Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘High Court’ Category

Two SC judges differ on courts giving directives to Government

Posted by Snapjudge மேல் மே 30, 2007

மார்க்கண்டேய கட்ஜு, மன்னிக்கவும்!

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு ஒன்றில் இரண்டு நீதிபதிகள் இருவேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். இரண்டு நீதிபதிகளுமே அவர்களது அனுபவத்திற்கும், நாணயத்திற்கும், தெளிவான சிந்தனைக்கும் மதிக்கப்படுபவர்கள் என்பதால் அவர்களது தீர்ப்புகளும், கருத்துகளும் ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றன.

விஷயம் வேறொன்றுமில்லை. அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு அந்த மாநிலத்தில் நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைப்பதைப் பற்றி சில வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறது.

  • குறைந்தது ஐந்து நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும்,
  • அந்த நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கான சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும்,
  • இதற்கான மாற்றங்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தமாகக் கொண்டுவர வேண்டும்

என்பதும்தான் உயர் நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு வழங்கியிருந்த வழிகாட்டுதல்கள்.

ஒரு மாநில அரசுக்கும் நிர்வாகத்திற்கும் எப்படி செயல்பட வேண்டும் என்று வழிகாட்டுதல்களை வழங்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்குக் கிடையாது

என்பது உத்தரப் பிரதேச அரசின் வாதம். அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அந்த மாநில அரசு தொடுத்த மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.பி. சின்ஹாவும், மார்க்கண்டேய கட்ஜுவும்.
“”அரசு மற்றும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கு, பொதுமக்களின் அன்றாடப் பிரச்னைக்குத் தீர்வு வழங்குவதற்காக சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் நீதி வழங்கும் அமைப்புகளைப் பாதிக்குமேயானால், உயர் நீதிமன்றங்கள் தலையிட்டு முறையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அமைப்புகள் முறையாகச் செயல்படுகின்றனவா, அரசு நடைமுறைப்படுத்துகிறதா என்று பார்க்க வேண்டிய கடமையை அரசியல் சட்டம் நீதிமன்றங்களுக்கு வழங்கி இருக்கிறது” என்பது எஸ்.பி. சின்ஹாவின் அபிப்பிராயம்.

ஆனால், இந்த வழக்கை விசாரித்த மற்றொரு நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து நேர் எதிராக அமைந்திருக்கிறது. “”சட்டப்பேரவை மற்றும் நிர்வாகத்தின் செயல்பாடுகளில் தலையிடும் எண்ண ஓட்டத்தை நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் நீதித்துறை சுயகட்டுப்பாட்டுடன் செயல்படுவதுதான் முறையானது.

எந்தவொரு சட்டமும் அரசியல் சட்டத்துக்கு முரணானதாக இருக்குமேயானால் அதை நிராகரிக்கும் உரிமை நீதிமன்றத்துக்கு நிச்சயமாக உண்டு. ஆனால், சட்டத்தை மாற்றவோ, சட்டப்பேரவைகளின் சான்றாண்மையை விமர்சிக்கவோ நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை” – இதுதான் மார்க்கண்டேய கட்ஜுவின் வாதம்.

மார்க்கண்டேய கட்ஜு கூறியிருக்கும் அத்தனை கருத்துகளுமே ஏற்புடையவைதான். சட்டப்பேரவையும் அரசியல்வாதிகளும் வருங்காலச் சிந்தனையுடன் செயல்படுவார்களேயானால், ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பவர்களாக இருப்பார்களேயானால், ஓட்டு வங்கி அரசியலை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படாதவர்களாக இருப்பார்களேயானால், மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து நூற்றுக்கு நூறு ஏற்புடையது, சரியானதும்கூட.

ஆனால், மக்களின் வெறுப்புக்கும், அவமரியாதைக்கும், கண்டனத்துக்கும் உரிய அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் ஒருபுறம். அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியில் இருப்பவர்களுக்கும் துதிபாடிப் பதவி உயர்வு பெற்று மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் பற்றிக் கவலையேபடாத அதிகார வர்க்கம் இன்னொரு புறம்.

இந்த நிலையில், நீதிமன்றங்களும் நீதிபதிகளும்தான் அரசியல் சட்டத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அமைந்த இந்தியக் குடியரசையும், சராசரி குடிமகனையும் காப்பாற்ற முடியும் என்கிற நிலைமை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், எஸ்.பி. சின்ஹாவின் கருத்துகள் ஏற்புடையதே தவிர, மார்க்கண்டேய கட்ஜுவினுடையது அல்ல. கட்ஜுவின் வாதம், சராசரி இந்தியக் குடிமகனின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத நிர்வாகியின் வாதமாக இருக்கிறதே தவிர, நியாயத்தை சீர்தூக்கிப் பார்க்கும் நீதிபதியின் தீர்ப்பாக இல்லை.

Posted in activism, administrators, Allahabad, Bench, Center, Centre, Citizen, Consumer, Consumer Court, Consumer Protection Act, Consumer Rights, Court, CPA, Customer, directives, domain, Government, Govt, High Court, Judges, Jury, Justice, Katju, Law, Lawsuit, legislators, Legislature, Markandey Katju, Order, Party, Politics, Protection, provisions, rights, S.B. Sinha, SC, Sinha, State, temptation, UP, Uttar Pradesh, verdict | Leave a Comment »

Justice System in India – Opinion, Analysis, Statistics

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 9, 2007

நீதிமன்றப் புறக்கணிப்புகள் நியாயமானவையா?

கோ. நடராஜன்

அரசியலமைப்புச் சட்டப்படி செயல்படும் மக்களாட்சி, சட்டத்தின் ஆட்சியே. சட்ட முறைமைப்படி வாழும் சமூகத்தில் மக்களுக்குச் சட்டத்தின் மூலம் பலவகையான உரிமைகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

சட்டத்தின் முன் அனைவரும் சமம். மக்களும் நிர்வாகமும் செய்ய வேண்டியவை எவை எவை என்பதை சட்டம் நிர்ணயித்துள்ளது. மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும், குற்றம் செய்வோரைத் தண்டிக்கவும், சட்ட முறைமையின்படி நின்று நீதியை நிலைநிறுத்திடவும் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும்.

ஆனால் நம் நாட்டில் நீதிமன்றங்கள், நீதி வழங்கிடும் பணியில் எவ்வாறு செயல்படுகின்றன? தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி ஆகும். தீர்ப்புகள் தாமதம் ஆவதால் நீதியைத் தேடி வந்தவர்கள், நீதிமன்றங்கள் தங்களை விட்டால் போதும் என்ற நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர்.

நீதி வழங்கும் செயல்பாட்டில், நீதிமன்றங்களின் பணி சிறக்க நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், வழக்காளிகள் – அனைவருமே ஒத்துழைக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் நடைமுறையில் நீதிக்கான முயற்சி, “தவளையும் எலியும்’ ஒரு கயிற்றில் கட்டிக் கொண்டு கிணற்றில் விழுந்து தப்பிக்கும் முயற்சியாகவே தொடர்கிறது. காலப் பயன்பாட்டின் அருமை உணராத, தாமதங்களைப் பற்றி கொஞ்சம்கூட அக்கறை எடுக்காத அமைப்பாக நீதிமன்றங்கள் செயல்படுவது, நிறுவன அமைப்புகளின் செயல்பாட்டு முறைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வியாகும்.

ஆண்டின் 365 நாள்களில் 100 சனி, ஞாயிறுகள் (12 சனிக்கிழமைகள் வேலை நாள்கள்) போக மீதமுள்ள 265 நாள்களில் 20-க்கும் மேற்பட்ட விடுமுறை தினங்கள் போக 245 நாள்களில் கீழமை நீதிமன்றங்களில் 60 முதல் 100 நாள்கள் வரை நீதிமன்றப் புறக்கணிப்புகள் செய்யப்படுகின்றன. காவல்துறையினரோடு ஏற்படும் மோதலே 50 சதவீத நீதிமன்றப் புறக்கணிப்புகளுக்குக் காரணமாகின்றன. காவல்துறைக்கோ, வழக்கறிஞர்களுக்கோ எல்லையற்ற அதிகார வரம்புகள் எதுவும் கிடையாது. காக்கிச்சட்டையும், கறுப்புக் கோட்டும் சட்டத்தை மதித்து நடந்து நீதியைக் காப்பதில் முன்னணியில் செயல்பட வேண்டியவர்கள்.

எந்தவொரு பிரச்சினை என்றாலும், நீதிமன்றங்களின் மூலம் தீர்வுகாண முடியும். நேரடிப் போராட்டங்களே கூடாது என்றாலும் போராட்டங்களின் மூலம் மட்டுமே தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற வழக்கறிஞர்களின் நிலைப்பாடு, நீதிமன்றங்கள் மீதான நம்பகத்தன்மைக்கு எதிரானதாகவே அமையும். நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டங்களின் பின், முடிவாய் என்ன நடந்தது என்பது சிலசமயம் புதிராகவே உள்ளது.

நீதிமன்றப் புறக்கணிப்புகள் நியாயம்தானா? நீதிமன்றப் புறக்கணிப்பில் பாதிக்கப்பட்ட வழக்காளிகளுக்கு நிவாரணம் என்ன? இதுபோன்ற கேள்விகளுக்கு, நியாயமான எந்தப் பதிலும் இல்லை. காவல்துறையினருடன் கருத்து மோதல் ஏற்பட்டால் காவல்துறை வழக்கறிஞர்கள் – உயர்நிலைக் குழுவிற்கு முறையிட்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது நன்மை பயக்கும். கல்வியும், வளமும் இல்லாத மக்கள் நிறைந்த நம் நாட்டில், ஏற்றத்தாழ்வுகள் வெகுவாய் அதிகரிக்கின்ற சமூக அமைப்பில், விரைவான நீதி வழங்கல் முறையின் மூலமே மக்களாட்சியின் மாண்பினையும், மக்களுக்கான நல்வாழ்வையும் உறுதிப்படுத்த முடியும். “”நிலவுகின்ற சமூக அமைப்பிற்கு ஏற்பவே, நீதிமன்றங்களின் செயல்பாடும், நீதி வழங்கும் முறைமையும் அமையும்” என்ற கருத்தை முன்வைத்தார் லெனின்.

நீதிமன்றப் புறக்கணிப்பு என்பது வழக்கறிஞர்கள் தங்கள் பணிகளைச் செய்யாமல் இருப்பதே. பெரும்பாலான நாள்களில் பெரும்பாலான வழக்குகளில் எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி வழக்கறிஞர்கள் “வாய்தா’ வாங்கி இழுத்தடிப்பதும், இரு தரப்பு விவாதங்கள் முடிந்தபின்னும், “”விளக்கம் கேட்டல்” என்ற பெயரில் தீர்ப்பைத் தராமல் நீதிபதிகள் மாதக்கணக்கில் இழுத்தடிப்பதும் வேறு வகையிலான நீதிமன்றப் புறக்கணிப்புகள்.

நீதிமன்றப் புறக்கணிப்புகள் எவ்வகையில் வெளிப்பட்டாலும் அவை நியாயமற்றவை. சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானவை. குற்றவாளிகளுக்கு சாதகமானவை. அடிப்படை அறநெறிகளுக்கும் புறம்பானவை.

நம் நீதிமன்றச் செயல்முறைகளில் பெரும் மாற்றங்கள் வந்தால் தவிர “விரைவான நீதி’ கானல்நீரே. உயர் நீதிமன்றங்களில் “ரிட்’ வழக்குகள் அனுமதிக்கப்பட்ட பின் அவை குறித்த காலத்தில் விசாரிக்கப்படுவதில்லை. இது அரசுத் தரப்புக்கும், எதிர்த்தரப்புக்கும் சாதகமாகும். இந்நிலை மாறிட நிலுவையில் உள்ள வழக்குகள் குறிப்பிட்ட காலக்கெடுவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் உரிமையியல் வழக்குகளில் காலை 10.30 மணி முதல் 12 மணி வரை வழக்குகளை வரிசைப்படி அழைத்து வாய்தா கொடுப்பதில் வீணாகிறது. இதைத் தவிர்க்க நாளொன்றுக்கு சுமார் 50 வழக்குகள் மட்டுமே அழைக்கப்பட வேண்டும்; திருத்தப்பட்ட உரிமையியல் நடைமுறைச் சட்டப்படி கூடுதலான வாய்தாக்களுக்கு கட்டணம் செலுத்த கட்டளையிட வேண்டும்.

நுகர்வோர் குறைதீர் மையம், குடும்பநல நீதிமன்றம், காசோலை செல்லுபடியாகாத வழக்குகள் – இவற்றை ஓர் ஆண்டுக்குள் முடித்தாக வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

“காவல் நிலையத்திற்குள்ளும், நீதிமன்றத்தின் படிக்கட்டிலும் காலடி வைக்காதவரே நல்ல மக்கள்’ என்ற கருத்து நிலை உள்ளது. அவ்வளவு தூரம் இவ்விரு நிறுவனங்களும் மக்களுடன் நட்புணர்வுடனும் இணக்கமாகவும் செயல்படவில்லை என்பதே அதன் உள்நிலை.

பல்வேறு வழக்கறிஞர் அமைப்புகள் விரைவான நீதிக்காக, முழுமையான சமூக நீதிக்காக, கூடுதல் நீதிபதிகள், எல்லா வட்டங்களிலும் நீதிமன்றங்கள், பரவலாக்கப்படும் நீதிமன்ற முறைமை… இவற்றை அடைய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

பூனைக்கு மணி கட்டுவது சுலபம். அதன் “கிண்கிணி’ ஓசையைத் தொடர்ந்து கேட்பதுதான் கடினம்.

(கட்டுரையாளர்: உயர் நீதிமன்றம் மற்றும் மத்திய நிர்வாகத் தீர்ப்பாணையத்தில்
வழக்கறிஞர்).

Posted in Analysis, Assembly, Court, Courts, Democracy, Democratic, Government, Govt, HC, High Court, Judge, Jury, Justice, Law, Legislative, Legislature, Op-Ed, Order, Police, Republic, SC, Supreme Court | 1 Comment »

Margadarsi’s petition – Jaya condemns raids: Apex court admits plea accusing attack on freedom of press

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

மார்கதர்சி நிதி நிறுவன விவகாரம்: ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி, பிப். 24: மார்கதர்சி நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

ஆந்திரத்தில் ஈநாடு பத்திரிகையும், தொலைகாட்சியும் முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனால் அந்த பத்திரிகையை நடத்தி வரும் ராமோஜி ராவ்வுக்கு சொந்தமான மார்கதர்சி நிதி நிறுவனத்தின் அலுவலங்களில் போலீஸôர் சோதனை நடத்தினர்.

இதை எதிர்த்து ராமோஜிராவ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மாநில போலீஸôர் மார்கதர்சி நிறுவனத்தில் சோதனை நடத்தியது குறித்து பதிலளிக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

மார்கதர்சி நிதி நிறுவன விவகாரம் முற்றுகிறது: பத்திரிகைகள் மீது வழக்கு தொடுக்கும் ஆணையை திரும்பப்பெற்றது ஆந்திர அரசு

ஹைதராபாத், பிப். 24: அரசின் மீது குற்றஞ்சாட்டி ஆதாரம் இல்லாமல் வெளியிடப்படும் செய்திகளுக்காக பத்திரிகைகள் மீதும் தொலைக்காட்சிகள் மீதும் அவதூறு வழக்கு தொடுக்க ஆந்திர அரசு பிறப்பித்திருந்த ஆணை திரும்பப் பெறப்பட்டது.

தெலுங்கு தேசம், பாரதீய ஜனதா, தெலங்கானா ராஷ்டிர சமிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சித் தலைவர்களின் பலத்த எதிர்ப்பை அடுத்து ஆந்திர சட்டப் பேரவையில் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி வெள்ளிக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சர்ச்சைக்குரிய அந்த ஆணை இம் மாதம் 20-ம் தேதி மாநிலத்தின் தலைமைச் செயலர் ஜே. ஹரிநாராயணரால் வெளியிடப்பட்டது. பத்திரிகைகள் மீது செய்தி, மக்கள் தொடர்புத் துறை ஆணையர்கள் வழக்கு தொடுப்பதற்கான அதிகாரத்தை அந்த ஆணை வழங்கியிருந்தது. அத்துடன் இத்தகைய வழக்குகளுக்காகவே சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கியிருந்தது.

இந்திரா காந்தி பிரதமராகப் பதவி வகித்தபோது மத்திய அரசால் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட காலத்தில் பத்திரிகைகளின் குரலை ஒடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை இந்த ஆணை நினைவுபடுத்துகிறது என்று எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ராமோஜி ராவ் தலைமையிலான ஈ நாடு பத்திரிகையும் ஈ டி.வி.யும் ஆந்திர அரசுக்கு எதிராக தினமும் ஏதாவது பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அரசின் ஊழல்களையும், குறைகளையும் அம்பலப்படுத்துகின்றன. இது ஆளும்கட்சிக்கு பெருத்த சங்கடத்தை அரசியல்ரீதியாக ஏற்படுத்தி வருகிறது. இந் நிலையில் ராமோஜி ராவுக்குத் சொந்தமான மார்கதர்சி நிதி நிறுவனத்தின் விவகாரங்களை மாநில அரசு கிளற ஆரம்பித்தது. அதன் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதை அடக்குமுறை நடவடிக்கையாகவே எல்லா எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் கருதுகின்றன.

இப்போது இந்த விவகாரம் நாடாளுமன்றம் வரை சென்றிருக்கிறது. நிலைமை மோசமாகிவருவதால், சர்ச்சைக்குரிய ஆணையைத் திரும்பப் பெற ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. அதை முதல்வரே பேரவையில் அறிவித்தார். ஆனால் அதற்கு முன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் எந்த நடவடிக்கையையும் நடத்தவிடாமல் ரகளை செய்தனர். அரசை குறைகூறினர். இந்த விவகாரத்துக்கு தார்மிகப் பொறுப்பேற்று முதல்வர் ராஜசேகர ரெட்டி பதவி விலக வேண்டும் என்று கோரினர்.

கேள்வி நேரம் நடைபெறவில்லை, அடுத்த நிகழ்ச்சிகளையும் திட்டமிட்டபடி எடுத்துக் கொள்ள முடியவில்லை. இந் நிலையில் முதல்வர் ராஜசேகர ரெட்டியே எழுந்து சர்ச்சைக்குரிய ஆணை, தனக்குத் தெரியாமலேயே வெளியிடப்பட்டது என்றும் அது குறித்து விசாரணை நடத்துவதாகவும் பத்திரிகைகளை தங்களுடைய அரசு மதிப்பதாகவும் விளக்கம் அளித்தார்.

அதை எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏற்கவில்லை. இந்த விவகாரம் குறித்து முதல்வர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகே இந்த அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டதை அவர்கள் சுட்டிக்காட்டினர். அப்படியே முதல்வர் கூறுவது உண்மை என்று வைத்துக்கொண்டாலும், தனக்கே தெரியாமல் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டதற்காக, தார்மிக அடிப்படையில் அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Posted in abuse, ADMK, AIADMK, Andhra Pradesh, Andhra Pradesh Protection of Depositors of Financial Es, Andra Pradesh, AP, APPDFE, Charminar Bank, Chitfunds, Chits, Congress, Congress(I), Corruption, deposit, depositors, Eenaadu, Eenadu, Enaadu, Enadu, Finance, Freedom, Government, High Court, Jaya, kickbacks, Krushi Bank, Law, Margadarasi, Margadarsi, Margadarsi Financiers, Order, Petition, Petitions, Politics, Power, Press, Prudential Bank, Ramoji Rao, RBI, Reserve Bank of India, SC, Supreme Court, Tamil Nadu, Telugu, TN, Ushodaya, Ushodaya Enterprises Limited, Y.S. Rajasekhar Reddy, YSR | Leave a Comment »

Refrain TN govt from Free Color TV scheme: PIL

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

இலவச கலர் டி.வி. திட்டத்துக்கு அவசர கால நிதியைப் பயன்படுத்த தடை கோரும் மனு: விசாரணை ஒத்திவைப்பு

மதுரை, பிப். 14: இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டத்துக்கு அவசர கால நிதியை பயன்படுத்தத் தடை கோரி தாக்கலான மற்றொரு மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

திருச்சியைச் சேர்ந்த சமூக சேவகர் ம.சரவணன் தாக்கல் செய்த மனு விவரம்:

திமுக ஆட்சிக்கு வந்ததும் இலவசமாக கலர் டி.வி. வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தனர். வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் 53 லட்சம் பேருக்கு கலர் டி.வி. வழங்க ரூ.1060 கோடி செலவாகும் என முதல்வர் அறிவித்தார்.

கலர் டி.வி. வழங்கும் திட்டத்தால் ஒரு குடும்பத்தினரே பயன் அடைவர். இதில் பொதுநலம் ஏதும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவரும் குற்றம்சாட்டினார். மக்களின் பணத்தை அரசு வீணாக்கும் திட்டத்தில் செலவிடுவதை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை.

இதுபோன்ற இலவசத் திட்டத்தை அறிவிப்பதில் உயர் நீதிமன்றம் தலையிட்டு அரசுக்குத் தகுந்த ஆலோசனை கூறலாம். இத்திட்டம் அறிவிக்கப்பட்டபோதே தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி இந்த அறிவிப்பு வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு ஒப்பாகும்.

இலவச டி.வி. திட்டத்தைச் செயல்படுத்தும் குழுவுக்கு சட்டப்பேரவைத் தலைவர் அனுமதி அளிக்கவில்லை. சட்டப்பேரவை அலுவல் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படவில்லை. மேலும் இக் குழுவில் கூட்டணிக் கட்சியினரே இடம் பெற்றுள்ளனர்.

மத்திய திட்டப் பணிகளுக்கே போதிய நிதி ஆதாரம் இல்லை. எனவே, இதுபோன்ற திட்டங்கள் குறித்து இந்திய கணக்குத் தணிக்கைக் குழு மூலம் உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்க வேண்டும்.

இதற்கான நிதியை அவசர கால நிதிக் கணக்கிலிருந்து எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகள் எலிப் தர்மாராவ், பி.பி.எஸ்.ஜனார்த்தனராஜா ஆகியோர் முன் இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Posted in Budget, cable, Campaign, Colour TV, Courts, Dharmarao Elipe, Economy, Finance, Free TV, High Court, Janarthana Raja, Justice, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Law, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, M Saravanan, Madurai Bench, Manifesto, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Order, PIL, Promise, public interest litigation, Tamil Nadu, TN | Leave a Comment »

Irrespective of decree, govt can acquire private land: SC

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

உரிமையாளருக்கு சாதகமாக ஆணை இருந்தாலும் பரவாயில்லை நிலத்தை அரசு கையகப்படுத்தலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுதில்லி, பிப். 12: நிலத்தின் உரிமையாளருக்கு சாதகமாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தாலும் அந்த நிலத்தை கையகப்படுத்தும் உரிமை அரசுக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

நிலத்தின் உரிமையாளருக்கு சாதகமாக நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்த நிலையில் அந்த நிலத்தை கையகப்படுத்தும் நோக்கில் அரசு அறிவிக்கை வெளியிட்டால் அதை தவறான நோக்கத்தில் வெளியிட்டதாக கருத முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.கே.தாக்கர், லோகேஷ்வர் சிங் பென்டா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்ற தனி நீதிபதி மற்றும் டிவிஷன் பெஞ்ச் ஆகியவை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்ற பெஞ்ச் மேற்சொன்ன தீர்ப்பை பிறப்பித்தது.

உரிமையாளருக்கு ஆதரவாக சிவில் கோர்ட் ஒன்று தீர்ப்பு பிறப்பித்த பிறகு அந்த நிலத்தை கையகம் செய்யலாம் என்று அறிவிக்கை பிறப்பிப்பது சட்ட விரோதமானது என்று தனி நீதிபதியும் உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச்சும் தீர்ப்பு பிறப்பித்திருந்தன.

கர்நாடக மாநிலம் தொடர்பானது இந்த வழக்கு. அரசு நிறுவனமான எச்எம்டி, கடிகார தொழிற்சாலை அமைப்பதற்காக தேவராயபட்டினத்தில் பல்வேறு சர்வே எண்கள் கொண்ட 120 ஏக்கர் நிலத்தை கர்நாடக தொழில் பகுதி மேம்பாட்டு வாரியம் கையகப்படுத்தியது.

இந்த 120 ஏக்கரில் சுமார் ஒரு ஏக்கர் நிலம் முத்தப்பா குடும்பத்துக்குச் சொந்தமானதாகும். இது தொடர்பாக முத்தப்பா என்பவர் பிரச்சினை எழுப்பியிருந்தார்.

எமது குடும்பத்தைச் சேர்ந்த நிலம் கையகப்படுத்தப்பட்ட படி விட்டுக் கொடுத்தோம். ஆனால் அதற்கு மேலாக சிறிது நிலத்தை எச்.எம்.டி ஆக்கிரமித்துள்ளது. இதிலிருந்து காலி செய்ய மாட்டோம் என்று முறையிட்டார் முத்தப்பா.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சிவில் கோர்ட், எச்எம்டி ஆக்கிரமித்த நிலத்தை உரிமையாளரிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து எச்எம்டி அப்பீல் செய்தபோதும் அது டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

எனினும் சிவில் கோர்ட் உத்தரவை எச்எம்டி ஏற்கவில்லை. அதற்கு பதிலாக மாநில அரசை அணுகி அந்த நிலம் தொடர்பாக புதிய அறிவிக்கையை பிறப்பிக்கும்படி கோரியது. இதனால் உயர்நீதிமன்றத்தை நில உரிமையாளர் அணுகினார். இதையடுத்து தனி நீதிபதியும், டிவிஷன் பெஞ்சும் நிலத்தை கையகப்படுத்தி அரசு வெளியிட்ட அறிவிக்கை செல்லாது என்று தீர்ப்பு வெளியிட்டனர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது எச்எம்டி.

Posted in appellate authorities, authorities, CK Thakkar, CK Thakker, Courts, decree, encroachment, Government, High Court, HMT, Industrial Area Development Board, Judgement, Jury, Justice, Karnataka, Land Acquisition, Land Acquisition Act, Law, Logeshwar singh Benda, Lokeshwar Singh Penta, Muthappa, Order, private land, Property Ownership, Public Property, Supreme Court | Leave a Comment »

Zee gets notice for arrest warrants against President

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

“ஜீ நியூஸ்’ தொலைக்காட்சி, நிருபருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி, பிப். 8: கீழ்நீதிமன்றத்தில் லஞ்சம் கொடுத்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மற்றும் நீதிபதிகள் ஆகியோருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்தது தொடர்பான வழக்கில் ஜீ நியூஸ் மற்றும் அதன் நிருபர் விஜய் சேகர் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குஜராத்தில் கீழ்நீதிமன்றங்களில் நடைபெறுவதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து வெளிப்படுத்த, ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்கில், ஆமதாபாத் கீழ்நீதிமன்றத்தில் லஞ்சம் கொடுத்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வி.என்.கரே, நீதிபதி பி.பி.சிங் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கே.ஜெயின் ஆகியோருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்தியை ஜீ நியூஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

மேலும் லஞ்சம் கொடுத்து யார் மீது வேண்டுமானால் ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பிக்க முடியும் என்பது தொடர்பான ஒரு ஜோடிக்கப்பட்ட செய்தியை கடந்த 2004-ல் இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான மூன்று பேரடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடத்தியது. “உங்கள் மீது ஏன் விசாரணை நடத்தக்கூடாது. இதுதொடர்பாக அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸýக்கு நீங்கள் விளக்கம் தரவேண்டும்’ என்று ஜீ நியூஸ் மற்றும் அதன் நிருபருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Posted in APJ Abdul Kalam, Bribery, Bribes, Corruption, Counsel, Courts, Government, Gujarat, High Court, journalism, journalist, Judge, Judiciary, Jury, Justice, kickbacks, Law, Magistrates, Media, Order, Power, President, Publicity, sting operation, Stunt, Summons, TV, Vijay Shekar, Warrant, Zee, Zee News | Leave a Comment »

Arcot Veerasamy criticises Madras HC judges – ‘Judges want to rule Tamil Nadu’

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 5, 2007

முதல்வரை விமர்சிக்க நீதிபதிகளுக்கு அதிகாரம் இல்லை: ஆர்க்காடு வீராசாமி கடும் தாக்கு

சென்னை, பிப். 5: தமிழ்நாட்டையே ஆள வேண்டும் என்று நீதிபதிகள் நினைப்பது சரியல்ல. முதல்வரை விமர்சிக்க நீதிபதிகளுக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை என்று மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி கடுமையாக விமர்சித்தார்.

முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் தபேதார் ஏழுமலை இல்ல திருமண விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது:

நீதிபதிகள் எல்லாம் ஏதோ ஆகாயத்திலிருந்து குதித்தவர்களைப் போல் சில பேர் நடந்து கொள்கிறார்கள். நான் எந்த நீதிபதியையும் பற்றி குறிப்பிட்டு குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை இருக்கின்றது. அந்த எல்லையோடு அவர்கள் நிற்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை விமர்சிப்பதற்கு, அரசாங்கத்தைப் பற்றி தேவையில்லாமல் விமர்சித்து யோசனை கேட்பதற்கு சட்டப்படி அதிகாரம் கிடையாது.

ஜனநாயகத்தில் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை விட உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிக அதிகாரம் பெற்றவர்கள் என்று நான் எண்ணவில்லை.

ஓமலூர் பள்ளி விவகாரம் தொடர்பாக மக்கள் முறையிட்டதன் காரணமாக ஒரு விசாரணை கமிஷன் அமைக்க முதல்வர் உத்தரவிடுகிறார். அதற்கு அந்த நீதிபதி என்ன சொல்கிறார், எப்படி நீதிபதிகளைக் கேட்காமல் ஒரு கமிஷனை அமைக்கலாம் என்று கேட்கிறார். முதலமைச்சரின் அதிகாரத்தை எல்லாம் நீதிபதிகள் எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றத்துக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? முதலமைச்சருக்கு இல்லாத பொறுப்பு உயர் நீதிமன்றத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளதா? முதல்வர் அவருடைய அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். உயர் நீதிமன்றமோ சட்டப்படி உள்ள விதிமுறைகளின்படி தீர்ப்புகள் வழங்க வேண்டும். அதைவிடுத்து தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று நினைப்பார்களேயானால் அது சரியல்ல என்றார் ஆர்க்காடு வீராசாமி.
நீதிமன்றம் கட்டைபஞ்சாயத்தாக ஆகிவிடக் கூடாது: அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி

சென்னை, பிப். 5: நீதிமன்றங்கள் கட்டைப் பஞ்சாயத்துக்களாக ஆகிவிடக் கூடாது என்று மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி கடுமையாக விமர்சித்தார்.

முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் தபேதார் ஏழுமலையின் இல்ல திருமண விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது:

நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சிக்கக் கூடிய உரிமை நமக்கு இருக்கிறது. அவர்களைத் தனிப்பட்ட முறையில் குறை கூறக் கூடாதே தவிர, தீர்ப்புகளைப் பற்றி விமர்சிக்கலாம்.

சென்னை மாநகராட்சித் தேர்தலை எதிர்த்து அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வழக்கு தொடுத்தார்கள். அந்தத் தீர்ப்பில் ஒரு நீதிபதி, இந்த வழக்கை நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது. தேர்தல் நடந்து முடிந்துவிட்ட காரணத்தால் மொத்தத்தில் தேர்தலை விசாரிப்பது என்பது தவறு என்று சொன்னார். மற்றொரு நீதிபதியான இப்ராஹிம் கலிபுல்லா, 99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று சொன்னார். 99 வார்டுகளில் என்னென்ன தவறுகள் நடைபெற்றன என்று ஒவ்வொரு வார்டுக்கும் அவர் காரணம் எழுத வேண்டும். ஆனால் அவர் அப்படி காரணங்களை எழுதினாரா என்றால் இல்லை. அவர் மொத்தத்தில் என்ன சொல்கிறார் என்றால் பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் பார்த்து இந்த 99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிடுவதாகக் கூறினார்.

பத்திரிகைளில் வருகின்ற செய்திகளின் அடிப்படையில் நீதிபதிகள் தீர்ப்பு கொடுக்கக் கூடாது என்று 21 தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் அளித்திருக்கிறது. ஆனால் பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் 99 வார்டுகளில் மறு தேர்தல் என்று சொல்லியிருக்கிறார். அது முடிவான தீர்ப்பா என்றால்- இல்லை. இரண்டு நீதிபதிகள் இரண்டு விதமான தீர்ப்பு அளித்தனர். இருப்பினும் முதல்வர் கருணாநிதி ஜனநாயகத்தைப் பெரிதும் மதித்து, 99 கவுன்சிலர்களையும் ராஜிநாமா செய்ய சொல்லிவிட்டு நாங்கள் தேர்தலைச் சந்திக்கிறோம் என்று சொன்னார்.

இந்த நிலையில், இந்த தேர்தல் ஆணையர் தேர்தலை நடத்தக் கூடாது. அவரை மாற்ற வேண்டும் என்று அதிமுக வழக்கு போட்டது. அதை விசாரித்த தலைமை நீதிபதி, இந்தத் தேர்தலை நடத்தக் கூடாது என்று தடை விதிக்க எனக்கு அதிகாரம் இல்லை. தேர்தல் ஆணையரை மாற்றுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை என்றெல்லாம் சொல்லிவிட்டு, அரசாங்க வழக்கறிஞர் கலிபுல்லாவை பார்த்து, தேர்தல் பார்வையாளர்களை நியமிப்பதற்கு அரசு ஒத்துக்கொள்கிறதா என்று கேட்டுச் சொல்லுங்கள் என்று கூறுகிறார்.

சட்டம் என்ன சொல்கிறதோ, அந்த சட்டத்தின்படி நீதிபதி நடக்க வேண்டுமே தவிர நீதிபதியே, இந்தத் தேர்தலுக்கு தடை விதிக்க எனக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லிவிட்ட பிறகு, தமிழக அரசிடம் என்ன யோசனை கேட்பது? சமரச உடன்பாடு என்ன காண்பது எனக்குள்ள கவலையெல்லாம் நீதிமன்றங்கள் கட்டைப் பஞ்சாயத்துக்களாக ஆகிவிடக் கூடாது என்பதுதான்.

இப்படி நீதி மன்றங்கள் தமிழகத்திலே தொடர்ந்து செயல்படுமேயானால் மக்களுக்கு நீதிமன்றங்களின் மீதுள்ள நம்பிக்கை போய்விடும் என்ற நிலை தான் ஏற்படும். அந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்றார் ஆர்க்காடு வீராசாமி.


ீதித்துறையை ‘அவமதிக்கும்’ வகையிலான அமைச்சரின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை உயர்நீதிமன்ற வளாகம்
நீதித்துறை அவமதிப்பு?

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சமீபத்தில் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய விமர்சன கருத்துக்கள், நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாட்டில் அரசியல்வாதிகள் தலையிடுவதை காட்டுவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று புதன்கிழமை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஒரு பிரிவினர் நீதிமன்றத்தைப் புறக்கணித்தனர்.

பெரும்பாலான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்தனர். அதேசமயம் அரசு வழக்கறிஞர்கள் வழக்கம்போல் நீதிமன்றத்தில் வாதாட வந்தனர். ஆனால், வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் ஊர்வலமும் கண்டன கோஷங்களும் நீதிமன்றங் களின் செயல்படுகளை பெருமளவு ஸ்தம்பிக்கச்செய்தது. இதையும் மீறி சில நீதிமன்றங்களில் இன்று காலை வழக்கு விசாரணைகள் நடைபெற்றன. ஆனால் அங்கும் கூட மதியத்திற்குள் வழக்கறிஞர்களின் புறக்கணிப்பு காரணமாக விசாரணைகள் நடக்கவில்லை.

அதிமுக வழக்கறிஞர் அணியைச்சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றபோது அவர்களுக்கும் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும் இடையில் மோதல்
சூழல் ஏற்பட்டு பின்னர் நிலைமை தணிந்ததாக
காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயர்நீதிமன்றத்தை போலவே, சென்னையின் சைதாப்பேட்டை,
எழும்பூர்,ஜார்ஜ்டவுன் நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள்
நீதிமன்றங்களை புறக்கணித்தனர். தமிழகத்தின் மாவட்ட அளவிலான நீதிமன்றங்களிள் நீதிமன்ற புறக்கணிப்பு விடயத்தில் தி.மு.க. அ.தி.மு.க. வழக்கறிஞர்களுக்கிடையே வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை மாநராட்சிக்கான உள்ளாட்சித்தேர்தலில் நடந்ததாகக்
கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான இருவேறு வழக்குகளில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசு குறித்து தெரிவித்திருந்த கருத்துக்களை எதிர்த்தும், கடுமையாக விமர்சித்தும் ஆற்காடு வீராசாமி சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதே மேடையில் பேசிய முதல்வர் மு கருணாநிதியும் இதை மறைமுகமாக ஆமோதிக்கும் விதத்தில் பேசியிருந்தார்.
இது நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் அவமதிப்பதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.


Posted in Arcot Veerasamy, Chennai, Courts, Crow, electricity minister, Government, HC, High Court, Judge, Judges, Judiciary, Jury, Justice, Law, legal, M Karunanidhi, Madras, Manipulation, Minister, N Veerasamy, Omalur, Order, outburst, Power, Quote, Tamil Nadu, TN, treasurer, Veerachami, Veerasami, Veerasamy | 1 Comment »

10 Cabinet Ministers & 93 MPs have Criminal Cases in various Courts

Posted by Snapjudge மேல் திசெம்பர் 8, 2006

பல்வேறு குற்ற வழக்கில் 10 மத்திய அமைச்சர்கள், 93 எம்.பி.க்கள்

புதிதில்லி, டிச. 8: பல்வேறு குற்ற வழக்குகளில் 10 மத்திய அமைச்சர்களும், 93 எம்.பி.க்களுக்கும் விசாரணையை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய அமைச்சராக இருந்த சிபு சோரன் மற்றும் சித்து எம்.பி. ஆகியோருக்கு கொலை வழக்கில் அண்மையில் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மன்மோகன் சிங் அமைச்சரவையில் உள்ள மத்திய அமைச்சர்களான

  • முகம்மது அலி அஷரப் (கடத்தல்-பணம் பறிப்பு),
  • சங்கர் சிங் வகேலா (லஞ்ச வழக்கு),
  • லாலு பிரசாத் (ஊழல் வழக்கு),
  • ரேணுகா செüத்ரி (அரசு ஊழியரை மீது தாக்குதல்),
  • சரத் பவார் (மத ரீதியான வழக்கு) உள்ளிட்ட 10 அமைச்சர்கள் குற்ற வழக்கில் சிக்கி உள்ளனர்.

அதேபோல எம்.பி.க்களில் சாது யாதவ், பப்பு யாதவ் உள்ளிட்ட 93 பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

Posted in abuse, Cabinet, Congress (I), Corruption, Court, High Court, India, Justice, Lalu prasad Yadav, Law, Manmohan Singh, Ministry, Navjot Singh Siddhu, NCP, Order, Politics, Power, Renuka Chowdhry, Sharad Pawar, Shibu Soren, Supreme Court, UPA, Waghela | Leave a Comment »

Jayalalitha assassination scene in ‘Kutra Pathirikai’ – Does it support banned Terrorist Organization?

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006

தணிக்கைச் சான்றிதழ் பிரச்சினை: “குற்றப்பத்திரிகை’ திரைப்படத்தை தலைமை நீதிபதி நாளை பார்க்கிறார்

சென்னை, நவ.21: தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாதது பற்றிய வழக்கு தொடர்பாக, “குற்றப்பத்திரிகை’ திரைப்படத்தை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி கே. சந்துரு ஆகியோர் புதன்கிழமை பார்க்கின்றனர்.

பல ஆண்டுகளாக இத்திரைப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை. இப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் தர மறுத்து தில்லியில் உள்ள தணிக்கைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கடந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் தயாரிப்பாளர் ரவி யாதவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் கொல்ல இலங்கை தீவிரவாதிகள் முயற்சிப்பது போலவும் அத்திட்டத்தைத் தடுத்து, ராமகிருஷ்ணன் என்பவர் ஜெயலலிதாவை காப்பது போலவும் அப்படத்தில் காட்சி வருகிறது. அந்த காட்சிகளை நீக்குமாறு கடந்த மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அக்காட்சிகளை நீக்கிவிட்டால் “குற்றப்பத்திரிகை‘ திரைப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கலாம் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

இத்தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியத்தின் சென்னை மண்டல அதிகாரி பாபு ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இத்திரைப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் தருமாறு தனி நீதிபதி அளித்த தீர்ப்பில் தவறு உள்ளது. படத்தின் மூலக்கதையே, தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தை ஆதரிப்பதாக உள்ளது. இந்நிலையில் சில காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டால், பொதுமக்களுக்காகக் திரையிட தணிக்கைச் சான்றிதழ் தரலாம் என்று நீதிபதி கூறியிருப்பது சரியல்ல.

இலங்கையில் தற்போது பதற்றமான சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் தீவிரவாதிகளை ஆதரிக்கும் இப்படத்துக்கு அனுமதி அளித்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவு பாதிக்கும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவைத் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி கே. சந்துரு ஆகியோர் திங்கள்கிழமை விசாரித்தனர். இத்திரைப்படத்தை பார்த்துவிட்டு அதன்பிறகு முடிவு செய்வதாக நீதிபதிகள் கூறினர். அதன்படி சென்னையில் உள்ள குட்லக் பிரிவியூ தியேட்டரில் இத்திரைப்படத்தை நீதிபதிகள் புதன்கிழமை மாலை பார்க்கின்றனர். அதன்பிறகு வியாழக்கிழமை இவ்வழக்கை மீண்டும் விசாரிப்பர்.

Posted in ADMK, AIADMK, Eezham, High Court, Jayalalitha, JJ, Kutr Pathirikai, Kutra Pathirigai, Kutrapathirikai, LTTE, Ravi Yadav, Tamil Cinema, Tamil Movie, Terrorists | 1 Comment »

Tamil nadu Government moves in a Clandestine manner against High Court Orders

Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2006

சென்னை விமான நிலைய விரிவாக்கப் பிரச்சினை: பொழிச்சலூரில் குடியிருப்புப் பகுதிகளை கையகப்படுத்தும் திட்டம் தயார்?

சென்னை, நவ. 7: சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்காக பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை கையகப்படுத்துவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக விரிவாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இதற்கான திட்டத்தை உருவாக்கியுள்ளது.

மத்திய அமைச்சரவையும் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டது.

இத்திட்டத்துக்கு தேவையான 1,457 ஏக்கர் நிலத்தை இலவசமாக அளிக்க தமிழக அரசு முன்வந்தது.

இதற்கான நிலத்தை கையகப்படுத்த முதலில் உருவாக்கிய திட்டத்தை இந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு மாற்றியது.

இதன்படி பொழிச்சலூர், கவுல்பஜார், அனகாபுத்தூர் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் கடந்த 8 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இப்பிரச்சினையில் குடியிருப்புப் பகுதிகளை கையகப்படுத்தும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நிலங்களை கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

இந்நிலையில் தேவையான நிலத்தை தமிழக அரசு அளித்தால் தான் விமான நிலைய விரிவாக்கத்திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் அண்மையில் சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விமான நிலைய விரிவாக்கத்திட்டம் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த பிரதமர் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்காண பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து, நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவை மீறி, இத்திட்டத்துக்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடியிருப்புப் பகுதிகளை விரைந்து கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மக்களின் எதிர்ப்பு காரணமாக இது தொடர்பான விவரங்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

விமான நிலைய விரிவாக்கப்பணிகளை வரும் ஜனவரி மாதம் தொடங்கும் வகையில் செயல்படுவதாக தமிழக அரசு மத்திய அரசிடம் உறுதி அளித்துள்ளதாக விமான நிலையங்கள் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசின் இத்தகைய செயலால் பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது வீடுகளை இழக்கும் நிலை ஏற்படும் என இப்பகுதி குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் செல்வராஜன் தெரிவித்தார். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தமிழக அரசின் இத்தகைய செயல்பாடு இப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றார் அவர்.

==========================================================================
பொழிச்சலூர் தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

சென்னை, மார்ச் 19: சென்னை பொழிச்சலூரில் தாங்கல் ஏரியில் 23 ஏக்கர் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அண்மையில் அகற்றப்பட்டன.

இது தொடர்பாக இப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கங்கள் புகார் அளித்த 3-வது நாளிலேயே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் உள்ளது தாங்கல் ஏரி. சுமார் 40 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவுள்ள இந்த ஏரியில் கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அதிகரிக்க தொடங்கின.

அனகாபுத்தூர் வழியாக 200 அடி சாலை அமைக்கும் பணிகளுக்காக நிலம் அளித்தவர்களை இந்த தாங்கல் ஏரியின் ஒரு பகுதியில் மாவட்ட நிர்வாகம் குடியமர்த்தியது.

இந்நிலையில், இந்த புதிய குடியேற்றத்துக்கு அருகில் உள்ள 23 ஏக்கர் நிலத்தை இப்பகுதியை சேர்ந்த சிலர் குடிசை போட்டு ஆக்கிரமித்தனர்.

பொழிச்சலூர் ஊராட்சி தலைவராக இருந்த அரசியல் பிரமுகர் தலைமையில் இந்த ஆக்கிரமிப்புகள் நடைபெற்றதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

ஊராட்சி நிர்வாகத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி தாங்கல் ஏரியில் உள்ள நிலத்தை ஒரு சென்ட் ரூ.50 ஆயிரம் வீதம் விற்பனை செய்யப்பட்டது என்றும், இவ்வாறு விற்பனை செய்த நிலங்களுக்கு விதிகளுக்கு புறம்பாக வீட்டுவரி ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டன என பொழிச்சலூர் பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு இப்பகுதி குடியிருப்போர் சங்கங்களின் நிர்வாகிகள் அண்மையில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை விசாரித்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் யாதவ் தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

இதன்படி இங்கு நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுமார் 50-க்கும் அதிகமான குடிசைகள், கட்டடங்கள் போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை இடிக்கப்பட்டன.

இருப்பினும், இந்த ஆக்கிரமிப்புகளுக்கு காரணமான ஆளும் கட்சி பிரமுகர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

——————————————————————————-

அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு: சென்னை விமான நிலையம் விரிவாக்கம் – ஸ்ரீபெரும்புதூரில் புதிய விமான நிலையம்

சென்னை விமான நிலைய விரிவாக்கம் பற்றி சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உடன் தலைமைச் செயலர் எல்.கே.திரிபாதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார், பாமக தலைவர் ஜி.கே.மணி.

சென்னை, மே 23: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் 1,069 ஏக்கரில் விரிவு படுத்தப்படுகிறது. இதற்கான பணிகள் செவ்வாய்க்கிழமையே தொடங்கிவிட்டதாக முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை 1,069 ஏக்கரில் விரிவுபடுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

விரிவாக்கம் செய்யும் பணிகளால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள் என்று கூறி அதற்கு அதிமுக-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிமுக தவிர, மற்ற கட்சியினர் விரிவாக்கப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர் என்று கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

சென்னை மீனம்பாக்கத்தை விரிவுபடுத்துவதற்காக மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய கிராமங்களில் 1,069.99 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அங்கு பாதிப்புக்குள்ளாகும் குடிசைகள், மாடி வீடுகள், ஓட்டு வீடுகள் மொத்தம் 947. இவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொடுத்து மறுவாழ்வுக்கான முயற்சிகள் அனைத்தும் நிறைவு செய்யப்படும். விரிவாக்கப் பணியின் முதல் கட்டமாக இத்தகைய மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

அதேசமயம் விரிவாக்கப் பணிகளை இந்திய வானூர்திக் குழுமம் (ஏஏஐ) ஏற்று நடத்திட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெறும்போது புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்தப் புதிய விமான நிலையம் ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்படும். இதற்கென 4,820.66 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்படும். புதிய விமான நிலையம் அமைக்கும் பணியையும் இந்திய வானூர்திக் குழுமமே ஏற்று நடத்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டது.

இந்த பணிகள் முதல் கட்டமாக ரூ. 1,000 கோடியிலும் அடுத்தகட்டமாக ரூ. 1,000 கோடியிலும் மொத்தம் ரூ. 2,000 கோடியில் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் கருணாநிதி.

விரிவாக்கப் பணி மற்றும் புதிய விமானம் அமைக்கும் பணியை இந்திய வானூர்திக் குழுமமே ஏற்று நடத்த வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. தமிழக அரசு இதுவரை, தனியார் மூலம் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையிலிருந்து மாறி, தற்போது ஏஏஐ மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்

  • நிதியமைச்சர் அன்பழகன் (திமுக),
  • டி.சுதர்சனம்,
  • டி. யசோதா (காங்.),
  • டி. ஜெயக்குமார் (அதிமுக),
  • ஜி.கே. மணி,
  • இரா. மலையப்பசாமி (பாமக),
  • சி. கோவிந்தசாமி,
  • டி. நந்தகோபால் (மார்க்சிஸ்ட் கம்யூ.),
  • வை. சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்),
  • வீர. இளவரசன் (மதிமுக),
  • பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன்,
  • வி. பார்த்தசாரதி (தேமுதிக),
  • கலிலூர் ரஹ்மான் (டிஎன்ஐயுஎல்),
  • செல்வம்,
  • கே. பாலகிருஷ்ணன் (டிபிஐ),
  • பூவை ஜெகன்மூர்த்தி,
  • சிவஞானம் (புரட்சி பாரதம்) ஆகியோர் பங்கேற்றனர்.

———————————————————————————————————————————

பொழிச்சலூர் தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றம் எப்போது?

சென்னை பொழிச்சலூர் தாங்கல் ஏரியை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டுள்ள ஞானமணி நகர்.

சென்னை, ஜூலை 2: சென்னை பொழிச்சலூரில் தாங்கல் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன.

சென்னை விமான நிலையத்தை ஒட்டியுள்ள தாங்கல் பகுதியில் புறம்போக்கு நிலத்தை இப் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஞானமணி உள்ளிட்ட சிலர் ஆக்கிரமிப்பு செய்து சுமார் 200-க்கும் அதிகமானோருக்கு விற்பனை செய்துள்ளனர்.

இதன் மூலம் இங்கு ரூ. 1 கோடிக்கும் அதிகமாக நில மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான புகார்களை ஆய்வு செய்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுக்க தாம்பரம் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து தாம்பரம் வட்டாட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் தாங்கல் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகளை தாக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அடிப்படையில் திமுக பிரமுகரும் பொழிச்சலூர் ஊராட்சி துணைத் தலைவருமான ஞானமணி அண்மையில் கைது செய்யப்பட்டார். பின்னர் தனது சொந்த ஜாமீனில் ஞானமணி விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும், பொழிச்சலூரில் தாங்கல் பகுதியில் ஞானமணி நகர், விநாயகா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் துணையுடன் அவற்றுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்ததாக ஞானமணி மீது இப் பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து புகார்கள் தொடர்பான அவணங்களை ஊராட்சி அலுவலகத்தில் இருந்து வருவாய்த்துறையினர் எடுத்து சென்று தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

நீதிமன்றத்தில் வழக்கு: இந் நிலையில் வருவாய்த் துறை நடவடிக்கையை எதிர்த்து ஞானமணி தரப்பில் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்கு வருவாய்த் துறை சார்பில் பதில் மனு விரைவில் தாக்கல் செய்யப்படும் என தாம்பரம் வட்டாட்சியர் சுப்பையா தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளுக்கு பின்னரே தாங்கல் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

————————————————————————————-
விமான நிலைய விரிவாக்கம்: நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து மணப்பாக்கம் கிராமத்தினர் போர்க்கொடி – எம்.எல்.ஏ. முன்னிலையில் ஆட்சியரிடம் மனு

சென்னை, ஜூலை 12: சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து, எம்.எல்.ஏ. யசோதா துணையுடன், மணப்பாக்கம் பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மொத்தம் 1070 ஏக்கர் நிலப்பகுதியை கையகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இதற்காக மணப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் பகுதிகளில் அதிகாரிகள் நிலம் கையகப்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு உரிய இழப்பீடும், மாற்று இடமும் தரப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்த போதிலும், மணப்பாக்கம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மணப்பாக்கம் மார்பிள் ரிவர்வியு விரிவு பகுதியைச் சேர்ந்த மக்கள் புதன்கிழமை காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. யசோதா தலைமையில் ஆட்சியர் பிரதீப் யாதவை சந்தித்தனர்.

“எங்கள் பகுதியில் 250 வீடுகள் உள்ளன. நாங்கள் இரண்டரை ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறோம். எங்கள் வீடுகளை இடிக்கக் கூடாது. நாங்கள் அப்பகுதியை விட்டுச் செல்ல மாட்டோம். நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்’ எனக் கூறி மனு அளித்தனர்.

இதற்கு ஆட்சியர் யாதவ் பதில் கூறுகையில், “நிலம் கையகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். நிலத்தை இழப்போருக்கு உரிய இழப்பீடு தரப்படும்’ என்றார்.

பொதுமக்களுடன் வந்த யசோதா எம்.எல்.ஏ. கூறியது:

சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக மொத்தம் 1500 வீடுகள் தான் பாதிக்கப்படும் என முதலில் கூறினர். தற்போது 300 வீடுகள் தான் பாதிக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.

விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டால், லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுவர்.

சிலர் பாதிப்படையும் போது, அவர்களுக்கு உரிய இழப்பீடு தரப்படும். எனது தொகுதி மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுகிறேன் என்றார் யசோதா.

——————————————————————————————————————————————————-
விமான நிலைய விரிவாக்கத்துக்கு கோவூரிலும் நிலம் கையகப்படுத்த திட்டம்: தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் புதிய நுழைவாயில்

சென்னை, நவ. 7: சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு போரூரை அடுத்த கோவூரிலும் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்காக முதலில் 1,457 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.

தற்போதுள்ள விமான நிலையத்தின் வடக்கில் உள்ள பகுதியில் இருந்து நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. பின்னர் இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு பொழிச்சலூர், கவுல்பஜார், அனகாபுத்தூர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.

இதற்கு பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் கடந்த மே மாதம் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நிலம் கையகப்படுத்துவதை கைவிட முடிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே முதலில் திட்டமிட்டபடி விமான நிலையத்துக்கு வடக்கில் உள்ள பகுதிகளில் நிலம் கையகப்படுத்தவும் அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு ஸ்ரீபெரும்புதூரில் சுமார் 4,820 ஏக்கர் நிலத்தில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

திட்டத்தில் மாற்றம்: இதன்படி, விமான நிலையத்துக்கு வடக்கில் உள்ள மணப்பாக்கம், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய ஊர்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்த முதலில் அரசாணை ஜூலை 9-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந் நிலையில் விரிவாக்கத் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட நிலத்துக்கும் தற்போதைய விமான நிலையம் அமைந்துள்ள பகுதிக்கும் நடுவில் ஆறு (அடையாறு) குறுக்கிடுவதால் திட்ட செயலாக்கத்தில் நடைமுறைப் பிரச்னைகள் ஏற்படும் என இந்திய விமான நிலையங்கள் ஆணைக்குழு தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஏற்கெனவே திட்டமிட்டபடி மணப்பாக்கம் முதல் கோவூர் வரையுள்ள பகுதியில் 1,069 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிய அரசாணை அக்டோபர் 9-ல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி மணப்பாக்கத்தில் 87.85 ஏக்கரும், கெருகம்பாக்கத்தில் 144.57 ஏக்கரும், கொளப்பாக்கத்தில் 145.69 ஏக்கரும், தரப்பாக்கத்தில் 32.56 ஏக்கரும், கோவூரில் 22.51 ஏக்கரும் என மொத்தம் 1,069 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.

இதில் மணப்பாக்கம் முதல் தரப்பாக்கம் வரையுள்ள நிலங்களில் 3-வது ஓடுபாதையும், தரப்பாக்கம், கோவூரின் சில பகுதிகள் உள்ளடக்கிய நிலத்தில் புதிய முனைய கட்டடங்களும் அமைய உள்ளன.

மேலும், புதிய முனையங்களை பயன்படுத்த தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் இருந்து விமான நிலையத்துக்கு புதிய நுழைவாயில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு? விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின்படி விமான நிலையத்தின் 2 பெரிய ஓடுபாதைக்கு நடுவே அடையாறு செல்லும்.

இதனால், தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ள சூழலில் பாதுகாப்பு தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பு.

வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் நிலை என்ன?

விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு அரசாணை (ஜி.ஓ. எம்எஸ். 108) வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி கையகப்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ள நிலங்களில் இருப்பவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இதில் நிலத்தின் உரிமையாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், போரூர், நந்தம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஏராளமானோர் மணப்பாக்கம், கெருகம்பாக்கம், கோவூர் உள்ளிட்ட பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

நிலத்தின் உரிமையாளர்களுக்கு மட்டும் மாற்று இடம் வழங்கப்பட்டால் இவர்கள் வீடுகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்படும் என இப் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

எனவே, அரசு இந்த பகுதிகளில் வாடகை வீடுகளில் இருப்பவர்களுக்கு விமான நிலைய விரிவாக்கத்தால் ஏற்படும் இழப்பை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப் பகுதி மக்களின் கோரிக்கை.
——————————————————————————————————————————————————-

விமான நிலைய விரிவாக்கத்தால் 381 வீடுகள் இடிக்கப்படும்

சென்னை,நவ. 7: சென்னைக்கு விமானப் போக்குவரத்து அதிகரித்து விட்டதால் விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியம் ஆகும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

விமான நிலையம் அருகேயுள்ள மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய இடங்களில் 1069.99 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. புதிய திட்டத்தால் 381 வீடுகள் பாதிக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.

விமான நிலைய விரிவாக்கம் செய்யப்படும் இடத்தில் பட்டா நிலத்தில் வீடுகள் கட்ட தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து இ.வி.பி. வீட்டு வசதி நிறுவனம் தொடர்ந்த வழக்கில் அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பதில் மனுவில் அரசு கூறியிருப்பதாவது:

சென்னை அருகே மீனம்பாக்கத்தில் தற்போதுள்ள விமான நிலையம் 1151 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு விமான ஓடுபாதைகள் இரண்டு உள்ளன. சென்னை விமான நிலையத்துக்கு பயணிகள் விமானங்களும், சரக்கு விமானங்களும் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றன. எனவே, விமான நிலையத்தை உடனே விரிவாக்கம் செய்ய வேண்டியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இறங்கும் முன்பாக விமானங்கள், வானிலேயே வட்டமடித்துக் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் எரிபொருள் வீணாகிறது. எனவே விமான நிலையம் அருகே 583 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த 2005-ல் முடிவு செய்யப்பட்டது. எனினும் அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல் பஜார், பல்லாவரம் கன்டோன்மெண்ட், பம்மல் போன்ற இடங்களில் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இத்திட்டத்தால் 5050 வீடுகளை இடிக்க வேண்டியிருந்தது.

எனவே, அந்த இடத்துக்கு பதிலாக மணப்பாக்கம், கொளப்பாக்கம், தரப்பாக்கம், கெருகம்பாக்கம் ஆகிய கிராமங்களில் நிலத்தைக் கையகப்படுத்த 2-5-2007 ல் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இப்புதிய திட்டத்தால் 381 வீடுகள் மட்டுமே பாதிக்கப்படும்.

இதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு சட்டப்படி இழப்பீடு வழங்கப்படும். 2005-ம் ஆண்டில் அப்போதிருந்த நிலைமைக்கு ஏற்ப இப்பகுதிகளில் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பொது நோக்கத்துக்காக இப்போது இந்த இடத்தில் நிலம் தேவைப்படுகிறது. விமான நிலைய விரிவாக்கத்துக்கு 1069 ஏக்கர் நிலம் கையகப்படுத்த இந்திய விமான நிலையம் ஆணையம் 1-8-2007 ல் அனுமதி அளித்துள்ளது. இது தவிர திருவள்ளூர் தாலுகா ஸ்ரீபெரும்புதூரில் நவீன விமான நிலையம் அமைக்க 4,820 ஏக்கர் நிலம் கையகப்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. எனவே இ.வி.பி. வீட்டு வசதி நிறுவனத்தின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி ஏ.குலசேகரன் இவ்வழக்கு விசாரணையை நவம்பர் 13-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

——————————————————————————————————————————————————-

Posted in AAI, abuse, ADMK, Agitation, AIADMK, Airport, Anagaputhoor, Anagaputhur, Anakaputhoor, Anakaputhur, Bribes, Chennai, Collector, Compensation, Corruption, Destruction, Dhaangal, Dharapakkam, Dharappakkam, DMK, DPI, encroachment, Expansion, Extension Project, Gaul Bazaar, High Court, Homeless, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanjeepuram, Kanjeevaram, Karunanidhi, Kerugampakkam, Kerukampakkam, kickbacks, Kolapakkam, Kolappakkam, Lake, Law, Madras, Manapakkam, Manappaakkam, Manappakkam, Manmohan Singh, MK, Njaanamani, Njaanamani Nagar, Njamani Nagar, Njanamani, Njanamani Nagar, Order, Pallavaram, PMK, Polichaloor, Polichalur, Power, Pozhichaloor, Pradeep Yadav, Sriperumpudhoor, Sriperumpudhur, Sriperumpudoor, Sriperumpudur, Sriperumputhoor, Sriperumputhur, Tamil Nadu, Thaangal, Thaankal, Tharapakkam, Tharappakkam, TN | 1 Comment »

‘Pookkadai, Purasaiwakkam, Pondy Bazaar Shops should be removed by Pongal’

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2006

பூக்கடை, புரசைவாக்கம், பாண்டி பஜார் நடைபாதை கடைகளை பொங்கலுக்குள் அகற்ற வேண்டும்: ஐகோர்ட்டு வற்புறுத்தல்

சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சென்னையில் முக் கிய இடங்களில் நடைபாதை கடைகள் அதிகமாக உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்கள் நடந்து செல்ல முடியவில்லை. இதற்கு மாற்று ஏற்பாடு செய்து வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதிகள் ஏ.பி.ஷா, நீதிபதி பிரபாஸ்ரீதேவன் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் நடைபாதை கடைகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தி தலைமையில் ஒரு குழுவை அமைக்க உத்தரவிட்டனர்.

இந்த குழு நடைபாதை கடைகளால் ஏற்படும் பாதிப்பு மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தயாரித்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.அதில் பூக்கடை பகுதி என்.எல்.சி. போஸ் ரோட்டில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும், பார்க் டவுன் ரெயில் நிலையம் முன் பகுதியில் உள்ள கடைகளை அகற்றி அல்லிகுளம் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். இதை போல புரசைவாக்கம் பகுதி கடைகளையும் அகற்றி அல்லிகுளத்திற்கு கொண்டு வர வேண்டும். பாண்டி பஜார் பகுதியில் உள்ள கடைகளை அந்த பகுதியில் 4 மாடி கட்டி டம் ஒன்று கட்டி அங்கு மாற்ற வேண்டும் என்று சிபாரிசு செய்தனர்.

இந்த அறிக்கை அடிப்படை யில் இன்று விசாரணை நடந்தது. தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் இந்த அறிக்கையை ஏற்பதாக அறிவித்தனர். அறிக்கையின் அடிப்படையில் பொங்கலுக்குள் கடைகளை அகற்ற வேண்டும். மாற்று இடங்களுக்கான ஏற்பாடும் செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள். இது தொடர்பான முழு தீர்ப்பு விரைவில் கூறப்படும் என்று கூறினார்கள்.

Posted in Allikulam, Association, Congestion, High Court, Judgement, Madras, Merchants, NSC Bose Road, Police, Pondy Bazaar, Pongal, Pookkadai, Purasaiwakkam, Ramasamy, Removal, Shops, Small Business, Street Vendors, Traffic | 2 Comments »

Delhi HC imposes cost on MCD for violating RTI Act

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

தகவல் அறியும் உரிமை சட்டத்தை மீறிய தில்லி மாநகராட்சிக்கு அபராதம்

புதுதில்லி, அக். 21: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மீறிய தில்லி மாநகராட்சிக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது தில்லி உயர் நீதிமன்றம்.

ராம் அவதார் யாதவ், தில்லி மாநகராட்சி குடிசை மேம்பாட்டுத் துறையிடம், சாத்ரா பகுதியில் அமைந்துள்ள சட்ட விரோத கட்டடம் பற்றி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் தருமாறு கோரினார். மாநகராட்சி அதிகாரிகள் உரிய தகவலைத் தருவதற்குப் பதிலாக தில்லி மேம்பாட்டு ஆணையத்தை அணுகுமாறு கூறினார்.

தில்லி மேம்பாட்டு ஆணையத்தை அணுகியும் உரிய தகவலைப் பெற முடியாமல் போகவே ராம் அவதார் யாதவ் தில்லி உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவீந்திர பகத், 6 வாரங்களுக்குள் மனுதாரருக்கு தில்லி மாநாகராட்சி ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Posted in DDA, Delhi, Delhi Development Authority, Delhi Municipality, HC, High Court, MCD, New Delhi, Right To Information, RTI, Shahdara | Leave a Comment »

Mullai Periyar Dam Issue – PMK Ramadoss Condemns Kerala Attitude

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

முல்லைப் பெரியாறு விவகாரம்: ராமதாஸ் கண்டனம்

சென்னை, செப். 27: முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையின் அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய நிபுணர் குழுவினர் அளித்த அறிக்கைக்கு ஏற்ப முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று கடந்த பிப்ரவரி மாதத்தில் தலைமை நீதிபதி உள்ளிட்ட 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மதிக்காமலும் அதை எதிர்த்தும் சண்டித்தனம் செய்தது முந்தைய கேரள காங்கிரஸ் அரசு. மாநிலத்தில் உள்ள அணைகளை எல்லாம் ஓர் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதன் அனுமதியில்லாமல் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்று சட்டம் இயற்றியது.

இந் நிலையில் ஆட்சி மாறி மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு அங்கே பதவிக்கு வந்தது. இவர்களாவது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பார்கள். அதை நடைமுறைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், முந்தைய காங்கிரஸ் அரசுக்கு எந்தவிதத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி அரசு நடந்து கொள்கிறது. அவர்களே பரவாயில்லை என்று கருத வைத்துவிடுவார்களோ என்ற அளவுக்கு முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் இடதுசாரி அரசு நடந்து கொள்வது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாத நிலையில் தான் தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தாமல் மீண்டும் பேச்சுவார்த்தை என்ற ஒரு கபட நாடகத்தை இடதுசாரி அரசு அரங்கேற்றத் தொடங்கி இருக்கிறது. இப்போது உச்ச நீதிமன்றத்தையும் நம்ப வைத்திருக்கிறது.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று முதலில் உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுங்கள் என்ற அறிவுரை கூறியிருப்பது வியப்பாக இருக்கிறது. முதலில் உத்தரவை அமல்படுத்துங்கள் என்று உத்தரவிட வேண்டிய உச்ச நீதிமன்றம், மீண்டும் பேச்சுவார்த்தை என்று புதிதாக அறிவுரை வழங்கியிருப்பது சரிதானா என்பது குறித்து சட்ட நிபுணர்கள் விளக்க வேண்டும்.

நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்று மாநில அரசுகளே பகிரங்கமாக அறிவிப்பதும் நீதிமன்ற உத்தரவை செல்லாததாக்கும் வகையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

இத்தகைய போக்கை மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். அத்துடன் ஆண்டுக் கணக்கில் தீர்வு காணப்படாமல் இருக்கும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு சட்டப்பூர்வ அமைப்பு முறையை ஏற்படுத்துவது குறித்தும் மத்திய அரசு சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் அளித்த உத்தரவை மதித்து முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை முதலில் 142 அடியாக உயர்த்த அனுமதிக்கும்படி கேரள அரசுக்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அறிவுறுத்த வேண்டும். அதன் மூலம் தனித்தன்மை படைத்தவர்கள் என்பதையும் நீதிமன்றத்தை மதிப்பவர்கள் என்பதையும் அவர்கள் நிலைநாட்ட வேண்டும்.

இனி பேச்சுவார்த்தை நடத்துவதில் பலன் இல்லை என்ற நிலையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண முடியவில்லை என்ற நிலையில்தான் மூன்றாவது நபர் என்ற வகையில் உச்ச நீதிமன்றத்தை அணுகினோம். முதலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவர்கள் அமல்படுத்த வேண்டும். அதன் பிறகு உச்ச நீதிமன்ற அறிவுரை பற்றி நாங்கள் சிந்திக்கிறோம் என்ற நிலையை பகிரங்கமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அத்துடன் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி இது குறித்து அவசரமாக விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

Posted in Contempt, Dam, High Court, Kerala, Mullai Periyar, PMK, Ramadoss, River, Sharing, States, Supreme Court, Tamil, Tamil Nadu, TN, Water | 1 Comment »

Coke & Pepsi bottles are destroyed in Kerala as part of Soft Drinks Ban Agitations

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006

கேரளத்தில் 2-ம் நாளாக கோக், பெப்சி பாட்டில்கள் அழிப்பு போராட்டம்

திருவனந்தபுரம், செப். 25: கோக கோலா, பெப்சி பான பாட்டில்களை அழிக்கும் போராட்டம் கேரளத்தில் இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு இளைஞர் அமைப்பான அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த தொண்டர்கள், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கடையில் புகுந்து, கோக், பெப்சி பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்டிகளைத் தூக்கி தெருவில் வீசி, பாட்டில்களை உடைந்து அழித்தனர் என்று போலீஸôர் கூறினர்.

வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீஸôர் தெரிவித்தனர்.

கேரளத்தில் கோக், பெப்சி உற்பத்தி, விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது.

எதிர்ப்பு இயல்பானதே – அச்சுதானந்தன்: கோலா கம்பெனிகளால் தண்ணீர் பிரச்சினையை எதிர்நோக்கும் மக்கள் இது போல எதிர்ப்பு தெரிவிப்பது இயல்பானதே என கேரள முதல்வர் அச்சுதானந்தன் தில்லியில் நிருபர்களிடம் கூறினார்.

Posted in Achuthananthan, Agitation, Ban, Coke, Communist, CPI, destroy, High Court, Kerala, Pepsi, Soft Drinks, Tamil | Leave a Comment »

New Justices appointed for Madras High Court

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 14, 2006

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை, செப். 14: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை சிறுவழக்குகள் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். சிவகுமார் (52), கடலூர் மாவட்ட நீதிபதி ராஜசூரியா ஆகியோர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதி சிவகுமாரின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் பெத்தான்வலசை. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. படித்து, புதுச்சேரி சட்டக் கல்லூரியில் பி.எல். படித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

1989-ல் சப் ஜட்ஜாக நியமிக்கப்பட்ட சிவகுமார், பல மாவட்டங்களில் நீதிபதியாகப் பணிபுரிந்தார். 1997-ல் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இந்த ஆண்டு மே மாதம் சென்னை சிறுவழக்குகள் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ஜி.ராஜசூரியா

கடலூர், செப். 14: நீதிபதி நீதிபதி ராஜசூரியா புதுவையைச் சேர்ந்தவர். 23-8-1951-ல் பிறந்தார். தந்தை கோவிந்தராஜ். தாயார் அம்மணி அம்மாள். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் மற்றும் எம்.எல். பட்டம் (முதல் வகுப்பு) பெற்றவர். புதுவை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பிரெஞ்சு சட்டத்தில் முதுகலை டிப்ளமோ படித்தவர்.

20-8-1975-ல் புதுவையில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். 9-1-1980-ல் புதுவையில் மாவட்ட உரிமையியல் நீதிபதியாக பதவி ஏற்றார். பின்னர் சார்பு நீதிபதியாகவும், மாவட்ட அமர்வு நீதிபதியாகவும் பணிபுரிந்தார்.

2005-ல் சென்னையில் குடும்ப நீதிமன்ற நீதிபதியாக இருந்தார், 4-5-2005-ல் கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக மாற்றப்பட்டார்.

Posted in BR Sivakumar, Chennai, High Court, Judges, Justices, Kadaloor, Madras, Puthucherry, Rajasooriya, Sivagangai, Tamil | Leave a Comment »