ஒரு படத்துக்கு ரூ. 12 கோடி: அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ஹிருத்திக்ரோஷன்
இந்தி திரையுலகில் பொது வாக ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் ஆகிய 3 கான் நடிகர்களின் ஆதிக்கம் தான் மோலோங்கியிருக்கும். ஆனால் இவர்களுக்கு போட்டி யாக தனி ரூட்டில் வளர்ந்து, இன்று அந்த 3 நடிகர்களின் சம்பளத்தையே தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு தனது புதிய படங்களுக்கு சம்பளம் பெற இருக்கிறார் ஹிருத்திக் ரோஷன்.
ஷாருக்கான், சல்மான், அமீர்கான் ஆகிய 3 பேரும் ஒரு படத்தில் நடிக்க 5லிருந்து 8 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வருகிறார்கள். இவர் களுக்கு இணையாக அமிதாப் பச்சனும் சம்பளம் பெற்று வருகிறார்.
இந்நிலையில் ஹிருத்திக் ரோஷனின் வளர்ச்சியை பார்த்து வியந்த அனில் அம்பாணியின் அட்லாப்ஸ் பட நிறுவனம் அவரை வைத்து 3 புதிய படங்களைத் தயாரிக்க உள்ளது.
ஒரு படத்திற்கு ரூ. 12 கோடி வீதம் இந்த 3 படங்களிலும் நடிக்க 35 கோடி ரூபாய்க்கு ஹிருத்திக் ரோஷனை அந் நிறுவனம் ஒப்பந்தம் செய் துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரு படத்திற்கு ரூ. 12 கோடி வாங்குவதன் மூலம் இந்திப் பட உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற பெயரும் இந்தியாவில் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற பெயரும் ஹிருத்திக்குக்கு கிடைத்துள்ளது.
இந்த ஒப்பந்தம் பற்றி கேள்விப்பட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர்.
இந்த 3 படங்களுக்குமான சம்பள பணத்தை செக் காகவே அட்லாப்ஸ் நிறு வனம் ஹிருத்திக்குக்கு வழங்கப் போவதாகவும், இதன் மூலம் கறுப்புப் பணப் புழக்கம் சினிமா வில் தவிர்க்கப்படுவ தற்கு இது உதாரண ஒப்பந்த மாக அமையும் என்றும் கூறப் படுகிறது.
இந்த ஒப்பந்தம் பற்றிய தக வல்களை அட்லாப்ஸ் நிறு வனத்திடம் கேட்ட போது, “அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை வெளி யாகும் எந்த தகவலும் உத்தேச மானவையே” என்று கூறி னர்.