Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2007
முந்தைய பதிவு: புதுமை பூக்கும் புடவைகள்

சென்னை சில்க்ஸ் அறிமுகம்
ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலை
தங்கம், வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட நவரத்தினங்களால் ஆனது
சென்னை, நவ.27-தங்கம், வைரம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட நவரத்தினங்களால் தயாரிக்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலையை செனëனை சில்க்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.உலகப்புகழ் பட்டுசேலை
தமிழ்நாட்டில் முனëனணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க, விலைமதிப்பற்ற பட்டுச்சேலையை தயாரிக்க திட்டமிட்டது. இதற்காக அந்த நிறுவனம் தனித்திறன் மிக்க நெசவாளர்களைக் கொண்டு வடிவமைத்து, நவரதëதினங்களை இணைத்து சொந்த தறியில் அழகும், கலைநயமும் மிக்க பட்டுச்சேலையை உருவாக்கி உள்ளது.
தங்கம், வைரம், பிளாட்டினம், மாணிக்கம், முத்து, பவளம், புஷ்பராகம், மரகதம் உள்ளிட்ட 12 வகையான விலை உயர்ந்த ஆபரணங்களை இணைத்து உலகப் புகழ்பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் 12 ஓவியங்களுடன் வடிவமைத்துள்ளனர். ஆபரணங்களை சேலையுடன் சேர்த்து நெய்திருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.
விலை ரூ.40 லட்சம்
51/2 மீட்டர் நீளம் கொண்ட இந்த பட்டுச்சேலையில் முந்தானை பகுதியில் இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் இசைக்கருவிகளுடன் அணிவகுத்து நிற்கும் ஓவியமும் மற்ற 11 ஓவியங்களும் ஒவ்வொரு பார்டரிலும் இடம்பெற்றுள்ளன.
விலை உயர்ந்த ஆபரணங்களைக் கொண்டு நுணுக்கமாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பட்டுச்சேலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.40 லட்சம் ஆகும். உலகிலேயே அதிக விலை கொண்ட பட்டுச்சேலை என்ற சிறப்பையும் இந்த சேலை பெறுகிறது. இந்த சேலையை உருவாக்க மொத்தம் 18 மாதங்கள் ஆனது.
சுகாசினி அறிமுகப்படுத்தினார்
உலகின் மிக விலை உயர்ந்த பட்டுச்சேலை, 12 விதமான உலோகங்கள் மற்றும் நவரத்தின கற்களால் தயாரிக்கப்பட்ட பட்டுச்சேலை, ஒரே பட்டு சேலையில் ரவிவர்மாவின் 11 விதமான ஓவியங்கள் இடம்பெற்ற பட்டுச்சேலை என்பதற்காக கின்னஸ் சாதனைக்கு இந்த பட்டுசேலை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி இந்த பட்டுசேலையை அறிமுகப்படுத்தினார்.
அப்போது பேசிய சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான விநாயகம், “உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க பட்டுசேலையை தயாரிக்க வேண்டும் என்பதற்காகவும், நெசவு குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் நெசவாளர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியில் இறங்கினோம்.
இந்த சேலையை உருவாக்கியவர்கள் வெறும் கூலிக்காக வேலை செய்யவில்லை. 3 தலைமுறையாக நெசவு தொழில் செய்து வரும் அவர்கள் அர்ப்பண உணர்வுடன் அதிக அக்கறை எடுத்து இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களது மனோதைரியத்திற்கும், நம்பிக்கைக்கும் புதிய ஊக்கம் கிடைத்து இருக்கிறது” என்று கூறினார்.
சேலை அறிமுக விழா நிகழ்ச்சியில்
- சென்னை சில்க்ஸ் இயக்குனர்கள் மாணிக்கம்,
- ஆறுமுகம்
- நந்தகோபால்,
- சிவலிங்கம்,
- சந்திரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்,
- கவிஞர் வைரமுத்து,
- நடிகை ஷோபனா,
- நடிகர் ஜீவா,
- பின்னணி பாடகி பி.சுசீலா,
- கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்,
- டாக்டர் கமலா செல்வராஜ், மத்திய
- பட்டு வாரிய முன்னாள் இயக்குனர் டி.எச்.சோமசேகர்,
- ஓவியர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கர்நாடக அரசுத் துறை நிறுவனமான மைசூர் சில்க் நிறுவனம்
வடிவமைத்துள்ள பட்டுச் சேலையை உடுத்திப் பார்க்கும்
இளம்பெண். இச்சேலையின் விலை ரூ. 1.5 லட்சமாகும்.
பெங்களூர் இன்பான்டரி சாலையில் உள்ள கர்நாடக நிர்வாக
அதிகாரிகள் சங்கத்தில் வியாழக்கிழமை துவங்கிய
மைசூர் சில்க் சேலைக் கண்காட்சியில் இது இடம் பெற்றுள்ளது
Posted in Aarani, aesthetics, Art, Banaras, Banares, Benaras, Benares, Bengal, blouse, Border, Budget, CAD, cat's eye, Chennai, clothing, coral, Cotton, Deepam, Deepavali, Deepavalli, Design, designers, Dharmavaram, Diamond, Diwali, Dress, embellishments, embroidery, emerald, Evening, Events, Expensive, Exports, Fabric, Fear, Feast, Festival, Formals, Formalwear, Garments, Gems, girls, Gold, Gowns, Guiness, Handicrafts, Heritage, Individual, Instruments, Jari, Jarigai, Jeeva, Jewels, Kala Niketan, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanchipuram Silk, Kanchivaram, Kanjeepuram, Kanjeevaram, Kanjipuram, Kanjivaram, Kasi, Kumaran, Ladies, Lady, Laundry, Limca, Marriages, music, musical, Musicians, Mylai, Mylapore, Mysore, Nalli, Nithashree, Nithashri, Nithyashree, Nithyashri, Nithyasree, Nithyasri, nylon, ornate, P Suseela, P Susheela, P Sushila, P Susila, Painter, Paintings, pallu, Party, Partywear, pearl, Platinum, Pochampalli, Polimer, polycot, polycotton, Polymer, Pothys, precious, Radha, Rasi, Ravi Varma, RaviVarma, RaviVerma, Receptions, Record, Records, Rich, RMKV, Roopkala, ruby, sapphire, Saree, Sarees, Sari, Saris, She, Shobana, Shobhana, Silks, silver, Skirt, stones, Sugasini, Suhasini, Sukasini, Synthetic, Tamil Nadu, TamilNadu, terrycot, terrycotton, Textiles, Thread, TNagar, topaz, Tussar, Varanasi, Vijayalakshmi, Wash, Weddings, Woman, Women, yellow sapphire, zari, Zarigai, Zhari | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 20, 2006
வேடிஸ் சாய்ஸ்… 4 இன் 1 சாரிஸ்

முன்பெல்லாம் துணிக்கடைகளுக்குள் நுழைகிறபோது கையெடுத்துக் கும்பிட்டு வரவேற்கும் பொம்மைகள். இதே வரவேற்பு இப்போதும் உண்டு. ஆனால் பொம்மைகளாய் மனிதர்கள். ஒருபுறம் ஆண்கள். எதிர்புறம் பெண்கள். வரிசையாய் நின்று சாக்லெட், ரோஜாப்பூக்கள் கொடுக்கிறார்கள். இன்னும் ஒரு சில கடைகளில் மேளதாள வரவேற்பு. வாடிக்கையாளரை எப்படியும் கவர்ந்துவிடவேண்டும் என்பதற்காகவே இத்தகைய உபசரிப்பு.
இந்த வரவேற்பு முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது தி.நகர் ஆர்.எம்.கே.வி. துணிக்கடையினர் கொடுக்கும் வரவேற்பு. எல்லோரும் விரும்புகிற வியக்கிற புதியபுதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து, அதன் மூலமே வாடிக்கையாளரைக் கவர்கின்றனர். குறிப்பாக சேலையில் அதிக கவனம். இப்போது 4 இன் 1 என்கிற “ரிவர்சிபிள்’ புடவையை அறிமுகம் செய்துள்ளனர். இந்த சேலையின் மீது பெண்களுக்கு அப்படி என்ன நாட்டம்?
ஆர்.எம்.கே.வியின் பங்குதாரர் சிவக்குமாரே சொல்கிறார்:
“”இன்றைக்கு சேலை கட்டுவோர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. குறிப்பாக இன்றைய இளைஞிகள் சேலை கட்டவே விரும்புவதில்லை. எங்கள் வீட்டுப் பெண்பிள்ளைகள் கூட சேலை என்றால் வெறுத்து ஒதுக்குகின்றனர். அவர்கள் வெறுக்கிறார்கள் என்பதற்காக நாம் அப்படியே விட்டுவிடமுடியுமா? சேலை தமிழர்களின் சின்னமல்லவா?
இளைஞிகளிடையே சேலை கட்டுகிற ஆசையை அதிகரிக்கவேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற புதிய புதிய சேலைகள் அறிமுகம் செய்கிறோம். முன்பு 714 அடி நீளமுள்ள சேலையை நெய்து சாதனை செய்தோம். அடுத்து 50 ஆயிரம் வண்ணங்களுடைய சேலையை நெய்து சாதனை செய்தோம். இப்போது இந்த 4 இன் 1 “ரிவர்சிபிள்’ பட்டுச் சேலை. இந்தச் சேலையை நெய்தது நெசவுத்தொழிலில் ஒரு புரட்சி என்றுகூட சொல்லலாம். ஒரு சேலையின் இரண்டு பக்கங்களிலும் இருவேறு வண்ணங்கள். 4 பார்டர்கள், 4 முந்திகள்.
இந்த முறையில் நெய்தது இதுவே முதல் முறை. இந்த முறைக்கு “கேவி டெக்னிக்’ என்று பெயரிட்டுள்ளோம். இதற்கான காப்புரிமையையும் வாங்க உள்ளோம்.
ஒரே புடவையில் நான்கு புடவைகள் இருப்பதால் அதிக முறை கட்டுவார்கள். இதனால் சீக்கிரம் வீணாகிப் போய்விடும் என்பதெல்லாம் இல்லை. இப்போது தயாரித்துள்ளது மணப்பெண்ணுக்கான சேலை என்ற கண்ணோட்டத்துடன்தான் தயாரித்து உள்ளோம். அதற்காக மணப்பெண்கள் மட்டும்தான் அணியலாம் என்பதல்ல. எல்லோரும் அணியலாம்.
ஒரு புடவையின் விலை 64 ஆயிரத்து 650 ரூபாய் என்பது அதிகம் என்பதுபோலத்தான் தெரியும். ஆனால் இந்தச் சேலையில் மற்ற எல்லாச் சேலைகளையும்விட ஜரிகை வேலைப்பாடுகள் அதிகம். இப்போது சாதாரணமாக மணப்பெண்களுக்கு சேலை எடுத்தாலே அவற்றின் விலை 25 ஆயிரம், 30 ஆயிரம் ரூபாய் ஆகிவிடுகிறது. அவற்றோடு இதை ஒப்பிடுகிறபோது இவற்றின் விலை குறைவுதான்.
இவ்வளவு விலை உள்ள சேலைகளை நடுத்தர வர்க்கத்தில் உள்ளவர்களால் வாங்க முடியாது என்பது உண்மைதான். இதற்காக இதே 4 இன் ஒன் 1 “ரிவர்சிபிள்’ சேலை 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் வரையிலான விலையில் வருகிற தீபாவளிக்கு அறிமுகப்படுத்த உள்ளோம்.
சேலையில் இப்படி புதியபுதிய கலைநுணுக்கங்களை புகுத்துவதற்கென்றே நுபுணத்துவம் உள்ள ஒரு குழுவை வைத்திருக்கிறோம். அவர்கள் வேலையே சேலைகளில் புதியபுதிய கலை நுணுக்கங்களை அறிமுகப்படுத்துவது பற்றி பரிசோதித்துக்கொண்டே இருப்பதுதான். “இந்தக் குழுவில் பெண்கள் உண்டா?’ என்றால்… “இல்லை’ என்றுதான் சொல்லவேண்டும். இந்தத்துறையில் பெண்கள் படித்துவிட்டு வந்தாலும், அவர்கள் கவனமெல்லாம் சேலைகளைப் பற்றி இல்லை. பேஷன் உடைகளின் மீதுதான் உள்ளது” என்கிறார் சிவக்குமார்.
இந்த 4 இன் 1 சேலை குறித்து கடை வாயிலில் இரு பெண்களின் உரையாடல்:
“”ஏய்.. 4 இன் 1 புடவை வந்திருக்காமே கேள்விப்பட்டீயா?”
“”ம்.. நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரின்னு ரஜினி சொல்லுறா மாதிரி 100 இன் 1 வந்தா நல்லா இருக்கும்லே?”
Posted in 4 in 1, Chennai, Jothika, Kanchipuram Silk, Marriage, Pattu, Pudavai, RMKV, Saree, Sari, Tamil | Leave a Comment »