Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Jothi Basu’ Category

‘Telecom & IT workers has every right to strike’ – Jyothi Basu

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 27, 2006

தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியருக்கும் வேலைநிறுத்த உரிமை உண்டு: ஜோதி பாசு

கோல்கத்தா, அக். 28: தொழிலாளர்களிடம் இருந்து வேலைநிறுத்த உரிமையைப் பறிக்கக் கூடாது; தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் வேலைநிறுத்த உரிமை உண்டு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான ஜோதி பாசு கூறினார்.

தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமை தொடர்பாக கட்சிக்குள் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை. தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமையை நாம் பறிக்க முடியாது; அதே நேரத்தில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அடிக்கடி வேலைநிறுத்தம் ஏற்பட்டு, உற்பத்தி பாதிக்கப்பட்டுவிடாமல் தடுக்க, அத் துறையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கலாமா என்பது குறித்து ஆராயலாம் என்றும் அவர் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம், கோல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடந்தது. அதில் பங்கேற்ற ஜோதி பாசு, பின்னர் நிருபர்களிடம் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார்.

ஆனால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை வலுக்கட்டாயமாக, பலத்தைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்தக் கூடாது என்று கூறியுள்ளார் மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா. மேற்கு வங்கத்தில் புதிதாக பல தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கும் புத்ததேவ், வேலைநிறுத்தத்தால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுவிடாமல் தடுப்பதிலும் அக்கறை காட்டிவருகிறார்.

அண்மையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தியது. அப்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டார் புத்ததேவ்.

மத்திய அரசின் மக்கள்~விரோத பொருளாதாரக் கொள்கைகளையும் தனியார்மயமாக்கல் மற்றும் அரசு நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கும் விற்கும் கொள்கையையும் எதிர்த்து டிசம்பர் 14-ம் தேதி பொது வேலைநிறுத்தம் செய்ய சிஐடியூ தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இப் பின்னணியில், வேலைநிறுத்த உரிமை குறித்து ஜோதி பாசு தெரிவித்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

Posted in Buddhadeb Bhattacharya, Calcutta, CITU, CPI (M), employees, I&B, Industry, Information & Broadcasting, InfoTech, Jothi Basu, Jothy Basu, Kolkata, Mamtha bannerjee, Marxist, Strike, Technology, Telecom, Trinamool, Union, WB, West Bengal, workers | Leave a Comment »

‘Jothi Basu is Kalyug’s Krishna’ – Subash Chakraborty

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 19, 2006

என்னை கலியுகக் கண்ணன் என்று வருணித்த அமைச்சர் சக்ரவர்த்திக்கு மூளை பிசகிவிட்டது: ஜோதிபாசு

கோல்கத்தா, செப். 20: என்னை கலியுகக் கண்ணன் என்று வருணித்த போக்குவரத்து அமைச்சர் சுபாஷ் சக்ரவர்த்திக்கு மூளை பிசகிவிட்டது என்று மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதிபாசு கூறினார்.

மேற்கு வங்க மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சுபாஷ் சக்ரவர்த்தி. இவர் சமீபத்தில் வங்க மொழிப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவை “கலியுகக் கண்ணன்’ என்று வருணித்திருந்தார். இதன்மூலம் அவர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கோல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிய ஜோதிபாசுவிடம் நிருபர்கள் இதுபற்றி கேட்டனர்.

“என்னை கலியுகக் கண்ணன் என்று அமைச்சர் சக்ரவர்த்தி கூறி வருணித்துள்ளார். அதை ஏற்கமுடியாது. சமீபகாலமாக மனம்போனபடி அவர் பேசி வருகிறார். அவருக்கு மூளை பிசகிவிட்டது போல் தெரிகிறது’ என்று ஜோதிபாசு கூறினார்.

சமீபத்தில் பிர்பும் மாவட்டம், தாரபீடத்தில் உள்ள காளி கோயிலுக்குச் சென்று வந்த சுபாஷ் சக்ரவர்த்தி, “நான் முதலில் ஹிந்து, பிராமணர் வகுப்பைச் சேர்ந்தவன்; அப்புறம்தான் கம்யூனிஸ்ட்’ என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.

இதுதொடர்பாக கட்சியின் மாநில செயலர் பிமன் போஸ் கருத்து தெரிவிக்கையில், மத நம்பிக்கை உள்ள ஒருவரை கட்சியிலிருந்து விலக்கி வைக்க கட்சி விதிகளில் இடமில்லை. ஆனால், மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்த ஒருவர் மார்க்சீய, லெனினீய கொள்கைகளை பற்றி நடப்பதுதான் சரியான முறையாகும் என்று கூறியிருந்தார்.

இப்போது ஜோதிபாசுவை கலியுகக் கண்ணன் என்று கூறியதன் மூலம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் சுபாஷ் சக்ரவர்த்தி.
“முடிந்தால் வெளியேற்றுங்கள்’: மேற்குவங்க அமைச்சர் சுபாஷ் சக்ரவர்த்தி

கோல்கத்தா, செப். 20: முடிந்தால் என்னை கட்சியிலிருந்து வெளியேற்றட்டும் என்று மேற்குவங்க மாநில போக்குவரத்து அமைச்சர் சுபாஷ் சக்ரவர்த்தி கூறினார்.

“மகாபாரதத்தில் கிருஷ்ணன் எப்படியோ அதுபோல மார்க்சிஸ்ட் கட்சிக்கு தலைவர் ஜோதிபாசு கலியுகக் கண்ணனாக இருக்கிறார்’ என்று தான் நான் குறிப்பிட்டேன்.

ஆனால், நான் எந்த அர்த்தத்தில் சொன்னேன் என்பது புரியாமல் ஜோதிபாசு என்னை மூளையில்லாதவன் என்று கூறியுள்ளார். எனக்கு மூளை இல்லை என்று கட்சி கருதுமானால் என்னை கட்சியிலிருந்து வெளியேற்றட்டும். மூளையில்லாதவன் எப்படி கட்சியிலிருந்து செயல்பட முடியும் என்றார் சுபாஷ் சக்ரவர்த்தி.

Posted in Chakrvarthy, Communist, CPI (M), Jothi Basu, Jyothi Baasu, Kali Ghat, Kalyug, Krishna, Marxist, Subash Chakraborty, Tamil, Temple, West Bengal | Leave a Comment »