Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘hierarchy’ Category

TN CM effects reshuffle of portfolios: Why? MK Stalin vs MK Azhagiri (Kalki)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரனின் இலாகா பறிப்பு, கருணாநிதி குடும்பத்திலுள்ள அதிகார மையங்களி டையே நடக்கும் உரசலின் வெளிப் பாட்டை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. தென் மாவட்டங் களைப் பொறுத்தமட்டில், ஆட்சி மட்டத் திலும் கட்சி மட்டத்திலும் அழகிரியின் சொல்லே இறுதியானது. மாறன் சகோ தரர்களுடன் நடந்த மோதலில் தான் நினைத்ததை நடத்திக் காட்டிய அழகிரி, கே.கே.எஸ்.எஸ்.ஆரின் இலாகாவைப் பறித்ததன் மூலம் ஸ்டாலினுடன் மீண்டும் உரசத் துவங்கிவிட்டார் என்கிறார்கள்.

தென் மாவட்டங்களில் ஸ்டாலினின் உறுதியான ஆதரவாளர்களில் ஒருவராக இருப்பவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அவருக் கும் அழகிரிக்கும் ஆரம்பம் முதலே சுமுக உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது. விருதுநகர் மாவட்டச் செயலாளராக கே.கே.எஸ்.எஸ்.ஆர். வருவதில் அழகிரிக் குச் சற்றும் உடன்பாடில்லையாம். “அழ கிரி அண்ணன் அவரை ஒரு முன்னாள் அ.தி.மு.க.காரராகவே பார்த்தார்” என் கிறார்கள். தம்முடைய சிஷ்யர் தங்கம் தென்னரசுக்குச் செயலாளர் பொறுப்பை வாங்கித் தந்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்று பார்த்தாராம் அழகிரி. ஆனால், தென் மாவட்டங்களில் தமக்கு நம்பிக் கையான ஆட்கள் தேவை என்ற அடிப்படையில், கே.கே.எஸ்.எஸ்.ஆர், கருப்பசாமி பாண்டியன், (மறைந்த) தா.கிருஷ்ணன் போன்றவர்களுக்குத் தமது ஆதரவைக் கொடுத்து ஊக்குவித்தாராம் ஸ்டாலின். அந்த
வகையில் மாவட்டச் செயலாளரானவர்தான் கே.கே.எஸ். எஸ்.ஆர்.

இந்நிலையில் 2006ல் கலைஞர் மீண் டும் ஆட்சிக்கு வந்தவுடன் கே.கே.எஸ். எஸ்.ஆர். ஸ்டாலின் ஆசீர்வாதத்துடன் அமைச்சராகி விட்டார். ஆனால், செல் வாக்கு மிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அவருக்குக் கொடுக்கப்பட்டதை கடுமை யாக எதிர்த்தாராம் அழகிரி. என்றாலும், ஸ்டாலின் பக்கபலமாக இருந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிறார்கள்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மிகச் சுறு சுறுப்பாகவே செயல்பட்டார் என்பது கோட்டை அதிகாரிகளின் கமெண்ட். “அவர் ரொம்ப
பிராக்டிக்கலானவர், கலந்தாலோசித்தே முடிவுகளை எடுப்பார்” என்கிறார்கள். இருந்தும் சென்னையை ஒட்டியுள்ள ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனம், மருத்துவக் கல்லூரி துவங்கும் விவகாரத்தில் அவர் சர்ச்சையில் சிக்கிவிட்டார் என்ற பேச்சும் இருக் கிறது. இதுதவிர, சமீபத்தில் கிட்னி மோசடி விவ காரத்தில் இரண்டு மருத்துவ
மனைகளின் அங்கீ காரம் ரத்து தொடர்பான பிரச்னை எழுந்தது.

இதில் ஒரு மருத்துவமனை முக்கிய தி.மு.க. பிரமுகா¢ன் நெருங்கிய உறவினர் நடத்துவது. இதுவும் அமைச்சர் பதவி பிடுங்கப்பட காரணம் என்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தின் ஒரு பேரூராட்சியில் அ.தி.மு.க. வெல்வதற்கு மறை முகமாக உதவியதால்தான் அழகிரி சரியான சமயமாகப் பார்த்து வேட்டு வைத்துவிட்டார் என்று சொல்வோரும் உண்டு.

ஸ்டாலினால் இந்த முறை கே.கே.எஸ்.எஸ். ஆரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரைச் சுத்த மாக அமைச்சர் பதவியிலிருந்தே நீக்க வேண்டும் என்பதுதான் மதுரையிலிருந்து வந்த விருப்பமாம். ஆனால், ஜெயலலிதா போல் இல்லாமல் கலை ஞர் தமது அமைச்சர்களைக் கழற்றிவிட விரும்பாத வர். எனவேதான் பிற்பட்டோர் நலத்துறைக்கு அவரை மாற்றி விட்டாராம். இருந்தும் அழகிரியின் கோபம் தணியாததால் அவரைச் சில அமைச்சர்கள் சமாதானம் செய்தார்களாம். மக்கள் நல்வாழ்வுத் துறை இப்போது ஸ்டாலினின் மற்றோர் ஆதர வாளரும் வட மாவட்டத்தைச் சேர்ந்தவருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கொடுக்கப் பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கருப்பசாமி பாண்டியனை அமைச்சராக்க ஸ்டாலின் செய்த முயற்சியும் எடுபடவில்லை என்கிறார்கள்.

நெல்லையில் இளைஞர் அணி மாநாடு நடைபெறப்போகும் நிலையில், ஒரு நல்ல அமைப்பாளர் உற்சாகம் இழக்கும் நிலை ஏற் பட்டுவிட்டதே என்று அப் செட்டில் இருக்கிறாராம் ஸ்டாலின்.

Posted in ADMK, AIADMK, Alagiri, Alakiri, Assassin, Assassination, Assembly, Assembly Election, Assembly elections, assembly polls, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, backward, BC, Chicken, Chicken gunya, Chicken Kuniya, Chicken Kunya, Chicken pox, Chickenkunya, Chickenpox, chickun gunya, CM, Districts, DMK, dynasty, Fights, Health, hierarchy, JJ, K K S S R Ramachandran, Kalainjar, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kalimuthu, Kalinjar, Kalki, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kill, Kingdom, Kings, KKSSR, M R K Pannerselvam, Minister, Ministers, minority, MK, Monarchy, MRK, Panneerselvam, Pannerselvam, Pannirselvam, Party, Politics, Ponmudi, portfolios, Power, Ramachandran, Registration, reshuffle, Stalin, Sureshrajan, TN, Tourism | Leave a Comment »

Madurai CM Mu Ka Alagiri & Mathurai West By-polls – Kalki Analysis

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

மதுரையில் ஒரு சி.எம். :: இடைத்தேர்தல் ட்ரெயிலர் (கல்கி)
Kalki 24.06.2007

– ப்ரியன்

வேண்டுமென்பதை மாநில அரசு கட்டாயமாக்கியது. சென்னையிலும், திருச்சியிலும் போலீஸ் மிகவும் தீவிரமாக இதை அமல்படுத்துவதைப் பார்த்த நிருபர், மதுரையில் ஜங்ஷனுக்கு எதிரே, ஹெல்மெட் இல்லாமல் சென்ற ஒருவரிடம் “இங்க ஹெல்மெட் கட்டாயம் இல்லையா?” என்று அப்பாவித்தனமாக கேட்க, வாகனத்தில் இருந்தவர் சொன்னார்: “எங்க சி.எம். இதைப் பற்றி ஒண்ணும் சொல்லல.”

நிருபருக்கு ஒன்றும் புரியவில்லை. “சி.எம்மா” என்று இழுக்க, “அட
புரியலையா? அழகிரி அண்ணன்தான் எங்க சி.எம்.” என்று கூலாகச் சொல்லிவிட்டு ஸ்கூட்டரில் விரைந்திருக்கிறார் அந்த நண்பர்.

மதுரையில் மட்டுமல்ல, மதுரையை ஒட்டிய சிவகங்கை, ராமநாதபுரம், விருது நகர், தேனி மாவட்டங்களின் ஆளுங்கட்சி வட்டாரங்களிலும், அரசு அதிகாரிகள் மத்தியிலும், உச்சநிலை அதிகார மையமாகத் தெரிபவர் மு.க.அழகிரிதான். டிரான்ஸ்· பர், போஸ்டிங், காண்ட்ராக்ட் என்று எதையெடுத்தாலும், ‘அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா போதும்’ என்று நம்பிக்கை தொனிக்கும் வார்த்தைகள் கேட்பது சகஜம். இதுபோன்ற பேச்சுக்கள் கீழ்மட்ட அளவில் பரவ, பாமரர்கள் மத்தியிலும் ஒரு சி.எம்.முக்குரிய இமேஜுடன் வலம் வருகிறார்
அழகிரி.

அழகிரியின் இருபது வருட மதுரை வாசம், அவரை பல விதங்களில் மாற்றியிருக்கிறது. சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார மையமாகச் செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டப்படும் சசிகலாவுக்கும்,
அழகிரிக்கும் ஒரு சின்ன ஒற்றுமை உண்டு. இருவரும் வீடியோ கேஸட் கடை வைத்திருந்தவர்கள்தான்.

“1985 – 86 காலகட்டத்தில் முரசொலி மதுரை பதிப்பை பார்த்துக்கொள்வதற்காக வந்தவர். ஒரு ஸ்கூட்டரில் சுற்றிக் கொண்டிருப்பார். பின்னர் முரசொலி நின்று போனது. அப்போதுதான் வீடியோ கடை துவங்கினார்” என்று சொல்கிறார் அவருடன் அந்த நாளில் நெருங்கிப் பழகிய நண்பர் ஒருவர்.

கிட்டத்தட்ட 1992 வரை தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தார் அழகிரி. வைகோ பிரிந்தபோது பொன். முத்து ராமலிங்கம் உடன் சென்று விட, மதுரையில் கட்சி கலகலத்தது. களத்தில் குதித்த அழகிரி, வீடு வீடாகச் சென்று கட்சிப் பிரமுகர்களைச் சந்தித்து
கட்சியைப் பெரும் சரிவிலிருந்து மீட்டார். 1996-ல் கலைஞர் அரசு வந்தது அவருக்குச் சரியான ஏற்றத்தைக் கொடுத்தது. அதன்பின் மதுரை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் அழகிரிக்கு என்று கட்சி ¡£தியாக ஒரு பின்பலம் உருவாயிற்று.

கலைஞர் ஆட்சி நடந்த 1996 – 2001-ல் தாம் யாரும் தட்டிக் கேட்க முடியாத ஓர் அதிகார மையமாக இருப்பதை உணர்த்தியவர் அழகிரி.

2000-ம் ஆண்டு நெருக்கத்தில் தி.மு.க. சார்பில் ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட காவிரி மணியத்தை, தான் சிபாரிசு செய்ததாகவும், ஆனால், தி.மு.க. தலைமை கேட்கவில்லை என்றும் சொன்னார்
அழகிரி. இதன் விளைவாக மதுரையில் கலவரச் சூழல் ஏற்பட்டது. அரசு பஸ்கள் நொறுக்கப்பட்டன. “அழகிரி கட்சி உறுப்பினரே இல்லை” என்று அறிக்கை விட்டார் பொதுச்செயலாளர் அன்பழகன். இந்தக் காலகட்டத்தில் மறைந்த பழனிவேல் ராஜனுக்கும்
அழகிரிக்கும் உரசல்கள் ஏற்பட, கசப்புணர்வு வளர்ந்தது. கடுப்பில் இருந்த அழகிரி, பழனிவேல்ராஜன் உட்பட மூன்று தி.மு.க. வினர் 2001 தேர்தலில் தோற்கக் காரணமாக இருந்தார்” என்கிறார் ஒரு மூத்த உடன் பிறப்பு.

ஜெயலலிதா 2001-ல் ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த ஒரு சம்பவம், கட்சி மட்டத்தில் அழகிரியின் இமேஜை உயர்த்திவிட்டது. அப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நேரடி மேயர் தேர்தலில் தி.மு.க. ஜெயிக்க, துணை மேயரைத் தேர்ந்தெடுக்க மெஜாரிட்டி இல்லை. ஆனால் அழகிரி, எதிர்கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் வளைத்துப் போட்டு, துணை மேயர் தேர்தலில் தி.மு.க.வை வெற்றி பெறச் செய்தார். அதே போல் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க. சார்பாக முழு மூச்சாக அச்சப்படாமல் பணியாற்றினார் அழகிரி.

இதற்கிடையே, அழகிரிக்கும் சிவகங்கை தா.கிருஷ்ணனுக்கும் இடையே மோதல் துவங்கியது. அழகிரி சிவகங்கை சிவராமனை உயர்த்தப் பார்த்தார். தா.கி.க்கு ஸ்டாலின் ஆதரவு இருந்தது. நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், டெண்டர், வேலை வாய்ப்பு என்று பல விஷயங்கள்… அதிகாலை வாக்கிங்கில் தா.கி. கொலை செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட அழகிரி ஒரு மாதம் சிறையில் இருந்தார். இப்போது ஜாமீனில் இருக்கிறார்.

2004-ல் தி.மு.க. பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற, மீண்டும் அழகிரியின் செல்வாக்கு உயர்ந்தது. 2006 தேர்தலில் தி.மு.க.
ஆட்சிக்கு வந்ததும். அடித் தளத்தை நன்கு உருவாக்கியிருந்த அழகிரி வசம் சட்ட அங்கீகாரமில்லாத, அதிகார மையம் முழுமையாக வந்து சேர்ந்தது. மாவட்ட ஆட்சியாளர்கள், போலீஸ் கமிஷனர்கள் என்று போஸ்டிங்கில் வர வேண்டுமென்றால், வந்து நீடிக்க வேண்டுமென்றால் அவரது தயவு தேவையாக இருந்தது.

திருச்சிக்கு அந்தப் பக்கம் உள்ள விவகாரம் என்றால் ‘அழகிரியை ஒரு வார்த்தை கேட்கவும்’ என்கிற எழுதப்படாத விதி உருவாயிற்று.

அழகிரி – ஸ்டாலின் மோதல் வரும் என்ற கிசுகிசுக்கள் உலவி வந்த சமயத்தில், தினகரன் விவகாரம் குடும்பத்தை ஒற்றுமைப்படுத்திவிட்டது. கலைஞரின் சட்டமன்ற பொன்விழாவுக்கு ‘முழுப் பாதுகாப்புடன்’ அவர் வந்து சென்ற விதம், ஆட்சியாளர்களின் அங்கீகாரத்தையும், கட்சியின் அரவணைப்பையும் உணர்த்தியிருக்கிறது.

தினகரன் விவகாரம் இல்லையென்றால் தி.மு.க.வே இடைத்தேர்தல் களத்தில் குதித்திருக்கும். இப்போது காங்கிரஸ் நின்றாலும்
அழகிரிக்கு இது கௌரவப் பிரச்னை. பிரசாரத்தில் கதர் சட்டைகளைவிட தி.மு.க. படையே முக்கிய இடம் வகிக்கிறது.
அதிகார பலம், பணபலம், ப்ளஸ் ‘தொண்டர்’ பலம் ஆகியவற்றோடு இடைத்தேர்தல் களத்தில் சுற்றி வருகிறார் அழகிரி. காங்கிரசுக்கு
விழும் வோட்டுக்கள் உண்மையில் அழகிரிக்கு விழும் வோட்டுகளே!

– ப்ரியன்

இலவசங்கள் வேண்டாம்… விலைவாசியை குறைத்தால் போதும்!
– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
இடைத்தேர்தலால் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி களைகட்ட ஆரம்பித்துவிட்டது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சண்முகம் மறைவால் நடக்கும் இத்தேர்தலில், தொகுதியை தக்க வைத்துக் கொள்ள அ.தி.மு.க.வும், இது அழகிரியின் மானப் பிரச்னை என காங்கிரசுக்கு ஆதரவாக தி.மு.க.வும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில்
குதித்திருக்கின்றன. யார் கை ஓங்கும்? மதுரையை ஒரு ரவுண்ட் வந்தோம்.

மதுரையில் நிஜமான போட்டி என்பது மூன்று வேட்பாளர்களுக்கு இடையே. தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன், மு.க.அழகிரிக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் கே. ராஜு மற்றும் தே.மு. தி.க. வேட்பாளர்
சிவமுத்துக்குமரன். இவர்கள் மூவருமே தொகுதிக்காரர்கள்.
தொகுதிக்குள் பெரும்பான்மையாக வசித்து வரும் பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சார்ந்தவர்கள்.

“மதுரை மேற்கு தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 14,000 வாக்குகள் பெற்றிருந்தோம். இத்தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகளில் மாநகராட்சி தேர்தலில் 24,000 வாக்குகள் பெற்றோம். அது போல இருமடங்குகளுக்கு மேலான வாக்குகளை இந்த இடைத்தேர்தலில் நாங்கள் பெற்றுவிட்டால், தே.மு.தி.க. வெற்றி பெற்றுவிடும். அதற்கு கேப்டனின் பத்து நாள் மதுரை கேம்ப், வாக்காளர்கள் மத்தியில் புதிய எழுச்சியை உண்டு பண்ணிவிடும்!” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் தே.மு.தி.க. வேட்பாளர்
சிவமுத்துக்குமரன்.

தற்போது இடைத்தேர்தல் நடக்கும் 20 வார்டுகளில், கடந்த மாநகராட்சித் தேர்தலில் தே.மு.தி.க. ஐந்து வார்டுகளில் வெற்றி பெற்றது. சமீபத்தில் ஒரு கவுன்சிலர் தி.மு.க. பக்கம் போய்விட்டார். தற்போது நான்கு வார்டுகள் தே.மு.தி.க. வசம். “நாங்கள் வசிப்பது
22-வது வார்டில். தே.மு.தி.க. வெற்றி பெற்ற வார்டு இது. தி.மு.க.-அ.தி.மு.க. ரெண்டையும் மாத்தி மாத்திப் பார்த்துட்டோம். புதுசா ஒருத்தர் வந்து வித்தியாசமா நல்லபடியா ஆட்சி பண்ணட்டும்னு தான் விஜயகாந்த் கட்சிக்கு வோட்டு போட்டு வர்றோம் என்று ஆர்வமுடன் பேசுகிறார் பொன்னகரம் பிராட்வே பகுதியில் வசித்து வரும் லாரி மெக்கானிக் காமாட்சி.

“அம்மாவாகப் பார்த்து எனக்கு அளித்திருக்கும் நல்வாய்ப்பு இது. பொது மக்கள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கு என்று செல்வாக்குள்ள தொகுதி. ஆளுங்கட்சி செயல்பாடுகள் மீதான அதிருப்தி, விலைவாசி உயர்வு போன்றவை காரணமாக வெற்றி உறுதி!” என்கிறார் அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் கே.ராஜு.

சுயராஜ்யாபுரம் பகுதியில் நெசவாளக் குடும்பங்களில் பலரையும்
சந்தித்தோம். “நெசவாளிகளுக்கென்று நல்ல திட்டங்கள் கொண்டு வந்திருக்கறதாச் சொல்றாங்க. அறுவது வயசுக்கு மேற்பட்ட நெசவாளிகளுக்கு மாத பென்ஷன் திட்டம் நடைமுறைக்கு வந்துட்டா இன்னும் நல்லா இருக்கும். எங்க ஓட்டு தி.மு.க.வுக்கு தான் என்று இணைந்து குரல் தருகின்றனர் ஜானகி (58), ஞானசுந்தர் (32).

ஆனால், செல்லூர் நெசவுக் கூடமொன்றில் வேலை பார்க்கும் பெண் தொழிலாளி ஒருவர், பட்டிமன்ற ரேஞ்சுக்குப் பொரிந்து
தள்ளிவிட்டார். “ரேஷன் அரிசி தவிர மத்த எல்லா சாமானும் விலை ஏறிப் போச்சு. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒரு கிலோ மிளகாய் முப்பது ரூபா. இப்போ ஒரு கிலோ ஐம்பத்தைஞ்சு ரூபாய் விக்குது. இலவசங்களை நிறுத்தி வைச்சுட்டு, எல்லாப் பொருள்களின்
விலையேற்றத்தையும் குறைச்சாலே போதும்” என்று ‘லெக்சர்’
அடிக்கிறார் சாதாரண கூலித் தொழிலாளியான அங்காள ஈஸ்வரி.

தினகரன் நாளிதழ் தாக்கப்பட்ட சம்பவத்தை, தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த அ.தி.மு.க. முனையலாம். அதனை முறியடிக்க துருப்புச் சீட்டு ஒன்றினைத் தன் கைவசம் வைத்துள்ளது தி.மு.க. மூன்றரை வருடங்களுக்கு முன்பு அ.தி.மு.க. வட்டச் செயலாளர் பால்பாண்டி என்பவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். அப்போது மாவட்டச் செயலாளராக இருந்து வந்த செல்லூர் ராஜு மீது குற்றம் சாட்டப்பட்டது. தினகரன் சம்பவத்தை அ.தி.மு.க. பிரசாரத்துக்குப் பயன்படுத்தினால், அ.தி.மு.க. வட்டச் செயலாளர் கொலைக் குற்றச்சாட்டை தேர்தல் பிரசாரத்தில் ஊதி விடலாம் என அழகிரி தரப்பு வியூகம் அமைத்திருக்கிறது!

– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

Posted in abuse, ADMK, Alagiri, Alakiri, Analysis, Azhagiri, Azhakiri, By-polls, CM, Congress, DMK, dynasty, Elections, Hegemony, Heritage, hierarchy, K Anbalagan, K Anbalakan, K Anbazhagan, K Anbazhakan, Kalki, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Madurai, Mathurai, Mu Ka Alagiri, MuKa Alagiri, Murasoli, Polls, Power, Stalin, support | 1 Comment »

Paul Wolfowitz – World Bank, Girlfriend, Shaha Riza, Compensation

Posted by Snapjudge மேல் மே 31, 2007

நெட்டில் சுட்டதடா…: பெரிய பதவிக்கு வேட்டு வைத்த சின்னப் பதவி!

பல வருடங்களுக்கு முன்பு ஒரு பொதுத்துறை நிறுவனத்திலிருந்து இண்டர்வியூவுக்கு அழைப்பு வந்திருந்தது. கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸின் முன் பதிவு செய்யப்படாத பெட்டியில், உரித்துப் போட்ட வேர் கடலைத் தோல்களின் நடுவே தரையில் உட்கார்ந்தபடியே டெல்லிக்குப் பயணமானேன். பயணம் நாற்பது மணி நேரம் இருந்தாலும், இண்டர்வியூ என்னவோ நாலே நிமிடத்தில் முடிந்துவிட்டது. ஆச்சரியத்துடன் வெளியே வந்தபோது, அங்கே அட்டெண்டராக இருந்த கோபால் என்ற தமிழர் என் பால் வடியும் முகத்தைப் பார்த்து அனுதாபப்பட்டு ஒரு தகவல் தெரிவித்தார்: ஏற்கனவே அந்த உத்தியோகம் உயர் அதிகாரி ஒருவரின் உறவினருக்குக் கொடுக்கப்பட்டு விட்டதாம்! நான் குமுறிக் கொந்தளித்து ஒரு கல்லை எடுத்துக் கண்ணாடி ஜன்னல் மீது வீசலாமா என்று யோசித்து, பிறகு தைரியம் போதாமல் கனாட் ப்ளேஸில் ஒரு ராஜேஷ் கன்னா படம் பார்த்துவிட்டு ராத்திரியே ரயிலேறிவிட்டேன்.

தான் வகிக்கும் பதவியை உபயோகித்துத் தன்னுடைய உறவினர்களுக்குச் சகாயம் செய்து வைப்பதற்கு ஆங்கிலத்தில் நெபாடிஸம் என்று பெயர். நெஃப்யூ -மருமகன் என்ற வார்த்தையிலிருந்து வந்தது இது. அந்த வார்த்தைக்கு அடி வேர், நபாத் என்ற பழைய சமஸ்கிருதச் சொல். ஒருவேளை, ரிக் வேத காலத்திலேயே நெபாடிஸம் இருந்திருக்கிறதோ?… அமெரிக்காவில் 1933-ம் ஆண்டு டெக்ஸôஸ் மாநிலத்தில் ஒரு சர்வே எடுத்தார்கள். சில அரசுத் துறைகளில் அறுபது சதவிகிதம் வரை ஊழியர்களின் உறவினர்களால் நிரம்பி வழிந்ததைக் கண்டுபிடித்து அதிர்ந்தார்கள். நெபாடிஸ ஒழிப்புக் கமிட்டி என்று ஒன்று போட்டு விசாரணை நடத்தினார்கள். (அந்தக் கமிட்டியில் யார் யாருடைய மருமகப் பிள்ளைகளெல்லாம் இடம் பெற்றார்களோ தெரியவில்லை). பிறகு எல்லா மாநிலங்களும் விதவிதமாக நெபாடிஸ மறுப்புச் சட்டங்கள் இயற்றின. இப்போது பெரிய தனியார் நிறுவனங்களில்கூட வேலைக்குச் சேரும்போதே, “”உங்கள் உற்றார் உறவினர்கள் யாருக்கும் நீங்கள் சுற்றி வளைத்துக் கூட சூபர்வைசராக இருக்க முடியாது; உங்களுக்கு வேண்டியவர்கள் நடத்தும் கடையிலிருந்து ஆபீசுக்கு குண்டூசி கூட வாங்கக் கூடாது” என்றெல்லாம் விதி முறைகள் அச்சடித்துத் தந்து கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்கள். இருந்தும் நெபாடிஸம் சாவதாகத் தெரியவில்லை. “”என் மகனுக்கு உன்னுடைய டிபார்ட்மெண்டில் வேலை போட்டுக் கொடு; உன் மகனுக்கு என் டிபார்மெண்டில்” என்று பேசி வைத்துக்கொண்டு சுலபத்தில் நிரூபிக்க முடியாத வகையில் ஊழல் செய்கிறார்கள்.

சமீபத்தில் நெபாடிஸக் குற்றச்சாட்டுக்கு ஆளாகிப் பதவியை இழந்தவர், உலக வங்கியின் தலைவராக இருந்த உல்ஃபோவிச் என்பவர். பிரிட்டிஷ் பிரதமர்கள் கூட ரிட்டையர் ஆன பிறகு உலக வங்கியின் இந்த உயர்ந்த பதவிக்குப் போட்டியிடுவது உண்டு. உலகத்தில் எங்கே வேண்டுமானாலும் பெரிய அளவில் போர், பஞ்சம் போன்றவற்றை ஆரம்பித்து வைக்கவும், முடித்து வைக்கவும் சக்தி படைத்த பதவி அது. உல்ஃபோவிச் வங்கியில் வேலை செய்த தன்னுடைய காதலி ரிஸô என்பவருக்குப் பதவி உயர்வு கிடைக்குமாறு பார்த்துக் கொண்டதுடன், ஒரேயடியாகச் சம்பளத்தையும் உயர்த்திக் கொடுத்துவிட்டார். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் டாலர்; அமெரிக்காவின் மத்திய அமைச்சர்களைவிட அதிகச் சம்பளம்! இந்த ஊழலைக் கண்டு வெகுண்ட சில ஊழியர்கள் மொட்டைக் கடிதாசு எழுதிப் போட்டுவிட்டார்கள். கடும், நெடும் விசாரணை நடந்தது. ஜனாதிபதி புஷ் நேரடியாகத் தலையிட்டுக் காப்பாற்ற முயன்றும் உல்ஃபின் தலை தப்பவில்லை. பொய்ச் சாட்சி சொல்ல மறுத்துத் தன் காலை வாரிய கீழ் மட்ட அதிகாரிகளை வண்டை வண்டையாகத் திட்டிக்கொண்டே வெளியேறினார் உல்ஃபோவிச்.

புனிதப் பீடங்களும் நெபாடிஸத்தின் நெடிய கைகளிலிருந்து தப்பிக்கவில்லை. கத்தோலிக்க போப்பாண்டவர்கள் கல்யாணம் செய்து கொள்வதில்லையாதலால், அவர்களுக்கு நேரடியான வாரிசுகள் இருக்க வாய்ப்பில்லை. எனவே தத்தமது தமக்கை மகன்களைப் பதவிக்குக் கொண்டு வந்து பரம்பரை ஆட்சியை நிலை நாட்டினார்கள். உதாரணமாக போப் கலிக்ஸ்டஸ் என்பவர் தன்னுடைய இரண்டு மருமகன்களைச் சக்தி வாய்ந்த கார்டினல் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தார். அதில் ஒருவர் பிறகு போப் பதவிக்கு உயர்ந்தார். ஆறாவது அலெக்ஸôண்டர் என்ற அந்த போப், தன்னுடைய ரகசிய சினேகிதியின் தம்பியை ராவோடு ராவாக கார்டினல் ஆக்கினார். அந்தத் தம்பியும் பிறகு போப் ஆகிப் பரம்பரை வழக்கத்தைத் தொடர்ந்தார்: தெருவில் பம்பரம் விட்டுக் கொண்டிருந்த தன்னுடைய பதினாலு, பதினைந்து வயது மருமகன்களை சாக்லெட் தந்து அழைத்து வந்து, சீனியர் பிஷப்பாக ஆக்கினார். கடைசியாக பதினேழாம் நூற்றாண்டு முடிவில் போப் இன்னசென்ட் என்பவர்தான் உறவினர்களுக்கு சர்ச் பதவி கொடுக்கும் வழக்கத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார்.

அரசியல்வாதிகளின் வாரிசுள், அப்பா மாதிரி முள் பாதையில் நடந்து மலையேறத் தேவையின்றி நேரடியாக ஹெலிகாப்டரில் ஏறி உச்சிக்குப் போய்விடுவது உலகம் முழுவதும் வழக்கம்தான். மலேசியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று நம்மை நாலு புறமும் சூழந்து கொண்டு இதற்கு உதாரணங்கள் உண்டு. உற்றார் உறவினர் தயவில், ஒரு வார்த்தை கூட ஃப்ரெஞ்சு மொழி தெரியாதவர்கள் ஃப்ரான்ஸ் நாட்டுக்குத் தூதராக நியமிக்கப்பட்ட வினோதமும் நடந்திருக்கிறது; தன் கணவருடைய நாற்காலிக்கு நெருக்கடி நேர்ந்தபோது கொல்லைப்புறத்தில் வறட்டி தட்டிக் கொண்டிருந்த மனைவி கையை அலம்பிக் கொண்டு வந்து பதவிக்கு பிரமாணம் எடுத்துக் கொண்ட விசித்திரமும் நடந்திருக்கிறது. அறுபதுகளில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான், தலைமை வக்கீல் பதவிக்கு ராபர்ட் என்பவரை நியமித்தது பெரிய சர்ச்சையானது. ஏனெனில் இரண்டு பேரின் குலப் பெயரும் கென்னடி! (தம்பியும் அண்ணன் போல அரசியலில் நுழைந்து தேர்தல்களில் ஜெயித்தார்; அண்ணன் போலவே சுட்டுக் கொல்லப்பட்டார்.)

இப்படி உள்ளிருப்பவரின் உறவினர்கள் குறுக்கு வழியில் நுழைந்துவிடுவதால், தகுதியும் திறமையும் கொண்ட வேறு பலருக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போய்விடுகிறது என்பதுதான் இதன் பிரச்சினை. ஆனால் எல்லா நம்பிக்கைகளையும் தட்டிக் கேட்கும் அமெரிக்காவில், நெபாடிஸம் நல்லதா, கெட்டதா என்றே ஒரு விவாதம் நடக்கிறது. ஆடம்பெல்லோ என்ற அறிஞர் பல வருடம் ஆராய்ச்சி செய்து பி.எச்.டி லெவலில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். நெபாடிஸம் என்பது, மனிதன் உள்பட எல்லாப் பிராணிகளின் இயற்கையான இனம் தழைக்கும் உந்துதலால் ஏற்படுவது என்கிறார் அவர். எறும்புக் காலனிகளில் எவ்வளவோ எறும்புகள் பசித்திருக்க, கிடைத்த உணவைத் தன் ரத்த சம்பந்தங்களுக்குக் கொடுப்பதை விஞ்ஞானிகள் கவனித்திருக்கிறார்கள். (ஆயிரம் எறும்புகளில் எந்த எறும்புக்கு எந்த எறும்பு சித்தப்பா என்பதை எப்படித்தான் அடையாளமிட்டுக் கண்காணித்தார்களோ?) தன்னுடைய நேரடி வாரிசுகளுக்கு உணவும் உடையும் கட்சிப் பதவியும் தந்து கவனித்துக் கொள்வது, நல்ல பெற்றோருடைய கடமைதானே என்கிறார் பெல்லோ.

ஜாப்ஸ்டர் போன்ற வேலை வாய்ப்பு தளங்களிலும் இதையேதான் நவீன பகவத் கீதை மாதிரி உபதேசிக்கிறார்கள். “”இந்தக் காலத்தில் வேலை கிடைப்பதே கழுதைக் கொம்பாக இருக்கிறது, இதில் லட்சிய வாதமெல்லாம் பேசிக்கொண்டு “சொந்தக் காலில்தான் நிற்பேன், சிபாரிசு பிடித்து வேலைக்கு அலையமாட்டேன்’ என்ற வறட்டு கெüரவத்தால் வாழ்க்கையை வீணாக்கிவிடாதீர்கள். தகுதி அடிப்படையில் வேலை தானாகக் கனிந்து வந்து விழும் என்று மடியை விரித்துக் கொண்டு காத்திருந்தது, போன தலைமுறை. இப்போதையே டிஜிட்டல் தலைமுறைக்கு அவ்வளவு பொறுமையெல்லாம் கிடையாது. இது சோஷல் நெட்வொர்க்கிங் யுகம்: உங்களுக்கு யாரைத் தெரியும், அவர்களுக்கு யார் யாரையெல்லாம் தெரியும் என்ற இந்த வாலைப் பின்னல்தான் சமுதாயத்தில் நம்மைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. எனவே உங்கள் அப்பாவோ, மாமாவோ கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருக்கும் நன் மதிப்பைக் கூச்சமில்லாமல் உபயோகித்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுங்கள். இதற்குக் கூடப் பயன்படவில்லையென்றால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்ததுதான் என்ன பயன்?”

ஒரு அலுவலகத்தின் சீனியர் அதிகாரி, அங்கே வேலை செய்யும் வாலிபனிடம் சொன்னாராம்: “”இளைஞனே! நீ போன வருடம் இங்கே கடை நிலை க்ளார்க் வேலையில் சேர்ந்தாய்; மூன்றே மாதத்தில் கடின உழைப்பால் சூபர்வைசராக உயர்ந்தாய். ஆறு மாதம் கழித்து முதுநிலை மானேஜர் மண்டையைப் போட்ட போது, உன் திறமையின் காரணமாக அந்தப் பணியில் உன்னை அமர்த்தினேன். இப்போது உன் புத்திசாலித்தனத்தினால் உப தலைவர் பதவியும் உன்னுடையதாகிவிட்டது. அடுத்தது என்னுடைய நாற்காலிதான் பாக்கி. இப்போது நான் செய்ய வேண்டும்?

“”சீக்கிரமே ரிடையர்மெண்ட் வாங்கிக் கொண்டுவிடுங்கள், டாடி!” என்றான் இளைஞன்.

Posted in Analysis, Ancestry, Backgrounder, Blood, Compensation, dynasty, Favor, Friend, Girlfriend, hierarchy, Nepotism, Paul Wolfowitz, Raman Raja, relative, Riza, Salary, Scandal, Shaha Riza, WB, Wolfowitz, world bank | Leave a Comment »

Kanimozhi Karunanidhi – Rajya Sabha MP, Biosketch

Posted by Snapjudge மேல் மே 27, 2007

இந்திய மேலவை உறுப்பினராக திமுக சார்பில் கனிமொழி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்

நடக்கவுள்ள, மேலவைத் தேர்தலுக்கான தனது வேட்பாளர்களை திமுக இன்று அறிவித்துள்ளது. தனது மகள் கனிமொழியை மேலவை உறுப்பினர் பதவிக்காக திமுக தலைவர் மு கருணாநிதி பரிந்துரை செய்துள்ளார். ஆனால் அவருக்கு உடனடியாக மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படாது என்றும் திமுக தலைவர் கூறியுள்ளார்.

திமுக தலைவரின் மகனான மு க ஸ்டாலின் ஏற்கனவே தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். இவரது சகோதரர் மு க அழகிரி, கட்சியிலும், ஆட்சியிலும் முறைப்படி பதவியில் இல்லாவிட்டாலும் தென் மாவட்டங்களில் திமுகவை இவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இது தவிர கருணாநிதியின் மருகமகனான, முரசொலி மாறனின் மகனான தயாநிதி மாறன் 2004 ஆம் ஆண்டு அரசியலுக்கு கொண்டு வரப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டு உடனடியாக மத்திய அமைச்சாரகவும் ஆக்கப்பட்டார்.

மூன்று வாரங்களுக்கு முன்பு தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகம் தாக்கப்பட்டதை அடுத்து கருணாநிதியின் குடும்பத்துக்கும்- முரசொலி மாறனின் குடும்பத்துக்கும் இடையேயான விரிசல் அதிகமானதாக ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு கருணாநிதி, தனது மகளான கனிமொழியை தற்போது அரசியலுக்கு கொண்டு வந்துள்ளார்.

திமுக சார்பில் திருச்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சிவாவும் இத்தேர்தலில் களமிறக்கப்பட உள்ளார்.

கட்சியில் தான் பல ஆண்டுகளாக இருந்ததாக தமிழோசையிடம் தெரிவித்த கனிமொழி, வாரிசு அரசியல் குறித்து செய்யப்படும் விமர்சனம் தொடர்பான கேள்விகளை தனக்கு பதவி அளிக்க முடிவு செய்தவர்களிடம் தான் கேட்கவேண்டும் என்று கூறினார்.

—————————————————————————————————————————————————–

எம்.பி. ஆகிறார் கனிமொழி
Kalianjar _Karunanidhi_Kanimozhi_stalin_Rajathi_Ammal

தந்தை மு. கருணாநிதி, தாயார் ராசாத்தி அம்மாள், அண்ணன் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோருடன், மாநிலங்களவை திமுக வேட்பாளராகத் தேர்வு பெற்ற கனிமொழி.

சென்னை, மே 27: தி.மு.க. சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் கவிஞர் கனிமொழியும், திருச்சி என். சிவாவும் போட்டியிடுகின்றனர்.

தி.மு.க.வுக்கு இரண்டு இடங்களிலும் வெற்றி உறுதி என்பதால் கனிமொழியும், திருச்சி என்.சிவாவும் மாநிலங்களவை எம்.பி. ஆகின்றனர்.

இதற்கான அறிவிப்பை தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதி சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற நிருபர்கள் கூட்டத்தில் வெளியிட்டார்.

முன்னதாக, இதுகுறித்து முடிவு எடுக்க, திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியது:

ஜூன் மாதம் தமிழகத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தல் குறித்து உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதில், திமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலுக்கு 2 வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருச்சி என். சிவாவும், கவிஞர் கனிமொழியும் போட்டியிடுகின்றனர்.

நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:

குதிரை பேரம் கூடாது:

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டி போட்டு, இங்குள்ள எம்.எல்.ஏ.க்களை அங்கு இழுப்பதும் அங்குள்ள எம்.எல்.ஏ.க்களை இங்கு இழுப்பதுமான குதிரை பேரத்துக்கு இடமளிக்கக் கூடாது.

சுமுகமான முறையில் மொத்தமுள்ள 6 இடங்களில் திமுகவுக்கு இரண்டு, எதிர்க்கட்சிக்கு இரண்டு, தோழமைக் கட்சிகளுக்கு இரண்டு என்கிற முறையில் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியும், பரபரப்பும் இல்லாத தேர்தலை நடத்த விரும்புகிறேன் என்று ஒரு வாரத்துக்கு முன்பே நிருபர்களிடம் சொல்லி இருக்கிறேன்.

மத்திய அமைச்சருக்கு வாய்ப்பு இல்லை:

கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படுமா என உடனே கேட்கிறீர்களே.

தமிழகத்தில் இருந்து 13 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். அதற்குமேல், சங்கப்பலகை இடம் தராது.

தமிழகத்தில் நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான அதிகாரியாக சட்டப் பேரவை செயலாளர் செல்வராஜை முதலில் நியமித்துவிட்டு, இப்போது அவரை மாற்றி இருக்கிறார்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு, அது, சட்ட ரீதியான காரணமா? அரசியல் ரீதியான காரணமா? எனத் தெரியவில்லை என்று பதில் அளித்தார் கருணாநிதி.

———————————————————————————————————

கனிமொழியின் சொத்து எட்டரை கோடி

சென்னை, ஜூன் 2: மாநிலங்களவைத் தேர்தலுக்கு திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி மனு தாக்கல் செய்தார். அவருடன் மற்றொரு திமுக வேட்பாளரான திருச்சி என். சிவாவும் மனு தாக்கல் செய்தார்.

மாநிலங்களவைக்கான தேர்தல் இம்மாதம் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் 2 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கவிஞர் கனிமொழி முதல்முறையாக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் வெள்ளிக்கிழமை அவர் மனு தாக்கல் செய்தார்.

முன்னதாக திமுக தலைமை அலுவலகமான அறிவாலயம் சென்று தனது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதியிடம் ஆசி பெற்றார். பின்னர் அங்கிருந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் தலைமைச் செயலகம் வந்து மனு தாக்கல் செய்தார்.

சொத்து ரூ. 8.56 கோடி:

தனது சொத்து மதிப்பு ரூ. 8.56 கோடி என வேட்புமனுவில் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ள தொகை ரூ. 6.58 கோடி.

மேலும் ரூ. 3.61 லட்சம் நகைகளும்,

ரூ. 18.70 லட்சம் மதிப்பிலான “டொயோட்டா காம்ரி’ காரும் தனக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர அண்ணா சாலையில் ரூ. 1.61 கோடி மதிப்பிலான வர்த்தக வளாகம் உள்ளதாகவும்,

தனது கணவர் ஜி. அரவிந்தனுக்கு அத்திக்கோட்டையில் ரூ. 10 லட்சம் மதிப்பில் ஒரு ஏக்கர் வீட்டுமனை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வங்கிக் கணக்கில் ரூ. 15 ஆயிரம் ரொக்கமும், தனது கணவருக்கு ரூ. 10 ஆயிரமும் இருப்பில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு வேட்பாளரான திருச்சி என். சிவா, தனது வேட்பு மனுவில் தனது குடும்பத்தினருக்கு வங்கி மற்றும் இதர சேமிப்பு வகையில் ரூ. 1.83 லட்சம் இருப்பதாகவும், நகை ரூ. 7.59 லட்சத்துக்கு இருப்பதாவகும், குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ. 59.8 லட்சம் மதிப்பில் நிலம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கனிமொழி மனு தாக்கல் செய்யும்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் உடனிருந்தனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா, தனது வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு ரூ. 61,944 என்று குறிப்பிட்டுள்ளார். தனது கையில் ரூ. 3,000 ரொக்கம் இருப்பதாகவும், தனது குடும்பத்தினருக்கு வங்கியில் ரூ. 58,944 இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜா மனு தாக்கல் செய்யும்போது அமைச்சர்கள் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆர். நல்லகண்ணு, சட்டப்பேரவை உறுப்பினர் வை. சிவபுண்ணியம் மற்றும் பாமக தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் உடனிருந்தனர்.

மனு தாக்கல் செய்தபிறகும் செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியது:

மாநிலங்களவை உறுப்பினராவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கட்சி முன்னிறுத்தும் பிரச்சினைகள் குறித்து நிச்சயம் பேசுவேன் என்றார். அதிமுக சார்பில் மைத்ரேயன் மற்றும் இளவரசன் ஆகியோர் ஏற்கெனவே மனு தாக்கல் செய்துவிட்டனர். எஞ்சிய இரு இடங்கள் காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. மனு தாக்கல் செய்ய இறுதி நாள் இம்மாதம் 5-ம் தேதியாகும். அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் 6 பேரைத் தவிர வேறு எவரும் மனு தாக்கல் செய்யாதபட்சத்தில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.

——————————————————————————————————–

தாலி கட்டும் பழக்கம் தொடர்வது ஏன்?: கனிமொழி கேள்வி

விழுப்புரம், மே 27: பகுத்தறிவாளர்கள் நடத்தி வைக்கும் திருமணங்களில்கூட தாலி கட்டும் பழக்கம் இதுவரை தொடர்வது ஏன் என்று தெரிய வில்லை என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி யின் மகளும், கவிஞருமான கனிமொழி கேள்வி எழுப்பினார்.

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய தலித் நாடக விழாவில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக் குமாருக்கும், பொன்னம்மாளுக்கும் சாதி மறுப்பு திருமணத்தை கனிமொழி நடத்தி வைத்தார்.

அப்போது அவர் பேசியது:

இதுபோன்ற திருமணங்களை கலப்புத் திருமணம் என்று கூறுகிறார்கள். இதைப் பற்றி தந்தை பெரியார் கூறுகையில், நான் ஆட்டுக்கும், மாட்டுக்குமா திருமணம் நடத்தி வைக்கிறேன். மனிதனுக்கும், மனிதனுக்கும் நடத்தி வைக்கும் திருமணம், எப்படி கலப்புத் திருமணமாகும் என்று வினவினார்.

சாதியை, மதத்தை எதிர்த்து இந்த திருமணம் நடக்கிறது. பெண்ணுக்கு வழக்கமான திருமணத்தின்போது கயிறு (தாலி) தேவைப்படுகிறது. பல பகுத்தறிவாளர்கள் நடத்தி வைக்கும் திருமணங்களில் கூட இன்னும் தாலியை பயன்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை.

அமெரிக்க கருப்பர் மக்களை போல, நாம் நமது போர் முறையை மாற்றிக் கொண்டு போராட வேண்டும் என்றார் கனிமொழி.

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன் முடி, விடுதலைச் சிறுத்தைகள் இயக்க பொதுச் செயலர் திருமாவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.

————————————————————————————————————

Kaalachuvadu Kannan

கனிமொழி, சசிகலா: ஞானியின் ஒப்பீடு.

ஆனந்த விகடன் புத்தாண்டுச் சிறப்பிதழைச் சற்றுத் தாமதமாகவே படிக்க முடிந்தது. சினிமா சார்ந்த செய்திகளையும் தாண்டிப் பல பொருட்கள் பற்றிய செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிடும் ஆரோக்கியமான மாற்றம் ஆனந்த விகடனில் ஏற்பட்டதிலிருந்து தொடர்ந்து வாசிக்க முயன்று வருகிறேன். பயணங்களிலும் வேலை நெருக்கடியிலும் சில இதழ்கள் விடுபட்டுவிடுவதுண்டு. ஆனந்த விகடனில் தொடர்ந்து படிக்கும் பகுதிகளில் ஒன்று ஞாநியின் ‘ஓ பக்கங்கள்’. வெகுஜனத் தளத்தில் மாற்றுக் கருத்துகள் புழங்கும் குறைவான தளங்களில் ஒன்று ‘ஓ பக்கங்கள்’.

மேற்படி இதழின் ‘ஓ பக்கங்கள்’ தலைப்பு “சசிகலா நிதி அமைச்சர், கனிமொழி கல்வி அமைச்சர்”. இந்த ஒப்பீடு துணுக்குற வைத்தது. உள்ளே செம்மொழிக் குழுவில் கனிமொழி இடம்பெற்றதை ஞாநி கண்டித்திருந்தார். வருங்காலத்தில் ராகுல் காந்தி உள்துறை அமைச்சராகவும் சசிகலா நிதி அமைச்சராகவும் கனிமொழி கல்வி அமைச்சராகவும்கூடும் எனும் சாத்தியப்பாட்டையும் அவர் முன்வைத்திருந்தார்.

இவை நியாயமற்ற வார்த்தைகளாகவும் கலைஞர் மீது ஞாநி சமீபகாலமாக வெளிப்படுத்திவரும் வன்மமும் கோணலும் வெளிப்படும் கண்டனங்களின் உச்சமாகவும் தோன்றின. கலைஞர்மீதான வன்மத்தை அவர் கனிமொழிமீதும் காட்டியிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. கனிமொழிக்கு ஞாநியின் மனதில் ‘கலைஞரின் மகள்’ என்பதைத் தாண்டிய எந்தப் பரிமாணமும் இல்லை, அல்லது அது இங்கு வெளிப்படவில்லை என்பது அவரது பெண்ணிய ஆதரவு நிலைப்பாட்டிற்குக் களங்கம் சேர்ப்பதாக உள்ளது. ஏனெனில் கனிமொழியின் பிற தகுதிகளை ஆராய்ந்து ஞாநி தன் கருத்தைப் பதிவுசெய்யவில்லை.

ஞாநியின் எழுத்துகளில் கலைஞர் பற்றிய விமர்சன பூர்வமான மரியாதை ஒரு காலகட்டம் வரை இருந்தது. பா.ஜ.க.வுடன் தி.மு.க. உறவு கொண்ட பின்னர் ஞாநி கலைஞரைக் கருத்தியல் அடிப்படையில் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். விரைவில் இக்கருத்தியல் விமர்சனங்கள் தனிப்பட்ட வன்மத்தை வெளிப்படுத்தத் தொடங்கின.

 

இதற்கு மறுபக்கமும் உண்டு. ஞாநியின் விமர்சனங்களைத் தி.மு.க.வும் அதன் ஊடகங்களும் சகிப்புத்தன்மையற்று எதிர்கொண்டன. எடுத்த எடுப்பிலேயே அவர்மீது சாதியக் குற்றச்சாட்டைச் சுமத்தின. இந்த ஆட்சியில் கண்ணகி சிலை மறுபிரதிஷ்டை செய்யப்பட்டபோது ஞாநி வெளிப்படுத்திய விமர்சனத்தைத் தி.மு.க. தலைமை எதிர்கொண்ட விதம் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. ஞாநிமீது பல குற்றச்சாட்டுகளை வைக்கலாம். ஆனால் சாதி உணர்வு கொண்டவர் என நெஞ்சுக்கு நீதி கொண்டு சிந்திப்பவர்கள் சொல்ல முடியாது.

 

இந்தக் குற்றச்சாட்டு முன்னரும் ஞாநிமீது சுமத்தப்பட்டிருக்கிறது. கருத்து வேறுபாடு கொண்டவுடனேயே மர்ம ஸ்தானத்தில் அடிக்கும் கடைநிலைப் பண்பின் வெளிப்பாடாகவும் பல சமயங்களில் குற்றஞ்சாட்டுபவர்களின் சாதிய உணர்வின் சான்றாகவும் இவை அமைந்துவிடுகின்றன.

 

செம்மொழிக் குழுவில் முன்னரும் இப்போதும் பங்கு பெற்ற, பெற்றிருக்கும் உறுப்பினர்களின் பலரின் தகுதி என்ன என்பதை ஆராய்ந்து அவற்றோடு கனிமொழியின் தகுதிகளை ஒப்பிட்டு விவாதிப்பதே சரியானது. செம்மொழிக் குழுவிலும் அரசு அமைக்கும் பிற பண்பாட்டுக் குழுக்களிலும் இடம் பெற்றிருப்பவர்களுக்கு அவர்களின் தகுதிதான் அடிப்படையாக உள்ளதா? அல்லது வேறு காரணங்களா? அந்தக் காரணங்கள் ‘வாரிசு’ என்பதைவிட மேலானவையா? மேலும் ஞாநி ‘வாரிசு’ என்ற கோணத்தில் மூடத்தனமாக எதிர்ப்பவர் அல்ல.

 

ஸ்டாலினுக்குத் தி.மு.க.வில் அளிக்கப்படும் பொறுப்புகளை அவருடைய தகுதி மற்றும் அனுபவம் சார்ந்து ஞாநி ஆதரித்து எழுதியுள்ளார். எனவே கனிமொழி விஷயத்திலும் அதே அணுகுமுறையைக் கையாள வேண்டும். கனிமொழிக்குப் பதிலாக அவரைவிடத் தகுதியான ஒருவர் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பைச் சமகால அரசியலின் நியமன முறைகள் வெளிப்படுத்தவில்லை. மொழி சார்ந்த நவீனப் பார்வையும் தி.மு.க.வினுள்ளும் அப்பாலும் இருக்கும் அறிவுஜீவிகளுடனான உரையாடலும் கொண்டவர் கனிமொழி. மொழி சார்ந்த பிற்போக்கான பார்வை கொண்ட இன்னொரு தமிழறிஞரைவிட கனிமொழி இடம்பெற்றிருப்பது சாதகமானதாகவே எனக்குப் படுகிறது.

 

ராகுல் காந்தி மற்றும் சசிகலாவுடனான ஒப்பீடு சிறிது அளவுகூட நியாயம் அற்றது. ராகுல் காந்தி அரசியலில் இயங்கிவரும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவரைப் பொறுத்தவரையில் ஒரே கேள்வி ‘எப்போது?’ என்பதுதான்; ‘ஆவாரா?’ என்பது அல்ல. சசிகலா தமிழக அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்தும் குணாம்சங்களுக்குக் கனிமொழி நேர் எதிர். இங்கே எந்த ஒப்பீட்டுக்கும் இடம் இல்லை.

ஞாநியின் இந்த ஒப்பீடுகள் புண்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டவையாகவே தோன்றுகின்றன. கனிமொழி வழி அவர் கலைஞரைத் தாக்குவது, மிக நாகரிகமாகச் சொல்வது என்றால், துரதிருஷ்டவசமானது.

 

கண்ணன் காலச்சுவடு

——————————————————————————————————————

-அப்பா-கனிமொழியின் கவிதை

அப்பா குறித்த கனிமொழியின் கவிதை ஒன்றை ‘அகத்திணை’ என்ற அவரின் கவிதைத் தொகுப்பில் இருந்து தருகிறேன் வாசியுங்கள்.

அப்பா

சின்ன வயதில்
செய்த தவறுகளுக்கெல்லாம்
பூச்சாண்டியாய் உன்
பெயரைத்தான் சொன்னாள்
அம்மா

காலையில் கணக்குப் பாடம்
குழம்பியபோது
பத்திரிகையில் புதைந்த
உன் தியானத்தை எப்பிடிக்
கலைப்பது?

விடுமுறை நாள்களில்
சினிமாவுக்குப் போக
அம்மாவைத் தூதுவிடுவதே
ஆபத்தற்றதாய் இருந்தது

வாரம் ஒருமுறை
பின் சீட்டில் வைத்து
தேக்காவுக்கு அழைத்துச் சென்றது

உன் கால் செருப்பு
ஓசையில்
வீடு அமைதியானது

அப்பாவுக்குப் பிடிக்கவில்லை
என்று குட்டை ஸ்கர்ட்டை
அம்மா எதிர்த்தது

இதுதான் நீ என்று
பதிந்துபோய்விட்டது

பெருமாள் கோயிலில்
யாரோ ஒருவன்
கையில் பிடித்துக்கொடுத்தபோது
நடுங்கிய உன் கைகளில்
தெரிந்த நேசத்தை ஏன் ஒளித்துவைத்தாய்
இத்தனை காலமாய்?

-கனிமொழி
posted by சோமி at

Posted in Accounts, Assembly, Assets, Auto, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, Badge, Betrothal, Bhindhi, Bhindi, Bindi, Biosketch, Bride, Bridegroom, Cars, Caste, Ceremony, Checking, Community, Crores, daughter, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, DMK, dynasty, Election, Engagement, EVR, family, Flat, Golusu, Hereditary, Heritage, hierarchy, Hindu, Hinduism, Holy, Home, House, Husband, Indication, Indicator, Jewelry, Jewels, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Karuthu.com, Kolusu, Land, Maran, Marriage, Marry, Metti, Millionaire, Modern, Money, MP, N Siva, Party, Periyar, plot, Politics, Polls, Property, Raajaathi, Raajaathi Ammal, Raajathi Ammaal, Raajathi Ammal, Raasaathi, Raasaathi Ammal, Raasathi, Raasathi Ammaal, Raasathi Ammal, Rajya Sabha, Rajyasabha, Rasaathi, Rasathi, Rasathi Ammal, Rational, Rich, Ring, Ritual, Savings, Shiva, Siva, Stalin, Sticker, Sun, Symbol, Tali, Thaali, Thali, Thiruchy Siva, Thiruma, Thirumavalavan, Thread, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Vituthalai Chiruthaigal, Vituthalai Siruthaikal, Wedding, widow, Wife | 2 Comments »

Narayana Guru – Ezhavas liberation movement

Posted by Snapjudge மேல் மே 11, 2007

ஈழவாஸ் என்பது ஒரு புரட்சிகர மார்க்கம்
வழக்குரைஞர் எஸ்.இளங்கோவன்

நூலிலிருந்து :
கேரள மண்ணில் ஈழவ மக்களிடம் உதை பெற்ற பார்ப்பனியம் தனது முந்தைய பலத்தை இழந்திருந்தது. இந்த காலகட்டத்தில் சவர்ணர்-கள் அவர்ணர்கள் போராட்டம் கேரள மண்-ணில் தீவரமடைந்திருந்தது.

ஸ்ரீநாராயணகுரு நெய்யாற்றின் கரை எனும் ஊரில் உள்ள ஊரூட்டம்பலத்தில் இருந்து பள்ளிக் கூடத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த புலயர்களையும் பள்ளியில் சேர்த்து கல்வி அளிக்க வேண்டுமென்று கோரி-யிருந்தார். அதனை மறுத்த சவர்ணர்கள் புலயர்-களை அடித்து மிகவும் துன்புறுத்தினார்கள். தாக்குதலுக்குள்ளான புலயர் மக்களை அருவி-புறம் வரவழைத்து அவர்களை சமாதானப்-படுத்தினார்.

அய்யன்காளிப்படை என்றோர் மக்கள் குடிப்படை (People Millitia) என்றோர் படை உருவானது. பாடசாலை அனுமதி மறுக்கப்-படும் இடங்களில் இப்படை திருப்பி தாக்குதல் தொடுத்தது. கேரளத்து ஈழவ மக்கள் புலயர்களுக்கு ஆதரவாய் களமிறங்க கேரள பார்ப்பனியம் குலை நடுங்கிப் போனது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த் தப்பட்டோர் உறவு கேரள மண்ணில் வளர்த் தெடுத்தது ஸ்ரீநாராயணகுருவின் முற்போக்கு பார்வை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

கேரளத்தில் “தலித் விடுதலை” என்ற முழக்கம் எழுவதில்லை. ஏனென்றால் ஈழவர்கள் அங்கு தலித்துகளை பாதுகாத்த-தோடு பார்ப்பனி-யத்தை பாடையில் ஏற்றினார்கள்.

Posted in backward, Brahmin, Brahmins, Caste, Casteism, Dalit, Equality, Ezhava, Ezhavas, Guru, hierarchy, Jathi, Jati, Kerala, Liberation, Madam, Matham, Movement, Narayana, Narayana Guru, NarayanaGuru, ostracism, People Millitia, Pulaya, Pulayas, Reform, reformer, SC, Social, Sri lanka, Srilanka, ST, untouchable, Upliftment | Leave a Comment »