Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Hezbollah’ Category

Donors pledge 7.6 billion dollars for Lebanon rebuilding

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

லெபனானின் மீள் கட்டமைப்புக்கு 7.6 பில்லியன் டொலர்கள்

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற அனைத்துலக உதவி வழங்கும் மாநாட்டில், லெபனானை மீண்டும் கட்டியெழுப்ப 7.6 பில்லியன் டொலர்களை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டு அதிபர் ஜாக் ஷிராக் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம், சவுதி அரேபியா ஆகியவையும் உலக வங்கியும் இணைந்து வழங்கும் இந்த உதவி நிதியுதவியாகவும், கடனாகவும் வழங்கப்படவுள்ளது.

இஸ்ரேலுக்கும், ஹெஸ்பொல்லா அமைப்புக்கும் இடையில் கடந்த ஆண்டு நடந்த சண்டையை அடுத்து லெபனான் சாம்பலில் இருந்து மறு அவதாரம் எடுக்கிறது என்று ஜாக் ஷிராக் கூறினார்.

லெபனானுக்கு உதவி வழங்கும்படி அந்த நாட்டுப் பிரதமர் முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார்.

Posted in Ain el-Helweh, Beirut, EU, Fouad Siniora, France, Hezbolla, Hezbollah, Israel, Jacques Chirac, Lebanon, Palestine, Saudi Arabia, US | Leave a Comment »

Hariri’s son blames Syria for assassination of Lebanese minister

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006

லெபனான் தொழில் துறை அமைச்சர் சுட்டுக் கொலை

லெபனான் தொழில்துறை அமைச்சர், பியர் கமாயெல், பெய்ரூட் அருகே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

நகரின் புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு கிறித்தவமக்கள் வாழும் பகுதியில் அவரது வாகனத்தொடரணி சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கிதாரிகள் சுட்டார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.

அமைச்சர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு அவர் இறந்தார். தாக்கியவர்கள் அடையாளம் இன்னும் தெரியவில்லை. முன்னாள் லெபனான் அதிபர், அமின் கமாயெல் அவர்களின் மகனான, பியர் கமாயெல், ஒருமுன்னோடி சிரியா-எதிர்ப்பு கிறித்தவ அரசியல்வாதி ஆவார்.

முன்னர் படுகொலை செய்யப்பட்ட லெபனான் பிரதமர், ரபீக் ஹரிரியின் மகன் சிரியாதான் தனது தந்தையின் படுகொலைக்கும், இந்த கமாயெல்லின் படுகொலைக்கும் பின்னணியில் இருந்திருக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார். சிரியாவிடமிருந்து உடனடியாக எந்த ஒரு கருத்தும் வெளிவரவில்லை.

சிரியாவிற்கு ஆதரவான ஆறு அமைச்சர்கள் லெபனான் அரசிலிருந்து சமீபத்தில் பதவி விலகியுள்ள ஒரு நெருக்கடியான கட்டத்தில் கமாயெல்லின் கொலை வருகிறது.


இராக், சிரியா இடையே மீண்டும் ராஜதந்திர உறவுகள்

இராக்கும் சிரியாவும் தங்களுக்கு இடையேயான ராஜீய உறவுகளை இருபது ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் ஏற்படுத்திக் கொண்டுள்ளன. சதாம் ஹூசேனின் ஆட்சிக் காலத்தின் துவக்கத்தில் இந்த உறவுகள் முறிந்தன.

சிரியா, இராக் இடையில் உடன்பாடு
சிரியா, இராக் இடையில் உடன்பாடு

பாக்தாத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிரியாவின் வெளிநாட்டு அமைச்சர் இந்த முடிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இராக்கில் நடைபெறும் வன்செயல்களைத் தடுக்க சிரியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

சிரியா, இராக் அரசுக்கு உதவ தனது உறுதிப்பாட்டினை காண்பிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் புஷ் அவர்களின் நிர்வாகம் கூறியுள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் எல்லைப் பகுதிகள் மூலம் இராக்குக்குள் ஊடுருவதை தடுக்க சிரியா முன்வர வேண்டுமெனவும் அமெரிக்கா கோரியுள்ளது.

இராக்கில் அமெரிக்காவின் ஈடுபாடு எதிர்காலத்தில் குறையக் கூடிய சூழலுக்கு இராக்கும், சிரியாவும் தங்களைத் தயார் படுத்திக் கொள்வதாக பி பி சியின் ராஜாங்க விவகார செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இராக்குக்கும் இரானுக்கும் இடையேயான ஒரு உச்சிமாநாடு இந்த வார இறுதி நாட்களில் நடைபெறவுள்ளது. இதற்கு சிரியா அழைக்கப்பட்டுள்ளது.

Posted in Assassination, Beirut, Christian, Druse, Druze, Fouad Siniora, Hariri, Hezbolla, Hezbollah, Iran, Iraq, Islam, Lebanon, Mid-east, Middle East, Muslim, Phalange Party, Pierre Gemayel, Rafik Hariri, Saad Hariri, Sheik Hassan Nasrallah, Shiite, Sunni, Syria, terrorist, United States | Leave a Comment »

Study: Cluster Bombs Overwhelmingly Kill, Maim Civilians

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006

கொத்துக் குண்டுகளால் அதிகமான பாதிப்பு பொதுமக்களுக்கே

அபாயகரமான கொத்துக் குண்டு
அபாயகரமான கொத்துக் குண்டு ஒன்று

கொத்துக் குண்டுகளால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் சாதாரண பொதுமக்களே , அதில் மூன்றில் ஒரு பங்கினர் சிறார்கள் என்று ஹண்டிகேப் இண்டர்னேஷனல் என்ற பிரச்சாரம் செய்யும் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

24 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்த அமைப்பு, பரந்த ஒரு பகுதியில் குண்டுகளை தூவும் இந்த ஆயுதம் 11,000க்கும் மேற்பட்ட மக்களை கொன்றோ அல்லது ஊனப்படுத்தியோ இருப்பதாக கண்டறிந்திருக்கிறது.

ஆனால், ஆப்கானிஸ்தான், இராக் மற்றும் வியட்நாம் போன்ற இடங்களிலிருந்து முழுமையான தகவல்கள் கிடைக்காததால், இந்த புள்ளிவிவரம் உண்மையில் இன்னும் பத்துமடங்காக அதிகரிக்கக்கூடும் என்று அது கூறுகிறது.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வெடிக்காத குட்டிக் குண்டுகளை கவனக்குறைவாக நடந்துகொண்டு வெடிக்கச்செய்த சிறுவர்கள் என்று
கூறப்படுகிறது.

Posted in Afghanisthan, China, cluster bombs, Fatal Footprint, Handicap International, Hezbollah, Iraq, Israel, Lebanon, Russia, USA, War | Leave a Comment »

Lebanese Force Enters South Lebabnon after 40 Years

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 17, 2006

தென்லெபனானில் 40 ஆண்டுகளுக்கு பிறகு லெபனானின் அரச இராணுவம் பிரவேசம்

லிட்டனி நதிப் பாலம் மீது முதல் முறையாக செல்லும் லெபனான் இராணுவம்
லிட்டானி நதியைக் கடக்கும் லெபனான் இராணுவம்

லெபானானில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக அரச இராணுவம் தெற்கு லெபனானுக்குள் பிரவேசித்துள்ளது.

லிட்டானி நதி மீதுள்ள தற்காலிக பாலங்கள் மூலமாக இராணுவ வண்டிகளும், துருப்புக்களை சுமந்த வாகனங்களும் சென்ற போது கூடி நின்ற பொது மக்கள் அரிசி தூவியும், மலர்களைத் தூவியும் லெபானான் கொடிகளை அசைத்தும் வரவேற்பு தெரிவித்தார்கள்.

ஹெஸ்பொல்லாவின் கோட்டையாக விளங்கிய இந்தப் பகுதிகளுக்குள் அரச படைகள் நுழைந்த காட்சியை டயரிலிருந்து எமது பிபிசியின் முகவர் விபரித்திருக்கிறார்.

ஹெஸ்பொல்லாக்களை செயலிழக்கச் செய்ய இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் ஐ நா பிரகடனத்திற்கு அமைய,லெபனான் இராணுவம் தென் லெபனானிற்குள் பிரவேசித்துள்ளது.

லெபனானில்-ஒரு நாட்டிற்குள் இன்னொரு நாடு இயங்க இனிமேலும் இடம் இருக்காது என்று, லெபனான் அரசு கூறுகிறது. ஆனாலும் பெய்ரூட்டிலிருந்து எமது பிபிசியின் முகவர் கருத்து வெளியிடும் போது மோதலைத் தவிர்க்க ஹெஸ்பொல்லக்களுக்கும் லெபனான் அரசுக்கும் இடையே ஒரு உடன்பாடு இருப்பது புலனாகிறது என்றும் ஹெஸ்பொல்லாக்கள் தமது ஆயுதங்களை மறைத்து வைப்பது என்றும் லெபனான் அரசு தமது இராணுவத்தின் மூலம் அதிகாரத்தை நிலை நாட்டுவது என்று உடன்பட்டிருப்பது தெரிவதாகவும் எமது முகவர் தெரிவிக்கின்றார்.

Posted in Arms, Hezbollah, Israel, Jordan, Lebanese, Lebanon, Mid-east, Middle East, Syria, Tamil | Leave a Comment »

Ceasefire in Mid-East; UN Agreement on Israel

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006

இஸ்ரேலிய சிப்பாய்கள்
இஸ்ரேலிய சிப்பாய்கள்

போர் நிறுத்தம் வந்தாலும் ஹெஸ்பொல்லாக்களை தேடுவோம் என்கிறார் எகுட் ஒல்மர்ட்

லெபனானில் கிட்டதட்ட ஐந்து வாரங்களாக நடைபெற்ற மோதல்களை போர் நிறுத்தம் முடிவிற்கு கொண்டு வந்து இருந்தாலும், லெபனானில் இருக்கும் ஹெஸ்பொல்லா கொரில்லா அமைப்பின் தலைவர்களை தாம் தேடிப்பிடிப்போம் என்று இஸ்ரேலிய பிரதமர் எகுட் ஒல்மர்ட் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஹெஸ்பொல்லாவிற்கு எதிராக போரிடுவது என்ற முடிவானது, தன்னை பாதுகாக்க இஸ்ரேல் கொண்டு இருக்கும் உறுதிப்பாட்டினை காண்பிக்கிறது என தெரிவித்தார்.

இது போர் என்றும் இஸ்ரேல் தனது பொறுப்புகளில் இருந்து விலகி செல்லாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்த சண்டை ஆரம்பிப்பதற்கு காரணமான, ஹெஸ்பொல்லாவினால் கடத்தி செல்லப்பட்ட தனது இரண்டு வீரர்களை விடுவிக்க தாங்கள் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் என்றும் இஸ்ரேல் பிரதமர் எகுட் ஒல்மர்ட் கூறினார்.

போர் நடந்த முறை குறித்து விசாரணை நடத்த போவதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் அமீர் பேரட்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்கு லெபனானில் ஹெஸ்பொல்லா ஆயுதகுழுவினர் மீண்டும் ஒன்றிணைய இஸ்ரேல் இராணுவம் அனுமதிக்க கூடாது என்றும் அவர் கூறினார்.


தெற்கு லெபனானை நோக்கி மக்கள் படையெடுப்பு

வீடுதிரும்பும் அகதிகள்
வீடுதிரும்பும் அகதிகள்

இஸ்ரேலிய படைகளுக்கும், ஹெஸ்பொல்லாவிற்கும் இடையில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதை அடுத்து, முன்னர் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், தெற்கு லெபனானை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர்.

தங்களது வீடுகளையும் சொத்துகளையும், பார்ப்பதற்காக புறப்பட்டுள்ள மக்களின் கார்களால் பெய்ரூட் மற்றும் சிடானில் இருக்கும் சாலைகள் நிரம்பி காணப்படுகின்றன.

சண்டையின் போது கடுமையான மோதல் இடம்பெற்ற பின்ட் சிபாயில் என்ற கிராமத்திற்கு சென்ற பிபிசி செய்தியாளர் ஒருவர், அங்கு அழிவு தவிர வேறு எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் திரும்பி வந்து கொண்டு இருக்கின்றனர்.

இவர்கள் தமது கார்களின் கூரைகளில் மூட்டை முடிச்சுகள் காணப்படுகின்றன.

சண்டை நிறுத்தம் ஏற்பட்ட பல மணி நேரத்திற்கு பின்னர், இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில், இரண்டு ஹெஸ்பொல்லாவினரை இஸ்ரேலிய வீரர்கள் சுட்டு கொன்றுள்ளனர்.


இஸ்ரேல் மீது காசாவில் இருந்து தாக்குதல்

காசாவில் இஸ்ரேல் பதில் தாக்குதல்
காசாவில் இஸ்ரேல் பதில் தாக்குதல்

லெபனானில் சண்டை நிறுத்தம் ஏற்பட்ட நேரம், காசாவில் இருக்கின்ற தீவிரவாதிகள் இஸ்ரேலிய நகரமான அஷ்கெலான் மீது ராக்கெட்டுளை ஏவி இருக்கின்றனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஷெல் தாக்குதல் நடத்தியதில், மூன்று பாலஸ்தீன பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ராக்கெட்டுகளை ஏவிய தீவிரவாதிகள் தப்பி விட்டதாக பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வாரங்களாக, காசாவில் இருந்து ராக்கெட் ஏவப்படுவதினை தடுத்து நிறுத்த இஸ்ரேல் முயற்சித்து வருகின்றது.

அத்தோடு காசா எல்லைக்கு அருகாமையில் பிடித்து செல்லப்பட்ட தனது இராணுவ வீரர் ஒருவரையும் விடுவிக்க முயற்சித்து வருகின்றது.

சண்டை நிறுத்தம் ஒன்றினை முன் வைத்துள்ள பாலஸ்தீன தரப்பு, இஸ்ரேல் சிறைச்சாலைகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களை சிலரை விடுவித்தால், இராணுவ வீரரை விடுவிப்பதாக கூறியுள்ளது. ஆனால் இதனை இஸ்ரேல் நிராகரித்து விட்டது.

Posted in Attacks, Ban, BBC, Blast, Ceasefire, EU, Hezbollah, Human Rights, Israel, Issue, Jordan, Lebanon, Mid-east, Middle East, News, Ohmert, Tamil, UN | Leave a Comment »

Middle East – Environmental Impact

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 1, 2006

மத்திய கிழக்கு மோதலால் சுற்றுச் சூழல் பாதிப்பு

மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல்களினால் அங்கு ஒரு சுற்றுச் சூழல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

லெபனானுக்கு உட்பட்ட கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள எண்ணைக் கசிவினால் உண்டாகியுள்ள மாசுகள் தொடர்பாக ஐ நா வின் சுற்றுச் சூழல் திட்டம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான மின் நிலையம்
தாக்குதலுக்கு உள்ளான மின் நிலையம்

இஸ்ரேலியத் தாக்குதலுக்கு உள்ளான ஜிய்யேய் மின் நிலையத்திலிருந்து வெளியேறிய எண்ணைக் கசிவு தற்போது 80 கிலோ மீட்டர் வரை பரவியுள்ளது.

பெய்ரூட் நகருக்கு தெற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஜிய்யேய் மின் நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது.

அந்த தாக்குதலிலின் போது முதலில் வந்த தகவல்களின் படி 10,000 டண்கள் மிகதிடமான கச்சா எண்ணை பாதிக்கப்பட்ட தொட்டிக்ளிலிருந்து வெளியானதாக கூற்ப்பட்டது , ஆணால் இறுதியாக 35,000 டண்கள் எண்ணை வெளியேறி இருக்கக் கூடும் என அறியப்படுகிறது.

கடற்கைரையிலிருந்து கடலை நோக்கி இந்த எண்ணை உடனடியாக வேகமாக சென்றது என லெபனானிய சுற்றுச் சூழல் அமைச்சகத்தை சேர்ந்த பெர்ஜ் ஹதிஜன் பிபிசியிடம் தெரிவித்தார்

அழிந்து வரும் பச்சை ஆமைகள்
பாதிக்கப்பட்ட அழிந்து வரும் பச்சை ஆமைகள்

இந்த எண்ணைக் கசிவு கடற் படுகையில் படிந்துள்ளது எனவும் அது அந்தப் பகுதியில் உள்ள டூனா எனப்படும் மீன்களின் இனப்பெருக்த்தை பாதித்துள்ளது என்வும் ஜூலை மாதங்களில் குஞ்சு பொறிக்கும் அழிந்து வரும் இனமான பச்சை ஆமைகளையும் இது பாதித்துள்ளது என்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மத்தியதரைக் கடல் பகுதியில் உள்ள பல வன விலங்குகளுக்கும் இதனால் குறிப்பிட தக்க அளவில் அபாயம் உள்ளதாகவும் ஐ நா வின் சுற்றுச் சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. மோதல் தொடர்ந்தால இது பல் உள்ளூர் வாசிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடும் எனவும் ஐ நா வின் அமைப்பு கூறியுள்ளது.

இந்த எண்ணை கசிவினால் கடல் சார் சுற்றுச் சூழலுக்கு ஏற்படக் கூடிய குறுகிய கால மற்றும் நீண்ட கால தாக்கம் குறித்து கவலை கொண்டுள்ளோம் எனவும் லெபனான் தெரிவித்துள்ளது. ஏனெனில் பல மக்கள் சுற்றுலா மற்றும் மீன் பிடிப்பை தங்களது அடிப்படை வாழ்வாதாரமாக கொண்டுள்ளார்கள் என லெபனானின் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளர்க்ள்

Posted in BBC, Environment, Hezbollah, Israel, Jordan, Lebanon, Mid-east, Tamil | 1 Comment »

Qana Massacre by Israel

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2006

ெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் 34 குழந்தைகள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பலி

மரணமடைந்த சிறார்களில் சடலங்கள்
கானா தாக்குதலில் 34 குழந்தைகள் உட்பட பலர் பலி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான் குண்டு வீச்சில் 50க்கு மேற்பட்ட பொது மக்கள் பலி. அதில் பாதிக்கு மேல் குழந்தைகள், சிறுவர்கள். கானா என்ற கிராமத்தில் உள்ள 3 மாடிக் கட்டடம் மீது இஸ்ரேலியக் குண்டுகள் வீழ்ந்ததில் அந்தக் கட்டடத்தின் நிலவறைக்குள் தஞ்சம் புகுந்திருந்த கிராம மக்கள் மீது கட்டம் இடிந்து வீழ்ந்து மூடியது.

அது ஹெஸ்புல்லா பயன்படுத்தி வந்த பகுதி என்றும் அங்கிருந்து பொது மக்களை விலகும் படி தாங்கள் அறிவித்திருந்தோம் என்றும் இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் அங்கிருந்து வெளியேற முடியாத அளவுக்கு மக்கள் ஒன்றில் பயந்து போயிருந்தார்கள் அல்லது அங்கிருந்து வெளியேறுவதற்கான வசதிகள் அவர்களுக்கு இல்லாமல் இருந்தது என்கிறார் அப்பகுதிக்குச் சென்ற பி.பி.சி. முகவர்.

இந்தத் தாக்குதலை ஒரு கோரமான படுகொலை என்று வர்ணித்த ஹெஸ்புல்லா இதற்கு பதிலடி கிடைக்கும் என்று கூறுகிறது. எல்லைப்புற இஸ்ரேலிய நகரமான கிர்யத்திலுள்ள நமது இன்னோரு முகவர் அப்பகுதி மீது ஹெஸ்புல்லா அடித்த பல கட்டூஸா ஏவுகணைகள் இன்று வந்து வீழ்ந்தன என்கிறார்.


கானாவில் நடந்த தாக்குதலுக்கு இஸ்ரேலிய பிரதமர் வருத்தம்

இஸ்ரேலிய பிரதமர் எஹுத் ஆல்மர்ட்
இஸ்ரேலிய பிரதமர் எஹுத் ஆல்மர்ட்

கானாவில் பொது மக்கள் கொல்லப்பட்டு இருப்பதற்கு இஸ்ரேலிய பிரதமர் எகுட் ஒல்மர்ட் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் சண்டை நிறுத்தத்தினை அறிவிக்க போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அவரது அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

குண்டுத்தாக்குதல் தொடர்பான செய்தி பரவிய உடன், லெபனானுக்கு செல்ல திட்டமிட்டு இருந்த அமெரிக்க அரசுத்துறை செயலர் கொண்டலீசா ரைஸ் தனது பயணத்தினை ரத்து செய்துள்ளார்.

உடனடியாக, எந்தவிதமான நிபந்தனைகளும் அற்ற போர் நிறுத்தம் ஏற்படாமல், தான் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபட போவதில்லை என லெபனான் பிரதமர் ஃபவுட் சினியோரா அறிவித்துள்ளார்.

ஜெருசேலத்தில் இருக்கின்ற அமெரிக்க அரசுத்துறை செயலர் கொண்டலீசா ரைஸ், அப்பாவி மக்கள் கொடூரமாக இறந்துள்ளதற்கு தனது வருத்தத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான் குண்டு வீச்சில் 50க்கு மேற்பட்ட பொது மக்கள் பலி. அதில் பாதிக்கு மேல் குழந்தைகள், சிறுவர்கள்.

கானா என்ற கிராமத்தில் உள்ள 3 மாடிக் கட்டடம் மீது இஸ்ரேலியக் குண்டுகள் வீழ்ந்ததில் அந்தக் கட்டடத்தின் நிலவறைக்குள் தஞ்சம் புகுந்திருந்த கிராம மக்கள் மீது கட்டம் இடிந்து வீழ்ந்து மூடியது.

அது ஹெஸ்புல்லா பயன்படுத்தி வந்த பகுதி என்றும் அங்கிருந்து பொது மக்களை விலகும் படி தாங்கள் அறிவித்திருந்தோம் என்றும் இஸ்ரேல் கூறுகிறது.

ஆனால் அங்கிருந்து வெளியேற முடியாத அளவுக்கு மக்கள் ஒன்றில் பயந்து போயிருந்தார்கள் அல்லது அங்கிருந்து வெளியேறுவதற்கான வசதிகள் அவர்களுக்கு இல்லாமல் இருந்தது என்கிறார் அப்பகுதிக்குச் சென்ற பி.பி.சி. முகவர்.

இந்தத் தாக்குதலை ஒரு கோரமான படுகொலை என்று வர்ணித்த ஹெஸ்புல்லா இதற்கு பதிலடி கிடைக்கும் என்று கூறுகிறது.

எல்லைப்புற இஸ்ரேலிய நகரமான கிர்யத்திலுள்ள நமது இன்னோரு முகவர் அப்பகுதி மீது ஹெஸ்புல்லா அடித்த பல கட்டூஸா ஏவுகணைகள் இன்று வந்து வீழ்ந்தன என்கிறார்


இஸ்ரேலுக்கு உலக நாடுகள் கண்டனம்

தாக்குதலுக்கு உள்ளான கானா நகரம்
கானா நகரில் தாக்கப்பட்ட கட்டிடம்

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு உலகின் பல பாகங்களிலிருந்து கண்டனங்கள் வந்துள்ளன.

அந்த நாட்டுடன் ராஜதந்திர உறவு கொண்டுள்ள மிகச் சில அரபு நாடுகளுக்குள் ஒன்றான ஜோர்டனின் மன்னர் அப்துல்லா இந்தத் தாக்குதலை ஓர் அசிங்கமான குற்றச் செயல் என்றும், சர்வதேச சட்டதிட்டங்களைக் கண்மூடித்தனமாக மீறிய நடவடிக்கை என்றும் கூறியுள்ளார்.

லெபனானிலுள்ள ஐ.நா. பிரதிநிதி உடனடியாக ஒரு விசாரணை தேவை என்றுள்ளர். அரபு லீக் அமைப்பும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைகளுக்குப் பொறுப்பான தலைவர் கவியே சொலனோ அவர்கள் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை எந்தக் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது என்றார்.

பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் பொது மக்களைக் கொல்வது சகிக்க முடியாத ஒன்று என்றதுடன் இஸ்ரேலை பொறுப்பாகச் செயற்படும் படி மீண்டும் விலியுறுத்தினார்.

பிரெஞ்சு அதிபர் ஜக் சிராக், பாலஸ்தீன அதிபர் மஃமுத் அப்பாஸ், எகிப்திய அதிபர் ஹொஸ்னி முபாரக் மற்றும் போப்பாண்டவர் ஆகியோர் உடனடியாகப் போர் நிறுத்தம் தேவை என்று அறை கூவியுள்ளனர்.

Posted in BBC, EU, Hezbollah, Israel, Jordan, Lebanon, Mid-east, News, Ohmert, Qana, Tamil, UN | Leave a Comment »