ரயில் பயணிகளின் வசதிக்காக சென்னையில் முக்கிய இடங்களுக்கு “சிட்டி டூர்ஸ்’ உள்ளூர் சுற்றுலா: ஐ.ஆர்.சி.டி.சி. இன்று அறிமுகம்
சென்னை, ஏப். 7ரயில் பயணிகள் சென்னையில் முக்கிய இடங்களுக்குச் சுற்றுலா சென்று வரும் வகையில், “சிட்டி டூர்ஸ்’ என்ற உள்ளூர் சுற்றுலா சேவையை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) திங்கள்கிழமை முதல் அறிமுகப்படுத்துகிறது.
சென்னைக்கு பல்வேறு இடங்களில் இருந்து வரும் ரயில் பயணிகள் தங்களது ஓய்வு நேரத்தில் உள்ளூர் சுற்றுலா செல்லும் வகையில் இதற்கான பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
- செயின்ட் ஜார்ஜ் கோட்டை,
- எழும்பூர் அரசு அருங்காட்சியகம்,
- அண்ணா,
- எம்.ஜி.ஆர். நினைவிடம்,
- மெரீனா கடற்கரை,
- வள்ளுவர் கோட்டம்,
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்,
- மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்,
- சாந்தோம் தேவாலயம்,
- ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவில்,
- வண்டலூர் விலங்குகள் காட்சியகம்,
- மகாபலிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கார், வேனில் சென்று திரும்பும் வகையில் இந்த சுற்றுலா வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இடங்களுக்கு 6 மணி நேரம் மற்றும் 13 மணி நேரம் பயணம் சென்று திரும்ப சிற்றுண்டி வசதிகளுடன் ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்கான கட்டண விவரம் மற்றும் முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: முகேஷ், பயண ஒருங்கிணைப்பாளர், ஐ.ஆர்.சி.டி.சி, மெக்னிக்கல்ஸ் சாலை, சேத்துப்பட்டு, சென்னை. செல் போன்: 9444040677.