ஆர்எஸ்எஸ் நடத்தும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை: அர்ஜுன் சிங்
புதுதில்லி, நவ. 1: ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய மனிதஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் கூறினார்.
மாணவர் காங்கிரஸ் (என்எஸ்யூஐ) அமைப்பின் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் திங்கள்கிழமை பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தப் பள்ளிகள் குறித்து மத்திய கல்வி ஆலோசனை வாரிய (சிஏபிஇ) குழு ஓர் அறிக்கை அளித்துள்ளது. அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
பிஞ்சு மனத்தில் மதவெறி நஞ்சு கலக்கும் இந்த கல்வி நிறுவனங்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார் அவர்.