Archive for the ‘Intelligence’ Category
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2008
குழந்தைகளைக் கிழிக்காத புத்தகங்கள்
தஞ்சாவூர்க்கவிராயர்
புத்தகங்களைக் கிழித்துவிடாதீர்கள் என்று குழந்தைகளிடம் சொல்லுகிறோம்.
புத்தகங்களே! குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்கிறார் ஒரு புதுக்கவிஞர்.
குழந்தைகள் படிக்கிற புத்தகங்களைப் பார்க்கும்போது அவை எங்கே குழந்தைகளைக் கிழித்து விடுமோ என்று பயமாகத்தான் இருக்கிறது.
மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் போதுமான அளவு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தைகளுக்காக எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் பெரும்பாலும் குழந்தைத்தனமாக இருக்கின்றன.
குழந்தைகளுக்கு இப்படிச் சொன்னால் புரியாது; இதற்கு மேல் சொன்னால் புரியாது என்று நாமாகவே ஓர் அபிப்பிராயம் வைத்துக்கொண்டு எழுதுகிறோம். இது தவறு. குழந்தைகள் நம்மைவிடப் புத்திசாலிகள்.
குழந்தைகளுக்கு இருக்கிற புத்தம்புதுசான பார்வை நமக்குக் கிடையாது. இன்னும் களங்கப்படாத மனசு அல்லவா குழந்தைகள் மனசு?
குழந்தைகள் பார்வையில் தென்படும் உலகம் குற்றமற்றது. அழகு நிரம்பியது. அதனால்தான் குழந்தை எதைப் பார்த்தாலும் சிரிக்கிறது. குழந்தைகளுக்கான புத்தகம் எழுத குழந்தை மனசு வேண்டும். “தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு; அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி…’ அப்படியே ஒரு குழந்தை எழுதிய மாதிரியே அல்லவா இருக்கிறது.
குழந்தைகளுக்கு ஏராளமாகப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. வழவழதாளில் பளீரென்ற வண்ணப் புத்தகங்கள். உள்ளே யானை, குதிரை படங்கள். விலையும் யானை விலை, குதிரை விலையாகத்தான் இருக்கிறது.
நரிக்கு எட்டாத திராட்சைப் பழங்கள் மாதிரி குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் இந்தப் புத்தகங்கள் காய்த்துத் தொங்குகின்றன!
சின்னஞ்சிறு வயதிலேயே நல்ல புத்தகங்களை குழந்தைகளின் நண்பனாக்கி விட வேண்டும். அவை கேட்கிற புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் மேலாளராகப் பணியாற்றும் நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் மேசைமீது ஒரு காமிக்ஸ் புத்தகம் இருந்தது. “பையனுக்கா?’ என்றேன்.
“எனக்குத்தான்’ என்றார் சிரித்தபடி.
“அலுவலக டென்ஷனில் இருந்து விடுபட நான் காமிக்ஸ் புத்தகங்கள்தான் படிப்பேன்’ என்றார்.
குழந்தை வளர வளர குழந்தமை தொலைந்து போகிறது. “இன்னும் என்ன குழந்தையா நீ?’ என்று கேட்டு கொஞ்சநஞ்சம் பாக்கியிருக்கும் குழந்தை மனத்தையும் கருகச் செய்து விடுகிறோம்.
குழந்தையின் கேள்விகள் அற்புதமானவை. அவற்றுக்குப் பதில் சொல்லும்போது நாமும் குழந்தையாகி விடுகிறோம்.
புகைவண்டிப் பயணத்தின்போது எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவர் தன் குழந்தையை “சும்மா இரு, சும்மா இரு’ என்று அதட்டிக் கொண்டே வந்தார்.
“குழந்தை பாவம். என்ன வேண்டுமாம்?’ என்று கேட்டேன்.
“என்னவோ அசட்டுத்தனமாக தொணதொணக்கிறான். எரிச்சலாக வருகிறது’ என்றார்.
அவனை என் அருகே அழைத்து, “சொல்லு, என்ன வேணும்?’ என்று கேட்டேன்.
“மாமா, ரயில் என்ன சாப்பிடும்?’ என்று கேட்டான்.
இதுவா அசட்டுத்தனமான கேள்வி? அழகான கவிதை அல்லவா இது? ரயிலுக்கு உயிர் உண்டு. அதுவும் மனிதர்களைப் போலவே நகர்கிறது. மூச்சு விடுகிறது. கத்துகிறது என்பதால்தானே இந்தக் கேள்வியை குழந்தை கேட்கிறது?
நாம்தான் குழந்தைகளை உதாசீனப்படுத்துகிறோம். மேலைநாடுகளில் குழந்தைகளைப் பெரிய மனிதர்களாகவே நடத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக அண்மையில் ஆங்கில நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி:
லண்டனில் ஒரு குழந்தைகள் பூங்கா. அங்கே வாத்துகளோடு ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அதன் விரலை ஒரு வாத்து கடித்துவிட்டது. காயம் ஒன்றும் பலமில்லை. பூங்கா நிர்வாகமே குழந்தையின் விரலுக்கு மருந்து போட்டுவிட்டது. அங்கே ஓர் அறிவிப்புப் பலகை இருந்தது. அங்கே இருந்த வாத்துகள் மாட்சிமை தங்கிய இங்கிலாந்து மகாராணியாரின் பெயரில் உள்ள கருணை நிதியிலிருந்து பராமரிக்கப்படுவதாக ஒரு குறிப்பு இருந்தது.
குழந்தை உடனே இங்கிலாந்து மகாராணியாருக்கு ஒரு கடிதம் எழுதியது: “நீங்கள் வளர்க்கிற வாத்து என்னைக் கடித்துவிட்டது. விரலில் காயம்’ என்று எழுதியது.
கடிதம் மகாராணியாரின் பார்வைக்குப் போயிற்று. அவர் உடனே பதில் எழுதினார்:
“குழந்தாய்! உன் கடிதம் கிடைத்தது!
நான் வளர்க்கும் வாத்து உன்னை விரலில் கடித்து விட்டதற்காக வருந்துகிறேன். அதற்காக உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். காயம் ஆறியிருக்கும் என்று நம்புகிறேன்.
உன் பிரிமுள்ள,
விக்டோரியா.
நம் நாட்டில் இப்படிப்பட்ட கடிதம் எங்கே போயிருக்கும் என்று சொல்லத் தேவையே இல்லை அல்லவா?
குழந்தைகளை மதிக்கிற, குழந்தைகளைப் புரிந்துகொள்கிற, குழந்தமையைப் பாதுகாக்கிற பொறுப்புணர்ச்சி சமுதாயம் முழுவதும் உண்டாக வேண்டும். அப்போதுதான் அசலான குழந்தை இலக்கியம் இங்கே சாத்தியப்படும். பெரிய பெரிய இலக்கிய ஜாம்பவான்கள் கூட குழந்தை இலக்கியத்தின்பால் அக்கறை காட்டுவதில்லை.
குழந்தைகளுக்கான புத்தகங்கள் போதுமான அளவு இல்லாத சமூகம் என்பது தண்ணீரில்லாத நாற்றங்காலுக்குச் சமம்.
பள்ளிக்கூடங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். குழந்தைகளைப் பந்தயக் குதிரைகளாக மாற்றும் வேலை அங்கே மும்முரமாக நடக்கிறது. குழந்தைகளின் பாடப்புத்தகங்கள் அபத்தக் களஞ்சியமாக இருக்கின்றன.
குழந்தைகளை நூலகங்களில் பார்க்கவே முடிவதில்லை. வாசிக்கும் பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது. தொலைக்காட்சியும் கணினி விளையாட்டும் குழந்தைகளை கூடத்தை விட்டு வெளியேறாதபடி கட்டிப் போட்டுவிட்டன.
அண்மையில் நடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளுக்கான புத்தக அரங்குகளில் கூட்டம் மொய்த்தது. புத்தக வாசிப்புக்காக குழந்தைகள் ஏங்குவதையும், தொலைக்காட்சி தோற்றுப் போய்விட்டதையும் காண முடிந்தது.
தஞ்சாவூரில் அனன்யா பதிப்பக அதிபர் அருள் என்பவரும் இரா. சேதுராமனும் சேர்ந்து ஓசைப்படாமல் ஒரு மாபெரும் குழந்தைகள் கதைக் களஞ்சியத்தை உருவாக்கி வருகிறார்கள்~விழுதுகள் என்ற பெயரில்.
குழந்தைகளால் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது இக் களஞ்சியம் என்பது தான் இதன் சிறப்பு. பாட்டி வடை சுட்ட கதையை ஒரு குழந்தை எப்படிச் சொல்கிறது பாருங்கள்.
“ஒரு ஊரில் காக்கா இருந்தது. அப்போது காக்கா வடை சுட்டது. அந்தக் காக்கா வடை சுட்டு முடித்ததும் காக்காக்கள் பறவைகள் காக்காகிட்ட வந்தது. காக்காவும் பறவையும் சேர்ந்து சாப்பிட்டன. பறவைகளும் காக்காக்களும் சேர்ந்து விளையாடின. பிறகு எல்லோரும் தூங்கினார்கள். மறுநாள் காலையில் எல்லோரும் எழுந்தனர். முகம் கழுவினர். எல்லோரும் சாப்பிட்டன. பறவைகளும் காக்காக்களும் வீட்டுக்குச் சென்றார்கள்.’
இது மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு சிறுமி எழுதிய கதை. மற்றொரு கதையில் கரடியும் யானையும் ஒரே வீட்டில் வசிக்கின்றன. அங்கு விருந்தாளியாக சிங்கம் வருகிறது. ஒரு கதையில் பால் வேண்டும் என்று பூனையிடம் எலி கெஞ்சுகிறது. குழந்தைகளின் மனங்களிலிருந்து புறப்பட்டு வரும் புதிய காற்று அப்பப்பா என்ன ஒரு வாசம். எப்பேர்ப்பட்ட கற்பனை.
உலகம் பூராவும் ஹாரிபாட்டரின் கதைப் புத்தகங்கள் பரபரப்பாக விற்கப்பட்டதன் காரணம் என்ன? குழந்தைகளின் மனசைப் புரிந்துகொண்டு எழுதியதுதான் காரணம்!
தமிழ்நாட்டில் வசதி படைத்த குழந்தைகள் மட்டும் ஹாரிபாட்டர் புத்தகம் வாங்கிப் படித்து மகிழ்ந்தார்கள். “ஏழைக் குழந்தைகள் பாவம் என்ன செய்வார்கள்?’
இப்போதுதானே அவர்களை ஓட்டல்களிலிருந்தும் தொழிற்சாலைகளிலிருந்தும் கல்குவாரிகளிடமிருந்தும் மீட்டிருக்கிறோம்? அவர்களின் கைகளிலிருந்து மேசை துடைக்கும் துணியையும், ஸ்பானரையும், பெட்ரோல் பிடிக்கும் குழாய்களையும் அப்புறப்படுத்தி நல்ல புத்தகங்களைக் கொடுக்க வேண்டும்.
அழகான ஆச்சரியமான புத்தகங்கள்.
குழந்தைகளைக் கிழிக்காத புத்தகங்கள்!
(இன்று உலகக் குழந்தைகள் புத்தக தினம்)
Posted in Books, Children, Comics, Entertainment, family, Fiction, Habits, Intelligence, Kids, Knowledge, Library, Listen, Literature, publications, Publishers, Read, Story | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 7, 2008
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் கொல்லப்பட்டுள்ளார்
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய இலுப்பைக்கடவை பகுதியில் வேன் ஒன்றின் மீது இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படை அணியினர் சனிக்கிழமை பிற்பகல் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் ஒன்றில் விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு பொறுப்பாளராகிய சார்ல்ஸ் எனப்படும், கேர்னல் அருள்வேந்தன் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.
ஆனால், அருள்வேந்தன் கிளேமோர் மூலம் கொல்லப்படவில்லை, அவர் மோதலின் போதே கொல்லப்பட்டார் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்தார்.
இவருடன் பயணம் செய்த கேர்னல் தரத்திலான வேறு 3 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.
மன்னார் இலுப்பைக்கடவைக்கும் பள்ளமடுவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இவர்கள் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது, விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் நீண்டகாலமாக இருந்து வந்த கேர்னல் சார்ல்ஸ் கடந்த 2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் புதிதாக உருவாக்கப்பட்ட இராணுவ புலனாய்வுத் துறையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் என்றும் விடுதலைப் புலிகள் விபரம் வெளியிட்டிருக்கின்றனர்.
இதற்கிடையே, முகமாலையில் இராணுவத்தின் முன்னரங்க பகுதி மீது விடுதலைப் புலிகள் ஞாயிற்றுக்கிழமை காலை நடத்திய திடீர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
சுமார் 25 நிமிடங்கள் இடம்பெற்ற இந்தத் தாக்குதலின்போது தமது தரப்பில் சேதங்கள் எதுவுமில்லை என்றும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.
முகமாலை முன்னரங்க பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது நடத்திய தாக்குதலில் 4 விடுதலைப் புலிகளும் 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.
ஜயந்த தனபாலா ராஜினாமா
 |
|
இலங்கை ஜனாதிபதியுடன் ஜயந்த தனபாலா |
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விடுதலைப் புலிகள் உடனான சமாதான முயற்சியில் பிரதான ஆலோசகராக செயற்பட்ட ஜயந்த தனபாலா ராஜினாமா செய்துள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் கடந்த 2002 ம் ஆண்டு செய்து கொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து தன்னிச்சையாக விலகி கொண்டதாக அரசாங்கம் அறிவித்த சில தினத்தில் இந்த ராஜினாமா இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ஜயந்த தனபாலா கூறியுள்ளார்.
கலாநிதி ஜயந்த தனபாலவை அரசாங்க சமாதான செயலகத்தின் பணியாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நியமித்திருந்தார், அதன் பின்னர் 2005 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புதிய ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ இவரை தனது பிரதான ஆலோசகராக நியமித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் செயலாளர் நாயகம் பதவிக்கு இலங்கை சார்பில் இலங்கையின் சார்பின் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார் ஜயந்த தனபாலா.
Posted in ambush, Army, Charles, CIA, dead, Eelam, Eezham, FBI, I&B, Iluppaikkadavai, Intelligence, Jaffna, KGB, Killed, LTTE, Mannaar, Military, Murder, Pallamadu, Pirapaharan, Ravishankar, RAW, Shanmuganathan, Shanmuganathan Ravishankar, Sri lanka, Srilanka, Vanni, War | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 19, 2007
“நேஷனல் ஜியாகிரஃபி சேனலில்’ அறிவுஜீவி இளம் இந்தியர்கள் நிகழ்ச்சி
மும்பை, நவ. 18: அறிவுஜீவிகளாகத் திகழும் நான்கு இளம் இந்தியர்களின் திறமையை விவரிக்கும் சிறப்பு நிகழ்ச்சி “நேஷனல் ஜியாகிரஃபி சேனலில்’ ஒளிபரப்பாக உள்ளது.
மனித மனத்தின் தன்மை மற்றும் எதன்மூலம் மனிதர்கள் அறிவாளிகளாகத் திகழ்கிறார்கள் என்பதை விவரிக்கும் “என்னுடைய அபார மூளை’ என்ற தொடராக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
10 தொடர்கள் கொண்ட இந்நிகழ்ச்சி டிசம்பர் 10 முதல் டிசம்பர் 21 வரை ஒளிபரப்பாகவிருக்கிறது, தேசியவிருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நடிகை கொங்கணா சென் சர்மா இந்நிகழ்ச்சியை தொகுத்தளிப்பார்.
நம்மில் பலர் அறிவுஜீவிகளாக உள்ளனர். அத்தகைய திறமை உடையவர்களைப் பற்றிய தகவலை அனைவருக்கும் அறியவைப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம் என்று “நேஷனல் ஜியாகிரஃபி சேனல்’ நிர்வாக இயக்குநர் நிகில் மிர்சந்தானி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்த இதர விவரம்:
இளம்வயதிலேயே அபார திறமையுடன் விளங்கும் ஹைதராபாதை சேர்ந்த சித்தார்த் நாகராஜன் மற்றும் நிசால் நாராயணம், பெங்களூரை சேர்ந்த ததாகத் அவதார் துளசி, மும்பையை சேர்ந்த ராகவ் சச்சார் ஆகிய நான்கு இளைஞர்களைப் பற்றிய சிறப்பு அம்சங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளன.
இவர்களில் சித்தார்த் நாகராஜனின் தற்போதைய வயது 10. குழந்தைப் பருவத்திலேயே, அதாவது தனது மூன்று வயதிலேயே டிரம் இசைநிகழ்ச்சியை தனியாக நடத்திய சிறப்பு அம்சம் பெற்றவர் இவர்.
இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து 12 வயதாகும் நிசால் நாராயணம் கணிதத்தில் அபார திறமை பெற்றவர். கணித கோட்பாடுகள் பற்றிய இவரது ஆறு புத்தகங்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன.
சிறுவயதிலேயே தனது தந்தையின் நிதிநிலை அறிக்கையில் தவறுகள் இருந்ததைக் கண்டறிந்த மேதை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மிக இளம் வயதில் கின்னஸ் புத்தகத்தில் சாதனையாளராக இடம்பெற்ற இந்தியர் என்பது அவரது மற்றொரு சிறப்பு.
அடுத்த அறிவுஜீவி ததாகத் அவதார் துளசி, தனது 9 வயதிலேயே பள்ளிப்படிப்பை முடித்தவர். பட்டப்படிப்பு பட்டத்தை மறு ஆண்டிலேயே பெற்றார். 12-வது வயதில் முதுகலைப் பட்டம் பெற்றார். பிஎச்டி பட்டம் பெற்றவர்களில் மிகவும் இளையவர் என்ற பெருமை பெற்றார். தற்போது இவரது வயது 20.
ராகவ் சச்சார் தனது 4 வயதிலேயே இசைக்கருவிகளை லாவகமாக வாசித்து புகழ்பெறத் தொடங்கினார். ஆண்டுதோறும் ஒரு இசைக்கருவி என்ற அடிப்படையில் இதுவரை 24 இசைக்கருவிகளில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய இசை நிகழ்ச்சிகளில் குறைந்தபட்சம் 10 இசைக் கருவிகளை வாசிப்பார். இதில் புல்லாங்குழல், ஹார்மோனியம், மூன்று வகையான சாக்சபோன்கள் உள்ளிட்டவையும் அடங்கும். இவரது தற்போதைய வயது 26.
“நேஷனல் ஜியாகிரஃபி சேனலில்’ ஒளிபரப்பாகவிருக்கும் “என்னுடைய அபார மூளை’ நிகழ்ச்சியில் 7 வயது பியானோ இசை மேதை மார்க் யூவை பற்றிய சிறப்பு அம்சங்களும் இடம்பெற உள்ளன.
Posted in Brain, channel, Child, Children, Education, genius, Geography, Guiness, Intelligence, Kids, Maths, Media, minds, music, Musicians, Neurology, Performer, Prodigy, Records, Schools, Students, Study, TV | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007
தகவல் பெறும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க பல துறைகள் கோரிக்கை
‘அரசு நிர்வாகத்தில் வெளிப்படையான போக்கு இருக்க வேண்டும், ஊழல் குறைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தகவல் பெறும் உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், பல அரசு துறைகள் இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன’ என்று மத்திய தகவல் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.
மத்திய தகவல் கமிஷனின் ஆண்டு அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கோரி வருகிறது.
தகவல் கொடுப்பதால், நீதித்துறையின் தனித்தன்மை, நீதித்துறையின் நிர்வாகம் பாதிக்கப்படும் என்பது உச்சநீதிமன்றத்தின் வாதமாக உள்ளது.
இதே போல சி.பி.ஐ., மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி.,) ஆகியவையும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளன.
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை உளவு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கிறது. ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்களை தவிர பிற தகவல்களை இரண்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள துறைகள் அளிக்க வேண்டாம். இந்த இரண்டாவது அட்டவணையில் தங்கள் துறையையும் சேர்க்க வேண்டும் என்பது சி.பி.ஐ.,யின் கோரிக்கையாக உள்ளது.
தேர்வு மற்றும் பணி நியமன தகவல்களை வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கோரி வருகிறது. டில்லி மெட்ரோ ரயில் திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற வகையில் செயல்பட்டு வருவதால், எவ்வித தகவலும் அளிக்க டி.எம்.ஆர்.சி., முன்வர மறுக்கிறது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் செயல்பட்டால், கூடுதல் சுமை ஏற்படும் என்பது அந்த அமைப்பின் கருத்தாக உள்ளது.
கட்டணம் உயர்வு?
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என நுகர்வோர் விவகாரம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், சுரங்கம் ஆகிய அமைச்சகங்கள் ஆலோசனை வழங்கியுள்ளன. கேட்கப்படும் தகவல் நீண்ட காலத்துக்கு உரியதாக இருந்தால், முறையான அமைப்பில் இடம் பெறாத தகவல்களாக இருந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என அந்த அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், அதை பாதுகாக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுத்துறை நிறுவனமான பி.எச்.இ.எல்., தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் தகவலை அளிக்க போதிய கட்டமைப்பு வசதி இல்லை என சில துறைகள் தெரிவித்துள்ளன.
மத்திய நகர மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய கட்டடங்கள் கட்டுமான கார்ப்பரேஷன், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தனியார் துறையையும் கொண்டு வர வேண்டும். இல்லாவிடில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
அரசு துறைகளை சேர்ந்தவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள் மீது ஏகபோக உரிமை கொண்டாடுகின்றனர். குறைந்த கட்டணத்துக்கு அதிக தகவல்களை தெரிவிப்பதா என்ற எண்ணம் அவர்களிடம் காணப்படுகிறது. இது போன்ற எண்ணம் கொண்ட அதிகாரிகளின் கருத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Posted in Affairs, Afraid, Architecture, authority, Avoid, BHEL, Buildings, CBI, Central Information Commission, CIC, Construction, Consumer, Corruption, Courts, CPSC, Customer, Delays, Delhi, Disclosure, DMRC, Economy, Exempt, Express, family, Fast, Government, Govt, HC, Health, Hide, HR, immunity, Info, Information, Intelligence, Judges, Judiciary, Jury, Justice, kickbacks, Law, Metro, mines, NBCC, Order, OSA, parliament, Protect, Protection, PSU, PSUs, Rails, Railways, Recommendation, rights, RTI, SC, Scared, Secrets, Security, Trains, Transparency, Transport, Violation, Welfare | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 5, 2007
நியாயமில்லை, நியாயமேயில்லை…!
ஓய்வுபெற்ற அரசு அதிகாரி குறிப்பிட்ட காலவரம்புக்குப் பிறகு தனது அனுபவங்களையும் பதவிக்காலத்தில் சந்தித்த பிரச்னைகள் மற்றும் சம்பவங்களையும் புத்தகமாக எழுதலாமா கூடாதா? எழுதக் கூடாது என்று தனது துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு ( Research and Analysis Wing). இந்திய அரசின் வெளியுறவு ரகசியப் புலனாய்வுத் துறைதான் “ரா’ ( RAW) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தப் பிரிவு.
இப்படியோர் உத்தரவு பிறப்பித்ததற்குக் காரணம், இந்தப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் வி.கே. சிங் என்பவர் தனது பணிக்கால அனுபவங்களைப் புத்தகமாக வெளியிட்டதுதான். “ரா’ அமைப்பில் புரையோடிப் போயிருக்கும் ஊழலையும், அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகங்களையும், ரகசியக் கண்காணிப்புக்காக அரசால் ஒதுக்கப்படும் கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான பணம் எப்படி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றியும் தனது புத்தகத்தில் அந்த அதிகாரி குறிப்பிட்டிருந்ததுதான் நமது புலனாய்வுத் துறையினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
புலனாய்வுத் துறையைப் பற்றிய விமர்சனங்கள் எழக்கூடாது என்பதாலும் அதைப் பற்றி பேசினாலோ கேள்வி கேட்டாலோ அது தேசத் துரோகம் என்பதுபோலக் கருதப்படுவதாலும் அதிகாரிகள் எந்தவிதக் கேள்வியும் கேட்கப்படாமல் தன்னிச்சையாகச் செயல்படுகின்றனர் என்கிற அந்த அதிகாரியின் குற்றச்சாட்டு பெரிய சர்ச்சையை எழுப்பியதோ இல்லையோ புலனாய்வுத் துறையினரிடம் கோபத்தை ஏற்படுத்தியதில் ஆச்சரியமில்லை. மத்திய புலனாய்வுத் துறை ( C.B.I) யின் மூலம், அந்த ஓய்வுபெற்ற அதிகாரி மற்றும் அந்தப் புத்தகத்தின் பதிப்பாளர் ஆகிய இருவரின் வீடுகளும் சோதனையிடப்பட்டன.
அந்தப் புத்தகத்தில் இரண்டு முக்கியமான பிரச்னைகளை எழுப்பி இருக்கிறார் மேஜர் ஜெனரல் சிங். முதலாவது, “ரா’ அமைப்பு, ஆட்சியாளர்களால் எதிர்க்கட்சியினருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பது. மக்கள் வரிப்பணம் புலனாய்வு என்கிற பெயரில் கணக்கு வழக்கே இல்லாமல் செலவழிக்கப்படுவதால், “ரா’ அமைப்பின் நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் செலவுகள் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும் சிங் ஆலோசனை கூறியிருக்கிறார்.
மேஜர் ஜெனரல் கூறியிருக்கும் சம்பவங்களும் குற்றச்சாட்டுகளும் தவறு, உண்மைக்குப் புறம்பானவை என்றால், அவர் மீது கிரிமினல் சட்டப்படி வழக்குத் தொடர்வதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அவர் எழுப்பி இருக்கும் பிரச்னைகளும் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் சம்பவங்களும், அரசு ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார் என்கிற வரம்பிற்குள் உட்படாது. இந்த நிலையில், அவர் மீது தொடுக்கப்பட்ட மத்திய புலனாய்வுத் துறை சோதனை, அந்தத் துறை எப்படி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும், “ரா’ அமைப்பிலுள்ள அதிகாரிகள் எந்த அளவுக்குத் தங்களைப் பற்றிய குற்றச்சாட்டுகளைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதையும்தான் காட்டுகிறது.
இந்தப் பிரச்னையில் இன்னொரு விஷயமும் அடங்கும். 1923-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசால் அடிமை இந்தியாவை அடக்கியாள உருவாக்கப்பட்ட அரசின் ரகசியக் காப்புச் சட்டம் ( Official Secrets Act) இப்போதும் தொடர வேண்டிய அவசியம்தான் என்ன? எந்தவிதக் கேள்வியும் இல்லாமல், சாட்சிகள் இல்லாமல், சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையில் யாரை வேண்டுமானாலும் தேசநலனுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறிக் கைது செய்து சிறையிலடைக்கும் வெள்ளையர் கால அரசின் ரகசியக் காப்புச் சட்டம் இப்போதும் தொடர்கிறது என்பதிலிருந்து என்ன தெரிகிறது?
இந்தியக் குடியரசின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்திபடைத்த குடிமகன், அடக்குமுறை ஏகாதிபத்திய ஆட்சிக் கால சட்டங்கள் காரணமாக சுதந்திரமாக நடமாட முடியாது என்றால் அது நியாயமில்லை. எந்தவொரு துறையும் மக்களின் கண்காணிப்புக்கு அப்பாற்பட்டதாக இருப்பது என்பது நியாயமே இல்லை.
Posted in Abuses, Airforce, Army, Author, Books, CBI, Center, Contempt, Experiences, FBI, General, Govt, Intelligence, leak, Major, Military, Navy, Non-fiction, Officer, Oppression, OSA, Politics, Power, Publisher, Raids, RAW, Secrets, Singh, Violation, Writer, Writing | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2007
———————————————————————————————————————–
தாவூத் இப்ராகிம் அமெரிக்காவிடம் ஒப்படைப்பு- பாகிஸ்தான் உளவுப்படை முடிவு
இஸ்லாமாபாத், ஆக.8-
மும்பை தொடர் குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் தன்கூட்டாளிகள் சோட்டா ஷகீல், டைகர் மேமனுடன் பாகிஸ் தானில் பதுங்கி இருக் கிறான்.
இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு அவன் ஆயுத சப்ளைசெய்து வரு வதால் அவனை பிடித்து ஒப்படைக்கும்படி இந்தியா கடந்த 14 ஆண்டுகளாக பல தடவை கேட்டது.
கடந்த சில ஆண்டுகளாக தாவூத் இப்ராகிம் அல்- கொய்தா இயக்கத்துக்கு நிதி உதவி, ஆயுத சப்ளை செய்வதால், அவனை தங் களிடம் ஒப்படைக்க வேண் டும் என்று அமெரிக்க கூறி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தாவூத் இப்ராகிம் சோட்டா ஷகீல், டைகர் மேமன் ஆகிய மூவரையும் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ பிடித்து தன் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே தாவூத் இப்ராகிம் துப்பாக்கி சண் டையில் இடது காலில் காயம் அடைந்து கராச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டுள்ளதாக மற்றொரு தகவல் வெளியானது. இதனால் தாவூத் இப்ராகிம் பற்றி குழப்பம் ஏற்பட்டது. தாவூத் இப்ராகிம் தன் செல்போனை எடுத்து பேசாததால் அவர் பிடிபட்டு இருக்கலாம் என்று அவரது கூட்டாளிகள் சந்தேகம் தெரிவித்தனர்.
இந்திய உளவுத்துறை இது வதந்தியாக இருக்கலாம் என்றது, என்றாலும் நேற்று காலை மத்திய அரசு, “தாவூத் இப்ராகிமை ஒப்படையுங்கள்” என்றும் பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்தது.
தாவூத் இப்ராகிம் பற்றி இந்திய தொலைக்காட்சிகள் வெளியிட்ட பரபரப்பு தகவல்களை வழக்கம் போல பாகிஸ்தான் மறுத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சக செய்திë தொடர்பாளர் பிரீகேடியர்ஜாபித் இக்பால் சீமா கூறியதாவது:-
தாவூத் இப்ராகிம் என்ற பெயரில் யாரும் பாகிஸ்தானில் இல்லை. அந்த பெயருடைய யாரையும் பாகிஸ்தான் ராணுவமோ, போலீசோ கைது செய்யவில்லை. அவரை நாங்கள் கைது செய்ததாக வெளியான தகவல்களில் சிறி தும் உண்மை இல்லை.
இத்தகைய தகவலை பரப்பி விட்டது யார் என்று தெரியவில்லை. அதிபர்முஷ ரப் ஞாயிற்றுக்கிழமை முதல் கராச்சியில்தான் இருக்கிறார். இதனால் கராச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே கராச்சியில் துப்பாக்கி சண்டை நடக்க வாய்ப்பே இல்லை. அப்படி நடந்திருந்தால் இவ்வளவு பெரிய நகரில் அதை எப்படி மூடி மறைக்க முடியும்ப
இவ்வாறு பிரீகேடியர் ஜாவீத் இக்பால் சீமா கூறினார்.
தாவூத் இப்ராகிம்பற்றி வெளியாகி வரும் முரண் பாடான தகவல்கள் துபாய், மற்றும் மும்பையில் உள்ள உறவினர்களையும், கூட் டாளிகளையும் தவிக்க வைத் துள்ளது. தாவூத், டைகர் மேமன், சோட்டாஷகீல் மூவ ரையும் கடந்த 3 தினங்களாக தொடர்பு கொள்ள இய லாததால் நெருங்கிய உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தாவூத் இப்ராகிமின் சகோதரி ஹசீனாபர்க்கர் நேற்று குடும்ப உறுப்பினர் களுடன் சேர்ந்துநீண்ட நேரம் தொழுகையில் ஈடுபட்டார். அவர் கூறுகையில் “கடந்த சில தினங்களாக தாவூத்துடன் பேச முடியவில்லை. போன் தொடர்பு துண்டிக்கப்ப ட்டுள் ளது” என்று கவலையுடன் கூறினார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் போலீசார், தாவூத் இப்ராகிம் கைது செய்யப்பட்டுள்ளதை இன்று காலை உறுதி செய்த னர். போலீஸ் அதிகாரி ஒருவர் இது பற்றி கூறுகையில், “தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், டைகர் மேமன் மூவரையும் ஐஎஸ்.ஐ. கைது செய்துள்ளது. ப.லுசிஸ்தான் தலைநகரான குயட்டாவின் புறநகரில் ஒரு பங்களாவில் அவர்கள் மூவரும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
போலீசார் வெளியிட்டுள்ள இந்த தகவல் தாவூத் இப்ராகிம் குடும்பத்திலும் கூட்டாளிகள் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ் தான் வாயை திறந்து உண் மையை வெளியிடாத வரை இந்த விவகாரத்தில் குழப் பமே மிஞ்சும் என்ற நிலை நிலவுகிறது.
இந்த நிலையில் தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், டைகர் மேமன் மூவரையும் காதும் காதும் வைத்தது போல மிக ரகசியமாக அமெ ரிக்காவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் முடிவு செய் துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆப் கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்திடம் அவர்களை பாகிஸ்தான் உளவுத்துறை ஒப்படைக்கும் என்று கூறப்படுகிறது.
இது சாத்தியப்படாதபட் சத்தில் தாவூத் இப்ராகிம், டைகர் மேமன், சோட்டாஷகீல் மூவரையும் பாகிஸ்தான் உளவு அமைப்பே சுட்டுக் கொன்று விடும் என்று தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கடுமையான நெருக்கடியால் முஷரப் அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
கடந்த 14 ஆண்டுகளாக இந்தியா கேட்டபோது பாகிஸ் தான் தாவூத் எங்களிடம் இல்லை, இல்லை என்று சாதித்து விட்டது. ஆனால் கடந்த வாரம் அமெரிக்க ராணுவம் தாவூத் இப்ராகி மின் அல்-கொய்தா தொடர்பை ஆதாரங்களுடன் நிரூபித்தது.
இதனால் நெருக்கடிக்குள் ளான பாகிஸ்தான், தாவூத் இப்ராகிம் தலைவலியாக மாறிவிட்டதால் அவன் கதையை முடித்து விடலாம் என்ற உச்சக்கட்ட முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தாவூத் இப்ராகிமுக்கு சர்வதேச அளவில் பரம எதிரியாக இருப்பவன் சோட்டா ராஜன். இவனும் மும்பை நிழல் உலக தாதாக் களில் ஒருவன் ஆவான். சிங் கப்பூரில் பதுங்கி இருக்கும் இவன் கூறியதாவது:-
தாவூத் இப்ராகிம் பாகிஸ் தானில்தான் இருக்கிறான். அங்கு முகத்தை சர்ஜரி செய்து மாற்றி உள்ளான். அடிக்கடி ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளுக்கு போய் வருகிறான்.
என் துப்பாக்கி குண்டுகளுக் குத்தான் அவன் சாக வேண் டும். என்னுடைய இந்த லட் சியம் நிறைவேறும் வரை நான் ஓய மாட்டேன்.
இவ்வாறு சோட்டா ராஜன் கூறினான்.
———————————————————————————————————————–
13 ஆண்டுகள் தலைமறைவு- மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளுடன் கைது
மும்பை, ஆக. 7-
1993-ம் ஆண்டு 300 பேரை பலி கொண்ட மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு “மூளை” யாக இருந்து சதி திட்டத்தை நிறை வேற்றியவன் தாவூம் இப்ராகிம்.
மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்த இவன் மும்பையில் குண்டுகள் வெடிப்பதற்கு முந்தின நாளே கூட்டாளிகளுடன் துபாய் வழியாக பாகிஸ் தானுக்கு தப்பிச் சென்று விட்டான்.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் அவன் தங்கி இருந்தான். அவனுக்கு தேவையான எல்லா வசதி களையும் பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் உளவுத் துறையும் செய்து கொடுத்தது. பல ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் வைத்துள்ள தாவூத் இப்ராகிம் கடந்த 13 ஆண்டுகளாக கராச்சியில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.
இதைக்கண்டு பிடித்த இந் திய உறவுத் துறை கராச்சி யில் இருக்கும் தாவூத் இப் ராகிமையும், அவன் கூட் டாளிகளையும் கைது செய்து ஒப்படைக்குமாறு வேண்டு கோள் விடுத்தது. இதை ஏற்க மறுத்த பாகிஸ்தான் அரசு, தாவூத் இப்ராகிம் என்ற பெயரில் பாகிஸ்தான் நாட்டில் யாரும் இல்லை என்று அறிவித்தது. கடந்த 13 ஆண்டுகளாக தாவூத் இப்ராகிம் பற்றிய எல்லா தக வல்களையும் பாகிஸ்தான் மறுத்தே வந்தது.
கடந்த 2005-ம் ஆண்டு தாவூத் இப்ராகிம் தன் மூத்த மகள் மக்ரூக் இப்ராகிமை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியாண்டட்டின் மகன் ஜுனையட் மியான்டட்டுக்கு திருமணம் செய்து கொடுத்தார். இதன் மூலம் தாவூத் இப்ராகிம் கராச்சியில் வாழ்வது உறுதி படுத்தப்பட்டது. அப்போதும் பாகிஸ்தான் தாவூத் இப்ராகிமை பிடித்து இந்தி யாவிடம் ஒப்படைக்க முன்வரவில்லை.
இதற்கிடையே உலக அள வில் பின்லேடனின் அல் கொய்தா பயங்கர வாதி களை ஒடுக்க தீவிர நடவடிக் கைகளில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவத்தின் பார்வையில் தாவூத் இப்ராகிம் சிக்கினான். உலகம் முழுக்க “ஹெராயின்” போதை பொருட்களை வினியோகிக்கும் தாவூத் இப் ராகிமின் கும்பல், கடந்த சில ஆண்டுகளாக அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பல வகை களில் மறைமுக உதவிகள் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு தேவை யான ஆயுதங்களையும் வெடிப் பொருட்களையும் ரகசியமாக கடத்தி சென்று ஒப்படைக்கும் படுபாதக செயலை தாவூத் இப்ராகிம் கும்பல் செய்தது. அதோடு அல் கொய்தா இயக் கத்துக்கு அவன் நிதி உதவியும் செய்தான். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, தாவூத் இப்ராகிமை பிடித்து எங்களிடம் ஒப்படையுங்கள் என்று கோரிக்கை விடுத்தது.
இதற்கும் பாகிஸ்தான் வழக்கம் போல மழுப்பலான பதிலையே அளித்தது. தாவூத் இப்ராகிமுக்கும், அவனது கும்பலுக்கும் பாகிஸ்தான் அரசே அடைக்கலம் கொடுப் பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, அவர்களை கராச்சியில் இருந்து விரட் டும்படிமுஷரப்புக்கு நெருக்கடி கொடுத்தது.
இந்த நிலையில் கராச்சியில் உள்ள ரீஜெண்டு கிரவுன் பிளாசா ஓட்டலில் தாவூத் இப் ராகிமுக்கும், பிர்ரா ஜ×தீன் பவீசா என்ப வனுக் கும் இடையே கடந்த வியா ழக்கிழமை திடீர் மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் தாவூத் இப்ராகிம் இடது காலில் குண்டு பாய்ந்து காயம் அடைந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியா னது. இது உலகம் முழுக்க தாதா கும்பலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அத்தகைய சம்பவம் எது வும் நடைபெறவில்லை என்று கராச்சி போலீசார் மறுத்தனர்.
இந்த பரபரப்பு ஓய்வதற்குள் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான் உளவுபடையிடம் சிக்கி உள்ள தகவல் நேற்றிரவு வெளியானது. பாகிஸ்தான் – ஆப்கானிஸ் தான் எல்லையில் உள்ள ஒரு ஊரில் தாவூத் இப்ராகிம் பதுங்கி இருந்த போது ராணுவத்தினரும், உளவுத் துறையினரும் அவனை சுற்றி வளைத்து கைது செய்தனர். உளவுத் துறையினர் அவனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
தாவூத் இப்ராகிமுடன் அவனது நம்பிக்கைக்குரிய கூட்டாளி சோட்டா ஷகீல் மற்றும் 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பை முன் நின்று நடத்திய டைகர் மேமனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரையும் குவாட்டா நகரின் புறநகரில் உள்ள ஒரு பங்களாவில் பலத்த பாதுகாப்புடன் உளவுத் துறை வைத்துள்ளது. இது பற்றி சர்வதேச நாடுகள் கேட்டதற்கு வழக்கம் போல பாகிஸ்தான் மவுனம் சாதித்து
வருகிறது.தாவூத் இப்ராகிம் துப்பாக்கி சண்டையில் காயம் அடைந்துள்ளானாப அல்லது அவனை பாகிஸ்தான் உளவு படை பிடித்து வைத்துள்ளதா? என்பன போன்ற எதையும் பாகிஸ்தான் உறுதி செய்யவில்லை. இதில் பதில் கூறினால் தனக்கு நெருக்கடி ஏற்பட்டு விடும் என்று பாகிஸ்தான் அரசு பயப்படுகிறது. எனவே தாவூத் இப்ராகிம் பிடிபட்டுள்ளதை மூடி மறைக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.
தாவூத் பற்றி வெளியாகும் தகவல்கள் வெறும் புரளி என்று இந்திய உளவுத்துறை கூறி உள்ளது. தாவூத்தை காப்பாற்ற பாகிஸ்தான் நாடக மாடுவதாக இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.
என்றாலும் தாவூம் இப்ரா கிம் உளவுப்படையிடம் சிக்கி இருப்பதை மும்பை, துபாய், லண்டனில் உள்ள அவன் கூட்டாளிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். தாவூத் இப்ராகிமின் செல்போன்களில் இதுவரை அறிமுகம் இல்லாதவர்கள் பேசுவதால் அவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தாவூத் இப்ராகிமின் செல்போனை எடுத்து பேசும் உளவுப் படையினர் மறு முனையில் பேசுபவரிடம் “உங்கள் பெயர் என்னப எங்கு இருந்து பேசு கிறீர்கள்ப சொல்லுங்கள். தாவூத்பாயிடம் சொல்லி விடுகி றோம்” என்றே சொல்கி றார்களாம்.
கடந்த 13 ஆண்டு தலை மறைவு வாழ்க்கையில் தாவூத் இப்ராகிமிடம் இருந்து இப்படி பதில் வந்ததே இல்லையாம். இதனால் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள், தொழில் நண்பர்கள் மிகவும் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இதற்கிடையே தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், டைகர் மேமன் மூவரையும் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா மீண்டும் இன்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து ஆயுத சப்ளை செய்து வருவதால் தாவூத் இப்ராகிம் நடவடிக்கையை முடக்குவதை மிக முக்கிய பணியாக இந்தியா கருதுகிறது.
அது போல உலக அளவில் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு உதவுவதால் தாவூத் இப்ராகிமை பிடித்து தண்டிக்க அமெரிக்க ராணுவம் துடி துடித்துக் கொண்டு இருக்கிறது. இந்தியா, அமெரிக்கா இரண்டுமே தாவூத் இப்ராகிமை பெற சர்வதேச போலீஸ் உதவியை நாடி உள்ளன. ஆனால் பாகிஸ்தான் தன் மவுனத்தை கலைத்து தாவூத் இப்ராகிம் பற்றிய மர்மங்களை உலகுக்கு வெளிப்படுத்துமா என்பதில் கேள்விக்குறி நீடிக்கிறது.
———————————————————————————————————————–
Posted in 1993, 9/11, AK-47, AK47, Al Qaida, Al Quaeda, Al quaida, al-Qaeda, Al-Queda, Al-Umma, America, Arabia, Arms, Arrest, Assets, Backgrounder, Baluchistan, Bharatiya Janata Party, Biosketch, BJP, Blast, Bombay, bombings, Bombs, CBI, Chhota, Chhota Rajan, Chhota Shakeel, Chota, CIA, Clifton, Clifton beach, Clifton Kahakasha, Cocaine, Commerce, Company, Criminal, Currency, Custody, D-company, Dawood, Dawood Ibrahim, dead, Dealer, Death, defence, Defense, Detained, Detainee, Don, Drugs, Dubai, Dutt, Estate, Extortion, extradition, Extremism, Extremist, Extremists, Faces, Fake, Finance, Gulf, Haseena, Haseena Parkar, Hasina, Havala, Hawala, Hindutva, Ibrahim, Illegal, India, Intelligence, Inter Services Intelligence, Interpol, Investigation, Iraq, ISI, Islam, Jama’at ud-Dawa, Justice, Karachi, Kovai, Law, Masjid, Memon, Military, Money, Movies, Mumbai, Murder, Musaraf, Musaraph, Musharaf, Musharaff, Musharaph, Musharraf, Muslim, Narcotics, Navy, NDA, Order, Pakistan, Parkar, people, Pervez, Pervez Musharraf, Police, Property, Quetta, Rajan, RSS, Saudi, Security, Shakeel, Smuggle, smuggler, Smuggling, Terrorism, terrorist, Terrorists, Tiger, Treaty, UAE, Underworld, UPA, US, USA, Weapons, WTC, Yakub, Yakub Memon | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007
காசிப்ஸ்: கூடுதல் கமிஷனரை காப்பாற்றிய தாதா
சென்னை மாநகரில் புதிய கமிஷனராக நாஞ்சில் குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் என்ன விஷேசம் என்று நீங்கள் கேட்கலாம். இவர் கோவை மாநகர் கமிஷனராக இருந்த போதுதான், தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தினர். அந்த சம்பவத்துக்கு தண்டனை கடந்த 1ம் தேதி வழங்கப்பட்டது. அதே நாளில் நாஞ்சில் குமரன் சென்னை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். என்ன ஒரு பொருத்தம்.
கமிஷனர் லத்திகாவை மாற்றும் போதே, கூடுதல் கமிஷனர் ஜாங்கிட்டையும் மாற்ற அரசு நினைத்தது. இதை எப்படியோ அறிந்து கொண்ட ஜாங்கிட், வெள்ளை ரவியை சுட்டு தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார். முதல் நாள் தூத்துக்குடியில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள சென்று இருந்தார். ஆனால் வெள்ளை ரவி சுட்டுக் கொன்ற போது, அவர் அங்கு இருந்ததாக கமிஷனர் லத்திகா சொல்லவில்லை. ஆனால் பத்திரிகைகளில் அவருக்கு காயம் இருந்ததாக செய்திகள் வந்தது. தூத்துக்குடியிலும் ஓசூரிலும் ஓரே நபர் எப்படி இருந்திருக்க முடியும். இது மெடல் பெறுவதற்காக போட்ட நாடகம் என்று ஜாங்கிட்டுக்கு எதிர் தரப்பினர் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஜான்கிட்டுக்கும் குமரனுக்கும் அவ்வளவாக ஆகாது. எனவே அவர் விரைவில் மாற்றப்படுவார். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருக்கும், ராதாகிருஷ்ணன் கூடுதல் கமிஷனராக பதவி ஏற்க கூடும் என்றும் சொல்லப் படுகிறது.
சென்னை போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன்சென்னை, ஆக. 2:சென்னை நகர போலீஸ் கமிஷனராக ஜி. நாஞ்சில் குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ். மாலதி பிறப்பித்துள்ளார்.உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக பதவி வகிக்கும் ஜி. நாஞ்சில் குமரன், தற்போது சென்னை நகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை நகர கமிஷனராக இருந்து வந்த லத்திகா சரண் தற்போது கூடுதல் டிஜிபியாக நிர்வாகத் துறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அதேபோல நிர்வாகத் துறையில் ஏடிஜிபியாக பணியாற்றி வந்த கே. ராமானுஜம் தற்போது தமிழ்நாடு 3-வது போலீஸ் கமிஷனின் முழுநேர உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நிர்வாகத் துறையுடன் 3-வது போலீஸ் கமிஷனின் உறுப்பினர் செயலர் பதவியை கூடுதல் பொறுப்பாக இவர் கவனித்து வந்தார். தற்போதைய உத்தரவின்படி, இவர் முழுநேர உறுப்பினர் செயலராக பணியாற்றுவார்.—————————————————————————————————–
சென்னை கமிஷனர் இன்று பதவி ஏற்றார்: பதவி சவாலானது- நாஞ்சில் குமரன் பேட்டி
சென்னை, ஆக. 2-
சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள நாஞ்சில் குமரன் இன்று பொறுப்பேற்று கொண்டார். அவரிடம் மாறுதலாகி செல்லும் கமிஷனர் லத்திகாசரண் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
புதிய கமிஷனராக பொறுப்பேற்றதும் நாஞ்சில் குமரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் கூறியதாவது:-
தமிழக அரசும், முதல்- அமைச்சரும் என் மீது நம்பிக்கை வைத்து மிகப்பெரிய பொறுப்பான கமிஷனர் பதவியை வழங்கி உள்ளனர். சவாலான இந்த பணியை பொதுமக்கள் திருப்திபடும் அளவுக்கு உழைத்து நிறைவேற்றுவேன்.
பொதுமக்களுக்கு சேவை செய்ய கிடைத்த நல்ல வாய்ப்பாக கருகிறேன். சட்டத்துக்கு உட்பட்டு குற்றங்களை தடுக்க நிலுவையில் உள்ள வழக்கு களை விரைந்து முடிக்க தீவிர கவனம் செலுத்துவேன்.
குறிப்பாக சென்னை மாநகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சிக்கி திணறும் சூழ்நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய அனைத்து முயற்சி களையும் எடுப்பேன். சென்னையில் குற்றங்களை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த தனிப்படைகள் விரிவாக்கப்பட்டு வலுவூட்டப்படும்.
கேள்வி: போலீஸ் நிலையங்களில் அரசியல் குறுக்கீடு அதிகமாக உள்ளதே?
பதில்: இது பொதுப்படையான கேள்வி. போலீஸ் நிலையங்களுக்கு அனைத்து தரப்பினரும் வருவார்கள். இதில் குறுக்கீடு என்பது பணிகள் செய்யாதே என்று தடுப்பதாகும். ஆனால் போலீஸ் நிலையத்துக்கு வந்து பொதுமக்களுக்கு பயன் தரும் விஷயங்களை செய்யுங்கள் என்று சொல்வது வேறு. பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அனைவரும் தேடி வரும் இடமாகத்தான் போலீஸ் நிலையங்கள் இருக்கிறது.
கேள்வி: லஞ்ச ஊழல் அதிகரித்துள்ளதே?
பதில்: லஞ்சம் உலகளாவியது. தனிப்பட்ட முறையில் யார் மீது புகார் செய்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி: போலீஸ் பொது மக்கள் நல்லுறவு எப்படி உள்ளது?
பதில்: ரவுடிகள் அட்டகாசம் இல்லை. பொதுமக்கள் இரவு நேரங்களிலும் பயமில்லாமல் நடமாடும் சூழ்நிலை நிலவுகிறது. பொதுமக்களுடனான உறவுக்கு இதுவே சாட்சி.
கேள்வி: மத்திய குற்றப்பிரிவு போலீசில் நில மோசடி வழக்குகள் ஏராளமாக நிலுவையில் உள்ளது. நில மோசடியை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
பதில்: இந்த விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் ஒரு நிருபர் எல்லோரும் கமிஷனர் பதவிக்கு வர ஆசைப்படுவார்கள். இந்த பதவிக்கு நீங்கள் வந்துள்ளீர்கள். என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த நாஞ்சில்குமரன், போலீஸ் வேலையை செய்ய போகிறேன் என்றார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுனில்குமார், இணைகமிஷனர்கள் ரவி, பாலசுப்பிரமணியம், துரைராஜ், சந்தீப்ராய் ரத்தோர், உளவுபிரிவு போலீஸ் துணை கமிஷனர் நல்லசிவம், உதவி கமிஷனர்கள் இளங்கோ, பன்னீர் செல்வம் மற்றும் துணை கமிஷனர்கள் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்கள்.—
———————————————————————————————-
புதிய டிஜிபி ராஜேந்திரன்
சென்னை, ஆக. 30: தமிழக காவல்துறை தலைவராக பி.ராஜேந்திரன் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை, தமிழக உள்துறை செயலர் எஸ்.மாலதி புதன்கிழமை பிறப்பித்துள்ளார்.
தமிழக காவல்துறை தலைவராக உள்ள டி.முகர்ஜியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் (யுஎஸ்ஆர்பி) தலைவராக உள்ள பி.ராஜேந்திரன், புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்கிறார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பயோ-டேட்டா: 7.12.1947-ல் திருநெல்வேலியில் பிறந்த பி.ராஜேந்திரன், இந்தியக் காவல் பணியில் (ஐபிஎஸ்) 1973-ம் ஆண்டு தமிழக பிரிவில் தேர்ச்சி பெற்றார். இவர் ஏஎஸ்பியாக வேலூரில் பணிக்குச் சேர்ந்தார். பின்னர் ராமநாதபுரம் எஸ்பியாகப் பணியாற்றியுள்ளார். அதைத்தொடர்ந்து கியூ பிரிவு எஸ்பியாகவும் இருந்துள்ளார்.
சிவில் சப்ளை பிரிவில் டிஐஜி ஆகவும், கடலோரப் பாதுகாப்பு பிரிவு டிஐஜி ஆகவும் இருந்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிரிவில் ஐ.ஜி.யாகப் பணிபுரிந்துள்ளார். கோவை நகர கமிஷனராகவும், தலைமை அலுவலகத்தில் கூடுதல் டிஜிபியாகவும் (நிர்வாகம்) பணிபுரிந்துள்ளார்.
Posted in Action, Additional Director General of Police, Arms, Bombs, Bribery, Bribes, CB-CID, CBI, Charan, Chat, Chennai, CID, Citizen, Commissioner, Common, Congestion, CoP, Correctional, Corrections, Corruption, CP, Dada, DGP, Force, IAS, Intelligence, Interview, Investigation, IPS, Jaangid, Jaangit, Jaangittu, Jangid, Jangittu, Jankittu, Karunanidhi, kickbacks, Kumaran, Lathika, Latika, Law, Lethika, Letika, Letika Saran, Madras, Naanjil, Nanjil, Nanjil Kumaran, Official, Opinions, Order, Plan, Police, Rajendhiran, Rajendhran, Rajendran, Rajenthiran, Rajenthran, Ravi, Rowdyism, Saran, Traffic, Uniform, USRB, Vellai, Vellai Ravi, Violence, Weapons | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 1, 2007
உளவுத் துறையில் ஊடுருவல்
டி.புருஷோத்தமன்
நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் முக்கிய இடம் வகிப்பது “ரா’ (ரிசர்ச் அண்டு அனலிசிஸ் விங்) என்னும் உளவுத் துறையாகும்.
உலகின் தலைசிறந்த அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ. (சென்ட்ரல் இண்டெலிஜென்ஸ் ஏஜென்சி) அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு “ரா’ உளவு அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
1968 செப்டம்பர் 18-ல் “ரா’ அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ரூ. 2 கோடி முதலீட்டில் 250 ஏஜெண்டுகளுடன் இது செயல்படத் தொடங்கியது. பின்னர் 200 ஏஜெண்டுகளாக அதிகரிக்கப்பட்டு தற்போது 10 ஆயிரம் ஏஜெண்டுகளுடன் ரூ.1500 கோடி பட்ஜெட்டில் விரிவான அளவில் செயல்பட்டு வருகிறது. இதை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தவர் ஆர்.என்.காவ்.
இதன் தலைமையகம் தில்லியிலும் அதன் பிராந்திய அமைப்புகள் நாட்டின் இதர பகுதிகளிலும் அமைந்துள்ளன. “ரா’ இயக்குநர் முக்கியத் தகவல்களை பிரதமரிடம் உடனுக்குடன் தெரிவிப்பார். நாடாளுமன்றத்துக்கு இத்தகவல்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
அண்டை நாடுகள் அனைத்திலும் நடைபெற்றுவரும் சம்பவங்கள் நமது நாட்டுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. என்னும் உளவுத் துறை நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்களைத் தூண்டிவிட்டு குண்டுவெடிப்புச் சம்பவங்களையும் நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெறியாட்டம் ஆடுவதற்கு ஐ.எஸ்.ஐ. முக்கிய காரணமாகும்.
மேலும் பஞ்சாபில் சீக்கியர்களிடையே தீவிரவாதத்தை விதைக்கும் பணியிலும் பாகிஸ்தான் உளவுத் துறை ஈடுபட்டது.
இவற்றையெல்லாம் முறியடிக்கும் முக்கியப் பணியை “ரா’ மேற்கொண்டது. 1983-93 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானில் இந்திய உளவு அமைப்பின் ஏஜெண்டுகள் 35 ஆயிரம் பேர் பணியாற்றியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.
வங்கதேசத்தில் முஜிபுர் ரகுமானின் தலைமையிலான முக்தி வாகினி அமைப்புக்கு “ரா’ உளவுத் துறை முழு ஒத்துழைப்பை அளித்து தனி வங்கதேசம் உருவாகக் காரணமாக இருந்தது என்பது உலகறிந்த உண்மை.
இத்தகைய முக்கியத்துவம் பெற்ற “ரா’ உளவு அமைப்பில் சதிகாரர்களின் ஊடுருவல் இருந்துவருவது கவலையளிக்கும் விஷயமாகும்.
பிரதமர் அலுவலகத்தில் பல்வேறு உளவு மற்றும் புலனாய்வு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில் “ரா’ அமைப்பின் இணை இயக்குநராக இருந்து வந்தவர் தேவன்சந்த் மாலிக். 1999 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டுவரை அங்கு உயர் அதிகாரியாக அவர் பணியாற்றி வந்தார். உளவு அமைப்பின் அனைத்து ரகசியங்களையும் சேகரித்து வைத்திருந்தார்.
இதற்கிடையில் உளவு அமைப்பின் மிக முக்கிய ரகசியங்கள் பிற நாடுகளுக்குக் கசியத் தொடங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய அமைச்சரவை செயலகம் புலனாய்வில் இறங்கியது. தேவன் சந்த் மாலிக் மீது கண்காணிப்பு தொடங்கியது. உளவு அமைப்பின் ரகசியங்களை மாலிக்தான் வெளிடுவது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாகியது.
எனவே மாலிக் மீது தில்லி காவல் நிலையத்தில் மத்திய அமைச்சரவைச் செயலகத்தில் உள்ள “ஏவியேஷன் ரிசர்ச் சென்டர்’ இயக்குநர் அனுஜ் பரத்வாஜ் புகார் செய்தார். போலீஸ் கிடுக்கிப்பிடி இறுகியதை அடுத்து வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டார் மாலிக்.
மாலிக்கை பற்றிய விவரங்களை சேர்க்க முற்பட்ட போலீஸôர் அதிர்ச்சி அடைந்தனர். அரசு பதிவேட்டில் அவரைப் பற்றிய விவரம் ஆய்வு செய்யப்பட்டது. மேற்குவங்க மாநிலம் 24 பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று அந்தப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த முகவரியில் விசாரித்தபோதுதான், மாலிக் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. வங்கதேசத்துக்காக ஒற்றர் வேலை பார்த்தார் என்பதும் உறுதியானது.
மத்திய அரசின் முக்கிய அலுவலகங்களில், குறிப்பாக உளவுப் பிரிவுகளில் உளவாளிகள் ஊடுருவது அடிக்கடி நடைபெறும் விஷயமாகிவிட்டது.
2004 ல் “ரா’ உளவுப் பிரிவின் இணைச் செயலராகப் பணியாற்றிவந்த ரவீந்தர் சிங் என்பவரும் இதேபோன்று அமெரிக்க அரசுக்கு ஒற்றராகச் செயல்பட்டார். அவரைப் பற்றிய விவரங்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கு முன்பாகவே அவர் அமெரிக்காவுக்கு தப்பியோடி விட்டார். அத்துடன் “ரா’ உளவுப் பிரிவின் முக்கிய ஆவணங்களையும் தம்முடன் எடுத்துச் சென்றுவிட்டார்.
நமது நாட்டின் உளவுத் துறையில் பணியாற்றுவோரை அந்நிய நாடுகள் ரகசியமாக விலைகொடுத்து வாங்கி முக்கிய ஆவணங்களைப் பெற்றுவிடத் துடிக்கின்றன.
எனவே இனியாவது இத்துறைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களை நன்கு ஆய்வுசெய்து பணிப் பொறுப்புகளை அளிக்க வேண்டும். இல்லாவிடில் அரும்பாடுபட்டு சேகரிக்கப்படும் முக்கியத் தகவல்கள் எதிரி நாடுகளுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கும் எளிதில் கிடைத்துவிட ஏதுவாகிவிடும். இது நமது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
Posted in 007, agent, Arms, Attack, Bad, Bangladesh, Bengal, Betray, Bribery, Bribes, Budget, CBI, Cells, Cheat, China, CIA, Corruption, counterintelligence, defence, espionage, Extremism, FBI, Foreign, Govt, Infiltration, Influence, Intelligence, International, Investigation, ISI, J&K, Jammu, Kashmir, KGB, kickbacks, Military, Negative, Pakistan, RAW, secret, Spy, Srinagar, Tamil, Terrorism, Terrorists, Undercover, Weapons, World | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மே 22, 2007
முக்கியத்துவங்கள் மாற வேண்டும்
க.ப. அறவாணன்
தமிழில் வெளிவரும் பத்திரிகைகளையும் பல்வேறு தொலைக்காட்சி ஊடகங்களையும் ஆங்காங்கே கல்லூரி இளைஞர்களிடையே எடுக்கப்பெற்ற கருத்துக் கணிப்புகளையும் வைத்துப் பார்க்கும்போது நம் இளைஞர்களின் முன்னுரிமைகள் பின்வருமாறு உள்ளன.
1. திரைப்படம் (பெரியதிரை, சின்னத்திரை)
2. விளையாட்டு
3. அரசியல்.
இந்நிலை மிகத் தீவிரமாகப் பரிசீலிக்கத்தக்கது. இம் மூன்றும் அறிவுபூர்வமானவை என்பதைவிட, உணர்வுபூர்வமானவை என்பது தெளிவு.
உணர்வை அடிப்படையாக வைத்து எடுக்கப்பெறும் முடிவுகள் பெரும்பாலும் தவறாகவே இருக்கும். மோகத்திலும் ஆத்திரத்திலும் செய்யப்படும் முடிவுகள், முடிவு செய்பவரை வீழ்த்தும்.
நம் நாட்டின் வருங்காலத்தைத் தீர்மானிக்கும் இளைஞர்களின் கனவிலும் நினைவிலும்
- திரைப்படமும்
- விளையாட்டும்
- அரசியலும் முன்னுரிமை பெற்று அவர்கள் வாழ்வைச் சீரழிக்கின்றன.
முன்னுரிமை பெற வேண்டிய
- கல்வி,
- குடும்பம்,
- சேவை மனப்பான்மை ஆகியன பின்னுக்குப் போயிருப்பது மிகக் கவலை தரத்தக்க நிலவரம். இந்நிலை இளைஞர்களிடையே உருவாவதற்கு அவர்கள் மட்டும் காரணர் அல்லர். அவர்களை வழிநடத்தத் தவறிய அனைத்துத் தரப்பினரும் பெரும் காரணர்.
குறிப்பாகக் கடந்த அறுபது ஆண்டுகளில் மத்தியிலும் மாநிலத்திலும் உணர்வை மையப்படுத்தி நடைபெற்றுவரும் அரசியல் சூதாட்டங்களும் கல்வி நிறுவனங்களை வியாபார நிறுவனங்களாக நடத்தி வருவோரின் சேவை நோக்கமின்மையும் இளைஞர்களைச் சரியான குடிமக்களாக உருவாக்கத் தவறிய ஆசிரியர்களும் சுட்டிக்காட்டத் தக்கவர்கள் ஆவார்கள்.
தொண்டாகச் செய்யப்பட வேண்டியவை தொழிலாகக் கருதப்பட்டமையால், கவனமின்மையும் சேவை மனப்பான்மைக் குறைவும் இளைய தலைமுறையைத் திசைமாறச் செய்துவிட்டன. இதயத்தைவிட, வயிறு பெரிது என்றும் வயிற்றை விட, வசதி பெரிது என்றும் பிழையான மனப்போக்கில் நம் இளைஞர்கள் முக்கியத்துவங்களை மாற்றிக்கொண்டு விட்டார்கள். இது தவறு என்பது வெளிப்படை.
திரை, விளையாட்டு, அரசியல் என்ற மூன்று துறைகளிலும் தொழில் நடத்துவோரின் நோக்கம் பொதுநலம் அன்று, சமுதாய நோக்கம் அன்று, நாட்டு நலமும் அன்று. தம் வருவாய், வசதி, வாய்ப்புகள் பெருக வேண்டும் என்பதே அவர்களின் நோக்கங்கள்.
எனவேதான் நம் முன்னோரின் முன்னுரிமைகளும் முக்கியத்துவங்களும் வேறு வரிசையில் இருந்தன.
அக்பருக்கு அருகில் இருந்த பீர்பால் மிகச் சிறந்த பண்பும் அறிவும் உடைய அமைச்சராவார். மௌரிய அரசரை வெற்றிகொள்ள வைத்த சாணக்கியர், மிகச்சிறந்த ஞானதந்திரி ஆவார்.
நம் பழைய காலத் தமிழ் மன்னர்களின் வரலாற்றைப் பாருங்கள். பாரி மன்னனுக்கு அருகிலிருந்தவர் கபிலர் என்ற தன்னலம் மறுத்த புலவர்! அதியமானுக்கு அருகில் இருந்தவர் அவ்வை என்ற தலைசிறந்த கவிஞர்! பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அருகிலிருந்தவர் மாங்குடி மருதன் என்ற பெரும்புலவர்! சேரன் செங்குட்டுவனுக்கு அருகிலிருந்தவர் சீத்தலைச் சாத்தனார் என்ற சான்றோர்! அரசர்களுடன் அறிவு நலம் வாய்ந்த பண்பாளரும் புலமை வாய்ந்தவரும் நெருங்கியிருந்தனர்.
அரசர்கள் தவறு செய்ய நேரும்போது தட்டிக்கேட்பதும் இடித்துரைப்பதும் அவர்களுடைய கடமையாக இருந்தன.
அரசு ஆட்சி முடிவுக்கு வந்து, குடியரசு ஆட்சி அறிமுகம் ஆனவுடன் நல்லவர்கள் ஒதுங்கத் தொடங்கினார்கள்.
நம் நாடு சுதந்திரம் அடைந்தபொழுது, ஆளும்பொறுப்பு எதுவும் வேண்டா என்று ஒதுங்கியிருந்த மகாத்மா காந்தி, இங்கே சுட்டத்தக்கவர். அவரைப்போலவே, ஆரவார அரசுப் பொறுப்புகளிலிருந்து விலகி, பூதானத் தொண்டாற்றிய வினோபா பாவே நினைத்துப் பார்க்க வேண்டியவர். சோஷலிச வாதியாக இருந்த ஜயப்பிரகாச நாராயணன் தகுதி பல இருந்தும் பொறுப்புகள் எதுவும் வேண்டா என்று விலகியிருந்தார்.
இவ்வாறு பதவிகளைவிட்டு விலகி, பொதுச்சேவையையே முன்னிறுத்தி வாழ்ந்த இவர்களால் இந்தியாவில் அழிக்க முடியாத சாதனைகள் நிகழ்ந்தன.
காலப்போக்கில் நல்லோர் ஒதுங்குவதைப் பயன்கொண்டு, வாக்கு வேட்டையை மையப்படுத்திக் குறிப்பாகத் தமிழ்நாட்டில்
- திரைத்துறையும் அதன்பின்பு
- சாதிய வாதமும் முன்னிறுத்தப்பட்டன.
இன்று, இந்த இரண்டுமே தமிழ்நாட்டு அரசியலையும் நிகழ்காலத்தையும் தீர்மானிக்கும் சக்திகள் ஆகிவிட்டன.
எந்த உணர்ச்சி மோகத்திலிருந்தும் சாதி வெறியிலிருந்தும் விடுபடவும் விலகவும் விரும்பினோமோ அதே சிறைகளில் நாம் சிக்கிக் கொண்டோம்.
இதிலிருந்து மீளுவதுபற்றி மிகக் கவனமாகச் சிந்திக்க வேண்டும். இவற்றால் வசதியும் வாழ்வும் பெற்றவர்கள், இளைஞர்கள் விழித்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். அதனால்தான் உணர்ச்சிப் போதையை ஊட்டி, அதிலேயே மயக்குறுத்தும் சின்னத்திரை, பெரியதிரை ஆசையையும் விளையாட்டு மோகத்தையும் அரசியல் காழ்ப்பையும் திட்டமிட்டு விதைக்கின்றனர்; வளர்க்கின்றனர்.
இத்தகு நிகழ்வுகள் சுயநலவாதிகளால் வளர்க்கப்படும்போது எச்சரிக்கையாக இளைஞர்கள் இருந்தமையையும் விழிப்புள்ள பத்திரிகையாளர்களும் சான்றோர்களும் கவனமாகக் கருத்துடன் இருந்தமையையும் வெளிநாட்டு வரலாறுகள் நமக்குப் பாடம் சொல்லித் தருகின்றன. அப் பாடங்களை நாமும் நம் இளைஞர்களும் படித்துக் கொள்ள வேண்டும், பின்பற்ற வேண்டும்.
நாம் கொடுத்துவரும் முக்கியத்துவங்களின் வரிசை மாற வேண்டும். அவ்வரிசை, பின்வருமாறு அமையலாம். முதலாவது பொதுச்சேவை, இரண்டாவதுதான், தன் குடும்பம் முதலான இன்னபிற என மையப்படுத்தி நம்மை உணர்ச்சிப்போதையில் அழுத்திவரும் பொழுதுபோக்குச் சாதனங்களைப் புரிந்துகொண்டு புறந்தள்ள வேண்டும்.
ஐரோப்பிய, அமெரிக்க, ஜப்பானியப் பயணங்களின்பொழுது நான் அந்நாட்டு மக்களின் சிறந்த பண்பாட்டைக் கவனித்திருக்கிறேன்.
விளையாடும்பொழுது முழு ஈடுபாட்டுடன் விளையாடு, வேலைசெய்யும்போது முழு ஈடுபாட்டுடன் வேலை செய் என்பதே அவர்களிடையே எழுதப்படாத சட்டமாக முழு மனதுடன் பின்பற்றப்படுகிறது. அவர்களது அபார வளர்ச்சிக்கு இந்த மனப்போக்கே காரணம்.
அவர்கள் இல்லங்களுக்குச் செல்லும்போது நான் கவனித்திருக்கிறேன். தொலைக்காட்சிப் பெட்டிகள் மெல்லிய ஒலியுடன் ஒலித்துக் கொண்டிருக்கும். ஆனால், அவர்கள் தங்கள் கடமைகளைத் தவறாமல் செய்துகொண்டே இயங்குவார்கள்.
விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், இலக்கை நோக்கி அவர்கள் உறுதியாகத் தம் பயணத்தை அமைத்துக் கொள்கிறார்கள்.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மேல் அதிகாரிகளின் அதட்டல், மேற்பார்வை எதுவுமே இல்லாமல் தாமாகவே உண்மையாகவும் நேர்மையாகவும் உழைப்பார்கள்.
வெள்ளி மாலை ஆனவுடன் கார்களில் மனைவி, குழந்தைகளுடன் அருகில் உள்ள ஊருக்குச் சென்று விடுதிகளில் தங்கி மகிழ்வார்கள். திங்கள்கிழமை அவர்களின் கடமை தொடங்கிவிடும்.
முக்கியத்துவங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில் அவர்களிடையே தெளிவு இருக்கிறது. தீர்மானம் இருக்கிறது. பல வகைகளில் அயல்நாட்டாரைப் பின்பற்றும் நாம் அவர்களது கடமை உணர்வையும் கற்றுக்கொள்ளல் வேண்டும்.
(கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.)
Posted in Analysis, Attitude, Backgrounder, Benefit, Cinema, Cricket, Education, Emotion, Emotional, Entertainment, EQ, family, Impact, Importance, Important, Insights, Intelligence, IQ, Movies, Politics, service, Society, solutions, Sports, TV, Values, Young, Youth | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மே 5, 2007
அறிவுசார் பொருளாதார வளர்ச்சி
பி.கே. மனோகரன்
சர்வதேச வர்த்தகத்தில் இன்று அதிக அளவில் பேசப்படுவது அறிவுசார் சொத்துரிமை தொடர்பானதாகும்.
அன்றாட வாழ்விலும் சமூக, பொருளாதார மேம்பாட்டிலும் அறிவுசார் சொத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண்டுதோறும் “உலக அறிவுசார் சொத்து தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் “படைப்பாற்றலை ஊக்குவித்தல்’ என்பதாகும்.
அறிவுசார் சொத்து என்பது ஒருவர் தன் மூளையைப் பயன்படுத்தி உருவாக்கும் புதிய, புதுமையான, சமுதாயத்திற்குப் பயன்படுகிற ஒன்றை உருவாக்குவதற்கான படைப்பாற்றல் ஆகும். பொன்னையும் பொருளையும் போல அறிவும் மதிநுட்பமும் ஒருவகையான சொத்தாகக் கருதப்படுகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலம், உழைப்பு, மூலதனம் ஆகியவற்றை மட்டுமே சார்ந்தது என்ற கருத்து பழங்கதையாகி அறிவுத்திறனே முக்கியக் காரணி என்ற கருத்து உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. அறிவு வளத்தைப் பயன்படுத்தி, பொருள் வளத்தைப் பெருக்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே 21-ம் நூற்றாண்டின் அறிவுசார் பொருளாதாரத்தின் இலக்காகும்.
அறிவு என்பது என்ன? நமது மூளையில் சேகரிக்கப்பட்டு வரும் தகவல் மற்றும் புள்ளி விவரங்களை, அனுபவம் மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் எப்படிச் சொல்லுதல், எதைத் தெரிந்து கொள்வது, ஏன் தெரிந்து கொள்வது, எப்படித் தெரிந்து கொள்வது போன்றவற்றை உள்ளடக்கிய ஒன்றாகும். கட்டமைப்பு வசதிகள், இயற்கை வளங்கள், மனித ஆற்றல் ஆகியவை அறிவு சார் பொருளாதாரத்தின் மூலம் சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது.
வேத காலத்திலேயே நமது பாரத தேசம் அறிவுத்திறன் மிக்க வல்லரசாகத் திகழ்ந்தது. இன்றும் கணிதம் இந்தியாவின் நுண்கலை என்றே அழைக்கப்பெறுகிறது.
உலகளவில் அறிவுசார் ஆளுமையில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிறுவனங்களின் ஆராய்ச்சி மையங்களில் இந்தியர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளதில் இருந்தே இதனை அறியலாம். விண்வெளித்துறை, பாதுகாப்பு தொழில் நுட்பம், உயிரிய தொழில்நுட்பம், மென்பொருள் மேம்பாடு மற்றும் மருத்துவம் போன்ற அனைத்துத் துறைகளிலும் இந்தியர்கள் முக்கிய இடம் பெற்றுள்ளனர்.
நாட்டின் ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமே உதவுவதான வளர்ச்சி உண்மையான அறிவுசார் வளர்ச்சி ஆகாது. சமுதாய ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, இயற்கையோடு இயைந்து செல்லும் அறிவுசார் வளர்ச்சியே அழிவுப் பாதையிலிருந்து நம்மைக் காப்பாற்றி ஆக்கப் பாதைக்கு இட்டுச் செல்லும்.
அறிவுசார் சொத்துரிமை பெற ஒரு கண்டுபிடிப்பு புதுமைத் தன்மை, புதினத்தன்மை மற்றும் மூலத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். இதனை மேற்கொண்டவரின் அறிவார்ந்த திறமையை அங்கீகரிக்கும் பொருட்டும், அவற்றை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்காகவும் சட்ட வடிவில் அளிக்கப்படக்கூடிய உரிமைகளே அறிவுசார் சொத்துரிமை எனப்படும்.
அறிவுசார் சொத்துரிமை தொடர்பாக பல சர்வதேச உடன்பாடுகள் உள்ளன. எனினும் “டிரிப்ஸ்’ என்றழைக்கப்படும் “வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமை’ இவ்வகை உரிமைகள் அனைத்தையும் உள்ளடக்கிய பலதரப்பு ஒப்பந்தம் ஆகும். இதில் ஏழு அம்சங்கள் உள்ளன.
- 1. காப்புரிமை,
- 2. பதிப்புரிமை,
- 3. வர்த்தக சின்னங்கள்,
- 4. பூகோள அடையாளங்கள்,
- 5. தொழிலியல் வடிவமைப்புகள்,
- 6. மின்னணு ஒருங்கிணைந்த இணைப்புச்சுற்று டிசைன்கள் மற்றும்
- 7. தொழில் ரகசியங்கள். இவற்றுள் முக்கியமானது காப்புரிமையாகும்.
காப்புரிமை புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுவதாகும். காப்புரிமை பெறுவது கட்டாயமல்ல. ஆனால் காப்புரிமை பெற்றால் மட்டுமே சம்பந்தப்பட்ட புதிய தொழில்நுட்பத்தை மற்றவர்கள் பயன்படுத்துவதற்கு எதிராக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க முடியும். காப்புரிமை கோரி விண்ணப்பிக்க்பபடும் நாளிலிருந்து 20 ஆண்டுகளுக்கு காப்புரிமை அமலில் இருக்கும்.
காப்புரிமை பெறும் விஷயத்தில் இந்தியாவின் நிலை மிகவும் பின்தங்கி உள்ளது. எடுத்துக்காட்டாக
- வேம்பிலிருந்து தயாரிக்கப்படும் 40 வகை பொருள்களுக்கு அமெரிக்காவும்,
- மேலும் 50 பொருள்களுக்கு பிற நாடுகளும் காப்புரிமை பெற்றுள்ளன.
- ஆனால் வேப்ப மரத்தின் தாய்வீடான இந்தியாவில் வெறும் 3 பொருள்களுக்கு மட்டுமே காப்புரிமை பெறப்பட்டுள்ளது.
- மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படும் 30 பொருள்களுக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றுள்ளது.
- ஆனால் இந்தியா 8 பொருள்களுக்கு மட்டுமே பெற்றுள்ளது.
- மேலும் இந்தியாவில் பெருமளவில் விளையும் கடுகு, மிளகு, மாதுளை போன்றவற்றுக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றுள்ளது.
இந்தியாவில் ஒரு பொருளுக்கு காப்புரிமை பெற குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி உள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சம் 2 ஆண்டுகளில் காப்புரிமை தரப்படுகிறது. இந்தியாவில் காப்புரிமை பெற விண்ணப்பித்த 25 ஆயிரம் மனுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே ஆராய்ச்சிப் பணிகளுக்குச் செலவிடப்படுகிறது. அமெரிக்காவில் இது 16 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோள்களின் பயணத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டவர்கள் இந்தியர்கள். ராமாயண, மகாபாரத காவியங்களில் கற்பனையானவை என்று சொல்லப்பட்ட பல கூற்றுகளை இன்றைய அறிவியல் உண்மையாக்கி காட்டுகின்றன. அறிவுசார் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க மற்ற நாடுகளை விட இந்தியாவிற்கே வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவேதான் இன்றும்கூட அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தில் பெரும்பாலான விஞ்ஞானத் தொழில் நுட்ப வல்லுநர்கள் இந்தியர்களாக உள்ளனர். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பணியாற்றும் இந்திய மருத்துவர்கள் தாயகத்துக்கு திரும்பி விட்டால் அந்நாட்டு மருத்துவக் கட்டமைப்பே கவிழ்ந்து விடும்.
இந்தியா அறிவுத்திறன் மிக்க வல்லரசாக, மக்கள் நலன் பேணும் நல்லரசாகத் திகழ மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும். அறிவுசார் வளர்ச்சி ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆதிக்கம் செலுத்தும் வகையில் இல்லாமல் எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ பாதை அமைக்க வேண்டும்.
அறிவுத்திறன் மிக்க சமுதாயமே ஆரோக்கியமான சமுதாயம். அறிவே ஆற்றல், அறிவே உண்மையான வளர்ச்சிக்கு வழி.
(கட்டுரையாளர்: இணைப் பேராசிரியர், சி.பி.எம். கல்லூரி, கோவை.)
Posted in Biotech, Commerce, Competition, Copyright, Court, Design, Economy, Expenses, Finance, Infringement, Innovation, Intellectual, Intellectual Property, Intelligence, Invent, Invention, Inventor, IP, Juice, Law, Lawsuit, Medicine, Order, Pomegranate, Property, Protection, Research, Secrets, service, Servicemarks, Sesame, SM, Stifle, Technology, TM, Trade, Trademarks, Turmeric | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007
அறிவுத்திறனுக்கு எது அடிப்படை?
ஜி.எஸ். பூர்ண சந்திரக்குமார்
எப்போது பார்த்தாலும் ஏதாவது ஏடாகூடமாகச் செய்யும் ஆசாமிகளைப் பார்த்து, “”உனக்கு மூளையில மசாலா ஏதாவது இருக்கா, இல்லையா?” என்று நாம் கிண்டலாகக் கேட்பது வழக்கம். சுமார் 1.5 கிலோகிராம் எடையுள்ள நம் மூளையில் மசாலா இருக்கிறதோ, இல்லையோ, நிறைய சாம்பல் இருக்க வேண்டும் என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.
சாம்பல் என்றதும் பயப்பட வேண்டாம். மூளையிலுள்ள சாம்பல்நிறத் திட்டுகளைதான். நமது மூளையில் உள்ள நரம்பு செல்கள் அனைத்தும் நூடுல்ஸ் மாதிரி கொத்து கொத்தாகக் காணப்படும். அவற்றின் எண்ணிக்கை ஏறக்குறைய 100 பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி அளவு. அதன் துணைத் திசுக்களையும் சேர்த்தால் எண்ணிக்கை ஒரு லட்சம் கோடியையும் தொட்டுவிடும். இவைகளே சாம்பல்நிறத் திட்டுகள் என்றழைக்கப்படுகின்றன.
நினைவுகளை ஒருமுகப்படுத்தி மூளையில் நன்கு பதிய வைக்கவும், அந்நினைவுகளைப் பயன்படுத்தி வேலையை ஒழுங்காகச் செய்யவும் மேற்சொன்ன சாம்பல் நிறப்பகுதிகள் மூளையில் நிறைய வேண்டும். அப்படிப்பட்ட சாம்பல்நிறப் பகுதிகளை அதிகம் பெற்றிருப்பவர்கள்தான் கிராண்ட் மாஸ்டர்களாக எல்லா இடங்களிலும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். எப்படி?
பொதுவாக ஐம்புலன்களின் மூலமாக ஒவ்வொரு வினாடியும் கோடிக்கணக்கான தகவல்கள் நரம்புத்தூண்டல் வடிவில் நமது மூளையை அடைந்து பதிவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் புதுப்புதுத் தகவல்களைக் கிரகித்துக் கொள்ளும்போதும் மூளையானது அதற்கேற்றாற்போல் புதுப்புது நரம்புச் சந்திகளை உருவாக்கி, அந்நரம்புச் சந்திகள் மூலமாக தாம் பெற்ற தகவல்களை அனுபவங்களாகப் பதிவு செய்து கொள்கிறது. அவ்வனுபவங்களைக் கொண்டுதான் ஒவ்வொரு மனிதனும் வெற்றிகரமான மனிதனாக உலகில் பவனி வருகிறான்.
பிரிட்டிஷ் மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நம்முடைய மூளையை ஸ்கேன் செய்து மேலும் பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர். அவர்கள் ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளைச் சொன்னபோது மூளையில் அம்மொழிக்கான நரம்புப் பகுதிக்குள் மட்டும் ரத்த ஓட்டம் பாய்ந்து அப்பகுதி வெளிச்சமானதைக் கண்டார்கள். புதிய செய்திகள், செயல்கள் முதலியவற்றை விரைவில் நினைவு வைத்துக் கொண்டு தேவைப்படும் போது விரைவில் பிரதிபலிக்கவும் கூடியதான சிறப்பு நியூரான்கள் நமது மூளையில் இருப்பதே இதற்குக் காரணம் என்று கண்டறிந்துள்ளனர். சரி. மூளையில் நினைவு எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது?
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல அறிவியல் அறிஞர்கள் மூளையின் இயல்பு பற்றியும், பட்டறிவும் படிப்பறிவும் மூளையில் எவ்வாறு நினைவாகப் பதிவு செய்யப்படுகிறது என்பது பற்றியும் பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.
யூரி ஒவ்சினிகோவ் எனும் அறிவியல் அறிஞர் 1965-ம் ஆண்டு ஒரு விளக்கத்தை வெளியிட்டார். பெப்டைடுகள் தான் நினைவிற்கு அடிப்படையாக விளங்குகின்றன என்பதே இவருடைய கருத்து. இந்த பெப்டைடுகள் அமினோ அமிலங்களால் ஆனவை. சுமார் 20 அமினோ அமிலங்கள் பல்வேறு விதங்களில் இணைந்து பல்வேறு வகைப் புரதங்களை உண்டாக்குகின்றன. இவற்றின் 15 அமினோ அமிலங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். இந்த 15 அமினோ அமிலங்களும் பல்வேறு விகிதங்களில் இணைந்து உருவாகும் புரதங்கள் எத்தனை மனிதர்களின் நினைவாற்றலுக்கு போதுமானதாய் இருக்கும் தெரியுமா? சுமார் 10 ஆயிரம் மனிதர்கள்.
அதாவது நம் வாழ்நாளில் நாம் இன்னும் எத்தனை கோடி புதிய தகவல்களைப் பெற்றுக் கொண்டாலும் அவற்றை மூளையில் பதிவு செய்வதற்குத் தேவையான புரதங்கள் தீர்ந்து போகாது. அத்தகைய சிறப்பு வாய்ந்த பெப்டைடுகளை சில ரசாயன மாற்றங்களால் மூளையில் சிதையாமல் பார்த்துக் கொண்டால் போதும், நம் வாழ்நாளில் நினைவுப்பஞ்சமே இராது.
மேற்சொன்ன பெப்டைடுகளைப் பற்றி ஆய்வு செய்வதற்காக விஞ்ஞானிகள் மேற்கொண்ட சில ஆய்வு முறைகளைப் பார்த்தால் “”இப்படியும் இருக்குமா” என்று நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்லும். ஒரு பரிசோதனையில் ஒரு குறிப்பிட்ட அனுபவமுடைய ஒரு பிராணியின் மூளைச்சாற்றை எடுத்து அதை அந்த அனுபவம் துளியுமில்லாத வேறொரு பிராணியின் மூளையில் செலுத்திப் பார்த்தனர். விளைவு என்ன தெரியுமா? மூளைச்சாறு செலுத்தப்பட்ட பிராணியானது, அம்மூளைச்சாறுக்குச் சொந்தமான முந்தைய பிராணியின் அனுபவம் முழுமையும் பெற்று அதைப்போலவே செயல்பட ஆரம்பித்துவிட்டது.
இப்போது நமக்கு ஒன்று தெளிவாகிவிட்டது. மூளையில் நினைவாகப் பதிவாகும் தகவல்கள் அனைத்தும் பெப்டைடுகளாகவே பதிவாகின்றன என்பதே அது. இந்தத் தகவல்களை ஒத்துப்பார்ப்பதில்தான் விலங்குகளுக்கும் நமக்கும், நமக்கும் கிராண்ட் மாஸ்டர்கள் போன்ற அறிவுஜீவிகளுக்கும் வித்தியாசம் ஏற்படக் காரணமாய் அமைந்து விடுகிறது. அறிவுஜீவிகளின் அறிவிற்குக் காரணம் இந்த பெப்டைடுகளை நிரம்பப் பெற்றிருக்கும் அவர்களின் மூளையிலுள்ள சாம்பல்நிறப் பகுதியானது அதிக அடர்த்தியைப் பெற்றிருப்பதே.
ஆக, அறிவுத்திறன் என்பது தனிப்பட்ட ஓர் இனத்திற்கோ, ஒரு குழுவிற்கோ சொந்தமில்லை என்பது உறுதியாகிவிட்டது. சரிவிகித உணவும், முறையான பயிற்சியும், வள்ளுவர் கூறும் அசைவிலா ஊக்கமும் இருந்தால் வாழ்வில் வெற்றிக்குத் தடையேதுமில்லை.
(கட்டுரையாளர்: சித்த மருத்துவர், எஸ்.கே. சித்த மருத்துவமனை, கோபி).
Posted in Analysis, Ayurveda, Ayurvedha, Brain, Doctor, EQ, Experience, Intellectual, Intelligence, Intelligent, Medicine, Research, Science, Siddha, Social | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2007
உல்பா தலைவர்களுக்கு பங்களாதேஷ் அடைக்கலம் வழங்குவதாகக் குற்றச்சாட்டு
 |
 |
உல்பா தீவிரவாதிகள் |
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும்
உல்பா உள்ளிட்ட பல்வேறு பிரிவினைவாதக் குழுக்களின் தலைவர்களுக்கு, அண்டை நாடான பங்களாதேஷில் அடைக்கலம் கொடுக்கப்பட்டிருப்பதாக, வடகிழக்கு மாநிலங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் இந்திய எல்லைப்
பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜோதி பிரகாஷ் சின்ஹா, செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷில் தேர்தல் முடியும் வரை வெளியில் நடமாட வேண்டாம் என அடைக்கலம் தருவோரால் அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும் இதே கருத்தை வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டு சக்திகளின் அறிவுரையின்படி, பயங்கரவாதக் குழுக்களின் தலைவர்கள் பங்களாதேஷில் பாதுகாப்பாகத் தங்கியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
Posted in Allegation, Anti-India, Bangladesh, BBC, Conflicts, Elections, Insurgents, Intelligence, Militants, Northeast, Terrorists, ULFA | Leave a Comment »