Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘J Jeyalalitha’ Category

J Jayalalitha vs MK Karunanidhi: ADMK & DMK Politics in Tamil Nadu

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 5, 2007


பீதிïட்டும் குற்றங்களை செய்து வருகிறார்
ஜெயலலிதா மீது வழக்கு
கருணாநிதி எச்சரிக்கை


சென்னை, செப்.5-

`கிரிமினல் பிரிவுகளில் வழக்கை சந்திக்க வேண்டிய பீதிïட்டும் குற்றங்களை ஜெயலலிதா செய்து கொண்டே இருக்கிறார்’ என்று முதல்-அமைச்சர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காழ்ப்புணர்ச்சி

கேள்வி:- ஜெயலலிதா அன்றாடம் வெளியிடும் அறிக்கைகளை கையெழுத்திட்டுத் தான் ஏடுகளுக்கு அனுப்புகிறார். அதிலிருந்து அவற்றுக்கு அவர் பொறுப்பேற்றுக் கொள்கிறார் என்றுதான் அர்த்தம். திருமுட்டம் பேரூராட்சியில் மருத்துவமனை ஒன்று கட்ட அவர் ஆட்சிக் காலத்தில் 2004-ம் ஆண்டு பணம் ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் அது கட்டி முடிக்கப்பட்ட பிறகும் காழ்ப்புணர்ச்சி காரணமாக தற்போது திறக்கப்படாமல் உள்ளது என்றும் தெரிவித்து போராட்டத்தை அறிவித்திருக்கிறாரே?

பதில்:- அந்தப் பேரூராட்சியில் கட்டப்பட்ட மருத்துவமனைக்கு 2004-ம் ஆண்டே நிதி ஒதுக்கப்பட்டதாக ஜெயலலிதா அறிக்கையில் கூறிக் கொள்கிறார். அதற்குப் பிறகு இரண்டரை ஆண்டுக் காலம் அவர்தான் ஆட்சியிலே இருந்திருக்கிறார். அந்த மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீடு ஒன்றும் கோடிக் கணக்கிலே அல்ல. லட்சக்கணக்கிலே நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட வேண்டியதுதான். எனவே அவரது ஆட்சியிலேயே அதனைக் கட்டி முடித்து திறந்திருக்கலாம் அல்லவா? அதுமாத்திரமல்ல, அறிக்கை விடுவதற்கு முன்பு, முன்னாள் முதல்-அமைச்சராக இருந்தவர், இப்போதும் சில நாட்களில் பதவிக்கு வந்துவிடுவேன் என்று மக்களையெல்லாம் பயமுறுத்திக் கொண்டிருப்பவர் அந்தச் செய்தி உண்மைதானா என்று தெரிந்து கொண்டுவிட வேண்டாமா? திருமுட்டத்தில் உள்ள மருத்துவமனையை கடந்த 30-ந் தேதி கடலூரில் நடைபெற்ற விழாவில் நானே திறந்து வைத்த உண்மையைக் கூடத் தெரிந்து கொள்ளாமல், காழ்ப்புணர்ச்சி என்றெல்லாம் ஜெயலலிதா கதை அளந்திருப்பது எப்படிப்பட்ட உண்மைக்கு மாறான செய்தி என்பதை மக்களே புரிந்து கொள்வார்கள்.

அ.தி.மு.க.வினரே சிரிக்கிறார்கள்

கேள்வி:- திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் விநியோகம் சரியில்லை என்று கூறி அதற்காகவும் ஒரு போராட்டம் நடத்தும்படி ஜெயலலிதா விடுத்த அறிக்கை பற்றி?

பதில்:- திண்டிவனத்திலே உள்ள அ.தி.மு.க.வினரில் சிலரே அதிகாரிகளிடம் கூறும்போது இதைப்பற்றி சிரித்து விமர்சனம் செய்தார்களாம். ஜெயலலிதாவின் அறிக்கையைப் பார்த்து அந்த நகராட்சியின் ஆணையாளரைத் தொடர்பு கொண்டு விசாரித்தால், அந்த ஆணையாளரே 1.9.2007 தேதியிட்டு கடிதம் எழுதியிருக்கின்றார். அந்தக் கடிதத்தில் “திண்டிவனம் நகரின் குடிநீர் விநியோகம் தென்பெண்ணை ஆறு கண்ரக்கோட்டை மற்றும் புளிச்சப்பள்ளம் ஆகியவைகளை நீர் ஆதாரமாக கொண்டதாகும். நகரில் தற்போதைய மக்கள் தொகை 67 ஆயிரத்து 737 ஆகும். தினசரி 35 லட்சம் லிட்டர் குடிநீர் ஒருநாள் விட்டு, ஒரு நாள் விநியோகம் செய்யப்படுகிறது. தற்பொழுது நீர் ஆதாரத்தை பொறுத்தமட்டில் அதிகபட்சமாகவே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது குடிநீர் விநியோகத்தில் முந்தைய நிலையைவிட நகராட்சியால் முழு கவனம் செலுத்தப்பட்டு, பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் சீராக செய்யப்படுகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க. வைச் சேர்ந்த ஒரு சிலர் தேவையற்ற போராட்டத்தை தற்பொழுது அறிவித்துள்ளனர்” என்று எழுதியிருப்பதில் இருந்தே, இந்த அறிக்கை பற்றிய உண்மையையும் புரிந்து கொள்ளலாம்.

பயிர்க்கடன்

கேள்வி:- தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படவில்லை என்று கூறி, அதற்காக போராட்டம் நடத்தச் சொல்லி ஜெயலலிதா கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ஒரு அறிக்கை விடுத்துள்ளாரே?

பதில்:- கடந்த 17.8.2007 அன்று இதே காரணத்தைக் கூறி, நாகப்பட்டினத்தில் போராட்டம் நடத்துமாறு கட்சிக்காரர்களுக்கு ஜெயலலிதா கட்டளையிட்டு ஒரு அறிக்கை விடுத்தார். அதற்கு விவரமாகவும், தெளிவாகவும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரும், கூட்டுறவுத்துறை பொறுப்பை வகிப்பவருமான கோ.சி.மணி புள்ளிவிவரங்களோடு பதில் அளித்தார். ஆனால் ஜெயலலிதா அறிக்கைவிட்டதோடு தன் பணி முடிந்துவிட்டதாகக் கருதிக் கொண்டு, அந்தப் பதிலையே படிக்காமல், தற்போது தஞ்சை மாவட்டத்திலே அதே காரணத்திற்காகப் போராட்டம் நடத்துமாறு அறிக்கை விடுத்துள்ளார்.

7 ஆயிரம் கோடி கடன் ரத்து

அவர் தற்போது விடுத்துள்ள அறிக்கையிலே விவசாயிகளுக்கு இந்த அரசு எதுவும் நன்மைகளைச் செய்யவில்லை என்றும், பயிர்க்கடன் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு தி.மு.க. ஆட்சியில் எதுவும் செய்யப்படவில்லையா என்பதை விவசாயிகளே நன்கறிவார்கள். ஓரளவிற்கு பத்திரிகை படிப்பவர்கள் அனைவருக்கும் அது தெரியும். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட அதே நாளில் விவசாயிகள் வாங்கியிருந்த சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய்க் கடனை ரத்து செய்து ஆணையிட்டது. அ.தி.மு.க.வை சேர்ந்த பல விவசாயிகளே அந்தச் சலுகையை அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பாக அவ்வாறு விவசாயிகளின் கடனை ரத்து செய்ய இயலாது என்று அறிக்கை விடுத்த ஜெயலலிதா, தி.மு.க. அரசின் இந்தச் சலுகைக்குப் பிறகு அதைப்பற்றி வாயைத் திறக்கவில்லை. மாறாக ஓராண்டு கழித்து இப்போது பயிர்க்கடன் வழங்க வில்லை என்கிறார். அதுவாவது உண்மையா?

ஜெயலலிதா போராட்டம்

தி.மு.க. ஐந்தாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற 2006-07-ம் ஆண்டில் மட்டும், தமிழ்நாடு முழுவதிலும், கூட்டுறவு வங்கிகள், 6 லட்சத்து 31 ஆயிரத்து 283 விவசாயிகளுக்கு 1,251 கோடி ரூபாயை பயிர்க் கடனாக வழங்கியுள்ளது.

மீண்டும் இந்த ஆண்டு 2007-08-க்கு 1,360 கோடி ரூபாய் பயிர்க்கடன்கள் புதிதாக வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் காலாண்டுக்காக, பங்குத் தொகை உதவியாக 188 கோடி ரூபாயும், வட்டியாக 58 கோடி ரூபாயும் அரசு வழங்கியுள்ளது.

இதுவரை இந்த ஆண்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 791 விவசாயிகளுக்கு 255 கோடி ரூபாய் பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா கூட்டுறவு பயிர்க்கடனே வழங்கப்பட வில்லை என்றும், விவசாயிகள் ஆலாய்ப் பறக்கிறார்கள் என்றும் அறிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதா போராட்டம் அறிவித்துள்ள தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மட்டும் 2005-06-ம் ஆண்டு அவரது ஆட்சியில் அளித்த கூட்டுறவுக் கடன் 66 கோடி ரூபாய் மட்டும்தான்.

2006-07-ம் ஆண்டுக்கு இந்த மூன்று மாவட்டங்களுக்கு மட்டும் தி.மு.க. ஆட்சியில் 167 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதாவுக்கு விவசாயிகளைப் பற்றி அறிக்கைவிட எந்தத் தகுதியும் கிடையாது என்பதை இந்தப் புள்ளி விவரங்களே கூறும்.

தாமதம் இல்லை

கேள்வி:- ஜெயலலிதா விவசாயிகளுக்காக விடுத்த அறிக்கையில் விதை நெல் மற்றும் உரம் போன்றவை வழங்கப்படவில்லை என்கிறாரே?

பதில்:- நடப்பாண்டிற்கு இதுவரை தமிழகம் முழுவதிலும் 15 ஆயிரத்து 116 மெட்ரிக் டன் விதை நெல் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 33 ஆயிரத்து 607 மெட்ரிக் டன் விதை நெல் தமிழகம் முழுவதும் இருப்பில் உள்ளது. காவேரி டெல்டா பாசனப் பகுதியில் சம்பா மற்றும் தாளடி பருவத்திற்காக இதுவரை 1 லட்சத்து 11 ஆயிரம் மெட்ரிக் டன் உரம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. அதோடு, 58 ஆயிரம் மெட்ரிக் டன் உரம் கையிருப்பில் உள்ளது. அதனால் உரப் பற்றாக்குறை என்பதே இல்லை. விவசாயிகளுக்கு தேவையான உரமும், தரமான விதை நெல்லும் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. எந்த விவசாயிக்கும் விதை நெல் வழங்குவதிலும் உரம் வழங்குவதிலும் தடையோ, காலதாமதமோ இல்லை என்பதை விவசாயிகள் அனைவரும் நன்கறிவார்கள்.

பயங்கரவாத எச்சரிக்கை

கேள்வி:- இவ்வாறு ஜெயலலிதா வெளியிடும் அன்றாட அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- “தமிழக காவல் துறை தலைவரை அணுகி, மத்திய உளவுப் பிரிவிடம் இருந்து பயங்கரவாத எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டால் அந்த அதிகாரி, “நான் பொறுப்புக்கு வந்து 3 நாட்கள்தான் ஆகிறது. இது போன்ற தகவல்கள் என் கவனத்துக்கு வரவில்லை” என்றும் பதிலளித்திருக்கிறார். இவர் இதுவரை காவல் துறையில்தானே இருந்தார்? தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் வரும் தகவல்களைக் கண்டு மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள். உன்னிப்பாக இருக்கிறார்கள். கவனிக்கிறார்கள். ஆனால், காவல் துறைத் தலைவரோ விழிப்பாக இல்லை. முதல்-அமைச்சர் கருணாநிதியும் விழிப்பாக இல்லை. அப்படி என்றால் பொதுமக்கள் கதி என்ன? எண்ணிப் பார்க்கையில் அது பயங்கரமாக இருக்கிறது” என்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை ஒரு பத்திரிகையில் வந்துள்ளது.

ஆனால் அதற்கு நேர்மாறாக மற்றொரு பத்திரிகையில் தீவிரவாதிகள் குறித்து டி.ஜி.பி. ராஜேந்திரன் திங்கட்கிழமை கூறியதாவது:-

“சென்னை போன்ற பெருநகரங்களில் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இரவில் வாகனங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் ரோந்து செல்லவும், சோதனைச் சாவடிகளை அமைத்துக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி விழா உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் மக்கள் அதிகமாகக் கூடும் வழிபாட்டுத் தலங்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். தமிழகத்தில் எந்த இடத்திலும் தீவிரவாதிகள் ஊடுருவல் ஏதும் இல்லை. இதுகுறித்து எந்த விதமான தகவல் கிடைத்தாலும் போலீசார் மிகவும் முன்னுரிமை அளித்து தீவிரமாக செயல்படுவர். போலீசாரின் பட்டியலில் உள்ள தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் நடமாட்டத்தையும் போலீசார் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்” என்று வந்துள்ளது.

சட்டத்தை மீறும் செயல்

காவல் துறை தலைவர் ராஜேந்திரன் பற்றிய இரண்டு செய்திகளும் -இரண்டு பத்திரிகைகளில் இப்படி ஒன்றுக்கொன்று முரண்பாடாக வருவதற்குக் காரணம் என்ன?

இன்னொரு அபாண்டமானதும்

இட்டுக்கட்டியதுமான செய்தி!

“உளவுப் பிரிவு, உண்மையிலேயே செயல்பட்டு, அந்தத் தகவல் அறிக்கைகளாக வெளிவரும்போது, அதனை முதல்-அமைச்சருக்கு அளிக்கத் தேவையில்லை என்று உள்ளாட்சியும், உயர்கல்வியும் மற்றும் சில காகஸ் கும்பலும் மறித்து பிடுங்கி கிடப்பில் போட்டு விடுவதாக எனக்கு தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன” என்பதாகும்.

இவ்வாறு கிரிமினல் பிரிவுகளில் வழக்கைச் சந்திக்க வேண்டிய, பீதிïட்டும் குற்றங்களை ஜெயலலிதா செய்து கொண்டே இருக்கிறார்- இப்படிச் செய்திகள் பரப்புவதும்; அவற்றை வெளியிடுவதும்; சட்டத்தை அலட்சியப்படுத்தி, அவற்றை மீறும் செயல்களாகும்.

ஆட்சியில் இல்லாத ஆத்திரம்

கேள்வி:- “ஐதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து, சென்னையில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் குண்டு வெடிப்பினை நிகழ்த்த 3 அல்லது 4 பயங்கரக் குழுக்கள் சுற்றிக் கொண்டிருப்பதாகவும், எந்த நேரத்திலும் குண்டுகள் வெடிக்கும் என்றும், அந்தக் குழுக்கள் தங்கள் மேலிடத்தின் உத்தரவுக்கு காத்திருப்பதாகவும் தகவல்கள் வந்து மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கருணாநிதி இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” என்று ஜெயலலிதா ஓர் அறிக்கையில் கேட்டு – அந்த அறிக்கை பத்திரிகைகளில் எடுப்பாக வெளியிடப்பட்டுள்ளதே?

பதில்:- யானையின் மீது உட்கார்ந்து கொண்டு “ஈ” நினைத்துக் கொள்ளுமாம், அந்த யானையை அந்த ஈயே ஓட்டிச் செல்வதாக! அப்படித்தான் ஜெயலலிதாவும் நினைத்துக் கொண்டு, எல்லாவற்றையும் விமர்சிக்கிறார்; எல்லாவற்றிலும் தலையிட்டு “குட்டு” பெறுகிறார்; பாவம்-ஆட்சியில் இல்லையே என்ற அவஸ்தை! ஆதங்கம்! ஆத்திரம் -அதனால்தான் அன்றாடம் அறிக்கை!

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

Posted in ADMK, DMK, J, J Jayalalitha, J Jeyalalitha, Jaya, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Politics, Tamil Nadu, TamilNadu | Leave a Comment »

Redistricting Tamil Nadu – MLA, MP seat reassignments and Modifications to the Loksabha & Assembly

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 6, 2007

அ.தி.மு.க.- தி.மு.க. கோரிக்கை நிராகரிக்கப் பட்டு விருகம்பாக்கம் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர், ஆவடி, மாதவரம், பல்லாவரம் தொகுதிகளும் வருகின்றன. தமிழ்நாட்டில் பாராளுமன்றத் தொகுதிகளை பிரித்தது போல் சட்டமன்றத் தொகுதிகளும் பல பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் சேரன்மாதேவி, சாத்தான்குளம், திருவல்லிக்கேணி, ஆலந்தூர் தொகுதி பெயர் நீக்கப்பட்டு வேறு தொகுதியில் சேர்க்கப்பட்டு விட்டது.

சேரன்மாதேவி தொகுதியை பிரித்து அதில் உள்ள பாப்பாக்குடி (முக் கூடல்) கடையம் பஞ்சாயத்து யூனியன் பகுதிகள் ஆலங்குளம் தொகுதியிலும் சேரன்மாதேவி யூனியன் அம்பாசமுத்திரம் தொகுதியில் சேர்க்கப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டின் மிகப் பெரிய தொகுதியான வில்லிவாக்கம் தொகுதி 3 ஆக பிரிக்கப்பட்டு, ஆவடி, அம்பத்தூர், விருகம்பாக்கம் தொகுதியாக உருவாக்கப்பட்டு உள்ளது.

வில்லிவாக்கம் தொகுதியை பிரிக்கும் போது கே.கே.நகர் பெயரில் ஒரு தொகுதி உருவாக்க வேண்டும் என்று தி.மு.க. பிரதிநிதிகள் வலி யுறுத்தி இருந்தனர்.

எம்.ஜி.ஆர்.நகர் பெயரில் ஒரு தொகுதியை உரு வாக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பிரதிநிதிகள் தேர்தல் கமிஷனில் வலியுறுத்தி இருந்தனர். ஆனால் 2 கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு விருகம்பாக்கம் பெயரில் தொகுதி உருவாக்கப்பட்டு விட்டது.

வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் இது வரை ராயபுரம், துறை முகம், ஆர்.கே.நகர், பெரம்பூர், திருவொற்றியூர், வில்லி வாக்கம் ஆகிய தொகுதிகள் இருந்தன. இதில் தற்போது வில்லிவாக்கம், துறைமுகம் தொகுதியை மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதியில், சேர்த்து உள்ளனர். அதற்கு பதிலாக வட சென்னையில் மாதவரம், பூங்காநகர் (தனி) தொகுதிகளை இணைத்துள்ளனர்.

தென்சென்னை பாராளுமன்றத் தொகுதியில் தி.நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம் ஆகிய தொகுதிகள் இருந்தன. தற்போது இதில் ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம், வேளச்சேரி, சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர் ஆகிய தொகுதிகள் வருமாறு பிரித்துள்ளனர்.

மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதியில் ஏற்கனவே பூங்கா நகர், புரசைவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், சேப்பாக்கம் ஆகிய தொகுதிகள் இருந்தன. இதை தற்போது மாற்றி புரசைவாக்கம், வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம், அண்ணா நகர் தொகுதிகள் இடம் பெறுமாறு செய்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதியில் மதுரவாயல், சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும் புதூர் (தனி), பல்லாவரம், தாம்பரம் சட்டசபை தொகுதி களும், திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதியில் ஆவடி, அம்பத்தூர், திருவள்ளூர், கும்மிடிப் பூண்டி, பொன்னேரி, திருவாலங்காடு, தொகுதிகளும் சேருகின்றன.

சென்னையை பொறுத்தவரை, திருவல்லிக்கேணி, ஆலந்தூர் பெயரில் தொகுதி கள் இனி இருக்காது.

மாலைமலர்


மக்கள் தொகை அடிப் படையில் நாடு முழுவதும் பாராளுமன்ற, சட்டசபை தொகுதிகளை மாற்றியமைக்கும் பணி கடந்த 1 வருடமாக நடந்தது. தேர்தல் கமிஷன் நியமித்துள்ள தொகுதி சீரமைப்பு ஆணையம் இதற்கான பணிகளை மேற்கொண்டது.தமிழ்நாட்டை பொறுத்த வரையில் 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை எண்ணிக்கை 6 கோடியே 24 லட்சத்து 5 ஆயி ரத்து 679 பேர் உள்ளனர். ஒரு தொகுதிக்கு 2 லட்சத்து 66 ஆயிரத்து 691பேர் என்ற அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகள் மற்றும் 39 பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்ற மும் இல்லை.

மாற்றாக உருவாகும் எம்.பி. தொகுதி களின் பெயர்களும், அதில் அடங்கி உள்ள எம்.எல்.ஏ. தொகுதிகளும் வருமாறு:

1. காஞ்சீபுரம் (தனி)
செங்கல்பட்டு, திருப் போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திர மேரூர், காஞ்சீபுரம்.

2. திருவண்ணாமலை
ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம் (பழங்குடி தொகுதி).

3. திருவள்ளூர் (தனி)
கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவாலங்காடு (தனி), திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர்.

4. ஆரணி
போளூர், ஆரணி, செய் யாறு, வந்தவாசி (தனி), செஞ்சி, மயிலம்.

5. விழுப்புரம் (தனி)
திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, முகையூர், ரிஷிவந்தியம்.

6. கள்ளக்குறிச்சி (தனி)
சின்னசேலம், கள்ளக்குறிச்சி (தனி) கங்காவள்ளி (தனி), ஆத்தூர், வாழப்பாடி (தனி), திட்டக்குடி (தனி).

7. நாமக்கல்
வீரபாண்டி, ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி- பழங்குடி), நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு.

8. ஈரோடு
குமாரபாளையம், ஈரோடு (கிழக்கு), ஈரோடு (மேற்கு), மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), காங்கேயம்.

9. தேனி
சமயநல்லூர் (தனி), உசி லம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரிய குளம் (தனி), போடி நாயக்கனூர், கம்பம்.

10. தூத்துக்குடி
விளாத்திக்குளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி.

11. கன்னியாகுமரி
கன்னியாகுமரி, நாகர் கோவில், குளச்சல், திருவட் டாறு, விளவங்கோடு, கிள்ளியூர்.

நீக்கப்பட்ட பெயர்
11 தொகுதி புதிய பெயர்களு டன் உருவாக்கப்பட்டுள்ளதால் நீக்கப்பட்ட தொகுதி பெயர்கள் வருமாறு:

1. செங்கல்பட்டு
2. திருப்பத்தூர்
3. வந்தவாசி
4. திண்டிவனம்
5. ராசிபுரம்
6. திருச்செங்கோடு
7. பழனி
8. பெரியகுளம்
9. மயிலாடுதுறை
10. திருச்செந்தூர்
11. நாகர்கோவில்

மாலைமலர்


Posted in ADMK, Assembly, Chennai, DMK, J Jayalalitha, J Jeyalalitha, Jayalalitha, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KK, Lok Saba, Lok Sabha, LokSaba, LokSabha, Madras, MLA, Modifications, MP, Polls, reassignments, redistricting, Tamil Nadu, TN | Leave a Comment »

J Jayalalitha’s power abuse over judiciary during her executive rule

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 7, 2007

தனது அரசை கண்டித்ததால் நீதிபதி வீட்டுக்கு தண்ணீர் வினியோகத்தை நிறுத்தியவர் ஜெயலலிதா: கருணாநிதி அறிக்கை

சென்னை, பிப்.7-

தன்னுடைய அரசை கண்டித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டுக்கு தண்ணீர் வினியோகத்தை நிறுத்தியவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளயிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நீதித் துறையை கேவலப்படுத்தி விட்டதாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு நீண்ட அறிக்கையினை வெளியிட்டுள்ளார். இவர் ஆட்சி நடத்திய காலத்தில் நீதித்துறையும் அரசு நிர்வாகமும் ஒற்றுமையாக நடந்து கொண்டதைப் போலவும், நீதிபதிகளையும், நீதித்துறையையும் இவர் போற்றிப் பாராட்டி வந்ததை போலவும் தற்போது அறிக்கை விடும் ஜெயலலிதா, அப்போது நீதிமன்றங்களை எந்த அளவுக்கு இழிவாக மதித்து நடந்தார் என்பதற்கு பல உதாரணங்களை நாம் கூறிட முடியும்.

நீதிபதி ஒருவர் தனது ஆட்சியைப் பற்றி தீர்ப்பிலே கண்டனம் தெரிவித்தார் என்ற காரணத்துக்காக நீதிபதியின் இல்லத்துக்கு செல்லும் தண்ணீர் விநியோகத்தையே தடை செய்யச்சொன்னவர் தான் ஜெயலலிதா.

உச்ச நீதிமன்றத்திலே தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு நீதிபதி அப்போது சென்னை உயர்நீதி மன்றத்திலே பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் மீதுள்ள வெறுப்பினைக் காட்டுவதற்காக, அந்த நீதிபதியின் மருமகன் வீட்டிலே காவல் துறையின் மூலமாக “கஞ்சா” வைத்துப் பிடித்து வழக்கு போடச் செய்தவர் தான் இந்த ஜெயலலிதா.

இதையெல்லாம் விட இதோ மற்றொரு உச்ச கட்ட எடுத்துக்காட்டு. இதே ஜெயலலிதா, முதல்-அமைச்சராக இருந்து தமிழக சட்டப் பேரவையில் 4.2.2005 அன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு:-

“உயர் நீதிமன்றமானாலும், எந்த நீதி மன்றமானாலும், நீதிபதிகள் மனிதர்கள்தான். அவர்களுக்கும், விருப்பு வெறுப்புகள் உள்ளன. சில சமயங்களில் பேசக் கூடாதவற்றையெல்லாம் நீதிமன்றங்களில் பேசுகிறார்கள். இதையே நாங்கள் பேசினால் எங்கள் மீது “கன்டம்ப்ட் ஆப் கோர்ட்” (நீதிமன்ற அவமதிப்பு) வழக்கு போடுவார்கள். ஆனால், நீதிபதிகள் என்ன செய்தாலும், என்ன சொன்னாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்லது அதற்கு கண்டனம் தெரிவித்து நாங்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்தால், எங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும்.

ஆனால் நீதிபதிகள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆகவே, குறிப்பிட்ட இந்த நீதிபதி இதைச் சொன்னார், அதைச் சொன்னார் என்பதையெல்லாம் இந்த அவையில் தெரிவித்து, அதனால் அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை, நிலைமை சீரழிந்து விட்டது என்று கூறுவது அபத்தமான கூற்று” என்று அவர் பேசியிருந்தார்.

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, நீதிபதிகளை தாக்கி இழித்துரைத்தால், அது மட்டும் அவர் வாயிலிருந்து சிந்திய முத்துக்களா?

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Posted in abuse, ADMK, AIADMK, Court, ex-CM, executive, J Jayalalitha, J Jeyalalitha, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, JJ, Judge, Judiciary, Jury, Justice, Karunanidhi, Law, Order, Power | 3 Comments »

Cho S Ramasamy wants BJP, ADMK & Vijaykanth to form Alliance as Opposition

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

ரஜினிகாந்த் முன்னிலையில் பரபரப்பான பேச்சு; அ.தி.மு.க., பாரதீய ஜனதா, விஜயகாந்த் கூட்டணி: சோ வற்புறுத்தல்

சென்னை, ஜன. 16- சென்னையில் துக்ளக் பத் திரிகையின் 37ம் ஆண்டு விழா நடந்தது.

அத்வானி அவரது

  • மகள் பிரதிபா,
  • நடிகர் ரஜினிகாந்த்,
  • வெங்கையாநாயுடு,
  • நாகேஷ்,
  • மைத்ரேயன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் சோ பேசிய தாவது:-

தி.மு.க.ஆட்சி பொறுப்பேற்று சில மாதங்கள்தான் ஆகியுள்ளது. ஆட்சிக்கு வரும் முன்பே பலவாக் குறுதிகள் அளித்தனர். அவற்றை முழுமையாக செய்ய முடியாமல் பகுதி பகுதியாக செய்கிறார்கள்.

2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார் கருணாநிதி இப்போது உள்ளங்கை அளவேனும் தருவேன் என் கிறார்.

இலவச திட்டங்களால் பீகாரில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தரமுடியவில்லை. அதே போல் இங்கும் திவால் வருமோ என்று தெரிய வில்லை.

சென்னை மாநகராட்சி தேர்தலில் நடந்த முறைகேடு களை நீதிமன்றம் வன்மை யாக கண்டித்துள்ளது. 99வாக்குசாவடிகளுக்கு மறுவாக் குப்பதிவு நடத்த சொல்லி யுள்ளது. தேர்தலின்போது எதிர் கட்சிகள் சொன்ன குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளன.

முல்லைப்பெரியாறு பிரச்சினையில் மத்திய அரசை தமிழக அரசு நிர்பந்தம் செய்யவில்லை. இதை நான் சொன்னால் இருவரும் சேர்ந்து அணையில் குதிப்போமா என்று அழைப்பார் ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்று வது பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. நளினிக்கு கருணை காட் டப்பட்டால் மகிழ்ச்சிதான் என்று கருணாநிதி கூறியுள்ளார். அந்த தண்ட னையை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை என்று தைரியமாக கேட்ட ஒருவர் ஜெயலலிதாதான். அதுவும் வைகோ கூட்டணியில் இருக்கும் போது அவ்வாறு கேட்டு இருக்கிறார்.

தமிழக அரசுக்கு உடனடியாக எந்த ஆபத்தும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இந்த ஆட்சி போக வேண்டும் என்றும் நான் கூறவில்லை.

ஆனால் எதிர்காலத்தில் தி.மு.க. கூட்டணியில் தற்போ துள்ள கட்சிகள் என்ன முடிவு எடுக்கும் என்று சொல்ல முடியாது. காங்கிரசில் உள்ள த.மா.கா. பிரிவினர் அதி ருப்தியில் உள்ளனர். அது போல் பா.ம.க.வுக்கும் அதி ருப்தி உள்ளது. எனவே எதிர் காலத்தில் எதுவும் நடக் கலாம்.

எதிர் கட்சிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் மாந கராட்சி தேர்தல் முறைகேடு அதோடு முடிந்து விட்டதாக கருதக்கூடாது பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களிலும் பல தொகுதிகளில் அத்தகைய முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது.

எனவே தனக்குள்ள செல்வாக்கினால் தனித்து நின்று ஜெயிக்கலாம் என்று ஜெயலலிதா நினைக்க கூடாது. விஜயகாந்த் தனித்து நின்றால் டெபாசிட் போகும் அவர் மட்டும் ஜெயித்த மாதிரிதான் நிலைமை வரும் இதை இருகட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும் மத்தியில் காங்கிரசுக்கு மாற்றாக பாரதீய ஜனதா வருவது தான் நல்லது. 3-வது அணி வர வாய்ப்பு இல்லை.

எனவே பாரதீய ஜனதா, ஜெயலலிதா, விஜயகாந்த் ஒரே அணியில் இருப்பது நல்லது.

இவ்வாறு சோ பேசினார்.

Posted in ADMK, Advani, AIADMK, Alliance, Bharathiya Janatha Party, BJP, Cho, Cho S Ramasamy, Cong (I), Congress, DMDK, GK Vaasan, Indira Congress, J Jayalalitha, J Jeyalalitha, Opposition, Politics, Thuglak, Thuglaq, Thuklak, Thuklaq, TMC, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth | Leave a Comment »