Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Insurgency’ Category

Maoists in south Nepal gun battle

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

நேபாள மோதலில் 5 பேர் பலி

மாதேசிக்களின் ஆர்ப்பாட்டம்
மாதேசிக்களின் ஆர்ப்பாட்டம்

நேபாளத்தில் முன்னாள் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுக்கும், பிராந்தியக் குழு ஒன்றின் செயற்பாட்டாளர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதாக நேபாளத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பொலிஸார் கூறுகிறார்கள்.

காவுர் நகரில் இடம்பெற்ற இந்த மோதல்களில் குறைந்தது 15 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

தனித்தனியான பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான ஒரு இடத்தைக் கைப்பற்றுவதற்காக, முன்னாள் கிளர்ச்சிக்காரர்களும், மாதேசி ஜனதிகார் அமைப்பின் செயற்பாட்டாளர்களுக்கும் இடையே துப்பாக்கி மோதல்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது.

கிழக்குப் பகுதி நகரான லகானின், மாதேசி அமைப்பைச் சேர்ந்த ஒருவரை முன்னாள் கிளர்ச்சிக்காரர்கள் சுட்டுக்கொன்றதை அடுத்து, அண்மைய மாதங்களில் அங்கு பதற்றம் அதிகரித்தது.

 

=======================================================

நேபாளத்தில் வர்த்தகர் தாக்கப்பட்ட சம்பவம் 2 நிர்வாகிகளை மாவோயிஸ்ட் சஸ்பெண்ட் செய்ததால் கடையடைப்பு, போராட்டங்கள் விலக்கப்பட்டன

காத்மாண்டு, மார்ச் 22: நேபாளத்தில் வர்த்தகர் ஒருவரை தாக்கியதில் தொடர்புடையதாக 2 நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்து மாவோயிஸ்ட் அமைப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் அங்கு வணிகர்கள் நடத்தி வந்த பல்வேறு போராட்டங்கள் புதன்கிழமை முதல் விலக்கி கொள்ளப்பட்டு வருகின்றன.

காத்மாண்டுவில் ஹோட்டல் நடத்தி வந்தவர் ஹரி ஷிரேதா. இவரை, கடந்த ஞாயிற்றுக்கிழமை சில மாவோயிஸ்டுகள் கொடூரமாக தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச் சம்பவத்தையடுத்து, தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேபாள வணிகர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.

வருத்தம் தெரிவிப்பு: வர்த்தகர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மாவோயிஸ்ட் தொழிற்சங்க நிர்வாகிகள் இருவர் தொடர்புடையதாக அறிந்தவுடன் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் பிரசண்டா அறிவித்தார்.

இதற்கிடையில், தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் போலீஸôருக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இதில் சந்மந்தப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளான தீபக் ராய் மற்றும் முகுந்த நிபான் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவோயிஸ்ட் இணைப்பு தொழிற்சங்கம் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக போராட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

=======================================================

நேபாளம்: பத்திரிகை அலுவலகம் உள்பட 2 இடத்தில் வெடிகுண்டு

காத்மாண்டு, மார்ச் 28: நேபாளத்தில் பத்திரிகை அலுவலகம் உள்பட 2 இடத்தில் குண்டு வைக்கப்பட்டன. இவை வெடிக்கும் முன் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன.

கிழக்கு நேபாளப் பகுதியான பைரத்நகரில் உள்ளது கந்திப்பூர் என்ற பத்திரிகையின் அலுவலகம். இங்கு திங்கள்கிழமை குண்டு வைக்கப்பட்டது. ஆனால் இது வெடிப்பதற்கு முன் கண்டறியப்பட்டது.

தக்ஷினிவாரி என்ற இடத்தில் அமைந்துள்ள மெக்டவல் என்ற நிறுவனத்துக்குள்ளும் திங்கள்கிழமை குண்டு வைக்கப்பட்டிருந்தது. இதுவும் வெடிப்பதற்குள் கண்டறியப்பட்டு பத்திரமாக அகற்றப்பட்டது.

இந்த இரு இடத்திலும் குண்டுகள் வெடிப்பதற்குள் அகற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. குண்டுகளை வைத்தவர்கள் நேபாளத்தை மீண்டும் இந்து நாடாக அறிவிக்கக் கோரி போராடும் நேபாள பாதுகாப்பு ராணுவம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். இது அவர்கள் விட்டுச் சென்ற துண்டு சீட்டின் மூலம் தெரியவந்துள்ளதாக நேபாள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

Posted in battle, Blast, Bomb, Business, Businessman, Clashes, Commerce, Constitution, Curfew, dead, Elections, ethnic, Fighters, Gaur, Government, Hari Shiroda, Hari Shirodha, Hindu, Hinduism, Hotel, Insurgency, Kathmandu, King, Madheshi, Madheshi Janadhikar Forum, Madhesis, magazine, Maoist, Media, MJF, MSM, Nepal, Protest, Rebels, Restaurant, rights, Scare, Strike | 1 Comment »

Fourteen police killed in militant attack in Manipur

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 25, 2007

இந்தியாவின் மணிப்பூரில் பிரிவினைவாதிகளின் தாக்குதலில் 15 துணை இராணுவத்தினர் பலி

மணிப்பூர்
மணிப்பூர்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில், 15 துணை இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிகிழமையன்று மாநில சட்டசபைக்கான இறுதி கட்ட தேர்தல் நடந்து முடிந்த பின்னர், மலைப்பாங்கான மாவட்டம் ஒன்றில் இருந்து தலைநகர் இம்பால் நோக்கி வந்து கொண்டிருந்த துருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு மணிப்பூரில் இயங்கி வரும் பல்வேறு பிரிவினைவாத குழுக்களில் யார் பொறுப்பு என்பது தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் கூறுகின்றனர்.

தேர்தல் பணி முடித்து திரும்பிய துணை ராணுவப்படையினர் மீது தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல்: 15 பேர் பலி

இம்பால், பிப். 25: மணிப்பூரில் தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்கியதில் தேர்தல் பணி முடிந்து திரும்பிக் கொண்டிருந்த துணை ராணுவப்படையினர் 15 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.

இம்மாநிலத்தின் மலை பகுதி மாவட்டங்களான டாமென்லாங், சரன்சான்பூர், சாண்டில், ஜிரிபாம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை 3-வது கட்டத் தேர்தல் நடந்து முடிந்தது. துணை ராணுவத்தின் முதல் மற்றும் மூன்றாவது படையினர் சரன்சான்பூர் மாவட்டத்தில் உள்ள ஜோஜான்டேக் முகாமில் தங்கியிருந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். சனிக்கிழமை டாமென்லாங் மாவட்டத்தில் தேர்தல் பணிகளை முடித்துவிட்டு 6 வாகனங்களில் முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

டாமென்லாங் மாவட்டத்தில் பழைய கேட்சார் சாலை அருகே சென்று கொண்டிருக்கும் போது மறைந்திருந்த 20 தீவிரவாதிகள் துணை ராணுவப்படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இவர்கள் மலைமேல் நின்று கொண்டு சக்தி வாய்ந்த கையெறி குண்டுகளை ராணுவத்தினர் மீது வீசினர்.

ராணுவத்தினரும் துப்பாக்கியால் திருப்பித் தாக்கினர். இதையடுத்து சுமார் 2 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 14 துணை ராணுவப்படையினர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மற்றொரு வீரர் உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் நடந்த இடம் உள்ளார்ந்த பகுதியாக இருப்பதால் வீரர்கள் மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள இயலவில்லை. இருந்த போதிலும், ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Posted in Attack, Autonomy, Democracy, Dilse, Elections, guerrillas, Imphal, Independence, India, India Reserve Battalion, Insurgency, Manipur, militant, North East, Police, Politics, Polls, Rebellion, Rebels, Revolution, Separatists, Tamenglong, Terrorism, tribal, Uyire, Violence | 1 Comment »

Nepal: ICRC seeks to clarify the fate of more than 800 missing persons

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

நேபாளத்தில் மோதல்கள் காரணமாக காணாமல் போனவர்களின் பட்டியல் வெளியீடு

காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

நேபாளத்தில் கடந்த வருடம் முடிவுக்கு வந்த 10 வருட கால மோதல்கள் காரணமாக காணாமல் போன 800 க்கும் அதிகமானோரின் பட்டியலை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ளது.

இவர்களில் பலர் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேபாள பாதுகாப்புப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.

ஏனையவர்கள் மாவோயிஸ்ட்களால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் சிலர் சிறர்கள் என்றும் அது கூறுகிறது.

மேலும் பல நேபாள நாட்டவர் காணாமல் போயுள்ளதாகக் கூறும் செஞ்சிலுவைச் சங்கம், காணாமல் போன தமது உறவினர்களின் பெயர் இந்தப் பட்டியலில் இல்லாது இருந்தால் அவர்களது, உறவினர்கள் தம்மைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

Posted in armed conflict, Clan, Communism, Communist, Democracy, Dictatorship, Government, ICRC, Insurgency, King Gyanendra, Lockup deaths, Maoists, missing persons, Monarchy, Nepal, political disappearances, Rebels, Red Cross, RTI, security forces | Leave a Comment »

LTTE cannot Guarantee Safe Passage of International Aid Vehicles

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

செஞ்சிலுவை குழுவினரின் வழித்துணையுடன் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க முடியாது – விடுதலைப் புலிகள்

விடுதலைப் புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன்
இத்தகவல் செஞ்சிலுவை சங்கத்திற்கு அனுப்பிய கடிதத்தில் விடுதலைப் புலிகள் தெரிவிப்பு

இலங்கையில் யாழ்குடா நாட்டுக்கு, கடல்வழியாக மனிதாபிமான உதவிகளைக் கொண்டு செல்லும் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் வழித்துணையுடனான கப்பல்களுக்குத் தம்மால் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க முடியாது என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் இலங்கைக்கான தலைமை அதிகாரி டூன் வென்டன்ஹொவே அவர்களுக்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எழுதியுள்ள கடிதம் ஒன்றில் யாழ் குடாநாட்டிற்கான மனிதாபிமான உதவிகள் அடங்கிய வாகனத் தொடரணி, அம்புலன்ஸ் வண்டிகள், அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் பயணம் செய்யும் வாகனங்கள் என்பன தமது பிரதேசத்திற்குட்பட்ட ஏ9 வீதி ஊடாகச் செல்லும் பொழுது எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் ஈடுபட மாட்டார்கள் என்ற உறுதிமொழியை வெளியிட்டுள்ளார்.

ஆனால், யாழ் குடாநாட்டு மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை கடல்வழியாகக் கொண்டு செல்வதற்கான அதிகாரத்தைக் கோரியுள்ள சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் கடிதம் தொடர்பில் தமது முன்னைய நிலைப்பாட்டில் மாற்றம் எதுவுமில்லை என்றும் விடுதலைப் புலிகள் இக்கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

Posted in Aid, Attacks, Conflicts, Counter-attacks, Insurgency, International, LTTE, Red Cross, Sri lanka, Tamil, Yaazhppanam, Yazh | Leave a Comment »