Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Iraa Sezhiyan’ Category

Karunanidhi’s letter in Dinakaran – About the Protest Meet on Civic Elections Violence

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006

கருணாநிதி கடிதம்

சென்னை, நவ. 17: கொள்கை மறவர் குருதியை குழைத்துக் கட்டிய திமுக கோட்டையை இடித்திட ஒரு கும்பல் கிளம்பியுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.  முதல்வர் கருணாநிதி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

Posted in Chennai, Dinamalar, DMK, Ira Sezhiyan, Iraa Sezhiyan, Kalainjar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kavithai, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maalan, Meet, Meeting, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, Tamil Nadu, Tamil Poem, The Hindu | Leave a Comment »

Congress Krishnasamy – ‘How many seats did AIADMK win in Tamil Nadu Civic Polls?’

Posted by Snapjudge மேல் நவம்பர் 16, 2006

ஜனநாயக படுகொலை என்று விமர்சித்து உள்ளாட்சி தேர்தலை குறை சொல்வதா? காங்.தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஜனநயாக படுகொலை நிகழ்த்தப்பட்டதாக சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இரா.செழியன் உள்ளிட்ட சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள

  • 4 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள்,
  • 80 ஆயிரம் வாக்குசாவடிகள் மூலமாக
  • 4லட்சம் பேர் வேட்பாளர்களாக போட்டி யிட்டு
  • 1 லட்சத்து 31 ஆயிரம் பதவிகளுக்கு தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு பதவியில் அமர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள

  • 472 மாநகராட்சி வார்டுகளில் 62பேரும்,
  • 4 ஆயிரத்து 374 நகராட்சி வார்டுகளில் 1016பேரும்,
  • 8 ஆயிரத்து 780 வார்டுகளில் 1643 வார்டுகளிலும்,
  • 6589 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 1417 வார்டுகளிலும்
  • மாவட்ட ஊராட்சி வார்டுகளில் 157 வார்டுகளிலும் அ.தி.மு.க. கட்சியின் சார்பாக போட் டியிட்டவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட் டுள்ளார்கள்.

நடந்து முடிந்த தேர்தலிலே ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டதாக குரல் எழுப்புகிற இவர்களின் வாதத்தில் உண்மை இருக்குமேயானால் அ.தி. மு.க.வை சேர்ந்தவர்கள் இந்த அளவு எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருக்க முடியுமா என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு இருக் கிறது.

சென்னை மாநகராட் சிக்குட்பட்ட சில வார்டுகளில் கலவரங்கள் நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத் திற்கு கொண்டு செல்லப்பட்டு 17 வாக்குசாவடிகளில் மறு தேர்தல் நடத்தப்பட்டன. அதற்குப் பிறகு நீதிமன்ற ஆணைக்கேற்ப சென்னை மாநகராட்சியில் உள்ள 155 வார்டுகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த தேர்தல் முடிவு என் பது நீதிமன்ற ஆணையின் அடிப்படையில்தான் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டது என் பதை உணராமல் தேர்தல் முடிவுகளை கொச்சைப் படுத்துகிற வகையில் பேசு வது உயர்நீதிமன்றத்தை அவமதிக்கிற செயலாகும்.

மக்களை திசை திருப்ப உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்ற 3கோடி வாக்காளர் களை அவமதிக்கும் செயலாக வும் கருதப்படும்.

இவ்வாறு கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

Posted in ADMK, AIADMK, Chennai, Civic Polls, Condemn, Congress, Congress (I), Corporation, Era Sezhiyan, Indira Congress, Iraa Sezhiyan, Jayalalitha, Krishnasaamy, Krishnasamy, Krishnaswamy, local body elections, Madras, Meeting, Municipality, seats, Tamil Nadu | Leave a Comment »

Cho S Ramasamy, Maalan, Ira Sezhiyan – Meeting on Civic Polls : Today

Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006

உள்ளாட்சித் தேர்தல் குறித்த அலசல்: ஒத்திவைக்கப்பட்ட கூட்டம் இன்று நடைபெறும்

சென்னை, நவ. 15: உள்ளாட்சித் தேர்தல் குறித்து அலசும் பொதுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெறுகிறது.

  • ராஜாஜி பொது விவகார மையம்,
  • மக்கள் உரிமை மன்றம்

ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இக்கூட்டம் சில வாரங்களுக்கு முன் சென்னை மியூசிக் அகாதெமியில் நடைபெறுவதாக இருந்தது.

  • பத்திரிகையாளர் சோ,
  • நாடாளுமன்றவாதி இரா.செழியன்,
  • முன்னாள் போலீஸ் அதிகாரி வி.ஆர். லட்சுமிநாராயணன்,
  • ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ். ராகவன் ஆகியோர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது.

இக்கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. போலீசார் அனுமதி தரவில்லை என்று சில தரப்பினர் கூறினர்.

ஆனால், போலீஸ் அனுமதி மறுக்கவில்லை என்றும் அமைப்பாளர்களே கூட்டத்தை ரத்து செய்துவிட்டனர் என்றும் காவல் துறை மறுத்தது. எனினும், கூட்டம் நடத்த அனுமதி கோரி, மீண்டும் விண்ணப்பித்தால் அனுமதி அளிக்கப்படும் என்றும் காவல் துறை அறிவித்தது.

தற்போது அக்கூட்டம் மயிலாப்பூர் கிழக்கு மாட வீதியில் பாரதீய வித்யா பவன் அரங்கில் புதன்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் இரா.செழியன், பி.எஸ். ராகவன், சத்தியமூர்த்தி அறக்கட்டளைத் தலைமைக் காப்பாளர் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, பத்திரிகையாளர் மாலன் ஆகியோர் பேசுகிறார்கள்.

Posted in Ban, Bharatiya Vidya Bhawan, Cho S Ramasamy, Civic Polls, Era Sezhiyan, Fear, Iraa Sezhiyan, Lakshmi Krishnamurthy, Malan, Meeting, Police Order, PS Raghavan | Leave a Comment »

Iraa Sezhiyan – ‘Reason yet to be given for the Meeting Cancelation’

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006

காவல்துறையினரின் கடமை

இரா. செழியன்

ஒரு நாட்டில் மக்களுக்குத் தேவையான வசதிகள் பல முனைகளில் வேகமாகப் பரவியும் வளர்ந்தும் வரும் நிலையில், அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களும் பொறுப்புகளும் அதிகமாகின்றன. அவற்றை ஒட்டி நாட்டின் சட்டங்களும் வேலைத் திட்டங்களும் எண்ணற்ற அளவில் விரிவடைந்து வருகின்றன.

மக்களின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் செய்யப்பட வேண்டிய பணிகளை அரசாங்கம் பல துறைகளில் உள்ள அதிகாரிகள் மூலம், நிறைவேற்ற வேண்டிய நிலைமை இருக்கிறது. நிர்வாகம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை ஒவ்வொரு நிலைமைக்கும் ஏற்றவாறு, நுணுக்கமாகச் சட்டத்தில் எழுதி வைக்க முடியாது. அதற்காக பணிகளை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் படிப்படியாக ஒவ்வொரு துறையிலும் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு செய்யப்படுகிறது. நடைமுறையில் உண்டாகும் நிலைமைகளுக்கு ஏற்றவாறு உசிதப்படி அதிகாரிகள் செயல்படுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

உசிதப்படி செயல்பட வேண்டும் என்பதால், மனம் போன போக்கில் ஒவ்வோர் அதிகாரியும் தமக்குத் தரப்பட்ட அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. சட்டத்தை மீறி, சட்டத்தின் நோக்கத்தை மீறி, தேவையற்ற நியாயமற்ற முறையில் ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தை ஓர் அதிகாரி பயன்படுத்தினால், அது கொடுங்கோன்மை மிக்க எதேச்சாதிகாரமாக ஆகிவிடும்.

கலவரத்திலும் வன்முறையிலும் ஒரு கும்பல் ஈடுபட்டால், சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை போலீஸôர் எடுக்க வேண்டும் என்பதற்குச் சட்டம் விதிமுறைகளை வகுத்திருக்கிறது. எச்சரிக்கை, கண்ணீர்ப்புகை, தடியடி, துப்பாக்கிப் பிரயோகம் என்பவற்றில் ஒன்றை உசிதப்படி அதிகாரிகள் கையாள வேண்டும். அப்படி இல்லாமல், எடுத்ததெற்கெல்லாம் துப்பாக்கிப் பிரயோகத்தை போலீஸ் பயன்படுத்தக் கூடாது.

அக்டோபர் 24, 2006ஆம் நாளன்று ராஜாஜி பொதுவிவகார மையத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம், சென்னைப் போலீஸ் கமிஷனரிடமிருந்து அனுமதி வழங்கப்படாத காரணத்தால், ரத்து செய்யப்பட்டது.

பொதுவான அமைதி – ஒழுங்கு பாதிக்கப்படக்கூடிய நிலைமைகளில், இபிகோ 144 பிரிவின் கீழ் கட்டுப்பாடுகளை நிர்வாகம் விதிக்கிறது. கூட்டங்கள் – ஊர்வலங்கள் நடத்துவதை அனுமதிக்கவும் தடுப்பதற்குமான அதிகாரம் சென்னைப் போலீஸ் சட்டம் 1888-ன்கீழ் சென்னைப் போலீஸ் கமிஷனருக்குத் தரப்பட்டிருக்கிறது. அதன்படி கூட்டத்தை நடத்த முற்படுபவர் தருகிற மனுவை ஆராய்ந்து, கூட்டத்தை நடத்துவதற்கு சில கட்டுப்பாடுகளுடன் போலீஸ் ஆணையர் அனுமதி வழங்கலாம் அல்லது அனுமதி வழங்காமற் போகலாம்.

அனுமதி வழங்காத நிலைமையில் போலீஸ் கமிஷனர் கையாள வேண்டிய முறைகளை சட்டம் தெளிவுபடுத்தி இருக்கிறது. கூட்டம் நடத்துபவருக்கு வாய்ப்பு அளித்து, நேரிடையாக அவரோ, அவருடைய வழக்குரைஞரோ கூட்டம் நடத்துவதற்கு உள்ள தமது வாதங்களை முன்வைக்கலாம்.

அதன்பிறகும் அனுமதி வழங்க முடியாது என்று போலீஸ் கமிஷனர் முடிவு எடுத்தால் அனுமதி வழங்காததற்கான காரணங்களை எழுத்து மூலம் காட்டி, அனுமதி வழங்க மறுக்கும் உத்தரவைத் தரலாம்.

அக்டோபர் 24 கூட்டத்திற்கான மனுவின் மீது, தமது வாதங்களை முன்வைக்க ராஜாஜி மையத்தைச் சேர்ந்தவருக்கோ, அவரது வழக்குரைஞருக்கோ, வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதன்பிறகு, சட்டப்படி அனுமதி வழங்கப்படாததற்கான காரணத்தை எழுத்து மூலம் உத்தரவில் தந்திட, சென்னைப் போலீஸ் கமிஷனர் தவறிவிட்டார்.

ஒருவேளை எழுத்து மூலம் காரணங்களை எழுதி போலீஸ் கமிஷனர் தமது அலுவலகக் கோப்பில் வைத்திருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால், முடிவில் அனுமதி கேட்டவருக்கு கூட்டம் நடத்துவதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்று ஏற்பட்டுவிட்டது. சட்டத்தை மீறி கூட்டத்தை நடத்த விரும்பாமல், கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்பதற்கான அறிவிப்பை பொதுமக்களின் பார்வைக்கு கூட்ட அமைப்பாளர்கள் வைத்தார்கள்.

கூட்டம் நடத்துவதற்கான அனுமதி வரவில்லை என்றால், கூட்டம் நடத்துவதற்குத் தடை போடப்படவில்லை என்று எடுத்துக்கொண்டு கூட்டத்தை நடத்தியிருக்கலாமே என்று சிலர் நினைக்கலாம்; மௌனம் சம்மதம் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று கூறலாம்.

ஆனால் போலீஸ் சட்டத்தில் 6-வது விதிமுறையில் ஒரு கடும் எச்சரிக்கை இருக்கிறது. போலீஸ் அனுமதியைப் பெற வேண்டிய கட்டாயம் அமலில் இருக்கும்பொழுது, அனுமதி பெறாமல் யாராவது கூட்டம் நடத்தினால், ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாத அபராதம் அல்லது ஒரு மாதத்துக்கு உட்பட்ட சிறைவாசம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனைக்கான குற்றத்துக்கு அவர் ஆளாக நேரிடும் என்பதுதான்.

நிர்வாகத்தின் உள் அமைப்பில் எத்தகைய ஏற்பாடுகளைச் செய்து கொண்டாலும், சட்டத்தின்படி பொறுப்பை வகிப்பவர் சட்டத்தில் கூறப்பட்ட விதிமுறைகளின்படி அனுமதி வழங்குவதைக் கவனித்திருக்க வேண்டும். வெளிப்படையாக நமக்குத் தெரிவது, கூட்டம் நடத்துவதற்கான அனுமதி அன்று வரவில்லை, கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்பவைதாம்.

பொதுக்கூட்டம், தனிப்பட்ட ஓர் அமைப்புக்காகவோ, ஒரு சிலருக்காகவோ ஏற்பாடு செய்யப்பட்டதல்ல, பொதுமக்கள்பட்ட இன்னல்களை வைத்து, பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம். அந்தக் கூட்டத்துக்கு அனுமதி வழங்குவதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள பொதுமக்களுக்கு உரிமை இருக்கிறது. எத்தகைய காரணங்களுக்காக அந்தக் கூட்டத்துக்கு அனுமதி தரப்படவில்லை என்பது தெரிந்தால், வருங்காலத்தில் கூட்டம் நடத்துபவர்களுக்கு, அது உதவியாக இருக்கும்.

மேலும், ஓர் அதிகாரிக்கு ஒரு செயல்பாட்டுக்கான அதிகாரம் தரப்பட்டிருக்கிறது என்றால், அதனை நிறைவேற்றுவதற்கான பொறுப்பு அவரைச் சார்ந்ததாக ஆகும். எந்த அளவு அதிகாரி பொறுப்பை நிறைவேற்றினார் என்பதுடன் நிறைவேற்றுவதில் குறைபாடு ஏற்பட்டால், அதனை ஆராய்ந்து தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் மக்களாட்சி முறையில் ஏற்படுகிறது.

கூட்டம் நடைபெறுவதற்கான அனுமதியை வழங்குவதற்கும் வழங்காமற் போவதற்கும் காவல்துறை ஆணையருக்கு சில வழிமுறைகளை சட்டம் வகுத்திருக்கிறது. ஆனால் அந்த வழிமுறைகளின்படி சென்னை காவல்துறை நடந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணங்கள் எவை என்பதை பொதுமக்களுக்கு அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.

Posted in 144, atrocity, Ban, cancel, Cho, Cho Ramaswamy, Commissioner, Democracy, DMK, Era Sezhiyan, Iraa Sezhiyan, Karunanidhi, Meeting, MK, Police, POTA, TADA, Tamil, Tamil Nadu, Thuglaq, VR Lakshminarayanan | Leave a Comment »