Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Katara’ Category

Misuse of power by TN Speaker – Justification of exploitation & abuse by Electricity Minister N Veerasamy

Posted by Snapjudge மேல் மே 1, 2007

வீராசாமியின் வாதமும் கதாரா விவகாரமும்! – Kalki Editorial

சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பனுடைய உதவியாளர் எழுதிய சிபாரிசுக் கடிதத்துக்கும் பா.ஜ.க. எம்.பி பாபுபாய் கதாரா விவகாரத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று சொன்னால், மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாகவே தோன்றும்.

ஆனால், ஆவுடையப்பனின் உதவியாளர் இழைத்தது போன்ற சிறு சிறு அதிகார துஷ்பிரயோகங்கள்தான் ஆரம்பப் படிகள். அதிகார துஷ்பிரயோகத்திலிருந்து ஊழல், அதிலிருந்து இலஞ்சம், அதிலிருந்து கிரிமினல் குற்றங்கள் என்று சங்கிலித் தொடரான தப்புக் காரியங்களுக்கு வழி வகுக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் ஆதாயங்கள் கிட்டும் வகையில் அதிகார துஷ்பிரயோகங்கள் செய்வதுதான் இன்றைய அரசியல் நடைமுறை. பெரும்பாலான அரசியல்வாதிகள் இதனைத் தங்கள் உரிமையாகவே கருத ஆரம்பித்து விட்டார்கள்!

அரசியல்வாதிகள் சார்பாக, ஆர்க்காடு வீராசாமியிடமிருந்து இதற்கு ஒப்புதல் வாக்குமூலமே கிடைத்துவிட்டது! தமிழக சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பனின் உதவியாளர் எழுதிய சிபாரிசுக் கடிதம் குறித்து, சமீபத்தில் தமிழக சட்ட சபையில் விவாதம் எழுந்திருக்கிறது. அதையட்டி, தம்மைப் போன்ற அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தினமும் கண்ணை மூடிக்கொண்டு சிபாரிசுக் கடிதங்களில் கையெழுத்துப் போடுவதாகப் பேசியிருக்கிறார் ஆர்க்காட்டார். ‘‘இப்படியே போனால், உங்களுக்கே தெரியாமல் உங்கள் ராஜினாமா கடிதத்தில் ஒரு நாள் கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் கையெழுத்துப் போட நேரும்’’ என்று தயாநிதிமாறன் எச்சரித்ததாகவும் வீராசாமி வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.

ஒரு மூத்த அமைச்சர், எந்த தைரியத்தில் இதைப் பெருமைக்குரிய விஷயமாகவோ அல்லது சர்வ சாதாரண விஷயமாகவோ பறைசாற்றுகிறார் என்பதுதான் நமது வேதனைமிக்க கேள்வி! அதிலும் சக கட்சிக்காரர் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கும் முகமாக இவ்வாறு பேசியிருப்பது அதிர்ச்சியுடன் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்துகிறது-இந்த நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை!

ஆவுடையப்பனின் தனி உதவியாளர், ‘பார்’ நடத்த ஒப்பந்தத்துக்கு விண்ணப்பித்த ஒருவரைச் சிபாரிசு செய்து, சபாநாயகரின் லெட்டர்ஹெட்டைப் பயன்படுத்திக் கடிதம் அனுப்பியதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். அதுகுறித்துச் சபாநாயகரின் விளக்கத்தையும் கோரியிருக்கிறார். ‘‘சபாநாயகர் பேரில் குற்றமில்லை; அவரது உதவியாளர் கடிதம் அனுப்பியதற்கு அவர் பொறுப்பாக முடியாது; மேலும், அந்தக் கடிதம் சிபாரிசு செய்த நபருக்கு ஒப்பந்தம் அளிக்கப்படவுமில்லை’’ என்பது வீராசாமியின் வாதம்! சபாநாயகரின் உதவியாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதற்கு விளக்கம் இல்லை.

அப்படியானால், யாருக்கு வேண்டுமானாலும் சிபாரிசுக் கடிதம் தருவது பதவியிலிருப்பவர்களின் உரிமை என்றல்லவா ஆகிறது! இது அதிகார துஷ்பிரயோகம் அல்லாது வேறென்ன?!

யாருக்கேனும் அநீதி நடந்தால், அதைச் சீர்செய்ய மட்டுமே பதவியில் உள்ளவர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தலாம். அத்தகைய சிபாரிசுகள் நியாயமானவை; பாராட்டுக்குரியவை.

தகுதியற்றவர்களுக்கு முறைகேடாக வாய்ப்புகள் கிடைக்க சிபாரிசு செய்வது அதிகார துஷ்பிரயோகம் மட்டும் அல்ல; சமுதாயத்தின் வளர்ச்சியையும் வளத்தையும் முடக்கும் பாபச் செயல். இதனை உணரும் நல்லறிவுகூட இல்லாத நிலைக்கு நம் அரசியலும் அரசியல்வாதிகளும் தாழ்ந்து போயிருப்பது கொடுமையிலும் கொடுமை!

Posted in Aavudaiappan, Aavudaiyappan, Aavudayappan, abuse, ADMK, AIADMK, Arcot Veerasami, Arcot Veerasamy, Assembly, Avudaiappan, Avudaiyappan, Avudayappan, BJP, Corruption, Court, Dayanidhi, Dayanithi, Dhayanidhi, DMK, functionary, Govt, Influence, Kani Annavi, Karunanidhi, Katara, Khader Mohideen, kickbacks, Law, Maran, Order, Power, Rafiq Khader Mohideen, Sengottaiyan, Speaker, TASMAC, tender, Thayanidhi, Thayanidhy, Thayanithi, Thayanithy, Tirunelveli, Veerasami, Veerasamy, youth wing | Leave a Comment »

Human trafficking, quota to cast shadow on Parliament session

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 26, 2007

பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

புதுதில்லி, ஏப். 26: பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டம் (இன்று) வியாழக்கிழமை தொடங்குகிறது.

இந்தக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, விவசாயிகள் தற்கொலை, சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட விஷயங்களை எதிர்க்கட்சிகளும், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரி கட்சிகளும் எழுப்ப உள்ளன.

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் நாடாளுமன்றம் கூடுவதால் இந்தக் கூட்டத்தொடரில் காரசாரமான விவாதங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது. உள்நாட்டு பாதுகாப்பு, காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களையும் எதிர்க்கட்சிகள் எழுப்பக்கூடும்.

முதல் நாள் கூட்டத்தில் ஆள்கடத்தல் வழக்கில் பாஜக எம்.பி. கடாரா கைதான விவகாரம் மக்களவையில் முக்கியமாக இடம்பெறும்.

கடாரா விவகாரம் மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திலும் பேசப்பட்டது. பாஜக எம்.பி. மீதான நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என்று சட்டர்ஜி தெரிவித்துள்ளார். ஆள்கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள தங்கள் கட்சி எம்.பி.யான பாபுபாய் கடாரா மட்டும் அல்லாமல் பிறகட்சிகளில் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள உறுப்பினர்கள் பற்றியும் விசாரிக்க நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

2007-08-ம் ஆண்டுக்கான நிதிமசோதாவுக்கு ஒப்புதல் பெறும் விவகாரமும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என்று தெரிகிறது. இந்த மசோதாவை முன்கூட்டியே அதாவது மே மாதம் 3-ம் தேதியே தாக்கல் செய்து ஒப்புதல் பெற அரசு திட்டமிட்டுள்ளது.

நிதியமைச்சர் ப.சிதம்பரம் மே 6-ம் தேதி வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார். நிதிமசோதா மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில் அவர் வெளிநாடு செல்வதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த விஷயமும் அவையில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும். உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரமும் முக்கிய விவாதமாக அவையில் இடம்பெறும். இது விஷயத்தில் நீதித்துறையின் பங்கு பற்றி பல்வேறு கட்சிகளும் கேள்விகளை எழுப்பியுள்ளன.

உள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில் உறுதியான கொள்கை இல்லாதது, போஃபர்ஸ் ஊழலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இத்தாலிய தொழிலதிபர் ஒட்டாவியோ குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு கொண்டுவருவது, ரூ.2 நாணயத்தில் சிலுவைச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் ஆகியவற்றையும் பாஜக எழுப்பும் எனத் தெரிகிறது.

Posted in 27, Babubhai Katara, BJP, Communist, Congress, Election, Issues, Katara, Lok Sabha, LokSaba, MP, OBC, parliament, Party, Politics, Reservation, SJP, SP, UP | 1 Comment »