Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Kavalore’ Category

Six tsunami warning centres in TN

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 3, 2007

தமிழகத்தில் 6 இடங்களில் சுனாமி எச்சரிக்கை மையங்கள்

சென்னை, ஏப். 3: தமிழகத்தில் 6 இடங்களில் சுனாமி எச்சரிக்கை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய் மற்றும் சிறைத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார்.

பேரவையில் திங்கள்கிழமை உறுப்பினர்கள் வை. சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.), கோவை தங்கம் (காங்.), டி.ஜெயக்குமார் (அதிமுக) ஆகியோரது கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில்:

தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமேசுவரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் சுனாமி எச்சரிக்கை மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் கடலோரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் காடுகள் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் முகத்துவார பகுதிகளிளை ஆழப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் பூகம்பம் அளவிடும் மையங்கள் வேலூர் மாவட்டம் காவலூர் மற்றும் திருப்பத்தூரிலும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிகள் அனைத்தும் பூகம்பம் ஏற்படும் இடங்களில் 2 மற்றும் 3-ல் இடம்பெற்றுள்ளன.

இதைப் போன்ற கருவிகள் உள்ள மையங்கள் ஏற்கெனவே சென்னை, சேலம், கொடைக்கானலில் இயங்கி வருகிறது. இது தவிர, கடலோரப் பகுதிகளில் சுனாமி உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கையேடுகள் அச்சிடப்பட்டு அப்பகுதி மக்களிடம் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றார் பெரியசாமி.


சுனாமி எச்சரிக்கை கருவிகள் உலகெங்கும் தேவை என நிபுணர் கருத்து

சுனாமியால் பாதிக்கப்பட்ட சாலமன் தீவுகள்
சுனாமியால் பாதிக்கப்பட்ட சாலமன் தீவுகள்

சுனாமி அலைகளை கண்டறிந்து எச்சரிக்கை தரக்கூடிய வசதிகள் பலவற்றை பசிபிக் பெருங்கடலில் பொறுத்த வேண்டிய தேவை இருப்பதாக சுனாமி நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

2004 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட சுனாமியை அடுத்து, பசிபிக் பிராந்தியத்துக்காக ஒதுக்கப்பட்ட பணம் உள் நோக்கம் ஏதுமின்றி தவறுதலாக இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டிருக்காலம் என்று லாரா கிங் என்ற சுனாமி நிபுணர் தெரிவித்துள்ளார்.

அடுத்த முறை பசிபிக் பெருங்கடல் பகுதியில் தான் சுனாமி அலைகளின் பெரிய தாக்கம் ஏற்படும் என்று தான் கருதுவதாகவும் லாரா கிங் கூறியுள்ளார்.

 

——————————————————————————————————

ஆழிப்பேரலை தடுப்புத் திட்டம்

காஞ்சிபுரம், மே 28: சுனாமி போன்ற அவசர கால பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் வனத்துறை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் அவசர கால ஆழிப்பேரலை தடுப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

2004-ம் ஆண்டு டிச.26-ம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையால் பெருத்த பாதிப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் ஏராளமானோர் இறந்தனர். அதிக பொருள் சேதமும் ஏற்பட்டது.

இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் கடற்கரையில் சதுப்பு நிலக்காடுகளோ, சவுக்குத் தோப்புகளோ இருந்தால் சுனாமி பாதிப்பு மிகக் குறைவாக இருந்திருக்கும் எனத் தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறை சுனாமி தடுப்புத் திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்தது.

தமிழகம் முழுவதும் 2000 ஹெக்டேர் பரப்பில் தாவர அரண் தடுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 550 ஹெக்டேர் பரப்பில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பாக செங்கல்பட்டு கோட்ட வன அலுவலர் சுகிர்தராஜ் கோயில் பிள்ளை, நிருபரிடம் கூறியது:

சுனாமி தடுப்பு சீரமைப்புத் திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாகும். சாதாரணமாக சிமென்ட்டாலான தடுப்புச் சுவர் கட்ட 1 கி.மீ. தூரத்துக்கு ரூ.6.5 கோடியும், மண்ணாலான தடுப்புச்சுவர் கட்ட ரூ.1.25 கோடியும் ஆகிறது. ஆனால் இயற்கையாக சவுக்குத் தோப்பு அமைக்க ரூ.5.4 லட்சமே செலவாகும்.

மேலும் 5 ஆண்டுகள் கழித்து இதன் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். சவுக்கு மரங்களை வெட்டி விட்டு மீண்டும் அதே இடத்தில் கன்றுகளை நடலாம். தற்போது அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விரைவில் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் செயல்படுத்தப்படும். சவுக்கு கன்றுகளை வனத்துறை இலவசமாக தருகிறது என்றார் சுகிர்தராஜ் கோயில் பிள்ளை.

Posted in Boat, Capsize, Chennai, Coast, coastal, Cuddalore, Earthquake, Fisherman, fishermen, Forests, Government, I Periasamy, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanchivaram, Kanjeepuram, Kanjeevaram, Kanjipuram, Kanjivaram, Kanyakumari, Kavalore, mangrove, Measure, Measurements, Nagapattinam, Periasamy, Rameswaram, Rasipuram, Revenue Minister, Richter, Scale, Sea, seacoast, Seashore, Tamil Nadu, Thenkanikottai, Tirupattur, TN, Trees, Tsunami, Tuticorin, warning | Leave a Comment »