Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007
சென்னையில் இருந்து செல்லும் பயணிகளுக்கு விசா விதிமுறைகளை தளர்த்தியது மலேசியா
கோலாலம்பூர், மார்ச் 16: சென்னையில் இருந்து மலேசியா செல்லும் பயணிகளுக்கான விசா விதிகளைத் தளர்த்தியுள்ளது மலேசிய அரசு.
இதையடுத்து, சென்னையைத் தவிர தென்னிந்திய நகரங்களில் இருந்து மலேசியாவுக்கு வரும் பயணிகள் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் வந்து இறங்கியதும் விசா பெற்றுக் கொள்ளலாம் என மலேசிய அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் வசிப்போர் அங்குள்ள மலேசியத் தூதரகத்தில் இருந்து முன்கூட்டியே விசா பெறும் வசதி உள்ளதால் அவர்களுக்கு புதிய விதி பொருந்தாது என்று கோலாலம்பூரில் வியாழக்கிழமை தெரிவித்தார் துணைப் பிரதமர் நஜீப் ரஸôக்.
சென்னையில் இருந்து வருவோர் விசாவில் அனுமதிக்கப்பட்ட நாள்களை விட கூடுதல் நாள்கள் மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கி விடுவதை அடுத்து, விசா வழங்குவதைக் கடந்த டிசம்பரில் நிறுத்தியது மலேசியா.
சென்னையில் இருந்து வருவோரில் 25 சதவீதம் பேர் அனுமதிக்கப்பட்ட நாள்களை விட அதிக நாள்கள் சட்டவிரோதமாகத் தங்குகின்றனர் என்று நஜீப் கூறினார்.
மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 19 ஆயிரம். இதில் 3 ஆயிரம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
சர்வதேச சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் மத்திய கிழக்கு நாடுகள், ஈரான், இராக், பாலஸ்தீனம் மற்றும் சிரியாவில் இருந்து வருவோருக்கும் கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே விசா வழங்கப்படும் என்று மலேசியா அறிவித்துள்ளது.
Posted in Airport, Chennai, Consulate, Employment, Flight, Illegal, Indians, International, Jobs, Kuala Lumpur, Kualalumpur, Malaysia, overstay, residents, Tourists, Visa, Work | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மார்ச் 8, 2007
உலகம் முழுவதும் 6 ஆயிரம் இந்தியர்கள் பல்வேறு சிறைகளில் அடைப்பு
புது தில்லி, மார்ச் 9: உலகம் முழுவதும் 6,277 இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் உள்ள சிறைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.
வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தான் சிறைகளைவிட வங்கதேச சிறைகளில்தான் அதிக இந்தியர்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். பாகிஸ்தான் சிறைகளில் 655 இந்தியர்கள் உள்ளனர். வங்கதேசத்தில் 893 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சவூதி அரேபியாவில்தான் அதிகபட்சமாக 1,116 இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் (791), மலேசியா (545), பிரிட்டன் (239), அமெரிக்கா (194), குவைத் (106), பஹ்ரைன் (101), செக்கோஸ்லோவேகியா (37), ஸ்லோவேகியா (100) ஆகிய நாடுகளிலும் பல்வேறு காரணங்களுக்காக தண்டனை பெற்று இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் அதிகாரிகள் மூலமாக சிறைகளில் உள்ள இந்தியர்களை விரைவில் விடுவிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் விசாரணையை வேகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு அந்தந்த நாடுகளை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் கைதிகளுக்கு சட்ட உதவிகளை வழங்குவது, கைதிகள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுடன் பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்வது, கைதிகளை மனிதாபிமான முறையில் நடத்துவது, சட்டப்பூர்வமாக அவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பெற்றுத்தருவது, விடுதலையாகும் கைதிகளை இந்தியாவுக்கு கொண்டுவருவது ஆகிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவிலிருந்து வேலைவாய்ப்புக்காக செல்லும் ஊழியர்களின் உரிமைக்காக வளைகுடா நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள அரசு யோசனை செய்துவருவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted in Ambassador, Bahrain, Bangladesh, Britain, Conuslate, Correctional, Courts, Czech, employee, Employment, England, extradition, Free, Government, Gulf, Immigration, Imprison, India, Indians, Jail, Jobs, Law, London, Malaysia, Order, Pakistan, Police, Prison, Saudi Arabia, Singapore, Slovakia, Statistics, Treaty, UK, US, USA, World | Leave a Comment »