Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Jordan’ Category

Arms race in Arab & Gulf states – US, Israel: War zones

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 3, 2007

அமைதியைக் குலைக்கும் ஆயுத பேரம்!

எஸ். ராஜாராம்

“”சவூதி அரேபியா மற்றும் அரபு நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பதன் மூலம், சகோதரர்களாக இருக்கும் எங்களைப் பிரிக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. அரபு நாடுகளுக்கு நண்பன்போல காட்டிக்கொள்ள திட்டமிடும் அமெரிக்காவின் இந்த ஆயுத பேரத்தால் மத்திய கிழக்கில் பதற்றம்தான் அதிகரிக்கும்”.

அரபு நாடுகளுடனான அமெரிக்காவின் சமீபத்திய ஆயுதபேர பேச்சுவார்த்தை குறித்து ஈரான் அதிபர் அகமதி நிஜாதி சொன்னது இது.

ஈரானின் முக்கியமான கூட்டாளியான சிரியாவும் இந்த ஆயுத பேரத்தை அபாயகரமானது எனக் கண்டித்துள்ளது.

உலக நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்த முறை மத்திய கிழக்கு நாடுகளைக் குறிவைத்து குறிப்பாக, அரபு நாடுகளுடன் ஆயுதபேர பேச்சுவார்த்தையை அமெரிக்கா நடத்தியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரபு நாடுகளான எகிப்து, ஜோர்டானுக்கு 13 பில்லியன் (ஒரு பில்லியன் – 100 கோடி) டாலருக்கும், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கும் மொத்தம் 20 பில்லியன் டாலருக்கும் ஆயுதங்களை அமெரிக்க விற்பனை செய்ய உள்ளது.

அத்துடன் இஸ்ரேலுக்கு 30 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா உடன்பாடு செய்துகொண்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த ஆயுதங்கள் வழங்கப்படும்.

இதில் விசேஷம் என்னவென்றால் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மட்டும் “ராணுவ உதவியாக’ அளிக்கிறது. ஏனென்றால் இஸ்ரேல் எப்போதுமே அமெரிக்காவின் செல்லப் பிள்ளை. அமெரிக்காவிடம் இருந்து இதுவரை அதிக அளவில் ராணுவ உதவியைப் பெற்ற நாடு இஸ்ரேல்தான்.

கடந்த 10 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர் மதிப்பில் இஸ்ரேலுக்கு ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது, அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை மீறி கொத்துக் குண்டுகளை மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் வீசியது. இதுகுறித்து பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தபோதிலும், அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை. தற்போது இஸ்ரேலுக்கு அளிக்கும் உதவியைக்கூட நியாயப்படுத்தவே செய்கிறது.

“”மத்திய கிழக்குப் பிராந்தியம் கடந்த 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இப்போது அபாயாகரமானதாக உள்ளது. இஸ்ரேலும் பல அபாயங்களை எதிர்கொள்கிறது.

லெபனான், பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு ஈரானும், சிரியாவும் உதவுகின்றன. அதைச் சமாளிக்கும் வகையில் இஸ்ரேல் தனது ராணுவ பலத்தை மேம்படுத்திக் கொள்ளவே இந்த உதவி” என்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலர் நிக்கோலஸ் பர்ன்ஸ்.

நேரம்பார்த்து அடிப்பது என்பார்கள்… அதை அரபு நாடுகளில் தனது முக்கியமான கூட்டாளியான சவூதி அரேபியா மூலம் ஈரானுக்கு எதிராக கச்சிதமாக நிறைவேற்றுகிறது அமெரிக்கா.

சக அரபு நாடான லெபனானில் நிலையற்ற தன்மையைத் தவிர்க்க இணைந்து செயல்படுவது என சமீபத்தில்தான் ஈரானும், சவூதி அரேபியாவும் முடிவு செய்தன.

ஈரான் ஷியா பிரிவு ஆளுமையிலும், சவூதி அரேபியா ஸன்னி பிரிவு ஆளுமையிலும் உள்ள நாடுகள். ஆனால், இராக்கில் சிறுபான்மை ஸன்னி பிரிவு மக்களுக்கு எதிராகச் செயல்பட ஷியா பிரிவு தீவிரவாதிகளுக்கு ஈரான் உதவுகிறது என்பதில் சவூதிக்கு சிறிய நெருடல். அந்த நெருடலை தற்போதைய ஆயுத விற்பனை மூலம் அமெரிக்கா பெரிதாக்கிவிட்டதாகக் கருதுகிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மட்டுமின்றி, மத்திய கிழக்கில் ஈரானின் செல்வாக்கும் அமெரிக்காவை கவலைகொள்ளச் செய்துள்ளது. ஏனெனில் ஈரானில் ஆளும்சக்தியான ஷியா பிரிவு முஸ்லிம்கள்தான் இராக், லெபனானிலும் பெரும்பான்மையாக உள்ளனர்.

மேலும், தனது நண்பனான சிரியாவுடன் சேர்ந்து பாலஸ்தீனத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான் உதவுவதாக அமெரிக்கா கருதுகிறது. மொத்தத்தில் மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை எதிர்க்கும் ஈரானை தனிமைப்படுத்தவே இந்த ஆயுத விற்பனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

இதை அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் வெளிப்படையாகவே சொல்கிறார். “”மத்திய கிழக்கில் அமெரிக்காவின் “விருப்பத்துக்கு’ எதிரான ஒரே நாடு ஈரான்தான்” என்கிறார் அவர்.

இதற்கிடையே, மத்திய கிழக்கில் அமைதியை நிலவச்செய்வது தொடர்பாக இந்த ஆண்டு இறுதியில் சர்வதேச மாநாடு நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் புஷ் அறிவித்துள்ளார்.

“”மத்திய கிழக்கில் அமைதியின்மைக்குக் காரணமே அமெரிக்காதான். இருப்பினும் அமெரிக்கா நடத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறோம்” என சிரியா தெரிவித்துள்ளது.

“”அரபு நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்குச் செலவிடும் தொகையை தங்கள் நாடுகளின் முன்னேற்றத்திற்குச் செலவிட வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார் ஈரான் அதிபர்.

“”மத்திய கிழக்கில் ஆயுதப்போட்டியை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது. தனது ஆயுதத் தொழிற்சாலையைத் தொடர்ந்து இயக்கவும், உலகக் கடனாளியாகித் திவாலாவதைத் தவிர்க்கவுமே இந்த ஆயுத விற்பனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது” எனக் குற்றம்சாட்டுகிறார் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் முஸ்தபா முகமது நஜ்ஜார்.

உலகின் தலைவராகத் தன்னைக் கருதிக்கொள்ளும் அமெரிக்கா, ஈரானுடனான தனது தனிப்பட்ட வெறுப்புக்காக மத்திய கிழக்கில் அமைதியைக் குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது நியாயமல்ல.

Posted in America, Ammunitions, Arab, Arabia, Arms, ascendant, Bahrain, Boeing, Commerce, Democracy, Dubai, Economy, Egypt, Embargo, Emirates, Employment, Freedom, Gaza, Gulf, Haliburton, Hamas, Independence, Iran, Iraq, Islam, Israel, Jobs, Jordan, King, Kingdom, Kuwait, Lebanon, Mid-east, Mideast, Missiles, Monarchy, Muslims, Oman, Palestine, Peace, Qatar, Quatar, Race, sales, Saudi, Sharjah, Shia, Sunni, Syria, UAE, US, USA, War, warlord, Weapons, Yemen | Leave a Comment »

Sri Lanka: Attack on fishermen serious issue – No concerns when the fishermen from Tamil Nadu died

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 4, 2007

கண்ணீரில் தத்தளிக்கும் தமிழக மீனவர்கள்

த.நா. மதிவாணன்

“”ஆழ்கடல் சென்று மீன்பிடிப்போம்; நாளும் உழைத்து நாமும் முன்னேறி, நமது நாடும் வளம்பெற பாடுபடுவோம்” எனத் தன் ஆசைக் கணவருக்கு அன்புமொழி கூறி கடலுக்கு மீன்பிடிக்க இன்முகத்துடன் வழியனுப்புவது வழக்கமான காட்சி.

ஆனால் இன்று…! “”எப்பம்மா அப்பா வருவாருன்னு” கேள்வி கேட்டுத் துளைக்கும் தன் மூன்று பிள்ளைகளுக்கும் கண்ணீரை மட்டும் பதிலாகச் சொல்லி இனித் தன் வாழ்வு செல்லும் வழியறியாது தவிக்கும் தமிழக மீனவப் பெண்ணின் வேதனை சொல்லி மாளாது.

முருங்கைவாடி கிராமத்தில் வசித்து வந்த ராமு என்ற மீனவர் இலங்கைக் கடற்படையால் சுடப்பட்டு மாண்டு போக அவரது மனைவி முத்துலட்சுமி, நான்கு குழந்தைகளுடன் ஓலைக்குடிசையில் ஒட்டிய வயிறுடன் எதிர்காலத்தை எண்ணிக் கலங்கி காலம்கழிக்கும் வேதனைச் சம்பவம்.

நாகையில் அக்கரைப்பேட்டை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு. இது ஏதோ நிகழ்வு அல்ல. நித்தம் நடக்கும் கண்டனத்துக்குரிய சம்பவங்கள்.

இதுவரை சுமார் 112 மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் சுடப்பட்டு மாண்டு போயுள்ளனர். பலர் காயமுற்றுள்ளனர். இத்தகைய சூழலில் எப்படி மகிழ்வோடு மீன்பிடிக்கச் செல்ல இயலும்? எப்படி மீனவப் பெண்கள் தங்கள் கணவன்மார்களை தைரியமாக வழியனுப்பிட முடியும்?

வான் பொய்த்துப் போனாலும், வருகின்ற நீர் வராது போனாலும், விவசாயம் குறைந்து போனாலும், வற்றாது வளம் கொழிக்கும் கடல் வளம் கண்டு நாட்டின் ஏற்றத்திற்கு கடலை உழுபவன்தான் மீனவன்.

“”மீனவர்களின் உழைப்பு சிந்திடும் வியர்வைத் துளிகளால் கடல் நீர் உப்பானது” இது கவிதையல்ல. மீனவனின் உழைப்பின் சிறப்பு.

இத்தகு வரலாற்றுச் சிறப்புக்குரிய மீனவன் நாட்டின் பொருளாதார ஏற்றத்திற்கும் அன்னியச் செலாவணியின் அதிக வருவாய்க்கும் ஓய்வின்றி நித்தமும் உழைக்கும் உழைப்பாளி.

இத்தாலி, நார்வே, சுவீடன், டென்மார்க் போன்ற நாடுகளில் உள்ள மீனவர்கள் செல்வச் செழிப்பில் மேலோங்கி உள்ளனர்.

ஆனால் நம் நாட்டில் மீனவர்களின் நிலை என்ன? அரை வயிற்றுக் கஞ்சிக்கும் அவதி! கடலுக்குச் சென்றால் மீண்டும் கரைக்குத் திரும்புவோமா என்ற அச்சம்.

ரூ. 2500 கோடிக்கு மேல் அன்னியச் செலாவணியை ஈட்டித் தருகிற மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும். கரையில் வீழ்ந்த மீன் தத்தளிப்பதுபோல் கண்ணீரில் தத்தளிக்கின்றனர் மீனவர்கள்.

தமிழகத்தில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில் வசிக்கும் சுமார் 65 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் மீன்பிடித் தொழில் மட்டுமே.

தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்கையில் அவ்வப்போது இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது சாதாரண நிகழ்வாகிப் போய்விட்டது வேதனைக்குரியது.

இலங்கைக் கடற்படையினரைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் பின்னர் அதைப்பற்றி மறந்துபோவதும் இயல்பாகிவிட்டது.

பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு நிவாரணம் தருவதால் மட்டும் அவர்களின் இன்னல்கள் தீரப் போவதில்லை. மீனவர்கள் இனியும் பாதிக்காதவண்ணம் காக்கப்பட வேண்டியது அரசின் பொறுப்பு.

படிப்பறிவில்லா பாட்டாளி மீனவர்கள் உழைப்பைத் தவிர வேறொன்றுமறியா ஏழை மக்கள். இவர்கள் கடல் எல்லையைத் தாண்டி அன்னிய நாட்டுக்குள் செல்வதால் சுடப்பட்டார்கள் என்பது ஏற்புடையதா? நடுக்கடலில் கண்ணுக்குத் தெரிகிற வகையில் எல்லைக்கோடு ஏதுமுள்ளதா? வழி தவறி வந்தாலும் இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை எச்சரித்து அனுப்பிவிட வேண்டும் அல்லவா? அல்லது அவர்களை எச்சரித்து இந்திய கடலோரக் காவல்படையினரிடம் ஒப்படைக்கலாம் அல்லவா?

இவ்வாறு மனிதாபிமான முறையில் செயல்படுவதை விட்டுவிட்டு, கடல் எல்லையை அறியாமல் தாண்டி வரும் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்ல எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை. இதை இலங்கைக் கடற்படையினருக்கு உணர்த்த வேண்டியது இந்திய அரசின் முக்கியக் கடமை.

இந்திய அரசு கடலோரக் காவல் படைக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழிக்கிறது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் கொடூர நிகழ்வுகளின்போது நமது கடலோரக் காவல் படை எங்கே போனது?

பன்முறை இந்நிகழ்வுகள் நடந்தேறிய போதும், ஒருமுறைகூட நம் கடலோரக் காவல்படையினர் கண்களில் இச்சம்பவங்கள் படாதது வியப்பூட்டுகிறது. கடலோர மீனவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடலோரக் காவல்படை தங்கள் கடமையைச் செய்யாமல் எங்கே போனது?

கிழக்கே வங்கக் கடல், மேற்கே அரபிக் கடல், தெற்கே இந்துமாப் பெருங்கடல் என முக்கடலாலும் நமது நாடு சூழப்பட்டுள்ளது. ஓர் உயரிய குன்றின் மீது நின்று பார்த்தால் மூன்று கடல்களும் தனித்தனியாகத் தெரிகிறதா? ஏதேனும் தனித்தனி எல்லைக்கோடுகள்தான் உள்ளனவா? இவையாவும் நம் மூதாதையர்கள் வைத்த பெயர்கள். இதுதான் கடல்எல்லை என்பதை திட்டவட்டமாக மீனவர்கள் அறிந்துகொள்ள வழியேதும் செய்யப்பட்டதா? இல்லையென்றுதான் கூற வேண்டும். எனவே, மனித உள்ளங்கள் எண்ணிப் பார்க்க வேண்டிய மனிதாபிமான விஷயம் இது.

பல நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் இறந்தும் உலகில் மிகச் சிறப்பிடம் பெற்ற நமது இந்தியக் கடற்படை ஒருமுறைகூட இலங்கைக் கடற்படையினருக்கு எச்சரிக்கை விடுக்காதது மீனவர்கள் நெஞ்சில் நீங்காத வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா?

ஒரு ராணுவ அமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் நோக்கமே அந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காகத்தான்.

அதைவிடுத்து இலங்கை நட்புநாடு எனக் கூறிக்கொண்டு இந்திய அரசு தமிழக மீனவர்கள் விஷயத்தில் அலட்சியமாக நடந்துகொண்டு வருகிறது.

இலங்கைக் கடற்படை மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த அவலநிலைக்கு ஓரளவு முடிவு ஏற்பட்டிருக்கும்.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவிடம் இந்தியா புகார் தெரிவிக்க வேண்டும். இலங்கை அரசிடமிருந்து இழப்பீடு பெற்று மீனவர்களுக்குத் தரவேண்டும்

நித்தம் கடல் காற்றை மூச்சாய் வாங்கி, உப்பு நீரால் வாழ்க்கை நடத்தி, நாட்டின் பொருளாதார வளத்தை மேம்படுத்த அயராது உழைத்துவரும் மீனவர்களின் வாழ்வு விடிவும் இன்றி முடிவும் இன்றி வினாக்குறியாகவே இருக்க வேண்டுமா? அவர்களின் துயரத்துக்கு விடிவுகாலம் ஏற்படுவது எப்போது?

(கட்டுரையாளர்: நிர்வாகத் தலைவர், தமிழக மீனவர் இளைஞர் அணி).


மீனவர்களை மீட்க மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கூறுகிறது

தமிழக மீனவர்களுக்காக திமுக நடத்திய பேரணி-ஆவணப் படம்
தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக திமுக பேரணி-ஆவணப்படம்

தமிழகத்திலிருந்து காணாமல் போன இந்த மீனவர்களை மீட்க இந்தியாவின் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தை ஆளும் திமுக கூறியுள்ளது.

இந்தச் சம்பவம் இந்திய எல்லையைக் கடந்து சர்வதேச கடற்பரப்பில் இடம்பெற்றதால் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சட்டபூர்வமான அதிகாரம் கிடையாது என திமுகவின் அதிகாரபூர்வ பேச்சாளர் இளங்கோவன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

மத்திய அரசை வற்புறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கக் கோருவதுதான் தமிழக அரசு தற்போதைய நிலையில் செய்யக் கூடியது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்திய அரசால் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மீனவர்கள் தற்போது இலங்கையில் இருப்பதால், இந்திய அரசு இலங்கை அரசுடன் பேசி அவர்களை மீட்க ஆவன செய்யுமாறு இந்திய அரசு கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.


ஜோர்டான் நாட்டு கப்பலில் இருந்த சரக்குகளை விடுதலைப் புலிகள் அப்புறப்படுத்திவிட்டனர் என அந்த கப்பல் நிறுவனம் கூறுகிறது

கப்பலிருந்து சரக்குகள் அகற்றப்படுவதை காட்டும் படம்
சரக்குகள் அகற்றப்படுவதை காட்டும் படம்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவுப் பகுதியில் வைத்து ஜோர்டான் நாட்டு சரக்கு கப்பலான ஃபாரா கால நிலை கோளாறு காரணமாக சிக்கிக் கொண்டது.

ஜோர்டான் நாட்டுக் கப்பலில் இருந்த சரக்குகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாக அந்தச் சரக்குக் கப்பலுக்கு உரிமையாளரான சலாம் சர்வதேச போக்குவரத்து மற்றும் வர்த்தக நிறுவனத்தின் தலைவர் சையத் சுலைமான் கூறியுள்ளார்.
அந்தக் கப்பலில் இருந்து எடுத்துச் செல்லக் கூடிய அரிசி, விளக்குகள், ஜெனரேட்டர்கள் போன்றவை எடுத்துச் செல்லப்பட்டு விட்டன என்றும் கப்பல் சுத்தமாக துடைத்தெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இச்சம்பவத்திற்கு விடுதலைப் புலிகளைத் தவிர வேறு யார் மீதும் பழி போட தனக்குத் தெரியவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

கப்பலை மீட்பதற்காக ஜோர்டான் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக தொடர்பு கொண்டதாகவும், காப்புறுதி நிறுவனங்கள், மதிப்பீடு செய்பவர்கள் போன்றோரை பாதுகாப்பாக அங்கு அனுப்ப வழியினை ஏற்படுத்திக் கொடுக்க இலங்கை அதிகாரிகள் முயற்சிகள் எடுத்த போதிலும், அது நடைபெற இயலாமல் போயிற்று என்றும் தங்களுடைய முயற்சிகள் தோல்வியடைந்தன எனவும் சையது சுலைமான் தெரிவித்தார்.

தமது கப்பலை மீட்பது தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்த தங்களுக்கு அனுமதி, அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், இந்தச் சம்பவம் ஒரு கடற்கொள்ளை என்பது தனது கருத்து மட்டுமல்ல, நிபுணர்களின் கருத்தாகவும் உள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.


Posted in abuse, ADMK, ammunition, Arms, Attack, Contraband, dead, DMK, Eelam, Eezham, Fish, fishermen, Freight, Government, Jordan, LTTE, Military, Naval, Navy, Pirate, Robbery, Sea, Ship, Sri lanka, Theft, TN, Transport, Transportation, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal | 4 Comments »

Lebanese Force Enters South Lebabnon after 40 Years

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 17, 2006

தென்லெபனானில் 40 ஆண்டுகளுக்கு பிறகு லெபனானின் அரச இராணுவம் பிரவேசம்

லிட்டனி நதிப் பாலம் மீது முதல் முறையாக செல்லும் லெபனான் இராணுவம்
லிட்டானி நதியைக் கடக்கும் லெபனான் இராணுவம்

லெபானானில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக அரச இராணுவம் தெற்கு லெபனானுக்குள் பிரவேசித்துள்ளது.

லிட்டானி நதி மீதுள்ள தற்காலிக பாலங்கள் மூலமாக இராணுவ வண்டிகளும், துருப்புக்களை சுமந்த வாகனங்களும் சென்ற போது கூடி நின்ற பொது மக்கள் அரிசி தூவியும், மலர்களைத் தூவியும் லெபானான் கொடிகளை அசைத்தும் வரவேற்பு தெரிவித்தார்கள்.

ஹெஸ்பொல்லாவின் கோட்டையாக விளங்கிய இந்தப் பகுதிகளுக்குள் அரச படைகள் நுழைந்த காட்சியை டயரிலிருந்து எமது பிபிசியின் முகவர் விபரித்திருக்கிறார்.

ஹெஸ்பொல்லாக்களை செயலிழக்கச் செய்ய இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் ஐ நா பிரகடனத்திற்கு அமைய,லெபனான் இராணுவம் தென் லெபனானிற்குள் பிரவேசித்துள்ளது.

லெபனானில்-ஒரு நாட்டிற்குள் இன்னொரு நாடு இயங்க இனிமேலும் இடம் இருக்காது என்று, லெபனான் அரசு கூறுகிறது. ஆனாலும் பெய்ரூட்டிலிருந்து எமது பிபிசியின் முகவர் கருத்து வெளியிடும் போது மோதலைத் தவிர்க்க ஹெஸ்பொல்லக்களுக்கும் லெபனான் அரசுக்கும் இடையே ஒரு உடன்பாடு இருப்பது புலனாகிறது என்றும் ஹெஸ்பொல்லாக்கள் தமது ஆயுதங்களை மறைத்து வைப்பது என்றும் லெபனான் அரசு தமது இராணுவத்தின் மூலம் அதிகாரத்தை நிலை நாட்டுவது என்று உடன்பட்டிருப்பது தெரிவதாகவும் எமது முகவர் தெரிவிக்கின்றார்.

Posted in Arms, Hezbollah, Israel, Jordan, Lebanese, Lebanon, Mid-east, Middle East, Syria, Tamil | Leave a Comment »

Ceasefire in Mid-East; UN Agreement on Israel

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006

இஸ்ரேலிய சிப்பாய்கள்
இஸ்ரேலிய சிப்பாய்கள்

போர் நிறுத்தம் வந்தாலும் ஹெஸ்பொல்லாக்களை தேடுவோம் என்கிறார் எகுட் ஒல்மர்ட்

லெபனானில் கிட்டதட்ட ஐந்து வாரங்களாக நடைபெற்ற மோதல்களை போர் நிறுத்தம் முடிவிற்கு கொண்டு வந்து இருந்தாலும், லெபனானில் இருக்கும் ஹெஸ்பொல்லா கொரில்லா அமைப்பின் தலைவர்களை தாம் தேடிப்பிடிப்போம் என்று இஸ்ரேலிய பிரதமர் எகுட் ஒல்மர்ட் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஹெஸ்பொல்லாவிற்கு எதிராக போரிடுவது என்ற முடிவானது, தன்னை பாதுகாக்க இஸ்ரேல் கொண்டு இருக்கும் உறுதிப்பாட்டினை காண்பிக்கிறது என தெரிவித்தார்.

இது போர் என்றும் இஸ்ரேல் தனது பொறுப்புகளில் இருந்து விலகி செல்லாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்த சண்டை ஆரம்பிப்பதற்கு காரணமான, ஹெஸ்பொல்லாவினால் கடத்தி செல்லப்பட்ட தனது இரண்டு வீரர்களை விடுவிக்க தாங்கள் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் என்றும் இஸ்ரேல் பிரதமர் எகுட் ஒல்மர்ட் கூறினார்.

போர் நடந்த முறை குறித்து விசாரணை நடத்த போவதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் அமீர் பேரட்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்கு லெபனானில் ஹெஸ்பொல்லா ஆயுதகுழுவினர் மீண்டும் ஒன்றிணைய இஸ்ரேல் இராணுவம் அனுமதிக்க கூடாது என்றும் அவர் கூறினார்.


தெற்கு லெபனானை நோக்கி மக்கள் படையெடுப்பு

வீடுதிரும்பும் அகதிகள்
வீடுதிரும்பும் அகதிகள்

இஸ்ரேலிய படைகளுக்கும், ஹெஸ்பொல்லாவிற்கும் இடையில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதை அடுத்து, முன்னர் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், தெற்கு லெபனானை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர்.

தங்களது வீடுகளையும் சொத்துகளையும், பார்ப்பதற்காக புறப்பட்டுள்ள மக்களின் கார்களால் பெய்ரூட் மற்றும் சிடானில் இருக்கும் சாலைகள் நிரம்பி காணப்படுகின்றன.

சண்டையின் போது கடுமையான மோதல் இடம்பெற்ற பின்ட் சிபாயில் என்ற கிராமத்திற்கு சென்ற பிபிசி செய்தியாளர் ஒருவர், அங்கு அழிவு தவிர வேறு எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் திரும்பி வந்து கொண்டு இருக்கின்றனர்.

இவர்கள் தமது கார்களின் கூரைகளில் மூட்டை முடிச்சுகள் காணப்படுகின்றன.

சண்டை நிறுத்தம் ஏற்பட்ட பல மணி நேரத்திற்கு பின்னர், இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில், இரண்டு ஹெஸ்பொல்லாவினரை இஸ்ரேலிய வீரர்கள் சுட்டு கொன்றுள்ளனர்.


இஸ்ரேல் மீது காசாவில் இருந்து தாக்குதல்

காசாவில் இஸ்ரேல் பதில் தாக்குதல்
காசாவில் இஸ்ரேல் பதில் தாக்குதல்

லெபனானில் சண்டை நிறுத்தம் ஏற்பட்ட நேரம், காசாவில் இருக்கின்ற தீவிரவாதிகள் இஸ்ரேலிய நகரமான அஷ்கெலான் மீது ராக்கெட்டுளை ஏவி இருக்கின்றனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஷெல் தாக்குதல் நடத்தியதில், மூன்று பாலஸ்தீன பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ராக்கெட்டுகளை ஏவிய தீவிரவாதிகள் தப்பி விட்டதாக பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வாரங்களாக, காசாவில் இருந்து ராக்கெட் ஏவப்படுவதினை தடுத்து நிறுத்த இஸ்ரேல் முயற்சித்து வருகின்றது.

அத்தோடு காசா எல்லைக்கு அருகாமையில் பிடித்து செல்லப்பட்ட தனது இராணுவ வீரர் ஒருவரையும் விடுவிக்க முயற்சித்து வருகின்றது.

சண்டை நிறுத்தம் ஒன்றினை முன் வைத்துள்ள பாலஸ்தீன தரப்பு, இஸ்ரேல் சிறைச்சாலைகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களை சிலரை விடுவித்தால், இராணுவ வீரரை விடுவிப்பதாக கூறியுள்ளது. ஆனால் இதனை இஸ்ரேல் நிராகரித்து விட்டது.

Posted in Attacks, Ban, BBC, Blast, Ceasefire, EU, Hezbollah, Human Rights, Israel, Issue, Jordan, Lebanon, Mid-east, Middle East, News, Ohmert, Tamil, UN | Leave a Comment »

Middle East – Environmental Impact

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 1, 2006

மத்திய கிழக்கு மோதலால் சுற்றுச் சூழல் பாதிப்பு

மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல்களினால் அங்கு ஒரு சுற்றுச் சூழல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

லெபனானுக்கு உட்பட்ட கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள எண்ணைக் கசிவினால் உண்டாகியுள்ள மாசுகள் தொடர்பாக ஐ நா வின் சுற்றுச் சூழல் திட்டம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான மின் நிலையம்
தாக்குதலுக்கு உள்ளான மின் நிலையம்

இஸ்ரேலியத் தாக்குதலுக்கு உள்ளான ஜிய்யேய் மின் நிலையத்திலிருந்து வெளியேறிய எண்ணைக் கசிவு தற்போது 80 கிலோ மீட்டர் வரை பரவியுள்ளது.

பெய்ரூட் நகருக்கு தெற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஜிய்யேய் மின் நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது.

அந்த தாக்குதலிலின் போது முதலில் வந்த தகவல்களின் படி 10,000 டண்கள் மிகதிடமான கச்சா எண்ணை பாதிக்கப்பட்ட தொட்டிக்ளிலிருந்து வெளியானதாக கூற்ப்பட்டது , ஆணால் இறுதியாக 35,000 டண்கள் எண்ணை வெளியேறி இருக்கக் கூடும் என அறியப்படுகிறது.

கடற்கைரையிலிருந்து கடலை நோக்கி இந்த எண்ணை உடனடியாக வேகமாக சென்றது என லெபனானிய சுற்றுச் சூழல் அமைச்சகத்தை சேர்ந்த பெர்ஜ் ஹதிஜன் பிபிசியிடம் தெரிவித்தார்

அழிந்து வரும் பச்சை ஆமைகள்
பாதிக்கப்பட்ட அழிந்து வரும் பச்சை ஆமைகள்

இந்த எண்ணைக் கசிவு கடற் படுகையில் படிந்துள்ளது எனவும் அது அந்தப் பகுதியில் உள்ள டூனா எனப்படும் மீன்களின் இனப்பெருக்த்தை பாதித்துள்ளது என்வும் ஜூலை மாதங்களில் குஞ்சு பொறிக்கும் அழிந்து வரும் இனமான பச்சை ஆமைகளையும் இது பாதித்துள்ளது என்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மத்தியதரைக் கடல் பகுதியில் உள்ள பல வன விலங்குகளுக்கும் இதனால் குறிப்பிட தக்க அளவில் அபாயம் உள்ளதாகவும் ஐ நா வின் சுற்றுச் சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. மோதல் தொடர்ந்தால இது பல் உள்ளூர் வாசிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடும் எனவும் ஐ நா வின் அமைப்பு கூறியுள்ளது.

இந்த எண்ணை கசிவினால் கடல் சார் சுற்றுச் சூழலுக்கு ஏற்படக் கூடிய குறுகிய கால மற்றும் நீண்ட கால தாக்கம் குறித்து கவலை கொண்டுள்ளோம் எனவும் லெபனான் தெரிவித்துள்ளது. ஏனெனில் பல மக்கள் சுற்றுலா மற்றும் மீன் பிடிப்பை தங்களது அடிப்படை வாழ்வாதாரமாக கொண்டுள்ளார்கள் என லெபனானின் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளர்க்ள்

Posted in BBC, Environment, Hezbollah, Israel, Jordan, Lebanon, Mid-east, Tamil | 1 Comment »

Qana Massacre by Israel

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2006

ெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் 34 குழந்தைகள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பலி

மரணமடைந்த சிறார்களில் சடலங்கள்
கானா தாக்குதலில் 34 குழந்தைகள் உட்பட பலர் பலி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான் குண்டு வீச்சில் 50க்கு மேற்பட்ட பொது மக்கள் பலி. அதில் பாதிக்கு மேல் குழந்தைகள், சிறுவர்கள். கானா என்ற கிராமத்தில் உள்ள 3 மாடிக் கட்டடம் மீது இஸ்ரேலியக் குண்டுகள் வீழ்ந்ததில் அந்தக் கட்டடத்தின் நிலவறைக்குள் தஞ்சம் புகுந்திருந்த கிராம மக்கள் மீது கட்டம் இடிந்து வீழ்ந்து மூடியது.

அது ஹெஸ்புல்லா பயன்படுத்தி வந்த பகுதி என்றும் அங்கிருந்து பொது மக்களை விலகும் படி தாங்கள் அறிவித்திருந்தோம் என்றும் இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் அங்கிருந்து வெளியேற முடியாத அளவுக்கு மக்கள் ஒன்றில் பயந்து போயிருந்தார்கள் அல்லது அங்கிருந்து வெளியேறுவதற்கான வசதிகள் அவர்களுக்கு இல்லாமல் இருந்தது என்கிறார் அப்பகுதிக்குச் சென்ற பி.பி.சி. முகவர்.

இந்தத் தாக்குதலை ஒரு கோரமான படுகொலை என்று வர்ணித்த ஹெஸ்புல்லா இதற்கு பதிலடி கிடைக்கும் என்று கூறுகிறது. எல்லைப்புற இஸ்ரேலிய நகரமான கிர்யத்திலுள்ள நமது இன்னோரு முகவர் அப்பகுதி மீது ஹெஸ்புல்லா அடித்த பல கட்டூஸா ஏவுகணைகள் இன்று வந்து வீழ்ந்தன என்கிறார்.


கானாவில் நடந்த தாக்குதலுக்கு இஸ்ரேலிய பிரதமர் வருத்தம்

இஸ்ரேலிய பிரதமர் எஹுத் ஆல்மர்ட்
இஸ்ரேலிய பிரதமர் எஹுத் ஆல்மர்ட்

கானாவில் பொது மக்கள் கொல்லப்பட்டு இருப்பதற்கு இஸ்ரேலிய பிரதமர் எகுட் ஒல்மர்ட் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் சண்டை நிறுத்தத்தினை அறிவிக்க போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அவரது அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

குண்டுத்தாக்குதல் தொடர்பான செய்தி பரவிய உடன், லெபனானுக்கு செல்ல திட்டமிட்டு இருந்த அமெரிக்க அரசுத்துறை செயலர் கொண்டலீசா ரைஸ் தனது பயணத்தினை ரத்து செய்துள்ளார்.

உடனடியாக, எந்தவிதமான நிபந்தனைகளும் அற்ற போர் நிறுத்தம் ஏற்படாமல், தான் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபட போவதில்லை என லெபனான் பிரதமர் ஃபவுட் சினியோரா அறிவித்துள்ளார்.

ஜெருசேலத்தில் இருக்கின்ற அமெரிக்க அரசுத்துறை செயலர் கொண்டலீசா ரைஸ், அப்பாவி மக்கள் கொடூரமாக இறந்துள்ளதற்கு தனது வருத்தத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான் குண்டு வீச்சில் 50க்கு மேற்பட்ட பொது மக்கள் பலி. அதில் பாதிக்கு மேல் குழந்தைகள், சிறுவர்கள்.

கானா என்ற கிராமத்தில் உள்ள 3 மாடிக் கட்டடம் மீது இஸ்ரேலியக் குண்டுகள் வீழ்ந்ததில் அந்தக் கட்டடத்தின் நிலவறைக்குள் தஞ்சம் புகுந்திருந்த கிராம மக்கள் மீது கட்டம் இடிந்து வீழ்ந்து மூடியது.

அது ஹெஸ்புல்லா பயன்படுத்தி வந்த பகுதி என்றும் அங்கிருந்து பொது மக்களை விலகும் படி தாங்கள் அறிவித்திருந்தோம் என்றும் இஸ்ரேல் கூறுகிறது.

ஆனால் அங்கிருந்து வெளியேற முடியாத அளவுக்கு மக்கள் ஒன்றில் பயந்து போயிருந்தார்கள் அல்லது அங்கிருந்து வெளியேறுவதற்கான வசதிகள் அவர்களுக்கு இல்லாமல் இருந்தது என்கிறார் அப்பகுதிக்குச் சென்ற பி.பி.சி. முகவர்.

இந்தத் தாக்குதலை ஒரு கோரமான படுகொலை என்று வர்ணித்த ஹெஸ்புல்லா இதற்கு பதிலடி கிடைக்கும் என்று கூறுகிறது.

எல்லைப்புற இஸ்ரேலிய நகரமான கிர்யத்திலுள்ள நமது இன்னோரு முகவர் அப்பகுதி மீது ஹெஸ்புல்லா அடித்த பல கட்டூஸா ஏவுகணைகள் இன்று வந்து வீழ்ந்தன என்கிறார்


இஸ்ரேலுக்கு உலக நாடுகள் கண்டனம்

தாக்குதலுக்கு உள்ளான கானா நகரம்
கானா நகரில் தாக்கப்பட்ட கட்டிடம்

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு உலகின் பல பாகங்களிலிருந்து கண்டனங்கள் வந்துள்ளன.

அந்த நாட்டுடன் ராஜதந்திர உறவு கொண்டுள்ள மிகச் சில அரபு நாடுகளுக்குள் ஒன்றான ஜோர்டனின் மன்னர் அப்துல்லா இந்தத் தாக்குதலை ஓர் அசிங்கமான குற்றச் செயல் என்றும், சர்வதேச சட்டதிட்டங்களைக் கண்மூடித்தனமாக மீறிய நடவடிக்கை என்றும் கூறியுள்ளார்.

லெபனானிலுள்ள ஐ.நா. பிரதிநிதி உடனடியாக ஒரு விசாரணை தேவை என்றுள்ளர். அரபு லீக் அமைப்பும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைகளுக்குப் பொறுப்பான தலைவர் கவியே சொலனோ அவர்கள் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை எந்தக் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது என்றார்.

பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் பொது மக்களைக் கொல்வது சகிக்க முடியாத ஒன்று என்றதுடன் இஸ்ரேலை பொறுப்பாகச் செயற்படும் படி மீண்டும் விலியுறுத்தினார்.

பிரெஞ்சு அதிபர் ஜக் சிராக், பாலஸ்தீன அதிபர் மஃமுத் அப்பாஸ், எகிப்திய அதிபர் ஹொஸ்னி முபாரக் மற்றும் போப்பாண்டவர் ஆகியோர் உடனடியாகப் போர் நிறுத்தம் தேவை என்று அறை கூவியுள்ளனர்.

Posted in BBC, EU, Hezbollah, Israel, Jordan, Lebanon, Mid-east, News, Ohmert, Qana, Tamil, UN | Leave a Comment »