ஆகஸ்டு மாதம் ஜோதிகாவுக்கு குழந்தை பிறக்கும்
சென்னை, ஜன.31-
பூ வெல்லாம் கேட்டுப்பார்’ படம் மூலம் தமிழிலில் அறிமுகமான ஜோதிகா ஏராளமான ஹிட்படங்களில் நடித்தார்.
அவரும் சூர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கல்யாணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார். திருமணத்துக்கு முன்பே நடித்து கொடுத்த `பச்சைக் கிளி முத்துச்சரம்,’ `மொழி’ ஆகிய இரு படங்கள் பிப்ரவரியில் ரிலீசாகிறது.
ஜோதிகா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். வருகிற ஆகஸ்டு மாதம் குழந்தை பிறக்கும்.
தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவும் ஜோதிகாவும் தோழிகள் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருந்தபோது மருத்துவம் பார்த்த டாக்டரிடம் ஜோதிகாவும் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார். டாக்டர் ஆலோசனைப்படி உணவு மருந்துகள் எடுத்துக்கொள்கிறார்.
நட்சத்திர தம்பதிகள் பொதுவாக குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவது வழக்கம். ஆனால் சூர்யாவும் ஜோதிகாவும் அதை விரும்பவில்லை. உடனே குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினர்.
ஜோதிகா, சூர்யா பெற்றோர் பேரக் குழந்தையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.