காசிப்ஸ்: கூடுதல் கமிஷனரை காப்பாற்றிய தாதா
சென்னை மாநகரில் புதிய கமிஷனராக நாஞ்சில் குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் என்ன விஷேசம் என்று நீங்கள் கேட்கலாம். இவர் கோவை மாநகர் கமிஷனராக இருந்த போதுதான், தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தினர். அந்த சம்பவத்துக்கு தண்டனை கடந்த 1ம் தேதி வழங்கப்பட்டது. அதே நாளில் நாஞ்சில் குமரன் சென்னை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். என்ன ஒரு பொருத்தம்.
கமிஷனர் லத்திகாவை மாற்றும் போதே, கூடுதல் கமிஷனர் ஜாங்கிட்டையும் மாற்ற அரசு நினைத்தது. இதை எப்படியோ அறிந்து கொண்ட ஜாங்கிட், வெள்ளை ரவியை சுட்டு தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார். முதல் நாள் தூத்துக்குடியில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள சென்று இருந்தார். ஆனால் வெள்ளை ரவி சுட்டுக் கொன்ற போது, அவர் அங்கு இருந்ததாக கமிஷனர் லத்திகா சொல்லவில்லை. ஆனால் பத்திரிகைகளில் அவருக்கு காயம் இருந்ததாக செய்திகள் வந்தது. தூத்துக்குடியிலும் ஓசூரிலும் ஓரே நபர் எப்படி இருந்திருக்க முடியும். இது மெடல் பெறுவதற்காக போட்ட நாடகம் என்று ஜாங்கிட்டுக்கு எதிர் தரப்பினர் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஜான்கிட்டுக்கும் குமரனுக்கும் அவ்வளவாக ஆகாது. எனவே அவர் விரைவில் மாற்றப்படுவார். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருக்கும், ராதாகிருஷ்ணன் கூடுதல் கமிஷனராக பதவி ஏற்க கூடும் என்றும் சொல்லப் படுகிறது.
சென்னை போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன்சென்னை, ஆக. 2:சென்னை நகர போலீஸ் கமிஷனராக ஜி. நாஞ்சில் குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ். மாலதி பிறப்பித்துள்ளார்.உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக பதவி வகிக்கும் ஜி. நாஞ்சில் குமரன், தற்போது சென்னை நகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை நகர கமிஷனராக இருந்து வந்த லத்திகா சரண் தற்போது கூடுதல் டிஜிபியாக நிர்வாகத் துறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அதேபோல நிர்வாகத் துறையில் ஏடிஜிபியாக பணியாற்றி வந்த கே. ராமானுஜம் தற்போது தமிழ்நாடு 3-வது போலீஸ் கமிஷனின் முழுநேர உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நிர்வாகத் துறையுடன் 3-வது போலீஸ் கமிஷனின் உறுப்பினர் செயலர் பதவியை கூடுதல் பொறுப்பாக இவர் கவனித்து வந்தார். தற்போதைய உத்தரவின்படி, இவர் முழுநேர உறுப்பினர் செயலராக பணியாற்றுவார்.—————————————————————————————————–
சென்னை கமிஷனர் இன்று பதவி ஏற்றார்: பதவி சவாலானது- நாஞ்சில் குமரன் பேட்டி
சென்னை, ஆக. 2-
சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள நாஞ்சில் குமரன் இன்று பொறுப்பேற்று கொண்டார். அவரிடம் மாறுதலாகி செல்லும் கமிஷனர் லத்திகாசரண் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
புதிய கமிஷனராக பொறுப்பேற்றதும் நாஞ்சில் குமரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் கூறியதாவது:-
தமிழக அரசும், முதல்- அமைச்சரும் என் மீது நம்பிக்கை வைத்து மிகப்பெரிய பொறுப்பான கமிஷனர் பதவியை வழங்கி உள்ளனர். சவாலான இந்த பணியை பொதுமக்கள் திருப்திபடும் அளவுக்கு உழைத்து நிறைவேற்றுவேன்.
பொதுமக்களுக்கு சேவை செய்ய கிடைத்த நல்ல வாய்ப்பாக கருகிறேன். சட்டத்துக்கு உட்பட்டு குற்றங்களை தடுக்க நிலுவையில் உள்ள வழக்கு களை விரைந்து முடிக்க தீவிர கவனம் செலுத்துவேன்.
குறிப்பாக சென்னை மாநகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சிக்கி திணறும் சூழ்நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய அனைத்து முயற்சி களையும் எடுப்பேன். சென்னையில் குற்றங்களை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த தனிப்படைகள் விரிவாக்கப்பட்டு வலுவூட்டப்படும்.
கேள்வி: போலீஸ் நிலையங்களில் அரசியல் குறுக்கீடு அதிகமாக உள்ளதே?
பதில்: இது பொதுப்படையான கேள்வி. போலீஸ் நிலையங்களுக்கு அனைத்து தரப்பினரும் வருவார்கள். இதில் குறுக்கீடு என்பது பணிகள் செய்யாதே என்று தடுப்பதாகும். ஆனால் போலீஸ் நிலையத்துக்கு வந்து பொதுமக்களுக்கு பயன் தரும் விஷயங்களை செய்யுங்கள் என்று சொல்வது வேறு. பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அனைவரும் தேடி வரும் இடமாகத்தான் போலீஸ் நிலையங்கள் இருக்கிறது.
கேள்வி: லஞ்ச ஊழல் அதிகரித்துள்ளதே?
பதில்: லஞ்சம் உலகளாவியது. தனிப்பட்ட முறையில் யார் மீது புகார் செய்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி: போலீஸ் பொது மக்கள் நல்லுறவு எப்படி உள்ளது?
பதில்: ரவுடிகள் அட்டகாசம் இல்லை. பொதுமக்கள் இரவு நேரங்களிலும் பயமில்லாமல் நடமாடும் சூழ்நிலை நிலவுகிறது. பொதுமக்களுடனான உறவுக்கு இதுவே சாட்சி.
கேள்வி: மத்திய குற்றப்பிரிவு போலீசில் நில மோசடி வழக்குகள் ஏராளமாக நிலுவையில் உள்ளது. நில மோசடியை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
பதில்: இந்த விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் ஒரு நிருபர் எல்லோரும் கமிஷனர் பதவிக்கு வர ஆசைப்படுவார்கள். இந்த பதவிக்கு நீங்கள் வந்துள்ளீர்கள். என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த நாஞ்சில்குமரன், போலீஸ் வேலையை செய்ய போகிறேன் என்றார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுனில்குமார், இணைகமிஷனர்கள் ரவி, பாலசுப்பிரமணியம், துரைராஜ், சந்தீப்ராய் ரத்தோர், உளவுபிரிவு போலீஸ் துணை கமிஷனர் நல்லசிவம், உதவி கமிஷனர்கள் இளங்கோ, பன்னீர் செல்வம் மற்றும் துணை கமிஷனர்கள் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்கள்.—
———————————————————————————————-
புதிய டிஜிபி ராஜேந்திரன்
சென்னை, ஆக. 30: தமிழக காவல்துறை தலைவராக பி.ராஜேந்திரன் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை, தமிழக உள்துறை செயலர் எஸ்.மாலதி புதன்கிழமை பிறப்பித்துள்ளார்.
தமிழக காவல்துறை தலைவராக உள்ள டி.முகர்ஜியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் (யுஎஸ்ஆர்பி) தலைவராக உள்ள பி.ராஜேந்திரன், புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்கிறார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பயோ-டேட்டா: 7.12.1947-ல் திருநெல்வேலியில் பிறந்த பி.ராஜேந்திரன், இந்தியக் காவல் பணியில் (ஐபிஎஸ்) 1973-ம் ஆண்டு தமிழக பிரிவில் தேர்ச்சி பெற்றார். இவர் ஏஎஸ்பியாக வேலூரில் பணிக்குச் சேர்ந்தார். பின்னர் ராமநாதபுரம் எஸ்பியாகப் பணியாற்றியுள்ளார். அதைத்தொடர்ந்து கியூ பிரிவு எஸ்பியாகவும் இருந்துள்ளார்.
சிவில் சப்ளை பிரிவில் டிஐஜி ஆகவும், கடலோரப் பாதுகாப்பு பிரிவு டிஐஜி ஆகவும் இருந்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிரிவில் ஐ.ஜி.யாகப் பணிபுரிந்துள்ளார். கோவை நகர கமிஷனராகவும், தலைமை அலுவலகத்தில் கூடுதல் டிஜிபியாகவும் (நிர்வாகம்) பணிபுரிந்துள்ளார்.