இரானில் பள்ளிக் குழந்தைகளுக்கு ‘இஸ்லாமியர்களே உயர்ந்தவர்கள்’ என பாடம் புகட்டப்படுவதாக அமெரிக்க அமைப்பு குற்றச்சாட்டு
இரானின் பள்ளிக் குழந்தைகள் இஸ்லாத்தின் ஈடு இணையற்ற உயர் நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், முஸ்லிம் அல்லாதவர்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்கவேண்டும் என்றும், இரானிய அரசு அவர்களுக்கு பாடம் புகட்டி வருகிறது என்று அமெரிக்காவில் இருந்து இயங்கும் ‘ஃபிரீடம் ஹவுஸ்’ என்ற அமைப்பு கூறியுள்ளது.
இரானிய பள்ளிக்கூடங்களில் கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ள பாட நூல்களில் 95 நூல்களை ஆராய்ந்து வெளியிட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையில், பள்ளிச் சிறார்களின் சகிப்புத்தன்மை மிகவும் முறையாக அகற்றப்பட்டுள்ளது என்றும், இதனை தற்செயலானது என்று கூற முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இரானின் உள்ளூரில் பார்சி மொழி பேசுவோரால் நடத்தப்பட்ட இந்த மதிப்பீட்டின்படி, பெண்கள் ஆண்களைவிட கருத வேண்டும் என்றும், மேற்குலக நாடுகளை சாத்தான்கள் போலக் கருத வேண்டும் என்றும், இரானிய பாட நூல்கள் பள்ளிச் சிறார்களுக்கு பாடம் புகட்டுவது தெரிகிறது.
இரானின் அடுத்த தலைமுறையினர் வெளியுலகத்தை எவ்வாறு நோக்க வேண்டும் என்பதையே இந்த நூல்கள் திட்டமிட்டு வடிவமைப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.