Posted by Snapjudge மேல் திசெம்பர் 15, 2006
சென்னையில் இன்று முதல் சர்வதேச திரைப்பட விழா: 40 நாடுகளைச் சேர்ந்த 102 படங்கள் திரையிடப்படுகின்றன
சென்னை, டிச.15:சென்னையில் டிச.15 முதல் 22 வரை நான்காவது சர்வதேசத் திரைப்பட விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் 40 நாடுகளைச் சேர்ந்த 102 படங்கள் திரையிடப்படுகின்றன.
இவ்விழாவை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வெள்ளிக்கிழமை (டிச.15) மாலை 6 மணிக்கு ராயப்பேட்டையிலுள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் தொடங்கி வைக்கிறார். மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, ஐசிஏஎஃப் தலைவர் எஸ்.சி.நாயக், நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள்.
இவ்விழா உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சிம்பொனி திரையரங்குகளிலும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கிலும் நடைபெறுகிறது.
இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் (ஐசிஏஎஃப்), தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மற்றும் பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் இணைந்து இத்திரைப்பட விழாவை நடத்துகின்றன. பல நாடுகளைச் சேர்ந்த பிரபல இயக்குநர்களின் சிறந்த படங்கள் திரையிடப்படுகின்றன. அந்தப் படங்களில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலர் இவ்விழாவுக்காக சென்னை வந்துள்ளனர்.
இந்தியா சார்பாக
- “சிருங்காரம்’,
- “ஜோமதி’,
- “பாங் கனெக்ஷன்’,
- “மை டாட்டர்’ போன்ற படங்கள் திரையிடப்படுகின்றன.
Posted in Bong Connection, Chennai, China, Cine Appreciation, Cinema, Dayanidhi maran, December, IFFI, Indian Films, Indo-Korean, International Film Festival, Jomathy, Madras, Movies, My Daughter, Pedro Almodovar, South Korea, Spanish, Srungaram, Sudhish Kamath, Tamil, That four letter word, Volver | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 14, 2006
வங்கதேச திரைப்படத்துக்கு முதன்முறையாக சர்வதேச விருது
புது தில்லி, டிச.14: கோவாவிலுள்ள பனாஜியில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் பங்கேற்ற “நிராந்தோர்‘ என்ற வங்கதேசப் படத்துக்கு விருது கிடைத்துள்ளது.
இந்தப் படத்தை இயக்கியவர் அபு சயீத் (43). இவர் இயக்கியுள்ள மூன்றாவது திரைப்படம் இது. வங்கதேசம் சார்பாக ஒரு திரைப்படம் சர்வதேச அளவில் விருது பெறுவது இதுவே முதன்முறையாகும்.
இதற்கு முன்பு 1985-ம் ஆண்டு “ஆகமி‘ என்ற வங்கதேச படம் குறும்பட பிரிவில் விருது பெற்றதே சாதனையாக இருந்தது.
வேலைவாய்ப்பின்மை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக ஓர் இளம் பெண் பாலியல் தொழிலில் ஈடுபடுவதையும், அதைத் தொடர்ந்து அவள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் உளவியல் ரீதியாக அணுகியிருப்பதுதான் படத்தின் கதை.
இந்தப் படத்துக்காக இயக்குநர் அபு சயீத்துக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இத்தொகையைத் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு செலவுகளுக்குப் பயன்படுத்தவுள்ளதாக அபு சயீத் கூறியுள்ளார்.
Posted in 2006, Abu Sayeed, Asian Movies, Awards, Goa International Film Festival, Humayun Ahmed, IFFI, Jonon Jopnom, Nirontor, Prizes, Silver Peacock | Leave a Comment »