மாதவன், கிரண் படங்களில் ஆபாசம்-வன்முறை தணிக்கை குழு `ஏ’ சான்றிதழ்
சென்னை, நவ. 22- மாதவன் நடித்த `ரெண்டு’ படம் படப்பிடிப்பு முடிந்து தணிக்கை குழுவுக்கு அனுப் பப்பட்டது. இது குஷ்பு தயாரித் துள்ள படம் ஆகும். சுந்தர் சி. இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் மாதவன், இரு வேடத்தில் நடித்துள் ளார். ஒரு கேரக்டரில் பொருட்காட்சியில் வேலை பார்க்கிறார். இன்னொரு கேரக்டரில் தொடர் கொலை கள் செய்கிறார். கொலை செய்யும் கேரக்டரில் நிறைய வன்முறை இருப்பதாக தணிக்கை குழுவினர் கருத்து தெரிவித்தனர்.
அக் காட்சிகள் படத்துக்கு அவசியம் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப் படத்துக்கு `ஏ’ சான்றிதழ் கொடுத்து ரிலீசுக்கு அனுமதித்தனர். வடிவேலு, ரீமாசென் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.
இது போல் `இது காதல் வரும் பருவம்‘ படத்துக்கும் `ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஹரீஸ்குமார் கதாநாயகனாக வும், லட்சுமி பிரியா கதாநா யகியாகவும் நடித்துள்ளனர். இருவரும் புதுமுகம். கிரண் மாடல் அழகியாக நடித் துள்ளார்.
10-வது வகுப்பு மாணவர் களின் காதல் இதில் சொல்லப் பட்டுள்ளதாம். 15 வயது பிள்ளைகள் பெற்றோரால் கவனிக்கபடாவிட்டால் வழி தவறிப் போவார்கள் என்ற கருத்து காதல், `செக்ஸ்’ போன்றவை கலந்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தில் சில காட்சிகள் ஆபாசமாக இருப்பதாக தணிக்கை குழுவினர் தெரி வித்தனர். இதையடுத்து அதிக மான ஆபாசமென எழு திய காட்சிகளை வெட்டி விட்டு `ஏ’ சான்றிதழுடன் ரிலீசுக்கு அனுமதித்தனர். கஸ்தூரி ராஜா இப் படத்தை இயக்கி உள்ளார்.