Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Hungry’ Category

Vijayarajan: Mooligai Corner – Herbs & Naturotherapy: Maavilingam

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

மூலிகை மூலை: வாதக் காய்ச்சலைப் போக்கும் மாவிலிங்கம்!

விஜயராஜன்

மூன்று கூட்டு இலைகளையும் விரல்களைப் போன்ற வடிவம் உள்ளதும், மலர்ந்ததும் மஞ்சள் நிறமாக மாறும் வெள்ளைப் பூக்களையும், சிவப்பு நிற உருண்டையான சதைக் கனிகளையும் உடைய வெண்மை நிற மர இனமாகும் மாவிலிங்கம். இலை, வேர், பட்டை ஆகியவை மருத்துவக் குணம் உடையவை. இலை பசியைத் தூண்டும். உடலுக்கு நல்ல பலத்தைத் தரும். பட்டை மலச்சிக்கலைப் போக்கும். வேர் நோயை நீக்கி உடலுக்கு வலுவைக் கொடுக்கும். தமிழகம் எங்கும் தானாகவே வளர்கின்றது.

வேறு பெயர்கள்: குமார கன சுவேத புசுப்பி, சாருகாவிகம், எழும்பலதிச்சுடரும், வன்னி, தீபனி, மாவிலங்கு.

ஆங்கிலத்தில் : Crataeva religiosa; Forst; Eapparida

இனி மருத்துவ குணங்களைப் பார்ப்போம்:

மாவிலிங்க இலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு, அத்துடன் சுக்கு 1 துண்டு, சீரகம் ஒரு சிட்டிகையளவு பொடியாக்கிச் சேர்த்துப் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 150 மில்லியளவு வீதம் 3 வேளை குடித்து வர மந்தம், செரியாமை, வாதக் காய்ச்சல் குணமாகும்.

மாவிலிங்க இலையை அரைத்துப் பற்றுப் போட அனைத்து வீக்கங்களும் கரையும்.

மாவிலிங்க இலையை 2 கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 150 மில்லியளவு வீதம் 3 வேளை குடித்து வர மந்தம், செரியாமை, வாதக் காய்ச்சல் குணமாகும்.

மாவிலிங்க இலையை 2 கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாகக் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் 100 மில்லியளவு தேங்காய்ப் பால் கலந்து 4 வேளை குடித்துவர முடக்கு வாதம் குணமாகும்.

மாவிலிங்கப்பட்டை ஒரு பங்கும் அதில் பாதியளவிற்குப் பூண்டும், மிளகு கால் பங்கும் சேர்த்து அரைத்து கொட்டைப் பாக்களவு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர முடக்கு வாதம் குணமாகும்.

மாவிலிங்கப் பட்டை 40 கிராம், சுக்கு, திப்பிலி, சதகுப்பை வகைக்கு 20 கிராம், சித்திர மூலவேர், மூங்கிலிலை வகைக்கு 10 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 3 வேளை 150 மில்லியளவு குடித்து அத்துடன் கால் பாகம் அன்னாசிப் பழத்தை தோல் சீவி சர்க்கரை கலந்து சாப்பிட்டு சூடான அரிசிக் கஞ்சியும் இஞ்சித் துவையலும் சேர்த்துச் சாப்பிட இளம் சூடு கரையும்.

மாவிலிங்கப் பட்டையை 40 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 50 மில்லியாக 2 வேளை குடித்து வரக் கால் வீக்கம், நீர்க்கட்டு, கல்லடைப்பு, வெட்டை, சூலை, மாதவிலக்குப் பிரச்சினைகள், வயிற்றுப் புண், கண்டமாலை, புண்கள், விஷக்கடி குணமாகும்.

மாவிலிங்கப்பட்டை, உள்ளி, மிளகு சம அளவாக எடுத்து அரைத்து கொட்டைப் பாக்களவு 3 நாள் காலையில் கொடுக்க மாதவிலக்கு உண்டாகும்.

மாவிலிங்கம் சமூலத்தை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர காய்ச்சல், வெட்டை, சூலை, கல்லடைப்பு, நீரடைப்பு நீங்கும்.

மாவிலிங்க இலையைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க காய்ச்சல், செரியாமை குணமாகும்.

மாவிலிங்க இலையை அரைத்து உள்ளங்காலில் பற்றிட வலி, வீக்கம், எரிச்சல் நீங்கும்.

மாவிலிங்கப் பட்டையைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை தொடர்ந்து குடித்துவர கல்லடைப்பு குணமாகும்.

மாவிலிங்கப் பட்டையை வெட்டி உட்புறமாக வைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.

மாவிலிங்கப் பட்டையை வட்டமாக வெட்டி அரையாப்புக் கட்டி மீது வைத்து அதன் மீது ஓர் ஈயத் தகட்டை வைத்துக் கட்ட கட்டி அமுங்கிவிடும்.

மாவிலிங்கப் பட்டையை நன்றாக நசுக்கி, எருக்கம் இலையை தொன்னை தைத்து அதில் முப்பிணி கண்டவர்களுக்குத் தலையில் வைத்துக் கட்ட குணமாகும்.

Posted in Advice, Alternate, appetite, appetizers, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Crataeva religiosa, Eapparida, Fever, Forst, Herbs, Hunger, Hungry, Maavilingam, Maavilinkam, Mavilingam, Mavilinkam, medical, Mooligai, Naturotherapy, Pain, paralysis, rheumatism, Vijaiyarajan, Vijayarajan | 1 Comment »

Child and juvenile labour force in Tamil Nadu – Dinamani Op-ed

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 15, 2007

இது நியாயமா?

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும், நாளைய தலைமுறை கல்வியறிவும் ஆரோக்கியமும் உடைய சமுதாயமாக உருவாக வேண்டும் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமான, கிராமப்புற வளர்ச்சி பெரிய அளவில் ஏற்படாத நாடுகளில் தவிர்க்க முடியாத களங்கம் ஒன்று இருக்குமேயானால், அது கல்வி கற்க வேண்டிய வயதில் எடுபிடி வேலைகளைச் செய்யும் நிலைக்குக் குழந்தைகள் ஆளாக்கப்படுவதுதான்.

சமீபத்தில் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தங்களது மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்திய குற்றத்திற்காக 28 நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து 68 வழக்குகளும் பதிவு செய்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காகவே அமைக்கப்பட்ட 32 கல்விச்சாலைகளில், மீட்கப்பட்ட 1,198 குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கப்படுவதாக அந்த மாவட்டச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதேபோல, மற்ற மாவட்டங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கும் மாவட்ட ஆட்சியாளர்கள் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக முனைப்பாகச் செயல்படுகின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இது ஏதோ தமிழகமோ, இந்தியாவோ மட்டுமே எதிர்நோக்கும் பிரச்னை என்று கருதிவிட வேண்டாம். வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் – அதாவது, பின்தங்கிய நாடுகளில் – ஐந்து முதல் பதினான்கு வயதுவரை உள்ள 25 கோடிக் குழந்தைகள், கல்வி கற்க முடியாமல் ஏதாவது வேலையில் ஈடுபட்டு வருவதாக 1998-ல் வெளியான ஐ.நா. செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. சமீபத்திய ஒரு புள்ளிவிவரப்படி உலகில், எட்டு குழந்தைகளில் ஒரு குழந்தை தனது வருங்காலத்தை வளமாக்க முடியாத, கல்வி கற்க முடியாத நிலைமை.

இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கல்வியறிவு பெற வழியில்லாமல், குடும்பத் தொழிலிலோ அல்லது வேறு ஏதாவது வேலையிலோ ஈடுபடுத்தப்படுவதாகவும், தமிழகத்தில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இன்னும் கல்விச்சாலைகளுக்குச் செல்லாமல் ஏதாவது வேலை செய்து குடும்பத்துக்கு உதவ வேண்டிய நிலையில் இருப்பதாகவும், மத்திய அரசின் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக, இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் பல சட்டங்களை இயற்றி வந்திருக்கிறோம். குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்குக் கல்வியறிவு அளிப்பதற்கு நிதிநிலை அறிக்கைகளில் தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது. 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மட்டும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்காக 228 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முனைப்பாகச் செயல்பட்டு அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பும் நல்கி வருகின்றன என்பதுதான் உண்மை. பெருந்தலைவர் காமராஜரின் மதிய உணவுத் திட்டமும் சரி, எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு இன்று வரை செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டமும் சரி, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மிகப்பெரிய முயற்சிகள் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை செய்தும், குழந்தைத் தொழிலாளர் முறையை ஏன் கட்டுப்படுத்தவோ, முற்றிலும் அகற்றவோ முடியவில்லை? குழந்தைகள் படித்தே தீர வேண்டும் என்கிற வைராக்கியம் ஏன் பெற்றோர் மத்தியில் ஏற்படவில்லை?

இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள்.

முதலாவது காரணம், கிராமப்புற வறுமை. விவசாயம் வெற்றிகரமாக நடக்காத வரையில் கிராமப்புற வறுமையை ஒழிக்க முடியாது. வறுமை இருக்கும்போது குழந்தைகளைக் கல்விக்கூடங்களுக்கு அனுப்புவதைவிட, குடும்ப வருமானத்தை அதிகரிக்கப் பயன்படுத்துவதற்குத்தான் பெற்றோர்கள் முயல்வார்கள் என்பது இயல்பு. இந்த விஷயத்தில் நமது ஆட்சியாளர்கள்தான் நல்ல தீர்வைத் தர முடியும்.

இரண்டாவது காரணம், இந்தப் பிரச்னை பற்றிய விழிப்புணர்வும் அக்கறையும் படித்தவர்கள் மத்தியில் இல்லாதது. குழந்தைத் தொழிலாளர்களைக் குறைந்த கூலிக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்கிற மனப்போக்கிலேயே தவறு இருக்கிறது. குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்பவர்களைச் சமுதாயம் புறக்கணிக்க முற்படுமேயானால், இந்த சமூகக்கேடு பெரிய அளவில் தடுக்கப்படும். நாமே மறைமுகமாக இந்தக் கொடுமையை அங்கீகரிக்கிறோமே, இது நியாயமா?

Posted in Center, Centre, Child, Children, City, Dharmapuri, Education, Employment, Exploit, Exploitation, Females, Food, girls, Govt, Hotels, Hunger, Hungry, Illiteracy, Income, juvenile, Kids, Labor, Labour, Literacy, Metro, Needy, Policy, Poor, Read, Restaurants, Rich, Rural, She, State, Student, Suburban, Tharmapuri, Village, Wealthy, Women, Work, Worker | Leave a Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to avoid Exhaustion

Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோர்வுக்குக் காரணம் என்ன?

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே) செல் : 9444441771

எனக்கு வயது 60 ஆகிறது. காலைக்கடன் முடித்தவுடன் நீராகாரம் சாப்பிடுகிறேன். மதியம் 11 மணி சுமார் கேழ்வரகு கஞ்சி சாப்பிடுகிறேன். கைகால் உடம்பு வலி உள்ளது. காலையில் சீக்கிரம் பசி எடுக்கிறது. அடிக்கடி உடல் சோர்வு அடைந்துவிடுகிறது. இது எதனால்?

இரவு படுக்கும்முன் சிறிது சிந்தனை தேவை. இன்று பகல் பொழுதைக் கழித்த விதம், நேற்றிரவைக் கழித்த விதம், இரண்டும் சிந்தனைக்குரியவை. நேரான முறையால் ஏற்பட்ட நன்மை, மன நிறைவு, சீர்கெட்ட முறையால் ஏற்பட்ட உடல்-மனப்பாதிப்பு, இரண்டின் பின்விளைவுகள், இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து அதன் அடிப்படையில் நாளைய வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டியது, என இவை அனைத்தையும் தினமும் சிந்திக்க வேண்டும். சிந்திப்பது செயலுடன் நெருங்கி இருக்க வேண்டும். செயல் சிந்தனையுடன் நெருங்கி இருக்கவேண்டும். இப்படி நினைப்பவன் துக்கமடைவதில்லை என்று வாக்படர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார்.

உங்களுடைய உடல்சோர்வு பற்றி அறிவதற்கு கீழ்காணும் கேள்விகள் உதவும்.

1. நீங்கள் செய்யும் பணி உங்கள் சக்திக்கு மீறியதா?

2. தூக்கம் அதிகமா? குறைவா? படுத்தவுடன் தாமதமாகிறதா? அயர்ந்த தூக்கம் ஏற்படுகிறதா? பிறர் நீங்கள் குறட்டை விடுவதாகக் கூறினாலும் நீங்கள் அவ்விதம் தூங்கவில்லை என்று உணர்கிறீர்களா? தூக்கத்தை எது தடைசெய்கிறது?

3. சீக்கிரத்தில் விழிப்பு ஏற்படுகிறதா? விழித்ததும் தெளிவு காண்கிறதா? சோம்பல் தலைவலி, மயக்கம், உடல்வலி வாய் உலர்ந்திருத்தல், கழுத்தில் வலி, மார்பில் வலி, தொண்டையில் இறுக்கம், படபடப்பு, கோபம், தாபம், அழுகை, மனத்தளர்ச்சி, உணர்ச்சிவசப்படுதல், இவற்றில் ஏதாவது ஒன்றா? பல்வேறு காரணங்களா?

நீங்கள் முதுமையில் காலடி எடுத்து வைத்திருப்பதால் உடல் சோர்வு வயது முதிர்ச்சியால் ஏற்படுமானால், ஓரளவு இதற்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும்.

மனதைப் பாதிக்கும் நோய்கள் உடலைப் பாதிக்கின்றன. இவற்றில் மனம் கெட்டபின் உடல் கெடுவதாயின் மனநோய்கள் எனவும், உடல் கெட்டபின் மனம் கெடுவதாயின் உடல் நோய்கள் எனவும் ஓரளவு வரையறுக்க முடியும். சில நோய்களை இப்படித் தரம் பிரிக்க முடிவதில்லை. எது முதலில் கெட்டது? உடலா? மனமா? எனத் தெரிந்து கொள்ள முடிவதில்லை. இவற்றை “ûஸகோ úஸôமாடிக்’ நோய்கள் என்று கூறுவர்.

இன்றைய சூழ்நிலையில் கவலைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் பெரும்பாலானவர் உட்படுகின்றனர். அதனால் உடல் நோய்களுக்கு அளிக்கப்பெறும் மருந்துகள் போதாமல் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் அடக்கவல்ல மன அமைதி தரும் மருந்துகள் சேர்த்தே தரப்படுகின்றன.

நீங்கள் நீராகாரம், கேழ்வரகு, கஞ்சி போன்ற நல்ல உணவு வகைகளை சாப்பிட்டும் உடல் வலி, உடல் சோர்வு போன்ற உபாதைகளால் அவுதியுறுவதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். பசியும் நன்றாக எடுக்கிறது. அப்படி என்றால் மனதளவில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை உள்ளதா? மன உணர்ச்சிகளை கொந்தளித்துப் பொங்குமளவிற்கு விட்டுவிடாமல் அவ்வப்போது போக்குக்காட்டி வடித்துவிட முயற்சி செய்யலாம்.

தூக்கம் சரியாக இல்லை என்று தோன்றினால் ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய சந்தனாதி தைலம் தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறிக் குளிக்கலாம். உள் மருந்தாக மஹாகல்யாணககிருதம் எனும் நெய் மருந்தை 10மிலி காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். உடல் வலி நீங்க தசமூலம் கஷாயம் காலை, மாலை வெறும் வயிற்றில் 60மிலி மேலுள்ள நெய் மருந்துடன் கலந்து சாப்பிடலாம்.

சோர்வை அளவிடமுடியாது. எக்ஸ்ரே, ரத்தப்பரிசோதனை முதலியவற்றால் இதனைக் கணக்கிட முடியாது. நீங்கள் உடல் சுறுசுறுப்பிற்காக வில்வ இலை, கருந்துளசி இலை, மஞ்சள் பூவுள்ள கரிசலாங்கண்ணி இவற்றில் ஒன்றை அரைத்து விழுதாக்கி 5-10 கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் சாப்பிடவும்.

Posted in Aches, Active, Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Bodyaches, Boredom, Brain, Cures, energy, Exhausted, Exhaustion, fatigue, Fresh, Health, Healthcare, Hunger, Hungry, Medicines, Pain, Positive, Strength, Thinking, Tired, weary | Leave a Comment »