Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘IPO’ Category

India to curb foreign funds deluge – Volatile stock market & Participatory note policy

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007

பாடாய்ப்படுத்தும் பங்குச்சந்தை!

பங்குச் சந்தை என்பது நாட்டின் தொழில், வர்த்தகத் துறைகளின் ஆரோக்கியத்தையும், மக்களுடைய வருமானம், சேமிப்பு, முதலீடு ஆகியவற்றின் வளத்தையும் ஒருசேர உணர்த்தும் உரைகல். ஆனால் சமீப காலமாக -அன்னிய நேரடி முதலீடு காரணமாக -பங்குச் சந்தையில் பங்கு பரிவர்த்தனை மதிப்பும், பங்குகளின் தனி மதிப்பும் மிக அதிகமாக உயர்ந்து வருகின்றன.

செவ்வாய்க்கிழமை 19,000 புள்ளிகளை எட்டிய குறியீட்டெண் புதன்கிழமை 20,000-ஐ எட்டிவிடும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 1,744 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. பங்கேற்புப் பத்திரத்தை “செபி’ என்கிற பங்குச் சந்தை கண்காணிப்பு -கட்டுப்பாட்டு அமைப்பு தடை செய்துவிடும் என்ற வதந்தி காரணமாக இப்படிக் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

வெளிநாடுகளிலிருந்துகொண்டு, தரகர்கள் மூலம் முதலீடு செய்கிறவர்கள் பயன்படுத்தும் புதுவகை அடையாள பங்குப் பத்திரமே, “பங்கேற்பு பத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. அவற்றைத் தடை செய்யும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதி அளித்த பிறகே சந்தையில் விற்பனை மீண்டும் உயர்ந்தது.

கடந்த வாரம்தான் பங்குச் சந்தையில் குறியீட்டெண் வேகவேகமாக உயர்ந்து வருவது குறித்து நிதி அமைச்சர் சிதம்பரம் வியப்பும் கவலையும் ஒருங்கே தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. “சிறிய முதலீட்டாளர்கள் இந்த நேரத்தில் அசட்டுத் துணிச்சலில் அதிகப் பணத்தை முதலீடு செய்து, கையைச் சுட்டுக்கொள்ள வேண்டாம்’ என்று உரிய நேரத்தில் அவர் எச்சரித்திருந்தார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவழியினரும், ஊக வணிகர்களும் தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய பணத்தை இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இதை வேண்டாம் என்று சொல்வது சரியான வணிக உத்தி இல்லை. இந்த முதலீடு இருவகைப்படும். வெளிநாடுகளில் உள்ள தனி முதலீட்டாளர்கள் நேரடியாக நமது பங்குகளை வாங்குவது ஒருவகை. வெளிநாடுகளைச் சேர்ந்த நிதி நிறுவனங்கள் நம்முடைய பங்குகளை வாங்குவது மற்றொரு வகை. இவ்விருவகையிலான நேரடி முதலீடுமே நமக்கு அவசியம்தான்.

இந்த முதலீட்டாளர்கள், லாபம் வரும் என்றால் முதலீடு செய்வார்கள். நஷ்டம் வரும் என்றால் முதலீட்டை விலக்கிக் கொள்வார்கள். இது பங்குச் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு நல்லதல்ல. எனவே இவ்வகை முதலீட்டாளர்களின் முதலீட்டில் 10% தொகையை, ஓராண்டுக்குத் திரும்ப எடுக்க முடியாமல் கட்டாய டெபாசிட்டாகப் பெற வேண்டும் என்று அரசுக்கு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னரும், பொருளாதார வல்லுநருமான எஸ்.எஸ். தாராபூர் ஆலோசனை கூறியிருக்கிறார். இதை அமல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.

போக்குவரத்து, சாலை வசதிகள், தகவல்தொடர்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சார உற்பத்தி போன்ற அடித்தளக் கட்டமைப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்கிறோம் என்று அரசு பலமுறை கூறி ஓய்ந்துவிட்டது. ஆனால் அத்தகைய முதலீட்டை ஏற்கும் நிறுவனங்களோ, பங்கு வெளியீடுகளோ, கடன் பத்திரங்களோ சந்தையில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

இப்படியொரு ஏற்பாட்டைத் தனியார் நிறுவனங்கள் செய்யாது; அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும். வங்கிகளில் தரப்படும் வட்டிவீதத்தைவிட கவர்ச்சிகரமான வருவாயை அளிப்பதாக அரசு உறுதி கூறினால் உள்நாட்டிலிருந்து மட்டும் அல்ல, வெளிநாடுகளிலிருந்தும் இந்தியர்கள் முதலீட்டைக் கொண்டுவந்து கொட்டுவார்கள். இனியாவது அரசு அத்தகையதொரு முயற்சியைத் தொடங்குமா?

Posted in ADR, Assets, Biz, Bonds, Brokers, BSE, Commerce, crash, DJIA, Economy, FII, Finance, fiscal, Foreign, Funds, GE, GM, Goldman Sachs, Govt, Index, Indices, Infy, Interest, International, investors, Invsetors, IPO, Loss, markets, Merryll Lunch, MF, MNC, Morgan Stanley, NRI, NSE, PE, PIO, Planning, Portfolio, Profit, Rates, ratio, Shares, Stocks, Traders, Trading, Wipro, World | Leave a Comment »

Divestment back on track, 4 public issues ahead

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

3 அரசு நிறுவன பங்கு வெளியீட்டின்மூலம் ரூ.1,500 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு

புது தில்லி, பிப். 9: தேசிய முதலீட்டு நிதி கணக்கில் (என்.ஐ.எஃப்.) பணம் ஏதும் இல்லாததால் 3 அரசுத்துறை நிறுவனங்களின் மதிப்பீட்டுக்கு ஏற்ப, புதிதாக பங்குகளை வெளியிட்டு ரூ.1,500 கோடியைத் திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு நிதியமைச்சர் ப.சிதம்பரம் இதை தில்லியில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

  • ஊரக மின்சார கார்ப்பரேஷன் (ஆர்.இ.சி.),
  • பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (பி.ஜி.சி.ஐ.எல்.),
  • தேசிய புனல் மின் உற்பத்தி கார்ப்பரேஷன் ஆகியவற்றின் பங்குகளை, அவற்றின் இன்றைய மதிப்பீட்டுக்கு ஏற்ப விற்று மொத்தமாக ரூ.2,400 கோடி திரட்ட முடியும் என்று தெரிகிறது.

இதில் ரூ.1,500 கோடியை தேசிய முதலீட்டுக்கு நிதியத்துக்குத் திரட்ட அரசு முடிவு செய்திருக்கிறது.

அரசுத்துறை நிறுவனத்தின் இப்போதைய பங்குகளை விற்பதைப் போல அல்ல இது என்று நிதியமைச்சர் தெளிவுபடுத்தினார்.

அதாவது கைவசம் உள்ள பங்குகளை சந்தை மதிப்பில் விற்பது அல்ல என்றார். ஆனால் இன்னொரு வகையில் இது அரசு நிறுவனப் பங்குகளை விற்பதாகத்தான் அர்த்தம். ஏன் என்றால் இம் மூன்று அரசுத்துறை நிறுவனங்களின் 100 சதவீத பங்குகளும் அரசின் வசமே உள்ளன. புதிதாக பங்குகளை வெளியிட்டு அதை விற்பதன் மூலம் இந்த 100 சதவீத உரிமை குறைந்து 81.22%-ஆகவும் 86.36% ஆகவும் மாறிவிடும் என்று தெரிகிறது.

அரசுத்துறை நிறுவனப் பங்குகளை விற்கக்கூடாது, அரசு நிறுவனங்களைத் தனியார் மயமாக்கக்கூடாது என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதே சமயம் தேசிய முதலீட்டு நிதியில் பணம் ஏதும் இல்லாமல் இருப்பதும் சரியல்ல என்பதை அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். இந்த விற்பனைத் தொகை அந்த நிதியத்துக்குத்தான் செல்கிறது என்று விளக்கினார் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

பங்குகளை வெளியிடுவதற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Posted in BEML, Bharat Earth Movers Ltd, Business, Cabinet Committee on Economic Affairs, Capital, CCEA, Communist, CPI, CPI(M), Divestment, Equity, Finance, Finance minister, Government, government equity, Initial public offerings, IPO, Left, Market, Marxist, Marxist Communist, National Hydroelectric Power Corporation, National Investment Fund, NHPC, NIF, P Chidambaram, PFC, PGCIL, Power Finance Corporation, PowerGrid Corporation of India Ltd, public issues, public sector, public sector enterprises, REC, Rural Electrification Corp, Shares, Stock market, VC | Leave a Comment »