பீகார் மாநிலத்தில் ரயில் மீது மேம்பாலம் இடிந்து வீழ்ந்து பலர் பலி
E – Tamil : ஈ – தமிழ் – பிண அரசியல்
![]() |
![]() |
விபத்து நடைபெற்ற இடம் |
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ரயில் நிலையம் ஒன்றில் வைத்து, ரயிலின் மீது பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் அகப்பட்டுக்கொண்ட பல பயணிகளை மீட்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
140 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் ஒன்று, பஹல்பூர் ரயில்வே நிலையத்தில், ரயில் ஒன்றின் பெட்டியின் மீது விழுந்ததில் அந்தப் பெட்டி முழுமையாக இடிபாடுகளால் மூடப்பட்டதாக இந்தியாவின் கிழக்குப் பிராந்திய ரயில்வேயின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதிகாலை வேளையில் இந்த விபத்து நிகழ்ந்த போது அந்தப் பெட்டியில் நூற்றுக்கும் அதிகமான பயணிகள் இருந்ததாக இந்திய உள்ளூர் ஊடகங்கள் மதிப்பிட்டுள்ளன.
குறைந்தது 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்.