10 ஆண்டுகள் முடிந்த ஆயுள் கைதிகள் விடுதலை: வழக்கறிஞர் சங்கம் நன்றி
சென்னை, செப்.1: 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் கைதிகள் அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
முதல்வரின் இந்த அறிவிப்பு கைதிகள் மறுவாழ்வு பெறுவதற்கும் அவர்கள் குடும்பத்தினர் நன்மை அடையவும் உதவும் என்று சங்கச் செயலாளர் மோகனகிருஷ்ணன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.