Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Introduction’ Category

‘Kettavan movie is the story of Simbu-Nayanthara affair’ – Heroine Leka

Posted by Snapjudge மேல் ஜூலை 20, 2007

நயன்தாரா கதைதான் கெட்டவன் : சிம்புவுடன் ஜோடி சேர எதிர்ப்புகள்- புதுமுகம் லேகா சொல்கிறார்

வல்லவனுக்கு பிறகு சிம்பு நடிக்கும் புதிய படம் கெட்டவன். இப் படத்துக்கு சிம்புவே கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். நந்து இயக்குகிறார்.

கெட்டவனில் கதாநாயகி யாக புதுமுகம் லேகா நடிக்கிறார். இவர் எஸ்.எஸ்.மிïசிக்கில் பணியாற்றியவர். டெலிவிஷனிலும் சத்யம் தியேட்டரிலும் லேகாவை பார்த்த சிம்புவுக்கு பிடித்து போக கெட்டவனில் நாயகியாக்கி விட்டார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

நயன்தாராவுக்கும் தனக்கும் இருந்த தொடர்பு உலகறிந்த விஷயம் என்றும் சொந்த காதல்கதை கெட்டவன் படத்தில் இருக்கும் என்றும் சிம்பு கூறியிருந்தார்.

எனவே கெட்டவன் படம் நயன்தாரா கதை என்று பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் கெட்டவனில் சிம்புவுடன் ஜோடி சேர தனக்கு எதிர்ப்புகள் வந்ததாக லேகா கூறினார். அவர் அளித்த பேட்டி

சினிமாவில் நடிக்க ஏற்கனவே சிறுசிறு வாய்ப்புகள் வந்தன. அவற்றை மறுத்தேன். பெரிய கேரக்டர் கிடைத்தால் பண்ணலாம் என்று இருந்தேன். கெட்டவன் கதாபாத்திரம் நான் எதிர் பார்த்த மாதிரி இருந்தது. ஓகே சொல்லி விட்டேன். டெலிவிஷனில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நான் இருந்த போது என் மேனரிஸம் எப்படி இருந்ததோ அது சினிமாவில் இருக்காது முற்றிலும் வித்தியாசமாக தெரிவேன்.

சிம்பு ஜோடியாக நடிக் கிறேன் என்றதும் தமிழ்நாடு முழவதிலும் இருந்து எதிர்ப்புகள் வந்தன. பலர் எஸ்.எம்.எஸ். அனுப்பினார்கள். கெட்டவன் படம் சிம்புவின் நிஜக்கதைஅதில் உன்னுடைய கேரக்டர் நயன்தாரா உன்னை காதலித்து விட்டு இறுதியில் உன் இமேஜை கெடுத்து பழி வாங்குகிற கதை. எனவே அந்த படத்தில் நடிக்க சம்மதிக்காதே என்று பலர் வற்புறுத்தினார்கள். எவ்வளவு பணம் தந்தாலும் நடிக்காதே என்றும் அறிவுறுத்தினர்.

ஆனால் சிம்புவுடன் நடித்த போது அப்படி எதுவும் தெரியவில்லை. அவர் ஜென்டில்மேன் ஆக பழகினார். சிம்பு பற்றி கேள்விப்பட்டதற்கும் நேரில்பார்த்ததற்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லாமல் இருந்தது. எப்படி நடிக்கணும் என்று எனக்கு சொல்லி கொடுத்தார்.நிறைய உதவி செய்தார்சிம்புவை பிடிக்காதவர்கள் தான் அவருக்கு எதிராக இப்படிப்பட்ட செய்திகளை பரப்பி விட்டுள்ளனர்.

Posted in Actor, Actress, Cinema, Director, DJ, Films, Gossip, Heroine, Intro, Introduction, Kettavan, Kiss, Kisukisu, Lega, Leka, Love, Manmadhan, Manmathan, Media, Movies, MSM, music, Nandhu, Nanthu, Nayan Dhara, Nayan Thara, nayandhara, Nayanthara, Rajendar, Rajender, Rajenthar, Rajenther, Rumor, Rumour, Sensational, Sensationalism, Silambarasan, Simbu, SS Music, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil TV, Thamizh, Thamizh Film, Thamizh Movies, Thamizh padam, TR, Vallavan, Vambu, Vampu | 3 Comments »

Colleges, Admissions, University Education information: Website Introduction

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

சேவை: ஏழை மாணவர்களுக்கு உதவும் இணையதளம்!

எம். ரமேஷ்

ஒருவரால் ஒரு லட்சம் பேரைப் படிக்க வைக்க முடியுமா? இப்படிக் கேட்டால், இது என்ன “முதல்வன்’ ஸ்டைல் ஒரு நாள் முதல்வர் மாதிரியான கேள்வியாக இருக்கிறது என்று தோன்றும். இல்லையெனில் டாடா, பிர்லா ரேஞ்சில் உள்ளவரால் சாத்தியம் எனத் தோன்றும். ஆனால் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலை அடுத்த

திருவேங்கடம் கிராமத்தில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த இளங்குமரன், தன்னால் சாத்தியம் என்று ஆணித் தரமாகக் கூறுகிறார்.

இவர் கூறியதைக் கேட்டபோது வியப்பாக இருந்தது. ஆனால் அவரிடமிருந்த உறுதி, அவரது அலுவலகத்திற்குச் சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.

வள்ளுவர் கோட்டம் அருகே மாடியில் அமைந்திருந்த அந்த அலுவலகத்தைக் கண்டுபிடிக்க சற்று சிரமப்படத்தான் வேண்டியிருந்தது. கீழே இரு சக்கர வாகன பழுது பார்க்கும் இடம். பக்கத்தில் சிறிய சந்தின் உள்ளே முதல் தளத்தில் அமைந்துள்ளது ஆப்பிள் ஜி வெப் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் அலுவலகம். சாஃப்ட்வேர் அலுவலகத்துக்கு உண்டான “பந்தா’ ஏதுமின்றி சாதாரண அலுவலகம் போலக் காட்சியளித்தது.

17 பேர் பணியாற்றும் அலுவலகம் என்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. அவரவர், கம்ப்யூட்டர் முன்பு தங்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஒரு லட்சம் மாணவர்களைப் படிக்க வைப்பது எப்படி, பள்ளி ஆசிரியர் கூட தமது பணிக்காலம் முடியும் வரை ஒரு லட்சம் மாணவர்களை உருவாக்க முடியாதே? என்ற வினாவுடன் அறைக்குள் நுழைந்த நம்மை வரவேற்று, தனது அறையில் இருந்த கம்ப்யூட்டரை இயக்கியவாறே பேசத் தொடங்கினார் இளங்குமரன்.

மெக்கானிக்கலில் பட்டயம் பெற்று பின்னர் பிபிஏ மற்றும் எம்பிஏ படிப்பை அஞ்சல் வழிக் கல்வி மூலம் பயின்று பின்னர் கம்ப்யூட்டரில் கிராஃபிக்ஸ், வெப் டிசைன் படித்ததுதான் தனது படிப்பின் பின்புலம் என்றார்.

“”கிராஃபிக்ஸ், வெப் டிசைன் படிப்பு வேலை தர, அதுவே பிடித்துப் போய் அதில் நாட்டம் அதிகமானது. ஒரு கம்ப்யூட்டர் வாங்கி அசெம்பிள் செய்யலாம் என்ற எண்ணத்தில் சென்னை ரிச்சி தெருவில் உள்ள கடையில் பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு முறுக்கு விற்பனை செய்த சிறுவன் தன்னிடம் முறுக்கு வாங்கும்படி கெஞ்சினான். சிறிய வயதில் வேலைக்கு வந்துள்ளாயே என்று கேட்டதற்கு, படிப்பதற்காக வேலை பார்ப்பதாகக் கூறினான். உடனே அவனது படிப்புக்கான செலவை ஏற்பதாகக் கூறினேன். அவனும் அதை ஏற்று முறுக்கு விற்பதை விட்டான். அடுத்த ஆண்டு, தன்னுடன் இன்னொரு மாணவனை அழைத்து வந்து, அவனும் படிப்பதற்கு வசதியின்றி இருப்பதாக் கூறினான். இருவருக்கும் உதவிக் கரம் நீட்டினேன். அடுத்த ஆண்டு அந்த இருவரோடு மேலும் இருவர் உதவி கேட்டு வந்தனர் .

மாதச் சம்பளத்தில், நான்கு பேருக்கு கல்விக் கட்டணம் மட்டுமே செலுத்த முடிந்தது. இவர்களைப் போன்ற மாணவர்களுக்கு உதவுவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்ற தேடல் மனதை அரித்துக் கொண்டேயிருந்தது.

சில நண்பர்களுடன் இணைந்து ஆப்பிள் ஜி வெப் என்ற நிறுவனத்தை தொடங்கி, சில நிறுவனங்களுக்கு சாஃப்ட்வேர் வடிவமைத்துத் தர அதில் ஓரளவு வருவாய் கிடைத்தது.

வருமானத்தை மாணவர்களுக்கு உபயோகமான வழியில் பயன்படுத்தினால் என்ன எண்ணத்தைச் செயல்படுத்தியதில் உருவானதுதான் www.worldcolleges.info எனும் இணையதளம். ஏறக்குறைய நான்கு ஆண்டுகால உழைப்பில் தற்போது முழு வடிவம் பெற்றுள்ளது இந்த இணையதளம்.

இந்தியாவில் உள்ள அனைத்துக் கல்லூரிகள், அதில் உள்ள படிப்புகள் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் இதில் கிடைக்கும்.

பொதுவாக ஏழை மாணவர்கள் புத்தகம் வாங்குவதற்கு வசதியில்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். அதைக் கருத்தில் கொண்டு சில நிறுவனங்கள் தங்களது புத்தகங்களை மின்னணு புத்தகங்களாக இலவசமாக அளிக்கின்றன. அத்தகைய புத்தகங்கள் எந்தெந்த இணையதளத்தில் கிடைக்கும் என்ற தகவலும் இதில் உள்ளன.

ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் தங்களைப் பற்றிய தகவலை இந்த இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம், வசதி படைத்தோர் உதவி செய்ய முன்வருவர். அதேபோல எந்தெந்த கல்லூரிகளில் கல்வி உதவித் தொகை கிடைக்கும் என்ற தகவலும் இதில் இடம்பெற்றுள்ளன.

ஒரே சமயத்தில் உலகெங்கும் உள்ள ஒரு லட்சம் மாணவர்கள் இந்த இணையதளத்தைப் பார்வையிட முடியும்.

இந்த இணையதளத்துடன் இணைந்த பல்வேறு இணைய தள முகவரிகள் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. எனவே மாணவர்கள் கல்வி சார்ந்த அனைத்து விஷயங்களையும் இதில் பெறலாம்.

மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம், தினசரி அப்டேட் செய்யப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் தங்களது கட்டுரைகளைச் சமர்ப்பிக்கவும் இதில் வசதி உள்ளது என்றார் இளங்குமரன்.”

தினசரி உலகின் எந்தெந்த பகுதியில் உள்ளவர்கள் இந்த இணையதளத்தைப் பார்வையிடுகின்றனர் என்பதைக் கண்காணிப்பதற்கான தொழில்நுட்பத்தையும் அலுவலகத்தில் உருவாக்கியிருந்தார். இந்தியாவில் மட்டும் தினசரி ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர்வரை இந்த இணையதளத்தைப் பார்வையிடுகின்றனர் என்பதற்கான தகவலை நம் கண்முன்னே காட்டினார். அதைப் போல உலகின் பிற பகுதிகளில் யார் பார்க்கின்றனர் என்பதையும் கம்ப்யூட்டரில் காட்டியதைப் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது.

சுட்டுவிரல் அசைவில் உபயோகமான தகவலை குறிப்பாக மாணவர்கள் பெற www.worldeducation.com என்ற தளத்துக்குச் செல்லலாமே!

Posted in Admissions, Colleges, Courses, Education, Guidance, Information, Instructors, Introduction, Schools, Students, Teachers, University, Website | 2 Comments »

Education: Master of Arts in Dance (Interview & Introduction)

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

கல்வி: எம்.ஏ.நாட்டியா!

அஞ்சலி

தமிழகத்தில் நாட்டியக் கலைக்குப் பட்ட மேற்படிப்பு பயிற்றுவிக்கும் ஒரே கல்லூரி என்ற சிறப்பு அடையாறு ஜானகி- எம்.ஜி.ஆர். கலை அறிவியல் கல்லூரிக்கு மட்டுமே உண்டு. எம்.ஏ. நாட்டியா என்ற அந்த ஐந்தாண்டு படிப்பின் துறைத்தலைவராக இருப்பவர் ராஜஸ்ரீ வாசுதேவன். அவரைச் சந்தித்தோம்.

“”இந்த நாட்டியப் படிப்பில் நடனம், இசை, நாடகம் மற்றும் யோகா முக்கியப் பாடங்களாகப் போதிக்கப்படுகின்றன. வரலாறு, தத்துவம், இலக்கியம் ஆகியவை துணைப்பாடங்களாக உள்ளன. உதாரணத்துக்கு சிலப்பதிகாரத்தில் நாட்டியம், இசை பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ள பகுதிகளை இலக்கியப் பாடங்களாக வைத்திருக்கிறோம். அதே போல தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் கற்பிக்கிறோம். அதில் மெய்ப்பாடு பகுதி நவரசங்களையும் சொல்வதாக இருக்கிறது. வரலாறை எடுத்துக் கொண்டால் சோழ, சேர, பாண்டிய, பல்லவ, விஜயநகர கலைநுட்பங்களைச் சொல்லித் தருகிறோம். தத்துவப் பிரிவில் சைவ சித்தாந்தம், வேதகாலம் ஆகியவற்றில் மிளிரும் கலாபூர்வமான தத்துவக் கோட்பாடுகளைக் கற்பிக்கிறோம். நாட்டிய நாடகங்கள் குறித்த வகுப்புகளும் இருப்பதால் சிறந்த நடிகர்களின் வீடியோ கிளிப்பிங்க்ஸ் காட்சியின் மூலமாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அனிதாரத்னம் போன்றோர் அவர்கள் நடத்தும் நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு அழைப்பார்கள். அது எங்கள் மாணவிகளுக்குச் சிறந்த நேரடி பயிற்சி அனுபவம். இம் மாதிரி நாட்டிய நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவரும் மாணவர்கள் நிகழ்ச்சியைப் பற்றிய விமர்சனம் எழுதித் தரவேண்டும். அது மாணவர்களின் இன்டர்னல் மதிப்பெண் பட்டியலில் சேர்க்கப்படும்.

நாட்டுப்புறக் கலைகளுக்கும் இதில் முக்கியத்துவம் தரப்படுகிறது. தப்பாட்டம் போன்ற கலைகளும் பயிற்றுவிக்கிறோம்.

எம்.ஏ. படிப்பில் நிகழ்ச்சியை நடத்த தேவையான அரங்க ஏற்பாடுகள், லைட்ஸ், ஆடியோ பற்றியும் பாடங்கள் உள்ளன. இப்போதே எங்கள் கல்லூரி மாணவிகளுக்கு டி.வி., ரேடியோ நிகழ்ச்சிகளில் பங்கு பெற அழைப்புகள் வருவது எங்களுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம். இக் கலைத்துறைப் படிப்புக்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. வெளிநாட்டில் பல கல்லூரிகள் எங்கள் மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கவும் தயாராக இருக்கின்றன” என்கிறார் ராஜஸ்ரீ.

இப் படிப்புக்குச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஒப்புதல் வாங்கி நடைமுறைப்படுத்தியவர் லதா ராஜேந்திரன். எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளியின் முதல்வராகவும் இக் கல்லூரியின் தாளாளராகவும் செயல்பட்டுவரும் அவரிடம் மேலும் விவரங்களுக்காக அணுகினோம்.

* நாட்டியத்துக்காக இப்படி ஒரு பட்ட மேற்படிப்பை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?

நான் பத்மாசுப்ரமணியத்தின் நாட்டிய மாணவி. கலாஷேத்ராவில் டிப்ளமோ பயிற்சி நடப்பதுபோல் பட்டப்படிப்பை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். இதை ஐந்தாண்டு இன்டகரேட்டட் பட்ட மேற்படிப்பாக நடத்துவதற்கான முன்வடிவை பத்மாசுப்ரமணியம் உள்ளிட்ட நாட்டியக் கலைஞர்களிடம் விவாதித்தோம். சென்னை பல்கலைக் கழகத்தின் இசைத்துறை தலைவர் ப்ரமிளா குருமூர்த்தியின் ஆலோசனையின் பேரில் சிலபûஸ செழுமைப்படுத்தினோம். இப்படியாக இந்த நாட்டியப் படிப்பு முழுவடிவம் பெற்றது.

* சிலபஸ் தயாரானவிதம் எப்படி?

சென்னை பல்கலைக் கழகத்தின் போர்ட் ஆஃப் ஸ்டடீஸ் மூலம் நாட்டியத் துறையைச் சேர்ந்தவர்கள், நாடகம் வரலாறு, தத்துவவியல், தமிழ்த்துறை, சமஸ்கிருதத்துறை அறிஞர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றனர். ஐந்தாண்டு படிப்பாக இருந்தாலும் மூன்றாண்டு படிப்புக்குப் பிறகு பி.ஏ. இளங்கலையோடும் நிறுத்திக் கொள்ளலாம். ஆனால் வேறு துறையில் பி.ஏ. முடித்தவர்கள் நாட்டியாவில் முதுநிலை (எம்.ஏ.) தொடர முடியாது.

* எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளியில் படிப்பவர்களுக்கு ஜானகி- எம்.ஜி.ஆர். கல்லூரியில் வாய்ப்பளிக்கிறீர்களா?

கண்டிப்பாக. எங்கள் பள்ளி மட்டுமன்றி மற்ற வாய் பேச

முடியாத, காது கேளாத மாணவர்களுக்கும் வாய்ப்பு தருகிறோம். நாட்டியப் படிப்பில் அவர்கள் பயில்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. மற்ற துறைகளில் பயில்கிறார்கள். சென்ற ஆண்டில் மட்டும் இது போன்றவர்கள் 15 பேர் கல்லூரியில் சேர்ந்தனர்.

* உங்களுக்கும் மறைந்த எம்.ஜி.ஆருக்கும் என்ன உறவு?

என் கணவர் ராஜேந்திரன், ஜானகி அம்மாளின் தம்பி.

Posted in Analysis, Anita, Anita rathnam, Anita ratnam, Anitha, Anitha rathnam, Anitha ratnam, Arts, Bachelors, Backgrounder, Culture, Dance, Degree, Education, Graduate, Heritage, Interview, Introduction, M&A, MGR, Padma Subramaniam, Padmasubramaniam, School, Student, Study, Syllabus | Leave a Comment »

MP3 Audio Books by Kizhakku pathippagam – Introduction for Avid Readers

Posted by Snapjudge மேல் மே 30, 2007

புதிய வாசகர்களை உருவாக்கும் “ஒலிப் புத்தகம்’: படிக்க வேண்டியதில்லை; கேட்டாலே போதும்

கே. வாசுதேவன்

திருநெல்வேலி, மே 30: தமிழகத்தில் தற்போது புதிதாக விற்றுவரும் ஒலிப் புத்தகம் (ஆடியோ புக்) புதிய புத்தக வாசகர்களை உருவாக்கி வருகிறது.

கேட்டாலே போதும், புத்தகத்தை வாசித்த திருப்தி கிடைப்பதாக அதன் வாசகர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய அவசர உலகில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. பள்ளி – கல்லூரிகளில் பயிலும்போது மட்டுமே இளைய சந்ததியினர் பாடம் சம்பந்தப்பட்ட புத்தகங்களை படிக்கின்றனர்.

இவற்றைத் தவிர்த்துப் பிற புத்தகங்களை அவர்கள் படிப்பது மிகவும் அரிதாகிவிட்டதால், வரலாறு, கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு, கலைகள் போன்றவை பற்றிய அறிவு இன்றைய இளைஞர்களிடம் எதிர்பார்க்க முடியாதாகிவிட்டது.

10 ஆண்களுக்கு முன்வரை புத்தக வாசிப்பு, விளையாட்டு ஆகியவை மட்டுமே பொழுதுபோக்கு. இன்று அப்படியில்லை டி.வி., இன்டர்நெட், இ மெயில், திரைப்படம் எனப் பல.

படிக்கும் ஆர்வம் குறைவு: அனைத்தும் வணிக நோக்கில் செயல்படும் சூழ்நிலையில், புத்தகம் படிக்கும் ஆவல் குறைகிறது.

மேலும், தேவையான தகவல்களை உடனுக்குடன் இன்டர்நெட், இ மெயில் போன்றவற்றின் மூலம் பெற்றுவிடுவதால் புத்தக வாசிப்பும் விற்பனையும் குறைந்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் வாசகர்களைக் கவர புதிய யுக்திகளைப் புத்தகப் பதிப்பாளர்கள் புகுத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்தப் புதிய யுக்தியில், ஒரு புத்தகத்தில் உள்ள அனைத்தையும் ஒலிப் புத்தகமாக -“எம்பி3′ குறுந்தகடுகளாக இந்தப் பதிப்பகங்கள் வெளியிடுகின்றன.

இந்த ஒலிப் புத்தகத்தில் மெல்லிய பின்னணி இசையுடன், வசீகரமான குரலுடனும் புத்தகம் சிறிது தணிக்கை செய்யப்பட்டு வாசிக்கப்படுகிறது.

அதாவது நாம் ஒரு புத்தகத்தை படிக்காமலேயே, அந்த புத்தகத்தில் உள்ளது பற்றி முழுமையாகக் கேட்க முடிகிறது.

மேலும், புத்தகத்தின் விலையை ஒப்பிடும்போது, இதன் விலை மிகவும் குறைவாகவே உள்ளது.

புத்தகத்தில் நாள்கணக்கில் வாசித்து தெரிந்துகொள்ளும் விஷயத்தை, சில மணி நேரங்களிலேயே ஒலிப் புத்தகங்கள் மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

புத்தகத்தை வாசிப்பதற்கு என்று சில சூழ்நிலைகள் நமக்கு கிடைத்தால் மட்டுமே, அதை முழுமையாக வாசித்துப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், இந்த ஒலிப் புத்தகத்தை கேட்கும் வசதிகள் மட்டும் நம்மிடம் இருந்தால் போதும், எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.

இதுவரை பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள், ஆன்மிக உரைகள் ஆகியவற்றை மட்டுமே ஒலியின் வடிவில் கேட்டு வந்த மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவம்.

Posted in Audio, Biography, Books, Chokkan, Commerce, Digital, Disabled, Download, Hear, Internet, Introduction, Kilakku, Kizakku, Kizhakku, Media, MP3, padhippagam, padhippakam, pathippagam, pathippakam, Publishers, Read, Readers, Tamil Book, Venture, Voice | 5 Comments »

Income Tax Introduction series in Dinamani : NV Balaji

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2007

வருமான வரி

என்.வி. பாலாஜி

வருமானம் மற்றும் தொழிலில் இருந்து பெறும் லாபத்திற்கான வரி (பகுதி-2)

அடுத்ததாக லாபத்தைக் கணக்கிடுவதற்காக அனுமதிக்கப்படும் கழிவுகளை பற்றி காணலாம்.

1. வணிகம், தொழிலுக்காக பயன்படுத்தப்படும் இடத்திற்கான வாடகை, பராமரிப்புச் செலவுகள், வரிகள் மற்றும் இதர செலவுகள்.

2. தொழில் செய்யும் இடம், அதற்காக பயன்படுத்தப்படும் கருவிகள், வணிகப் பொருட்கள், இதர பொருட்களுக்கான காப்பீட்டுத் தொகை.

3. தேய்மானம் – கருவியையோ, கட்டடத்தையோ உபயோகிப்பதால் அதன் மதிப்பு குறைகிறது. அதற்காகவே தேய்மானம் அனுமதிக்கப்படுகிறது. அனுமதிக்கப்படும் தேய்மானத்தின் அளவு, சொத்துக்களின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதமாக கணக்கிடப்படுகிறது. இந்த சதவிகிதம் வருமான வரி துறையினரால் கொடுக்கப்படும். ஒரு சொத்தின் உரிமையாளரே தேய்மான செலவை கோர முடியும்.

ஒரு இயந்திரத்தை வருடத்தில் 180 நாட்களுக்கு குறைவாக பயன்படுத்தி இருந்தால், 50 சதவீத தேய்மானம் மட்டுமே அனுமதிக்கப்படும். ஒரு வருடத்தில் ஒரு சொத்தை விற்றிருந்தால் அந்த வருடத்திற்கான அந்த சொத்திற்கான தேய்மானத்தை கோர இயலாது.

4. ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், ஊக்கத் தொகை மற்றும் இதர வேலையாட்களுக்கான செலவுகள்.

5. தொழில் நடத்துவதற்காக வாங்கப்பட்ட கடனுக்குண்டான வட்டித்தொகை. (கவனிக்க:) கடன் வங்கியிலிருந்தோ, இதர நிதி நிறுவனங்களிலிருந்தோ வாங்கப்பட்டிருக்கும் நிலையில், வட்டி ஐப தங்ற்ன்ழ்ய் தாக்கல் செய்யும் முன்னரே கட்டப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும்.

6. வாராக் கடன் (இந்த கழிவு பின் வரும் காலங்களில் வசூலிக்கப்பட அந்த ஆண்டிற்கான வருமானமாகக் கருதப்படும்).

7. முழுமையாக வணிகம், தொழில் நடத்துவதற்காக செலவிடப்படும் இதர தொகைகள், அந்த செலவு மூலதன செலவாகவோ, தொழில் நடத்துபவரின் தனிப்பட்ட செலவாகவோ இருக்கக் கூடாது.

ஒரு கட்டடத்தில் ஒரு பகுதி தொழிலுக்காகவும், மற்றொரு பகுதி சொந்த பயனுக்காவும் உபயோகிக்கப்பட்டிருந்தால், தொழில் நடத்தப்படும் இடத்திற்கான சதவிகிதத்திற்கு மட்டும் கழிவு அனுமதிக்கப்படும்.

வட்டி, ஒப்பந்ததாரருக்கான பணம், தொழிலில் செய்பவருக்காக செலுத்தப்பட வேண்டிய பணம், தரகு ஆகியவற்றிற்கு வரி பிடிப்பிற்கு பிறகே (பஈந) கொடுக்க வேண்டும். இல்லையெனில் அந்த செலவு அனுமதிக்கப்படும் செலவாக கருதப்படாது. அதே போல் பிடிக்கப்படும் வரி, அதற்குரிய காலத்திற்குள் வங்கியில் கட்டப்பட வேண்டும். இல்லை எனில் அந்த செலவு அனுமதிக்கப்படாது.

இத்தகைய அனுமதிக்கப்படாத செலவுகளுக்கு, பின்வரும் காலங்களில் வரி பிடித்துக் கட்டினால், அந்த வருடத்தில் வணிக செலவாக அனுமதிக்கப்படும்.

வரி பிடிக்கவேண்டிய செலவுகள், பிடிப்பு சதவிகிதம், பிடித்த வரியை செலுத்த வேண்டிய கடைசி நாள் ஆகியவற்றை பின்வரும் நாட்களில் காணலாம்.

வருமான வரி, சொத்து வரி, இதர வரிகள் மற்றும் வரிகளை உரிய நேரத்தில் கட்ட தவறியதற்காக கட்டிய வட்டி ஆகியவை வணிக செலவாக கருதப்படமாட்டாது.

வணிகரின் சொந்தக்காரர்களிடமிருந்து பொருட்களை வாங்குவதற்கோ, இதர சேவைகளுக்காகவோ, அளவுக்கு அதிகமாக செலவிட்டிருந்தால் வருமான வரி ஆய்வாளரின் உரிமையைப் பயன்படுத்தி அதிகபட்சமாக 20% வரை கழிவு அனுமதிக்கப்படமாட்டாது. இந்த சதவிகிதம் தற்போது அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் 100% சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

எந்த ஒரு வணிக, தொழில் செலவிற்காகவும் ரூ.20,000-த்திற்கு மேல் ரொக்கமாக செலுத்தப்பட கூடாது. அவை ‘அ/இ டஹஹ்ங்ங்’ காசோலை அல்லது ‘அ/இ டஹஹ்ங்ங்’ வரைவோலை மூலமாகவோ மட்டுமே செலுத்தப்படவேண்டும். அப்படி செய்யத் தவறினால், 20 சதவீதச் செலவு வணிகச் செலவாகக் கருதப்பட மாட்டாது.

அடுத்த ஆண்டில் இருந்து இந்த 20 சதவீதம் மாற்றப்பட்டு, மொத்தச் செலவும் வணிகச் செலவாகக் கருதாமல் இருக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வருமான வரி ஏனைய வருமானங்கள்

“சம்பள வருமானம்’, “வீட்டு வருமானம்’, “வியாபாரம், தொழில் வருமானம்’, “மூலதன லாபம்’ ஆகிய தலைப்புகளில் விடுபட்ட வருமானங்கள் “ஏனைய வருமானங்கள்’ என்கிற தலைப்பில் கணக்கிடப்படும்.

இதில் முக்கியமாக கருதப்படுவதான சில:

1. லாப பங்கு ( Dividend), வங்கியிலிருந்து பெறும் வட்டி.

2. குலுக்கல், குறுக்கெழுத்து, குதிரை பந்தயம் போன்றவற்றால் ஈட்டும் வருமானம்.

3. “வியாபாரம், தொழில் வருமானம்’ என்ற தலைப்பில் வரிக்கு உட்படாதவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. (எ.கா.)

(ண்) பங்கு வட்டி,

(ண்ண்) சொத்துக்களை, குத்தகைக்கு, வாடகைக்கு கொடுப்பதால் பெறும் வருமானம்.

(ண்ண்ண்) ரூ.50,000-க்கு மேல் பணமாக பெறும் அன்பளிப்பு. உறவினர்களிடம் இருந்தோ, கல்யாணத்தின் பொழுது, உயில் மூலமாகவோ பெறும் பணம் வரிக்கு உகந்தவை. உறவினர் – தம்பதி, அண்ணன், தங்கை, தம்பதியின் அண்ணன், தங்கை, பெற்றோரின் அண்ணன், தங்கை மற்றும் சிலர்.

(ண்ஸ்) Keyman Insurance Policy எனும் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பெறப்படும் இழப்பீடு.

“ஏனைய வருமானங்கள்’ என்ற தலைப்பில் கணக்கிடும் வருமானம், கீழ்க்காணும் செலவுகளை கழித்தபின் வருபவை ஆகும்.

1. லாபப் பங்கு பெறுவதற்குண்டான தரகுச் செலவு.

2. தொழிலாளர் நலத் திட்டங்களுக்காக, தொழிலாளர்களின் பங்கு.

3. இயந்திரச் சாதனம், கட்டடம் போன்ற சொத்துக்களை வாடகை, குத்தகையில் விடும்போது, அதன் பழுதுபார்க்கும் செலவு, மதிப்புக் கழிவீடு, தேய்மானம், காப்பீட்டு உபரித் தொகை.

4. குடும்ப ஓய்வூதியம் – ரூ.15,000 (அல்லது) அந்த வருமானத்தில் 1/3 பங்கு (இவ்விரண்டில் குறைந்த செலவு).

5. வருமானம் ஈட்ட வேறெந்த செலவும், பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே அனுமதிக்கப்படும்.

* வருவாய் ஈட்டுவதற்காகவே செலவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

* மூலதன செலவாக இருத்தல் கூடாது.

* வரி செலுத்துபவரின் சொந்த செலவாக இருத்தல் கூடாது.

* நடப்பாண்டில் செலவிட்டு இருத்தல் வேண்டும்.

வருமான வரிச் சட்டத்தில், “ஏனைய வருமானங்கள்’ என்ற தலைப்பில் கீழ்வரும் செலவுகள் அனுமதிக்கப்படமாட்டாது.

(ண்) வட்டி, சம்பளம் முதலியன இந்திய நாட்டிற்கு வெளியே செலவு செய்யும் போது, வருமான வரியை பிடிக்காமல் செலவு செய்தல்.

(ண்ண்) சொத்து வரி.

(ண்ண்ண்) குலுக்கல், குறுக்கெழுத்து, சூதாட்டம் போன்றவற்றிற்குண்டான செலவுகள்.

(ண்ஸ்) வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்பக் கட்டணம், உற்பத்தி உரிமம் ஈட்டுவதற்கு செய்யும் செலவுகள்.

என்.வி. பாலாஜி ( nvbalaji@karra.in)

வருமான வரி நஷ்டம்

இந்திய வருமான வரி சட்டத்தின் கீழ் லாபத்திற்கு வரியுண்டு. நஷ்டம் வந்தால் வரி கிடையாது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. நஷ்டத்தை லாபத்தில் இருந்து கழித்து பெறும் தொகைக்கு மட்டுமே வரி செலுத்த வேண்டும். இவற்றை இன்று காண்போம்.

வருமான வரி சட்டத்தின் 5 பிரிவுகளில் சம்பளத்தை தவிர மற்ற பிரிவுகளில் இருந்து நஷ்டம் பெற அல்லது ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த நஷ்டத்தை அடுத்த வருடத்திற்கு எடுத்து செல்ல வாய்ப்புள்ளது.

நஷ்டத்தை கீழ்வருமாறு லாபத்திலிருந்து கழிக்கலாம்.

1. இந்த வருடம் ஒரு பிரிவில் வரும் நஷ்டத்தை இந்த வருடமே கழிக்கலாம்.

2. அப்படி அந்த வருடம் கழிக்க இயலாவிடில் அதை அடுத்த வருடங்களுக்கு எடுத்து சென்று லாபத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம்.

சம்பளம்:

இதில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பே இல்லை. அதேபோல் எந்த ஒரு நஷ்டத்தையும் இதற்கு எதிராக கழிக்க இயலாது.

வீட்டு வாடகை வருமானம்:

இந்த தலைப்பின் கீழ் வரும் நஷ்டத்தை அதே வருடத்தில் எந்த ஒரு வருமான பிரிவிலும் உள்ள லாபத்திலிருந்தும் கழிக்கலாம். இப்படி கழிக்க இயலாவிடில் அதனை அடுத்த 8 வருடங்களுக்கு எடுத்து சென்று அந்த வருடங்களில் வரும் வீட்டு வாடகை லாபத்திலிருந்து கழிக்கலாம்.

தொழில், வணிகம்:

இந்தப் பிரிவின் கீழ் வரும் நஷ்டத்தை சம்பளத்தை தவிர அந்த வருடத்தில் எந்த ஒரு வருமான பிரிவிலும் உள்ள லாபத்திலிருந்து கழிக்கலாம். இவ்வாறு கழிக்க இயலவில்லையெனில் அதை அடுத்த 8 வருடங்களுக்குள் இதே பிரிவின் கீழ் வரும் லாபத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம். இந்த பிரிவின் தேய்மான நஷ்டத்தை எத்தனை வருடங்களுக்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லாம். இந்த நஷ்டத்தை எந்தப் பிரிவின் லாபத்திலும் கழிக்கலாம்.

குறுகிய கால மூலதன நஷ்டம்:

இதனை குறுகிய, நீண்ட கால மூலதன லாபத்தில் கழித்துக் கொள்ளலாம் (அதே ஆண்டோ, இயலாவிட்டால் 8 ஆண்டுக்குள்ளோ).

குறிப்பு:

மேற்கூறிய நஷ்டங்களை, அடுத்த வருடங்களுக்கு எடுத்துச் சென்று கழிக்க வேண்டுமெனில், நஷ்டம் ஏற்பட்ட வருடத்திற்கான வருமான வரி படிவத்தை குறிப்பிட்ட தேதிக்குள் சமர்ப்பித்தாக வேண்டும்.

என்.வி. பாலாஜி

=====================================================

வருமான வரி – வருமானத்தில் கழிவுகள்

கடந்த சில நாள்களாக எந்த வருமானம் எந்த பிரிவின் கீழ் வரிக்கு உட்படுத்தப்படும் என பார்த்தோம். அத்துடன் பிறர்க்கு கிடைக்கும் வருமானம் எப்போது மற்றவரின் வருமானத்தோடு இணைக்கப்படும் என்பதனையும் பார்த்தோம். மேற்கூறிய அனைத்தையும் கூட்டினால் ஒருவருடைய மொத்த ஆண்டு வருமானம் ( எழ்ர்ள்ள் பர்ற்ஹப் ஐய்ஸ்ரீர்ம்ங்) கிடைக்கும். இந்த மொத்த ஆண்டு வருமானத்திலிருந்து கிடைக்கும் சில கழிவுகளை இன்று பார்ப்போம்.

ஒரு தனிநபர் அல்லது இந்து கூட்டுக் குடும்பம் ஒரு நிதியாண்டில் செய்யும் கீழ்க்கண்ட முதலீடுகள் கழிவாக கிடைக்கும்.

-ஆயுள் காப்பீட்டு சந்தா

– டழ்ர்ஸ்ண்க்ங்ய்ற் ஊன்ய்க்

-ஓய்வூதியம் பெறுவதற்காக செலுத்தும் தொகை

– எழ்ஹற்ன்ண்ற்ஹ் ஊன்ய்க்

– அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஙன்ற்ன்ஹப் ஊன்ய்க்

-வீட்டுக்கடன் மீது திருப்பி செலுத்திய முதல்

-தன் குழந்தைகள் (அதிகபட்சமாக 2) மற்றும் தன்னை சார்ந்துள்ளவர்களுக்காக செலுத்திய கல்வி கட்டணம்

-குறிப்பிட்ட சில பங்குகளில் முதலீடு

-அரசு வங்கிகளில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் செய்யும் நிரந்தர வைப்புத்தொகை மற்றும் சில முதலீடுகள்

(காப்பீட்டு நிறுவனத்தால் நிறுவப்பட்ட ஓய்வூதிய நிதிக்கு செலுத்தும் ஆண்டு தொகைக்கு, இந்து கூட்டு குடும்பத்திற்கு கழிவு கிடையாது. தனிநபர் ஓய்வூதிய நிதிக்காக செலுத்தும் தொகைக்கு கழிவு உண்டு.)

மேற்கூறிய கழிவுகள் அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரை மட்டுமே அளிக்கப்படும்.

-ஒரு தனிநபர் (அல்லது) இந்து கூட்டுக் குடும்பம் செலுத்தும் மருத்துவ காப்பீட்டு தொகை, ரூ.10,000 வரை (அடுத்த நிதியாண்டில் இருந்து ரூ.15,000 வரை) கழிவாக கிடைக்கும்.

முதியோருக்காக செலுத்தும் பட்சத்தில் ரூ.15,000 வரை (அடுத்த நிதியாண்டு முதல் ரூ.20,000 வரை) கழிவாக கிடைக்கும்.

-ஒரு தனிநபர் (அல்லது) இந்து கூட்டுக் குடும்பம் மற்றும் அவரை சார்ந்தவர் சில குறிப்பிட்ட உடல் ஊனம் உள்ளவராயின் அவர் மருத்துவ செலவு அல்லது காப்பீட்டு தொகை செலுத்தும் பட்சத்தில் ரூ.50,000 கழிவாக கிடைக்கும்.

-மேலும் 2006 – 07-ம் நிதியாண்டில் தனக்காக வாங்கிய கல்விக்கடன், 2007 – 08-ம் நிதியாண்டு முதல் தனக்காக, தன் துணைவருக்காக, துணைவியருக்காக மற்றும் பிள்ளைகள் கல்விக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் பணம், கழிவாக ரூ.40,000 வரை கிடைக்கும்.

வரி செலுத்துபவர் (நிறுவனம் உள்பட) கொடுக்கும் நன்கொடைக்கு கீழ்கண்டபடி கழிவு கிடைக்கும்.

-மத்திய, மாநில அரசு நிறுவிய மக்கள் உதவிக்கான நிதி – 100%

-மத்திய, மாநில அரசு நிறுவிய ஏனைய நிதிகள் – 50%

-பிற தொண்டு நிறுவனங்கள் – 50% (நிபந்தனைக்குட்பட்டு)

சம்பளம் பெறாத மற்ற தனிநபர் வரி செலுத்துவோராயின் வீட்டு வாடகை செலுத்துபவரானால் அவ்வாடகை சில நிபந்தனைக்கு உட்பட்டு கழிவுகள் கிடைக்கும்.

தொழில், வணிகத்தில் இருந்து வருமானம் இல்லாதவராயின் அறிவியல் ஆய்வு நிறுவனம், பல்கலைக்கழகம் முதலியவற்றிற்கு நிதியாண்டில் கொடுக்கும் நன்கொடைக்கு கழிவு உண்டு.

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கும் நன்கொடைக்கு கழிவு கிடைக்கும்.

ஒரு தனிநபர் ஊனமுற்றவராயிருப்பின் அல்லது மன வளம் குன்றியவராக இருந்தால் சில நிபந்தனைக்குள்பட்டு ரூ.50,000 கழிவு பெறலாம். அதுவே தீவிரமாக இருப்பின் ரூ.75,000 கழிவு பெறலாம். இக்கழிவு பெற அரசு மருத்துவரிடம் இருந்து பெற்ற சான்றிதழ் வருமான வரி படிவத்துடன் சமர்பிக்கப்பட வேண்டும்.

என்.வி. பாலாஜி

========================================================

வருமான வரி – அறக்கட்டளையின் வருமானம்

என்.வி. பாலாஜி

அறக்கட்டளை என்பது ஒருவரது நம்பிக்கையால் உருவாவது ஆகும். அதன் நோக்கம் பலருக்கும் நன்மை பயக்குவதாக அமைய வேண்டும். அவ்வாறு நம்பிக்கை வைத்து அல்லது நம்பிக்கையை பிரகடனப்படுத்தி, அறக்கட்டளையை துவக்குபவரே “நிறுவனர்’ எனவும்; அந்த நம்பிக்கையை ஏற்றுக் கொள்பவரே “தர்மகர்த்தா’ எனவும்; பயனடைவோர் “மானியம் பெறுவோர்’ எனவும் கருதப்படுவர்.

அறக்கட்டளையின் வருமானம், வருமான வரிச் சட்டத்தில் கூறப்பட்ட நிபந்தனையை பூர்த்தி செய்தால், அதற்கு வரி விலக்கு அளிக்கப்படும். அவை பின்வருமாறு:

1. வருமானத்தை ஈட்ட உதவும் “உடைமை’ நம்பிக்கையில் அல்லது சட்டத்தின் கட்டாயத்தில் இருக்க வேண்டும்.

2. “உடைமை’ தர்மச் செயல்களுக்காகவோ (அல்லது) மதங்களின் தொண்டுச் செயல்களுக்காகவோ இருத்தல் வேண்டும்.

3. ஒரு அறக்கட்டளை, குறிப்பிட்ட மதத்திற்கோ, இனத்திற்கோ பயனளிக்கும் வகையில் உருவாக்கப்படக் கூடாது.

4. அறக்கட்டளையின் வருமானத்தில், ஒரு பங்கு கூட நிறுவனரையோ (அல்லது) அவரைச் சார்ந்த சிலரையோ சென்றடையக் கூடாது.

5. அறக்கட்டளையை துவக்க வருமானவரி ஆணையரிடம், நிறுவனர் விண்ணப்பிக்க வேண்டும்.

6. வருமானம் ரூ.50,000-க்கு மேல் சென்றால், அறக்கட்டளை கணக்குகள் “ஆய்வுக்கு’ ( அன்க்ண்ற்) உட்படுத்தப்படவேண்டும்.

7. அறக்கட்டளையின் தர்ம ரீதியான அல்லது மத ரீதியாகச் செய்யப்பட்ட செலவுகளுக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும். ஒரு ஆண்டில் ஈட்டிய வருமானத்தில், குறைந்தது 85% மேற்கூறிய செயல்களுக்குச் செலவிட்டிருக்க வேண்டும்.

8. அப்படி செலவிடாத பட்சத்தில், 85%-க்கு குறைவாக இருக்கும் தொகையினை 5 ஆண்டுக்குள் செலவிட வேண்டும்.

9. அறக்கட்டளையின் நிதிகளை, குறிப்பிட்டச் சில முறைகளில் மட்டுமே முதலீடு செய்தல் வேண்டும்.

வருமான வரி ஆணையரிடம் பதிவு:

படிவம் 10 அ, என்ற படிவத்தில், அறக்கட்டளை, அதன் பெயர், முகவரி, குறிக்கோள் போன்றவற்றை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தினை அறக்கட்டளை தொடங்கிய ஒரு வருடத்திற்குள் சமர்பிக்க வேண்டும். இது செய்யாத பட்சத்தில் வரி விலக்கு நிராகரிக்கப்படும். எனினும், விண்ணப்பத்தின் தாமதத்திற்கு கூறப்படும் காரணங்கள் ஆணையத்திற்கு திருப்தி அளிக்கும் வகையில் அமைந்து இருந்தால், ஆணையர் தாமதத்தை மன்னிக்கலாம். தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரில் இதில் சில மாற்றங்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளன. அதன்படி வருமான வரி ஆணையரால் தாமதத்தை மன்னிக்க இயலாது. மற்றும் அறக்கட்டளையின் பதிவை விண்ணப்பித்த ஆண்டின் முதல் தேதியிலிருந்து வழங்க முடியும். (1.7.2007 முதல் அமலுக்கு வரும்).

ஒரு வருமான வரித்துறை ஆணையர் அறக்கட்டளையின் விண்ணப்பத்தை ரத்து செய்தால் இதுவரை அதனை மேல் முறையீடு செய்ய முடியாது. ஆனால் 1.7.2007 முதல் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியும்.

ஆணையர், ஒரு அறக்கட்டளையின் நோக்கம், கோட்பாடு ஆகியவற்றை ஆராய்ந்தபின், அவை சரியாக இருக்கும்பட்சத்தில், “பதிவுச் சான்றிதழ்’ வழங்குவார். விண்ணப்பத்தை நிராகரித்தாரேயானால், அதன் காரணத்தை ஆறு மாதத்திற்குள் கூற வேண்டும். இல்லையேல், பதிவு ஆகிவிட்டதாகக் கொள்ளலாம்.

ஒரு வேளை, அறக்கட்டளையின் பணிகள், அறக்கட்டளை உருவாக்கிய நோக்கங்களுக்கு மாறாக இருக்கிறது என ஆணையர் நம்பினால், பதிவை ரத்து செய்யும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தையோ அல்லது பதிவையோ ரத்து செய்வதற்கு முன், விண்ணப்பதாரர், தான் நினைப்பதை வெளிப்படுத்த, ஆணையர் வாய்ப்பளிக்க வேண்டும்.

======================================

வருமான வரி – வரி பிடித்தம்

எந்த வகை வருமானமாக இருப்பினும் அதில் 1%-ஐ செலுத்துபவர் வரியாக பிடித்த பின்னரே செலுத்த வேண்டும் என்பது சட்டம். இதனால் வருமான வரி ஏய்ப்பு பெருமளவில் குறைக்கப்படுகின்றது. இந்த சட்டம் எவருக்கெல்லாம் பொருந்தும், ஒவ்வொரு வகை வருமானத்துக்கும் பிடிப்பு சதவிகிதம் என்ன என்பதை காண்போம்.

சம்பளம்:

ஒருவரின் சம்பளம் குறைந்தபட்ச வரிக்கு உட்படாத அளவை தாண்டினால், அவர் செலுத்த வேண்டிய வரியை பணியில் அமர்த்தியவர் சம்பளத்திலிருந்து பிடித்து அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும்.

வட்டி:

ஒருவருக்கு வங்கிகள், நிறுவனங்களிலுள்ள சேமிப்பிலிருந்து வரும் வட்டி ரூ.5,000-க்கு மேல் இருந்தால் வரிபிடித்தம் செய்யப்படும். இந்த வரம்பு இந்த பட்ஜெட்டில் ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வரி பிடிப்பு விகிதம்:

தனிநபர் – 10%

நிறுவனம் – 20%

ஒப்பந்தம்:

இந்து கூட்டு குடும்பம் அல்லது தனிநபர் (வருட வருமானம் – 40 லட்சம்) தவிர மற்றவர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்பந்ததாரருக்கு பணம் செலுத்தினால் வரி பிடிக்கவேண்டும். குறைந்தபட்ச வரம்பு ரூ.20,000.

வரி பிடிப்பு விழுக்காடு:

விளம்பர ஒப்பந்தங்கள் – 1%

மற்றவை – 2%

தரகு:

இந்து கூட்டு குடும்பம் அல்லது தனிநபர் (வருட வருமானம் ரூ.40 லட்சம்) தவிர மற்றவர்கள் எவருக்காவது தரகு செலுத்தினால் (வருடத்திற்கு ரூ.2,500-க்கு மேல்) அதிலிருந்து 5% வரி பிடித்தம் செய்ய வேண்டும்.

வாடகை:

இதனை 2 ஆக பிரிக்கலாம். 1. வீட்டு வாடகை, 2. வணிகத்தில் பயன்படுத்தும் இயந்திரங்களுக்கான வாடகை.

இந்து கூட்டுக் குடும்பம் அல்லது தனிநபர் (வருட வருமானம் ரூ.40 லட்சம்) தவிர மற்றவர்கள் வாடகை செலுத்துகையில் (வருடத்திற்கு ரூ.1,20,000 மேல்) வரி பிடிக்க வேண்டும்.

வரி பிடிப்பு சதவிகிதம் கீழ்வருமாறு:

1. தனிநபர், இந்து கூட்டு குடும்பம், கூட்டாண்மை முதலியவற்றிற்கு 15% ஆகும்.

2. மற்றவைகளுக்கு 20% ஆகும்.

தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் வணிகத்தில் பயன்படுத்தும் இயந்திரங்களுக்கான வாடகை வரி பிடிப்பு விகிதம் 15% மற்றும் 20%-ல் இருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Professional Services:

இந்து கூட்டு குடும்பம், தனிநபர் (வருட வருமானம் ரூ.40 லட்சம்) தவிர மற்றவர்கள் இதற்கான பணம் செலுத்துகையில் (வருடத்திற்கு ரூ.20,000 மேல்) 5% வரியாக பிடிக்க வேண்டும். இந்த பட்ஜெட்டில் இது 10% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறாக பிடிக்கப்பட்ட வரிகள் அடுத்த மாதம் 7-ம் தேதிக்குள் (மே மாதம் பிடித்ததில் இருந்து ஜூன் 7-க்குள்) வங்கியில் அரசாங்க கணக்கில் செலுத்த வேண்டும். இவ்வாறு பிடித்த வரிக்கான படிவத்தை ஒவ்வொரு காலாண்டும் அரசாங்கத்திடம் மின் அஞ்சல் வழியாக சமர்பிக்க வேண்டும்.

உரிய வரி பிடித்தம் செய்யாவிடின் மேற்கூறிய அனைத்திற்கும் வியாபார செலவாக கழிக்க இயலாது.

பிடித்த வரியை செலுத்த தாமதம் ஏற்படின் மாதத்திற்கு 1% வட்டி செலுத்த வேண்டும். இதை தவிர வருமான வரித்துறை அதிகாரிக்கு வரி பணத்திற்கு மிகாமல் Penalty்ங்ய்ஹப்ற்ஹ் செலுத்தவைக்க அதிகாரம் உண்டு.

என்.வி. பாலாஜி

===========================================================

வருமான வரி – சம்மன் மற்றும் சர்வே

என்.வி. பாலாஜி

வரி செலுத்துபவரை நேரில் அழைத்து விசாரணை நடத்துவது அல்லது அவர்கள் தொழில் நடத்தும் இடத்திற்கு சென்று சர்வே நடத்துவது போன்றவற்றை வருமான வரித்துறையால் செய்ய இயலும். ஒருவருக்கு சம்மன் கொடுத்து குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்திற்கு நேரில் ஆஜராக சொல்லி, அவரிடம் இருந்து தேவையான விவரங்களை வருமான வரித்துறை பெறலாம். அவ்வாறு நேரில் வருபவரிடம் பிரமாணத்தை கொண்டு வாக்குமூலம் பெறலாம்.

இந்த தகவல் பெறும் உரிமையின் மூலம் வருமான வரித்துறை ஒரு கூட்டாண்மை நிறுவனத்திடமிருந்து பங்குதாரர்களின் விவரங்கள், இந்து கூட்டு குடும்பத்திடம் இருந்து அதன் உறுப்பினர்களின் விவரங்கள், ஒரு டிரஸ்டி அல்லது ஏஜெண்ட் என்று வருமான வரித்துறையால் நம்பப்படும் நபரிடமிருந்து அவர் யாருக்கான ஏஜெண்ட் என்ற தகவல், ரூ.1,000 மேல் வாடகை வட்டி, தரகு, ராயல்டி போன்றவற்றை வரி செலுத்துபவரிடமிருந்து பெற்ற விவரம், பங்குதாரர்களிடமிருந்து அவர்களுடைய வாடிக்கையாளர் விவரம் போன்றவற்றை வருமான வரித்துறையால் பெற முடியும். இதே போல் ஒரு வங்கி அல்லது அதன் அதிகாரிகளிடமிருந்தும் எந்த விசாரணைக்கும் தேவையான அல்லது உபயோகமுள்ள தகவலை பெற வருமான வரித்துறைக்கு அதிகாரமுண்டு. தகவல் கோரப்பட்ட நபர் அதை கொடுப்பவருக்கு கடமைப்பட்டவர் ஆவார்.

வருமான வரித்துறையால் தன்னுடைய அதிகாரிக்குட்பட்ட எல்லையில் தொழில் செய்து வரும் நபரின் இடத்திற்குச் சென்றும் விசாரணை நடத்த முடியும். அப்படி துறை அதிகாரிகள் தொழில் செய்வோர் இடத்திற்கு நேரில் வரும் போது, தொழில் அதிபர் அல்லது அவருடைய தொழிலாளி அல்லது அந்நேரத்தில் அத்தொழிலை கவனித்துக் கொண்டிருக்கும் நபர் துறை அதிகாரிகளுக்கு உதவி செய்ய கடமைப்பட்டவர் ஆவார்.

அதிகாரிகளுக்கு தேவைப்பட்ட கணக்கு புத்தகங்கள், பதிவேடுகள் போன்றவற்றை பார்வையிட எடுத்துக் கொடுத்தல், பணம் மற்றும் சரக்கு முதலியவற்றை சரிபார்க்க தேவையானவை அல்லது அதிகாரி கோரும் எந்த ஒரு தகவலையும் மேற்கூறிய நபர்கள் செய்ய வேண்டும். இக்குறிப்பிட்ட தகவல்களை, தொழில் நடத்துபவர் வேறொரு இடத்தில் இருப்பினும் அளித்தல் அவசியம்.

அதிகாரிகள் ஒரு வணிகரின் இடத்திற்கு சாதாரணமாக அவர் வியாபாரம் நடத்தும் நேரத்திற்குள்ளாகவே செல்ல இயலும். வேறொரு இடமாயின் சூரிய உதயத்திற்கு முன் மற்றும் பின் செல்ல இயலும். மற்ற நேரங்களில் செல்ல இயலாது. அதிகாரிகள் தான் பார்வையிட்ட புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளில் சான்றாக ஒப்பமிடுதலையோ அல்லது சிறுகுறிப்பையோ நகலாக எடுத்து செல்ல முடியும். அதிகபட்சமாக 10 நாட்களுக்கு (விடுமுறை நாள்கள் தவிர) தான் பார்வையிட்ட கணக்கு புத்தகங்களை மற்றும் பதிவேடுகளை தன் வசம் வைத்துக் கொள்ளும் அதிகாரம் உண்டு. தான் பார்வையிட்ட சரக்கு மற்றும் ரொக்கம் முதலியவற்றின் விவரங்களை எழுதிக் கொள்ளவும், அங்குள்ள எந்த நபரிடமும் வாக்குமூலம் பெறவும் வகை செய்யப்பட்டுள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் சரக்கு மற்றும் விலையுயர்ந்த பொருள்களை அங்கிருந்து எடுத்துச் செல்ல அதிகாரம் கிடையாது.

சர்வேயின் போது மேற்கூறிய தகவல்களை ஒரு நபர் அளிக்க தவறினால் அவரை தன்னுடைய அலுவலகத்திற்கு நேரில் ஆஜராக கோரி தகவல்களை பெறவும் முடியும்.

இதில் கூறப்பட்ட விதிமுறைகளுக்கு சம்பந்தப்பட்ட நபர் நேரில் ஆஜராக தவறினால் நபருக்கு ரூ.10,000 வரை அபராதம் செலுத்த வேண்டும்.

இதேபோல் திருமணம் மற்றும் விசேஷங்களில், திருமணம், விசேஷம் முடிந்த பிறகு, அந்த விசேஷத்திற்கு செலவு செய்த ஒருவரிடமிருந்தோ, செலவு சம்பந்தமான தகவல் தெரிந்த ஒருவரிடமிருந்தோ தேவைப்பட்ட தகவல்களை பெற அதிகாரியால் பெற முடியும். அந்நபரிடமிருந்து வாக்குமூலத்தையும் பெற முடியும்.

இப்படி பலவகைகளில் பெறப்பட்ட தகவல்களை சான்றுகளாக கொண்டு வரி செலுத்துபவரின் வருமானம் அவரால் சரியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பதை துறை நிர்ணயம் செய்ய இயலும். இப்படி பெறப்பட்ட தகவல்கள் பொதுவாக ரகசியம் காக்கப்பட்ட ஆவணமானாலும் வருமான வரி சட்டத்திற்குள்பட்ட வருமான வரித்துறை வேறு துறைகளிடம் பகிர்ந்து கொள்ள இயலும். இத்தகவல் வரி செலுத்துபவருக்கு எதிராக பயன்படுத்தபடுமாயின், வரி செலுத்துவோருக்கு அதை மறுப்பதற்கான வாய்ப்பும், வரி நிர்ணயிக்கும் முன் அளிக்கப்படும்.

வருமான வரி -இறுதி தேதி

கடந்த சில நாள்களாக வருமான வரி பற்றிய அடிப்படைச் செய்திகள், வருமான வரிச் சட்டம் உருவான விதம், எந்த வருமானம் எந்த பிரிவின் கீழ் வரிக்கு உட்படுத்தப்படும், மொத்த ஆண்டு வருமானத்திலிருந்து கிடைக்கும் சில கழிவுகள், அறக்கட்டளை வருமானம் மற்றும் அதற்குரிய வரி விலக்கு, வருமான வரி பிடித்தம், வருமான வரி சம்மன் மற்றும் சர்வே, தகவல் பெற வருமான வரித்துறை அதிகாரிக்குள்ள உரிமைகள் பற்றி பார்த்தோம். வருமான வரி தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி மார்ச் 31-ம் தேதி. அரசுக்கு நாம் செலுத்தும் வரிகள், நலத் திட்டங்களாக மீண்டும் மக்களையே வந்தடைகின்றன. மேலும் அரசு எந்திரம் இயங்குவதற்கு வரி வருவாய் முதுகெலும்பு போன்றதாகும். எனவே அனைவரும் தவறாது வரி செலுத்துவது ஒரு வகையில் நாட்டு நலனுக்கு நாம் செய்யும் பங்களிப்பாகும்.

Posted in Amortization, AMT, Analysis, Assets, Backgrounder, Budget, Business, Capital, Defaltion, Deflation, Depreciation, Dividend, Economics, Education, Expenses, Explanation, Finance, Income Tax, Inflation, Inspection, Introduction, IT, Liabilities, Loans, Long term, Loss, markets, Mortgage, Primer, Profits, Recession, Revenues, Shares, Short term gains, Statements, Stocks, Tax | Leave a Comment »

PK Sivakumar – Brief Intro

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 14, 2006

பி.கே. சிவகுமார் þ ஓர் அறிமுகம்

சென்னையில் பிறந்த சிவகுமாரின் சொந்த ஊர், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர். பெற்றோர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். இலக்கியப் பாரம்பரியமுடைய குடும்பம். பெரிய பாட்டனார், டாக்டர் மு. வரதராசனாரின் தமிழ் வகுப்புத் தோழர். தமிழ் வித்வான். கவிதையை நயம்படப் பாடும் திறத்திற்காக “கவிநயம்” என்ற பட்டம் பெற்றவர். தந்தை பி.ச. குப்புசாமி அறுபதுகளிலும் எழுபதுகளிலும் “சந்திரமெüý” என்ற பெயரில் தமிழில் தொடர்ந்து எழுதியவர். விட்டல் ராவ் தொகுத்த இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகளில் தந்தையாரின் கங்கவரம் சிறுகதையும் இடம் பெற்றிருக்கிறது.

உயர்நிலைப் பள்ளியில் பேச்சுப் போட்டியில் ஆரம்பித்த சிவகுமாரின் ஆர்வம் எழுத்தின் பக்கமும் திரும்பியது. கோவை பூ.சா.கா. கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை பெüதீகமும், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை கணினி பயன்பாட்டியலும் (இர்ம்ல்ன்ற்ங்ழ் அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்ள்) முடித்தார். வெளியூர்க் கல்லூரி வாசம், வாழ்க்கை குறித்த அவரின் அணுகுமுறையை விசாலமாக்கியது என்று நினைவுகூர்கிறார்.

ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளாக கணினி மென்பொருள் வடிவமைப்புத் துறையில் (நர்ச்ற்ஜ்ஹழ்ங் ஈங்ஸ்ங்ப்ர்ல்ம்ங்ய்ற்) பணிபுரிகிறார். அதில் ஏறக் குறையப் பத்தாண்டுகளாக அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் கணினி மென்பொருள் துறையில் ஆலோசகராகப் (ஸ்ரீர்ய்ள்ன்ப்ற்ஹய்ற்) பணியாற்றி வருகிறார். தமிழ்ப் புத்தகங்களை இணையத்தில் விற்கும் முகமாகத் தொடங்கப்பட்ட எனிஇந்தியன்.காம் (அய்ஹ்ஐய்க்ண்ஹய்.ஸ்ரீர்ம்) தளத்தின் பின்னாலும், நியூ ஜெர்ஸி மாநிலத்து இந்திய/தமிழார்வ நிகழ்வுகளின் பின்னாலும் இவர் பங்களிப்புகள் உண்டு.

37 வயதாகும் சிவகுமாருக்கு மனைவியும், மகனும் மகளும் உண்டு. பத்தாண்டுகளாகக் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்தாலும், மேலைச் சிந்தனையின் தாக்கத்திற்கு ஆட்படாமல் தன்னுடைய சிந்தனை இந்தியத் தத்துவப் போக்குகளின் அடிப்படையில் இருப்பதை ஒரு சாதனையாகக் கருதுகிறார். எழுத்தில் தன்னுடைய திறமையைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாதவர், மிகவும் குறைவாக எழுதுகிறவர் என்று நண்பர்கள் இவரைப் பற்றி ஆதங்கப்பட்டாலும், எழுதுவதைவிட வாசிப்பதை அதிகம் விரும்புவதாகச் சொல்கிறார். இலக்கியம், தத்துவம், நாட்டாரியல், விளையாட்டு, அரசியல், மார்க்ஸியம், காந்தியம், ஆன்மீகம், சமூகக் கடமை என்று சிவகுமாரின் ஆர்வமும் ஈடுபாடும் பன்முகமானவை.

ஜே. கிருஷ்ணமூர்த்தி உரைகளின் மொழிபெயர்ப்பு, கவிதை, கட்டுரை என்று பரந்த தளத்தில் இயங்கி வருகிற சிவகுமார், அவ்வப்போது சிறுகதைகளும் எழுதி வருகிறார். திண்ணை இணைய இதழ், மரத்தடி இணையக் குழுமம் ஆகியவற்றில் இடைவெளிவிட்டு எழுதி வருபவர். இவரின் கட்டுரைத் தொகுதி “அட்லாண்டிக்குக்கு அப்பால்” ஜெயகாந்தன் அணிந்துரையுடனும் ஜெயமோகன் முன்னுரையுடனும் வெளியாகியுள்ளது.

தன் கருத்துகளை உறுதியாக முன்வைக்கத் தயங்காத தன்மை, தன் ரசனையை எப்போதும் செழுமைப்படுத்திக்கொள்ளத் தயாராக இருக்கும் திறந்த மனம், கோஷங்களையும் வெற்று வாதங்களையும் தாண்டிய தெளிவு, பழம் இலக்கியங்கள், புத்திலக்கியங்கள் ஆகியவற்றின் மீதான ரசனைச் சமநிலை, பாசாங்கு அற்ற தெளிவான நடை ஆகியன சிவகுமார் எழுத்தின் சிறப்பம்சங்களாகச் சுட்டப்படுகின்றன. கோபால் ராஜாராம், ஜெயகாந்தன், ஜெயமோகன், இந்திரா பார்த்தசாரதி, வெங்கட் சாமிநாதன் உள்ளிட்ட பலரின் பாராட்டைப் பெற்ற சிவகுமார், தமிழ்.சிஃபி.காம் வாசர்களுக்காகக் ‘கண்டுணர்ந்த காந்தி‘ என்ற கருவில் பத்தி ஒன்று தொடங்கியுள்ளார். அவரை வாசகர்கள் சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

Posted in Author, Biosketch, Gandhi, Introduction, PK Sivakumar, Sify, Summary, Tamil | Leave a Comment »