`அவ்வை சண்முகி’க்கு பின்னர் `தசாவதாரம்’ படத்தில் இளம் பெண்ணாக கமல்
வருகிற 2007-ம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் முக்கியமாக 2 படங்களை குறிப்பிடலாம். ஒன்று ரஜினிகாந்த் நடிப்பில் டைரக்டர் ஷங்கர் இயக்கும் `சிவாஜி.’ மற்றொன்று கமல்ஹாசன் நடிப்பில் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் `தசாவதாரம்’.
தசாவதாரம் படத்தில் கமலஹாசன் 10 வேடங் களில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக
- அசின்,
- மல்லிகாஷெராவத்,
- ஜெயப்பிரதா
ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் கமல ஹாசன் நடிக்கும் 10 வேடங்கள் என்ன என்பது தான் தமிழ் ரசிகர்களை இப்படத்தின் உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
கமலஹாசனின் நடிப் பிற்கு தீனி போட்ட மைக்கேல் மதன காமராஜன், அபூர்வசகோதரர்கள், இந்தியன், அவ்வைசண்முகி போன்ற படங்களில் வந்த கேரக்டர்கள் சற்று வித்தியாசப் படுத்தி காட்டப்படுமாப அல்லது உலக சினிமா தரத்திற்கு இப்படத்தை கொண்டு செல்வதற்காக கமலஹாசன் மேலும் ஏதாவது முயற்சி செய்து புதுமை படைத்த கேரக்டர்களை உருவாக்கி உள்ளாராப என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடைகளை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
இப்படத்தில் உதார்மணி என்ற ஒரு கதாபாத்திரத்தில் டூரிஸ்ட் கைடாக நடிக்கிறார். நவீன காலத்திற்கேற்றவாறு மாடர்னாக வரும் டூரிஸ்ட் கைடாக இக்கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கம்ப்ïட்டரில் கதாபாத்திரத்தை வடி வமைத்து அதற்கு கமலஹாசன் உயிர் கொடுத்துள்ளாராம்.
அதே போன்று ஒரு அழகிய இளம்பெண் கதா பாத்திரத்திலும் இப்படத்தில் கமலஹாசன் நடிக்கிறார். அவ்வை சண்முகியில் வயதான மாமியாக வேடமிட்ட கமலஹாசன் இப்படத்தில் இளம்பெண் கேரக்டரில் நடித்து இளம் நெஞ்சங்களை கொள்ளை கொள்ளப் போகிறார் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
இந்த கேரக்டரில் நடிப்பதற்காக மட்டும் கமலஹாசனுக்கு தினமும் 3 மணி நேரம் மேக்கப் செய்ய வேண்டியுள்ளதாம்.
இது தவிர இதுவரை பாத்திராத வகையில் வில்லன் கதாபாத்திரம் உள்பட 10 கேரக்டரில் கமலஹாசன் வரிந்து கட்டும் இப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் மிகவும் பிரமாண்டமாக இயக்குகிறார்.
இப்படத்திற்கு தனது இசை மூலம் இந்தி ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கும் ஹிமேஷ் ரேஷ்மியா இசையமைக்கிறார். இவர் இசையமைப்பதில் மட்டுமல்ல பாடல்கள் பாடுவதிலும் கைதேர்ந்தவர் என்பது இந்தி ரசிகர்களுக்கு தெரியும். என்றாலும் தசாவதாரம் படத்திற்கு பிறகு தமிழ்ரசிகர்களையும் இவ்வாறு இசையால் கட்டிப் போடுவேன் என அடித்துக் கூறுகிறார்.
இப்படத்தை இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார் தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தை பிடித்தவர். பல சதாபாத்திரமுள்ள கதைகளை கமர்சியலாக எடுத்து படத்தை ஹிட் செய்வதில் இவருக்கு நிகர் இவர் எனலாம்.
இப்படத்தில் நடிகை அசினும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது தமிழ் ரசிகர்களுக்கு மேலும் ஆவலை தூண்டுகிறது. இவ்வாறாக பல எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் இத்திரைப்படம் அடுத்த ஆண்டு எப்போது வெளியாகும்ப ரஜினியின் சிவாஜியுடன் போட்டி போடுமாப என்பது தான் விடை தெரியாத கேள்வியாக உள்ளது.