Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Illness’ Category

Influenza, Flu – Illness, Symptoms, Transmission, Diagnosis & Treatment

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2007

ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகளும் – சிகிச்சையும்

ஃப்ளூ என்று பொதுவாக அழைக்கப்படும் இன்ஃப்ளூயன்சா என்பது ஒரு வைரஸ் காய்ச்சல். இது மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் ஆகிய உறுப்புகளைத் தாக்குகிறது.

மூச்சுக் குழல் எனப்படும் சுவாசக் குழலைப் பாதிக்கும் மற்ற வைரஸ்களைவிட இன்ஃப்ளூயன்சா வைரஸ், தீவிரமாக நோய்க் கிருமிகளையும், சிக்கல் நிறைந்த நோய்த்தன்மையையும் கொண்டது. இன்ஃப்ளூயன்சா ஏ, பி மற்றும் சி ஆகிய 3 வைரஸ்களால் இந்த காய்ச்சல் ஏற்படலாம். இதில் ஏ ரக வைரஸ் பரவலாக தொற்றக் கூடியது, இது தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது.

இந்த ஏ டைப் வைரஸ் சீரான முறையில் வளர்ந்து சில ஆண்டு களுக்கு ஒரு முறை தொற்று நோய்ப் பரவலை ஏற்படுத்தக் கூடியது. இதில் டைப் பி, டைப் சி வைரஸ்களால் சிறு சிறு உபாதைகளே தோன்றி மறையும்.

இன்ஃப்ளூயன்சாவிற்கு வயது வித்தியாசமோ, வயது வரம்போ கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும், எப்போதும் இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்படலாம். பொதுவாக குளிர்காலத்திலேயே இந்தவகை வைரஸ் காய்ச்சல் தொற்றக்கூடியது. இந்த காய்ச்சல் ஏற்பட்டோரின் இருமல், சளி ஆகியவை மூலம் இது பிறருக்கும் தொற்றுகிறது.
இன்ஃப்ளூயன்சா திடீரென, உடனடியாகத் தோன்றும். முதலில் அதிக காய்ச்சல், குளிர், வேர்வை, தசை வலி மற்றும் தலைவலி போன்ற தொடக்க அறிகுறிகள் ஏற்படும். தொடர்ந்து மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை கட்டு மற்றும் சூரிய ஒளிக்கு ஒத்துக் கொள் ளாமல் கண்ணீர் வழியும் கண்கள் என்று இதன் நோய் அறிகுறிகள் விரிவடையும். இந்த உடனடி தீவிர அறிகுறிகள் சாதாரணமாக 3 அல்லது 5 நாட்களுக்கு இருக்கும், பொதுவாக 48 மணி நேரத்தில் நோய்க்கூறுகள் அதிகரிக்கத் தொடங்கும்.
ஃப்ளூ வைரஸ்களால் கூடுதலாக, எலும்பு உட்புழை, காது மற்றும் மூச்சுக்குழல் ஆகியவற்றில் தொற்றுக் கிருமிகள் ஏற்படுகின்றன. சில சமயம் ஃப்ளூவால் நியுமோனியா ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. நியுமோனியாவானது இன்ஃப்ளூயன்சா வைரசால் மட்டுமோ அல்லது இரண்டாம் கட்ட நோய்க்கிருமிக்கு காரணமாகும் பாக்டீரியாவாலோ தோன்றலாம்.

அறிகுறிகள்

  • 104 டிகிரி வரை காய்ச்சல்
  • தலைவலி
  • தசைவலி மற்றும் பிடிப்பு
  • மூக்கிலிருந்து தண்ணீர் போல் சளி வருதல்
  • இருமல்
  • மூச்சு விடுதலில் சிரமம்
  • நடுக்கம்
  • தளர்ச்சி
  • வியர்வை
  • பசியின்மை
  • மூக்கடைப்பு
  • தொண்டைக்கட்டு

இது சாதாரண ஃப்ளூ காய்ச்சலாக இருந்தால் மருத்துவர்கள் காய்ச்சல் எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளைக் கொடுத்து கட்டுப்படுத்துவர். ஆனால் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், வயதானவர்கள், இருதயம், நுரையீரல் மற்றும் கிட்னி ஆகியவற்றில் நீண்ட நாளைய பழுது இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா வைரஸ் இருப்பது 48 மணி நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டால் அமான்ட டின், ரிமான் டடின் ஆகிய வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப் படுவது இயல்பு.
குழந்தைகளை இந்த வைரஸ் நோய் தாக்கினால் சிகிச்சை பொதுவாக தேவையில்லை என்று கருதப்படுகிறது. ஆனால் இதன் மூலம் வேறு நோய்கள், வேறு உறுப்புகளில் பழுது என்ற நிலை தோன்றுவதுபோல் தென்பட்டால் சிகிச்சை அவசியம் தேவைப்படும். குழந்தைகளுக்கு ஆஸ்ப்ரின் கொடுக்கக் கூடாது, ஏனெனில் இது ஆபத்து மிகுந்தது. ஆஸ்ப்ரினுக்கும் சுநலந’ள ளலனேசடிஅந என்ற புது வகை ஃப்ளூவிற்குமான தொடர்பு நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தண்ணீர், பழச்சாறுகள் மற்றும் திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல் அவசியம்.
அதிக திரவங்களை உட்கொண்டால் எலும்பு உட்புழை மற்றும் நுரையீரலில் உள்ள சளிச்சவ்வு மெலிதடைந்து உடலிலிருந்து விரைவில் வெளியேறும்.
பொதுவாக இன்ஃப்ளூயன்சா காய்ச்சலை குறைக்காமல் அதன் முழுக்காலத்தை கடக்கவிடுவதே சிறந்தது. ஆனால் குழந்தை களுக்கும், வயதானவர்களுக்கும் சிகிச்சை அவசியம் தேவை. இது பிறருக்கு தொற்றாமல் இருக்க பாக்டீரியா – தடுப்பு சோப்பை பயன்படுத்தி அடிக்கடி கை கழுவுதல் நலம்.
பிற உறுப்புகளில் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா தாக்கினால், மேலும் சிக்கல் நிறைந்த நோய்களை உருவாக்க வாய்ப்பிருக்கிறது என்பது தவிர இதனால் பெரும் ஆபத்து எதுவும் இல்லை.
ஆரோக்கியமாக இருந்து வரும் நபர்களுக்கு இன்ஃப்ளூயன்சா 7 முதல் 10 நாட்களில் குணமாகி விடும். வயதானவர்கள், உடல் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், நீண்ட நாள் இருதய, கிட்னி மற்றும் நுரையீரல் நோய் இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா வைரஸ் மேலும் ஆபத்தானதாக மாறுவதற்குக் கூட வாய்ப்புகள் அதிகம்.

Posted in Advice, Antibody, bacterial, Bio, Care, Cold, Congestion, diagnosis, Doc, Doctor, Fever, Flu, Health, Illness, Immune, immunity, Infection, Influenza, medical, Medicine, Science, Shot, Sick, Symptoms, Transmission, Treatment, Viral, Virus, Wellness | Leave a Comment »

Vidya Sagar – Community Mental Health and Development (CMHD): mental illness – Schizophrenia

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

சேவை: மனம் இருந்தால் “மார்க்’ உண்டு!

மன வளர்ச்சி குன்றியோர் காப்பகங்கள் பல உருவாகியுள்ளன. ஆனால் அவர்களை அவர்களே காத்துக் கொள்வதற்கான பயிற்சிகளும் அளிக்கப்படும் அமைப்புகள் அவற்றில் சிலவே.

இத்தகையவர்களுக்காகக் கடந்த 22 ஆண்டுகளாக சென்னை கோட்டூர்புரத்தில் இயங்கி வந்த ஸ்பாஸ்டிக் சொûஸட்டி ஆஃப் இந்தியா அமைப்பு, இப்போது “வித்யாசாகர்’ என்ற பெயரில் இயங்கத் தொடங்கியிருக்கிறது. ஏன் இந்தப் பெயர் மாற்றம் என்று அவர்களிடம் காரணம் கேட்ட போது, “”பெயரில்கூட அவர்களின் மன வளர்ச்சியை நினைவுபடுத்தி காயப்படுத்த வேண்டாம் என்பதால்தான்” என்கிறார் ஜெயந்தி நடராஜன். இந்த அமைப்பின் விற்பனை மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவைச் சேர்ந்தவர் இவர். இத்தகையவர்களுக்கான வேலைவாய்ப்புகளுக்காகவும் முனைப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

“”கடந்த 22 ஆண்டுகளாக மூளை முடக்குவாதம் சம்பந்தமான ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்காகவும் மாணவர்களைப் பயிற்றுவிக்கவும் பாதுகாக்கவும் செயல்பட்டு வந்த நாங்கள் இப்போது அவர்களுக்கு இலவசமாகத் தொழிற் பயிற்சிகள் அளிக்கவும் ஆரம்பித்திருக்கிறோம்.

எந்தப் பணி இடத்திலும் ஆங்கிலத்தின் தேவை அதிகரித்து வருவதால் அதற்கான பயிற்சியை அளிக்கிறோம். கணினி சம்பந்தமான குறைந்தபட்ச திறன் இப்போது எல்லா துறைகளிலும் தேவையாகிவிட்டது. அதற்கான பயிற்சியையும் “பிஹேவியரல் ஸ்கில்’ எனப்படும் நடத்தைத் திறனுக்கான பயிற்சியையும் அளிக்கிறோம். இவையாவும் இரண்டு மாத இலவச பயிற்சித் திட்டங்களாகும். நடத்தைத் திறன் என்பது உளவியல் ரீதியாக அவர்களை செழுமைப்படுத்துவதாகும். பழகும் தன்மை, செய்தியை விளங்க வைக்கும் திறமை போன்றவை சம்பந்தமானது.

18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட உடல் ஊனமுற்ற யாவரும் இதில் சேரலாம். உடல் ஆரோக்கியத்துடன் எல்லா திறமையும் இருந்தும் போட்டியை எதிர் கொள்வதற்கான மனோ தைரியம் இல்லாதவர்கள் இருக்கும் சூழலில் எங்களிடம் பயிற்சி பெறுபவர்களின் கண்களில் தெரியும் நம்பிக்கை ஒளி உண்மையில் பிரமிக்க வைக்கிறது” என்கிறார் அவர்.

மனசுகள் முடங்காதவரை எதுவும் யாரையும் எதுவும் முடக்கிவிடமுடியாதுதானே? மனம் இருந்தால் “மார்க்’ உண்டு!

Posted in Behavioral, Challenged, CMHD, cure, Development, Disabled, Disease, Free, Health, Illness, Mental, Phsychological, Schiz, Schizophrenia, service, Skills, Spastic, Students, Teach, Teachers, Vidhyasagar, VidiyaSagar, Vidya Sagar, Vidyasagar, VithiyaSagar, VithyaSagar | Leave a Comment »

Raman Raja: Assisted Suicide, Jack Kevorkian & Euthanasia

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

நெட்டில் சுட்டதடா…: மருத்துவர் நடத்திய மரண விளையாட்டு!

ராமன் ராஜா

உலகில் எவ்வளவோ நாடுகளில் எவ்வளவோ மக்கள், தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். பேச்சுரிமை, எழுத்துரிமை, விரும்பின கலர் சட்டை போட்டுக் கொள்ளும் உரிமை என்று சின்னதும் பெரியதுமாகப் பல விடுதலைப் போராட்டங்கள். இதில் கட்டக் கடைசி என்று சொல்லத் தக்கது, உயிரை விடும் உரிமை. தற்கொலை செய்து கொள்வது சில நாடுகளில் சட்டப்படி செல்லும்; சிலவற்றில் குற்றம். தற்கொலையாளியின் பக்கத்தில் இருந்து பிரார்த்தனை செய்த பாதிரியார் ஒருவர் கூட சமீபத்தில் சிறைக்குப் போயிருக்கிறார்.

ஆனால் மருத்துவர் உதவியுடன், வலியில்லாமல் பிசிறில்லாமல் தற்கொலை செய்துகொள்கிற உரிமையைக் கேட்டுப் போராடும் பல குழுக்கள் இருக்கின்றன. ABCD என்பது அவற்றில் முக்கியமான அமெரிக்க இயக்கம்.

“”தீர்க்க முடியாத வியாதிகளால் வருடக் கணக்காக வலியும் வேதனையும் அனுபவித்து, சேர்த்து வைத்த சொத்தெல்லாம் பயனில்லாமல் ஆஸ்பத்திரிச் செலவுக்குக் கரைந்து, உறவினருக்கும் பாரமாய், உயிர் பிரியாமல் அவஸ்தைப்படுபவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். போகிற உயிரைச் செயற்கையாகப் பிடித்து வைத்துக் கொண்டு என்ன சாதிக்கப் போகிறீர்கள்? அவர்களுக்கு இறுதி விடுதலை கொடுங்கள்; அமைதியாகத் தூங்க விடுங்கள்” என்று இவர்கள் பிரசாரம் செய்கிறார்கள். பதினைந்து வருடம் கோமாவில் கிடந்த டெர்ரி ஷியேயோ என்ற பெண்மணியின் ஆக்ஸிஜன் டியூபைப் பிடுங்க வேண்டும் என்று அவர் கணவர் போட்ட வழக்கில் வெற்றியும் பெற்றார். ஆனால் அதற்குள் அமெரிக்காவே இரண்டு கட்சியாகப் பிரிந்து அடித்துக் கொண்டது.

சென்ற வாரம் முழுவதும் டாக்டர் ஒருவர் சிறையிலிருந்து விடுதலையான செய்தியை உலகத்து மீடியா முழுவதும் பேசியது: அவர்தான் மரண மருத்துவர் (டாக்டர் டெத்) என்று செல்லமாகப் பெயர் படைத்த டாக்டர் கெவார்க்கியன். “”மரணம் எங்கள் பிறப்புரிமை” என்று முழங்கியவர்; பற்பல உயிர்களை முழுங்கியவர். “”ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய சொந்த உயிரின் மீது முழு அதிகாரம் உண்டு. அதைப் போற்றிப் பாதுகாப்பதோ, போக்கிக் கொள்வதோ, அவரவர் இஷ்டம். அரசாங்கமோ, சட்டமோ இதில் தலையிடக் கூடாது.” என்று வாதாடினார். பேச்சுடன் நிற்காமல் நூற்றுக்கும் மேற்பட்ட சாவுகளைப் பக்கத்தில் இருந்து பக்குவமாக நடத்தியும் வைத்தார்.

டாக்டர் கெவார்க்கியனுக்கு இப்போது பழுத்த எழுபத்தேழு வயது. அமெரிக்காவின் மிஷிகன் நகரைச் சேர்ந்தவர். இளமைப் பருவத்தில், டாக்டர் தொழிலின் காரணமாக நூற்றுக்கணக்கில் போஸ்ட் மார்ட்டம் செய்து தள்ள வேண்டியிருந்தது. அதனால் அவருக்கு மரணத்தின் மேலேயே ஓர் அலாதியான ஈர்ப்பு வந்துவிட்டது. உயிர் பிரியும் அந்தக் கடைசிக் கணத்தில் ஒரு நோயாளியின் கண்கள் எப்படி இருக்கும் என்று காத்திருந்து போட்டோ எடுத்திருக்கிறார். வாழ்ந்த சூடு இன்னும் மாறாமல் இருக்கும் பிணங்களிலிருந்து ரத்தத்தை உறிஞ்சி உயிருள்ள பேஷண்டுகளுக்குக் கொடுக்கமுடியுமா என்று ஒரு முயற்சி. கடைசியாக மரண தண்டனை பெற்ற கைதிகளை வைத்துக் கொண்டு உயிரோடு அறுத்துப் பார்த்து ஆராய்ச்சி செய்ய முயன்றதில், பல்கலைக் கழகத்தினர் அதிர்ச்சி அடைந்து டாக்டரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்! ஆனால் கெவார்க்கியன் அசரவில்லை; நேராகப் பத்திரிகை அலுவலகத்துக்குப் போய் ஒரு விளம்பரம் கொடுத்தார்: “”ஏதாவது காரணத்துக்காக உயிர் வாழ்வதில் ஆர்வம் இழந்து விட்டவர்கள் என்னிடம் வரலாம். தொல்லை நிறைந்த இந்த உலகத்திலிருந்து வலியில்லாமல் விடுதலை வாங்கித் தருகிறேன்.” இதைப் பார்த்ததும் புதிய ரஜினி படத்துக்கு முன் பதிவு செய்யும் வேகத்தில் விண்ணப்பங்கள் வந்து குவிந்து விட்டன!

கெவார்க்கியன், கருணை வள்ளல்; தன் கையால் கொலை பாதகம் செய்ய மாட்டார். அவர் தயாரித்த “தானட்ரான்’ என்ற இயந்திரம்தான் அந்த வேலையைச் செய்யும். தற்கொலை கேûஸ அமைதியாகப் படுக்க வைத்து “”சாமியைக் கும்பிட்டுக்கப்பா” என்று சொல்லிக் கையில் பச்சை நரம்பு தேடி, ஊசி குத்தி சலைன் பாட்டிலை இணைப்பார். இப்போது நோயாளியே இயந்திரத்தில் ஒரு பட்டனை அழுத்த வேண்டும். முதலில் ஒரு விஷ மருந்து சொட்டுச் சொட்டாகக் கையில் இறங்கும்; மெல்ல ஆசாமி கோமா நிலைக்குப் போவார். சில நிமிடம் கழித்து தானட்ரான், தானாகவே மற்றொரு ரசாயனத்தைத் திறந்துவிடும். அது இதயத்துடிப்பை கப்பென்று பிடித்து நிறுத்திவிடும்.

இப்படிச் சில பல கொலைகள் செய்த பிறகு “ஆபத்தான ஆசாமி’ என்று கெவார்க்கியனின் மருத்துவ லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது; இப்போது அவர் சட்டப்படி யாருக்கும் ஊசி மருந்து எழுதித் தர முடியாது. எனவே மறுபடி முனைந்து மெர்ஸிட்ரான் என்று மற்றொரு மெஷின் கண்டுபிடித்தார்: கடையில் கிடைக்கும் கார்பன் மோனாக்ûஸடு வாயு சிலிண்டரை வாங்கி வைத்துக் கொண்டு சுவாசித்து மூச்சடைக்கும் இயந்திரம் இது. டெக்னிகலாகப் பார்த்தால் டாக்டர் யாரையும் கொல்லவில்லை; அவரவர்கள் தாங்களேதான் வீட்டு ஃபிரிஜ்ஜை டீஃப்ராஸ்ட் பண்ணுவது போல ஒரு பொத்தானை அமுக்கிக் கொண்டு செத்தார்கள். 1990-ல் ஆரம்பித்து ஏழெட்டு வருடத்திற்குள், இப்படி 130 பேருக்கு எமலோகத்துக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து டாட்டா காட்டியிருக்கிறார் டாக்டர்.

தன்னிடம் வந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் எல்லாமே நோயாளிகள், வாழ்க்கையின் இறுதித் கட்டத் துன்பம் தாங்காமல் வந்தவர்கள்தான் என்று சாதித்தார் கெவார்க்கியன். ஆனால் பிறகு அவர்களில் பலரை போஸ்ட்மார்ட்டம் செய்தபோது அப்படியொன்றும் கடும் வியாதி இருந்ததாகத் தெரியவில்லை. காதல், கடன், பிளஸ் டூ பரீட்சை போன்ற வழக்கமான காரணங்களுக்காகத்தான் பெரும்பாலோர் பட்டனை அமுக்கித் தொலைத்திருக்கிறார்கள்.

கடைசியில் 1998 செப்டம்பரில் கெவார்க்கியன் நடத்தி வைத்த ஒரு தற்கொலைதான் அவரை ஜெயிலுக்கு அனுப்பியது: தாமஸ் யூக் என்ற நோயாளி; ஐம்பது வயது தாண்டியவர். அவர் கையைக் காலை அசைக்க முடியாத பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததால், கெவார்க்கியன் தானே தன் கையால் விஷ ஊசியைப் போட்டு வழியனுப்பி வைத்தார். அதை அப்படியே வீடியோ படமாக எடுத்து, இந்தியன் கமல்ஹாசன் பாணியில் டி.வி.யில் வேறு போட்டுக் காட்டினார்! இதைப் பார்த்துத் திகைத்துப் போன பொதுமக்கள் கொழு மோர் காய்ச்சிக் குடித்தார்கள்; குழந்தைகள் பல நாள் வரை திருடன்-போலீஸ் விளையாட்டை மறந்து டாக்டர்- விஷ ஊசி விளையாட்டில் ஈடுபட்டார்கள். இந்த வீடியோ ஆதாரத்தின் பேரில் கெவார்க்கியன் கைது செய்யப்பட்டார்.

கோர்ட்டில் கெவார்க்கியன் “”செத்தவனைப் போய்க் கேளுங்க” என்று சுலபமாகத் தப்பித்திருக்கலாம். தற்கொலைக்கு உதவி செய்வது தப்பா, சரியா என்பது பற்றி சுப்ரீம் கோர்ட்டே தெளிவாக இல்லை; மாநிலங்கள் ஒவ்வொன்றும் மனம் போனபடி சட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன. நல்ல வக்கீலாக வைத்துக் கொண்டிருந்தால் அவர் லாகவமாக லா பாயிண்டைப் போட்டுக் குழப்பி வாங்கித் தந்திருப்பார். ஆனால் கெவார்க்கியன் கொஞ்சம் விளம்பரப் பிரியர்; மீடியா மொத்தமும் ஆர்க் விளக்குகளைத் தன் மீது திருப்பியதில் நிலை மறந்து விட்டார். தன் கேûஸத் தானே வாதாடிக் கொள்வதாகச் சொல்லி, கோர்ட்டில் மனோகரா சிவாஜி கணேசன் மாதிரி உணர்ச்சிகரமாக உரையாற்றினார். ஆனால் பழம் பெருச்சாளியான அரசாங்க வக்கீல் தூவிய நுணுக்கமான சட்டப் பொடிகளைச் சமாளிக்க முடியாமல் தும்மிவிட்டார். டாக்டருக்கு இரண்டாவது டிகிரி கொலை செய்ததற்காக இருபத்தைந்து வருடம் வரை சிறைத் தண்டனை கிடைத்தது.

இப்போது எட்டு வருட தண்டனையை அனுபவித்த பிறகு, மோசமடைந்து கொண்டிருக்கும் உடல் நிலையைக் காரணம் காட்டி கெவார்க்கியனை பரோலில் விடுதலை செய்திருக்கிறார்கள்; “”வெளியே போனதும் சமர்த்துப் பையனாக இருக்கவேண்டும்; யாரையும் கொல்லக் கூடாது” என்ற நிபந்தனையுடன். வெளியே காத்திருந்த டாக்டரின் ரசிகர்கள் விழாவே கொண்டாடிவிட்டார்கள். வாழ்வின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் நோயாளிகள் பலர், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே அவரைச் சுற்றிச் சுற்றி வந்து ஆதரவு தெரிவித்தார்கள். “”இறப்போரின் உரிமைக்காக இறுதி மூச்சு வரை போராடுவேன்” என்று சூளுரைத்திருக்கிறார் டாக்டர் கெவார்க்கியன்.

ஒரு வயதான பெண்மணி ஐ.சி.யூவில் நினைவின்றிப் படுத்திருக்க, பக்கத்தில் ஒட்டுக் கேட்கப்பட்ட உரையாடல்: “”இவங்கதான் என் மாமியார். வயசு அறுபதுக்கு மேலே ஆகிவிட்டது. வீட்டிலே இருக்கும்போதெல்லாம் “நொய் நொய்’னு ஒரே பிடுங்கல். நீங்களாவது கொஞ்சம் பார்த்து ஆபரேஷன் பண்ணுங்க டாக்டர். என்ன செலவானாலும் பரவாயில்லை!”

“”உம். புரியுது, புரியுது. முடிச்சுருவோம்!”

Posted in activism, Activist, Arrest, Christianity, dead, Death, discussion, Disease, Doctor, Euthanasia, Healthcare, Illness, Issue, Justice, Kevorkian, Law, Medicine, Murder, Order, Pain, physician, Raman Raja, Ramanraja, Religion, SNEHA, suffering, Suicide, US, USA, Will | Leave a Comment »