப்பிட்டுள்ள தண்ணீரின் அளவு தமிழகத்துக்குக் குறையக் கூடாது என்று காவிரி நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது.காவிரிப் பிரச்சினையில், நடுவர் மன்றத் தலைவர் என்.பி. சிங், உறுப்பினர்கள் என்.எஸ். ராவ் மற்றும் சுதிர் நாராயணன் ஆகியோர் திங்கள்கிழமை அளித்த இறுதித் தீர்ப்பில், நீர்ப்பாசனத்துக்கான தண்ணீர் தேவைகள் பாதிக்கப்படாத வகையில் நீர் மின் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

“”தமிழக -கர்நாடக எல்லையில், தேசிய நீர்மின் திட்டக் கழகத்துடன் இணைந்து சில நீர் மின் திட்டங்களைச் செயல்படுத்த ஆலோசித்து வருவதாக இரு மாநிலங்களும் தெரிவித்துள்ளன. எப்போது அதுபோன்ற திட்டங்கள் நிறைவேற்றப் பட்டாலும், அணையில் நீர் தேக்கிவைக்கப்பட்டாலும், நடுவர் மன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டபடி, நீர்ப்பாசனத் தேவைகளுக்காகத் திறந்துவிடப்பட வேண்டிய தண்ணீரின் பங்கு குறையக் கூடாது. உத்தரவில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் உரிய நேரத்தில் செல்ல வேண்டும்” என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளம் மற்றும் புதுவைக்குரிய தண்ணீரை அனுமதிக்க வேண்டிய அட்டவணையைப் பாதிக்கும் வகையில் கர்நாடகம் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. ஆனால், மாநிலங்கள் ஒருமித்த கருத்துடன், ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆலோசனையுடன், அந்த அட்டவணையை மாற்றிக்கொள்ளலாம்.

ஓர் அணையிலிருந்து, ஒரு மாநிலம் தனது சொந்தத் தேவைக்காக தண்ணீரைத் திருப்பிவிட்டால், குறிப்பிட்ட தண்ணீர் ஆண்டில் (ஜூன் -மே) அந்த மாநிலம் அதைப் பயன்படுத்தியதாகக் கருதப்பட வேண்டும்.

அணை அல்லது துணை நதியில் இருந்து திருப்பிவிடப்படும் தண்ணீரில் 20 சதம் உள்ளூர் மற்றும் நகராட்சி குடிநீர் விநியோகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அணை, ஆறு அல்லது கால்வாயில் இருந்து எடுக்கப்படும் நீரில் 2.5 சதவீதத்தைத் தொழில்துறைத் தேவைகளுக்காகப் பன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழகம், கேரளம் அல்லது புதுச்சேரி மாநிலங்கள், ஓர் ஆண்டில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்த முடியாவிட்டால், அடுத்து வரும் மாதங்களில், ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியுடன் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஓர் ஆண்டில் தனது பங்கை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாததால், அடுத்த ஆண்டு குறிப்பிட்ட மாநிலத்தின் பங்கைக் குறைக்க முடியாது. அதேபோல், பயன்படுத்தாத தண்ணீரை அந்த ஆண்டில் வேறு மாநிலம் பயன்படுத்தியிருந்தால், அடுத்த ஆண்டும் அந்த மாநிலம் கூடுதல் பங்கு கேட்பதற்கு உரிமை இல்லை என ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஜூன் 1-ம் தேதி துவங்கி, அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதியுடன் முடிவடையும் காலத்தை, நீர்ப்பாசனக் காலம் என்று நடுவர் மன்றம் குறிப்பிட்டுள்ளது.


கிடைத்ததை விரும்பு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு அதிக மகிழ்ச்சி தருவதாகவும் இல்லை; அதிக வருத்தம் அளிப்பதாகவும் இல்லை.கர்நாடக மாநிலம் தமிழகத்துக்கு ஆண்டுக்கு 205 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்பது இடைக்காலத் தீர்ப்பு. ஆனால், இறுதித் தீர்ப்பு 192 டிஎம்சியாக குறைந்துவிட்டது. அதாவது 13 டிஎம்சி குறைவு. காவிரி நீரில், “தமிழகத்தின் பங்குநீர்’ என்பதும், தமிழகத்துக்கு “கர்நாடகம் வழங்க வேண்டிய நீர்’ என்பதும் இரு வேறு விஷயங்கள்.

தமிழகத்துக்கு 419 டிஎம்சி தண்ணீர், கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி தண்ணீர் என்ற தீர்ப்பைக் கேட்டவுடன் தமிழகத்துக்கு அதிக தண்ணீர் கிடைத்துவிட்டதுபோன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டாலும், உண்மை அதுவல்ல. காவிரியில் தமிழகத்தின் பங்கு 419 டிஎம்சி. இதில் தமிழக எல்லைக்குள் காவிரியில் எப்போதும் தானாகச் சென்றுகொண்டிருக்கும் தண்ணீரும், கிளைநதிகள் மூலம் கிடைக்கும் தண்ணீரும் ஆண்டுக்கு 227 டிஎம்சி எனக் கணக்கிடப்பட்டு, கர்நாடகம் நமக்கு “”வழங்க வேண்டிய தண்ணீர் ஆண்டுக்கு 192 டிஎம்சி” என்று கணக்கிடப்படுகிறது. இதில் குடிநீர் தேவைக்கு 10 டிஎம்சியும் அடங்கும்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தீர்ப்பில், “13 டிஎம்சி போனால் போகிறது’ என்ற மனநிலைக்கு தமிழக விவசாயிகள் வந்துவிட்டனர். “இந்த நீரையாகிலும் நடுவர்மன்றம் நிர்ணயித்த அளவுப்படி கர்நாடகம் திறந்துவிட்டால் சரிதான்’ என்று போராடிச் சலித்துப்போய்க் கிடக்கிறார்கள் தமிழக விவசாயிகள்.

பற்றாக்குறை நிலவும் ஆண்டுகளில் எப்படி பகிர்ந்துகொள்வது என்பதைத்தான் தமிழக விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்தது. ஆனால் அதுபற்றி இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. மழை பொய்க்காத ஆண்டுகளில் சராசரியாக 250 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிடுகிறது. மழை இல்லாதபோதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, பற்றாக்குறை ஆண்டுகளில் தண்ணீர் பகிர்வுக்கான அளவுகளை அறிவிக்கும்படி நடுவர்மன்றத்திடம் தமிழக அரசு முறையிடலாம்.

இப்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், மேட்டூர் அணையை மட்டுமே நம்பியிருக்காமல் நமக்குக் கிடைக்கும் மிகை நீரைத் தேக்கி வைக்க இன்னொரு அணையைக் கட்டும் கட்டாயமும் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. முன்பு ரூ.9 ஆயிரம் கோடியில் காவிரியில் கூடுதல் தடுப்பணை கட்டும் திட்டத்தை உலக வங்கிக்கு தமிழகம் அளித்தபோது, நடுவர் மன்றத் தீர்ப்பு வந்த பின்னர் பார்க்கலாம் என்று அவர்கள் நிராகரித்துவிட்டனர். இப்போது இறுதித் தீர்ப்பு வெளியாகிவிட்ட நிலையில், இது குறித்து தமிழகம் பரிசீலிக்கலாம். மேலும், நமக்கு கர்நாடகம் உண்மையிலேயே 192 டிஎம்சி தண்ணீர் வழங்குகிறதா என்பதை கண்காணிக்க சரியான அளவீட்டு முறைகள் இல்லை. தற்போது பிலிகுண்டலு பகுதியில் உள்ள அளவுமானியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இப்பகுதி வண்டல்மண்ணால் மேடுற்றுள்ளதால், குறைவான அளவு நீர்தான் தமிழகத்துக்கு கிடைக்கிறது.

இந்த அளவு மாறுபாடு குறித்து பிரச்சினை எழுந்தபோது, முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலம் ஒரு யோசனை கூறினார். கர்நாடக-தமிழக எல்லையில் (ஓகேனக்கல் அருகில்) புனல்மின்நிலையம் அமைத்தால், இரு மாநில அரசுகளும் மின்சாரத்தைப் பகிர்ந்து கொள்ளவும் நீரின் அளவைச் சரியாகத் தீர்மானிக்கவும் முடியும் என்றார். அப்படியும் செய்யலாம்தான்.


காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை தமிழகத்தின் பங்கான 419 டிஎம்சி தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்தும் திட்டங்கள் தேவை

திருச்சி, பிப். 13: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள தமிழக பங்கான 419 டிஎம்சி தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்தும் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் அவசரக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்கத் தலைவர் ஜி. கனகசபை தலைமை வகித்தார். கூட்டத்தில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கப் பொதுச்செயலர் மன்னார்குடி எஸ். ரெங்கநாதன் பேசியது:

“காவிரிப் பிரச்சினை முற்றிலும் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை; அரசியல் பிரச்சினையல்ல. நடுவர் மன்றத் தீர்ப்பில் முழு திருப்தி இல்லை என்றாலும் நியாயமான தீர்ப்புதான்.

காவிரிப் பிரச்சினையைத் தீர்த்தால் பல்வேறு பாசன நலத் திட்டங்களுக்கு உலக வங்கி கடன் தரத் தயாராக உள்ளது’ என்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளதையடுத்து தமிழகத்தின் பங்கான 419 டிஎம்சி தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்த கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

கோடைக்காலத்தில் தண்ணீர் திறப்பு குறித்து தீர்ப்பில் எதுவும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. கோடைக்காலத்தில் தண்ணீர் திறக்காவிட்டால் கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசு கோடைக்காலத்தில் தண்ணீர் பெற்றுத் தர வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


 Dinamani – Feb 14, 2007

காவிரி தீர்ப்பு: தமிழகத்தின் இழப்பும்-தவறுகளும்

பழ. நெடுமாறன்

சுமார் 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக தீராமல் இருந்துவரும் காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

1968 முதல் 1990 ஆம் ஆண்டு வரை 22 ஆண்டுகாலமாகப் பேச்சு நடத்தி தமிழகம் ஏமாந்ததுதான் மிச்சம்.

1972 ஆம் ஆண்டில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் கொடுத்திருந்த வழக்கை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு திரும்பப் பெற்றது.

பேச்சுவார்த்தை என்ற பெயரில் 19 ஆண்டுகளாக இழுத்தடித்து நடுவர் மன்றம் அமைக்கவிடாமல் கர்நாடம் தடுத்தது. 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடுவர் மன்றம் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை ஏற்று முன்னாள் பிரதமர் வி.பி. சிங் நடுவர் மன்றத்தை அமைத்தார்.

16 ஆண்டுகாலமாக நடுவர் மன்றத்துக்கு ஒத்துழைப்பு தராமல் கர்நாடகம் இழுத்தடித்தது. இறுதியாக, 2007ஆம் ஆண்டு ஜனவரியில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதன்படி தமிழகத்துக்கு 419 டி.எம்.சி. நீரும் கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி. நீரும், கேரளத்துக்கு 30 டி.எம்.சி. நீரும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. நீரும் வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்துக்கு அளிக்கப்பெற்ற 419 டி.எம்.சி.யில் 192 டி.எம்.சி. நீரை கர்நாடகம் அளிக்கும். மீதமுள்ள 227 டி.எம்.சி. நீர் தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகி ஓடும் பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய ஆறுகளிலிருந்து கிடைக்கும் நீர் ஆகும். ஆக காவிரியில் கர்நாடகம் கொடுப்பது 192 டி.எம்.சி. இதில் 10 டி.எம்.சி. நீர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அளிக்கப்பட வேண்டும். புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. கொடுக்க வேண்டும். இந்த 17 டி.எம்.சி. போக தமிழகத்துக்கு கிடைப்பது 175 டி.எம்.சி. மட்டுமே.

ஆனால் சராசரியாக 177 டி.எம்.சி. நீர் மட்டுமே பெற்று வந்த கர்நாடகத்துக்கு மேலும் 93 டி.எம்.சி. நீர் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல மற்றோர் அநீதியும் நமக்கு இழைக்கப்பட்டுள்ளது. காவிரி தாவா தொடங்கப்பட்டதிலிருந்து பேச்சுவார்த்தைகளின்போதும் உச்ச நீதிமன்றத்திலும் நடுவர் மன்றத்திலும் தமிழக அரசு எடுத்து வைத்த நிலை என்பது நமக்களிக்கப்படும் காவிரி நீர் மேட்டூர் அணையில் அளக்கப்பட வேண்டும் என்பதேயாகும். நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பில் இதை ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆனால் கர்நாடகம் மேட்டூரில் அளப்பதைக் கடுமையாக எதிர்த்தது. பில்லிகுண்டு என்ற இடத்தில்தான் நீர் அளக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியது. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம் நமக்கு பல வகையிலும் இழப்பு ஏற்படும். அதாவது பில்லிகுண்டில் அளந்தால் நமக்கு 14 டி.எம்.சி. நீர் குறையும்.

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் மற்றும் ஓர் அநீதியும் இழைக்கப்பட்டுள்ளது. கேரளத்திற்கு 30 டி.எம்.சி. நீர் ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் கபினி ஆற்றிலிருந்து 21 டி.எம்.சி. நீரும் தமிழகம் பவானி ஆற்றிலிருந்து 9 டி.எம்.சி. நீரும் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வறட்சிக் காலத்தில் தமிழ்நாடு உள்பட காவிரிப் பாசன மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு குறைத்துள்ளது. அதைப்போல கர்நாடகம் பயன்படுத்த வேண்டிய நீரின் அளவும் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடுவர் மன்றம் அவ்வாறு செய்யவில்லை. இது மிகப்பெரிய அநீதியாகும்.

கர்நாடகத்திற்கு நடுவர் மன்றம் அளித்த காவிரி நீரின் பங்கு 270 டி.எம்.சி. ஆகும். இதில் 50 சதவீத நீர் காவிரி நீர் பாயும் பகுதிகளில் இருந்து கிடைக்கிறது. காவிரி நீர் பாயும் பகுதிகள் அல்லாத இடங்களிலிருந்து கிடைக்கும் எஞ்சிய 50 சதவீதத்திற்கும் அதிகமான கூடுதல் நீரைப் பயன்படுத்திக் கொள்ள கர்நாடகத்திற்கு எவ்விதத் தடையும் கிடையாது. இந்த நீரில் மற்ற மாநிலங்கள் உரிமை கொண்டாட முடியாது என்றும் நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது ஒருசார்பானது ஆகும்.

காவிரிப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தையின்போதும், உச்ச நீதிமன்றத்திலும், நடுவர் மன்றத்திலும் வழக்குகள் நடந்தபோதும் நமது சார்பில் பல தவறுகள் இழைக்கப்பட்டுவிட்டன. இது இறுதித் தீர்ப்பில் நமக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

ஆனால் தமிழகத்தின் சார்பில் 1972ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஒரே சீரான அணுகுமுறை பின்பற்றப்படவில்லை. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க ஆட்சிகள் மாறி மாறி ஏற்பட்டன. ஒவ்வோர் ஆட்சியின்போதும் ஒவ்வோர் அணுகுமுறை கையாளப்பட்டது. இதன் விளைவாக தமிழகத்தின் நிலைப்பாடு உறுதியற்றதாகவும் பல மாற்றங்களுக்கு ஆளானதாகவும் இருந்தது.

இந்நிலையில் நடுவர் மன்றத் தலைமை நீதிபதி சித்ததோஷ் முகர்ஜியை அப் பதவியிலிருந்து அகற்ற கர்நாடகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. கர்நாடகம் அளித்த பொய்யான புள்ளிவிவரங்களை ஏற்க மறுத்ததே இதற்கு முக்கியக் காரணம்.

இந்நிலையில் முகர்ஜி பதவி விலகினார். அவர் விலகாமல் இருந்திருந்தால் நடுவர் மன்றத்தின் தீர்ப்பு நிச்சயமாக வேறுவிதமாக இருந்திருக்கும்.

இதற்கிடையில், நடுவர் மன்றத்தில் அங்கம் வகித்த மற்ற நீதிபதிகளும் மாறினர். புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் உண்மைகளை முழுமையாகப் புரிந்து கொள்ள காலஅவகாசம் கிடைக்கவில்லை.

பிரதமராக நரசிம்மராவ் இருந்தபோது தமிழகத்திற்கு உடனடியாக 11 டி.எம்.சி. நீரைத் திறந்துவிடுமாறு காவிரி நடுவர் மன்றம் ஆணையிட்டது. அந்த ஆணையை நிறைவேற்ற வேண்டிய பிரதமர் அதுபற்றி ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமித்தார். அந்தக் குழுவில் பதவி வகித்த கே. அலக் என்பவர் 6 டி.எம்.சி. நீர் தமிழ்நாட்டுக்கு அளித்தால் போதும் என்று பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக்கொண்டு பிரதமரும் அவ்வாறே ஆணையிட்டார். பிற்காலத்தில் தேவெ கௌட பிரதமராக வந்தபோது, மத்திய திட்ட அமைச்சராக கே. அலக் நியமிக்கப்பட்டார். திட்டக்குழுவின் அனுமதியில்லாமல் காவிரியிலும் அதன் துணை நதிகளிலும் கர்நாடகம் மேற்கொண்டு வந்த பாசனக் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கும் நோக்கத்துடன் திட்ட அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். அவ்வாறே அனுமதியும் வழங்கினார். இதை மத்தியில் அங்கம்வகித்த தமிழக அமைச்சர்களோ, தமிழக அரசோ ஆட்சேபிக்கவில்லை.

காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற பிரதமர் குஜ்ரால் காலத்தில் வரைவுத் திட்டமும் ஆணையமும் உருவாக்குவதற்கான வழி வகுக்கப்பட்டது. ஆனால் குஜ்ரால் அரசு சில மாதங்களே பதவியில் இருந்ததால் இத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை.

காவிரி நதிநீர் வாரியத்தை அமைக்க முன்னாள் பிரதமர் வாஜபேயி முன்வரவில்லை. அவ்வாறு செய்ய வேண்டும் என அவரை வற்புறுத்த தமிழக அரசும் தவறிவிட்டது.

1971ஆம் ஆண்டு முதல் மத்திய ஆட்சியில் எந்தக் கட்சி இருந்தாலும் அந்தக் கட்சியுடன் தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ தொடர்ந்து கூட்டணி வைத்துள்ளன. 1987-க்குப் பிறகு மத்திய ஆட்சியில் தி.மு.க.வோ அ.தி.மு.க.வோ தொடர்ந்து அங்கம் வகித்துள்ளன. ஆனாலும் 1956ஆம் ஆண்டு சட்டத்தைப் பயன்படுத்தி காவிரி நதிநீர் வாரியம் அமைக்க இவைகள் முற்றிலுமாகத் தவறிவிட்டன.

உச்ச நீதிமன்றத்திலும் நடுவர் மன்றத்திலும் காவிரி வழக்கு நடைபெற்றபோது தமிழக வழக்கறிஞர்கள் அடிக்கடி மாற்றப்பட்டனர். தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களை அ.தி.மு.க. ஆட்சி மாற்றியது. அ.தி.மு.க. ஆட்சி நியமித்த வழக்கறிஞர்களை தி.மு.க. ஆட்சி மாற்றியது. இதன் விளைவாக வழக்கின் போக்கு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது.

இறுதியாக காவிரிப் பிரச்சினையில் தமிழகக் கட்சிகள் ஒன்றுபட்டு நிற்கத் தவறிவிட்டன. கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன. இதன் விளைவாக மத்திய அரசும் நடுவர் மன்றமும் நம்மை மதிக்கவில்லை.

(கட்டுரையாளர்: தலைவர், தமிழர் தேசிய இயக்கம்).

Posted in Agriculture, Amaravathi, Amaravathy, Analysis, Backgrounder, Bavani, Bhavani, Biligundlu, Border, Cauvery, Cauvery Water Disputes Tribunal, Cholan, Current, Dam, Developments, discharge, Dispute, Events, Farmer, Farming, Happenings, Hearings, Hemavathi, Hemavathy, Herangi, Heranki, History, Inter-state, Irrigation, Kabini, Kallanai, Kannambadi, Karikal Cholan, Karnataka, Kavery, Kaviri, Kerala, KR Sagar, Krishna Raja Sagar, Madikeri, Mercara, Mysore, Nedumaran, Noyyal, Opinion, Pala Nedumaran, Pazha Nedumaran, Pazha Netumaran, Public Works, Pudhucherry, Puducherry, PWD, Rajaraja Chozhan, reservoir, River, State, Tamil Nadu, Tanjore, Thanjavoor, Thanjavur, Tribunal, verdict, Water | 1 Comment »

Cauvery Delta Climate changes & Environmental Analysis – Study, History & Backgrounders

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

காவிரி டெல்டாவின் பரிணாமமும் பல்லுயிர்ப் பெருக்கமும்

பாலசுப்ரமணியன்

நாகரிகத்தின் உச்சியில் நின்று கொண்டுள்ள மனிதன், நவீனமயமாதல், நகரமயமாதல் போன்ற செயல்களால் இயற்கைத் தாவரங்களையும், விலங்குகளையும் சிறிது சிறிதாக அழித்து வருகிறான்.

உலக அளவில் இச்செயல் தொடர்ந்து நடைபெறுவதால், பல தாவர மற்றும் விலங்குச் சிற்றினங்கள் இன்று அழியும் தருவாயில் உள்ளன. உலகிலுள்ள 12 மிக முக்கிய உயிரின வாழிடங்களில் இந்தியாவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் பல்லுயிர்ப் பெருக்கத்தையும் இயற்கையையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

மற்ற டெல்டாக்களுடன் ஒப்பிடும்போது காவிரி டெல்டாவின் புவியியல் கூறு, சூழ்நிலை அமைப்பு, பரிணாம வளர்ச்சி ஆகியவை முற்றிலும் மாறுபட்டது.

தற்போது காணப்படும் காவிரி டெல்டா இயற்கையாலும், மனிதனாலும் உருவாக்கப்பட்டு புதியதாகத் தோன்றி, வளர்ச்சியடைந்த ஒரு பகுதியாகும்.

கால அட்டவணையின்படி சுமார் 315 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, காவிரி டெல்டா பகுதி கடல் நீரால் சூழப்பட்டிருந்தது எனத் தெரிகிறது. காலப்போக்கில் ஏற்பட்ட தட்பவெப்பநிலை மாற்றங்களால் கடல் நீர் குறைந்து, உவர் மண் நிரம்பிய சதுப்பு நிலங்கள் தோன்றியுள்ளன. மேலும் காவிரி ஆறு, சில இயற்கை மாற்றங்களால் தனது போக்கை கிழக்கு மற்றும் தென்கிழக்காக மாற்றிக் கொண்டுள்ளது.

இதன் காரணமாக வண்டல் மண்படிவுகள் சிறிது சிறிதாக ஏற்பட்டு, தற்போதைய டெல்டா உருவானது. ஆயினும் காவிரி டெல்டாவின் தென்கிழக்குப் பகுதிகளான முத்துப்பேட்டை, வேதாரண்யம், கோடியக்காடு போன்றவற்றில் தற்போது சதுப்பு நிலங்கள் உள்ளன. விவசாய முன்னேற்றத்துக்காக தற்காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நீர்ப்பாசனக் கால்வாய்களும், சங்ககால சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கல்லணை மற்றும் கல்லணைக் கால்வாயும் ஆங்கிலேயர் காலத்தில் விரிவுபடுத்தப்பட்ட நரசிங்க காவிரி, வடவாறு, உய்யக்கொண்டான் கால்வாய், முல்லையாறு விரிவு, மேல் மற்றும் கீழ் அணைக்கட்டுகள் போன்றவை இன்றைய புதிய காவிரி டெல்டா உருவானதற்கு முக்கியக் காரணமாகும்.

பல்லுயிர் வகை: இந்த டெல்டாவில் கடற்கரையை ஒட்டிய ஒரு சில சதுப்பு நிலக் காடுகளும், கோடியக்காட்டில் உள்ள வறண்ட பசுமை மாறாக் காடும் சில முட்புதர் காடுகளையும் தவிர வேறு குறிப்பிடத்தக்க காடுகள் ஏதும் இல்லை.

தற்போது ஆற்றுப்படுகைகளில் அரசின் தீவிர முயற்சியால் தோன்றியுள்ள தேக்கு, டால்பர்ஜியா சிசு போன்ற மரங்களின் சமூகக் காடுகள் ஓரளவு பசுமைத் தாவரங்களை அதிகரித்துள்ளன.

எங்கும் பரந்து விரிந்து, பச்சைக் கம்பளம் போல் நெல்வயல்கள் நிறைந்து காணப்படும் மருத நிலமான காவிரி டெல்டாவில் பல்வேறு வகையான பறவையினங்கள், பூச்சியினங்கள், விலங்குகள் மற்றும் மருத்துவக் குணமுள்ள பல தாவரங்கள் காணப்படுகின்றன.

ஆனால் தற்காலத்தில் தொடர்ச்சியாக விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் செயற்கை உரங்களும், பூச்சி மருந்துகளும், இங்குள்ள நீர் மற்றும் மண் மாசுபாட்டைத் தோற்றுவிக்கின்றன.

மேலும் அனைத்து ஆறுகளிலிருந்தும் இன்று மணல் முற்றிலுமாக எடுக்கப்பட்டு, அது டெல்டாவின் பல பகுதிகளில் வீடுகளாகவும், வணிக வளாகங்களாகவும் மாறிவிட்டன. மணல் எடுக்கப்பட்டதால் அவ்விடங்கள் அனைத்திலும் அடர்த்தியாக பரவியுள்ள காட்டாமணக்கு தாவரமானது, ஆற்றில் வரும் சிறிதளவு நீருக்கும் வழிவிடாமல் அடைத்துக் கொண்டு பாசனத்திற்குத் தடை ஏற்படுத்துகிறது.

கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சி, நிலத்தடி நீர் பற்றாக்குறை, மழையின்மை காரணமாக பல விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன. நன்செய் நிலங்கள் இவ்வாறு மாறிவிட்ட நிலையில், புன்செய் நிலங்களிலோ பூத்துக் குலுங்குவது காட்டுக்கருவை எனப்படும் வேலிக்காத்தான் தாவரம். இது காவிரி டெல்டாவின் பல பகுதிகளில், தரிசு நிலங்களில், தன்னிச்சையாகப் பரவியுள்ளது.

வேலிக்காத்தான் தாவரம் வளரும் இடங்களில், மற்ற தாவரங்கள் வளர்வதைத் தடை செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. இதனால் இந்தப் பகுதிகளில் இயற்கையாக வளரும் பல மருத்துவக் குணமுள்ள தாவரங்கள் வளர முடியாமல் அழிந்து வரும் அபாயம் உள்ளது. உதாரணமாக கொடி வகையைச் சார்ந்த ஆடுதின்னாப்பாலை, வேலிப்பருத்தி எனப்படும் உத்தாமணி, பிரண்டை, செங்கலை, கரு ஊமத்தை, பேய் சுரை, ஓரிதழ் தாமரை… போன்றவை இன்று தன்னிச்சையாக வளர்வது குறைந்துவிட்டது. அது மட்டுமல்லாமல் வேலிகளில் நடப்பட்டு வந்த நாட்டுத் தேக்கு எனப்படும் பூவரசு மரங்களும் குறைந்துவிட்டன.

ஒருகாலத்தில் இந்த டெல்டாவில் தோப்புகளாகக் காணப்பட்ட இலுப்பை மற்றும் புளிய மரங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. மேலும் பல புளிய மரங்கள் இன்று சாலைகளை அகலப்படுத்தும் பொருட்டு வெட்டப்பட்டு விட்டன. மருத்துவக் குணமுள்ள மருத மரங்களோ, எங்காவது ஒரு சில இடங்களில் இருந்தால் உண்டு.

இன்று இப்பகுதிகளில் நவீன விவசாயக் கருவிகளாலும், குளிரூட்டப்பட்ட பால் விற்பனையாலும், எருதுகள் மற்றும் கறவை மாடுகளை வளர்ப்போர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. இதனால் இயற்கையான தொழு உரம் வயல்களுக்குப் போதுமான அளவு கிடைக்காமல், செயற்கை உரங்கள் இடப்படுகின்றன.

மழைக் காலங்களில் காணப்படும் “செண்பகம்’ எனப்படும் காக்கை இனத்தைச் சார்ந்த பறவைகளை தற்போது அதிகமாகக் காண முடிவதில்லை. நகரமயமாக்கலால் பல பாசனக் கால்வாய்கள் துண்டிக்கப்பட்டு, மழைநீர் செல்லும் பாதைகளும் தகர்க்கப்பட்டுள்ளன. சில இடங்களில் சமுதாய நிலங்களும், குளங்களும், சிற்றோடைகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அவற்றை அரசு கையகப்படுத்தி, தகுந்த இயற்கைச் சூழ்நிலையை உருவாக்க வழிகோல வேண்டும்.

நீர் நிலைகளில் பல்கிப் பெருகிவிட்ட வெங்காயத் தாமரை, காட்டாமணக்கு போன்ற இடர்தரும் தாவரங்களைக் களைந்து சீரான நீர் ஆதாரங்களைப் பல்லுயிர் பெருக உதவும் வகையில் மாற்ற வேண்டும்.

இனியாவது, ஒவ்வொரு பகுதியிலும் இயற்கையாக இருந்து வரும் தாவரங்களையும் விலங்குகளையும் அழியாமல் காப்போம்.

காவிரி டெல்டாவின் பசுமையைக் காக்க பயன் தரும் மரங்களை அனைத்துப் பகுதிகளிலும் உயிர் பெறச் செய்வோம். மாசுபாடற்ற விவசாய முறைகளைக் கையாண்டு, பல்லுயிர்கள் இந்நிலத்தில் பெருக வழி செய்வோம்!

Posted in Analysis, Cauvery, Changes, Chozhas, Climate, Delta, Environment, Geography, Global Warming, Kavery, Kaviri, Kodiyakaadu, Kodiyakkaadu, Kodiyakkadu, Mullai River, Muthupettai, Muthuppettai, Narasinga Cauvery, Opinion, Pollution, River, Sea, Study, Urbanization, Uyyakkondaan, Uyyakondaan, Vadavaaru, Vedharanyam, Water | Leave a Comment »