Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Kandhasamy’ Category

Interview with Writer Meena Kandhasamy – Translator, English Author from Tamil Nadu

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2008

முகங்கள்: இரண்டு மடங்கு பணி! நான்கு மடங்கு வேகம்!

அவர் ஐந்து புத்தகங்களைத் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

ஆங்கிலத்தில் அவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதற்குப் புகழ்பெற்ற எழுத்தாளர் கமலாதாஸ் முன்னுரை எழுதியிருக்கிறார்.

ஆங்கிலத்தில் நிறையக் கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள் எழுதியிருக்கிறார்.

அவர் 24 வயதேயான மீனா கந்தசாமி. இவ்வளவு சிறிய வயதில் இத்தனை புத்தகங்களை, அதுவும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் ஒரே தமிழ்ப்பெண்ணாக இவர்தான் இருக்கக்கூடும்.

பாடப்புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு ஓய்ந்துவிடுவது அல்லது வெற்றுப் பேச்சுகளில் மூழ்குவது என்றிருக்கும் நமது இளம்வயதினரிடையே மீனா கந்ததாமி ஒரு வித்தியாசமான பெண்ணாய்த் திகழ்கிறார்.

ஆங்கிலத்தில் முதுகலை பயின்றிருக்கும் அவர் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவி.

மீனா கந்தசாமியை அவர் இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். நேரில் பார்க்கும்போது நமது ஆச்சரியம் இன்னும் அதிகமாகிவிடுகிறது.

உங்களுடைய புத்தகங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?

நான் தமிழில் இருந்து 5 புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். அதில் இரண்டு புத்தகங்கள் தொல்.திருமாவளவனுடையது. அவர் இந்தியா டுடே இதழில் எழுதிய 34 கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். அது நூலாக வெளியாகியுள்ளது. அப்போது எனக்கு வயது 19. அதுபோல அவருடைய சொற்பொழிவுகளை மொழிபெயர்த்தேன். அதுவும் புத்தகமாக வெளிவந்துள்ளது. தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டிக்காக ஒரு புத்தகமும், நக்கீரன் கோபாலின் புலனாய்வு இதழியல் குறித்த புத்ககம் ஒன்றையும் மொழிபெயர்த்தேன். கவிஞர் காசி ஆனந்தனின் “நறுக்குகள்’ நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்.

நான் ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகள் “டச்’ என்கிற பெயரில் 2006 இல் வெளிவந்தது. அதற்கு பிரபல எழுத்தாளர் கமலாதாஸ் ஓர் அருமையான முன்னுரை கொடுத்துள்ளார். அவர் கைப்பட எழுதிய அந்த முன்னுரையை நான் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

இதுதவிர ஆங்கிலத்தில் நிறையச் சிறுகதைகள் எழுதிவருகிறேன். அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிடும் எண்ணம் உள்ளது.

இவ்வளவு சிறிய வயதில் இப்படிக் கடுமையாக உழைக்கிறீர்களே, என்ன காரணம்?

சமூகத்தில் பலருக்கும் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மற்றவர்களுடைய பாதிப்புகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும்.

நமது நாட்டில் வாய்ப்புகள் ஓர் எல்லைக்குட்பட்டதாகவே இருக்கிறது. வாய்ப்புகளை யார் போய் அள்ளிக் கொள்கிறார்களோ அவர்களே முன்னேற முடியும். வாய்ப்புகளை அள்ளிக் கொள்ள பிறரைவிட 2 மடங்கு வேலை செய்ய வேண்டும். 4 மடங்கு வேகமாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் சாதிக்க முடியும். ஏனென்றால் சமூக ஏற்றத் தாழ்வு காரணமாக நமது சமூகத்தில் எல்லாருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. எல்லாருக்கும் வாய்ப்புக் கிடைக்கும் நிலை வந்தால் இப்படிக் கஷ்டப்படத் தேவையிருக்காதோ, என்னவோ?

உங்களுக்குத் தாய்மொழி தமிழாக இருக்கும்போது ஆங்கிலத்திலேயே எழுதுகிறீர்களே?

தமிழில் நிறையப் பேர் எழுதுகிறார்கள். அவர்கள் செய்யும்போது நான் எதற்கு? ஆங்கிலத்தில் நான் எழுதக் கூடிய விஷயங்களை எழுதுபவர்கள் மிகவும் குறைவு. எனவே ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.

மேலும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் பெரும்பாலோர் உண்மையான இந்திய வாழ்க்கையைக் காட்டுவதில்லை. அவர்களுக்குத் தெரிந்த உலகத்தை அவர்களுடைய கோணத்தில் காட்டுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இடத்தை அவர்கள் கொடுப்பதில்லை. இந்தியா என்றால் தாஜ்மஹால் உள்ள நாடு என்பது போல சர்வதேச அளவில் இந்தியாவின் முகத்தைக் காட்டுகிறார்கள். இது, இருக்கிற நிலையில் நல்ல மாறுதல்கள் ஏற்பட வேண்டும் என்ற விருப்பத்தைக் காட்டுவதாகத் தெரியவில்லை. எனவே இந்தியாவின் உண்மையான நிலை இந்திய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் தெரிய வேண்டும். அதன்மூலம் பின்தங்கியுள்ள மக்கள் வளர்ச்சி நோக்கி மேல் எழுந்து வர வேண்டும் என்பதே என் விருப்பம்.

நிறைய ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கும் இளம்வயதினருக்கு உண்மையான நாட்டுநிலை கண்ணில் தெரிய வேண்டும் என்பதற்காகவும் ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.

கவிதையில் நாட்டம் ஏன்?

ஒரு விஷயத்தைக் கூர்மையாகவும், அந்த விஷயத்தின் சாரத்தையும் சொல்ல கவிதை ஒரு நல்ல வடிவம்.

எனது கவிதைகள் பெரும்பாலும் அரசியல் கவிதைகள். சமூகம் சார்ந்த கவிதைகள். காதல் கவிதைகள் சில எழுதியிருக்கிறேன். ஆனால் அதிலும் ஒரு சமூகம் சார்ந்த பார்வையிருக்கும்.

கவிதை மொழியைக் கொண்டு செயல்படுவது. மொழியை மறுஉருவாக்கம் செய்யக்கூடியது.

மொழி என்பது எல்லாருக்கும் பொதுவான ஒரு கருவி என்றாலும் அதைப் பயன்படுத்துபவர்கள் தங்களுக்குச் சாதகமாக அதைப் பயன்படுத்த முடியும். மொழியைப் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் ஆணாதிக்கத்தன்மை இப்போது உள்ளது. எனவே பெண்ணியம் சார்ந்த கவிதைகள் அதற்கான புதிய மொழியை உருவாக்கி மொழியை மறுஉருவாக்கம் செய்கின்றன என்று சொல்லலாம்.

சிறுகதை நூல் வெளியிடப் போவதாகச் சொன்னீர்கள். அதைப் பற்றி?

டெல்லியில் உள்ள ஸýபான் பதிப்பகம் 40 வயதுக்குக் கீழ் இருக்கும் இந்தியப் பெண் எழுத்தாளர்கள் 21 பேரின் சிறந்த கதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. அதில் நான் எழுதிய சிறுகதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. ஒரு பத்துக் கதைகள் சேர்ந்துவிட்டால் ஒரு தொகுப்புக் கொண்டுவரலாம் என்றிருக்கிறேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆங்கில இலக்கியத்தில் இடம் தருவதற்காகப் புத்தகம் எழுதுவதாகச் சொல்கிறீர்கள். அதை அவர்களுடைய தாய்மொழியில் எழுதுவதுதானே சிறந்தது?

பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்ய நேரடியான களப்பணியில் ஈடுபடுவதே சரி. புத்தகம் எழுதுவது சரியாகாது. நான் அவர்களுடைய வாழ்க்கையை, பிரச்சினைகளை எனது புத்தகங்களில் பதிவு செய்கிறேன்.

என்னை மாதிரி வாழ்நிலை உள்ளவர்களுக்கு } ஆங்கிலம் படித்தவர்களுக்கு } என்னுடைய கருத்துகள் போய்ச்சேர வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலத்தில் புத்தகங்களை எழுதுகிறேன். கட்டுரைகளை எழுதுகிறேன்.

இதற்கு ஆங்கிலத்தை ஒரு கருவியாக நான் பயன்படுத்துகிறேன்.

படங்கள் : ஏ.எஸ். கணேஷ்

Posted in Anna, Authors, English, Essays, Fiction, Interview, Kamaladas, Kamaladoss, Kandasamy, Kandhasami, Kandhasamy, Kanthasami, Kanthasamy, Kasi Anandhan, Kasi Ananthan, Literature, Meena, Nakkeeran, Nakkiran, Ph.d, Poems, Researchers, Reviews, Story, Tamil Nadu, TamilNadu, Translations, Translators, Writer | Leave a Comment »

International Woman of the Year – Vasantha Kandasamy

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 20, 2006

விருது: எண்களின் ராணி!

ரவிக்குமார்

கணித ஆராய்ச்சிக் கட்டுரைகளை அதிக அளவில் எழுதி சாதனை படைத்ததற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் துறை 1996-ம் வருடம் வழங்கியிருக்கும் “இன்டர்நேஷனல் வுமன் ஆஃப் தி இயர்’ பட்டம், அமெரிக்க புள்ளியியல் துறை வழங்கியிருக்கும் “டிஸ்டிங்க்விஷ் அவார்ட்’…இந்த வரிசையில் வசந்தா கந்தசாமியின் கிரீடத்தில் இடம்பிடித்திருக்கும் மற்றொரு ஒளி வைரம் கல்பனா சாவ்லா விருது!

வசந்தா கந்தசாமி

தொலைக்காட்சிப் பெட்டி, டேப்-ரிகார்ட்டர் என்று எந்தவிதமான பொழுதுபோக்கு சாதனங்களும் இல்லை. திரும்பிய பக்கமெல்லாம் வீடு முழுவதும் நிறைந்திருக்கும் புத்தகங்களை எப்போதும் (சு)வாசித்துக்கொண்டும் இருக்கிறார், சென்னை, ஐ.ஐ.டியில் கணிதத் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் வசந்தா கந்தசாமி. உயர் கல்வித் துறையில் சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வருவதற்காக, தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதைப் பெற்றிருக்கும் “எண்களின் ராணி’ வசந்தா கந்தசாமியுடன் உரையாடியதிலிருந்து…

விருதைப் பெற்றபோது எப்படி உணர்ந்தீர்கள்?

கணிதத் துறையில் நான் செய்திருக்கும் சாதனைகளுக்காகப் பெற்ற எந்த விருதையும் விட, சமூக நீதிப் பணிகளுக்காகப் பெற்றிருக்கும் தமிழக அரசின் இந்த விருதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இந்த விருதின் மூலம் என்னுடைய பணிகள் இன்னமும் கூர்மையாகும்.

விருது பெற்றபோது…

தங்களின் வழிகாட்டுதலோடு பிஎச்.டி. ஆய்வு முடித்த மாணவர் யாருக்காவது, இந்திய அளவில் சிறப்பு கிடைத்திருக்கிறதா?

கணிதத் துறையில் ஆய்வு (பிஎச்.டி) செய்வதற்காக 1997ம் வருஷம், விருதுநகரிலிருந்து கண்ணன் என்ற தலித் மாணவர் வந்திருந்தார். பெரும் போராட்டத்துக்குப் பிறகே ஐ.ஐ.டி.யில் அவருக்கு இடம் கிடைத்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு அந்த தலித் மாணவர் கண்ணன், டில்லியில் நடந்த அறிவியல் மாநாட்டிற்கு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். அறிவியல் துறைக்குப் பெரிய நிறுவனமாக உள்ள “இண்டியன் நேஷனல் சயின்ஸ் காங்கிரஸ்’ மாநாடு, அந்த ஆண்டு தலைநகரான தில்லியில்தான் நடந்தது. ஒவ்வோர் அறிவியல் துறை சார்ந்தவர்களிடமும் ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பெற்று, அதை எழுதியவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு தனிப்பட்ட குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவார்கள். அந்த ஆண்டு 38 பேர் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்ததில், சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசைப் பெற்றது, தலித் மாணவன் கண்ணனின் கட்டுரைதான். போட்டியில் பங்கேற்ற மற்ற 37 பேருமே பெரிய பெரிய கல்வி நிறுவனங்களில் பேராசிரியராக இருப்பவர்கள் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்! என்னிடம் பி.எச்.டி. முடித்த 15 மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள், முதல் தலைமுறை படிப்பாளிகள். அவர்களின் பெற்றோர்கள் டீக்கடை வைத்திருப்பவர்கள், சலூன் கடை நடத்துபவர்கள் இப்படித்தான்.

நீங்கள் எழுதியிருக்கும் புத்தகங்கள் அனைத்துமே உங்களின் கணிதத் துறையைச் சார்ந்தது மட்டும்தானா?

பெரும்பான்மையானவை கணிதத் துறையைச் சார்ந்தவை. அதிலும் கணிதத் துறையைப் பயன்படுத்தி மற்ற துறையில் இருப்பவர்களுக்கும் பயனளிக்கக் கூடிய புத்தகங்கள். சாட்டிலைட்டை இயக்குவதற்கும் கணிதம் பயன்படும், சமூகத்தில் எயிட்ஸôல் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்ச்சிகளைச் சொல்வதற்கும் கணிதம் பயன்படும்.

எயிட்ஸôல் பாதிக்கப்பட்டவர்களுக்காக எழுதியிருக்கும் புத்தகங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?

தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் உதவியோடு இரண்டு ஆராய்ச்சிப் புத்தகங்களை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன். பணியின் காரணமாக ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்பவர்களிடையே எயிட்ஸின் தாக்குதலுக்கு உள்ளானவர்களைப் பற்றிய புத்தகம் கர்ஸ்ங் கண்ச்ங் கன்ள்ற் கர்ள்ள். இந்தப் புத்தகத்தில், பணியின் காரணமாக இடம் பெயர்ந்த எயிட்ஸ் தாக்குதலுக்கு உள்ளான 101 பேரின் உணர்வுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்னொரு புத்தகம், எயிட்ஸ் தாக்குதலுக்கு ஆளான பெண்களைப் பற்றியது. இதன் பெயர் ரர்ம்ஹய் ரர்ழ்ந் ரர்ழ்ற்ட் ரர்ம்க்ஷ. இதிலும் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களின் உணர்ச்சிகள், கணித முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. உணர்வுகளை எண்களில் பதிவு செய்ய முடியாது. நோயின் தாக்குதலை முதன்முதலாக அறிந்த தருணத்தில்…அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் தருணத்தில்…சமூகம் அவர்களை ஒதுக்கி வைத்திருக்கும் தருணத்தில் அவர்களின் உணர்ச்சிகள் எவ்வாறெல்லாம் இருந்தன என்பதை, விளக்கமாக அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவும். எண்ணற்ற கேள்விகளில், தேவையானவற்றை மட்டும் பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டு, அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் வெளிப்படுத்தும் மெüனம், கோபம், விரக்தி போன்ற உணர்ச்சிகளைப் பட்டியலிடுவதன் மூலம், எயிட்ஸ் தொடர்பான மருத்துவ ஆராய்ச்சிக்கு இது பயன்படும். கணிதத்தின் மூலம் இப்படி கணிக்கப்படும் முறைக்கு “ஃபஸ்ஸி தியரி’ (ஊன்க்ஷ்க்ஷ்ஹ் பட்ங்ர்ழ்ஹ்) என்று பெயர்.

இரண்டு புத்தகத்திற்காக நிறைய கள ஆய்வுகளைச் செய்திருப்பீர்கள். இந்த ஆய்வுகளின் மூலம் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் விஷயங்கள் என்ன?

பணியின் காரணமாக இடம்பெயர்பவர்களில் பெரும்பாலும் ஆண்களே எயிட்ஸின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அதிலும் பெரும்பாலானவர்கள் வாகன ஓட்டுனர்களாகவும், கடினமான தொழில் செய்பவர்களாகவுமே இருக்கிறார்கள்.

நிறைய ஆண்களுக்கு தங்களின் ஆண்மையின் மேல் அளவுக்கதிகமான நம்பிக்கை. நாம் என்ன செய்தாலும், எப்படிப்பட்ட தவறான உறவு வைத்துக் கொண்டாலும் அதனால் நமக்கு ஒன்றுமே ஆகாது என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. எயிட்ஸôல் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் பல பேருக்கு இப்படி ஓர் எண்ணம் இருப்பது தெரிந்தது. அதேபோல் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தங்களின் குடும்பத்தில் பெரிதாக அக்கறை இல்லை. சம்பாதிக்கும் “ஆம்பிளை’ என்கிற திமிர். தான் வாழும் உறவு சனங்களிடையே பொறுப்பில்லாமை, கெட்ட சகவாசம் அதன் காரணமாக பழகும் கெட்ட பழக்கவழக்கங்கள், வறுமை இவையே அவர்கள் எயிட்ஸôல் பாதிக்கப்படுவதற்கு பெரிதும் காரணமாக இருந்திருக்கின்றன. நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பெரும்பாலும் 31-34 வயதுக்குட்பட்டவர்களாகவே இருந்தார்கள். அதாவது முறைகேடான பாலியல் உறவில் அவர்கள் 21-24 வயது இருக்கும்போது ஈடுபட்டதன் விளைவே நோய்த்தாக்குதலுக்குக் காரணம்.

பெண்களைப் பொறுத்தவரை 90 சதவிதத்தினர் தங்களின் கணவரின் மூலமாகவே எயிட்ஸ் நோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள்.

“ஃபஸ்ஸி தியரி’யை எளிமையாக புரிந்துகொள்வது எப்படி? வேறு எந்தவிதமான ஆராய்ச்சிக்கு இந்த தியரியைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்?

ஃபஸ்ஸி தியரியை, ஒன்பதாவது, பத்தாவது வகுப்பில் நீங்கள் படித்திருக்கும் நிகழ்தகவின் (டழ்ர்க்ஷஹக்ஷண்ப்ண்ற்ஹ்) விரிவான நிலை எனக் கூறலாம். ஒரு நாணயத்தை சுண்டிவிட்டால், “பூ’வாகவோ “தலை’யாகவோதான் விழக்கூடும். ஆனால் மிகவும் அரிதாக நாணயம் இப்படியும் விழாமல், அப்படியும் விழாமல் நடுவில் நின்றால்…அதுதான் “ஃபஸ்ஸி லாஜிக்’. இந்த லாஜிக்கைப் பயன்படுத்தி, சாட்டிலைட்டிலிருந்து தகவல்களைப் பெறும் கோடிங் ஆராய்ச்சிகளைக் கூட, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்காகச் செய்து தந்திருக்கிறேன்.

Posted in Award, Interview, Kandhasamy, Tamil, Vasandha, Vasantha Kandasamy, Woman | Leave a Comment »