Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Internal Affairs’ Category

Waiver of dues a fillip to civic works: Mayor

Posted by Snapjudge மேல் மே 8, 2007

நகராட்சிகளின் கடன் தள்ளுபடியால் உள்ளாட்சித் துறைக்கு இனி நிதிப் பிரச்சினை இருக்காது: அமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை, மே 8: நகராட்சி மன்றங்களின் கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் உள்ளாட்சித் துறைக்கு இனி நிதிப் பிரச்சினையே இருக்காது என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நகராட்சி மன்றங்களின் கடன் தொகைகளைத் தள்ளுபடி செய்ததற்காக தமிழ்நாடு நகர் மன்றத் தலைவர்கள் பேரவை சார்பில் தமிழக முதல்வர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மு.க. ஸ்டாலின் பேசியது:

நகராட்சி மற்றும் மாநகராட்சி மன்றங்களின் கடனுக்கான வட்டி வீதத்தை 13.5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தபோது, வட்டியை மட்டுமல்லாமல் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். இதன்படி அனைத்து நகராட்சி மற்றும் 5 மாநகராட்சிகளின் கடன் தொகையான ரூ.793 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது.

உள்ளாட்சி அமைப்பில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தோடே கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் நகராட்சிகளின் சுமை குறைந்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு சிறப்பாக செயலாற்றி அரசுக்கு நற்பெயரை நகராட்சிகள் ஏற்படுத்தித் தரவேண்டும். நகராட்சி மன்றங்களின் கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் உள்ளாட்சித் துறைக்கு இனி நிதிப் பிரச்சினையே இருக்காது.

மத்திய, மாநில அரசுகளால் ஒதுக்கப்படக்கூடிய நிதியை முறையாகப் பயன்படுத்தினாலே நகராட்சிகளின் தேவைகள் இனி நிறைவேற்றப்பட்டுவிடும் என்றார் அவர். விழாவில் தமிழ்நாடு நகர்மன்றத் தலைவர்கள் பேரவைத் தலைவர் ஆர்.எஸ். பாரதி, மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன் மற்றும் நகர் மன்றத் தலைவர்கள் பங்கேற்றனர்.

Posted in Bonds, Budget, Civic, CMDA, Corporation, Councillor, CRR, Development, DMK, Economy, Finance, Funds, Government, Govt, Home, Interest, Internal Affairs, Loans, Local Body, Mayor, Metropolitan, MLC, Municipality, Public, Rajesh Lakhoni, Rates, Services, Stalin, Subramaniam, Subramanian, Tiruchi, Trichy, Waiver | Leave a Comment »

Indian Ambassador to Sri Lanka pokes her Head in Internal Affairs

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

இலங்கை ஜனாதிபதி மஹிந்தவுடன் அனுரா பண்டாரநாயக்க
இலங்கை ஜனாதிபதி மஹிந்தவுடன் அனுரா பண்டாரநாயக்க

இந்தியத் தூதுவர் இலங்கை விவகாரத்தில் தலையிடுவதாக இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு

இலங்கையின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களின் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் திருமதி. நிரூபமா ராவ் அவசியமின்றித் தலையிடுவதாகவும், அதனை அவர் உடனடியாக நிறுத்தவேண்டுமெனவும், இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சரும் ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினருமான, அனுரா பண்டாரநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

நேற்றைய தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க, “இலங்கையர்களாகிய எமக்கு எமது நாட்டை எவ்வாறு பாரமரிக்க வேண்டுமென்பது நன்கு தெரியும். இந்திய உயர்ஸ்தானிகர் திருமதி. நிரூபமா ராவ், அவரது தூதரகத்தின் நடவடிக்கைகளை மட்டும் கவனித்துக் கொண்டால் போதும். நாம் யாருடன் கூட்டு வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து எமக்குத் தெரியும். எமது நாட்டுப்பிரச்சனையை எவ்வாறு தீர்க்க வேண்டுமென்பது குறித்து அவர் ஆலோசனை எதனையும் வழங்க வேண்டிய அவசியம் இல்லை” என்று ஆவேசம் பொங்க தெரிவித்திருக்கிறார்.

மேலும் அங்கு உரையாற்றிய அவர், இலங்கையில் இந்தியத் தூதுவராகக் முன்னர் கடமையாற்றிய, காலஞ்சென்ற ஜே.என். டீக்சித், இலங்கை தொடர்பில் தனது தான்தோன்றித்தனமான பிடிவாதம் மிக்க அரசியல் கொள்கையினால்தான் அப்போது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே நிலவிவந்த பரஸ்பர நட்புறவில் விரிசல் ஏற்பட்டது என்றும் இதன்காரணமாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அதிகபட்ச விலையாகத் தனது உயிரையே கொடுக்க வேண்டி நேர்ந்தது என்றும் தெரிவித்திருக்கிறார்.

தனது உரையின் போது, கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அண்மையில் இடம்பெற்ற சக்திமிக்க கிளேமோர் குண்டுவெடிப்பிலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய இலங்கைக்கான முன்னாள் பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர், பஷீர் வலி முகம்மட், தன்மீது மேற்கொள்ளப்பட்ட இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு இந்திய உளவுத்துறையான – றோ அமைப்பே காரணம் என இஸ்லாமாபாத்தில் தெரிவித்திருப்பது கவலைக்குரிய விடயம் என்றும் சுட்டிக்காட்டிய பண்டாரநாயக்க, இலங்கையின் நட்புறவுமிக்க அயல்நாடுகளான இந்தியாவும், பாக்கிஸ்தானும் தமது பிணக்குகளிற்கான களமாக இலங்கையைப் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்.

இந்தியா மறுப்பு

இதேவேளை இலங்கை அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த இந்திய வெளியுறவு அமைச்சின் சார்பில் பேசவல்ல அதிகாரி, எந்தவொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிடுவது இந்திய அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்றும், இலங்கைக்கான தமது தூதுவரான நிரூபமா ராவ் அவர்கள் ஒரு மூத்த இராஜதந்திரி என்றும், அவர் உயர் தொழில்சார் தரத்துடனேயே செயற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இலங்கை- இந்திய இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான அவரது பங்களிப்பு அரசாங்கத்தினால் வரவேற்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Posted in Ambassador, Anura Bhandaranayakha, Assassination, Attempt, India, Internal Affairs, JN Dixit, Nirupama Rao, Pakistan, SAARC, Sri lanka, Tamil | Leave a Comment »