Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Gurumurthy’ Category

Convert development process into mass movement: Narendra Modi – Thuglak magazine’s anniversary celebrations in Chennai

Posted by Snapjudge மேல் ஜனவரி 15, 2008

எது மதச்சார்பின்மை?: மோடி விளக்கம்

“துக்ளக்’ ஆண்டுவிழாவில் மோடியை வரவேற்கிறார் “சோ’ எஸ். ராமசாமி.

Dondus dos and donts: துக்ளக் 38-வது ஆண்டு விழா கூட்: “துக்ளக் 38-வது ஆண்டு விழா கூட்டம் – 1”

சென்னை, ஜன. 14: சமுதாயத்தில் அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதுதான் மதச்சார்பின்மை என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

வளர்ச்சித் திட்டங்களை மக்கள் இயக்கமாக மாற்றினால் நாடு வளர்ச்சி பெறும் என்றும் அவர் கூறினார்.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற “துக்ளக்’ பத்திரிகையின் 38-வது ஆண்டு விழாவில் அவர் பேசியது:

நாட்டில் நெருக்கடி நிலை நடைமுறையில் இருந்தபோது தமிழகத்தில் “சோ’ ராமசாமி எழுதிய “இரண்டு கழுதைகள்’ கதை குறித்து எனது நண்பர்கள் மூலம் அறிந்தேன். அப்போதுதான் “சோ’ குறித்து தெரிந்து கொன்டேன்.

தமிழக அரசியலில் “சோ’ ராமசாமி ராஜகுருவாக இருக்கிறார். பாஜக தவறு செய்தாலும் அதை சுட்டிக் காட்ட அவர் தயங்குவதில்லை இதன் மூலம் ஒரு ஜனநாயகத்தை அவர் நிலை நாட்டுகிறார்.

எனக்கு முதல்வர் பதவி கிடைத்துள்ளது என்பதைவிட முதல்வருக்குரிய பணிகளை நான் செய்ய வேண்டும் என மக்கள் என்னை நியமித்துள்ளதாகவே கருதுகிறேன். அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதே எனது கடமை. என்னால் முடிந்தவரை அந்த கடமையை நிறைவேற்றி வருகிறேன்.

என் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை என இங்கு பேசும்போது “சோ’ ராமசாமி குறிப்பிட்டார். எனது குடும்பம் குறித்து யாருக்கும் தெரியாது. ஒரு பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த நான் பள்ளிப் பருவம் முதல் எந்தப் பதவியையும் வகித்ததில்லை. முதல்வர் பதவியேற்கும் வரை முதல்வர் அலுவலகம் தெரியாது. சட்டப் பேரவை எப்படி இருக்கும் என தெரியாது.

முதல்வர் பதவி வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முதல் பதவி. எனவே, நேர்மையான, தெளிவான சிந்தனையுடன் செயல்படுகிறேன். அதனால், மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கிறது.

நான் முதல்வராகப் பதவி ஏற்றவுடன் அனைத்து செயலர்களையும் அழைத்து பேசியபோது, குஜராத்தில் அதுவரை நிலவிய பல்வேறு பிரச்னைகள் குறித்து தெரிய வந்தது.

பெண் கல்வியில் நாட்டிலேயே 20-வது மாநிலமாக குஜராத் இருந்தது. தற்போது பெண்கல்வி அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கை 100 சதவீதமாகியுள்ளது. பள்ளிகளிலிருந்து இடையில் படிப்பை நிறுத்தும் மாணவர்களின் விகிதம், 45 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

குஜராத்தைப் பாதித்த மற்றொரு பிரச்னையான சிசு மரண விகித அதிகரிப்பைக் கட்டுப்படுத்த, “சிரஞ்சீவ்’ என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய “ஜோதிகிராம் திட்டம்’ உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தற்போது 24 மணி நேரமும் தடையற்ற மின் விநியோகம் நடைபெறுகிறது.

மதச்சார்பின்மை: மதச்சார்பின்மை குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற வகையில் மதச்சார்பின்மைக்குப் பல்வேறு விளக்கம் அளித்து வருகின்றனர்.

சிலர் சிறுபான்மையினருக்கு உதவுவது மதச்சார்பின்மை என்கிறார்கள், சிலருக்கு இந்துக்களைத் தாக்குவது மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் பெயரில் தீவிரவாதிகளை ஆதரிப்பது சிலருக்கு மதச்சார்பின்மை என பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

என்னைப் பொறுத்தவரை அனைத்துதரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதுதான் மதச்சார்பின்மை.

குஜராத்தில் பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் முடங்கும் நிலையில் இருந்தன. இவற்றில் முறைகேடுகளுக்கு காரணமான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தேன். அவர்களில் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் உள்ளனர். இதுவும் ஒருவகையில் மதச்சார்பின்மைதான்.

தேர்தல் முடிவு வரும்வரை என்னைப் பற்றியே பல்வேறு ஊடகங்கள் விவாதித்தன. தேர்தல் முடிந்த பின்னர் தற்போது குஜராத் மக்களிடம் என்ன கோளாறு என ஊடகங்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றன.

அமெரிக்கா செல்ல எனக்கு விசா மறுக்கப்பட்டது. ஆனால், தற்போது குஜராத்தை அமெரிக்காவாக உருவாக்கி வருகிறேன்.

எங்கள் கட்சியின் வெற்றிக்கு என்ன காரணம் என்று கேட்கிறீர்கள். ஏழை மக்களை உள்ளடக்கிய, தனியார் பங்கேற்புடன் திட்டங்களை நிறைவேற்றுவதே வெற்றிக்கான காரணியாகும். குறைந்தபட்ச அரசு அதிகபட்ச செயலாக்கம் மூலமே நாட்டின் வளர்ச்சியைப் பெருக்க முடியும். அப்போதுதான் அனைத்து தரப்பு மக்களுக்கும் வளர்ச்சியின் பயன் சென்று சேரும்.

வளர்ச்சிப் பணிகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அப்போதுதான், குஜராத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வளர்ச்சி நாடு முழுவதற்கு விரிவடையும். 21-வது நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக மாறும் என்றார் மோடி.

  • தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் ரவிசங்கர் பிரசாத்,
  • தமிழக பா.ஜ.க. தலைவர் இல. கணேசன்,
  • கட்டுரையாளர் குருமூர்த்தி,
  • ஜெயா ஜெட்லி,
  • திருநாவுக்கரசர் எம்.பி.,
  • அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அவைத்தலைவர் முருகன்,
  • மதிமுக தலைமைக்கழகச் செயலாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்

மற்றும் பலர் அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.

Posted in America, BJP, Cho, Cho Ramaswamy, Cho S Ramasamy, Civil, Criminal, dead, Editor, Ela Ganesan, Gujarat, Gurumoorthy, Gurumurthy, Hindu, Hinduism, Hindutva, Ila Ganesan, Islam, Jaya, Jeya, Killed, Law, MDMK, minority, Modi, Murder, Muslim, Order, Religion, Sarathkumar, Sharathkumar, Thirunavukkarasar, Thirunavukkarasu, Thuglak, Thuglaq, Thuklak, Thuklaq, US, USA, Vai Gopalasami, Vai Gopalsami, Vai Gopalsamy, Vai Kopalsami, Vai Kopalsamy, VaiGo, VaiKo, Visa | 2 Comments »

How CBI let Quattrocchi slip away – Thamizhan Express

Posted by Snapjudge மேல் ஜூன் 15, 2007

தொடர்ந்து கோட்டை விடும் சி.பி.ஐ..!

“போஃபர்ஸ் ஊழலின் கதாநாயகன்’ என்று கூறப்படும் குவத்ரோச்சி, கடந்த 20 வருடங்களாக போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து வருகிறார். “இத்தாலி நாட்டைச் சேர்ந்த இவருக்கும், காங்கிரஸ் தலைவியாக இருக்கும் சோனியா குடும்பத்திற்கும் இடையில் உள்ள நல்லுறவே இதற்குக் காரணம்’ என்று எதிர்க்கட்சிகள் தினமும் “திக் திக்’ அறிக்கைகளை வெளியிடுகின்றன.

1987ல் ஸ்வீடன் நாட்டு ரேடியோ, “போஃபர்ஸ் விவகாரத்தில் இந்திய ஏஜெண்ட்டுகளுக்கு கமிஷன் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று அறிவித்ததில் இருந்தே குவத்ரோச்சியும், போஃபர்ஸýம் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல் இருக்கின்றன. 1990ஆம் ஆண்டு, ஜனவரி 22ஆம் தேதி போஃபர்ஸ் ஊழல் வழக்கில் “முதல் தகவல் அறிக்கை தாக்கல்’ செய்யப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் உள்ள 12 செக்ஷன்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கையில் குவத்ரோச்சியின் பெயர் இல்லை! பிறகு இந்த ஊழல் விவகாரம் குறித்த டாக்குமென்டுகளை வாங்குவதற்கு சி.பி.ஐ., ஸ்வீடன் நாட்டு நீதிமன்றங்களில் பெரும் போராட்டத்தை நடத்தியது.

கடைசியில் ஜோகிந்தர் சிங் சி.பி.ஐ.யின் டைரக்டராக இருந்தபோது அந்த டாக்குமென்டுகள் எல்லாம் கிடைத்தன. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து, ஏழு வருடத்திற்குப் பிறகே (21.1.1997) இந்த டாக்குமென்டுகளை சி.பி.ஐ.யால் வாங்க முடிந்தது.

அப்படிக் கிடைத்த டாக்குமென்டுகளில் 1987ஆம் ஆண்டு, நவம்பர் 4ஆம் தேதி போஃபர்ஸ் கம்பெனியின் தலைவராக இருந்த மார்ட்டின் ஆர்ட்போவிடம் ஸ்வீடன் போலீஸ் கைப்பற்றிய டைரி முக்கியமானது.

அதில்தான் முதன்முதலில் குவத்ரோச்சியின் பெயர் ஆதாரபூர்வமாக, அதாவது “க்யூ’ (ண) என்ற எழுத்தின் வடிவத்தில் இடம்பெற்றிருந்தது. அத்துடன் ஏறக்குறைய 49 சாட்சிகளை விசாரித்திருந்த சி.பி.ஐ., “குவத்ரோச்சி ஊழல் செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியுள்ளார்’ என்ற முடிவுக்கு வந்தது.

இதன் அடிப் படையில்தான் குவத்ரோச்சியும், “போஃபர்ஸ் ஊழல் வழக்கில் குற்றவாளி’ என்று 1999ல் சேர்க்கப்பட்டார். ஆக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததில் இருந்து ஒன்பது வருடங்கள் கழித்தே குவத்ரோச்சி குற்றவாளி என்று சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அதுவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நடைபெற்ற போதுதான் இந்த முடிவுக்கு வந்தது சி.பி.ஐ. ஆனால் எஃப்.ஐ.ஆர். போட்டதில் இருந்து ஏறக்குறைய மூன்று வருடங்கள் இந்தியாவில்தான் குவத்ரோச்சியும், அவரது மனைவியும் இருந்தார்கள்.

ஸ்விஸ் நீதிமன்றத்தில் டாக்குமென்டுகள் கேட்டு சி.பி.ஐ. வழக்குத் தொடர அந்த நேரத்தில், “என் வங்கிக் கணக்குகள் சம்பந்தப்பட்ட தகவல்களைக் கொடுக்கக் கூடாது’ என்று திடீரென்று அப்பீல் செய்தார் குவத்ரோச்சி.

அதைச் செய்துவிட்டு இரவோடு இரவாக இந்தியாவை விட்டு எஸ்கேப் ஆன குவத்ரோச்சியை இதுவரை பிடிக்க முடியவில்லை. டெல்லி நீதிமன்றம் குவத்ரோச்சியை அரெஸ்ட் செய்ய வாரண்ட் பிறப்பித்துவிட்டது. மலேஷியாவில் ஒரு முறை குவத்ரோச்சி மாட்டிக் கொண்டார்.

ஆனால் இந்தியாவிற்கும், மலேஷியாவிற்கும் “எக்ஸ்டிரடிஷன் ட்ரீட்டி’ இல்லை என்பதை சுட்டிக்காட்டி, குவத்ரோச்சியைத் தர மறுத்தது அந்நாட்டு நீதிமன்றம். இதனால் மலேஷியாவிலும் கோட்டைவிட்டது சி.பி.ஐ. இந்நிலையில் தன் மீது போடப்பட்ட “அரெஸ்ட் வாரண்ட்டை’ எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார் குவத்ரோச்சி.

ஆனால், “நீங்கள் இங்கு வந்து ஸ்பெஷல் ஜட்ஜ் முன்பு ஆஜர் ஆகுங்கள்’ என்று ஒரு தேதியை ஃபிக்ஸ் பண்ணி உத்திரவிட்டது நீதிமன்றம். ஆனால் நம் நாட்டின் உச்சநீதிமன்றத்தையும் மதித்து இங்கு வரவில்லை இந்த போ ஃபர்ஸ் குற்றவாளி.

இதற்கிடையில் தற்போது அர்ஜெண்டினாவில் அரெஸ்ட் செய்யப்பட்ட குவத்ரோச்சியையும் இந்தியா கொண்டு வர முடியாமல் கோட்டை விட்டிருக்கும் சி.பி.ஐ., ஒரு கமிஷன் ப்ரோக்கர் என்ற ஸ்தானத்தில் இருக்கும் குவத்ரோச்சியை கடந்த 20 வருடங்களாகப் பிடித்து இந்திய நாட்டின் சட்டத்தின் முன்பு நிறுத்த முடியாமல் தவிக்கிறது.

இதைப் பார்க்கும்போது அரசியல்வாதிகள் அல்லது ஆட்சியில் இருப்பவர்களின் ஆதரவு இல்லாமல் இது நடக்குமா என்ற கேள்வி எழுகிறது. “நாட்டின் ப்ரீமியர் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்ஸி’ என்று சொல்லப் படும் சி.பி.ஐ. ஒரேயொரு குற்றவாளியைக் கைது செய்ய 20 வருடங்கள் அலைகிறது என்றால் “நம்மூர் ஜனநாயகத்திற்கு’ ஒரு சபாஷ் போட வேண்டியதுதான்!

வர்மா

—————————————————————————————

நிர்பந்தத்தினால் உருவான “பாரத’ விசுவாசம்!

எஸ். குருமூர்த்தி

“”இப்போது என்னுடைய விசுவாசம் பெரிய குடும்பத்துக்குச் சொந்தம்; ஆம், பாரதம் எனது நாடு; எனது மக்கள், என்னைத் தங்களில் ஒருத்தியாக பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார்கள்”.

ஹாலந்து நாட்டின் டில்பர்க் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு ஜூன் 11-ம் தேதி உரை நிகழ்த்தியபோது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மனம் நெகிழ்ந்து கூறியவை இவை.

“”நேரு-இந்திரா” குடும்பம் என்றாலே இந்திய மக்களுக்கு தனி பாசம். அதிலும் “”வெளிநாட்டவர்” என்றால் தனி மரியாதை வேறு. எனவேதான், இத்தாலியில் பிறந்த அந்தோனியா மைனோ என்ற இளம் பெண்ணை, “”சோனியா” என்ற நாமகரணத்துக்குப் பிறகு இந் நாட்டின் “”முதல் குடும்பத்து” மருமகளாக எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள்.

வேறு எந்த நாட்டைச் சேர்ந்த மக்களாக இருந்தாலும் -அது சோனியா பிறந்த இத்தாலியாகவே இருந்தாலும் -நாட்டை ஆளும் குடும்பத்தில் “”வெளிநாட்டவர்” எப்படி நுழையலாம் என்று கேள்வி கேட்டு ஆட்சேபித்திருப்பார்கள்.

ஆம், சோனியா சொன்னது உண்மைதான்; சோனியா யார் என்ற பூர்வோத்திரமே தெரியாமல் -அதைத் தெரிந்து கொள்வது அவசியம் என்ற எண்ணமே இல்லாமல் -அவரை மனதார வரவேற்றார்கள் நம் மக்கள். அப்படி தாராள மனம் படைத்த இந்தியர்களுக்கு அவர் காட்டிய விசுவாசம் எப்படிப்பட்டது?

1968-லிருந்தே இந்தப் புராணம் தொடங்குகிறது. இன்றைக்கு இச் செய்தித்தாளைப் படிக்கும் உங்களில் பெரும்பாலானவர்கள் அப்போது தாயின் மடியில் பச்சைக் குழந்தைகளாக இருந்திருப்பீர்கள்!

இந்திய மக்களின் அன்புக்கும், விசுவாசத்துக்கும் ஏகபோக குத்தகைதாரர்களான “”முதல் குடும்பத்தில்” மூத்த மருமகளாக அடியெடுத்து வைத்திருந்தாலும், இந்த நாட்டின் “”குடிமகளாக” தன்னைப் பதிவு செய்துகொள்ளக்கூடாது என்பதில் 16 ஆண்டுகள் உறுதியாக இருந்தவர்தான் சோனியா.

ராஜீவ் காந்தியைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் எத்தனை உறுதியாக இருந்தாரோ, அத்தனை உறுதியாக இருந்தார் இந்தியாவின் குடிமகளாக ஆகிவிடக்கூடாது என்பதிலும்! இத்தாலியக் குடியுரிமையை விட்டுவிட்டு இந்தியக் குடியுரிமை பெறுவதைத் தாழ்வாக நினைத்ததால்தானே இந்த உத்தி!

“”நேரு-இந்திரா” குடும்பத்தின் மருமகளாகிவிட்ட மகிழ்ச்சியிலோ, இந்தியர்கள் காட்டிய மிதமிஞ்சிய பாசத்தில் திக்குமுக்காடியோ, இந்தியக் குடிமகளாகப் பதிவு செய்துகொள்ளும் “”சாதாரணமான” விஷயத்தை அவர் மறந்துவிடவில்லை!

திருமணம் ஆன நாள் முதலே அவர் தன்னை இந்தியராகப் பதிவு செய்து கொள்ள விரும்பவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல, 16 ஆண்டுகள் அவர் விரும்பவில்லை.

இது ஏதோ ஒருமுறை முடிவு எடுத்து மறந்துவிட்ட விஷயமல்ல. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை திரும்பத்திரும்ப இதே முடிவை – இந்தியக் குடியுரிமை பெறக்கூடாது என்கிற முடிவை – எடுத்திருக்கிறார் சோனியா!

இந்தியர் அல்லாத ஒருவர் இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்க விரும்பினால் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை விண்ணப்பித்து, தன்னை வெளிநாட்டவர் என்பதைத் தொடர்ந்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இந்தியாவிலேயே தொடர்ந்து வசிப்பது, பிரதமரின் குடும்பத்தில் மருமகளாகவே இருப்பது என்பதையெல்லாம் தீர்மானித்த சோனியா காந்தி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி கோரி விண்ணப்பித்து வந்தார்.

முதலில் 1968-லும் பிறகு 1973-லும், பிறகு 1978-லும் கடைசியாக 1983-லும் இத்தாலியக் குடியுரிமையுடன் நம் நாட்டில் “”விருந்தாளி”யாக இருப்பதற்கு அனுமதி கேட்டுப் பெற்று வந்தார் சோனியா. சுலபமாக பாரத நாட்டுக் குடியுரிமைப் பெற்றிருக்கலாமே. எனக்கு அது வேண்டாம் என்கிற எண்ணம்தானே அவரை விருந்தாளியாக்கியது! ஆனால் 1983-ல் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்து, 1984 ஏப்ரல் 30-ல் அதைப் பெற்றார்.

இந்தியர்களின் பெருந்தன்மையை ஏற்று இந்தியக் குடிமகளாக வேண்டும் என்ற முடிவை, 16 ஆண்டு காலத்துக்குப் பிறகு சோனியா காந்தி ஏன் திடீரென எடுத்தார்? இந்திய அரசியலைப் பின்பற்றுகிறவர்களுக்கு இது எளிதில் புரிந்திருக்கும்.

1980-ல் நடந்த விமான விபத்தில் சஞ்சய் காந்தி இறந்த பிறகு, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக ராஜீவ் காந்தி நியமனம் பெற்றார். 1985 பொதுத் தேர்தலுக்குப் பிறகு மத்திய அரசில் பிரதமருக்கு அடுத்த இடம் ராஜீவ் காந்திக்குத்தான் என்ற நிலைமை உருவானது.

வெளிநாட்டு குடியுரிமை பெற்றவரின் கணவர் இந்திய அரசில் அமைச்சராவதா என்ற சர்ச்சை மூண்டுவிட்டால் என்னாவது என்ற கவலையில், இந்தியக் குடியுரிமையை ஏற்றார் சோனியா காந்தி.

இந்தியாவின் மீது சோனியாவுக்கு இருந்த அன்போ, வந்தாரை வரவேற்கும் இந்திய நாட்டவரின் பரந்தமனத்தின் மீது ஏற்பட்ட பாசமோ அவரை இந்த முடிவை எடுக்கவைக்கவில்லை. “”ஆட்சி அதிகார” கட்டிலில் தனது கணவர் ஏறப்போகிறார், அவர் மூலம் தனக்கும் அந்த “”அதிகாரம்” கிட்டும் என்ற எதிர்பார்ப்பில்தான் இந்தியக் குடியுரிமையைப் பெற அவர் முன்வந்தார்.

இருந்தாலும் ஆம்ஸ்டர்டாம் நகர மக்களிடையே பொது நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார், அதிகாரத்தின் மீது தனக்கு எப்போதும் ஆர்வம் இல்லை என்று!

இந்தியராகக் குடியுரிமை பெறுவதையே விரும்பாமல் 16 ஆண்டுகள் தள்ளிப்போட்டேன் என்று அவர் அந்தக் கூட்டத்தில் பேசவில்லை.

இந்தியக் குடிமகளாக மனுச் செய்தபோதுகூட எனது பெயரை “”அந்தோனியா மைனோ காந்தி” என்றும் “”சோனியா” என்பது புனைபெயர் என்றும் எழுதினேன்; இன்றுவரை அந்தோனியா மைனோ என்கிற பெயரைக்கூட நான் மாற்றிக் கொள்ளவில்லை என்று அவர் இனி எங்கும் சொல்லப் போவதும் இல்லை!

இத்தாலிய தேசிய சட்டப்படி ராகுல் காந்தியும், பிரியங்கா வதேராவும் (இத்தாலிய தாய்க்குப் பிறந்ததால்) இத்தாலிய குடிமக்கள்தான் என்பதையும், அது அழிக்க முடியாமல் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பதையும் அவர் எப்போதும் எவரிடத்திலும் சொல்லமாட்டார்.

இந்த உண்மைகளைப் பேசுபவராக இருந்தால், டில்பர்க் பல்கலைக்கழகத்தில் அப்படி தனது விசுவாசம் குறித்து அவர் பேசியிருக்கவே மாட்டார். அவர் என்ன பேசினாரோ அதுதான் “”பதிவு செய்யப்பட்ட உண்மை”; ஆனால் அவர் எதைப் பேசாமல் மறைத்தாரோ அதுதான் “”அப்பட்டமான உண்மை”!

இதிலிருந்து அறியப்படுவது, சோனியா காந்திக்கு இந்தியா மீது விசுவாசம் -16 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகே வந்தது! அதுவும் கட்டாயத்தினால் – விருப்பப்பட்டு அல்ல!

Posted in abuse, Affiliations, Airforce, Antonia, Antonia Maino, Argentina, Arms, Army, Banks, BJP, Bofors, Bombs, Bribery, Bribes, CBI, Central Bureau of Investigation, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Corruption, Deals, defence, Defense, Express, extradition, Fairfax, Gurumoorthi, Gurumoorthy, Gurumurthi, Gurumurthy, Holland, Indira, Indra, Italy, Judge, Justice, kickbacks, Law, Maino, Maintenance, Meino, Military, Money, Nationality, Navy, Nehru, nexus, Order, Politics, Power, prosecutor, Quatrocchi, Quatrochi, Quattrocchi, Quattrochi, Rajeev, Rajeev Gandhi, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, Rao, Rich, SC, Sonia, Sweden, Tanks, Weapons | 1 Comment »

India’s Ruling Coalition Nominates Pratibha Patil for President

Posted by Snapjudge மேல் ஜூன் 14, 2007

பதுமை அல்ல குடியரசுத் தலைவர்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

நாட்டின் 12-ஆவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

குடியரசுக்கான அழகுப் பதுமை என்று குறைத்துக் கூறிவிட முடியாது இந்தப் பதவியை!

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இது உறுதி செய்யப்பட்டே வந்திருக்கிறது. கடந்த காலங்களில் பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் மறைமுகமாகவும் நேரடியாகவும் மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.

விடுதலைக்குப் பின் ராஜாஜியைக் குடியரசுத் தலைவராக்க நேரு விரும்பினாலும் காங்கிரஸ் தலைவர்கள் பலர், ராஜேந்திர பிரசாத்தையே விரும்பினர்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியே ராஜேந்திர பிரசாத்தை அறிவிக்க, நேருவும் ஏற்றுக்கொண்டு 12 ஆண்டுகள் பதவியில் இருந்தார். இவருக்குக் கிடைத்த இரண்டாவது வாய்ப்பு வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை.

ஹிந்து சீர்திருத்த மசோதாவைப் பிரதமர் நேரு கொண்டுவந்தபோது ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார் ராஜேந்திர பிரசாத். மசோதாவில் குறிப்பிட்ட மாற்றத்தை நேரு செய்ய, டாக்டர் அம்பேத்கர் பதவி விலகினார்.

ராஜேந்திர பிரசாத் துவாரகை சென்றபோது மதரீதியாகக் குடியரசுத் தலைவர் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று நேரு தடுத்ததும் பிரச்னைகளை எழுப்பின.

டாக்டர் இராதாகிருஷ்ணனும் இந்திரா காந்தியும் பொறுப்பில் இருந்தபொழுது கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன. பின் வந்த கல்வியாளர் ஜாகீர் உசேன் இரு ஆண்டுகளே பொறுப்பிலிருந்து மறைந்துவிட்டார்.

1969 இல் நீலம் சஞ்சீவ ரெட்டியை எதிர்த்து நின்ற வி.வி. கிரி வெற்றி பெற முழு முயற்சிகளை இந்திரா காந்தி மேற்கொண்டார்.

முதன்முதலாக இரண்டாவது விருப்ப வாக்குகள் என்ற அடிப்படையில் கிரி வெற்றி பெற்றார். இதனால் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது.

கிரிக்குப் பின் இந்திரா காந்தியின் விருப்பத்தின்பேரில் பதவிக்கு வந்தார் பக்ருதீன் அலி அகமது. அவர் காலத்தில்தான் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். உரிமைகள் மறுக்கப்பட்டன.

ஜனதா கூட்டணி ஆட்சிக் காலத்தில் பதவிக்கு வந்த சஞ்சீவ ரெட்டி, பிரதமரான மொரார்ஜி தேசாய்க்கு விரோதமாகச் செயல்பட்டார் என்ற விமர்சனமும் எழுந்தது.

ரெட்டிக்குப் பின் ஜெயில்சிங். இவர் காலத்தில் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டு, ராஜீவ் காந்தி பிரதமரானார். இவருக்கும் ராஜீவ் காந்திக்கும் அஞ்சல் துறை மசோதா – 1986 தொடர்பாகப் பிரச்னை ஏற்பட்டது.

ஜெயில்சிங்குக்கு ராஜீவ் அரசு தெரிவிக்க வேண்டிய அரசு பரிபாலனம் சம்பந்தமான செய்திகளைத் தெரிவிக்கவில்லை என்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தை ராஜீவ் காந்தி மீறிவிட்டார் என்றும் மோதல்கள் நடந்தன.

ராஜீவ் மீது போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு, ஏனைய குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சியினர் ஜெயில்சிங்கிடம் வழங்கிய மனு நிலுவையில் இருந்தபோது, பிரதமர் ராஜீவை ஜெயில்சிங் நீக்குவார் என்ற வதந்திகள் எழுந்தன.

சீக்கியரான ஜெயில்சிங் 1984 இல் நடைபெற்ற சீக்கிய கலவரங்களை ஒட்டி அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொண்டது ராஜீவ் காந்திக்குப் பிடிக்கவில்லை.

ஜெயில்சிங்குக்குப் பின் ஆர். வெங்கடராமன். இவர் காலத்தில்தான் வி.பி. சிங்கின் கூட்டணி அமைச்சரவை அமைந்ததும் கவிழ்ந்ததும். அப்போது தேசிய அரசு அமைக்கலாமா என்ற விவாதங்களும் எழுந்தன.

இவர் காலத்தில் சந்திரசேகர் தலைமையிலான குறுகிய கால அரசாங்கம், “அதர்வைஸ்’ என்ற சொல்லைக் கொண்டு பிரிவு 356-ஐ பயன்படுத்தித் தமிழகத்தில் திமுக அரசைக் கலைக்கச் செய்தது.

ராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து நரசிம்மராவ் பிரதமர் ஆனார். புதிய பொருளாதாரத் திட்டங்களுக்கு அடிகோலப்பட்டது. சங்கர் தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன் எனப் பொறுப்புக்கு வந்தனர். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நரசிம்ம ராவ் ஆட்சியைக் கண்டித்தார் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா.

பிகார், உத்தரப்பிரதேச அரசுகளைக் கலைக்கும் வாஜ்பாய் அரசின் தீர்மானங்களைத் திருப்பி அனுப்பினார் கே.ஆர். நாராயணன்.

கலாமின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ல் முடிவடைகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த ராஜாஜியும் கலாமும்தான் பதவியிலிருந்து வெளியேறும்போது தங்களுடைய உடைமைகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வராதவர்கள் என்பதன் மூலம் தமிழகத்துக்குப் பெருமை சேர்ப்பவர்களாக இருப்பார்கள்.

குடியரசுத் தலைவரின் அதிகாரங்களின் தன்மை என்ன? இதுவரை நடந்த நடைமுறைகளும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பார்வையிலும் வெறும் “ரப்பர் ஸ்டாம்ப்’ மாதிரி இருந்தாலும், பிரதமர் மற்றும் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் அவர்.

ஐந்து ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ. 50 ஆயிரம் ஊதியத்துடன் வசதியான வாழ்க்கை, சிம்லா, ஹைதராபாதில் அரண்மனை போன்ற பங்களாக்கள் போன்ற சகல வசதிகளுடன், முப்படைகளின் தளபதி, நாட்டின் இறையாண்மையைக் காக்கும் பாதுகாவலர், முதல் குடிமகன் எனப் பல பெருமை.

எனினும், பிரதமர் தலைமையில் இருக்கின்ற அமைச்சரவை வழங்குகின்ற ஆலோசனையின் பேரில்தான் அவர் இயங்குகிறார்.

பல நேரங்களில் நிலையற்ற அரசுகள் மத்தியில் அமையும்போது குடியரசுத் தலைவரின் பங்களிப்பு முக்கியமாகக் கருதப்பட்டது.

ஜனதா ஆட்சி விழுந்தவுடன் சரண்சிங்கைப் பதவி ஏற்க சஞ்சீவ ரெட்டி அழைத்ததும், ’96 தேர்தலுக்குப் பின் வாஜ்பாயை ஆட்சி அமைக்க அழைத்ததும் அந்தப் பதவியின் அதிகார மேலாண்மையை வெளிப்படுத்தின.

பிரதமர்களான நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் போன்றவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளே குடியரசுத் தலைவர் என்பவர் பதுமை அல்ல என்பதைத் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு விருப்பத்திற்கேற்றவாறு மாநில அரசுகளைக் கலைத்தாலும் நாடாளுமன்றத்தில் யாருக்கு ஆதரவு அதிகம் என்பது போன்ற நெருக்கடியான காலத்தில் சர்வ அதிகாரமிக்கவராக மாறுகிறார் குடியரசுத் தலைவர்.

குடியரசுத் தலைவர் மாளிகை போன்று 200 ஆயிரம் சதுர அடி கொண்ட வசிப்பிடமும், மொகல் தோட்டத்துடன் 13 ஏக்கர் பரப்பளவுள்ள இருப்பிடமும் உலகில் எந்த நாட்டின் அதிபருக்கும் கிடையாது.

ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் மாளிகையின் 350 அறைகளில் ஒரேயொரு அறையைத்தான் பயன்படுத்தினார். (அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில்கூட 132 அறைகள்தான் உள்ளன.) இவ்வளவு வசதிகளையும் பெறப் போகும் 12-ஆவது குடியரசுத் தலைவர் யார் என்பது இன்றைய கேள்வி.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தங்கள் வேட்பாளராக பிரதிபா பாட்டீலை அறிவித்துள்ளது காங்கிரஸ் கூட்டணி.

வெற்றி பெற்றால் நாட்டின் மிக உயர்ந்த பதவியை அலங்கரிக்கப்போகும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெறுவார் இவர்.

எதிரணியில் சுயேச்சை வேட்பாளராகத் தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் நிறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம்.

தேர்தல் சதுரங்கத்தில் வென்று குடியரசுத் தலைவர் மாளிகைக்குக் குடியேறப் போகும் பெருந்தகையாளர், நாட்டின் நலனையும் பன்மையில் ஒருமையான இந்தியாவையும் தொலைநோக்கோடு கொண்டுசெல்ல வேண்டியதுதான் இன்றைய தேவை.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்.)


தேர்தல்களில் தோல்வியே காணாதவர் பிரதிபா பாட்டீல்!புது தில்லி, ஜூன் 15: குடியரசுத் தலைவர் பதவிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள் ஆதரவில் நிறுத்தப்படும் பிரதிபா பாட்டீல் (72) தேர்தல்களில் தோல்வியே அறியாதவர். ஆண்கள் மட்டுமே வகித்துவந்த குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரிக்கப் போகும் முதல் பெண்மணி.மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரதிபா எந்த அரசியல் சர்ச்சையிலும் சிக்காதவர். வழக்கறிஞர். கல்லூரி நாள்களில் சிறந்த டேபிள் டென்னிஸ் ஆட்டக்காரர்.ஜல்காவோன் மாவட்டத்தில் 1934 டிசம்பர் 19-ம் தேதி பிறந்தார். எம்.ஏ. எல்.எல்.பி. பட்டம் பெற்றார். படித்து முடித்ததும் அதே நகரில் வழக்கறிஞராகத் தொழில் செய்தார்.மகாராஷ்டிர சட்டப் பேரவை உறுப்பினராக 1962 முதல் 1985 வரை பதவி வகித்தார். நகர்ப்புற வளர்ச்சி, வீடமைப்பு, கல்வி, சுற்றுலா, சட்டமன்ற நடவடிக்கைகள்துறை, பொது சுகாதாரம், சமூக நலம், கலாசாரத்துறை ஆகியவற்றில் அமைச்சராகப் பணி புரிந்தவர். துணை அமைச்சராக முதலில் அமைச்சரவையில் இடம் பெற்றவர், காபினட் அந்தஸ்துள்ள அமைச்சராக நியமனம் பெறும் அளவுக்குத் திறமையாகப் பணியாற்றினார்.மகாராஷ்டிர முதலமைச்சராக சரத் பவார் 1979 ஜூலையில் பதவி வகித்தபோது, எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியவர் பிரதிபா பாட்டீல்.1985-ல் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகு மாநிலங்களவை துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 நவம்பர் 18 முதல் 1988 நவம்பர் 5 வரை அப்பதவியில் இருந்தார். இதே காலத்தில் நாடாளுமன்றத்தின் உரிமைக்குழு தலைவராகவும் இருந்தார்.1988 முதல் 1990 வரை மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவி வகித்தார்.1991-ல் அமராவதி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.சட்டப் பேரவை, மக்களவை ஆகியவற்றுக்குப் போட்டியிட்டபோதெல்லாம் வெற்றியே கண்டவர் பிரதிபா.மக்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிந்த பிறகு அரசியலிலிருந்தே ஓய்வு பெற்றவர் போல சற்று ஒதுங்கி இருந்தார். பிறகு தேர்தல் பிரசாரத்தின்போது தீவிரமாக ஈடுபட்டார்.2004 நவம்பரில் கட்சித் தலைமையே அவரை அழைத்து ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமித்தது.குடும்ப வாழ்க்கை: பிரதிபா பாட்டீலுக்கு 1965 ஜூலை 7-ம் தேதி திருமணம் நடந்தது. கணவர் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத். சிறந்த கல்வியாளர். இத் தம்பதியருக்கு ஜோதி ரதோர் என்ற மகளும், ராஜேந்திர சிங் என்ற மகனும் உள்ளனர்.பிரதிபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத், அமராவதி மாநகராட்சியின் முதல் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விளையாட்டுத்துறையிலும் கல்வித்துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஷெகாவத் 1985-ல் மகாராஷ்டிர பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பில் பிரதீபா பாட்டில் போட்டி

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளராக ராஜஸ்தான் மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் பிரதிபா தேவிசிங் பாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இதை அறிவித்தார் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி.

பிரதிபா பாடீலை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்திருப்பது, இந்தியக் குடியரசின் 60-வது ஆண்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார் சோனியா.

சட்டத் துறையில் பட்டம் பெற்ற பிரதிபா பாட்டில் 72 வயதானவர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அவர், தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார்.
மகாரஷ்டிர மாநிலத்தின் காபினட் அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும், நாடாளுமன்ற மேலவை துணைத் தலைவராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.

உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் உள்பட காங்கிரஸ் பரிந்துரைத்த பெயர்களை இடதுசாரிக் கட்சிகள் நிராகரித்ததை அடுத்து, பிரதிபா பாடீலுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கபடுவதற்கான ஒரு துவக்கமாக தான் கருதுவதாக தமிழக முதல்வர் கருணாநிதி கருத்து வெளியிட்டுள்ளார்.


பிரதிபா பாட்டீல், இந்தியப் பெண்களுக்கு கெüரவம்!நீரஜா செüத்ரிஉங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே!இந்தியா சுதந்திரம் பெற்ற 60-வது ஆண்டில், குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு “”பெண்ணை”த் தேர்வு செய்திருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று சோனியா காந்தி வர்ணித்துள்ளார்.நான்கு சுவர்களுக்குள் அடைந்துகிடந்த பெண் இனத்துக்கே பெருமை தேடித்தரும் வகையில், நாட்டின் உயர்ந்த பதவிக்கு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.இத் தேர்வு இப்படி சுபமாக முடிந்திருந்தாலும், காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள் ஆகிய முத்தரப்பும் அவரை முதல் விருப்பமாகத் தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.யார் யாரின் பெயர்களையோ வரிசையாகச் சொல்லி, இவர்களுக்குப் பிடிக்கவில்லை, அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று கழித்துக் கட்டி, கடைசியில் எப்படியோ தேர்வு செய்யப்பட்டவர்தான் அவர் என்பதில் சந்தேகமே இல்லை.”சிவராஜ் பாட்டீலைத்தான் தேர்வு செய்ய வேண்டும்’ என்று சோனியா காந்தி கூற, “கூடவே கூடாது’ என்று இடதுசாரிகள் விடாப்பிடியாக எதிர்க்க அவரைக் கைவிட நேர்ந்தது.அப்துல் கலாமை எப்படி தேர்ந்தெடுத்தார்களோ அதே போலத்தான் பிரதிபாவையும் தேர்வு செய்திருக்கிறார்கள்.2002-ல் இதே போன்ற சூழலில் அப்போதைய குடியரசு துணைத் தலைவர் கிருஷ்ணகாந்த்தான் குடியரசுத் தலைவர் ஆவார் என்று நம்பப்பட்டது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய்கூட கிருஷ்ண காந்திடமே, “”நீங்கள்தான் வேட்பாளர்” என்று கூறியிருந்தார்.ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே ஒரு பிரிவினர் அவரைக் கடுமையாக நிராகரித்ததால், சர்ச்சைக்கு அப்பாற்பட்டவரான அப்துல் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். (கிருஷ்ண காந்த் அந்த அவமானத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலேயே சில வாரங்களுக்கெல்லாம் மரணம் அடைந்தார்.)குடியரசுத் தலைவராக வரவேண்டியவரின் நேர்மை, கல்வி, அனுபவம், சேவை, நடத்தை ஆகியவற்றை ஒப்புநோக்கி, விருப்பு, வெறுப்பு இல்லாமல் விவாதம் நடத்தி தேர்வு செய்திருந்தால் பிரதிபாவை கடைசியாகத் தேர்வு செய்ததைக் கூட குறையாகச் சொல்ல முடியாது.ஆனால் கலாமும் சரி, பிரதிபாவும் சரி முதல் தேர்வு அல்ல. இதற்கு மூல காரணம் கூட்டணி அரசு என்ற நிர்பந்த அரசியல் சூழலே.அர்ஜுன் சிங் வேண்டாம் என்று சோனியாவும், சிவராஜ் பாட்டீல், சுசில் குமார் ஷிண்டே, கரண் சிங் வேண்டாம் என்று இடதுசாரிகளும் நிராகரித்த பிறகு, “வேட்பாளர் பெண்ணாக இருந்தால் எப்படி?’ என்று கேட்கப்பட்டது.

அப்போதும்கூட பிரபல காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே, மோஷினா கித்வாய் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக பிரதிபா தேர்வு செய்யப்பட்டார். அவருடைய கணவர் தேவிசிங் ஷெகாவத், சீகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜஸ்தானியர், பைரோன் சிங் ஷெகாவத்தைப் போலவே தாக்குர் சமூகத்தவர் என்றதும் பிரதிபாவுக்கு ஒப்புதல் கிடைத்தது.

சொல்லப் போனால், வேட்பாளராக பிரதிபா தேர்ந்தெடுக்கப்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அல்ல, பைரோன் சிங் ஷெகாவத்தான் காரணம்!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரி கட்சிகள், மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகியவற்றின் மொத்த வாக்கு எண்ணிக்கையால் காங்கிரஸ் தேர்வு செய்யும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்றாலும் பைரோன் சிங் ஷெகாவத்துக்கு பிற கட்சி உறுப்பினர்களிடையே இருக்கும் செல்வாக்கு, மரியாதை ஆகியவற்றால் காங்கிரஸ் தலைமை மிகவும் அரண்டு போயிருக்கிறது.

எனவேதான் “”ஷெகாவத்” என்ற பின்னொட்டுப் பெயர் வருகிற பிரதிபாவைத் தேடிப்பிடித்து நிறுத்தியிருக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் ஆகியவற்றைச் சேர்ந்த எவராவது மாற்றி வாக்களித்தால்தான் பிரதிபா தோற்பார். அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதால் பிரதிபா தேர்ந்தெடுக்கப்படுவது நிச்சயமாகிவிட்டது. அவரும் தாக்குர் என்பதால் தாக்குர்கள் அணி மாறி வாக்களிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குகள்தான் சிதறும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மராட்டியத்தைச் சேர்ந்த எவரும் இதுவரை குடியரசுத் தலைவராகவோ, துணைத் தலைவராகவோ பதவி வகித்ததில்லை, எனவே நம் மாநிலத்தைச் சேர்ந்தவரைத் தோற்கடிப்பதா என்ற கேள்வி சிவ சேனையினரின் நெஞ்சத்திலே கனன்று கொண்டிருக்கிறது.

வலுவான வேட்பாளர் தேவை. எனவே பிரணாப் முகர்ஜியைத்தான் நிறுத்த வேண்டும் என்று இடதுசாரிகள் ஆரம்பத்தில் வற்புறுத்திக் கொண்டிருந்தனர். பிரதிபா அப்படி வலுவானவர் அல்ல என்றாலும் இடதுசாரிகள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். “”வலுவானவர்”, “”வலுவற்றவர்” என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. ஆர்ப்பாட்டம், பந்தா ஏதும் இல்லாமல் பணிபுரிந்தால் அவர் வலுவற்றவரா?

பிரதிபாவின் அரசியல் வாழ்க்கையைப் பார்க்கும்போது நிரம்ப அனுபவமும், அறிவும், பொறுமையும், திறமையும் உடையவர் என்பது புலனாகிறது.

பொதுவாழ்வில் நேர்மை, நன்னடத்தை, அடக்கம் ஆகியவற்றின் சின்னமாகத் திகழ்ந்திருக்கிறார். திறமைக்கேற்ப கிடைத்த பதவிகளை முறையாக வகித்திருக்கிறார்.

பதவிக்காக ஆசைப்பட்டு தன்னை தரம் தாழ்த்திக் கொள்ளாமல் இருந்திருக்கிறார். சமூகப் பணி செய்த பிறகே அரசியலுக்கு வந்திருக்கிறார். இதுவரை அவரைப்பற்றி பரபரப்பாக எதுவுமே பேசப்படவில்லை என்பதே அவருக்குச் சாதகமானது. அவரால் எவருடைய அரசியல் வாழ்வுக்கும் எதிர்காலத்துக்கும் ஆபத்து இல்லை என்பதால் எளிதாகத் தேர்வு பெற்றுவிட்டார்.

பிரதிபா, ஷெகாவத் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று முதலில் சோனியாவிடம் கூறியவரே சரத் பவார்தான். மகாராஷ்டிரத்தில் பவாருக்கு எதிரான காங்கிரஸ்காரர்கள் வரிசையில் பிரதிபாவுக்கு முக்கிய இடம் உண்டு என்றாலும் அவருடைய தகுதிகளை மெச்சினார் பவார்.

இதுவரை பதவியில் இருந்த குடியரசுத் தலைவர்கள் தங்களுடைய சிறப்பான செய்கைகள் மூலம் முத்திரை பதித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

ஆர். வெங்கட்ராமனை “”சட்ட புத்தகத்தில் சொல்லியபடியே நிர்வகிப்பவர்” என்றார்கள்.

அரசியல் ஸ்திரமற்ற தேர்தல் முடிவுகள் வந்து அடுத்த நிர்வாகி யார் என்ற இருள் சூழும்போது, வானில் நம்பிக்கையூட்டும் மின்னல்கீற்று போன்றவர்தான் குடியரசுத் தலைவர் என்று நிரூபித்தவர் ஆர்.வெங்கட்ராமன்.

“”செயல்படும் குடியரசுத் தலைவர்” என்று தன்னை அழைத்துக் கொண்ட கே.ஆர். நாராயணன், வாஜ்பாய் அரசின் பல முடிவுகளைக் கேள்வி கேட்டு திருப்பி அனுப்பினார்.

அப்துல் கலாம் மக்களுடன் ஒன்றிவிட்டவர். மக்களும் அவரைத் தங்களுடையவர் என்று மனதார ஏற்றுக் கொண்டனர். எனவே அவர் “”மக்களின் குடியரசுத் தலைவராக” பெயர்பெற்றுவிட்டார்.

பிரதிபா பாட்டீல் எப்படி பேர் வாங்குகிறார் என்று பார்ப்போம்.

—————————————————————————————

பிரதிபாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

சென்னை, ஜூன் 20: வட இந்தியாவில் ஹிந்துப் பெண்கள், முஸ்லிம் ஆட்சியாளர்கள் காலத்தில்தான் தங்களை காத்துக்கொள்ள தலைக்கு முக்காடு போடும் பழக்கம் வந்தது என்று கூறியதற்காக, பிரதிபா பாட்டீலுக்கு நாடு முழுக்க எதிர்ப்பு வலுத்து வருகிறது.

குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக காங்கிரஸ் கட்சியால் முன்மொழியப்பட்டுள்ளவர் பிரதிபா பாட்டீல் என்பது குறிப்பிடத்தக்கது.

“குங்கட்’ என்று அழைக்கப்படும் முக்காடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் தெரிவித்த கருத்து காரணமாக எதிர்ப்பு கொழுந்து விட்டு எரியத் தொடங்கி உள்ளது.

தேசியக் கட்சிகளும், மாநில அளவிலான கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் பிரதிபாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சர்ச்சையைக் கிளப்பிய பேச்சு: மகாராணா பிரதாப்பின் 467-வது பிறந்த நாள் நிகழ்ச்சி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதிபா பாட்டீல்,””வட இந்தியாவில் ஹிந்துப் பெண்கள் முக்காடு போட்டு முகத்தை மறைக்கும் முறை மொகலாயர்களின் காலத்தில் ஏற்பட்டது. மொகலாய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ளவே பெண்கள் முக்காடு அணியத் தொடங்கினர்” என்றார்.

சுதந்திர இந்தியாவில் இந்த முக்காடு முறை கைவிடப்பட வேண்டும், இதுபோன்ற முறைகள் தொடராமல் தடுத்து நிறுத்துவது நமது கடமை என்றார் அவர்.

“”இந்தியாவில் முக்காடு முறை 13-வது நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. மொகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்த முறை தொடங்கப்பட்டது எனக் கூறுவது சரியல்ல” என்று கோல்கத்தாவைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் கௌசிக் ராய் தெரிவித்தார்.

த.மு.மு.க. கண்டனம்: பர்தா அணிவது முஸ்லிம் பெண்களின் கடமையும், உரிமையும் ஆகும். அதை விமர்சிப்பது ஒரு மாநில ஆளுநருக்கு அழகல்ல. இவ்வாறு கூறுவதன் மூலம் சங்கப் பரிவாரின் குரலை அவர் எதிரொலிக்கிறார் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கண்டித்துள்ளார்.

தர்மசங்கடம்: சிறுபான்மையினரின் எதிர்ப்பு வலுத்து வருவது காங்கிரஸின் தலைமைக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களுக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
———————————————————————————————–
பிரதிபாவுக்கு எதிரான தகவலுடன் சிறிய புத்தகத்தை வெளியிட்டது பாஜக

புதுதில்லி, ஜூன் 28: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி- இடதுசாரி வேட்பாளராக போட்டியிடும் பிரதிபா பாட்டீலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய சிறிய புத்தகத்தை பாஜக புதன்கிழமை வெளியிட்டது.

இப் புத்தகத்தில் இரண்டு கட்டுரைகளை முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சௌரி எழுதியுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையை ஊழலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தில்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் இப் புத்தகம் விநியோகிக்கப்பட்டது.

கொலையில் தொடர்புடைய சகோதரரைப் பாதுகாத்தார், தான் தலைவராக இருந்த சர்க்கரை ஆலை வங்கிக் கடனை செலுத்தவில்லை, அவரது பெயரில் ஏற்படுத்தப்பட்ட ஏழை பெண்கள் முதலீடு செய்த கூட்டுறவு வங்கி திவலானது என்று பிரதிபா மீது புகார் படலமாக அமைந்துள்ளது புத்தகம்.

இந்தியாவின் குடியரசுத் தலைவராக களங்கம் நிறைந்தவரும் ஊழல்பேர்வழியும் வர வேண்டுமா? பெண்களுக்கு அநீதி இழைந்தவர் குடியரசுத் தலைவர் ஆகலாமா என்று கேள்வி எழுப்புகிறது இந்தப் புத்தகம்.

மன்மோகன் கண்டனம்

பிரதிபா பாட்டீல் புகழுக்கு களங்கம் கற்பிக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. ஆனால் அந்த முயற்சியில் அவை வெற்றி பெறாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

பிரதிபாவுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் எந்தவித புகாரும் இல்லை என்றும் அவர் சொன்னார்.

கலாம் விவகாரம்:

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது உயர் மதிப்பு வைத்துள்ளோம். “வெற்றி உறுதி என்று தெரிந்தால் மீண்டும் போட்டி’ என்று அவர் கூறியதாக வந்த செய்தியின் அடிப்படையிலேயே மத்திய அமைச்சர்கள் பிரியரஞ்சன் தாஷ் முன்ஷி, சரத் பவார் கருத்து தெரிவித்தனர். தேர்தலில் போட்டியிட ஒருவர் விரும்பினால் வெற்றி உறுதி என்று தெரிந்தால் மட்டுமே போட்டி என்று கூறுவது சரியானது இல்லை என்றார் பிரதமர்.

———————————————————————————————–

பிரதீபா பட்டீல் உறவினர்களால் திவாலான பெண்கள் வங்கி: ஊழியர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

ஜலகோன், ஜுன். 28-

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் பிரதீபா பட்டீல் உறவினர்கள் மீது தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை தனது புலனாய்வு செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

அதில் கூறப்படுவதாவது:-

பிரதீபா பட்டீல் பெயரில் 1973-ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள ஜலகோனில் “பிரதீபா மகிளா சககாரி” என்ற பெயரில் பெண்கள் கூட்டுறவு வங்கி ஆரம்பிக்கப்பட்டது. இந்த வங்கியை நிறுவியர் பிரதீபா பட்டீல் என்றாலும் தற்போது அவருக்கும் இந்த வங்கிக்கும் சம்பந்தமில்லை.

எனினும் இந்த வங்கியில் பிரதீபா பட்டீலின் அண்ணன் திலீப் சிங் பட்டீல் மற்றும் அவரது உறவினர்கள் லட்சக்கணக்கான ரூபாயை கடனாக பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர். இதனால் ரூ.2.24 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு கடந்த 2003-ம் ஆண்டு அந்த வங்கி திவாலானது என்று அந்த தனியார் தொலைக்காட்சி தனது புலனாய்வுச் செய்தியில் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் அந்த கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்த ஊழியர்கள் கோர்ட்டில் திலீப் சிங் பட்டீல் மற்றும் பிரதீபா பட்டீலின் உறவினர்களுக்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

“திலீப்சிங் பட்டீல் “பிரதீபா மகிளா சககாரி வங்கியின்” தொலைபேசியின் மூலமாக மும்பையில் உள்ள பங்கு சந்தை தரகர்களுக்கு மணிக் கணக்கில் அடிக்கடி தொலை பேசியில் பேசினர். இந்த வகையில் ரூ.20 லட்சத்தை தொலைபேசி கட்டணமாக வங்கி கட்ட வேண்டியிருந்தது.

கார்கில் வீரர்களுக்கு உதவுவதற்காக ஊழியர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் சமபளத்தை அளித் தோம். ஆனால் அந்த பணம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போய் சேரவில்லை. இடையில் ஊழல் நடந்துள்ளது. பிரதீபா பட்டீலின் உறவினருக்கு சொந்தமான சர்க்கரை ஆலைக்கு வங்கி பெரும் பணம் கடனாக கொடுத்திருந்தது. ஆனால் அப்பணம் திருப்பித் தரவில்லை. இதனால் வங்கி திவாலானது.

இவ்வாறு பல்வேறு குற்ற சாட்டுக்களை பிரதீபா பட்டீலின் உறவினர்கள் மீது பிரதீபா மகிளா சககாரி வங்கி யின் ஊழியர்கள் தாங்கள் தாக்கல் செய்த மனுவில் குறிப் பிட்டுள்ளனர்.

———————————————————————————————–

பிரதிபா முகத்திரையை விலக்கினால்… (2)

ஜலகாம் கூட்டுறவு வங்கி சமூக நீதி காத்த விதம்!

பிரதிபா மகிளா சஹகாரி வங்கியில், “”சமூக நீதி”யை எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதை ஊழியர்கள் சங்கம் சொல்லியிருப்பது தனிக்கதை.

வங்கியில் ஊழியர்களை வேலைக்குச் சேர்ப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச நியதிகளைக்கூட வங்கியின் நிர்வாகிகள் கடைப்பிடிக்கவில்லை. இதனால் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு உரிய எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு தரப்படவில்லை. நிர்வாக இயக்குநர்கள் தங்களுடைய உறவினர்களுக்கே அந்த வேலைகளை வழங்கினார்கள்.

கடனில் வங்கி மூழ்குவதைத் தடுக்க, பிரதிபா பாட்டீல் அவருடைய அண்ணன் திலீப் சிங் பாட்டீல் மற்றும் பிற உறவினர்களின் சொத்துகளை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் சங்கம் தனது மனுவில் கோரியிருந்தது. அவர்களுக்கு எப்படி அவ்வளவு சொத்து குறுகிய காலத்தில் சேர்ந்தது என்று விசாரணை நடத்துமாறும் கோரியிருந்தது. மகாராஷ்டிர மாநில அரசின் கூட்டுறவுத்துறையும் இந்த நோக்கில் விசாரணையைத் தொடங்கியது.

அதே சமயத்தில், அந்த வங்கி ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அனந்த்சிங் பாட்டீல் என்பவர், சங்க லெட்டர் பேடில் பிரதிபா பாட்டீலுக்கு ஒரு கடிதம் எழுதினார். வங்கியின் முறைகேடுகளில் உங்களுக்கு பங்கு ஏதும் இல்லை என்று அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கும் ஒரு படி மேலே போய், சங்கத்தின் சார்பில் பிரதிபாவிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறார்.

பிரதிபாவின் உறவினர்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்பட்டதை ரிசர்வ் வங்கியும் இதே காலத்தில் விசாரிக்க ஆரம்பித்தது. பிரதிபாவின் நெருங்கிய உறவினர்கள் வாங்கிய கடன்கள் முறைகேடாக தள்ளுபடி செய்யப்பட்டது உண்மைதான் என்று தனது ரகசிய அறிக்கையில் 2002 ஜூன் 18-ல் அது குறிப்பிட்டது. பிரதிபாவின் 3 உறவினர்களின் கடன் ரத்து தொடர்பான குறிப்பிட்ட குற்றச்சாட்டு முழுக்க முழுக்க உண்மைதான் என்று அது தனது அறிக்கையில் பதிவு செய்தது. கடன்களை ரத்து செய்வதை பரிசீலிப்பதற்கென்றே ரிசர்வ் வங்கியில் இருக்கும் உதவி துணை மேலாளரை, பிரதிபா மகிளா சஹகாரி வங்கி அணுகி ஒப்புதல் பெறவில்லை என்பதையும் ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஊழியர் சங்கங்களின் புகார் மனுக்கள் கூட்டுறவுத்துறை, ரிசர்வ் வங்கி, மத்திய, மாநில அரசுகள் ஆகியவற்றுக்கு மட்டும் அல்லாமல் பிரதிபாவுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

ஊழியர் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் ஆகியோர் 2002 மார்ச் 13-ல் அனுப்பியுள்ள கடிதத்தில், பிரதிபாவின் அண்ணன் திலீப் சிங் பாட்டீல், வங்கியின் தொலைபேசியைச் சொந்த பயன்பாட்டுக்கு முறைகேடாகப் பயன்படுத்தியிருப்பதை சுட்டிக்காட்டினர்.

வங்கியின் 224672 என்ற எண்ணுள்ள தொலைபேசியை அவர் தன்னுடைய வீட்டில் வைத்துக்கொண்டு, பங்கு பரிவர்த்தனை வியாபார விஷயங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். அவற்றுக்கான டெலிபோன் கட்டணம் ரூ.20 லட்சம். அந்த தொலைபேசியிலிருந்து மும்பையில் உள்ள பங்குத் தரகர்களுடன் பேசியிருப்பதை தொலைபேசி பில் தெரிவிக்கிறது.

இந்த ஆவணங்கள் பின்னர் அழிக்கப்பட்டன. ஆனால் தொலைபேசியைத் தவறாகப் பயன்படுத்தியதை மறைக்க முடியவில்லை. வங்கியின் நிர்வாக அதிகாரியாக ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட அமோல் கைர்னார், இந்த தொலைபேசி பில்லுக்கு விளக்கம் தருமாறு வங்கி மேலாளர் பி.டி. பாட்டீலுக்கு 2003 பிப்ரவரி 1-ம் தேதி எழுதிய கடிதத்தில் கோரியிருக்கிறார்.

பிரதிபா மகிளா சஹகாரி வங்கி, சந்த் முக்தாபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அவ்வப்போது முறைகேடாக கடன் வழங்கியிருப்பதையும் ரிசர்வ் வங்கியின் நோட்டீஸ் சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த சர்க்கரை ஆலைதான் கிராமப்புற இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக பிரதிபா பாட்டீல் நிறுவியது. 1999-ல் சோனியா காந்தி இதைத் தொடங்கி வைத்தார்.

பிரதிபா மகிளா சஹகாரி வங்கியைப் போலவே இந்த சர்க்கரை ஆலையும் மூடப்பட்டுவிட்டது. ரூ.20 கோடி மதிப்புக்கு கடனை வாங்கிவிட்டு அதைத் திருப்பிச் செலுத்த முடியாததால் இந்த ஆலை மூடப்பட்டது. ஆனால் அந்த 20 கோடி ரூபாய் மதிப்புக்கு அது எந்த நாளிலும் சர்க்கரையை உற்பத்தி செய்யவே இல்லை என்பதுதான் அதன் சிறப்பு!

சந்த் முக்தாபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பங்குகளை வாங்க, பிரதிபா மகிளா சஹகாரி வங்கி தகுதியற்றவர்களுக்கெல்லாம் கடன் வழங்கியிருக்கிறது. சர்க்கரை ஆலையும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக பிரதிபாவின் சகோதரர்கள் இப்படித் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கடனை அள்ளி வழங்கினர்.

பொதுமக்கள் தங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்து கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்தால், உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் அதில் புகுந்துகொண்டு இப்படி ஊழல் செய்யும்பட்சத்தில் மக்கள் யாரைத்தான் நம்புவது என்றும் ஊழியர் சங்கம் கேட்டுள்ளது.

“நீங்கள்தான் இந்த கூட்டுறவு வங்கியின் நிறுவன தலைவர். ஆனால், சுயலாபத்துக்காக நீங்களே இந்த வங்கியை அழித்து விட முயற்சிகளைச் செய்து வருகிறீர்கள். 2002 மார்ச்சுக்குள் வங்கியின் நிலைமை மேம்படாவிட்டால் உரிமத்தை ரத்து செய்யப் போவதாக ரிசர்வ் வங்கி எச்சரித்திருக்கிறது.

உங்களுக்குள்ள அரசியல் செல்வாக்கு காரணமாக, வங்கியில் நிகழ்ந்துள்ள ஊழல்களையும் முறைகேட்டையும் வெளியே தெரியவிடாமல் தடுத்துவிட முடியும். உங்களால் எங்களுக்கும் எங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் உயிர்களுக்கும் ஆபத்து நேரிட்டிருக்கிறது. ஏற்கெனவே உங்களை நாங்கள் சந்திக்கும்போதே இதை குறிப்பால் உணர்த்திவிட்டீர்கள். உண்மை வெளிவர வேண்டும் என்பதற்காக எங்களுடைய உயிரைவிடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்செயலாகவோ, வேறு வகையிலோ எங்களுக்கோ, எங்கள் குடும்பத்தவருக்கோ ஏதேனும் நேர்ந்துவிட்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு’ என்று வங்கி ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.

கடன் வாங்கிய “”பெண்கள்” யார் என்பதைச் சொல்லிவிட்டோம். பணம் போட்டவர்கள் யார்? அதை அவர்களே பின்வருமாறு வங்கி நிர்வாகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

“காய்கறி, பழங்கள் விற்பது, குப்பை பொறுக்குவது போன்ற சிறு வேலைகளைச் செய்யும் ஏழைகளான நாங்கள்தான், நல்ல சேமிப்பாக இருக்கட்டும் என்று உங்கள் வங்கியில் முதலீடு செய்தோம். இப்போது நாங்கள் கேள்விப்படும் விஷயங்கள் எங்களுக்குக் கவலை தருவதாக இருக்கின்றன. ஏழைகளுக்கு உதவத்தான் இந்த வங்கியைத் திறந்திருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் சிறுகச்சிறுக சேர்த்த பணத்தையெல்லாம் இதில் முதலீடு செய்துள்ளோம். எனவே நமது வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்களின் முகவரிகளை வெளியிடுங்கள்’ என்று வங்கியில் பணம் போட்டவர்கள் கோரியுள்ளனர்.

மகளிர் முன்னேற்றத்துக்காகவும், ஊரக வளர்ச்சிக்காகவுமே 24 மணி நேரம் உழைக்கத் துடித்துக்கொண்டிருக்கும் பிரதிபா பாட்டீல் வகையறா சமூக சேவகர்கள் இதற்கு அளித்த பதில்தான் என்ன?


பிரதிபா முகத்திரையை விலக்கினால்… (3): மறந்துவிடாதீர்கள், கணவரும் உண்டு!அருண் செüரி
மகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் உள்ள பிரச்னை என்னவென்றால், “”அதிகாரம் பெறும் மகளிருக்கு கணவர் உண்டு” என்பதை எல்லோருமே மறந்துவிடுவதுதான்!இணையதளத்தில், பிரதிபா பற்றிய வாழ்க்கைக் குறிப்பில் -“”பிரதிபா மகிளா சஹகாரி வங்கியின் நிறுவனர், தலைவர்” என்று அவரைக் குறிப்பிட்டுள்ளனர். வங்கி பற்றி எழுத ஆரம்பித்ததும், அவருக்கு 1994 முதல் அந்த வங்கியுடன் தொடர்பு ஏதும் கிடையாது என்று திடீரென்று அறிவிக்கின்றனர்.ஜலகாம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முதன்மை ஊக்குவிப்பாளர், தலைவர் என்று வாழ்க்கைக் குறிப்பில் உள்ளது. அந்த ஆலைபற்றி எழுத ஆரம்பித்ததும் அறிவிப்பு வருகிறது -அவருக்கும் சர்க்கரை ஆலைக்கும் சம்பந்தம் இல்லை என்று!கூட்டுறவு வங்கி, சர்க்கரை ஆலை இரண்டிலிருந்தும் விலகிய பிரதிபா, தனது நேரம், உழைப்பு அனைத்தையும் கல்விப்பணிகளிலேயே செலவிட்டிருப்பார் என்று நம்பலாம்.பிரதிபா பாட்டீலும் அவருடைய குடும்பத்தாரும் சங்கம் அமைத்து சில பள்ளிக்கூடங்களை நடத்தினர். அதில் பணியாற்றுகிறவர்கள் நிர்வாகத்தின் மீது மிகுந்த கசப்புணர்வோடு இருக்கின்றனர். அவர்களோடு பணியாற்றிய கிசான் தாகே என்ற ஆசிரியர் எப்படி நடத்தப்பட்டார், அவர் எப்படி தற்கொலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை ஆவணங்களோடு அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கெல்லாம் பிரதிபாவின் கணவர் தேவிசிங் ஷெகாவத்தும் அவருடைய சகாக்களும்தான் காரணம் என்கின்றனர்.ஷெகாவத்துகள் நடத்தும் பள்ளிக்கூடத்தில் 1977-ல் கிசான் தாகே பணிக்குச் சேர்ந்தார். உதவி ஆசிரியர் என்ற பதவியில் அமர்த்தப்பட்டார். ஊதியம் தராமலும் உரிய மரியாதை கொடுக்காமலும் அவமதிக்கப்பட்ட அவர் 1998 நவம்பர் 15-ல் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் என்பதை ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருந்தார். அதுவன்றி ஒரு பத்திரமும் அவரிடம் இருந்தது. போலீஸôர் அவற்றையெல்லாம் கைப்பற்றிக்கொண்டு, பிரேத பரிசோதனை நடத்தினர். தேவிசிங்கும் அவருடைய நண்பர்களும் எப்படி தன்னைச் சிறுமைப்படுத்தினார்கள், ஊதியம் தராமலும், பள்ளிக்கூட சங்கத்துக்குச் சொந்தமான கடன் சங்கத்திலிருந்து கடன்கூட வாங்க முடியாமலும் எப்படியெல்லாம் அலைக்கழித்தனர் என்றெல்லாம் விவரமாக அதில் எழுதியிருந்தார்.கிசான் தாகே உயிரோடு இருந்தபோது பட்ட துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவருடைய மகன், கல்வி உதவித்தொகை பெறுவதற்காக தேர்வு எழுத விண்ணப்ப மனுகூட கிடைக்கவொட்டாமல் தடுத்தனர். வேலைபார்த்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் “உபரி’யாக இருப்பதாகக் கூறி, தொலை தூரத்தில் உள்ள வேறொரு பள்ளிக்கூடத்துக்கு மாற்றினர். அங்கு ஆசிரியர் வேலையே காலி இல்லை என்றதும், விடுதி மேலாளராக வேலைபார்க்குமாறு கூறினர்.

அமராவதி நகரில் உள்ள சமூகநலத்துறை அதிகாரிக்கு இதுபற்றிக் கடிதம் எழுதினார் தாகே. ஆசிரியர் பணியிடமே இல்லாத இடத்துக்கு ஒருவரை மாற்றுவது சட்டவிரோதமான செயல் என்று சமூகநலத்துறை அதிகாரி 1998 ஜனவரி 27-ல் பள்ளிக்கூட நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதினார். அந்த மாறுதலுக்கு தன்னுடைய ஒப்புதலைத் தர முடியாது என்றும் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பிறகு அவருக்கு ஊதியம் தருவதை முற்றாக நிறுத்திவிட்டது நிர்வாகம்.

இதற்கிடையே, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாகபுரி கிளையில் 1998 ஜனவரி 19-ல் மனு தாக்கல் செய்தார். தன்னைச் சட்டத்துக்குப் புறம்பாக மாற்றியது குறித்து குறிப்பிட்டிருந்தார். அவரை மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளுமாறும் ஊதியம் தருமாறும் 1998 அக்டோபர் 8-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 1997 ஆகஸ்ட் 25 முதல் அவருக்கு நிலுவை ஊதியத்தையும் தருமாறு அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டது. அதன் பிறகும் ஊதியம் பெற அவர் நிர்வாகத்திடம் நடையாய் நடந்தார். இந்த கட்டத்தில் அவருடைய உடல் நலிவடைய ஆரம்பித்தது. டாக்டர் அளித்த சான்றுடன் விடுமுறை கேட்டு விண்ணப்பித்தார். அதையும் நிர்வாகம் ஏற்கவில்லை. தாகேயின் பரிதாப நிலை கண்டு சக ஆசிரியர்கள் மிகவும் வருந்தினர். அவர்களால் பரிதாபப்படுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை.

இதற்கிடையே வீட்டில் உள்ள பண்ட, பாத்திரங்களையும் மனைவியின் நகைகளையும் விற்றுத்தீர்த்துவிட்டதால் இனி வேறு வழியே இல்லை என்ற நிலையில், தற்கொலை முடிவை எடுத்து நிறைவேற்றிவிட்டார் தாகே. தாகேவின் மனைவி மங்கள்பாய் போலீஸில் புகார் செய்தார். போலீஸôர் பாராமுகமாக இருந்துவிட்டனர்.

மங்கள்பாயின் மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், “தாகேவைச் சிறுமைப்படுத்தியது, வேலையே இல்லாத இடத்துக்கு மாற்றியது, பிறகு ஊதியம் தராமல் நிறுத்தியது, மருத்துவ விடுப்பைத் தர மறுத்தது, உயர் நீதிமன்றம் ஆணையிட்டும் அதை எதிர் மனுக்கள் மூலம் தாமதம் செய்தது’ என்று எல்லாவற்றையும் நீதிமன்றமே சுட்டிக்காட்டியது. இதில் முதல் நோக்கில் தவறு யார் மீது என்று தெரிகிறது, போலீஸôர் உரிய வகையில் வழக்கைப் பதிவுசெய்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டது. 2000 அக்டோபர் 6-ம் தேதி அந்த ஆணை வெளியானது. அதற்குள், ஊதியம் இல்லாமல் 3 ஆண்டுகள், தாகேவே இல்லாமல் 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த ஆணையையும் எதிர்த்து கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பள்ளிக்கூட நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் ஏ.ஏ. நந்தகாவோன்கர் அளித்த தீர்ப்பு, பள்ளிக்கூட நிர்வாகத்தை, கன்னத்தில் அறைந்தாற்போல இருந்தது. தேவிசிங் மீதும் அவருடைய சகாக்கள் மீதும் மனுதாரர் செய்த புகார்கள் உண்மையானவை என்பது நடந்த சம்பவங்களிலிருந்தும் கிடைத்துள்ள ஆவணங்களிலிருந்தும் தெரிகிறது, எனவே இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 306, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அது 2005 ஜூலை 22-ல் வெளியானது.

அதன் பிறகாவது சட்டம் தன் வேலையைச் செய்திருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கவிருக்கும் இந்த நாட்டின் முதல் குடிமகளின் கணவர் அவ்வளவு லேசுப்பட்டவரா என்ன? அந்த ஆணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.

சமூக நலத்துறை அதிகாரி, உயர் நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு அடுத்தபடியாக, இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்த நீதிபதியும், கன்னத்தில் அறைந்தாற்போல ஒரு தீர்ப்பை அளித்தார். இந்த தற்கொலை வழக்கில், சந்தர்ப்ப சாட்சியங்களும், ஆவணங்களும் தற்கொலைக்குத் தூண்டியது யார் என்பதை சந்தேகமற தெரிவிக்கின்றன; அப்படியிருக்க அவர்களுடைய மனுக்கள் பரிசீலனைக்கே ஏற்றவை அல்ல என்று கூறி தள்ளுபடி செய்தார். இந்த ஆணை 2007 பிப்ரவரி 7-ம் தேதி வெளியானது. தாகே 1998 நவம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார். இன்னும் இந்த வழக்கில் விசாரணையே ஆரம்பமாகவில்லை!

ஆதரவற்ற அப்பாவியான தாகே இறந்துவிட்டார்; அநாதையாகிவிட்ட அவருடைய மனைவி மங்கள்பாய் இனி அங்கும் இங்கும் அலைய முடியாதபடிக்குச் சோர்ந்துவிட்டார். இந்த விஷயத்தில் முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தேவிசிங் ஷெகாவத், குடியரசுத் தலைவர் மாளிகையில் நுழைவதற்குத் தயாராகிவிட்டார். தேவிசிங் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டீர்களா?

——————————————————————————————-

பிரதிபா பற்றிய எல்லா தகவல்களும் தலைமைக்குத் தெரியும்! – பிரதிபா முகத்திரையை விலக்கினால்… (5)

அருண் சௌரி

ரஜனி பாட்டீல் தில்லி செல்கிறார், சோனியா காந்தியை 2006 ஜனவரியில் சந்திக்கிறார். தனது கணவர் எப்படி கொல்லப்பட்டார், யாரால் கொல்லப்பட்டார், ஏன் கொல்லப்பட்டார் என்ற தகவல்கள் அனைத்தையும் தெரிவிக்கிறார். அகமது படேல், சுசீல் குமார் ஷிண்டே, மார்கரெட் ஆல்வா போன்ற தலைவர்களையும் சந்திக்கிறார்.

அவர்கள் யாரும் சுட்டு விரலைக்கூட ரஜனிக்காக அசைக்கவில்லை. மாறாக, இந்தக் கொலைக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் 2 பேர் மீதான முதல் தகவல் அறிக்கை திரும்பப் பெறப்பட்டது.

இந்தக் கொலை வழக்கு விசாரணையை முதலில் உள்ளூர் போலீஸôரிடமிருந்து எடுத்து மாநில சி.ஐ.டி. போலீஸôரிடம் ஒப்படைத்து, பிறகு அவர்களிடமிருந்தும் எடுத்து சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தனர். இந்த வழக்கை ஏற்பது குறித்து சி.பி.ஐ. பதில் அளிக்கவே 3 மாதங்கள் ஆனது.

“எங்களுக்கு பணிப்பளு அதிகம், இந்த வழக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, சர்வதேச அளவில் விசாரிக்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை எனவே எங்களுடைய விசாரணை இதற்கு அவசியம் இல்லை’ என்று சி.பி.ஐ. பதில் அளித்தது.

வழக்கு விசாரணையை ஊனப்படுத்தவும் தொடர்புடையவர்களைத் தப்பவைக்கவும் நடந்ததே இந்த நாடகம். ரஜனி பாட்டீல் உயர் நீதிமன்றத்தின் ஒüரங்காபாத் பெஞ்சில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார்.

“இந்த வழக்கில் விஷ்ராம் பாட்டீலின் அரசியல் எதிரிகள்தான் இந்தக் கொலைக்குப் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை’ என்று சி.ஐ.டி. விசாரணை அதிகாரி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ரஜனி பாட்டீலின் குற்றச்சாட்டே அதுதான்; முக்கிய எதிரிகள் என்று குறிப்பிடப்படுகிறவர்களைப் போலீஸôர் அழைத்து விசாரிக்கவே இல்லை, கைது செய்யப்பட்டவர்களிடமும் இந்தக் கோணத்தில் விசாரணை நடைபெறவில்லை.

ராஜு மாலி, ராஜு சோனாவானே ஆகியோர் 3.1.2006-ல் எழுதிய கடிதத்துக்கும் அந்த அதிகாரி பதில் அளிக்கவில்லை. “”எங்களை நிர்பந்திக்கிறார்கள்; குற்றங்களை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளியுங்கள் இல்லாவிட்டால் விஷ்ராம் பாட்டீலுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும் என்று எங்களை மிரட்டுகிறார்கள்” என்று அந்தக் கடிதத்தில் மராத்தியில் இருவரும் எழுதியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று சி.பி.ஐ. அளித்த பதிலை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் 2007 பிப்ரவரி 23-ல் நிராகரித்தது. “உங்களுடைய பணிப்பளுவும், இந்த வழக்கின் தன்மையும் எங்களுக்குத் தெரியும். இருதரப்பு வழக்கறிஞர்களின் உதவியோடு ஆவணங்களைப் பரிசீலித்ததில் இது வித்தியாசமான வழக்கு என்பதைப் புரிந்து கொண்டோம். எனவே சி.பி.ஐ. இதை விசாரிப்பதே சரியானது’ என்று நீதிமன்றம் ஆணையிட்டது.

2007 மார்ச் 5-ம் தேதி ரஜனி பாட்டீல் மீண்டும் ஒருமுறை வழக்கு பற்றிய குறிப்புகளுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினார். எனது குடும்பமே கொல்லப்படும் என்று அஞ்சுகிறேன் என்று கூட அதில் குறிப்பிட்டிருந்தார். சோனியாவிடமிருந்து பதிலே வரவில்லை.

பிறகு இதையெல்லாம் மீண்டும் ஒருமுறை தொகுத்து, குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும் மனு அளித்தார். பிறகு எதுவும் நடைபெறாததால், “”பிரதிபா பாட்டீல்தான் மும்பை, தில்லியில் உள்ள தனது அரசியல் செல்வாக்கு காரணமாக அண்ணன் டாக்டர் ஜி.என். பாட்டீலைக் கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்றி வருகிறார்” என்று குற்றஞ்சாட்டினார்.

எதிர் குற்றச்சாட்டு: பிரதிபா பாட்டீலுக்கு இணையான தகுதி படைத்த வேட்பாளர் தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் பாரதீய ஜனதா தவறான பிரசாரத்தில் இறங்கியிருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

பிரதிபா பாட்டீல் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய கட்சிக்காரர்கள் அளித்த பேட்டிகள், வெளியிட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்திலும், போலீஸôரிடமும், தில்லியிலும், மும்பையிலும் அவர்கள் அளித்த புகார் மனுக்கள் அம்பலப்படுத்துகின்றன. இவை பாரதீய ஜனதாவின் மூளையில் உதித்த கட்டுக்கதைகள் அல்ல. இது பொய்ப் பிரசாரம் என்றால் “”ஆஜ்-தக்” ஒளிபரப்பிய பேட்டி பற்றி என்ன சொல்கிறீர்கள்?

இத்தனை நாள்கள் விட்டுவிட்டு, பிரதிபாவை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த பிறகு ஏன் இதையெல்லாம் சொல்கிறீர்கள் என்பது அவர்களின் அடுத்த கேள்வி.

எல்லா மாவட்டங்களிலும் இதைப்போல ஆணவத்தோடு நடந்துகொள்ளும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், அவர்களில் எவரும் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறவரோ, அல்லது அவருடைய உறவினரோ அல்ல. எனவே நாட்டின் உயர் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போகிறவரின் தகுதியை ஆராய்வதிலும் ஆட்சேபம் தெரிவிப்பதிலும் என்ன தவறு? இந்த மோசடிகளை இப்போது அம்பலப்படுத்தாவிட்டால் பிறகு எப்போதுதான் இவை வெளியே வரும், அதனால் என்ன பலன் இருக்கும்?

சோனியாவுக்கு எதுவுமே தெரியாதா? சோனியாவுக்கு பிரதிபா குறித்து எதுவுமே தெரியாது, அதனால் தேர்வு செய்துவிட்டார் என்று மட்டும் கூறாதீர்கள். மகாராஷ்டிரத்தில் ஒரு மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ஒரு முறை அல்ல -3 முறை இருந்தவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அதுபற்றி அவருடைய மனைவியும் கட்சித் தலைவர்களும் அலையலையாக தலைமைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள், பேட்டி தருகிறார்கள். உள்ளூர் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இது எதுவுமே தெரியாது என்று சொல்லும் அளவுக்கு, இது “”சகஜமான” விஷயமா?

அப்படியானால் சோனியாவுக்கு பிரதிபா குறித்து எல்லாம் தெரிந்துதான் அவரை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தாரா? ஆமாம் -அதில் சந்தேகமே வேண்டாம்.

அரசியலில் செல்வாக்கு இல்லாத மன்மோகன் சிங்கைப் பிரதமராக பதவியில் அமர்த்தினார். அவருக்கு அரசியல் சாதுரியம் இல்லாவிட்டாலும், இன்னமும் கறைபடியாத கரத்துக்குச் சொந்தக்காரராக இருக்கிறார். நாளையே அவர், சோனியா சொன்னபடி கேட்காமல் சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கிவிட்டால் பிரச்னையாகிவிடும்.

எனவே காங்கிரஸ் கட்சித்தலைவரின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், குடியரசுத் தலைவராக வருகிறவரும் சொந்த செல்வாக்கு இல்லாதவராக இருக்க வேண்டும்; அது மட்டும் போதாது, “”தலைமையின் தயவில்தான்” அவருடைய பதவியே நீடிக்க வேண்டும். இதற்குப் பிரதிபாவைவிட வேறு நல்ல வேட்பாளர் கிடைப்பாரா?

———————————————————————————–

கூட்டுறவு வங்கி ஊழல்: பிரதீபா பட்டீலுக்கு பா.ஜ.க. 3 கேள்வி

புதுடெல்லி, ஜுலை. 5-

ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் பிரதீபா பட்டில். வருகிற 19-ந் தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. பிரதீபா பட்டீல் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரதீபாபட்டீல் உறவினர்கள் மீது எழுந்துள்ள கூட்டுறவு வங்கி ஊழல் குற்றச்சாட்டுக்களை கையி லெடுத்து அவருக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது.

தனக்கும் அந்த கூட்டுறவு வங்கியில் நடந்த ஊழலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் உள் நோக்கம் கொண்டவை என்றும் பிரதீபாபட்டீல் அறிக்கை விடுத்திருக்கிறார்.

பிரதீபா பட்டீலுக்கும் திவாலான பெண்கள் கூட்டுறவு வங்கிக்கும், அதில் நடந்த ஊழலுக்கும் தொடர்பு உண்டு என்று கூறி அது சம்பந்தமாக மூன்று கேள்விகளை பிரதீபாபட்டீல் முன்பு எழுப்பி யுள்ளார் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்களில் ஒருவர். அந்த மூன்று கேள்விகள் வருமாறு:-

பிரதீபாபட்டீலின் உறவினர்களுக்கு கடன் கொடுத்ததால் திவாலாகிப்போன பிரதீபா பெண்கள் கூட்டுறவு வங்கியை தான் நிறுவவில்லை என்று பிரதீபாபட்டீலால் கூற முடியுமா?

1990-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி அந்த வங்கியின் இயக்குனர்கள் கூடி பிரதீபாபட்டீலின் உறவினர்களுக்கு கடன் கொடுக்க சவுகர்யமான தீர்மானத்தை எடுத்துள்ளனர். இந்த தீர்மானத்தில் பிரதீபாபட்டீல் கையெழுத்திட்டுள்ளார். இதை அவரால் மறுக்க முடியுமா?

கடந்த 2002-ம் ஆண்டு ஜனவரி 22-ந்தேதி வங்கியின் இயக்குனர்கள் குழு ஒன்று கூடி வங்கியின் தலைமை செயல் அலுவலரை நியமிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதை உங்களால் மறுக்க முடியுமா?

மேற்கண்ட மூன்று கேள்விகளை பா.ஜ.க. பிரதீபாபட்டீல் முன்பு வைத்துள்ளது.

வங்கியில் நடந்த முறை கேடுகளுக்கு பிரதீபா பட்டீலே பொறுப்பு என்று கூறும் பா.ஜ.க. அது சம்பந்தமான ஆதாரங்களை புத்தகமாக வெளியிட்டு பிரதீபா பட்டீலுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது.

——————————————————————————————————-

எம்.பி. தொகுதி நிதி ஒதுக்கீட்டில் பிரதிபா விதிமீறல்

புதுதில்லி, ஜூலை 8: குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரதிபா பாட்டீல் எம்.பி.யாக இருந்த போது அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் ஏற்படுத்திய அறக்கட்டளைக்கு விளையாட்டு வளாகம் கட்ட எம்.பி. தொகுதி நிதியிலிருந்து ரூ.36 லட்சம் ஒதுக்கியதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி உயர் தலைவர்கள் சனிக்கிழமை மனு அளித்தனர். விதிமுறைகளைப் புறக்கணித்து குடும்ப அறக்கட்டளைக்கு எம்.பி. உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து பிரதிபா பாட்டீல், நிதி ஒதுக்கிய விவகாரத்தை நாடாளுமன்ற உரிமைக் குழு அல்லது நெறிமுறைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புமாறும் அவர்கள் மக்களவைத் தலைவரிடம் வலியுறுத்தினர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், மக்களவையில் பாஜக துணைத் தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா மற்றும் ஷாநவாஸ் ஹுசைன், கே.எஸ்.சங்வன், ரக்பீர் சிங் கௌசல் உள்ளிட்டோர் மக்களவைத் தலைவரை அவரது அலுவலகத்தில் சந்தித்த குழுவில் இடம் பெற்றிருந்தனர். மகஜரில் அவர்கள் கூறியிருந்தாவது:

மகாராஷ்டிரத்தின் அமராவதி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக பிரதிபா பாட்டீல் 1991-1996-ம் ஆண்டுகளில் இருந்தார். அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் ஏற்படுத்திய அறக்கட்டளை “வித்யா பாரதி சிக்ஷான் சன்ஸ்தா’. இதற்கு ஒரு கல்லூரி அருகே விளையாட்டு வளாகம் கட்ட எம்.பி. உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.36 லட்சத்தை 1995-ம் பிரதிபா பாட்டீல் அளித்தார். சம்பந்தப்பட்ட இடம் அறக்கட்டளைக்கு சொந்தமானதாக இல்லாத நிலையில் அங்கு விளையாட்டு வளாகம் கட்ட உள்ளூர் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

எம்.பி.க்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் தொடர்புடைய சங்கத்துக்கோ, அறக்கட்டளைக்கோ எம்.பி. தொகுதி நிதியிலிருந்து நிதி அளிக்கக்கூடாது என்று வழிகாட்டு விதிமுறையை பிரதிபா மீறி செயல்பட்டுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரதிபா போட்டியிடுகிறார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. இப்போது இந்த மிக மோசமான முறைகேடு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனிடையே, மகாராஷ்டிர மாநில அரசு அந்த அறக்கட்டளைக்கு கல்லூரி அருகே 25,000 சதுர அடி இடத்தை கடந்த ஏப்ரலில் வழங்கியது. பிரதிபா பாட்டீல் 12 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கிய ரூ.36 லட்சத்தை பயன்படுத்தி அங்கு விளையாட்டு வளாகம் கட்டவும் அடுத்த மாதமே மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிவிட்டது.

பிரதிபா பாட்டீல் 1996 வரை எம்.பி.யாக இருந்தார். அவர் எம்.பி.யாக இருந்த போது ஒதுக்கி பயன்படுத்தப்படாத நிதியை 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில் இப்போது பயன்படுத்த எவ்வாறு அனுமதிக்கலாம்?.

விதிமீறல் தொடர்பாக பிரதிபா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகஜரில் குறிப்பிட்டுள்ளனர். மகஜரை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தங்களிடம் உறுதி அளித்ததாக பாஜக மூத்த தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

“ஊழல், கிரிமினலை பாதுகாத்தல், எம்.பி.யாக இருந்தபோது நிதி ஒதுக்கீட்டில் விதிமீறல் போன்ற புகாரில் பிரதிபா பாட்டீல் சிக்கியுள்ளார். அவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா என்பதை வாக்களிக்க உரிமை பெற்ற எம்.பி., எம்.பி.க்கள் மனசாட்சி அடிப்படையில் சிந்தித்து செயல்பட வேண்டும்’ என்றும் மல்ஹோத்ரா கேட்டுக் கொண்டார்.

—————————————————————————————————

From Unmai Online:

மகளிருக்கு மரியாதை

முதல் பெண் குடியரசுத் தலைவர்

மனித சமூகத்தின் சரிபகுதி பெண்ணினம் எல்லாத் துறைகளிலும் கால் பதிப்பதற்கு போராட்டத்தைத்தான் மேற்கொள்ள வேண்டி-யிருக்கிறது. சென்ற நூற்றாண்டின் தொடக்-கத்தில் தென்னகத்திலிருந்து பெரியாரின் குரல் மட்டும்தான் பெண்ணுக்கு நீதி வழங்கும் என்று உரத்து ஒலித்தது.

நீதி, நிருவாகம், சட்டமியற்றுதல், காவல், ராணுவம், அரசியல், அறிவியல், தொழில்-நுட்பம் என பல்துறைகளிலும் பெண்கள் மெல்ல மெல்ல கால்பதித்து சாதனை படைத்-திருந்தாலும் நாட்டின் உச்சபட்ச பொறுப்புக்கு ஒரு பெண் இப்போது தான் வரப்போகிறார்.

அறுபதாண்டு கால சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் குடிமகனாக (ளாக) bஙுவூகு. ðபூகுðட் ðட்ஙீர்™ ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்-படுவதற்கான வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது.

அதுவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒரு பெண் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும். இந்தத் தேர்வில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் பங்கு முதன்மையாக இருந்தது எனும்போது வரலாறு இன்னொரு முறை கலைஞரின் மூலமாக பெரியாரைப் பதிவு செய்து கொள்கிறது எனலாம்.

குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படப் போகும் திருமதி பிரதிபா பாட்டில் அவர் ஒரு பெண் என்பதற்காக மட்டுமே தேர்வா-கவில்லை. மகாராஷ்டிரா அரசியலில் நுழைந்த நாள் முதல் தோல்வியே காணாத வெற்றியாளராக அவர் இருந்து வந்துள்ளார்.

அவருடைய தனித்தன்மையைப் பற்றி கூறும் பலரும், “தன்னை பிரபலமாக்கிக் கொள்ளாத விளம்பரத்தை விரும்பாத அரசியல் வாதி” என்றே கூறுகின்றனர். 1962ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ்ன் சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதல்-முறையாக வெற்றி பெற்ற பிரதிபா பாட்டில் இப்போது தனது 71ஆம் வயதில் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராகப் போகிறார்.

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கை வலுவாக ஒலித்து வரும் காலகட்டத்தில் பிரதிபா பாட்டில் இந்தியக் குடியரசுத் தலைவராக வரப்போகிறார் என்பது வரவேற்க வேண்டிய செய்தி. ஆனால் இதற்குச் சில பெண்களே எதிர்நிலை எடுப்பதும் அவதூறு பரப்புவதும் எத்தகைய அருவருக்-கத்தக்கது என்பதையும் இந்திய வரலாறு பதிவு செய்தே வருகிறது. என்றாலும், “சுதந்திர இந்தியாவின் 60 வருட காலத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்” என்று சோனியா காந்தி கூறியுள்ளது முற்றிலும் பொருத்தமானது ஆகும்.

1947-இல் அந்நியர் ஆட்சி அகன்று 60 ஆண்டுகளுக்குப் பின்பு, முதன்முறையாக இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக ஒரு பெண் வருகிறார் என்பது பாலியல் நீதி. அப்பெண் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்-தவர் என்பது சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி; பிரதிபா பிறந்த சோலங்கி ஜாதி ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதியாகும். இதற்கு முன் இருந்த 11 குடியரசுத் தலைவர்களில் ஒவ்வொரு முறை மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் அப்பத-வியை வகித்துள்ளனர்; 110 கோடியுள்ள இந்திய மக்களில் இவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 90 கோடிக்கு மேல் ஆகும்.

1934 டிசம்பர் 19-இல் பிறந்த பிரதிபா எம்.ஏ; மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றவர்; மகாராஷ்டிராவின் வடக்கில் உள்ள ஜல்-கோயன் எனும் ஊரில் வழக்குரைஞர் தொழில் செய்தார். அங்கு பொறியியல் கல்லூரியை ஏற்படுத்திக் கிராமத்து மாணவர்களுக்குப் பயன்தரும் வகையில் நடத்துகிறார். பார்-வையற்றோருக்கு அந்நகரில் தொழில் பயிற்சி பள்ளியையும், ஏழை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்குப் பள்ளி ஒன்றையும் நடத்துகிறார்.

கிராமியப் பொருளாதார மேம்பாட்டிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் தனி அக்கறை செலுத்துகிறார். பெண்கள் கூட்டுறவு வங்கியை ஜல்கோயன் நகரில் உருவாக்கியுள்ளார். அவர்களுக்கு என மும்பை, மற்றும் டில்லியில் தனி விடுதிகளை நடத்துகிறார்.

பள்ளி, கல்லூரியில் பயிலும்பொழுது விளையாட்டுப் போட்டிகளில் கலந்து-கொண்டு பரிசுகள் பெற்ற பிரதிபா பாட்டில், 1962-இல் சீன ஆக்கிரமிப்பின்போது துணைக் காவல் படையின் தளபதியாக இருந்தார்.

1966-இல் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் எனும் வேதியியல் பேராசிரியரை, ஜாதி மறுப்பு மணம் செய்து கொண்டார்; இது பெற்றோர் ஏற்பாட்டில் நடந்த திருமணம். ஒரு மகனும் மகளும் இவர்களுக்குப் பிள்ளைகள். தேவிசிங் ஷெகாவத், வித்யபாரதி மகாவித்-யாலயா எனும் கல்வி நிறுவனத்தை, மகாராஷ்-டிரத்தின் வடகிழக்கில் விதர்பா பகுதியைச் சேர்ந்த அமராவதி நகரில் நடத்துகிறார். அதே நகரில் உழவர் அறிவியல் மய்யம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு மழலையர் (நர்சரி) பள்ளியை பிரதிபா அம்மையார் நடத்துகிறார்.

பிரதிபா அம்மையாரின் துணைவர் தேவிசிங் கூறும் செய்தி ஒன்று கவனத்தில் கொள்ளத்தக்கது. ராஜ°தான் மாநிலத்தில் இருந்து விதர்பா பகுதியில் குடியேறியுள்ள அவர் குடும்பம், மகாராஷ்டிர அரசியலில் செல்வாக்காக இருந்ததில்லை. ஆனால், அவருடைய துணைவியாரின் (பிரதிபாவின்) பெரிய தந்தையார் வழக்கறிஞராகவும், அப்பொழுதைய பம்பாய் மாகாண சட்டப் பேரவையின் உறுப்பினராகவும் இருந்த, தோங்கர்சிங் பாட்டில் ஆவார். அவர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திவான் பகதூர் விருது பெற்றவர்.

திவான் பகதூர் தோங்கர்சிங் பாட்டில், சிவசேனாவின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேயின் தந்தை பிரபோதன் தாக்கரேயுக்கு மிக நெருங்கியவர் எனத் தெரிவிக்கிறார். இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பிரபோதன் தாக்கரே பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தில் மிக ஈடுபாடு காட்டினார் என்பதும், பார்ப்பனீயத்தை மறுத்தவர் என்பதும்தான். அவருக்கு `மிக நெருக்கமாக’ இருந்த பிரதிபாவின் பெரிய தந்தையார் பார்ப்பனர் அல்லாதவர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டி-ருந்தார் என்பது பெறப்படுகிறது.

இன்னொரு முக்கியச் செய்தியை, பிரதிபா பாட்டிலின் துணைவர் தருகிறார். மண்டல் ஆணையம் நிறைவேற்ற ஆணை வந்த பொழுது, மகாராஷ்டிரத்தில் கலவரத்தைத் தூண்டப் பெரு முயற்சி நடந்தது. ஆனால், நாக்பூரில் கூடிய மகாராஷ்டிரச் சட்டப் பேரவையில் சுமார் மூன்று மணி நேரம் புள்ளி விவரங்களுடன் பேசி அக்கலவர முயற்சியை முறியடித்து, அமைதியை நிலை நாட்டினார், பிரதிபா பாட்டில்.

இந்தப் பின்னணியில் பார்க்கும்பொழுது தான் 1962 முதல், மாநிலக் காங்கிரசின் தலைவராக, சட்டப் பேரவை உறுப்பினராக, அமைச்சராக, நாடாளுமன்ற மாநிலங்களவைத் துணைத் தலைவராக, மக்களவை உறுப்-பினராக, பல்வேறு நாடுகளில் நடந்த பல-வகைப் பன்னாட்டு அரங்குகளில் பங்கேற்ற-வராக, ஒரு மாநிலத்தின் ஆளுநராக, அப்பழுக்-கற்ற பொது வாழ்வினராக, மதச் சார்-பற்றவராக, சிறந்த நிர்வாகி என மெய்ப்-பித்தவராக உள்ள ஒருவரைப் பார்ப்பன ஏடுகள் ஏன் பரிகசிக்கின்றன என்பது தெரியவரும்.

——————————————————————————————————

திருமதி. பிரதிபா பாட்டில்
வாழ்க்கைக் குறிப்பு

தந்தை பெயர்: நாராயணராவ்

பிறந்த தேதி: டிசம்பர் 19, 1934

பிறந்த இடம்: மகராஷ்டிரா மாநிலம் ஜல்காவ்ன்

துணைவர் பெயர்: டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத்

குழந்தைகள்: பிரதிபா-ஷெகாவத் தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கல்வித் தகுதி: எம்.ஏ. எல்.எல்.பி. கற்று வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளார்.

பொது வாழ்வில் ஈடுபட்டு சமூகப் பணியாற்றி வந்த பிரதிபா பாட்டில் 1962 முதல் 1985 வரை தொடர்ந்து 23 ஆண்டுகள் மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில் துணை அமைச்சராகவும் பின்னர் அமைச்சராகவும் பொறுப்பேற்றுப் பணிபுரிந்துள்ளார். குடிமைப் பொள் வழங்கல், மக்கள் நலவாழ்வு, சுற்றுலா, வீட்டுவசதி, சமூக நலம், ஊரக வளர்ச்சி, மதுவிலக்கு, மறுவாழ்வு மற்றும் பண்பாடு, கல்வித் துறை என பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பணியாற்றியுள்ளது சிறப்பான தகுதிகளாகும்.

1985 முதல் 1990 வரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங் களவைத் துணைத் தலைவராகப் பணியாற்றி யுள்ளார்.
1991இல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு பணியாற்றினார்.

கடந்த 2004ஆம்ஆண்டு ராஜ°தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

சமூக மற்றும் பண்பாட்டுத் துறைகளில் பெண்கள் நலம், பணியாற்றும் மகளிருக்கு விடுதிகள் ஏற் படுத்துதல், கிராமப்புற இளைஞர் நலன், பார்வை யற்றோருக்கான பள்ளிகள் போன்றவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி வந்துள்ளார்.

கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துதல், பெண்கள் நலனை மேம்படுத்துதல் ஆகியவைக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றுவது தனது விருப்பம் என்பது பிரதிபாட்டிலின் கருத்து ஆகும்.

பல்வேறு உலக நாடுகள் சுற்றி வந்த பிரதிபா பாட்டில் சமூக நலம் குறித்த உலக அளவிலான மாநாடுகளில் பங்கேற்றுள்ளதுடன் பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக மகளிர் மாநாட்டில் பங்கேற்றார்.
——————————————————————————————————

பதவியின் கௌரவத்தைக் குலைப்பது யார்?

எஸ். குருமூர்த்தி
“”எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பிரசாரமானது நாட்டின் மிக உயர்ந்த பதவியின் மதிப்பைக் குலைப்பதாக இருந்துவிடக் கூடாது” -இப்படிக் கூறி இருப்பவர், குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீல்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்த அளவுக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் பேசப்பட்டதன் காரணமே, அத்தனை விவகாரங்களில் பிரதிபா பாட்டீல் சம்பந்தப்பட்டிருப்பதும், அவை தொடர்பாக நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் வழக்குகளும் முதல் தகவல் அறிக்கைகளும் பதிவாகியிருப்பதால்தான்.

இவையெல்லாம் வெறும் புகார்கள்தானா? இந்த குற்றச்சாட்டுகளைக் கூறியவர்கள் யார்? தேசிய ஜனநாயக கூட்டணியா, பாரதீய ஜனதாவா? பரபரப்புக்காக செய்தி ஊடகங்களே அவற்றைப் பரப்பிவிட்டனவா?

பேராசிரியர் வி.ஜி. பாட்டீல் என்பவரின் கொலைக்குப் பின்னால் மூளையாகச் செயல்பட்டவர் பிரதிபா பாட்டீலின் சகோதரர் ஜி.என். பாட்டீல் என்று குற்றம் சாட்டியவர் ரஜனி பாட்டீல். அவர்தான் வி.ஜி. பாட்டீலின் மனைவி; ஜலகாமைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியை.

வி.ஜி. பாட்டீல், ஜி.என். பாட்டீல் இருவருமே சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஜலகாம் மாவட்டப் பிரமுகர்கள். பேராசிரியர் வி.ஜி. பாட்டீல், ஜி.என். பாட்டீலை ஜலகாம் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் தோற்கடித்தவர். சுனாமி நிவாரணத்துக்காகவும், பிரதிபா பாட்டீல் ராஜஸ்தான் மாநில ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கொண்டாடுவதற்கும் லட்சக்கணக்கான ரூபாய்களைத் திரட்டி, அதை உரிய வகையில் செலவழிக்காமல் பிரதிபாவும் அவரது சகோதரர் ஜி.என். பாட்டீலும் ஏமாற்றியதை அம்பலப்படுத்தப் போவதாக எச்சரித்தார் அவர். “”உங்களைக் கொல்ல, அடியாள்களை ஏவிவிட்டுள்ளனர்” – வி.ஜி. பாட்டீலுக்கு 3 எச்சரிக்கைக் கடிதங்கள் வந்தன.

கிரிமினல் சட்டப்படி, ஒருவர் ஒரு கொலையைச் செய்தாலோ, செய்யத் தூண்டினாலோ அதில் அவருக்கு ஒரு தனிப்பட்ட ஆதாயம் இருக்க வேண்டும். இந்த வழக்கில் அது பிரதிபா பாட்டீலை நோக்கியே இருந்தது.

இந்த ஆதாரம் சரியில்லை என்று கருதினாலும்கூட, 2005 செப்டம்பரில் வி.ஜி. பாட்டீலைக் கத்தியால் குத்திக் கொன்றவர்களில் ஒருவன், சிறைச்சாலையிலேயே உண்ணாவிரதம் இருந்தான். “”இந்தக் கொலையில் நீங்கள் அடியாள்கள்தான் என்றால் உங்களை ஏவிவிட்டவர்கள் யார்?” என்று கேட்டபோது அவர்கள், “”ரஜனி பாட்டீல் யார் யார் மீது குற்றஞ்சாட்டுகிறாரோ அவர்கள்தான்” என்று பதில் அளித்தான். பின்னர் அந்த “”சாட்சியமும்” மறைந்துபோனது. சிறையில் போலீஸôரின் காவலிலேயே அந்தக் கைதி மர்மமாக இறந்தார்.

பிரதிபாதான் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிற்கப்போகிறார் என்று யாரும் கற்பனை செய்துகூட பார்த்திராத அந்த நாளில் வி.ஜி. பாட்டீலின் கொலையையும், அதில் தொடர்புள்ளதாகக் கருதப்படும் ஜி.என். பாட்டீலும் அவருடைய அரசியல் சகாவும், அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களால் சட்டத்தின் பிடியில் சிக்கிவிடாமல் எப்படி காப்பாற்றப்படுகிறார்கள் என்று “ஆஜ்-தக்’ டி.வி. நிருபர் படம்பிடித்துக் காட்டினார்.

ஜலகாமிலிருந்து 2 முறை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவராக பிரதிபா இருந்திருந்தும் மாவட்ட காங்கிரஸ் தலைவரான வி.ஜி. பாட்டீல் படுகொலை செய்யப்பட்டது தெரிந்தும் அவருடைய மனைவியான ரஜனியிடம் அனுதாபம் தெரிவித்துக் கூட பிரதிபா ஒரு வார்த்தைகூட பேசியதே இல்லை என்பது ஆச்சரியமாக இல்லை?

2005 தொடக்கத்திலும் 2007-ம் ஆண்டிலும், காங்கிரஸ் கட்சி என்ற பெரிய குடும்பத்தின் தலைவரான சோனியா காந்திக்கு தனது கணவரின் படுகொலை குறித்து 2 முறை கடிதம் எழுதினார் ரஜனி. ஜி.என். பாட்டீலை அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்கள் காப்பாற்றுகிறார்கள் என்று இருமுறை நேரில் சந்தித்தும் முறையிட்டார். சோனியாவின் மனம் இளகாததால் உயர் நீதிமன்றத்தின் ஒüரங்காபாத் கிளையில் புகார் மனு தாக்கல் செய்தார்.

பிரதிபா உள்ளிட்டவர்களின் பெயர்கள் அடங்கிய அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.ஐ. தான் விசாரிக்க வேண்டும் என்று 2007 பிப்ரவரியில் உத்தரவிட்டது.

குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறவரின் சகோதரர் இப்போது சி.பி.ஐ.யின் பார்வையில். சகோதரர் செய்த கொலைக்கு பிரதிபா எப்படி பொறுப்பாவார் என்று கேட்கலாம். சந்தேகத்துக்கு உரியவரை அவருடைய சகோதரியே காப்பாற்றுகிறார் என்று நீதிமன்றமே கூறியிருக்கிறதே, அதற்குப் பிறகும் இந்த விஷயத்தில் நாம் எப்படி பிரதிபாவை சந்தேகப்படாமல் இருக்க முடியும்?

பிரதிபா குடியரசுத் தலைவர் ஆகிவிட்டால் அவருடைய சகோதரரை சி.பி.ஐ.யால் எப்படி விசாரிக்க முடியும்? நாட்டின் மிக உயர்ந்த பதவியின் மதிப்பைக் குலைக்க முயல்வது யார்? கொலை விசாரணையிலிருந்து சகோதரரைக் காப்பாற்றியவரா? பொதுமக்களிடம் அதை அம்பலப்படுத்தியவர்களா?

1973-ல் பிரதிபா பாட்டீல் தனது சொந்தப் பெயரில், தன்னையே நிறுவனர் தலைவராகவும் தனது உறவினர்களை இயக்குநர்களாகவும் கொண்டு கூட்டுறவு வங்கியொன்றை தொடங்கினார்.

சில ஆண்டுகள் கழித்து அந்த வங்கி -காய்கறி விற்பவர்கள், வீட்டு வேலை செய்கிறவர்கள், தினக்கூலிகள் மற்றும் இவர்களைப் போலவே கடுமையாக உழைத்து சம்பாதிப்பவர்களிடமிருந்து ரூ.760 லட்சத்தை டெபாசிட்டாகத் திரட்டியது. 1990-ல் அந்த வங்கி, பிரதிபாவின் உறவினர்கள் உள்பட பலருக்கும் கடன் வழங்கியது. பெண்களுக்கு மட்டும்தான் கடன் தர வேண்டும் என்பது அந்த வங்கியின் முக்கியமான விதி. ஆனால் பயன்பெற்றவர்களில் பிரதிபாவின் உறவினர்கள் பலர் இருந்தனர். அத்தனை பேரும் ஆண்கள் என்பதுதான் வேடிக்கை.

பிரதிபாவின் உறவினர்கள் வாங்கிய கடனுக்கான வட்டித் தொகை ரூ.33 லட்சம் ரத்து செய்யப்பட்டது; இந்த குறிப்பைப் புரிந்துகொண்ட அவர்கள், அசல் ரூ.225 லட்சத்தையும் திருப்பித் தராமல் தங்களிடமே வைத்துக் கொண்டனர்.

பிரதிபாவின் மற்றொரு சகோதரர், வங்கிக்கு உரிய தொலைபேசியை வீட்டுக்கு எடுத்துச்சென்று பங்குச் சந்தை தரகர்களுடன் அன்றாடம் பேசி 20 லட்ச ரூபாய் பில் வருமாறு சமூகத்துக்கு சேவை செய்தார்.

இதைப்போன்ற முறைகேடுகளும், சுரண்டல்களும் வங்கியின் நிதியில் 37%-ஐ கரைத்துவிட்டன. வேறு வழியில்லாமல் வங்கி நொடித்து விழுந்தது. ஏழை முதலீட்டாளர்கள் தங்களுடைய சேமிப்பு, வட்டி எல்லாவற்றையும் இழந்தனர். பிரதிபாவின் உறவினர்களோ அவர்களுடைய இழப்பிலிருந்து லாபம் பார்த்துவிட்டனர்.

2002-ல் அந்த வங்கியின் நிதி நிர்வாகத்தை ஆழ்ந்து ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி, வங்கியின் உரிமத்தை 2003-ல் ரத்து செய்தது. இனி இந்த வங்கியைத் தொடர்ந்து இயங்க அனுமதிப்பது மக்களின் நலனுக்கு எதிரானது என்ற முடிவுக்கு அது வந்தது. 2002 ஜூன் 18-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரகசிய அறிக்கையில், உறவினர்களுக்கே கடனும் சலுகையும் வழங்கியிருப்பது பெரும் மோசடியே என்று சாடியிருக்கிறது. பிரதிபா உள்ளிட்ட நிர்வாகிகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

வங்கி ஊழியர்களில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகளை சட்டப்படி குறிப்பிட்ட எண்ணிக்கையில் இட ஒதுக்கீட்டின்படி நியமிக்காமல், முழுக்க தங்களுக்கு வேண்டியவர்கள், உறவினர்களையே நியமித்துவிட்டனர். வங்கி நிர்வாகத்துக்கும் பிரதிபாவுக்கும் தொடர்பே இல்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால் 2002 ஜனவரி 22-ல் நடந்த இயக்குநர்கள் கூட்டத்தில்கூட, தலைமை நிர்வாகியை நியமிக்கும் அதிகாரத்தை பிரதிபாவுக்கு வழங்கியிருக்கின்றனர்.

இவையெல்லாம் குற்றச்சாட்டுகள் அல்ல, உண்மைகள். வங்கியை இப்படி முறைகேடாக நிர்வகித்ததற்காக விசாரணை நடத்தினால் பிரதிபா உள்பட அனைத்து இயக்குநர்கள் மீதும் கிரிமினல் வழக்கு தொடரப்படும். பிரதிபா பாட்டீல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசியல் சட்டம் 361 (2) பிரிவின்படி அவர் மீது வழக்கு தொடுக்க முடியாது.

சந்தேகத்துக்குரிய குற்றவாளி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தப் பதவியில் அமர்ந்தால் அதனால் அந்தப் பதவிக்கு கெüரவம் அதிகரிக்கும் என்பதுதான் பிரதிபாவின் வாதம் போலிருக்கிறது. தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் உள்ள வங்கியில் முறைகேடான செயல்களை அனுமதிக்கிறவர் குற்றவாளியா, அல்லது அதை வெளி உலகுக்குத் தெரிவித்து வாக்களிக்கப் போகும் மக்கள் பிரதிநிதிகளையும், நாட்டின் குடிமக்களையும் முன்கூட்டி எச்சரிப்பவர்கள் குற்றவாளிகளா?

——————————————————————————————————————-
Part II

பிரதிபாவின் பெயரில் தொடங்கிய வங்கி மட்டும் திவாலாகவில்லை; அவர் தன்னையே நிறுவனராகவும் முதன்மை ஊக்குவிப்பாளராகவும் கொண்டு தொடங்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலையும் அதேபோல நொடித்துப்போனது. மகாராஷ்டிர மாநிலத்தின் கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை 1999-ல் சோனியா காந்தியால் தொடங்கப்பட்டது. அதிக அளவு சர்க்கரையை உற்பத்தி செய்யாமலேயே ஆலை நொடித்தது. பிரதிபாவின் வங்கி உள்பட சில வங்கிகள் சேர்த்து அளித்த ரூ.20 கோடி திரும்ப வராமலேயே நஷ்டமாகிவிட்டது. ஊரக வளர்ச்சிக்காக நாட்டு மக்கள்தான் இந்த நஷ்டத்தையெல்லாம் ஏற்று ஈடுகட்ட வேண்டும். சர்க்கரை ஆலையின் தலைவரும், முதன்மை ஊக்குவிப்பாளருமான பிரதிபாவுக்கும் அந்த ஆலைக்கும் தொடர்பு கிடையாது என்று இப்போது அவருடைய நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள மிக உயர்ந்த பதவியின் கெüரவத்தைக் குலைப்பது யார்? பொதுமக்களின் 20 கோடி ரூபாயை விழுங்கிய கூட்டுறவு ஆலையா அல்லது அதை நாட்டுக்கு அம்பலப்படுத்திய எதிர்க்கட்சிகளா?

சகோதரருடன் கூட்டு சேர்ந்து கூட்டுறவு வங்கியையும் சர்க்கரை ஆலையையும் நடத்தினார். கணவர், மகள்களின் உதவியோடு கல்வி நிலையங்களையும் உழைக்கும் மகளிருக்கான விடுதிகளையும் நடத்தினார். பிரதிபாவின் கணவர் தேவிசிங் ஷெகாவத் செய்த சாதனைகளைத்தான் பாருங்களேன்! கிசான் தாகே என்ற ஏழை பள்ளிக்கூட ஆசிரியரை, உரிமையை வலியுறுத்தினார் என்ற ஒரே காரணத்துக்காக சம்பளம் கொடுக்காமலும், வேலையே இல்லாத தொலைதூர கிராமப் பள்ளிக்கு மாற்றியும் அலைக்கழித்தார். வேதனை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்குக் காரணம் தேவிசிங்தான் என்று அவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்தார்.

ஆனால் போலீஸôர், தாகேவின் மரணம் தொடர்பாக தேவிசிங் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்யக்கூட மறுத்துவிட்டனர். பேராசிரியர் பாட்டீல் கொலை வழக்கில் எப்படி பிரதிபாவின் அண்ணன் மீது வழக்குப்பதிவு செய்ய மறுத்தனரோ அப்படியே இந்த வழக்கிலும் போலீஸ்காரர்கள் நடந்து கொண்டனர். இந்த வழக்கிலும் நீதிமன்றம் ஒரு முறையல்ல, 3 முறை தலையிட்டது. சந்தர்ப்ப, சாட்சியங்களை வைத்துப் பார்க்கும்போது தேவிசிங்தான் முதல் குற்றவாளி என்று அது திட்டவட்டமாகக் குறிப்பிட்டது.

இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். உயர்ந்த பதவிக்கு இழுக்கு என்று பிரதிபா எதைக் கூறுகிறார்? அவருடைய கணவரின் கிரிமினல் நடவடிக்கைகளையா? அல்லது அவற்றை மக்கள் அறிய அம்பலப்படுத்தும் பத்திரிகைகளையும் எதிர்க்கட்சிகளையுமா?

அடுத்தது அவருடைய குடும்பத்துக்குச் சொந்தமான சில அறக்கட்டளைகளின் அளப்பரிய சேவைகளைப் பற்றியது. ஷ்ரம் சாதனா டிரஸ்ட் (எஸ்.எஸ்.டி.), மகாராஷ்டிர மகிளா உதயம் டிரஸ்ட் (எம்.எம்.யு.டி.) என்ற அந்த இரண்டுக்குமே பிரதிபா பாட்டீல்தான் தலைவர், அவருடைய மகள் ஜோதி ரதோர்தான் நிர்வாக அறங்காவலர். இந்த இரு அமைப்புகளும் சேர்ந்து 5 உழைக்கும் மகளிர் விடுதிகளையும், 2 பள்ளிகளையும், ஜலகாமில் ஒரு பொறியியல் கல்லூரியையும் நடத்துகின்றன.

அவர்களுடைய உழைக்கும் மகளிர் விடுதி ஒன்று மும்பை-புணே நெடுஞ்சாலையில் பிம்ப்ரி என்ற இடத்தில், அரசு கொடுத்த நிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த விடுதிகள் மத்திய, மாநில அரசுகள் தந்த மானியங்களில்தான் கட்டப்பட்டுள்ளன. ஆண்டு வருமானம் ரூ.16,000-க்கு மேல் சம்பாதிக்காத ஏழைகளுக்குத்தான் இந்த விடுதியில் இடம் தர வேண்டும் என்பது முதல் விதி. ஆனால் அங்கு தங்கியுள்ள மகளிரில் பலர் தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த, அதிக வருவாய் உள்ள பெண்கள். தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்படும் 22.5% இடங்களும் கூட மற்றவர்களுக்கே வழங்கப்படுகின்றன. ஆக இந்த அறக்கட்டளையின் நோக்கம் “”அறம்” அல்ல, எல்லாவற்றிலும் “”லாபம் தேடு” என்பதுதான். இந்த விவகாரத்தில் பிரதிபாவின் நடத்தையால் அந்த உயர்ந்த பதவியின் மாண்பு குலைகிறதா அல்லது அதை அம்பலப்படுத்தும் ஊடகங்களாலா?

குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக, அதாவது 2007 ஏப்ரல் 26-ல், மகாராஷ்டிர மாநில அரசு 25 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பை பிரதிபாவின் கணவருடைய கல்விச் சங்கத்துக்கு அளித்தது. அங்கு விளையாட்டு அரங்க வளாகத்தைக் கட்டுவதற்காக அந்த நிலம் தரப்பட்டது. அதற்கு ரூ.36 லட்சம் தரப்பட்டது. 1996-ல் தனக்கு தரப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இத் தொகையை பிரதிபா வழங்கினார். உறவினர்கள் அறங்காவலர்களாக இருக்கும் அறக்கட்டளைகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை அளிக்கக்கூடாது என்று அரசு விதி குறிப்பிடும் நிலையிலும் இந்த முறைகேடு நடந்திருக்கிறது.

தொகுதி மேம்பாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய பிரதிபாவின் செயலால் உயர் பதவியின் கெüரவத்துக்கு இழுக்கா அல்லது அதை அம்பலப்படுத்திய பத்திரிகைகளின் நடவடிக்கையால் இழுக்கா?

தனியார் கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று எல்லா மாநில அரசுகளும் சட்டம் இயற்றுகின்றன. இந் நிலையில் பிரதிபாவின் குடும்பத்துக்குச் சொந்தமான இரு அறக்கட்டளைகளும் சட்ட விரோதமாக கூடுதல் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு, அதை நன்கொடை என்ற கணக்கில் எழுதிக்கொண்டன. இந்த முறைகேட்டை வருமான வரித்துறை கண்டுபிடித்து, வரி போட்டது.

இதில் எது உயர் பதவியின் மாண்பைக் குறைக்கிறது? கூடுதல் கல்விக் கட்டணத்தை நன்கொடை என்ற பெயரில் மறைத்து வரி ஏய்ப்பு செய்ததா அல்லது அதை பத்திரிகைகளும் எதிர்க்கட்சிகளும் அம்பலப்படுத்தியதா? இன்னும் பல ஊழல்கள் இருந்தாலும் எழுத இடம் போதாது என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.

குடியரசுத்தலைவர் பதவியின் மாண்பை, அந்தப் பதவிக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிபா பாட்டீல்தான் குலைக்கிறாரே தவிர, அதை அம்பலப்படுத்தும் பத்திரிகைகளோ இதர செய்தி ஊடகங்களோ அல்ல. வேட்பாளர் என்று அவரை அறிவித்தபோதே இத்தனை ஊழல்களும் அணிவகுத்து முன் நிற்கிறதே, அவர் குடியரசுத்தலைவராகவே ஆகிவிட்டால் அப்புறம் என்னவெல்லாம் நடக்கும்?

தேர்தலுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பதவி என்பதே கேலிக்குரியதாகிவிடும். குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களைப் பற்றி பேசாதீர்கள் என்று பிரதிபா வேண்டுகோள் விடுப்பதன் மூலம், பதவியின் மாண்பைக் காப்பாறிவிட முடியாது! தேர்தலுக்குப் பிறகும் இந்த விவகாரங்கள் பேசப்படும். நீதிமன்றத்தில் இது வழக்காக வந்தால், கேலி இன்னமும் உச்சத்துக்குப் போகும். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் உடன்பாட்டுக்கு வந்தால்கூட, இத்தனை முறைகேடுகளைச்செய்துள்ளதால் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முடியாது.

சுயநல நோக்கில் அவர் விடுத்துள்ள இந்த வேண்டுகோளே, அவர் குற்றம் செய்ததை நிரூபிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். இந்தப் பதவிக்குரிய கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்று பிரதிபா உண்மையிலேயே விரும்பினால் போட்டியிலிருந்து அவர் விலகுவதுதான் ஒரே வழி.

———————————————————————————-
இந்தியக் குடியரசும் இங்கிலாந்து முடியரசும் ஒன்றா?

இரா. செழியன்

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்களைப் பரிசீலித்து, தகுதியற்றவைகளை நிராகரித்த பிறகு பிரதிபா தேவிசிங் பாட்டீல், பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோர் மட்டுமே இப்போது களத்தில் நிற்கின்றனர்.

பிரிட்டனில் அமலில் உள்ள “வெஸ்ட்மினிஸ்டர்’ பாணி அரசியல் அமைப்பு முறையே நமக்கும் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியல் நிர்ணய சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பியதால், மத்திய அமைச்சரவை எடுக்கும் முடிவுகளின்படி செயல்பட வேண்டிய -அடையாளச் சின்னமாக மட்டும் -நாட்டின் தலைவரான குடியரசுத் தலைவர் பதவி இந்தியாவில் உருவாக்கப்பட்டது. பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிப்பதிலும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதிலும் மட்டும் ஓரளவுக்கு இவர் சுதந்திரமாகச் செயல்படுகிறார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டும் வாக்களித்து குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வரைவு வாசகத்தை, அப்போதைய அரசியல்சட்ட ஆலோசகர் பி.என். ராவ் வடித்திருந்தார்.

நேருஜி அதை ஏற்கவில்லை. “இது எளிமையாக இருக்கும் என்பது உண்மையே, ஆனால் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும். நாடாளுமன்றம் என்பது ஒரு கட்சி அல்லது குழுவின் ஆதிக்கத்தில் இருக்கும். அப்போது அந்தக் கட்சி அல்லது குழு தங்களைச் சேர்ந்த ஒருவரை மட்டுமே குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் நிலைமை ஏற்பட்டுவிடும். இதுவே அலங்காரப் பதவிதான், மிகக் குறைந்தவர்கள் தேர்ந்தெடுத்தால் இது அப்பட்டமான “”கைப்பாவை” பதவியாகிவிடும். குடியரசுத் தலைவரும் மத்திய அமைச்சரவையும் ஒரே எண்ணங்களைப் பிரதிபலிப்பார்கள்’ என்று சுட்டிக்காட்டினார்.

அதன் பிறகு, அரசியல் சட்ட நிர்ணய சபையில் மீண்டும் இது விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும், சட்டமன்றங்களின் எல்லா உறுப்பினர்களும் சேர்ந்து வாக்களிக்க வேண்டும், மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் வாக்குகளுக்கு மதிப்பு போடப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் அரசர் எப்படியோ இந்திய ஜனநாயகத்தில் குடியரசுத் தலைவரும். சம்பிரதாயமான தலைவர்தான்! ஆயினும், பிரதமர் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரின் தலைவராகவே இந்தியாவில் குடியரசுத் தலைவர் பார்க்கப்படுகிறார். நாடு சுதந்திரம் அடைந்தது தொடங்கி முதல் 20 ஆண்டுகளுக்கு பாபு ராஜேந்திர பிரசாத், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஜாகீர் உசேன் போன்ற பழுத்த அனுபவம் வாய்ந்த திறமைசாலிகள் அந்தப் பதவியை அலங்கரித்தனர்.

1969-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்குள் } தலைவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்ட கலவரத்தாலும், மனசாட்சிப்படி வாக்களிப்பது என்ற கருத்தை பிரதமரே கையாண்டதாலும் அந்தப் பதவிக்குரிய கெüரவமும், கண்ணியமும் பாதிப்படைந்தது. குடியரசுத் தலைவர் என்ற பதவி வெறும் பொம்மை போன்றதாக இருக்கும் என்ற அச்சம், நிஜமாகிவிட்டது.

இப்போது நடைபெறவுள்ள 12-வது குடியரசுத் தலைவருக்கான தேர்தலைப் பொருத்தவரை, இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகுதி வாய்ந்த பலர் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்றனர்.

முதலில், பிரணாப் முகர்ஜியை எடுத்துக் கொள்வோம். திறமை, அனுபவம் ஆகிய இரண்டும் கலந்த அவரைவிடத் தகுதி வாய்ந்தவர் யாரும் இல்லை. அவர்தான் தேர்வு செய்யப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், “”அவர் இல்லை -அவர் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் தேவைப்படுகிறார்” என்ற அறிவிப்பு கட்சி மேலிடத்தால் வெளியிடப்பட்டது.

மிகுந்த திறமைசாலி என்பதை கட்சித் தலைமையே ஒப்புக்கொண்டது பெருமைக்குரிய விஷயம்தான் என்றாலும், மத்திய அமைச்சராக இருப்பதற்குத்தான் தகுதி தேவை, குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்படி எதுவும் அவசியம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கருதுவதுபோலத் தெரிகிறது. பொது வாழ்வில், “”தகுதியே” தகுதிக்குறைவாகவும் இதைப்போல, ஆகிவிடுவது உண்டு.

அதன் பிறகு பலருடைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, அதே வேகத்தில் நிராகரிக்கவும்பட்டன. எதைச் செய்வது என்று புரியாமல் ஒரு குழப்பத்தில், ராஜஸ்தான் மாநில ஆளுநர் பிரதிபா பாட்டீலை நிறுத்துவது என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும்- இடதுசாரி கட்சிகளும் ஒப்புக்கொண்டன.

இதில் தவறு ஏதும் இல்லை. 1950-களில் குடியரசுத் தலைவர் பதவி என்பதை மிகுந்த மரியாதைக்குரிய, பெருமைக்குரிய பதவியாகக் கருதினார் ராஜேந்திர பிரசாத். கட்சியிலோ, மத்திய அமைச்சரவையிலோ வகிக்கும் பதவியைவிட குடியரசுத் தலைவர் பதவி பெரிது என்று அவர் நினைத்தார். மெதுவாக அந்த நிலைமை மாறி, ஆளுங்கட்சித் தலைவர் பதவி என்பது பிரதமர், குடியரசுத் தலைவர் பதவிகளைவிட சக்திவாய்ந்தது என்று இப்போது ஆகிவிட்டது.

பிரதிபா பாட்டீல் மீது உச்ச நீதிமன்றத்திலும் தேர்தல் கமிஷனிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரதிபா மட்டும் அல்லது அவர்களுடைய உறவினர்களின் செயல்கள் குறித்தும் புகார்கள் செய்யப்படுகின்றன. வேட்பாளர்களின் சொத்து, கடன் விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்குநாள் வலுத்து வருகிறது.

சட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்குப் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இருப்பவர்களும் -“”அரசியல் சட்டத்துக்கு விசுவாசமாக இருப்பேன், நாட்டின் ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் கட்டிக்காப்பேன்” என்று உறுதி அளிக்க வேண்டும் என்று “”தேசிய ஒருமைப்பாடு-பிராந்தியவாதம்” தொடர்பாக ஆராய 1962-ல் நியமிக்கப்பட்ட சர் சி.பி. ராமஸ்வாமி ஐயர் கமிட்டி பரிந்துரை செய்தது.

ஆனால், 16-வது திருத்தச்சட்டம் என்ற புதிய அரசியல் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதை அந்த நாளில் திமுகவுக்கு எதிரான சட்டம் என்றே அழைத்தார்கள். மக்களவை, சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கட்டிப்போட அந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

2003 மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவின்படி, மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய படிப்பு, சொத்து, கடன், தங்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், விசாரணையில் உள்ள வழக்குகள் போன்ற விவரங்களை உரிய படிவங்களில் தெரிவிக்க வேண்டியவர்களானார்கள். இதை எல்லாப் பதவிகளுக்கும் கட்டாயமாக்குவது நல்லது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், சிவசேனை ஆகியவற்றுக்கு உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் பிரதிபா பாட்டீல்தான் வெற்றி பெறுவார்; 1969-ல் கடைப்பிடிக்கப்பட்ட மனசாட்சிப்படி வாக்களிக்கும் உத்தி கடைப்பிடிக்கப்பட்டால் இந்த முடிவு மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அரசியல் ஆதரவைவிட பிரதிபா பாட்டீலுக்கு ஆன்மிக ஆதரவு இருக்கிறது. பிரம்ம குமாரிகள் சங்கத்தை நிறுவிய பாபா லேக்ராஜின் பரிபூரண ஆசி (1969-ல் அவர் இறந்துவிட்டார்) பிரதிபாவுக்கு இருக்கிறது. மவுண்ட் அபுவில், பிரம்ம குமாரிகள் சங்கத் தலைவருடன் சமீபத்தில் பேசியபோது, “”மிகப்பெரிய பொறுப்பை ஏற்க நீ தயாராக இருக்க வேண்டும்” என்று பாபா லேக்ராஜ் கூறியிருக்கிறார். அதன் பிறகே, கட்சித் தலைவர் சோனியா காந்தியிடமிருந்து அவருக்கு அந்த இனிய அழைப்பு போயிருக்கிறது, குடியரசுத் தலைவர் தேர்தலில் நீங்கள்தான் வேட்பாளர் என்று.

பிரிட்டிஷ் வரலாற்றைப் படித்தவர்களுக்கு ஞாபகம் இருக்கும், முதலாவது ஜேம்ஸ் என்ற மன்னன், கடவுள் தன்னிடம் பேசி தனக்களித்த ஆசியினால், “”தெய்வீக உரிமையோடு” மக்களை ஆள்வதாக அறிவித்தார்.

பிரிட்டனில் மன்னர் எப்படி தேசத்தின் அடையாளத் தலைவரோ, அப்படி குடியரசுத் தலைவர் இங்கு அடையாளத் தலைவராகப் பதவி வகிக்கிறார். அதற்காக இங்கிலாந்து மன்னரைப்போலவே தனக்கும் “”தெய்வீக உரிமை” இருப்பதாகக் கூறி மக்களைத் தொல்லை செய்யாதிருப்பாராக!

(கட்டுரையாளர்: முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்.)

————————————————————————————————————

மிஸ்டர் பிரதிபா பாட்டீல்…
Prathibha patil husband devisingh shekawath

குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீலின் வருகைக்காக தனது இல்லம் முன்பு காத்திருக்கும் கணவர் தேவிசிங் ஷெகாவத்.

புது தில்லி, ஜூலை 23: இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீல் இனி தனது குடும்பத்திற்கும் தலைவியாக செயல்படுவார் என அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் கூறினார்.

குடும்பத் தலைவி மட்டுமில்லாது எங்களின் குலத்தலைவியாகவும் அவர் இருப்பார் என அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசுகையில் அவர் இதை நகைச்சுவையாக குறிப்பிட்டார். ஜூலை 25 முதல் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு குடிபுக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் தங்களின் குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வரும் கல்வி நிறுவனங்களை தங்களின் மகன்களில் ஒருவர் இரண்டாண்டுகளுக்கு முன்னர் நிர்வகித்து வந்தார். தற்போது அதில் அவர் தலையிடுவது இல்லை என்றார்.

குடியுரசுத் தலைவரின் கணவராக இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்கையில், தான் ஒரு சாதாரண மனிதன் தான் என அவர் தெரிவித்தார்.

Posted in Abdul Kalam, Abdulkalam, abuse, Accusations, Accused, Advani, Akbar, Allegation, Alliance, APJ, Attorney, Aurangazeb, Babar, Bajpai, bank, BJP, Bribe, Bribes, BSP, Burqa, candidate, Chandrasekar, Chandrasekhar, Chezhiyan, Co-operative, Condemn, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Cooperative, Corrupt, Corruption, CPI, CPI(M), Dalit, Desai, Devisingh, DMK, Elections, Emergency, Fakhruddin, Fakhrudheen, Fakruddin, Fakrudheen, Fakrudhin, Fakrudin, Female, Finance, Giri, Governor, Governor-general, Gurumoorthy, Gurumurthy, Hindu, Hinduism, History, Hussain, Hussein, Independence, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Islam, Issues, Jailsingh, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, JD, Kalaam, Kalam, kickbacks, KR Narain, Lady, Law, Lawyer, Loans, Lok Saba, Lok Sabha, LokSaba, maharashtra, Mahila Sahakari Bank, Manmohan, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MLA, Mogals, Moghuls, Moguls, Moraarji, Morarji, Moslem, MP, Mukhals, Muslim, Narain, Narayan, Narayanan, NDA, Neeraja, Neeraja Choudhri, Neeraja Choudhry, Neeraja Chowdhri, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Neeraja Chowdry, Nehru, nexus, Nomination, Order, Party, Patil, Pilani, PM, Polls, Post, Power, Pradhiba, Pradhibha, Pradiba, Pranab, Pranab Mukherjee, Pranav, Prathiba, Pratiba, Pratibha, Pratibha Devisingh Patil, PRATIBHA MAHILA BANK, PRATIBHA MAHILA SAHAKARI BANK, Pratibha Patil, President, Prez, Propaganda, Purqa, Radhakrishnan, Raj, Rajaji, Rajasthan, Rajeev, Rajeev Gandhi, Rajendra, Rajendra Prasad, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, Rajya Saba, Rajya Sabha, Rajyasaba, Rajyasabha, Rashtrapathi, Rashtrapathy, Reddy, Religion, Republic, SAHAKARI BANK, Sanjeev, Sanjeev Reddy, Sanjeeva reddy, Sarma, Scam, Scandal, SD Sharma, Sezhiyan, Shankar Dayar Sharma, Sharma, Shekavat, Shekavath, Shekawat, Shekawath, Shinde, Shivraj, Shivraj Patil, Shourie, Sikhs, Speaker, Speech, support, Sushil Kumar Shinde, TMMK, UPA, Vajpayee, Vajpayi, Veil, Venkatraman, vice-president, Victory, Vote, VP, VP Singh, Winner, Women, Zail singh, Zailsingh, Zakir | 6 Comments »

S Gurumurthy – Why only Hindu Gods are subjected to vulgarity in Arts?

Posted by Snapjudge மேல் மே 28, 2007

ஹிந்து தெய்வங்கள் மட்டும் ஆபாசகலைக்கு இலக்காவது ஏன்?

எஸ். குருமூர்த்தி

பிள்ளையார் சுழி போடுவதுபோல தொடக்கத்திலேயே எல்லோருக்கும் ஓர் எச்சரிக்கை.

எதை எழுதினாலோ, பார்த்தாலோ நாகரிகமானவர்கள் ஆபாசமாகக் கருதுவார்களோ அதைப் புனிதம் என்று மதச்சார்பற்றவர்கள் என்று தங்களைப் பறைசாற்றிக் கொள்பவர்கள் அடித்துக் கூறுவதால், அந்த ஆபாசத்தை வெளிப்படையாக எழுதித் தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்தக் கட்டுரை.

இங்கு சித்திரிக்கப்பட்டிருக்கும் ஆபாசத்துக்கு மன்னிப்புக் கோரி… பிரச்னையின் மையம் இதோ. ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட காட்சியை ஓர் ஓவியர் வரைந்தால் அது எப்படி இருக்கும்? அவருடைய கைகள் சிலுவையின் இருபக்கமும், கால்கள் சிலுவையின் அடிபாகத்திலும் வைத்து ஆணி அடிக்கப்பட்டு அவரது உடலிலிருந்து ரத்தம் சிந்துவதும்தானே அந்தச் சித்திரத்தின் மையம்.

ஆனால் இப்போதைய நவீன ஓவியர்கள் இந்த மையக் காட்சியை அரைகுறை ஓவியமாகவே கருதுகிறார்கள். மேலும் தங்களுடைய கற்பனையினால் எப்படி ஏசுவை சிலுவையில் அறைந்து சித்திரத்தை முழுமையான கலைச்சின்னமாக்குகிறார்கள் பாருங்கள்.

சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் துயிலுரியப்பட்டு – ஆம் நம்புங்கள்! முழு நிர்வாணமாகச் சித்திரிக்கப்பட்டு – அவருடைய ஆண்குறியிலிருந்து விந்துகள் சிந்தி ஆச்சரியப்படாதீர்கள், அதோடு மட்டும் நிற்கவில்லை – அந்த விந்து துளிகள் அந்தச் சிலுவைக்குக் கீழே வைக்கப்பட்டிருக்கும் மேற்கத்திய பாணி டாய்லெட் ஓட்டையில் விழுவதுபோலவும், அந்த டாய்லெட் அடியில் மீன்கள் இருப்பதுபோலவும், அந்த மீன்கள் அந்த விந்துகளை விழுங்குவதுபோலவும்… வக்கிரமான கற்பனையின் உச்சாணிக்குச் சென்று ஆபாசத்தைக் கலையாக்கிச் சித்திரித்து சிலுவையில் ஏசுநாதர் அறையப்பட்ட “அரைகுறை’ ஓவியத்தை முழுமையாக்குவதுதான் நவீன ஓவியம் (ம்ர்க்ங்ழ்ய் ஹழ்ற்). நம்புங்கள்; இது கற்பனையல்ல. இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த விஷயம். இது நடந்தது குஜராத்தில். ஆனால் செய்தது நரேந்திர மோடி அல்ல. அவர் இந்தக் கேவலத்தைத் தடுக்கத்தான் செய்தார். ஆனால் இதைத்தான் அற்புதமான ஓவியம்; அந்த ஓவியரின் சுதந்திரம் புனிதமானது என்று கூறுகிறார்கள் மதச்சார்பற்ற அறிவு ஜீவிகளில் சிலரும், பத்திரிகையாளர்களில் பலரும்.

இத்தோடு முடியவில்லை இந்த வக்கிரம்; இது ஓர் ஆரம்பம்தான். மேலும் பாருங்கள்; ஒரு பெரிய ஓவியத்தில் முழு நிர்வாணமான ஒரு பெண்.

இது அந்த ஓவியத்தின் முன்னுரை, முடிவல்ல. அந்தப் பெண்ணின் கர்ப்பப் பையிலிருந்து ஒரு சிசு துடித்து வெளியில் வர முயற்சி செய்வதுபோல அமைகிறது அந்த ஓவியத்தின் அருவருப்பான அடுத்தகட்டம். இப்போதும் முழுமையடையவில்லை அந்த ஓவியரின் அந்தப் படைப்பு. கடைசியில நிர்வாணமாக எல்லோரும் பார்க்கும்படி குழந்தை பெறும் அந்தப் பெண் “துர்க்கை அம்மன்’ என்று எழுதி அந்த ஓவியத்தை முடிக்கிறார் அந்த ஓவியர். அப்படி அநாகரிகமாக சித்திரிக்கப்பட்ட பெண்தான் துர்க்கை!

இந்த இரண்டு கீழ்த்தரமான ஓவியங்கள் மட்டுமல்ல; சிவ பெருமான் மற்றும் விஷ்ணுபகவான் போன்று ஹிந்துக்கள் வணங்கும் தெய்வங்கள் இதுபோலவே வக்கிரமாகச் சித்திரிக்கப்பட்டு அந்த ஓவியங்கள் குஜராத்தில் பரோடா மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இந்த அநாகரிகமான ஓவியக் கண்காட்சியை பொதுமக்கள் ஆட்சேபித்தனர்; ஆர்ப்பாட்டமும் செய்தனர்; போலீஸôரிடம் புகார் செய்தனர்; அதன்மேல் போலீஸôர் நடவடிக்கையும் எடுத்து அந்த ஓவியரைக் கைதும் செய்தனர்.

போலீஸ் நடவடிக்கை எடுத்த அடுத்த நிமிஷம் நாடு முழுதும் மதச்சார்பற்ற அறிவுஜீவிகளும் மற்றவர்களும் ஒட்டுமொத்தமாக ஆங்கிலப் பத்திரிகைகளும் குஜராத் முதல்வர் நரேந்தி மோடியைக் குறி வைத்து தாக்க ஆரம்பித்தனர். அவர் சட்டாம்பிள்ளையாக நடந்து கொள்வதாகவும் கலைஞர்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

“சுதந்திரமில்லையென்றால், கலைக்கு உயிரில்லை’ என்றெல்லாம் கோஷம் எழுப்பினார்கள் மும்பையிலும் தில்லியிலும்.

ஆனால் அப்படி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தாங்கள் எந்தவிதமான ஓவியக்கலையையும், எந்த ரகமான ஓவியங்களையும் பாதுகாக்க போராடுகிறோம் என்பதைக் கூறவும் இல்லை; அவர்களை யாரும் எதற்காகப் போராடுகிறீர்கள் என்று கேட்கவும் இல்லை. தைரியமிருந்தால் அவர்கள் எந்தவிதமான சித்திரங்களை வரையும் உரிமைக்காகப் போராடுகிறோம் என்று வெளிப்படையாகக் கூறியிருக்க வேண்டும்.

வக்கிரமாகச் சித்திரிக்கப்பட்ட ஏசுநாதர் ஓவியத்தையும், பெண்ணை கீழ்த்தரமாக்கி துர்க்கை என்று எழுதப்பட்ட அந்த ஓவியத்தையும் மக்கள் முன்னால் வைத்து “”இந்த ஓவியங்களை வரைந்து காட்சிக்கு வைத்தால் என்ன தவறு?” என்று நாணயமாக மக்களைக் கேட்டிருக்க வேண்டும் அவர்கள்.

ஆனால் அப்படிச் செய்ய அவர்களுக்குத் துணிவு கிடையாது. அவர்கள் அப்படிச் செய்தால், பரோடாவில் நியாயமாகத்தான் பொதுமக்கள் கொதித்தெழுந்தனர் என்கிற “குட்டு’ வெளியாகிவிடுமே! என்ன கலை என்பதை மறைத்து எல்லா பத்திரிகைகளும் “கலை சுதந்திரம் பறிபோகிறது’ என்று ஒப்பாரி வைத்தன.

ஆனால் எந்த மாதிரி கலை, எந்த மாதிரி படங்கள் பரோடாவில் காட்சிக்கு வைக்கப்பட்டன என்பதை எந்தப் பத்திரிகையும் நாணயமாக வெளியிடவில்லை. காரணம் ஆபாசத்தை எப்படி வெளியிடுவது என்பதுதான். பின் எப்படி ஆபாசம் கலையாக முடியும்? அதுமட்டுமல்ல; பரோடாவில் ஓவியக் கண்காட்சி நடத்துபவர்களுக்கு எதிராகப் புகார் கொடுத்தது ஏசுநாதரை அப்படி கீழ்த்தரமாகச் சித்திரித்ததால் மனம் புண்பட்ட ஒரு கிறிஸ்தவர். இந்த உண்மைகளைக் கூட வெளியிடாமல், ஹிந்து வெறியர்கள் கண்காட்சியை எதிர்க்கின்றனர் என்று கூசாமல் பொய் கூறின பத்திரிகைகள்! இன்று வரை உண்மையை எழுதவில்லை எந்தப் பத்திரிகையும்.

ஹிந்துக்கள் வழிபடும் ஆண் தெய்வங்களையும் பெண் தெய்வங்களையும் ஆபாசமாகச் சித்திரிப்பதையே தங்கள் கொள்கையாகக் கொண்ட ஓவியர்கள் பலர் நம் நாட்டில் இருக்கின்றனர். இவர்களில் தலைசிறந்து விளங்குபவர், பலராலும் பாராட்டப்படுகிற எம்.எஃப். உசேன்தான்.

ஹிந்துக்களின் எல்லா தெய்வங்களை – ஏன் எல்லோருக்கும் பொதுவான, பாரதியார் போற்றிய பாரத அன்னையையும்கூட துயிலுரிந்து, நிர்வாணமாகச் சித்திரித்த அற்புதமான கலைஞர் அவர். பதிவிரதையான சீதை நிர்வாணமாக பிரம்மசாரியான அனுமனின் வாலின் நுனியில் அமர்ந்திருப்பதுபோல ஓவியம் தீட்டினார் இந்த பிருகஸ்பதி!

“ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி’ என்பதுபோல ஏன் இப்படி ஹிந்து தெய்வங்களை மட்டும் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் சித்திரித்து ஓவியம் தீட்டுகிறார்கள் இவர்கள்? இந்தக் கேள்விக்குப் பதில் எல்லோருக்கும் புரிந்ததே.

ஹிந்து தெய்வங்களை எப்படிக் கேவலமாகச் சித்திரித்தாலும் அதைத் தட்டிக் கேட்கவோ, அதற்காகக் கோபப்பட்டு வெகுண்டு எழுந்து பஸ்களைக் கொளுத்துவோர் அப்படிச் செய்கிறவர்களை தீர்த்துக் கட்ட உத்தரவிட்டு மதக்கட்டளை பிறப்பிக்கவோ ஹிந்து மதத்தில் வழியில்லை. வேறுமத நம்பிக்கையை இப்படி ஆபாசமாக்க முடியுமா? மற்ற மதத்தினரிடம் இப்படி விளையாடிப் பாருங்கள் என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தோ அல்லது சங்கராச்சாரியர்களோ சவால் விடவில்லை. இப்படிக் கூறியது தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி கபூர்.

2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆபாசமான படங்களை வரைந்ததற்காக ஓவியர் உசேனுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதியளித்தது, உசேன் மனுவைத் தள்ளுபடி செய்து வழங்கிய தீர்ப்பில் கூறுகிறார் நீதிபதி கபூர்.

கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் தெய்வங்களைக் கேவலப்படுத்தினால் அதனால் அந்த மக்களுடைய மதஉணர்வுகள் புண்படுகின்றன. அதுமட்டுமல்ல; மதங்களுக்கிடையே நிலவி வரும் நல்லுறவுகளையும் அது பாதிக்கிறது. அதுபோன்ற சித்திரங்களை கலையென்று சிலர் கூறினாலும் வழிபடப்படும் தெய்வங்களை நிர்வாணமாக்கிச் சித்திரிப்பதால், அது மதநம்பிக்கை உள்ள மக்களின் மனத்தை வேண்டுமென்றே புண்படுத்தும் செயல் என்பதை மறக்க முடியாது. கலை சுதந்திரம் என்கிற போர்வையில் மதஉணர்வுகளை நோக அடிக்கும் செயல்களை அனுமதிக்க முடியாது. இது வேற்றுமதத்தைச் சேர்ந்த மனுதாரராருக்கு (உசேன்) இன்னும் நன்றாகவே தெரிந்திருக்க வேண்டும்.

தெய்வங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை எவ்வளவு ஆழமானது என்பதை (உசேன்) மனுதாரர் சோதித்துப் பார்க்க வேண்டுமென்றால், அவர் சார்ந்த மதக் கடவுளையோ அல்லது வேறு மதத் தெய்வங்களையோ இதுபோன்ற கலைக்கண்ணோட்டத்தோடு வரைந்து தன் கைவரிசையை காட்டிப் பார்க்கட்டும்”. இதற்கு மேல் ஒரு வார்த்தை கூட சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

நீதிபதி கபூர் கூறியுள்ளதுபோல, மதச்சார்பற்ற அறிவுஜீவிகளும் பத்திரிகையாளர்களும் உசேன் போன்றவர்கள் ஹிந்து அல்லாத மற்ற மததெய்வங்களிடத்திலும் தங்கள் கைவரிசையைக் காட்ட வேண்டும் என்று கூறுவார்களா? அவர்கள் ஏன் கூறுவார்கள்? நீதிபதி கபூர் கொடுத்த தீர்ப்பையை அவர்கள் பிரசுரிக்கவில்லையே!


RaayarKaapiKlub : Message: cultural policingnagarajan63இன்றைய திணமணி நாளிதழில் திரு எஸ்.குருமூர்த்தியின் “ஹிந்து தெய்வங்கள் மட்டும் ஆபாசக் கலைக்கு இலக்காவது ஏன்?” என்னும் தலைப்பில் வந்துள்ள கட்டுரையை படிக்க நேர்ந்தது. அண்மையில் குஜராத் மாகாணத்தில் வதோதரா நகரில் அமைந்திருக்கும் ஓவியக் கல்லூரியில் நிகழ்ந்தவற்றையும் அதன் தொடர்பான சலசலப்பையும் அது பற்றி ஊடகங்களிலும், ஆங்கில தினசரிகளிலும் விவரமான விவாதங்களை பாராதவரோ படிக்காதவரோ இருக்க மாட்டார்கள்.அக்கட்டுரை சார்ந்த பல செய்திகள் அவர் நிலைகொண்டுள்ள இயக்கத்தின் சார்புடையதாக உள்ளது. ஒரு நாணயத்துக்கு இருபக்கங்கள் உண்டு. அதன் ஒரு பக்கம் அவர் கட்டுரை. படிப்பவருக்கு ஒரு எச்சரிக்கையுடன் தமது நீண்ட கட்டுரையை “எதை எழுதினாலோ, பார்த்தாலோ நாகரீகமானவர்கள் ஆபாசமாகக் கருதுவார்களோ, அதைப் புனிதம் என்று மதச்சார்பற்றவர்கள் என்று தங்களை பறைசாற்றிக் கொள்பவர்கள் அடித்துக் கூறுவதால், அந்த ஆபாசத்தை வெளிப்படையாக எழுதித் தீரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக் கிறது” என்று துவக்கியுள்ளார்.கட்டுரையை பலமுறை படித்தபின் அது சார்ந்த என் எதிர் வினைகளை பதிவு செய்கிறேன் ஒரு ஓவியனாக.கட்டுரையாளர் தாம் ஆபாசம் என்று கருதும் ஓவியங்கள் பற்றி நுணுக்கம் மிகுந்த விவரங்களுடன் அதன் பிரச்சனையை அணுகுகிறார். நிகழ்ந்தவற்றை நான் இங்கு திரும்பக் கூற விழையவில்லை. அந்த ஓவியங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப் பட்டவையல்ல. அந்த ஓவிய மாணவரின் செயல்முறை தேர்வுக்கானவை. கல்லூரி வளாகத்தில் அத்துமீறி ஒரு கும்பல் நுழைந்து வன் முறையில் ஈடுபட்டது. காவல்துறையில் அந்த மாணவரை கைது செய்வதும் நடந்தது. அதை நியாயப்படுத்துவதும் தொடர்கிறது.அவர் ஆபாசம் என்று விவரிக்கும் ஓவியங்களின் வரிசையில் மாமல்ல புரத்தில் வீற்றிருக்கும் இலட்சுமி (ஆடையின்றி), க்ருஷ்ணர் கோபியர்களின் சீலைகளை திருடும் காட்சி ஓவியமாக்கப்பட்ட விதம், ஜெயதேவரின் ‘கீதகோவிந்தம்’ கவிதை ஓவியங்கள், குஜராத் மாநிலத்தில் இன்றளவும் பரவலாகப் பின்பற்றப்படும் வழிபாட்டில்
“லஜ்ஜா தேவி” சிலை அமைக்கப் பட்டிருக்கும் விதம், தாந்திரிக வழிபாட்டில் சிவன் மேல் காளி அமைந்திருக்கும் கோலம், தாண்டவமாடும் நடராஜரின் சிலை (உருவத்தில் குறி சிதைக்கப் பட்டிருக்கும்) போன்ற சிலவற்றையும் நான் சேர்க்க விரும்புகிறேன். அவையெல்லாமும் ஹிந்து கடவுளர், தேவியர்கள்தான். இது போன்ற எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் கிடைக்கும். அவையும் ஆபாசம்தானா? வக்கர மனத்தின் வெளிப்படுதானா? “ஆபாசம் எப்படி கலையாகமுடியும்” என்னும் கேள்வி எழுப்பும் கட்டுரையாளர் அவற்றை மீண்டும் ஒருமுறை பார்க்கட்டும்.

இந்த வகையில் ஓவியர் ஹுசைன்தான் இந்த வகை சிந்தனையாளர்களுக்கு ‘மெல்லக் கிடைத்த அவல்.’ மாமல்லபுரத்தில் உள்ள பெரும்பாலான சிற்பங்கள் உடையின்றித்தான் உள்ளன. இந்தியாவின் எண்ணற்ற கோயில்களிலும் உடையில்லாத கடவுளர் சிலைகளும் ஓவியங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றையெல்லாம் ஆபாசத்துடன் சேர்த்துவிடலாமா? அவற்றுக் கெல்லாம் உடை உடுத்திவிடலாமா? அல்லது தீயிட்டுக் கொளுத்திவிடலாமா?

ஜெர்மனி, ருஷ்யா போன்ற மேலை நாடுகளில் யதேச்சாதிகாரம் கோலோச்சிய போது அரசு, ஒரு கலைஞன் எதை படைப்புக்கருவாக கொள்ள வேண்டும் என்னும் திட்டத்தையும் செயற்படுத்தியது என்பது வரலாறு கூறும் உண்மை. அதன் காரணமாக, ஓவியர்கள் வேறு நாடுகளுக்கு ஓடியதும் உண்மை. கட்டுரை ஆசிரியர் இங்கும் -அதாவது பாரதத்திலும்- அதை நடைமுறைபடுத்த விரும்புகிறாரா?

ஊடகங்களின் மூலம் வீட்டினுள் வன்முறையும், ஆபாசமும், தங்கு தடையின்றி நுழைந்து அவர் குறிப்பிடும் கலாசாரத்தையும் சமுதாயக் கட்டுப் பாட்டையும் நாசமாக்கிக் கொண்டுள்ளனவே! அங்கெல்லாம் அவர்கள் கண்கள் மூடிக்கொண்டு விடுமா?

படைப்பாளிகளின் படைப்பு சுதந்திரம் என்பது சுய கட்டுப்பாடுகளுடன் தான் இயங்குகிறது. படைப்பை விமர்சிப்பது படைப்பளியின் வளர்ச்சிக்கு உதவும். படைப்பாளியை வன்முறையாக விமர்சிப்பது என்பது நாகரீகமான வழியல்ல. எல்லாவற்றையும் அரசியலுக்குள் இழுத்துச்செல்வது ஆபத்தான எதிர் காலத்திற்கு இட்டுச்செல்லும். ஆனால் விதிவசமாக அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அந்தக்கல்லூரியில் பல ஆண்டுகளாக குழுச்சண்டை நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதையும், இந்த சலசலப்பும் அதன் விளைவுதான் என்பதையும் ஒரு செய்தியாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

nagarajan63

————————————————————————————————

Some Blogger Feedbacks (if anything is missing, please leave a comment)

சந்திப்பு:
குருமூர்த்தியின் கவலை இந்துக்களின் கவலையா?


அரவிந்தன் நீலகண்டன்:
அகப்பயணம்: இந்துத்துவமும் கலை சுதந்திரமும்

————————————————————————————————-

நிர்வாணமாக சீதை நிர்வாண ராவணன் மடியில்
Naked Lord Hanuman and Goddess Sita
This picture shows a naked Lord Hanuman attacking a naked demon king Ravana while Goddess Sita is sitting naked on Lord Ravana’s thigh. Goddess Sita is the epitome of chastity and is role model for women the world over.

நிர்வாண சீதை அனுமானின் வாலை தன் கால்கள் இரண்டின் நடுவில் வைத்திருக்கும் காட்சி
Naked Goddess Sita sitting on the tail of Naked Lord Hanuman
According to the Indian History, Goddess Sita or Lord Hanuman has never been shown in the Naked form. Goddess Sita has never been rescued by Lord Hanuman. Over here Husain is interfering with the cultural principles. Not only this, he is trying to devise new imaginative indecent pictures of the manifest forms of God who are respected by millions of Hindus. Showing the use of the tail of Lord Hanuman for such an act has crossed all the limitations of indecency.

நிர்வாண அனுமான் முன் நிர்வாண பெண்

சிவன் பார்த்திருக்க பார்வதியை பின்புறமாக புணரும் நந்தி முன்புறமாக பார்வதியின் பிறப்புறுப்பை நக்கும் குழந்தை
A bull having sexual intercourse with Goddess Parvati and Lord Shiva watching on the auspicious day of Shivratri
Lord Shiva is the Principle of Absolute Knowledge and the principle of Destruction in the Universe.

புலியை புணரும் துர்கா

யானை மீது நிர்வாண துர்கா

நிர்வாண சரஸ்வதி : பிறப்புறுப்பை மறைக்கும் வீணை

அதே நேரம் ஹுசைன் தன் அன்னை, மகள் மற்றும் முகமது நபியின் மகள் பாத்திமா ஆகியோரை வரைந்துள்ள ஓவியங்கள்:


Posted in Artist, Arts, Buddhism, Christ, Christianity, Community, Culture, Dinamani, Exposure, expression, Female, Feminism, Freedom, Girl, Glamor, Glamour, Gods, Gurumoorthi, Gurumoorthy, Gurumurthi, Gurumurthy, Hindu, Hinduism, Hindutva, Humanity, Hussain, Hussein, Independence, Intolerance, Islam, Jesus, Lady, Media, MF Hussain, Muslim, Objectification, Obscene, Obscenity, Op-Ed, Opinions, Painter, Paintings, Portrayal, Propaganda, Religion, RSS, Sculpture, Thoughts, Tolerance, vulgarity, Women | 9 Comments »

Mayawati takes Uttar Pradesh – Biosketch

Posted by Snapjudge மேல் மே 11, 2007

உ.பி.யில் நான்காவது முறையாக முதல்வராகிறார் மாயாவதி: பள்ளி ஆசிரியையாக பணி புரிந்தவர்

லக்னெü, மே 12: இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நான்காவது முறையாக முதல்வராகிறார் மாயாவதி (51).

இவர் பகுஜன் சமாஜ் கட்சியை (பிஎஸ்பி) நிறுவிய கான்சி ராமின் நிழலில் வளர்ந்தவர். அவரிடம் இருந்து அரசியல் பாடம் கற்றவர். எதிரிகளின் கூட்டணியை தனி ஆளாக நின்று சமாளித்தவர்.

உ.பி. சட்டப் பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பிராமண வகுப்பைச் சேர்ந்த 94 பேருக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு தந்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. தனிப்பெரும்பான்மையுடன் அவர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.

முந்தைய மூன்று முறையும் கூட்டணி ஆட்சியை நடத்திய மாயாவதி, தற்போது அசுர பலம் பெற்று கூட்டணி தயவு தேவை இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளார்.

தில்லியில் தபால்-தந்தி துறை ஊழியரின் மகளாக பிறந்த மாயாவதி, உ.பி.யின் முதல்வராக 1995-ல் அரியணை ஏறினார். அப்போது அவரால் 4 மாதமே பதவியில் நீடிக்க முடிந்தது. சமாஜவாதி கட்சியின் முலாயம் சிங்குடனான கூட்டணி திடுமென முடிந்ததே அதற்கு காரணம்.

பின்னர் இரண்டாவது முறையாக 1997-ல் முதல்வரானார். இம்முறை 6 மாதங்களுக்குத் தாக்குப்பிடித்தார். அப்போது பாஜகவுடன் “விரும்பத்தகாத’ ஒப்பந்த அடிப்படையில் ஆட்சி பொறுப்பேற்றார். ஒப்பந்தம் முறிவுக்கு வந்ததால் மாநிலத்தில் அரசியல் குழப்பமே மிஞ்சியது.

ஊழல் வழக்கில் சிக்கியதால் ராஜிநாமா

மூன்றாவது முறையாக 2002-ல் முதல்வரானார். பாஜகவின் ஆதரவுடன் 18 மாதங்கள் ஆட்சி செய்தார். இருப்பினும் தாஜ் வணிக வளாக ஊழல் வழக்கில் சிக்கி உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானதை அடுத்து 2003-ல் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய நிர்பந்தம் மாயாவதிக்கு ஏற்பட்டது.

மாயாவதிக்கு 6 சகோதரர்கள், 2 சகோதரிகள் உள்ளனர். பள்ளி பருவத்திலேயே பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார். தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு சிறு வயது முதலே இருந்தது.

தில்லியில் 1977 முதல் 1984வரை பல்வேறு அரசு பள்ளிகளில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார். அப்போதே பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஊழியர் கூட்டமைப்பின் செயல்பாடுகளிலும் தன்னை இணைத்துக்கொண்டார்.

1984 முதல் தீவிர அரசியல்

1984-ம் ஆண்டு தனது ஆசிரியைப் பணியை விட்டுவிட்டு முழு நேர அரசியலில் இறங்கினார். கான்சி ராம் தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து, 1984 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். அதன்பிறகு நடைபெற்ற 2 இடைத் தேர்தல்களிலும் தோற்றார்.

இருப்பினும் மனம் தளராமல் 1988-ல் மூன்றாவது முறையாக பிஜ்னூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவைக்குள் நுழைந்தார். 1994-ல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நலிவடைந்த பிரிவினரின் நலனுக்காக உரக்க குரல் கொடுத்தார்.

கல்லூரி நாள்களில் மேல்சாதி மாணவர்கள் அவரை ஏளனமாக நடத்தியதாக கூறப்படுகிறது. இதனாலேயே அவருக்கு தாழ்த்தப்பட்டவர்கள், பலவீனப் பிரிவினருக்காக போராட வேண்டும் என்ற வேகம் பிறந்ததாம். தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த மாயாவதி, சட்டப்படிப்பையும், பின்னர் மீரட் பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பையும் முடித்தார்.
———————————————————————-
வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் – ஊழல், குற்றம், அச்சம் அடியோடு ஒழிக்கப்படும்: மாயாவதி

லக்னெü, மே 12: உத்தரப் பிரதேசத்தில் ஊழல், கிரிமினல்கள் அடியோடு ஒழிக்கப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.

தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள மாயாவதி, லக்னெüவில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:

மக்கள் அச்சமின்றி வாழவும், ஊழல், குற்ற நடவடிக்கைகளுக்கு இடமளிக்காத வகையில் புதிய அரசு ஆட்சி புரியம். அதேசமயம் மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு போர்க்கால அடிப்படையில் முன்னுரிமைத் தரப்படும். இத்தேர்தலில் உயர்சாதியினரும், முஸ்லிம்களும் பகுஜன் சமாஜுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இம்முறை முஸ்லிம்கள் அதிக அளவில் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் பகுஜன் சமாஜுக்கு வாக்களித்துள்ளனர். மாஃபியா, தீவிரவாத மற்றும் காட்டு ராஜாக்களின் ஆதிக்கம் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளன. ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண்போகவில்லை. தேர்தல் ஆணையம் சுதந்திரமான நேர்மையான தேர்தலை நடத்தியுள்ளது என்றார்.

சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரணை

உ.பி.யில் சமாஜவாதி ஆட்சியில் இருந்தபோது நடந்த அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்று மாயாவதி தெரிவித்தார்.

இது அரசியல் ஆக்கப்படமாட்டாது; எதிரிகள் மீதான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையும் அல்ல. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையே நாங்கள் நிறைவேற்ற உள்ளோம். வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த ஆசாம் கான், தனது அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களையும் அழித்துவிட்டதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றார். முலாயம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, “ஏற்கெனவே அவர் தோற்கடிக்கப்பட்டுள்ளார். இறந்தபோனவரை மீண்டும் கொல்லமுடியாது. மக்கள் அவருக்கு தண்டனை வழங்கிவிட்டனர்’ என்றார்.
———————————————————————————-

உத்தரப் பிரதேச முதல்வரானார் மாயாவதி: 50 உறுப்பினர்களுடன் அமைச்சரவை பதவிஏற்பு

லக்னௌ, மே 14: உத்தரப் பிரதேச முதல்வராக மாயாவதி (51) பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருடன் 50 உறுப்பினர்கள் கொண்ட மிகப் பெரிய அமைச்சரவையும் பதவி ஏற்றது.

உ.பி. முதல்வராக நான்காவது முறையாக பதவி ஏற்றுள்ள மாயாவதி, இம்மாநிலத்தின் 40-வது முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. பதவி ஏற்பு விழா, ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. மாயாவதி உள்பட அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஆளுநர் டி.வி. ராஜேஸ்வர் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ், மாநில காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட அக் கட்சித் தலைவர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பதவி ஏற்பு முடிந்ததும் மாயாவதி தனது பெற்றோரை ஆளுநருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

பகுஜன் சமாஜ் கட்சிக்கு பிராமணர்களின் ஆதரவைப் பெற்றுத்தர முக்கிய காரணமாக இருந்த அக் கட்சியின் பொதுச் செயலர் சதீஷ் சந்திர மிஸ்ர மட்டும் பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது மேடையில் மாயாவதியுடன் அமர்ந்திருந்தார்.

பகுஜன் சமாஜ் தேசிய செயலர் சித்திக், மாநிலத் தலைவர் லால்ஜி வர்மா, மூத்த தலைவர்கள் சுவாமி பிரசாத் மெüர்யா, முன்னாள் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆகியோருக்கும் அமைச்சரவையில் இடம் தரப்பட்டுள்ளது.

நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலம் பெற்று, 14 ஆண்டுகளுக்குப் பின் கூட்டணி கட்சிகளின் தயவை நாடாத தனி ஒரு கட்சியின் ஆட்சியை ஏற்படுத்தியுள்ளார் மாயாவதி.

தேர்தலில் மேல்சாதியினருக்கும் வாய்ப்பளித்து வெற்றிக்கொடி நாட்டிய மாயாவதி, அமைச்சரவையில் மேல்சாதியினர் பலருக்கும் இடம் அளித்துள்ளார்.

7 பிராமணர்கள், 6 தாக்கூர்கள், 5 முஸ்லிம்கள், யாதவ குலத்தைச் சேர்ந்த இருவருக்கும் அமைச்சரவையில் இடமளித்துள்ளார்.

50 பேர் கொண்ட மிகப்பெரிய அமைச்சரவையில் 19 பேர் கேபினட் அந்தஸ்துடையவர்கள்; 21 இணை அமைச்சர்களுக்கு தனிப்பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது; 9 பேர் இணை அமைச்சர்கள்.

மாநிலத்தின் 40-வது முதல்வர்

1993-ல் உ.பி. முதல்வராக மாயாவதி பொறுப்பேற்ற போது இந்தியாவின் முதல் தலித் முதல்வர் என்ற சிறப்பைப் பெற்றார். நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உ.பி.யில் முதல்வர் பதவி ஏற்கும் 40-வது முதல்வர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.

என்.டி. திவாரிக்கு இணையாக..

உ.பி.யில் காங்கிரஸ் தலைவர் என்.டி. திவாரி 4 முறை முதல்வர் பதவியை வகித்துள்ளார். அவருக்கு இணையாக மாயாவதியும் 4-வது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் மாயாவதி, இன்னும் 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினராகவோ மேல்சபை உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, பகுஜன் சமாஜ் சட்டமன்றக் கட்சியின் தலைவராக சனிக்கிழமை ஒருமனதாக மாயாவதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை அடுத்து அவரை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர்.

403 உறுப்பினர்களைக் கொண்ட உ.பி. சட்டப்பேரவையில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 206 இடங்கள் கிடைத்துள்ளன.

———————————————————————————————————

ஆட்டம் போட்டவர்கள் கொட்டம் அடங்கியது

லக்னோ:உ.பி.,யில் முலாயம் சிங் ஆட்சியில் ஆட்டம் போட்ட அதிகாரிகளின் கொட்டம் அடக்கப்பட்டது.

முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளே 100க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பந்தாடினார் மாயாவதி. மேலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலுள்ள உயர் வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு சலுகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

உ.பி., முதல்வராக நேற்று பதவியேற்ற உடன் மாயாவதி, நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  • உ.பி., சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், முலாயம் சிங் தலைமையிலான அரசு எடுத்த நிர்வாக முடிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
  • இதில், ஜாகர் பல்கலைக் கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து அளித்தது,
  • அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஏற்றுமதி செய்ய உத்தரவு பிறப்பித்தது,
  • ஷாபி கிராமத்துக்கு (முலாயமின் சொந்த கிராமம்) ரூ.10 கோடி ஒதுக்கியது ஆகிய நிர்வாக முடிவுகள் உட்பட பல முடிவுகள் ரத்து செய்யப்படும்.
  • மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கும். கிரிமினல்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்படுகிறது.
  • முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட துப்பாக்கி லைசென்சுகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்படுகிறது.

எனது அரசு, அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கவில்லை. மாநிலத்தின் நலனே அனைத்திலும் முதன்மையானது.

  • சமாஜ்வாடி பொதுச்செயலர் அமர் சிங் தலைமையிலான உ.பி., மேம்பாட்டு கவுன்சில் கலைக்கப்படுகிறது.
  • அம்பேத்கர் பூங்காவை முறையாக பராமரிக்காத இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.
  • உயர் வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.

இவ்வாறு முதல்வர் மாயாவதி கூறினார்.உ.பி., மேம்பாட்டு கவுன்சில் மூலம் தான் நடிகர் அமிதாப் பச்சன், மாநிலத்தின் விளம்பர மாடலாக நியமிக்கப்பட்டு இருந்தார். மேலும், பல கலாசார நிகழ்ச்சிகள் பல கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்டிருந்தன. தற்போது, இதற்கு மூடு விழா காணப்பட்டுள்ளது.

இந்த கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து அமர் சிங் நேற்று முன்தினமே ராஜினாமா செய்து விட்டார். பதவியேற்ற முதல் நாளே பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாற்றி முதல்வர் மாயாவதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முலாயம் சிங்கின் நண்பரும், தொழிலதிபருமான அனில் அம்பானியின் தாத்ரி மின் திட்டம் தொடருவது குறித்து முதல்வர் மாயாவதி எதிர்ப்பாக எதுவும் கூறவில்லை. “இப்போது தான் பதவியேற்றுள்ளேன். இது குறித்து பதிலளிக்க இப்போது முடியாது’ என்று கூறி விட்டார்.

அதுபோல, ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்து விட்டார். “இப்போது தான் முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ளேன். இந்த விஷயத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முடிவு எடுக்கப்பட்ட பின், உங்களிடம்(நிருபர்கள்) கண்டிப்பாக கூறுவேன்’ என்று மாயாவதி தெரிவித்து விட்டார்.

நிருபர்களுக்கு பேட்டி அளித்து முடித்த உடன், உ.பி.,யில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த 100க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் பி.பி.எஸ்., அதிகாரிகளை அதிரடியாக இடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இவர்கள் முலாயம் சிங் ஆட்சியில் ஆட்டம் போட்டவர் கள் என்று பகுஜன் சமாஜ் கட்சி தரப் பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தவிர கேபினட் செயலர் என்ற புதிய பதவியையும் மாயாவதி உருவாக்கியுள்ளார்.

எம்.எல்.ஏ., தாராளம்:

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய எம்.எல்.ஏ., சுபாஷ் பாண்டே. இவர், தனது எம்.எல்.ஏ., பதவிக்கான சம்பளம் மற்றும் இதர சலுகைகள் அனைத்தையும் பதவிக்காலம் முடியும் வரை புற்றுநோய் மற்றும் பிற கொடிய நோய்களால் பாதிக்கப்படும் மக்களுக்காக அளிக்க முன்வந்துள்ளார். “தேர்தலில் வெற்றி பெற்றால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று கடவுளிடம் உறுதி கூறியிருந்தேன். அதன்படி இப்போது அறிவிப்பு செய்துள்ளேன்’ என்று சுபாஷ் பாண்டே கூறினார்.
————————————————————————————————–

மாயாவதிக்கு சாதனை, காங்கிரஸýக்கு சோதனை

நீரஜா செüத்ரி:

தமிழில்- ஜி.கணபதி

மாயாவதி பிறரது ஆதரவு இன்றித் தனித்து நின்றே வெற்றி பெற்றுள்ளார். இது இந்தியா முழுவதும் உள்ள தலித்துகளை உற்சாகமூட்டித் தட்டி எழுப்பப் போகிறது.

சமூகத்தில் நசுக்கப்பட்ட தலித் இனத்தைச் சேர்ந்த மாயாவதி, இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தைக் கட்டி ஆளப்போகிறார்.

இது அரசியல் அம்சங்களையும் சமூக உறவையும் மாற்றப் போகிறது. மாயாவதிக்குக் கிடைத்த வெற்றி இந்திய அரசியல் இனி என்ன வடிவத்தை எடுக்கும் என்பதை நிர்ணயிக்கக் கூடியது.

தலித்துகள், பிராமணர்களை உள்ளடக்கி மாயாவதி அமைத்த வெற்றிக் கூட்டணியில் முஸ்லிம்களும் மிகவும் பிற்பட்ட வகுப்பினரும் இணைந்தனர். இத்தகைய கூட்டணி புதிது அல்ல. 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் இருந்துள்ளது.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல் முறையாக நிருபர்களிடம் பேசும்போது, தனக்கு உறுதுணையாக இருந்த

  • சதீஷ் சந்திர மிஸ்ர (பிராமணர்),
  • நசீமுதீன் சித்திக்கி (முஸ்லிம்),
  • பாபு சிங் குஷ்வஹா (மிகவும் பிற்பட்ட வகுப்பு) ஆகியோருக்குத் திறந்த மனதுடன் வெளிப்படையாக நன்றி தெரிவித்தன்மூலம் இது பல வண்ணக் கூட்டணி என்பதை மாயாவதியே ஒப்புக்கொண்டுள்ளார். பேட்டியின்போது அவர்களைத் தனக்குப் பக்கத்திலும் அமரச் செய்திருந்தார்.

கடந்த காலங்களில் காங்கிரஸ் வசம் பிராமணர்கள் ஈர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் சாதி கண்ணோட்ட அடிப்படையில் அது அமையவில்லை.

அயோத்தி இயக்கம் உச்சகட்டத்தில் இருந்தபோது தம் பக்கமாக பிராமணர்கள் கவர்ந்திழுக்கப்பட்டிருந்தபோதிலும் உயர்சாதி உணர்வை வெளிப்படையாகத் தட்டி எழுப்பி ஆதாயம் தேட பாஜக முயற்சி செய்யவில்லை.

ஆனால் இப்போதுதான் பிராமணர்கள் வகுப்பு அடிப்படையில் வெளிப்படையாக ஈர்க்கப்பட்டுள்ளனர். பிராமணர்கள் மாநாட்டை, மாவட்ட நிலையில் நடத்திய மாயாவதி லக்னெüவில் மாபெரும் மாநாடு ஒன்றையும் நடத்தினார்.

இப்போதைய முக்கிய கேள்வி இதுதான். பாஜகதான் பிராமணர்களின் புகலிடமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த உயர் சாதியினர், மாயாவதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனரே? இது ஏன் என்பதே.

பாஜகவை விட்டு விலகி உயர்சாதியினர் நீண்ட தொலைவு சென்று விட்டனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இல்லையெனில் பாஜகவின் 2002 தேர்தல் வெற்றி முடிவுடன் ஒப்பிடுகையில் தற்போதைக்கு அதன் வெற்றிக் கணக்கு பாதியாகக் குறைந்திருக்காதே.

சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மேல்சாதியினர் விரும்பினர். மேலும் அந்தக் கட்சிக்கு மாற்றாக மாயாவதியைக் கருதினர். உயர்சாதியினரை அலறவைத்த குண்டர்கள் ராஜ்ஜியம், பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளை நன்கு புரிந்துவைத்திருந்தார் மாயாவதி.

ஆரம்பம் முதலே முலாயம், அமர்சிங் ஆகியோரைக் கடுமையாகச் சாடி வந்தார் மாயாவதி. ஆனால், பாஜகவோ சமாஜவாதி மீது மெத்தனம் காட்டியது. இதை பாஜக தலைவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.

2003-ல் முலாயம்சிங் தலைமையில் ஆட்சி அமைய உதவியது, பகுஜன் சமாஜ கட்சி இரண்டாக உடைந்தபோது அதை அப்போதைய சட்டப்பேரவைத் தலைவரான கேசரிநாத் திரிபாதி (பாஜக) அங்கீகரித்தது ஆகியவை உயர்சாதியினர் மத்தியில் சந்தேகம் எழ வைத்தது. உள்ளுக்குள் சமாஜவாதி கட்சியுடன் பாஜக ரகசிய உறவை வைத்துக்கொண்டதோ என்ற கண்ணோட்டம் ஏற்படச் செய்தது. தாங்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் பலவீனப்படுத்தப்படுவதாகவும் அநீதி இழைக்கப்படுவதாகவும் பிராமணர்கள் வேதனைப்பட ஆரம்பித்தனர்.

தலித்துகள், ஜாட் வகுப்பினர், யாதவர், குர்மிஸ் ஆகிய எல்லா வகுப்பினருக்குமே அரசியல் புகலிடம் உள்ளது. சமாஜவாதியின் அமர்சிங், வெளிப்படையாகவே, தாக்குர் வகுப்பினர் நலனுக்காகப் பாடுபட்டார். ஆனால் பிராமணர்கள் பற்றி யாரும் வாய் திறந்ததில்லை. அதைத் தமக்கு ஆதரவாகப் பயன்படுத்திய மாயாவதி “சர்வஜன சமாஜ்’ பற்றிப் பேச ஆரம்பித்தார்.

இந்நிலையில், பிராமணர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற தலைவராக சதீஷ் சந்திர மிஸ்ர உயர்ந்தார்.

வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளுக்குள் சிறந்த பிராமணத் தலைவராகக் கருதப்பட்ட வாஜபேயியையும் மிஞ்சினார் மிஸ்ர.

மாயாவதியுடனான அவரது நெருக்கம், செல்வாக்கு ஆகியவற்றால் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது மாநிலத்தை ஆட்சி செய்ய வழி கிடைத்துள்ளது என்ற எண்ணம் பிராமணர்கள் மத்தியில் ஏற்பட்டது.

தாக்குர் இனத்தைச் சார்ந்த ராஜ்நாத் சிங் தலைமை வகிக்கும் பாஜகவைவிட விரும்பப்பட்டவரானார் மாயாவதி. லோத் இனத்தைச் சேர்ந்த கல்யாண் சிங்கை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியது பாஜக.

2007 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு சாதி அடிப்படையில் அரசியல் சமூகம் மண்டல் மயமாகி உள்ளதை முழுமையாகப் பிரதிபலிக்கிறது. பிராமணர்களும் வைசியர்களும் சிறந்த வியூகத்துடன் வாக்களித்துள்ளனர்.

சில வழியில் வகுப்புவாத கண்ணோட்டத்துக்கு சாதி நோக்கம் வலிமை சேர்த்துள்ளது என்று கூறலாம். முஸ்லிம் விரோத பிரசார சி.டி. அல்லது அப்சல் குரு விவகாரம் மூலம் உத்தரப் பிரதேசத்தைக் கலக்கி ஆதாயம் பெற முயன்றது பாஜக. ஆனால் பலன் இல்லை. என்றாலும் ஹிந்து மத உணர்வைத் தூண்டுவதன் மூலம் பலன் கிடைக்காது என்ற முடிவுக்கு வருவது சரியானதல்ல.

இந்த ஆண்டு பிற்பகுதி வாக்கில் குஜராத்தில் நடக்கவுள்ள தேர்தலில் இது தெரிந்துவிடும்.

மாயாவதியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது மக்கள் நாடித்துடிப்பை அறிந்து சமூக சக்திகளை ஒன்றிணைத்து அவர் வகுத்த கூட்டணி.

வெற்றி பெற்றாக வேண்டும் என்ற மனோதிடமும் அவரிடம் ஓங்கிக் காணப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு முன்பே பிரசாரத்தைத் தொடக்கிய அவர் நன்கு திட்டமிட்டு தொகுதி, தொகுதியாகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

இத்தகைய நடவடிக்கைகளில் பாஜகவும் காங்கிரஸýம் தேர்தலுக்கு 6 வாரங்களுக்கு முன்புதான் இறங்கின. மேலும் வேட்பாளர்கள் தேர்வைப் பிறரைவிட முன்கூட்டியே முடித்துவிட்டார் மாயாவதி.

பாரம்பரியமாகத் தமக்கு ஆதரவு தந்து வந்தவர்களின் மன கண்ணோட்டம் பற்றித் தப்புக்கணக்கு போட்டது பாஜக. தனக்கு ஆதரவாக ஹிந்துக்களை அணி திரள வைக்கவும் அது தவறிவிட்டது. கணிசமான முஸ்லிம்கள் முலாயம் நோக்கி அலறி அடித்து ஓடும் வகையிலும் செயல்பட்டது. இவை, முலாயமின் வேகமான வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த உதவியுள்ளன.

மாயாவதி பெற்றுள்ள வெற்றி இதர மாநிலங்களில் குறிப்பாக, 2008ல் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி ஆகிய மாநிலங்களில் தீவிர தொடர்விளைவை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையானது.

தில்லியில் பகுஜன் சமாஜ கட்சி வேர் விட்டுள்ளது. அங்கு அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதன் செயல்பாடு சிறப்பாக அமைந்ததே காங்கிரஸ் தோல்வியடைய முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ஜூலையில் நடக்கவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வேட்பாளரை மாயாவதி ஆதரவுடன் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது. என்றாலும் மாயாவதியின் வளர்ச்சி நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸýக்கு தொல்லை தரக்கூடியதுதான்.

———————————————————————————————-

.மாயாவதி வெற்றியின் பின்னணியில் மூன்று முகங்கள்!

உ.பி., சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பெற்ற பிரமாண்டமான வெற்றிக்கு மூன்று பேர் முக்கிய தளபதிகளாகச் இருந்துள்ளனர். இவர்களின் உதவியுடன் பிராமணர்கள், வைசியர்கள் செயல்பட்டதால் கருத்துக் கணிப்புகளை முறியடித்து மாயாவதி வெற்றியை அள்ளிக் குவித்து விட்டார்.

எஸ்.சி.மிஸ்ரா: உ.பி.,யில் சீனியர் வக்கீலாக இருப்பவர் எஸ்.சி.மிஸ்ரா. பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு அரசியல் அனுபவம் சிறிதும் கிடையாது. முன்பு 1976ல் எச்.என்.பகுகுணாவிடம் தேர்தல் மேலாளராக சிறிது காலம் பணியாற்றியுள்ளார். உ.பியில் பகுகுணா செல்வாக்கு மிகுந்த காங்கிரஸ் தலைவர். பின் நீண்ட இடைவெளக்குப் பின் 2004ல் மாயாவதி முதல்வர் பதவியை துறந்த போது, அவரது கட்சியுடன் தன்னை இணைத்து கொண்டார் மிஸ்ரா.

இது குறித்து மிஸ்ராவிடம் கேட்ட போது “தாஜ்மகால் வழக்கில் மாயாவதியை பா.ஜ., மிரட்ட தொடங்கியது. ஆனால், அதற்கு மாயாவதி அடிபணியவில்லை. அவரது போராட்ட குணம் எனக்கு பிடித்து விட்டது. எனவே தீவிர அரசியலில் இறங்கிவிட்டேன்’ என்றார்.

இந்த தேர்தலில் பிராமணர்களின் ஓட்டுகளை கட்சிக்கு பெற்று தரும் பணி மிஸ்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான களப்பணியை 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேரணி ஒன்றை நடத்தி மிஸ்ரா முதலில் துவக்கினார். “பா.ஜ., “கமண்டல’த்தை விட்டு விட்டு “மண்டல்’ பிரச்னையை கையில் எடுத்து விட்டது. எனவே மாற்று கட்சியை பிராமணர்கள் தேட தொடங்கினர். அவர்களின் எண்ணத்தை நான் பூர்த்தி செய்தேன்’ என்று மிஸ்ரா இப்போது கூறுகிறார்.

அந்த ஆண்டில் மட்டும் பிராமணர்கள் பங்கேற்ற 21 பேரணிகளை நடத்தினார். இது தவிர ஒவ்வொரு தொகுதியிலும், பிராமணர்கள் மற்றும் ஆதிதிராவிட மக்கள் அடங்கிய கமிட்டியையும் உருவாக்கினார். அவரது செயல்பாட்டை அப்போது பலரும் கிண்டல் அடித்தனர். ஆனால், இறுதியில் மிஸ்ரா வெற்றி பெற்று காட்டி விட்டார். இதற்கு பரிசாக மிஸ்ராவை அட்வகேட் ஜெனரலாக, மாயாவதி நியமிக்க உள்ளார்.

“பிராமணரான என்னை இப்பதவிக்கு தேர்ந்தெடுத்தது ஏன்?’ என்று மிஸ்ராவே வினோதமாகக் கேட்கிறார். அதற்கு மாயாவதி பதிலாக “நான் ஜாதியை பார்த்து பதவியை தருவதில்லை. தகுதியை பார்த்து தான் தருகிறேன்’ என்று கூறி விட்டார்.

நசீம்முதீன் சித்திக்: மாயாவதியின் தீவிர விசுவாசி நசீம்முதீன் சித்திக். அரசியல் உலகை தவிர வெளியுலக தொடர்பே இவருக்கு இல்லை. பத்திரிகையாளர்களை பார்த்தால் ஓடி விடுவார். ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்.இந்த தகுதிகளின் காரணமாகவே மாயாவதியின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்குகிறார். சித்திக்.

“பேகன்ஜி'(மாயாவதி) சொல்வதை மட்டுமே செய்வார். மாயாவதி 1980ம் ஆண்டுகளில் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு அறிமுகமானவர் சித்திக். மாயாவதியை பாதுகாக்கும் பொறுப்பு அப்போது அவருக்கு வழங்கப்பட்டது. அது முதல் மாயாவதியின் நிழல் போலவே இருந்து வருகிறார்.

இந்த தேர்தலில் முஸ்லிம்களை கட்சிக்கு பெற்று தரும் பொறுப்பு சித்திக்கிடம் வழங்கப்பட்டது. இதற்காக கட்சியின் முஸ்லிம் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். முஸ்லிம் உலாமாக்களை சந்தித்து பேசி, அவர்களின் ஆதரவை பெறும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது போன்ற பெரிய பணியை சித்திக் ஏற்பது இதுவே முதல் முறை. இருப்பினும், அதை சிறப்பாகவே செய்தார். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சிறு சிறு கூட்டங்கள் நடத்தி ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக செயல்பட்டார். இந்த முயற்சி இறுதியில் அவருக்கு மட்டும் அல்ல, மாயாவதிக்கு வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தது.

சுதீர் கோயல்: உ.பி.,யில் உயர் ஜாதி வகுப்பை சேர்ந்த தலைவர் சுதீர் கோயல். ஜெய்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்தில் முதலில் தொடர்பு கொண்டவர் . பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த, முதல் உயர் ஜாதி வகுப்பு தலைவர் என்ற பெருமைக்கு உரியவர். கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் மற்றும் தலைவர் மாயாவதிக்கு மிகவும் நெருக்கமானவர்.

டில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தேர்தலில் கட்சியின் செய்தி தொடர்பாளராக சுதீர் கோயல் பணியாற்றினார். பத்திரிகையாளர்களுடன் நெருங்கிப் பழகி, பிற கட்சிகளின் தகவல்களை அறிவது இவரது பணி. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியின் தகவல்களை சிறிது கூட கசிய மாட்டார். அந்த அளவுக்கு உஷார் பேர்வழி சுதீர் கோயல். இது தவிர உ.பி.,யில் ஓரளவுக்கு பெரும்பான்மையாக உள்ள வைஸ்ய சமுதாயத்தினருடன் நெருங்கி பழகும் படி சுதீர் கோயல் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

இந்த சமுதாயத்தினரில் ஒரு பகுதியினர் சமாஜ்வாடி கட்சிக்கும், மற்றொரு பகுதியினர் பாரதிய ஜனதாவுக்கும் ஆதரவு அளித்து வந்தனர். மாநிலம் முழுவதும் இதே நிலை தான் காணப்பட்டது. மாநிலம் முழுவதும் சுதீர் கோயல் பயணம் செய்து வைஸ்ய சமுதாயத்தினரின் ஆதரவை பகுஜன் சமாஜ் கட்சியின் பக்கம் திருப்பினார்.

குறிப்பாக அலகாபாத் மாவட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பெற்ற வெற்றிக்கு வைஸ்ய சமுதாயத்தினர் அளித்த ஆதரவே காரணம் . “மாயாவதி மட்டுமே தங்களை பாதுகாக்க முடியும் என்ற எண்ணம் வைஸ்ய சமுதாயத்தினரிடம் ஏற்பட்டு விட்டது’ என்று இதற்கு சுதீர் கோயல் விளக்கம் அளித்துள்ளார். இதற்காக கோயலை கேபினட் அமைச்சராக்கியுள்ளார் மாயாவதி.

———————————————————————————————–

“மனுவாதி-மாயாவாதி’ உடன்பாடு!

எஸ். குருமூர்த்தி

“”பத்திரிகைகளை அந்த அம்மா மதிப்பதே இல்லை” என்று நிருபர்கள் புலம்புகின்றனர். உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தனியொரு கட்சியாகவே பெரும்பான்மையைப் பெற்றுவிட்ட பிறகும் அதே நிலைதான்!

பேட்டி தருமாறு கோரி பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் விடுத்த அழைப்புகளை ஏற்று பதில்கூட தரவில்லை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. அந்த நிறுவனங்கள் தன்னைப் பேட்டி காண அழைப்பு விடுக்காதா என்று ஏங்கும் அரசியல் தலைவர்கள் எத்தனையோ பேர்; ஆனால், மாயாவதி அப்படியல்ல.

“”தேர்தல் அறிக்கை என்று எதையுமே அந்த அம்மா வெளியிடவில்லையே” என்பது சிலரின் அங்கலாய்ப்பு! தேர்தல் களத்தில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அரசியல் கட்சிகள், வாக்காளர்களில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏதாவதொரு வாக்குறுதியை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தன. ஆனால் தன்னைத் தலைவியாக ஏற்றுக்கொண்ட ஏழை மக்களுக்கு, 2 வேளை சாப்பாடு, வறுமைக் கோட்டிலிருந்து விடுபட உற்ற வழி என்ற குறைந்தபட்ச அத்தியாவசியத் தேவைகள் இருந்தபோதிலும் மாயாவதி எந்தவித இலவச அறிவிப்பையும் வெளியிடவில்லை.

“”ஆட்சிக்கு வந்தால், இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, புடவை, வேஷ்டி, இலவச கேஸ் ஸ்டவ், கடன் தள்ளுபடி” என்று எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இந்த எல்லாச் சலுகைகளும் தேவைப்படும் நிலையில் உள்ளவர்கள்தான் அவருடைய ஆதரவாளர்கள்.

மற்றவர்கள் இலவசங்களை அறிவித்து ஆசை காட்டினாலும் அந்தப் பக்கம் போக விரும்பாத அளவுக்கு அவர்கள் ஏன் அவருக்குப் பின்னே நின்றார்கள்?

இதற்கான விடை, பகுஜன் சமாஜ் கட்சியின் (பி.எஸ்.பி.) வரலாற்றில் இருக்கிறது. மாயாவதியின் அரசியல் குருவான கான்ஷிராம், சமூகப் படிநிலையில் 5-வது, 6-வது இடத்தில் இருந்த சூத்திரர்களையும் தீண்டத் தகாதவர்களையும் கொண்டு கட்சியை நிறுவினார். தங்களையும் ஏறெடுத்துப் பார்க்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்ற அவர்களுடைய ஏக்கம் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்தது. அவர்களுடைய அந்த ஏக்கமே தன்னுடைய கட்சியின் ஆன்மாவாகத் திகழ்வதை கான்ஷிராம் உறுதி செய்தார். பகுஜன் சமாஜத்தின் ஆன்மாவை இலவச டி.வி.க்கள் மூலமோ, புடவைகள் மூலமோ பிற கட்சிகளால் வாங்கிவிட முடியாது.

அது அவர்களுக்கு வெறும் அரசியல் கட்சி மட்டும் அல்ல; சமூகத்தின் படிநிலையில் முதல் 3 இடங்களில் உள்ள பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோருக்கு எதிரான வெளிப்படையான, வலிமை மிகுந்த ஆயுதமாகும். இந்த 3 சாதியினரையும் மாயாவதி வெளிப்படையாகவே “”மனுவாதிகள்” என்று சாடி வந்தார்.

“”அவர்களைச் செருப்பால் அடியுங்கள்” என்பதுதான் பி.எஸ்.பி.யின் போர் முழக்கமாகவே இருந்தது. சாதிய அமைப்பு முறையையே ஒழித்துக் கட்டுவேன் என்று கான்ஷிராம் சபதம் செய்தார். கடைசியில், ஒரு பிரிவு சாதிக்கு எதிராக மற்றொரு பிரிவு சாதியினரைக் கொண்டு வலுவான அரசியல் கட்சியை உருவாக்கிவிட்டார்.

சாதிகளை ஒழிக்கப் புறப்பட்ட எல்லா சீர்திருத்த இயக்கங்களுமே இப்படித்தான் கடைசியில் சாதிய அடையாளங்களுடன் முடிந்துள்ளன.

“”கீழ்ச் சாதியினர் ஒற்றுமையாகச் செயல்பட்டுத் தங்களை வலுப்படுத்திக் கொண்டு மேல்நோக்கி முன்னேறுவதற்கு சாதி என்பது ஜனநாயகத்தில் ஒரு தடையல்ல, ஒரு வாகனம்” என்று அவர் முதலில் உணர்ந்தார். ஜனநாயகம் இல்லாத சமூகங்களில்தான் சாதிய அடையாளம், முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தது.

இப்படித்தான் கோபத்திலும் வெறுப்பிலும் பகுஜன் சமாஜ் கட்சி பிறந்தது. அது வளர்ந்தபோது அதன் கோபமும் வளர்ந்தது. வெகுவிரைவிலேயே பகுஜன் சமாஜ் அபார வெற்றி கண்டு, அதன் ஆதரவு சக்திகளிடையே அபார செல்வாக்குப் பெற்றது. ஆனால் பெரும்பான்மை என்ற இலக்கைத் தொட அதற்கு ஒரு பாலம் தேவைப்பட்டது. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற, வெளியில் யாரிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என்று அது பார்த்தது.

“”லட்சியத்தை நிறைவேற்றப் பேயுடனும் கூட்டு சேர்ந்தாக வேண்டும்” என்பதுதான் ஜனநாயகத்தின் பாலபாடம். பகுஜன் சமாஜ் விஷயத்தில், இதுநாள்வரை அது பேயாகக் கருதிய, தனது எதிரியான “”மனுவாதிகளோடு” கூட்டு சேர வேண்டியது அவசியம் என்று உணரப்பட்டது. இது காரியசாத்தியமில்லாத விஷயமாகவே கருதப்பட்டது. ஆனால் மாயாவதி இதை வெகு எளிதாகச் செய்து முடித்துவிட்டார்.

“”மனு”வாதிகளுக்கும் “”மாயா”வாதிகளுக்கும் உள்ள பொதுவான வேராக ஹிந்து மதம் திகழ்வதை அவர் வலியுறுத்தினார். மேல்சாதியினருக்குக் கடவுளைப் பற்றிய சிந்தனை, பேச்சு எல்லாம் “”போதை தரும் விஷயம்” என்ற பலவீனத்தை அவர் புரிந்துகொண்டார்.

“”பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் வெறும் யானை அல்ல, கணேசப் பெருமான்தான்” என்று ஒரே போடாகப் போட்டார். இணைப்புக்கு ஒரு கடவுள் போதவில்லை, எனவே பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் (சிவன்) என்ற மூவரையும் உடன் சேர்த்துக் கொண்டார்.

“”அவர்களைச் செருப்பால் அடியுங்கள்” என்று ஒரு காலத்தில் சொன்னதால் மனுவாதிகளுக்கு ஏற்பட்ட மனப்புண்ணுக்கு ஒரே ஒரு செயல்மூலம் மருந்து போட்டுவிட்டார். மனுவாதிகளுக்கும், மாயாவாதிகளுக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட கடவுளர்கள், மத்தியஸ்தர்களாக இருந்தனர்.

மாயாவதியின் இச்செயல் பிராமணர்களை முதலில் திருப்திப்படுத்தியது. உத்தரப் பிரதேசத்தில் 14% வாக்குவங்கியான பிராமணர்களை முதலில் வசப்படுத்தியது மாயாவதியின் மிகப் பெரிய வெற்றி.

உத்தரப் பிரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் “”பிராமண மகாசபை” கூட்டங்களை நடத்தி, ஹிந்துக் கடவுளர்கள் மீது தங்களுக்கிருக்கும் மரியாதையை அவர் வெளிப்படுத்தினார். இப்படித்தான் மனுவாதி-மாயாவாதி (பிராமணர், தலித்) கூட்டணி உருவானது.

பிராமணர்களுக்கு 80 தொகுதிகளையும் பிற மேல்சாதியினருக்குக் கணிசமான தொகுதிகளையும் கூட்டணியில் ஒதுக்கியிருப்பதை ஒவ்வொரு தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் மறக்காமல் அவர் கூறினார். இப்படியெல்லாம் கூறவோ, செயல்படவோ காங்கிரஸ், பாரதீய ஜனதா போன்ற கட்சிகளால் கனவிலும் முடியாது. மாயாவதியால் மட்டுமே அப்படிச் செய்யவும் முடியும், அதை பகிரங்கமாகச் சொல்லவும் முடியும்.

இப்படித்தான் பகுஜன் சமாஜின் முக்கிய எதிரிகளாகத் திகழ்ந்த மனுவாதிகள், அவர்களுடைய கூட்டாளிகளானார்கள். தீவிர எதிர்ப்பாளராக இருந்த மாயாவதியை அரவணைக்கும் தலைவராக ஜனநாயகம்தான் மாற்றியது.

உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை இது கட்சிகளின் கூட்டணி இல்லை, சாதிகளின் கூட்டணி. “”குறைந்தபட்ச பொது செயல்திட்டம்” (சி.எம்.பி.) அல்ல, கடவுளர்கள்தான் இங்கு இணைப்புப் பாலமாகச் செயல்பட்டுள்ளனர். மனுவாதிகளும் மாயாவாதிகளும் செய்துகொண்ட தொகுதி உடன்பாடு அரசியல்ரீதியாக லாபகரமான பலன்களைத் தந்தது.

நீதி: உத்தரப்பிரதேசத்தில் மனுவாதி-மாயாவாதிகள் இடையிலான கூட்டணி ஜனநாயகத்தால் உருவானது, கடவுளர்களால் இணைக்கப்பட்டது. அது கடைசியில் மகத்தான வெற்றியையும் பெற்றுவிட்டது. மனுவாதிகளைத் தீவிரமாக எதிர்த்துவந்த பகுஜன் சமாஜ், மிதவாத கட்சியாக மாறிவிட்டது; இனி அது எந்தக் காலத்திலும், பழையபடி “”அனல் கக்கும்” மனுவாதிகள் எதிர்ப்பாளராக மாறவே முடியாது.

———————————————————————————————

கங்கா தீரமும் காவிரி ஓரமும்…

செ.கு. தமிழரசன்

இந்தியாவின் ஒட்டுமொத்தப் பார்வையும் இன்று உத்தரப் பிரதேசத்தை நோக்கியே திரும்பியுள்ளது.

இழுபறி அமைச்சரவைதான் ஏற்படும், குதிரை பேரம் நடக்கும், விரைவில் மறுதேர்தலும் வரலாம் என்ற ஐயப்பாடுகளுக்கு எல்லாம் சற்றும் இடம்தராமல், கணிப்புகளையெல்லாம் பொய்யாக்கிவிட்டு, மக்கள் திரளின் மகத்தான ஆதரவுடன், பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் பெரும்பான்மை பலத்துடன், ஒரு கட்சி ஆட்சியை நிறுவியுள்ளார் தலித் சமூகத் தலைவி மாயாவதி. இது ஒரு பாராட்டத்தக்க செயல்பாடுதான், சந்தேகமில்லை.

இந்த அளவிற்கு அனைத்து அரசியல் சக்திகளையும், திறனிழக்கச் செய்யக் காரணம் மாயாவதி கையாண்ட தேர்தல் சாதுர்யம்தான் என்று எல்லா ஊடகங்களும் அடையாளப்படுத்துகின்றன. எனவே அவர் அப்படி என்னதான் புதிய வழிமுறையைத் தேர்தல் வியூகமாக வகுத்தார் என்று பார்த்தாக வேண்டும். ஏனெனில் இன்று மாயாவதியின் வெற்றியை மற்ற மாநிலத் தேர்தலுக்கும் முன்னுதாரணமாக்கும் போக்கு வலுக்கிறது.

பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கை வழியில், சமூகரீதியாக ஒடுக்கப்பட்டிருக்கும் தலித் மக்களும், கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கி நிற்கும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒருங்கிணைந்தால், நமது ஆட்சியை நிலைநாட்ட முடியும் என்ற கான்ஷிராமின் சித்தாந்தம், உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரையில் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனால் அவரது “பகுஜன் சமாஜ் கட்சி’ ஒரு மாற்று அரசியல் சக்தியாகப் பரிணமித்தது.

கான்ஷிராமின் அரசியல் பார்வையின் அடிப்படையிலேயே முந்தைய தேர்தல் கூட்டணிகள் அமைந்தன. 1993 தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி கண்ட மாயாவதி 1996-ல் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்தார். பின்னர் பாஜகவுடன் கூட்டணி ஆட்சியையும் அரங்கேற்றிப் பார்த்தார்.

ஆனால் ஒவ்வொரு முறையும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு எம்.எல்.ஏ.க்கள் தனக்கும், கட்சிக்கும் நம்பிக்கைத் துரோகமிழைத்துவிட்டு, எதிர் அணிக்குத் தாவி தங்களது சாதிய சுயரூபத்தை வெளிப்படுத்தினார்கள். தனது முதுகில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு எம்.எல்.ஏ.க்கள் குத்திய வலியை அவரால் மறக்க முடியவில்லை. தலித் – பிற்பட்டோர் ஒற்றுமை என்பது, ஆட்சித்தலைமைத் தேர்வின்போது, நல்ல குதிரைபேர வியாபாரத்திற்கே வழிவகுக்கிறது என்ற அப்பட்டமான உண்மை வெட்ட வெளிச்சமாகியது.

எனவே, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு மாற்றுவழியைத் தேட வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானார் மாயாவதி. பார்ப்பன, க்ஷத்ரிய, பனியாக்களை செருப்பால் அடிக்க வேண்டுமென்ற அவரது முழக்கம், ஆட்சி அதிகாரப் பகிர்வின்போது, தன்னிடமே செய்முறை விளக்கப் பயிற்சி பெறுவதை உணர்ந்தார். இனி பிற்படுத்தப்பட்டவரை நம்பிப் பயனில்லை என்ற முடிவிற்கே வந்துவிட்டார்.

இதுவரை மேல்மட்ட வர்க்கத்தை மட்டந்தட்ட வேண்டிய எதிரிகளாகவே பாவித்த மாயாவதியின் போக்கில், ஒரு மாறுதல் தோன்றியது. அவர்களையும் அரவணைக்கும் எண்ணம் உதயமாயிற்று.

இதற்கேற்றபடி, பிராமணர், வைசியர், தாக்கூர் ஆகிய இந்து இனச் சமூகங்கள் பெரிதாக நம்பிக் கொண்டிருந்த பாரதீய ஜனதா கட்சியோ, மத்தியில் வலுவிழந்து, மாநிலத்தில் மரியாதையிழந்து, அவ்வப்போது இந்துத்துவா, ராமர் கோயில் என்று ஈனஸ்வரத்தில் முனங்கிக் கொண்டிருந்தது.

காங்கிரஸ் கட்சியோ, காந்தியின் காலத்திலிருந்து தனது வாக்குவங்கியாக வைத்திருந்த இந்து – முஸ்லிம் – ஹரிஜன ஓட்டுகளை பெரும்பாலும் இழந்து கட்சியும் கரைந்துவிட்டிருந்தது.

ஆகவே மேல்தட்டு வர்க்கமான பிராமண, வைசிய, தாக்கூர் சாதியினர் எங்கே போவது, யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்திற்கு இயல்பாகவே வந்துவிட்டனர். இந்தச் சூழ்நிலையில் மாயாவதியின் மனமாறுதல் அவர்களை பகுஜன் சமாஜ் கட்சியை நெருங்கச் செய்தது.

மாயாவதியும் பிற்படுத்தப்பட்ட மாயையிலிருந்து விடுபட்டு முற்படுத்தப்பட்டவர்களை ஆதரிக்க முன்வந்தார்; வரவேற்று 83 பேரை வேட்பாளர்களாக்கினார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் பயன்களை, யாதவ் மற்றும் குர்மி சாதியினர் மட்டுமே அனுபவிப்பதைப் பார்த்துப் பொருமும் ஏனைய பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் மாயாவதியின் பின்னால் அணிவகுக்க முற்பட்டனர்.

ஆக, பகுஜன் சமாஜ் கட்சிக்குரிய வாக்கு வங்கியான தலித் மக்கள், புதுவிருந்தாளியான மேல்தட்டு வர்க்கம், இதோடு இஸ்லாமிய சமூகம் மற்றும் யாதவ், குர்மி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆகிய புதிய ஐக்கியம் தேர்தலில் பதியமிட்டது. நல்லாட்சி அமைகிறதோ இல்லையோ, ஒரு ஸ்திரமான ஆட்சி, அதாவது ஐந்தாண்டுகளுக்கு அறுதிப் பெரும்பான்மையோடு நடைபெறும் ஆட்சி அமைய வேண்டும். அதற்கான ஒரு கட்சியைத் தேர்ந்தெடுத்தே தீர வேண்டுமென்ற உறுதியான எண்ணம் மக்களிடையே பரவிக் கிடந்தது. அதற்கு கண்முன் நிற்கும் சாட்சியாக “பகுஜன் சமாஜ் கட்சி’ காட்சியளித்தது. மக்கள் வாக்களித்தனர். மாயாவதி வெற்றி பெற்றார்.

அண்ணல் அம்பேத்கரின் பெயரை உச்சரித்தபடியே ஒரு கட்சி, தன் ஆட்சியை நிறுவியுள்ளது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால் இது நிலைத்து நீடிக்குமா?

மாயாவதியின் வெற்றியைக் கண்டு மற்ற மாநிலத்திலுள்ள அம்பேத்கரிய இயக்கவாதிகளுக்கு ஒரு புத்துணர்ச்சியும் எழுச்சியும் ஏற்படுவது இயல்புதான். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், உத்தரப் பிரதேசத் தேர்தல் பரிசோதனை எடுபடுமா?

இங்கு “”தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப்பட்டோர்” ஐக்கியம் என்ற சிந்தனை உருவாக்கம் பெற்று ஒரு நூற்றாண்டுக்கு மேலாகிறது. அந்த அடிப்படையில்தான் இங்கு 40 ஆண்டுகாலமாக ஆட்சியே நடைபெறுகிறது. ஆனால் என்ன ஒரு வேறுபாடு என்றால், தாழ்த்தப்பட்டோரும் முதல்வராக வந்ததில்லை. பிற்படுத்தப்பட்டோரிலும், பெரும்பான்மைச் சமூகங்களைச் சார்ந்த எவரும் முதல்வராக வந்ததில்லை. தமிழகத்தில் பெரும்பாலான சாதிகள் (70 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், முற்பட்ட மக்கள் பலம் மிகவும் குறைவு. எனவே, உ.பி. பாணியில் தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் – அந்தணர் ஐக்கியம் எந்த மாற்றத்திற்கும் வித்திட்டு விடாது. ஏமாற்றத்திற்கே இலக்காகும்.

மேலும், மாயாவதியின் “வெற்றிசூட்சுமம்’ ஏதோ அவரால் மட்டுமே கண்டுபிடித்து கையாளப்பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு மாயை என்பதை முதலில் புரிந்துகொண்டாக வேண்டும்.

அகில இந்திய அளவில், காந்திதான் இந்து – முஸ்லிம் – ஹரிஜன் முக்கூட்டு ஒற்றுமையை வலியுறுத்தி அதற்கான வழியமைத்தவர். இந்தத் தளத்தில்தான் காங்கிரஸ் கட்சி நீண்டகாலமாகத் தேர்தலைச் சந்தித்து இந்தியா முழுமையையும் தன் ஆட்சிக்குள் வைத்திருந்தது. ஆக, காந்தியின் இந்து – முஸ்லிம் – ஹரிஜன ஐக்கியம், தலித் தலைவியான மாயாவதியால் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.

ஆனால் இதற்கு மாயாவதி கொடுத்துள்ள விலை அதிகம் என்பதைக் காலம் விரைவில் உணர்த்தும். அதற்கான அடையாளங்கள் இப்போதே தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டன.

அண்ணல் அம்பேத்கரின் கொள்கைவழியில் தோன்றியதாகத் தென்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி, இன்று அதே அண்ணலின் எதிர்நிலையான இந்துத்துவாவை தூக்கிச் சுமக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, உருவாக்கப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சி, இனி எல்லா இனமக்களுக்குமான சர்வஜன சமாஜ் கட்சியாகச் செயல்படும் என்று பொய் வேடம் புனைய வேண்டிய நிலைக்கு மாயாவதி ஆளாகியுள்ளார். முதல்வராகப் பதவியேற்றவுடன் புரட்சியாளர் அம்பேத்கர் பெற்றுத் தந்த சமூகரீதியான இடஒதுக்கீட்டைப் புறந்தள்ளி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிராமணர்களுக்கும் இடஒதுக்கீடு என்று மாயாவதி அறிவித்ததன் மூலம், சமூகநீதியையே வஞ்சித்துவிட்டார்.

மேலும் ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் மாயாவதியின் 206 எம்.எல்.ஏக்களில் ஒரு தலித் எம்.எல்.ஏ.கூட பொதுத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதுதான் தலித் – பிராமண ஐக்கியத்தின் லட்சணம். இத்தகைய நிலையில், இங்கு தமிழ்நாட்டில் மாயாவதியின் சூத்திரத்தை அமல்படுத்த முயற்சிக்கலாமா என்று சிந்திப்பதே ஆரோக்கியமானதல்ல என்றே தோன்றுகிறது.

மாயாவதியின் வெற்றி மகத்தானதுதான். அது, உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை. அதைத் தமிழ்நாட்டிலும் பொருத்திப் பார்க்க நினைத்தால் எதையோ பார்த்து எதுவோ சூடுபோட்ட கதையும், எதையோ பார்த்து எதுவோ ஆடவந்த கதையும்தான் அரங்கேறும்.

(கட்டுரையாளர்: இந்திய குடியரசுக் கட்சியின் தேசியப் பொதுச் செயலர், அதன் தமிழ் மாநிலத் தலைவர்.)

—————————————————————————————
உ.பி. முதல்வர் மாயாவதிக்கு ரூ.52 கோடி சொத்து

லக்னெü, ஜூன் 26: உத்தரப்பிரதேச முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.52 கோடி என தெரியவந்துள்ளது.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட மாயாவதி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அவர் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.

ரூ.12.88 கோடியை பல்வேறு நிதி நிறுவனங்கள், வங்கியல்லாத நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ரூ.51 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், ரூ.52.27 லட்சம் ரொக்கம், ரூ.15 லட்சம் விலை மதிப்பு உள்ள ஓவியங்கள் ஆகியவை தன்னிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுதில்லியில் தனக்கு சொந்தமாக 3 வணிக வளாகங்கள், 2 வீடுகள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.37.82 கோடி என்றும் தனக்கு சொந்தமாக விவசாய நிலங்களும் வாகனங்களும் இல்லை என்றும் அவர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
—————————————————————————————
உ.பி.யில் இடைத்தேர்தல்: மாயாவதி வேட்புமனு தாக்கல்

லக்னெü, ஜூன் 26: உத்தரபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 2 சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

இதில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்காக அந்த மாநில முதலமைச்சர் மாயாவதி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் பி.ஆர்.வர்மா, சமாஜவாடி கட்சி உறுப்பினர் விக்ரமாதித்ய பாண்டே ஆகிய இருவரும் மரணமடைந்தனர்.

இதையடுத்து வர்மாவின் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை மாயாவதி தாக்கல் செய்தார். அவரது மனுவை 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்மொழிந்தனர்.

வேட்பு மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற ஜூன்28-ந் தேதி கடைசி நாளாகும்.

மாயாவதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதால், அண்மையில் நடைபெற்ற உத்தரபிரதேச தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
—————————————————————————————

Kumudam Reporter – Solai

08.07.07

இனி, மையத்திலும் மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சிதான். இந்திய அரசியல் இப்படி புதிய பரிணாமத்தை எட்டியிருக்கிறது என்று அரசியல் விற்பன்னர்கள் அறிவித்தார்கள். ஆனால், இருபது ஆண்டுகளுக்கு மேலாக, கூட்டணி ஆட்சி கண்ட உத்தரப்பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சி தனித்து ஆட்சி அமைத்திருக்கிறது. எப்படி?

அந்த மாநிலத்தில் மீண்டும் கூட்டணி ஆட்சிதான் என்று அனைத்து அரசியல் ஆரூடக்காரர்களும் சொன்னார்கள். ஆனால், கூட்டணி அமைப்பதில் மாயம் செய்த மாயாவதி, தனிப் பெரும்பான்மை பெற்று, தனித்து ஆட்சி அமைத்திருக்கிறார். என்ன காரணம்?

நாடு விடுதலை பெற்றாலும் தலித் மக்களுக்கு விடுதலை இல்லை. அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகளெல்லாம் அவர்கள் வீட்டு வாசலை எட்டிப் பார்த்ததில்லை. எனவே, அந்தச் சமுதாயத்தின் எழுச்சிக்காக அண்ணல் அம்பேத்கர் பாடுபட்டார். அதன் வழியில் தலித் மக்களுக்காக கன்ஷிராம், பகுஜன் சமாஜ் கட்சியை உருவாக்கினார். அந்தக் கட்சியில் அவருக்கு அடுத்த தலைவராக மாயாவதி உயர்ந்தார். டெல்லி மின் வாரியத்தில் லைன் மேனாகப் பணி செய்த ஒரு தலித்தின் புதல்விதான் அவர்.

தமிழகத்தில் எப்படி பிராமண சமுதாயத்தை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதோ, அதே போல் உத்தரப்பிரதேசத்துப் பிராமண சமுதாயத்தையும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்வா அமைப்புகளையும் எதிர்த்துத் தொடங்கப்பட்டதுதான் பகுஜன் சமாஜ் கட்சி.

உத்தரப்பிரதேச வாக்காளர்களில் பிராமணர்களும் இதர முற்படுத்தப்பட்ட வகுப்பினர்களும் 30 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். எனவே, இவர்களைப் பகைத்துக்கொண்டு இவர்களுக்கு எதிராக அரசியல் நடத்தினால் ஆட்சி என்பது கனவாகத்தான் இருக்கும் என்பது மாயாவதியின் கணிப்பு.

எனவே, அந்தச் சமுதாயத்தினரின் நம்பிக்கையைப் பெறுவதில் மாயாவதி நாட்டம் கொண்டார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளராக சதீஷ் சந்திர மிஸ்ரா என்ற பிராமணரை மாயாவதி நியமித்தார். அவர் சட்டமேதை. உத்தரப்பிரதேச அரசின் அட்வகேட் ஜெனரலாக இருந்தவர். அவர்தான் இன்றைக்கு மாயாவதிக்கு அரசியல் வழிகாட்டி.

ஒரு காலத்தில் உத்தரப்பிரதேச அரசியல், அலகாபாத் நேரு பவனத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது. பிராமணர்களே காங்கிரஸ் முதல்வர்களாக வந்தனர். இஸ்லாமிய மக்களும் தலித் மக்களும் காங்கிரஸ் அரசுகளின் காவலர்களாக இருந்தனர்.

இப்போது பிராமண சமுதாய மக்களும் இஸ்லாமிய மக்களும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் அரணாக மாறியிருக்கின்றனர். இவைதான் மாயாவதி செய்த மாயம்.

‘தலித் மக்களுக்கான கட்சி பகுஜன்’ என்றால் மாயாவதிக்கே கோபம் கொப்புளிக்கிறது. ‘சர்வ சமூகத்தினருக்கான கட்சி என்று சொல்லுங்கள்’ என்கிறார்.

தலித் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் என்ன தனி ஒதுக்கீடு? முற்படுத்தப்பட்ட சமுதாயங்களில் பொருளாதார ரீதியாக தலித்துகளை விடப் பின்தங்கியவர்கள் இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களை விட, முற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் அழுந்திக் கிடக்கின்றவர்கள் இருக்கிறார்கள் என்று அவர் கண்டுபிடித்திருக்கிறார். அந்த வாதம் முற்படுத்தப்பட்ட சமுதாய மக்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து எந்த அளவிற்கு மாயாவதி இறங்கிப் போக முடியுமோ, அந்த அளவிற்கு இறங்கி வந்து அதிகார அரசியலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு சக்தியாக இருந்தது. அடுத்து பி.ஜே.பி. ஒரு சக்தியாக உருவானது. அந்தக் கட்சி அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த பின்னர், அந்த வலிமையைப் பெற்றது. அதனைத் தடுக்க மையத்தில் இருந்த காங்கிரஸ் அரசு தவறியது. எனவே, இஸ்லாமிய மக்கள் காங்கிரஸ் உறவைக் கத்தரித்துக் கொண்டது மட்டுமல்ல; கடுங்கோபமும் கொண்டனர். அதனை, இன்னொரு சக்தியாக எழுந்த முலாயமின் சமாஜ்வாதி கட்சி பயன்படுத்திக் கொண்டது.

காங்கிரஸ் மீது இஸ்லாமிய மக்கள் கோபம் கொண்டது போல தலித் மக்களும் ஆவேசம் கொள்ளவே செய்தனர். தங்கள் சமுதாயத்தை வாக்கு வங்கியாகப் பயன்படுத்திக் கொள்ளும் அந்தக் கட்சி தங்களைக் கரம் கொடுத்துத் தூக்கி விடவில்லை என்று அவர்களுக்கு ஆதங்கம் ஏற்பட்டது.

இந்தச் சூழலில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்த பிரதமர் வி.பி.சிங் முன்வந்தார். அந்த அறிக்கையை ஆதிக்க சமூகங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் ஆயுதமாக சமாஜ்வாதி கட்சி பயன்படுத்திக் கொண்டது. அதே சமயத்தில், பகுஜன் சமாஜ் கட்சியும் எழுச்சி பெற்றது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸைப் போல் பி.ஜே.பி.யும் பெரிய சரிவைச் சந்தித்தது. ஒருமுறை தனியாகவும் இருமுறை கூட்டணியாகவும், அரசு கண்ட பி.ஜே.பி., பிற்படுத்தப்பட்ட மக்களைத் திருப்தி செய்வதிலேயே கவனம் செலுத்தியது. ஆகவே, முப்பது சதவிகிதமாக இருக்கும் முற்படுத்தப்பட்ட சமூகம் அதனை விட்டு வெகு தூரம் விலகிச் சென்று விட்டது. அவர்கள் இன்றைக்கு மாயாவதியை நம்புகிறார்கள்.

அதே சமயத்தில், இதற்கு முன் பிருந்த முலாயம் சிங் ஆட்சி ஊழலின் உறைவிடம் என்று முத்திரை பெற்றுவிட்டது. அந்தக் கட்சியை அரியணைக்கு அழைத்துச் சென்ற பிற்படுத்தப்பட்ட மக்கள் விழி பிதுங்கி நின்றனர். மாநில அரசே முலாயம் சிங் குடும்பத்தின் மொத்தக் குத்தகையானது.

இந்தச் சூழலில், தலித் அரசியலைப் பரண் மீது வைத்து விட்டு, ஜாதி வாரியாக மாயாவதி மாநாடுகளை நடத்தினார். மாவட்டம் தோறும் பிராமணர் மாநாடு, வைசியர் மாநாடு என்று ஆரம்பித்து அனைத்து ஜாதியினருக்கும் மாநாடு நடத்தினார்.

முற்படுத்தப்பட்ட சமுதாயம் (30 சதவிகிதம்), தலித் சமுதாயம் (21 சதவிகிதம்), இஸ்லாமிய சமுதாயம் (17 சதவிகிதம்) என்று எழுதப்படாத அணி உருவானது. சட்டமன்றத் தேர்தலில் தொகுதிகளையும் இதே அளவில் பிரித்து அளித்தார்.

வெற்றிக்குப் பின்னர் அவர் வெளியிட்ட அமைச்சர்களின் பட்டியலைப் பாருங்கள். விகிதாச்சாரப்படி அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். பி.ஜே.பி. ஆட்சியில் கூட இவ்வளவு பேர் இடம் பெற்றதில்லை. அதே சமயத்தில், தலித் சமுதாயத்தைத் திருப்திப்படுத்த 19 பேர் அமைச்சர்களாகி இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த 11 பேரும் இஸ்லாமியர்கள் ஐவரும் அமைச்சர்களாகி இருக்கிறார்கள்.

இப்படி தேர்தல் வெற்றிக்கு ஜாதிகளின் சங்கமத்தைப் பயன்படுத்திக் கொண்ட மாயாவதி, ஜாதிகளுக்குமேல் உயர்ந்திருக்கிறார் என்று சொல்லலாமா? வீழ்ந்து வந்த சமூக ஆதிக்க சக்திகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாமா? இப்படி மாயாவதியின் வெற்றி ரகசியங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் வெற்றிக்குப் பின்னர், மாயாவதி முதன்முதலாக நிருபர்களைச் சந்தித்தார். ‘பிராமணர்களில் ஏழைகள் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும்’ என்றார் பி.ஜே.பி.கூடத் துணிந்து இப்படிக் கேட்டதில்லை. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அவர் மயானத்திற்கு அனுப்பி விட்டார். உறங்கிய உண்மைகளைத் தட்டி எழுப்பிவிட்டதாகக் கூறுகிறார்.

‘டி.வி. சுந்தரம் அய்யங்கார் பிறப்பால் முற்படுத்தப்பட்டவர்தான். அவர்களது பிள்ளைகள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள்தான். ஆனால், அவர்கள் வீட்டில் காரோட்டும் சங்கர அய்யர் எப்படி? பிறப்பால் முற்பட்டவர்தான். பொருளாதார வசதியில்…? தலித்துகளின் நிலைதான் அவரது நிலையும்’ என்கிறார் மாயாவதி.

இத்தகைய வாதங்கள் அரசியலில் பெரும்புயலைக் கிளப்பியிருக்கின்றன. கசப்பான உண்மைகளைக் கூறுகிறார் என்பதா? பகுஜன் சமாஜ் கட்சி முற்போக்கு சமுதாயங்களின் முரசமாகிவிட்டது என்று சொல்வதா?

எதிர்கால அரசியல் ஜாதிக் கூட்டணிகளுக்குத்தான் என்று சொல்வதா? அடுத்து மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்குப் பெரும் செல்வாக்கு இல்லைதான். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் அமைத்த ஜாதிக் கூட்டணியை அமைக்க மாயாவதி முயற்சிப்பார். ஏனெனில், அவருடைய இலட்சியம் மாநில முதல்வர் என்பதல்ல; நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதுதான்!

——————————————————————————————-

உத்தரபிரதேசம் முழுவதும் மாயாவதி சிலைகள்: கன்சிராம் விருப்பம் நிறைவேறுகிறது

லக்னோ, ஆக. 6-

உத்தரபிரதேசத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார். கன்சிராமின் கொள்கை கள், திட்டங்கள் அனைத் தையும் நிறைவேற்ற முதல்- மந்திரி மாயாவதி ஏராள மான திட்டங்களை அறிவித் துள்ளார்.

கன்சிராம் பற்றி ஆய்வு செய்து கட்டுரை எழுதும் மாணவ-மாணவிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. “கன்சிராம் மாணவர் சுவா பிமான் விருது” என்ற பெயரில் ரூ.2.5 லட்சம் பரிசு வழங் கப்படும் என்று மாயாவதி கூறி உள்ளார்.

கன்சிராம் பெயரில் மிகப் பெரிய மருத்துவம் மற்றும் வீட்டு வசதி திட்டத்தையும் மாயாவதி அறிவித்துள்ளார். அதன்படி அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட மிகப் பெரிய மருத்துவமனை கட்டப்படும். அங்கு 40 சதவீத ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.

வீட்டு வசதி திட்டங்கள் “கன்சிராம் நகர்” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து சாதி யினருக்கும் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

4 ஆண்டுகளுக்கு முன்பு, மரணம் அடைவதற்கு முன்பு ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய கன்சிராம், உத்தரபிரதேசம் முழுவதும் என் சிலை அருகில் மாயாவதியின் சிலைகளும் நிறுவப்பட வேண்டும்” என்று கூறி இருந்தார். அவரது இந்த ஆசையை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள ஆயிரக் கணக்கான கன்சிராம் சிலை கள் அருகில் மாயாவதி சிலைகள் வைக்க மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு கோடிக் கணக்கில் பணம் செலவிடப்பட உள்ளது. லக்னோவில் கன்சிராம் நினைவிடத்தில் மாயாவதி சிலை நிறுவப்படும்.

—————————————————————————————————————————–
“சோனியாவை விட நானே பெரிய தலைவர்’
புதுதில்லி, ஜன.16: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விட நான்தான் பெரிய தலைவர் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச முதல்வருமான மாயாவதி கூறியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நான் பிரதமர் பதவியை அடைய ஆசைப்படுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

“எனது போராட்டமும் பகுஜன் சமாஜ் கட்சியின் பயணமும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதையில் இதுபற்றி கூறியுள்ளார். சுமார் 1000 பக்கங்கள் உள்ள இப்புத்தகத்தை தனது 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தில்லியில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டார். ஹிந்தியில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகத்தின் விலை ரூ.1100.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு புத்தகம் எழுதி தனது பிறந்த நாளன்று கட்சித் தொண்டர்களுக்காக வெளியிடுவேன் என்றார் அவர்.

சோனியா காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல், அவரை விட நான் உயர்ந்த தலைவர் என்று மாயாவதி தனது புத்தகத்தில் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

2006-ம் ஆண்டிலிருந்து சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேசத் தேர்தல் வரை பகுஜன் சமாஜ் கட்சிக்கு சோதனைக் காலம் ஆகும். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் உத்தரப் பிரதேசத்தில் 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய ஆதரவு தருவதாக 2003 ல் பா.ஜ.க. உறுதி அளித்தது. அப்போது பொதுத்தேர்தலை முன் கூட்டியே நடத்த பா.ஜ.க. திட்டமிட்டது. உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளில் 60 தொகுதிகளை பா.ஜ.க. கேட்டது. இதுதான் எனக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரிய சதியின் ஆரம்பம் என்று தனது புத்தகத்தில் மாயாவதி கூறியுள்ளார்.

அரசியல் மற்றும் சமூகப் பொறுப்புகளை ஏற்று நடத்தும் பல பெண்கள் நம் நாட்டில் உள்ளனர். ஆனால் நான் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்து, அந்த சமுதாயத்தின் சுயமரியாதை போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி வருகிறேன். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்து, மக்களுக்கு சமூக மாற்றத்தையும், பொருளாதார சுதந்திரத்தையும் தர வேண்டும் என்பது என் நோக்கமாகும்.

நியூஸ்வீக் பத்திரிகை வெளியிட்ட, பெரிய பொறுப்பில் உள்ள உலகின் முக்கிய 8 பெண்கள் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றுள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இத்தகைய கெüரவம் கிடைப்பது மிகவும் அரிது. எனக்கு எதிரான சதியை அச்சமின்றி எதிர்கொண்டது, நானும் என் இயக்கமும் வளர உதவியது.

நாம் வாக்களிக்க மற்றவர்கள் ஆட்சி செய்யும் முறை, இனிமேல் நடக்காது. நாம் நாடாளுமன்றத்தைத் தேர்தல் மூலம் கைப்பற்றி நாமே ஆட்சி செய்ய வேண்டும் என்று சாதாரண மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அம்பேத்கரின் சிலை, நாடாளுமன்றத்தை நோக்கி கையைக் காட்டுகிறது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் மேல்ஜாதியில் ஏழைகளாக இருப்போர், கிளர்ந்தெழுந்து, வாக்குப் பெட்டிகள் மூலமாக ஆட்சியைப் பிடித்து, தங்களது அடிமைத் தனத்தை உடைத்து, தங்கள் சொந்த முயற்சியால் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அம்பேத்கர் சிலை நமக்கு உணர்த்தும் பாடம் ஆகும்.

காங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும், தற்போதுள்ள சமூக நிலை அப்படியே நீடிக்க வேண்டும் என்று விரும்பும் கட்சிகள் ஆகும். அக்கட்சிகளின் கோட்டையாகத் திகழ்ந்த உத்தரப்பிரதேசத்தில் அரசியல் நிலையை மாற்ற நான் காரணமாக இருந்திருக்கிறேன் என்று தனது சுயசரிதையில் மாயாவதி கூறியுள்ளார்.

———————————————————————————————————————————————————
உத்தரபிரதேச மாநிலத்தை 3 ஆக பிரிக்க ஆதரவு
பிறந்தநாள் விழாவில் முதல்-மந்திரி மாயாவதி அறிவிப்பு

புதுடெல்லி, ஜன.17-

உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயாவதியின் 52-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அவர், உத்தரபிரதேச மாநிலத்தை 3 மாநிலங்களாக மத்திய அரசு பிரித்தால் ஆதரவு அளிக்க தயார் என்று அறிவித்தார்.

பிரமாண்ட கேக்

உத்தரபிரதேச முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின் 52-வது பிறந்தநாள் விழா, லக்னோவில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. முதல்-மந்திரியாக மீண்டும் பதவி ஏற்ற பிறகு நடைபெறும் முதல் பிறந்தநாள் விழா என்பதால் ஏராளமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. லக்னோ நகரமே, அவரது கட்சி கொடியின் நிறமான நீல வண்ணம் பூசியது போல இருந்தது.

நகரம் முழுவதும் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. பிறந்தநாளை முன்னிட்டு தயாரிக்கப்பட்டு இருந்த பிரமாண்டமான `கேக்’கை மாயாவதி வெட்டினார். அவருடைய தந்தை, குடும்பத்தினர், கட்சியின் மூத்த தலைவர்கள், தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., உட்பட மாநில அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அனல் மின்திட்டம்

பிறந்த நாளுக்காக பல்வேறு திட்டங்களையும் மாயாவதி தொடங்கி வைத்தார். குறிப்பாக, சர்ச்சைக்குரிய ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான நொய்டா-பாலியா விரைவு நெடுஞ்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ரூ.1,600 கோடி மதிப்பிலான நிவாரண திட்டங்களை அறிவித்தார்.

இது தவிர, வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு இலவச சுகாதார காப்பீடு, மாநில அரசு ஊழியர்களுக்கான பயிற்சி மையம் ஆகியவற்றையும் அவர் அறிவித்தார். மேலும் லலித்பூர் என்ற இடத்தில் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

இதற்கிடையே, மாயாவதி பிறந்தநாளுக்காக செய்யப்படும் பிரமாண்டமான செலவு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. இது குறித்து மாயாவதி கூறியதாவது:-

இது தலித் சமுதாயத்துக்கு எதிராக சில அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் செய்துவரும் அவதூறு பிரசாரம் ஆகும். பிறந்தநாளுக்கு அரசு பணம் எதையும் செலவழிக்கவில்லை. பிறந்தநாள் `கேக்’ கூட பணம் கொடுத்து வாங்கியதுதான். பொதுத்துறை மற்றும் மின்சார துறைக்கு கட்சியில் இருந்து பணம் செலுத்தப்பட்டுள்ளது.

3 மாநிலங்கள்

உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் பிரிக்கப்பட்ட போதிலும், இன்னமும் உத்தரபிரதேசம்தான் பெரிய மாநிலமாக இருந்து வருகிறது. எனவே, இதை பூர்வாஞ்சல், பண்டல்கண்ட், ஹரித் பிரதேசம் என 3 மாநிலங்களாக பிரிப்பதற்கு பகுஜன்சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும்.

சிறிய மாநிலங்களை உருவாக்குவதற்கு மத்திய அரசு சம்மதித்தால், இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். எனவே, இந்த விவகாரத்தில் முடிவு காண்பது, மத்திய அரசு கையில்தான் உள்ளது.

இவ்வாறு மாயாவதி கூறினார்.

மத்திய அரசு ஆதரவு

ஆனால், உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான திக் விஜய்சிங் கூறுகையில், `உத்தர பிரதேசத்தை சிறிய மாநிலங்களாக பிரிப்பது தொடர்பாக முதலில் மாநில அரசு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றட்டும்’ என்று தெரிவித்தார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு பிறகு மாயாவதி, டெல்லி சென்றார். அங்கு மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து கேட்டபோது, `தற்போது, எனக்கு அதிக அலுவல்கள் இருக்கின்றன. எனவே, இது குறித்து முடிவு எடுப்பதற்காக கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை கட்சித்தலைவர்கள் விரைவில் கூட்டுவார்கள்’ என்று பதிலளித்தார்.

இதற்கிடையே, மாயாவதி மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய நேரடி வரித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த வழக்கு குறித்து பதிலளித்த மாயாவதி, `கட்சியினர் கொடுத்த பணம்தான் என்னிடம் உள்ளது’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Posted in abuse, Action, Aiswarya, Allahabad, Alliance, Allocations, Amar Singh, Amarsingh, Ambani, Amitab, Amitabh, Anil, Assembly, Assets, Ayodhya, Ayodya, Bachan, Bahuguna, Bahujan Samaj Party, Biosketch, BJP, Brahmin, Brahmins, Bribes, BSP, Caste, Casteism, CM, Congress, Constituency, Corrupt, Corruption, Creamy, Creamy Layer, Dalit, Delhi, Disproportionate, Economic, Election, Elections, Faces, Free, Goel, Govt, Gujarat, Guru, Gurumoorthy, Gurumurthy, Health, Healthcare, Hindu, Hinduism, Hindutva, Homes, Hospitals, Hosuing, IAS, IPS, Islam, Jaiprakash, Jaiprakash Narain, Jats, JP, Kanshi, Kanshi ram, Kanshiraam, Kanshiram, Kansi ram, Kansiraam, Kansiram, kickbacks, Kurmis, Land, Lucknow, Mandal, Manifesto, Manu, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MBC, medical, Medicine, Mishra, Misra, Moslem, Mulayam, Muslim, Naseemuddin, Naseemudhin, Nasimuddin, Nasimudhin, New Delhi, OBC, Op-Ed, people, Plan, Planning, Poll, Polls, Power, PRO, promises, Property, Rajnath, Rajnath Singh, Ramjenmabhoomi, Ramjenmabhumi, Ramjenmaboomi, Ramjenmabumi, Reliance, Religion, Reservation, Reservations, Reserved, Rowdy, Rule, Sathish Chandra Mirs, SathishChandra Miras, SC Mishra, Siddik, Siddiq, Sidhik, Sidhiq, Slum, SP, Statue, Students, Study, Sudhir, Sudir, Taj, Taj mahal, Thakur, Thakurs, UP, Uttar Pradesh, Vaisya, Vajpayee, Vajpayi, Varanasi, Yadavs | 2 Comments »

‘There are no plans in the budget to solve the woes of the Farmers’ – Gurumurthy

Posted by Snapjudge மேல் மார்ச் 8, 2007

விவசாயிகளின் நெருக்கடியைத் தீர்க்க பட்ஜெட்டில் திட்டம் இல்லை: குருமூர்த்தி கோவை, மார்ச் 8: விலைவாசி உயர்வுக்கும் வேளாண் துறை சந்தித்து வரும் நெருக்கடிக்களுக்கும் தீர்வு காணும் திட்டம் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று கட்டுரையாளர் எஸ். குருமூர்த்தி கூறினார்.

இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் கோவையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய பட்ஜெட் குறித்த கூட்டத்தில் அவர் பேசியது:

இந்த பட்ஜெட்டில் தெளிவான அரசியல் பார்வை இல்லை. வேளாண் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தந்துள்ளதுபோல நிதியமைச்சர் கூறியுள்ளார். வேளாண் விரிவாக்கத் திட்டங்களுக்குப் புத்துயிர் அளிப்பது போன்ற 7 அம்சங்கள் வெறும் அறிவிப்புகளாக மட்டுமே இடம் பெற்றுள்ளன.

கடன் சுமையைத் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் பிரச்சினை, வேளாண் துறையில் குறைந்து கொண்டே போகும் மூலதன உருவாக்க விகிதம், வேளாண் துறையில் அரசின் முதலீடு குறைந்து கொண்டே செல்லும் போக்கு, உணவு தானிய உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவை குறித்து பட்ஜெட்டில் முழுமையாக விளக்கவே இல்லை.

நாட்டின் பொருளாதாரத்துக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் பார்க்காமல் வெறும் ஆண்டுச் சடங்காக பட்ஜெட்டை மாற்றிவிட்டார்.

நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த கிராமப்புற வளர்ச்சிக்கான திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. விலைவாசி உயர்வுக்கு நிதியமைச்சர் கூறும் காரணம் ஏற்கக் கூடியதாக இல்லை.

கிராமப்புற சமூக பாதுகாப்புத் திட்டமும் மழைநீர் சேகரிப்புத் திட்டமும் வரவேற்கத்தக்கவை. அதிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்டில் தெளிவான திட்டம் எதுவும் இல்லை. குழப்பமே அதிகம் காணப்படுகிறது.

நாட்டில் ரியல் எஸ்டேட் தொழிலில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மாதந்தோறும் 10 சதவீதம் உயர்வு காணப்படுகிறது என்றார் குருமூர்த்தி.

உலகமயமாதல் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல: பத்திரிகையாளர் குருமூர்த்தி பேச்சு

சென்னை, மார்ச் 9: உலகமயமாதல் என்பது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. பன்முகத் தன்மை கொண்டது என்று பத்திரிகையாளரும், ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி குறிப்பிட்டார்.

துரைப்பாக்கம் எம்.என்.எம். ஜெயின் பொறியியல் கல்லூரியில் “உலகமயமாதலும் எதிர்கொள்ள வேண்டிய உத்திகளும்’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் குருமூர்த்தி ஆற்றிய சிறப்புரை:

உலகமயமாதல் பிரச்சினைக்கு உளவியல், பண்பாடு, அரசியல் எனப் பல பரிமாணங்கள் உண்டு. இப்பிரச்சினையை நிபுணர்களோ, வணிகர்களோ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

நம் நாட்டில் ஏற்பட்ட சில பொருளாதார மாற்றங்களுக்கு உலகமயமாதல்தான் காரணம் என்றும் சித்திரிக்கப்படுகிறது. அது சரியல்ல. உண்மையில் தொழில் நிறுவனங்களின் மீது அரசு கொடுத்த அழுத்தம் தளர்த்தப்பட்டதே காரணம்.

மேலை நாடுகளில் வலிமையான அரசு உண்டு. வலிமையற்ற சமுதாயம் உள்ளது. இந்தியாவில் வலிமையற்ற அரசு இருக்கிறது. ஆனால், நம் சமுதாயம் வலிமையானது.

இந்தியாவில் பண்பாட்டின் அடிப்படையிலான சமுதாயமே உலகமயமாதலை எதிர்கொண்டு வெற்றி பெறப் போகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் தங்கிய இந்தியர்கள் இந்தியாவைப் பழித்துக் கொண்டிருந்தனர்.

போக்ரனில் அணு ஆயுத சோதனையை இந்தியா நடத்தியது உலக நாடுகளை உலுக்கிவிட்டது. அதன் விளைவாக ஜப்பான் உள்பட அனைத்து நாடுகளும் இந்தியாவிலிருந்து பொருளாதார ரீதியில் மிரட்டின.

அதுவரை இந்தியாவைப் பழித்துக் கொண்டிருந்த வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து மொத்தம் 58 லட்சம் டாலர் அளவுக்கு முதலீடு வந்து குவிந்தது.

ஒவ்வொரு நாட்டுக்கும் மென் சக்தி என்றும் வன் சக்தி என்றும் உண்டு. நாட்டின் வளமை, கல்வியறிவு, அறிவியல் வளர்ச்சி ஆகியவை மென் சக்தி. ஆனால், ராணுவ வலிமை, படைபலம் என்பது வன் சக்தி.

மென் சக்தி அபரிதமாக உள்ள ஜப்பானுக்கு உலக அளவில் போதிய மரியாதை கிடைக்காததற்கு வன்சக்தி இல்லாததே காரணம் என்றார் குருமூர்த்தி.

கருத்தரங்கைத் தொடங்கி வைத்த இந்தோ ஜப்பான் தொழில் வர்த்தக சபைத் தலைவர்என்.கிருஷ்ணசாமி: உலகமயமாதல் என்பது நம் நாட்டுக்குப் புதிதல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாகவே “வசுதேவ குடும்பகம்’ என்ற கோட்பாடு இதைத்தான் வலியுறுத்துகிறது.

உலகமயமாதலை எதிர்கொள்ள கல்வி முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். மாணவர்களுக்குக் கதவுகளைத் திறந்துவிட வேண்டும்.

உலகமயமாதலின் பாதிப்பைத் தவிர்க்க வேண்டுமானால், நாடுகள் நீங்கி, நாம் அனைவரும் உலகப் பிரஜைகளாக வேண்டும் என்றார்.

கருத்தரங்கை ஒட்டி, கல்லூரியின் மேலாண்மையியல் ஆய்வுத் துறை தயாரித்த மலரை கல்லூரிச் செயலர் ஹரிஷ் எல்.மேத்தா வெளியிட்டார். முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீபால் பங்கேற்றார்.

கல்லூரி முதல்வர் வி.கே.ஆர்.ஜெயசிங் தலைமை வகித்தார். மேலாண்மையியல் துறைத் தலைவர் கே.எஸ். மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். துணைப் பேராசிரியர் ரூபி செல்வின் நன்றி கூறினார்.

முரசொலி மாறனின் உறுதி

“”தோஹா மாநாட்டில் உலக வர்த்தக சபை முன் வைத்த தீர்மானங்களை இந்தியாவின் சார்பில் பங்கேற்ற அப்போதைய தொழில் அமைச்சர் முரசொலி மாறன் ஏற்கவில்லை.

அத்தீர்மானத்தை வடிவமைத்தவர் யார் என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளிக்க உலக வர்த்தக சபையினர் திணறினர். வளரும் நாடுகளைப் பாதிக்கும் அத்தீர்மானத்தில் கையெழுத்திட முரசொலி மாறன் உறுதியாக மறுத்து விட்டார்.

இறுதியில் அமெரிக்கா மெüனமாக தீர்மானத்தைத் திரும்பப் பெற்றது. மாறனுடன் எனக்குப் பல சில முரண்பட்ட கொள்கைகள் இருந்தாலும் அவர் காட்டிய உறுதி மிகவும் பாராட்டத்தக்கது. அதுதான் இந்தியாவின் வலிமை” என்றார் குருமூர்த்தி.

வரி விலக்குகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும்: ப.சிதம்பரம் அறிவிப்பு

புதுடெல்லி, மார்ச்.8-

இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய கவுன்சில் சார்பில் மத்திய பட்ஜெட் பற்றிய கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

இதில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பட்ஜெட் அம்சங்கள் பற்றி பேசினார். அப்போது வரி விலக்குகளை அரசு படிப்படியாக வாபஸ் பெறும் என்று அறிவித்தார்.

அவர் கூறியதாவது:-

வரி விலக்குகள் காரணமாக 2006-007-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 191 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஒவ்வொரு வகைக்கு வழங்கப்படும் வரி விலக்கும் ஆய்வு செய்யப்படும் என்று பிரதமர் கூறி இருக்கிறார். எனவே வரி விலக்குகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும். எந்தெந்த வகைக்கு வழங்கப்படும் வரி விலக்குகளை விலக்கிக் கொள்ளலாமோ அந்த வரி விலக்குகளை அரசு வாபஸ் பெறும்.

என்றாலும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, அறிவுசார் துறைகள், மூத்த குடிமக்கள் தொடர்பான வரிவிலக்குகள் நீடிக்கும்.

ஆபத்து மிகுந்த தொழில்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரிவிலக்கு அளிக்கும் பிரச்சினையில் எந்தெந்த தொழில்கள் மீதான முதலீடு என்பது பற்றி முடிவு செய்ய வேண்டியது அரசாங்கம்தான்.

வேளாண்மை துறைக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. வேளாண்மை பொருட்களின் இறக்குமதியால் அவற்றின் சப்ளை அதிகரித்து விலை குறையும். என்றாலும் வேளாண்மை பொருட்களின் உற்பத்தியை பெருக்குவதுதான் இதற்கு நீண்டகால தீர்வு ஆகும். எனவே நெல், கோதுமை, பருப்பு வகைகள், சமையல் எண்ணை ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐ.டி.ஐ. நிறுவனங்களை நவீனப்படுத்துவதில் அரசு உறுதியாக இருக்கிறது. இதற்காக ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஐ.டி.ஐ. நிறுவனங்களை நவீனமாக்கும் முயற்சியில் அரசுடன் தொழில் துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

உற்பத்தி வரி மற்றும் சேவை வரியை இணையதளம் மூலம் செலுத்தும் முறையை தொடங்கி வைத்து ப.சிதம்பரம் பேசுகையில் கூறியதாவது:-

பொருளாதார வளர்ச்சி 8.5 முதல் 9 சதவீதம் என்ற அளவில் உள்ளது. உற்பத்தி வளர்ச்சியும் இரு இலக்கமாக உள்ளது. ஆனால் அந்த அளவுக்கு உற்பத்தி வரி வசூல் வளர்ச்சி விகிதம் அமையாதது ஆச்சரியமாக உள்ளது. கம்பெனிகளின் வருமான வரி, சேவை வரி வசூல் அதிகரித்த அளவுக்கு உற்பத்தி வரி வசூல் உயரவில்லை. உற்பத்தி வரி ஏய்ப்பு நடைபெறுவது கவலை அளிப்பதாக உள்ளது. இந்த நிலை நீடித்தால் அது நீண்டகால போக்கில் கம்பெனிகளை பாதிப்பதாக அமையும். கம்பெனிகள் உற்பத்தி வரியை குறித்த காலத்தில் முறைப்படி செலுத்த வேண்டும். இது நல்ல தொழில் அணுகுமுறை ஆகும்.

இந்த நிதி ஆண்டில் உற்பத்தி வரி வசூல் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 266 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. உற்பத்தி வரி வசூலில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

இவ்வாறு நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

“மத்திய விற்பனை வரி 3 ஆண்டுகளில் ரத்தாகும்’

புதுதில்லி, மார்ச் 10: மத்திய விற்பனை வரி (சிஎஸ்டி) விதிப்புமுறையை ரத்து செய்யும் நோக்கிலான மசோதா மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய விற்பனை வரி 4 கட்டங்களாக மூன்று ஆண்டுகளுக்குள் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

இதையடுத்து “ஒருங்கிணைந்த பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மசோதாவை’, 2010- ஏப்ரல் 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வழியேற்படும்.

“1956 சிஎஸ்டி சட்டத்தை’ திருத்தும் நோக்கில் இந்த வரிவிதிப்பு சட்ட (திருத்த) மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிஎஸ்டி வரிவிதிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி மூன்றிலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும்; அதற்கு அடுத்த ஆண்டு (2009) இரண்டிலிருந்து ஒரு சதவீதமாகவும், 2010 மார்ச் 31-ம் தேதி முழுவதுமாகவும் ரத்து செய்யப்படும். மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வெள்ளிக்கிழமை மக்களவையில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:

சிஎஸ்டி வரிவிதிப்பு முறையை நீக்க வேண்டும் என்ற யோசனை 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பலமுறை கூடி ஆலோசித்து ஒருமித்த கருத்தை எட்டிய பிறகே இதை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பால், எண்ணெய், உரம் விலையை குறைக்க நடவடிக்கை: ப.சிதம்பரம்

புதுதில்லி, மார்ச் 10: நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக, பால், எண்ணெய்வித்துக்கள் மற்றும் உரம் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பணவீக்க விகிதம் 5-5.5 சதவீதமாக இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஆனால், கடந்த பிப்ரவரி 24-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க விகிதம் முந்தைய 6.05 சதவீதத்திலிருந்து 6.10 சதவீதமாக அதிகரித்தது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய உறுப்பினர்களுடனான பட்ஜெட்டுக்குப் பிந்தைய ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் சிதம்பரம் கூறியது:

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தானிய மற்றும் பருப்பு வகைகள் மீது கவனம் செலுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. எண்ணெய்வித்துக்கள் மற்றும் உரத்தின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவர்களின் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்படும்.

பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்றார் அவர்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் விதத்தில், வெண்ணெய் எடுக்கப்பட்ட பால் பவுடர் ஏற்றுமதிக்கு கடந்த மாதம் அரசு தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.

========================================================

விளைநிலம் காப்போம்

சிறப்புப் பொருளாதார மண்டலம் பற்றிய அறிவிப்புகளும், இதற்கு விளைநிலங்கள் ஒதுக்கப்படக்கூடாது என்ற எதிர்வினைகளுமாக பரபரப்படைந்திருக்கும் இவ்வேளையில், வேளாண் அறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் ஒரு யோசனையை முன்வைத்துள்ளார்: “சிறப்பு வேளாண்மை மண்டலங்கள் அமைக்கப்பட வேண்டும்’.

வளமான நிலங்களைப் பாதுகாக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் இது அவசியமான ஒன்று. பல லட்சம் ஏக்கர் விளைநிலங்களை நகர் விரிவாக்கம் மற்றும் தொழில் வளர்ச்சிக்காக இழந்துவிட்ட இன்றைய நிலையிலும்கூட, காப்பாற்றப்பட வேண்டிய விளைநிலங்கள் இன்னமும் இருக்கவே செய்கின்றன.

சிறப்பு வேளாண்மை மண்டலம் அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனை கொஞ்சம் காலதாமதமானது என்றாலும் மிக அவசியமானது. விவசாய நிலங்களைக் குறைந்த விலையில் வாங்கி, அவற்றை விவசாயப் பட்டியலிலிருந்து நீக்கி, மனைகளாக மாற்றுவதற்கு அங்கீகாரம் பெற்று, பல நூறு மடங்கு லாபம் சம்பாதிக்கும் நிலைமை உள்ளவரையிலும், விவசாய நிலங்களைக் காப்பாற்றுவது எளிதல்ல.

முதல்கட்டமாக, மாவட்ட வாரியாக தற்போது வேளாண்மை நிலம் எவை என்பதை அரசு அறிவிக்க வேண்டும். வேளாண்மை நிலங்கள் குறித்த விவரங்களை மாவட்டம், ஊர், கிராமம், சர்வே எண் விவரங்களுடன் இணைய தளத்தில் வெளியிட்டு இந்த நிலங்கள் குடியிருப்புகளாகவோ தொழிற்கூடங்களாகவோ மாறும் வாய்ப்பே இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இத்தகைய வெளிப்படையான அறிவிப்பு இருந்தால், அரசு அறிவிக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் கூட விளைநிலத்தில் அமையாத நிலைமை உருவாகும். நகர் விரிவாக்கம் என்ற பெயரில் விளைநிலங்கள் மறையாமல் இருக்க உதவும்.

இந்தியாவில் வேளாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது. 60 சதவீதம் பேர் வேளாண்மைத் தொழில்களை நம்பி வாழ்கின்றனர். இருந்தபோதிலும் வேளாண்மை பற்றிய தெளிவு அரசிடம் இல்லை. விவசாயிகளும் ஆர்வம் இழந்தவர்களாக இருக்கின்றனர்.

தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவதற்குத்தான் எந்த அரசும் ஆர்வம் காட்டுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிடும் ஆர்வம், அக்கறை வேளாண்மைக்கு காட்டப்படுவதில்லை.

இன்றைய மிகப்பெரிய சோகம், இரண்டு தலைமுறைகளாக பாரம்பரிய விவசாயத்தை முற்றிலுமாக மறந்துவிட்ட இளம் தலைமுறை விழிபிதுங்கிக் கிடக்கிறது. இயற்கை வேளாண்மையில் மீண்டும் ஈடுபட மனத்தளவில் ஆசை இருந்தாலும், பாரம்பரிய விவசாயம் குறித்த அனுபவ அறிவோ, வழிவழித் தகவல்களோ இல்லாமல் இன்றைய இளம் விவசாயிகள் தயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய சிறப்பு வேளாண்மை மண்டலங்கள் அமைக்கப்படும்போது அவற்றுக்கு அளிக்கப்படும் சலுகைகள் பாரம்பரிய விவசாயத்தை ஊக்கப்படுத்துவதாக அமைய வேண்டும்.

வேளாண்மை நிலங்கள் வேறு பயன்பாட்டுக்குப் போகாமல் காப்பதுபோலவே, இந்த மண்ணுக்கே உரித்தான பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்து, அவற்றை மீண்டும் பரவலாக விளைவிக்கும் முயற்சிகள் தேவையாக இருக்கின்றன. தாவர விதைகள் மற்றும் செடிகொடிகளைக் கொண்டு எளிய முறையில் பூச்சிவிரட்டிகள் தயாரிக்கும் முறை, எரு தயாரிக்கும் பாரம்பரிய முறைகளை மீண்டும் நம் வயல்களில் புகுத்த வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. அந்தந்த நிலத்தில் விளையக்கூடிய பயிர்களைப் பயிரிடுவதும், அந்த நிலத்திற்கு அருகில் கிடைக்கும் பொருளையே உரமாக மாற்றும் பாரம்பரிய வழிமுறைகளை மேற்கொள்வதும் மட்டுமே இன்றைய வேளாண்மையின் செலவைக் குறைத்து, விவசாயிக்கு ஓரளவாகிலும் வருவாய் கிடைக்கச் செய்யும்.

வானிலை, மண்வளம், பயிர் வளர்ச்சி, நீர் பயன்பாடு என எல்லாவற்றிலும் தகவல்தொழில்நுட்பம் புகுந்துவிட்டது. பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கவும் தகவல்தொழில்நுட்பம் உதவும்.

=================================================
மேலும் 50 உழவர் சந்தைகள்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஏப். 4: புதிதாக 50 உழவர் சந்தைகள் ரூ. 12.5 கோடியில் இந்த நிதியாண்டில் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

வேளாண் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:

உழவர் சந்தைக்கு என நிரந்தரப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் மூடப்பட்ட 28 உழவர் சந்தைகள் புதுப்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அறுவடைக்குப் பின் விளை பொருளை நேர்த்தி செய்யும் தொழில்நுட்ப பயிற்சி ரூ. 50 லட்சம் செலவில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும்.

வட்டி குறைப்பு: விவசாயிகளுக்கான பொருளீட்டுக் கடன் தொகைக்கு வட்டி 8 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும். பொருளீட்டு கடன் அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ. 2.75 கோடியில் 100 உலர் களங்கள் அமைக்கப்படும். சிறு, குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் தோட்டக்கலை மூலிகைப் பயிர்கள் மற்றும் மலைப் பயிர்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை செய்ய தனி சந்தைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி மண்டலங்களில் மேம்படுத்தப்பட்ட நாற்றங்கால்கள் அமைக்கப்படும்.

வேளாண் பல்கலையில் ரூ. 50 கோடியில் வசதிகள்: மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 50 கோடி நிதியைக் கொண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் உலகத் தரம் வாய்ந்த பரிசோதனை ஆய்வுக் கூடம் உள்பட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

சென்னை நந்தனத்தில் வேளாண்மை பள்ளியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்ததை ஆங்கிலேயர்கள் கோவைக்கு மாற்றம் செய்தனர். இவ்வாறு மாற்றப்பட்டு 100 ஆண்டுகள் ஆனதையொட்டி வேளாண் பல்கலைக்கழகத்தில் நூற்றாண்டு கட்டடம் ரூ. 5 கோடியில் கட்டப்படும்.

தருமபுரியில் வேளாண் அறிவியல் மையம்: இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் 100 சதவீத நிதி உதவியுடன் தருமபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி கிராமத்தில் வேளாண்மை அறிவியல் மையம் ரூ. 1 கோடி 10 லட்சம் செலவில் அமைக்கப்படும். இம் மையத்தில் விவசாயிகள், பண்ணை மகளிர், இளைஞர்களுக்கு வேளாண் தொழில்களில் பயிற்சி அளிக்கப்படும்.

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் 560 ஹெக்டேர் பரப்பில் ரூ. 5.56 கோடியில் துல்லிய பண்ணை திட்டம் செயல்படுத்தப்படும்.

தேசிய தோட்டக்கலை திட்டத்தின் மூலமாகவும் நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலமாகவும் 390 ஹெக்டரில் ரூ. 4 கோடியில் துல்லிய பண்ணைத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

ஏற்றுமதிக்கு உகந்த வாழையில் 150 ஹெக்டேர் பரப்பில் ரூ. 2 கோடியில் துல்லியப் பண்ணை அமைக்க தேசிய தோட்டக் கலை வாரியத்தின் மூலம் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று செயல்படுத்தப்படும்.
=================================================
வேளாண் துறை இரண்டு அடுக்காக மாற்றப்பட்டு சீரமைக்கப்படும்: அமைச்சர்

சென்னை, ஏப். 4: வேளாண் துறையில் மூன்று அடுக்கு முறை மாற்றப்பட்டு இரண்டு அடுக்கு முறை செயல்படுத்தப்படும். அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

வேளாண்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:

நவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு விரைவில் சென்றடையவும் ஒரே இடத்தில் கிடைத்திடவும் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை விற்பனைத்துறை, விதைச்சான்று துறை ஆகிய துறைகளின் விரிவாக்கப் பிரிவுகளை ஒருங்கிணைத்து விவசாயிகள் ஒன்றிய அளவில் அனைத்து தகவல்களையும் பெற ஏற்பாடு செய்யப்படும்.

அதன் பொருட்டு தற்போது தாலுகா அளவில் பணியாற்றி வரும் பணியாளர்களின் பணி நிலை பாதிக்காதவாறு ஒன்றிய அளவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

நிர்வாகம் மாவட்ட அளவிலிருந்து ஒன்றிய அளவில் நேரடியாகச் செயல்படும்.

பயணப்படி உயர்வு: வேளாண் துறையில் பணிபுரியும் உதவி வேளாண் அலுவலர்களுக்கு 1996-ம் ஆண்டு முதல் நிரந்தர பயணப்படி மாதம் ஒன்றுக்கு ரூ. 140 வழங்கப்பட்டு வருகிறது. தற்போது போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் எரிபொருள் செலவினங்கள் உயர்ந்துள்ள நிலையில் பயணப்படியை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வருடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.

அங்கக நடைமுறைகள் கடைப்பிடித்து உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களுக்கு சான்று அளிக்கும் வகையில் தற்சமயம் இயங்கி வரும் வேளாண்மை விதைச் சான்று துறையானது “விதை மற்றும் அங்கக சான்றளிப்பு துறை’ என பெயர் மாற்றம் செய்யப்படும்.

அங்கக வேளாண்மை சான்றிதழ் பயிற்சி பெறவும் அதற்கென ஒரு தனிப் பிரிவு தொடங்கவும் தில்லியில் உள்ள அபிடா நிறுவனத்தில் பயிற்சி பெற உயர் அலுவலர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

தரிசு நில மேம்பாடு: சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான பட்டா தரிசு நிலங்களை 50 ஏக்கருக்கு மேல் ஒரு தொகுப்பாக உள்ள இடங்களில் நிலத்தின் உரிமையாளர்கள் கூட்டாகச் சேர்ந்து கோரிக்கை வைத்தால் அரசு தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயத்துக்கு ஏற்ற நிலமாக சீர் செய்து கொடுக்கப்படும்.

அதோடு தேவையான அளவு நிலத்தடி நீரும், சாதகமான புவியியல் நிலையும் இருக்கும் இடங்களில் நீர் ஆதாரங்களை உருவாக்கி கொடுத்து தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்ய மானிய உதவிகள் வழங்கப்படும். நிலத்தடி நீர் போதுமான அளவு இல்லாத தொகுப்பு நிலங்களில் மரப் பயிர்கள் நடவுசெய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

=================================================

வேளாண்மைத் துறை வளர்ச்சிக்கு ரூ. 25 ஆயிரம் கோடி திட்டம்: பிரதமர் அறிவிப்பு

புதுதில்லி, மே 30: வேளாண்மைத் துறை வளர்ச்சிக்கு ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.

புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் நிறைவுரையாற்றிய போது பிரதமர் மன்மோகன் சிங் இத் திட்டத்தை அறிவித்தார்.

வேளாண்மைத் துறையின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அடுத்த 4 ஆண்டுகளில் இந் நிதி வழங்கப்படும் என்றார்.

இது குறித்து அவர் மேலும் பேசியது:

வேளாண்மைத் துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு அடுத்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு இந் நிதியை வழங்கும். இது தொடர்பான திட்டத்தை அடுத்த இரு மாதங்களில் திட்டக் குழு மற்றும் மத்திய வேளாண்மை அமைச்சகம் இறுதி செய்யும்.

வேளாண்மைத் துறை அன்றாடம் சந்தித்து வரும் பிரச்னைகளைத் தீர்க்க மாநில அரசுகளை ஊக்குவிக்கும் வகையில் இத் திட்டம் இருக்கும்.

கோதுமை, நெல், தானியங்கள் போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் உணவுப் பாதுகாப்பு இயக்கம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. உணவு தானியப் பொருள்களுக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையை குறைக்கும் நோக்கிலும் இத் திட்டம் அறிவிக்கப்படவுள்ளது.

கடுமையான முடிவுகள் எடுத்து அதை தீவிரமாக அமல்படுத்தினால் மட்டுமே வேளாண்மைத் துறையில் 4 சதவீத வளர்ச்சியை அடைய முடியும்.

தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைக்க நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

முன்னதாக, தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் அடுத்த 4 ஆண்டுகளுக்குள் கோதுமை உற்பத்தியை 80 லட்சம் டன்களாகவும், நெல் உற்பத்தியை 1 கோடி டன்களாகவும், தானிய உற்பத்தியை 20 லட்சம் டன்களாகவும் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உணவு பாதுகாப்பு இயக்கம்: மன்மோகன் சிங் யோசனை

பற்றாக்குறை காரணமாக அண்மையில் கடுமையாக விலை உயர்ந்த கோதுமை, நெல், தானியங்கள் மற்றும் உணவு எண்ணெய் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க உணவுப் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கலாம் என பிரதமர் மன்மோகன் சிங் யோசனை தெரிவித்தார்.

புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த 53-வது தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் இது குறித்து அவர் மேலும் பேசியது:

வேளாண்மை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எந்தவகையில் உதவி செய்யலாம் என்பதை வரையறுக்க திட்டக்குழு உரிய பரிந்துரைகள் அளிக்கலாம் என்றார்.

கூட்டத்தில் மத்திய வேளாண்மை அமைச்சர் சரத் பவார், திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா உள்ளிட்டோர் பேசினர்.

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங், நிதி அமைச்சர் ப. சிதம்பரம், திட்டத்துறை இணை அமைச்சர் எம்.வி. ராஜசேகரன், திட்டக் குழு உறுப்பினர் செயலர் ராஜீவ் ரத்னா ஷா, மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

11-வது ஐந்தாண்டு திட்ட காலத்திற்கான வேளாண்மைக் கொள்கைகளை வகுப்பது தொடர்பாக இக் கூட்டம் நடைபெற்றது.

—————————————————————————————–
வேளாண்மைத் துறை மானியங்களை குறைக்க வேண்டும்: சரத்பவார் குழு பரிந்துரை

புதுதில்லி, மே 30: வேளாண்மைத் துறையை மேம்படுத்த மானியங்களைக் குறைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையிலான துணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட பரிந்துரைகளில் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பரிந்துரையில் மேலும் கூறியிருப்பது:

நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்

வேளாண்மைத் துறைக்கு மாநில அரசுகள் அளித்து வரும் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். பாசனத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உணவுப் பதப்படுத்தல் துறையில் உள்ள தடைகளை நீக்க வேண்டும்.

வேளாண் மண்டலங்கள்

வேளாண்மைக் கடன் வசதியை மேம்படுத்தவும், கடன் வசூலை விரைவு படுத்தவும் சிறப்பு மையங்கள் கொண்ட மண்டலங்களை நாடு முழுவதும் அமைக்க வேண்டும். கடன் வசூலிப்பு மையங்களின் தலைவர்களாக சுயேச்சையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். குறிப்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிக்கலாம்.

இன்சூரன்ஸ் திட்டத்தில் புதிய அணுகுமுû

தற்போது நடைமுறையில் உள்ள பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் புதிய அணுகுமுறைகளை கொண்டு வர வேண்டும். அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பில்லாத பயிர்களை இத் திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்.

4 சதவீத வளர்ச்சி

11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் பொருளாதார வளர்ச்சி வீதம் 9 சதவீதமாக இருக்கும் நிலையில், வேளாண்மைத் துறையின் வளர்ச்சி வீதம் 4 சதவீதமாக இருக்க வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

மானியங்களை குறைக்க வேண்டும்

உலக வர்த்தக அமைப்பின் வேளாண்மைத் துறை சார்ந்த கொள்கையைப் பின்பற்றி, மானியங்களை குறைக்க வேண்டும். மானியமாக அளிக்கப்பட்டு வரும் நிதியை ஆராய்ச்சி, விரிவாக்கப் பணிகள், அடிப்படைக் கட்டமைப்பு வசதி மற்றும் வேளாண்மை இன்சூரன்ஸ் போன்ற திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்.

உற்பத்தி குறைவுக்கு கவலை

கடந்த 10 ஆண்டுகளாக வேளாண்மைத் துறையில் உற்பத்தி குறைந்து கொண்டே வருவது கவலையளிக்கிறது. புதிய விளைநிலங்களை அதிகரிக்கவும் வாய்ப்பு இல்லாத நிலையில், உற்பத்தியும் குறைந்து வருவது நாட்டின் உணவு பாதுகாப்புக்கு ஆபத்தானது.

1980-களில் 3.1 சதவீத வளர்ச்சியில் இருந்த கோதுமை உற்பத்தி 1990-களில் 1.83 சதவீதமாகவும், 2004-05-ம் ஆண்டில் 0.11 சதவீதமாகவும் உள்ளது. அதே போல் அரிசி உற்பத்தியும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது என்று துணைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

————————————————————————————————-

உழவுக்கு வஞ்சனை!
June 1, 2007 Dinamani Editorial

விவசாயத்திலிருந்து நாட்டின் மொத்த உற்பத்திக்கான பங்களிப்பு கடந்த சில ஆண்டுகளாகவே 2%-க்கும் குறைவாக இருப்பதால் இம் முறை அரசின் முழுக் கவனமும் அத்துறை மீது திரும்பியிருக்கிறது. ஏற்கெனவே ஒதுக்கியிருக்கும் நிதியுடன் கூடுதலாக ரூ. 25,000 கோடி ஒதுக்க மத்திய அரசு தயார், மாநிலங்கள் தங்களுடைய சூழல், தேவைகளுக்கேற்ப திட்டங்களைத் தீட்டி எங்களை அணுகினால் போதும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரமும் தில்லியில் கூடிய தேசிய வளர்ச்சிமன்றக் கூட்டத்தில் சமீபத்தில் கூறியிருக்கிறார்கள்.

கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. விவசாயத்தின் “”உண்மையான பிரச்னைகளை”த் தீர்க்க யாருக்கும் மனது இல்லை. இப்போது விவசாயம் லாபகரமான தொழில் இல்லை. 15 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள்தான் அதிகம். ஜமீன்தாரி முறையை ஒழிக்கக் கொண்டுவரப்பட்ட நில உச்சவரம்பு சட்டம் இப்போது விவசாய உற்பத்திக்கே உச்சுருக்காக இருக்கிறது. விவசாய நிலங்கள் பாகப்பிரிவினை காரணமாக, பல துண்டுகளாகச் சுருங்குவதால் திட்டமிட்ட வகையிலோ, கட்டுப்படியாகும் வகையிலோ சாகுபடிகளை மேற்கொள்ள முடிவதில்லை. பருப்பு வகைகள், சிறு தானியம், எண்ணெய் வித்துகள் சாகுபடி குறைந்ததற்கு இது முக்கிய காரணம்.

நேரடி நெல் விதைப்புக்கும், நாற்று நடுவதற்கும், அறுவடைக்கும் இப்போது இயந்திரங்கள் வந்துவிட்டன. அவற்றை வாடகைக்கு வாங்கித்தான் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். விவசாய வேலைக்கு இப்போது கூலி ஆள்கள் கிடைப்பதில்லை. அருகில் உள்ள தொழிற்பேட்டையில் மாதம் 1,500 ரூபாய் சம்பளத்துக்கு (ஒரு நாளைக்கு 50 ரூபாய் கூலி!) எவர்சில்வர் டப்பாவில் “டிபன்’ எடுத்துச் செல்லும் கலாசாரம் கிராமத் தொழிலாளர்களிடையே பரவி வருகிறது. (தஞ்சை டெல்டா போன்ற பகுதிகள் விதிவிலக்காக இருக்கலாம்.) “”விவசாயத்தை நம்பினால் பிழைக்க முடியாது, இது நிரந்தரமான தொழில் அல்ல” என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டுவிட்டது.

கரும்பு பயிரிட்டால் காசு அள்ளலாம் என்பதெல்லாம் பொய்யாய், பழங்கதையாகி வருகிறது. “”சர்க்கரை ஆலையில் கரும்பை வெட்ட அனுமதி தரவில்லை, காய்ந்த கரும்பை விவசாயிகள் தீ வைத்துக் கொளுத்தினார்கள்” என்ற செய்திகள் ஏன் வருகின்றன?

விவசாய இன்சூரன்ஸ் திட்டம் என்பது, விவசாயத்தை மக்கள் அனைவரும் கைவிட்ட பிறகுதான் நல்ல நிலையில் அமலுக்கு வரும் என்று தோன்றுகிறது.

விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எல்லா இடுபொருள்களும் கடன் வசதியும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். விவசாய விளைபொருள்களைச் சேமித்துவைக்க கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் போன்றவற்றைக் கட்டித்தரும் திட்டம் இன்னமும் ஏட்டளவிலேயே இருக்கின்றன.

உழவர் சந்தை திட்டம் ஓரிரு இடங்களில் மட்டுமே துடிப்பாகச் செயல்படுகிறது. கால்நடை வளர்ப்பு, பால் பெருக்கம் போன்ற திட்டங்கள் மக்களுடைய சுய முயற்சியாலும், ஊக்கத்தாலும் மட்டுமே நடைபெறுகிறது. அரசு தரப்பில் முனைப்பு காணப்படுவதில்லை. தரிசு நிலங்களில்கூட காட்டாமணக்கு, கருவேலம் சாகுபடிதான் கண்ணில்படுகிறது.

விவசாயத்தை வளப்படுத்துவது எப்படி என்று விவசாயிகளைத் தவிர “”நிபுணர்கள்” கூடிப்பேசி முடிவெடுப்பதால் இன்னமும் அந்தத்துறை திணறிக் கொண்டிருக்கிறது.

எதை எடுத்தாலும் இறக்குமதி என்கிற முடிவு எடுப்பதும், வெளிநாட்டிலிருந்து எப்போது கப்பல் வரும், மக்களின் பசி தீரும் என்கிற நிலைமை ஏற்படுவதும் ஒரு நாட்டின் சுதந்திரத்துக்கும் இறையாண்மைக்கும் ஆபத்து. உணவு உற்பத்தியில் தன்னிறைவு இல்லாத எந்தவொரு நாடும் முழுமையான பாதுகாப்புடன் இருப்பதாகக் கருத முடியாது. விவசாயத்துக்காகச் செலவிடப்படும் மானியம், நாட்டின் பாதுகாப்புக்காகவும், பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்காகவும் செலவிடப்படும் அடிப்படைச் செலவு என்றுதான் கருத வேண்டும்.

விவசாயத்தை வஞ்சனை செய்து தொழில்வளத்தைப் பெருக்குவது தேசத்துக்கே செய்யும் வஞ்சனை!

Posted in Agriculture, Allocation, Analysis, Biz, BJP, Bonds, Budget, Business, Central Sales Tax, Chidambaram, Commerce, CST, Dharmapuri, Doha, Economy, Exports, Farmers, Farming, Finance, Funds, Garden, Globalization, GST, Gurumurthy, Instructor, Interest, Japan, Loans, Maran, Murasoli, Options, Plan, Planning, Professor, Rates, RSS, Sales Tax, SEZ, Small Biz, solutions, Subsidy, Teacher, University, Water | 1 Comment »

Indian Budget 2007-08 : Details, Information, Analysis, Perspectives

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 28, 2007

இந்திய வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, விவசாயம் மற்றும் சுகாதாரத்துக்கு அதிக ஒதுக்கீடு

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறிய இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள், வரவு செலவுத் திட்டத்தில் விவசாய, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளார்.

இந்திய அரசின் 2007-08 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை இன்று இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்திய பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதாக தனது பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து வெளியிட்டார்.

விவசாயத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு
விவசாயத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு

இந்த வரவு செலவு திட்டத்தில் விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுகளுக்கான ஒதுக்கீடுகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. விவசாயத் துறையின் வளர்ச்சியை 2.3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பட்ஜெட் ஏமாற்றமே அளிக்கிறது என கருத்துக்கள் வெளியாகியுள்ளன. மின்சாரம் போன்ற துறைகளில் உற்பத்தியை பெருக்க எந்த திட்டமும் அதில் இல்லை என தொழிற்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

பணவீக்கத்தை குறைக்க பட்ஜெட்டில் எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என எதிர்கட்சிகள் தெரிவிக்கின்றன.

செல்வந்தர்களிடையே வரிகளைக் கூட்டி கூடுதலான ஆதரங்களை திரட்ட திட்டங்கள் ஏதும் இந்த அறிக்கையில் இல்லை என்றும், தொடர்ந்து நேர்முக வரிகளை அதிகப்படுத்துவதில் அரசுக்கு தயக்கம் இருப்பது தெரிகிறது எனவும் பொருளாதார வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயா தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஒட்டு மொத்தமாக பொருளாதர வளர்ச்சி அதிகரித்து வருகிறது எனக் கூறினாலும், நாட்டின் ஆதாரமான வேளான் துறையில் பெரிய முன்னேற்றம் இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.


BBC Specialஎழுச்சியுறும் இந்தியா

 

எழுச்சியுறும் இந்தியா
எழுச்சியுறும் இந்தியா

இந்திய பொருளாதாரத்தின் அதி வேக வளர்ச்சி குறித்து பிபிசி பல பெட்டகங்களைத் தயாரித்து வழங்குகிறது.

இவை குறித்து தமிழோசையில் ஒலிபரப்பான பெட்டகங்களை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

முதலில் இந்தியா காணும் அதீத பொருளாதார வளர்ச்சி அங்கு கலாச்சார மாற்றங்களுக்கும் இடம் தந்துள்ளது. ஆயினும் திருமணம் என்று வரும் போது, அங்கு பெரும்பாலும் பெரியோர்கள் பார்த்துச் செய்து வைக்கும் மற்றும் குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்கே அங்கு இன்னமும் முக்கியத்துவம் காணப்படுகிறது.

குடும்பம் நிச்சயிக்கும் திருமணங்கள் குறித்த பெட்டகம்


இன்னும் சில ஆண்டுகளிலேயே இந்தியா பொருளாதார ரீதியில் உலகில் மூன்றாவது இடத்தை எட்டிவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 1991ல் அன்றைய பிரதமர் நரசிம்மராவால் தொடங்கப் பெற்ற பொருளாதாரச் சீர்திருத்தங்களால் விளைந்துள்ள அசுர வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் சிறப்பானதொரு சாட்சி கோயம்புத்தூர்.

கோயம்புத்தூர் நிலைமைகள் குறித்த பெட்டகம் பாகம் 1

கோயம்புத்தூர் நிலைமைகள் குறித்த பெட்டகம் பாகம் 2


இந்தியாவின் இந்த வேகமான பொருளாதார வளர்ச்சி அதன் அண்டைய நாடுகளிலும் சாதக மற்றும் பாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

அந்த வகையில் அது இலங்கையின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்தும் பிபிசியின் செய்தியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.


குறையில்லை; நிறைவுமில்லைபட்ஜெட் என்றவுடன் வரி உயர்வும் வருமான வரிவிலக்கு வரம்பு உயர்வும்தான் அனைவராலும் அதிகமாக எதிர்பார்க்கப்படும் இரு பொது விஷயங்கள்.அண்மைக்காலமாக அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், வருமான வரிவிலக்கு வரம்பும் கூடுதலாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மாதச் சம்பளம் பெறும் ஊழியர்களிடையே இருந்தது.மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட் இத்தகைய எதிர்பார்ப்புக்கு இடம் இல்லாமல் செய்துவிட்டது. இதுவரை ஒரு லட்சம் ரூபாயாக இருந்த வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.1.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் வரி செலுத்துவோருக்கு ரூ.1000 வரை பயன் கிடைக்கும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டாலும், வருமான வரியுடன் செலுத்த வேண்டிய கல்வித் தீர்வை 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் நிதியமைச்சர் குறிப்பிடும் பலன் கிடைக்காமல் போகும் வாய்ப்புகளே அதிகம்.வருமான வரிவிலக்கு வரம்பை உயர்த்தாவிட்டாலும்கூட, கல்வி மற்றும் மருத்துவச் செலவுகள் ஒவ்வொரு தனி மனிதனின் வருமானத்தில் பெரும்பகுதியை விழுங்குவதைக் கருத்தில்கொண்டு, இச்செலவுகளில் குறிப்பிட்ட வரம்பு வரை 20 சதவீத வருமான வரிக் கழிவு அளித்திருந்தால் மாத வருவாய்ப் பிரிவினருக்கு மகிழ்ச்சி தருவதாக இந்த பட்ஜெட் அமைந்திருக்கும்.சந்தை வணிகத்தில் நிரந்தர வருமான வரி எண்ணை (பான்) குறிப்பிட வேண்டும் என்பது இந்த பட்ஜெட்டில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க, வரவேற்புக்குரிய மாற்றம். இதனால் கருப்புப் பணப் புழக்கம் குறையும். இருப்பினும், ரூ.10 ஆயிரத்துக்கு மேற்பட்ட எந்த வர்த்தகமும் காசோலை மூலமாகவே நடைபெற வேண்டும் என்ற கட்டாய நிலைமையும் ஏற்பட்டால்தான் சந்தையில் கருப்புப் பணத்தின் புழக்கம் முற்றிலும் மறையும்.

இந்த பட்ஜெட்டில் வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. வேளாண்மையில் 4 சதவீத வளர்ச்சிக்கு உறுதி கூறப்பட்டுள்ளது. தேயிலை மற்றும் தோட்டப் பயிர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு கவனம் மற்ற வேளாண் பயிர்களுக்கு அளிக்கப்படவில்லை. அரிசி, கோதுமை மீதான முன்ஒப்பந்த பேரங்கள் இனி கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் இது நடைமுறையில் எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே இதன் பயன் அமையும்.

பாசன மேம்பாட்டுக்காக ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், பல பாசனத் திட்டங்களை நடப்பாண்டில் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. கூடுதலாக 24 லட்சம் ஹெக்டேர் நிலத்தை பாசனத் திட்டங்களில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட கூடுதலாக 35 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளதும், மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க 8-ம் வகுப்பு முதலாக கல்வி உதவித்தொகை வழங்கும் முடிவும் மகிழ்ச்சியானவை.

சிகரெட் மீதான வரி வழக்கம்போல உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், புகையிலை இல்லாத பான்மசாலாவுக்கான வரியை 66 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக குறைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். புகையிலையைவிட மோசமானது அதில் சேர்க்கப்படும் மசாலாக்கள். இவை புற்றுநோய்க்கு காரணமானவை. “மவுத் ரெப்பிரஷர்’ என்ற பெயரில் இவை மீண்டும் சந்தையில் அதிக அளவில் நுழைவதற்கு தற்போதைய வரிக்குறைப்பு ஆதரவாக அமைந்துவிடும்.

ஜவுளி மேம்பாட்டு நிதியில் கைத்தறியும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கைத்தறிகளில் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தவும், அதற்கான கருவிகளை வரியின்றி இறக்குமதி செய்யவும் அதற்கான மானியக் கடன் பெறவும் நெசவாளர்களுக்கு எளிதாக இருக்கும். தமிழக நெசவாளர்கள் இதை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை விளக்கி, பயன்படுத்திக்கொள்ளச் செய்யும் பொறுப்பு தமிழக கைத்தறித் துறைக்கு உள்ளது.

சூரியகாந்தி சமையல் எண்ணெய்க்கு 15 சதம் வரி குறைப்பும் பெட்ரோல் டீசலுக்கான தீர்வையை 2 சதவீதம் குறைத்துள்ளதும் இன்றியமையா பண்டங்களின் விலையைக் குறைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


வருமான வரிஎன்.வி.பாலாஜி (Dinamani Op-Ed pages)அடுத்த நிதியாண்டுக்கான (2007-08) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. பட்ஜெட் என்பது அடுத்த ஓராண்டுக்கான நிதியாதாரங்களை எப்படி பயன்படுத்துவது என்ற திட்டமிடலாகும். இந்தத் திட்டமிடல் அரசு மக்களுக்குத் தெரிவிக்கும் மிகமுக்கியமான சாதனமும் கூட . இது அரசியல் சட்டம் நமக்களித்த மிகப்பெரிய வாய்ப்பு என்றே கூறலாம். ஏனெனில் பட்ஜெட் என்ற ஒன்று இல்லாதபோது அரசு தன் செலவினங்களைக் கூட செய்ய முடியாமல் போகும்.பட்ஜெட்டின் மூலம் அப்படி என்னதான் நிதியாதாரங்கள் வந்து விடுகின்றன? முக்கிய ஆதாரம் மத்திய அரசு விதிக்கும் வரிகள். 2006-07 ஆம் ஆண்டிற்கான மத்திய வரிகள் மட்டும் 4.4 லட்சம் கோடிகள். இதில் தனிநபர் வருமான வரி 76 கோடியாகும். கம்பெனிகளுக்கான வருமான வரி 133 லட்சம் கோடியாகும். ஆக வருமான வரி சட்டத்தின் மூலம் அரசு மக்களிடமிருந்து பெறுவது 210 லட்சம் கோடியாகும். இந்த வருமான வரிக்கும் ஒரு சரித்திரம் உண்டு.சிப்பாய் கலகத்தை அடக்க அரசு அதிக செலவை மேற்கொள்ள வேண்டியிருந்தது. விளைவு, மிகச்சிறிய அளவில் மக்களின் வருமானத்தின் மீது வரி விதிக்கும் சட்டம் வெள்ளையர்களால் கொண்டுவரப்பட்டது. முதல் உலகப்போர் காலகட்டத்தில் அது மேலும் விரிவாக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின், வருமான வரிச் சட்டம் (1961) உருவெடுத்தது.இந்த வருமான வரிச் சட்டத்தின் மூலம் ஒருவர் சம்பாதிக்கும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படுகிறது. இந்த வருமானங்கள் பல்வேறு பிரிவுகளாக, சம்பளம், வீட்டு வாடகை, தொழில் மூலம் ஈட்டும் லாபம், முதலீட்டிலிருந்து திரட்டும் வருவாய், இதர பிரிவு என தனித்தனியாகக் கணக்கிடப்படுகிறது.இப்படி ஒவ்வொரு பிரிவிலிருந்தும் வரும் வருமானத்துக்கு சில கழிவுகளுக்கும் வகை செய்யப்பட்டுள்ளது. கழிவுகளுக்குப் பின் உள்ள நிகர வருவாய் ஒன்று சேர்க்கப்பட்டு, அந்த வருவாயிலிருந்து பல்வேறு பொதுக் கழிவுகள் பெறுவதற்கான வழி வருமான வரிச் சட்டத்தில் உள்ளது. இந்த நிகர வருமானமே மொத்த வருவாயாகக் கொண்டு அதன் மீது வரி விதிக்கப்படுகிறது.


பயனற்ற மானியம்“ஏறினால் இறங்குவதில்லை’ – (17-2-07) தலையங்கம் படித்தேன்.விலைவாசி உயர்வுக்கு பொதுவான காரணம் பணவீக்கம் என்பதை மறுக்க இயலாது.அதேசமயம் உணவு உற்பத்தி சாராத மற்ற தொழில் பொருள்களின் கொள்ளை லாப விலை நிர்ணயமும் பணவீக்கத்துக்கு முக்கியக் காரணமாகும்.எனவே உற்பத்திச் செலவைக் குறைக்க வழிவகுக்காமல், வேளாண் விளைபொருள்களுக்கு விற்பனை நிலையில் மானியம் வழங்குவதும், பிற பொருள்களுக்கு உற்பத்தி வரி, கூடுதல் வரி ஆகியவற்றில் சலுகை வழங்குவதும் உரிய பயனைத் தராது.சீனாவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருப்பதற்கும், பணவீக்கம் குறைவாக இருப்பதற்கும் முக்கியக் காரணமே, அவர்களின் உற்பத்திச் செலவு கட்டுக்குள் அடங்கி இருப்பதுதான்.எனவே, விலைவாசி கட்டுக்குள் இருக்க வெறும் மானியங்களும் வரிக் குறைப்புகளும் உதவாது.

சோம. நடராஜன், கரூர்.


ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்: தா. பாண்டியன்திருவாரூர், மார்ச் 2: விவசாயத் துறை மேம்பாட்டுக்குக் குறிப்பிடத்தக்க அறிவிப்பு இல்லாத மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன்.திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:விவசாயத் துறையின் சிக்கல்களை தீர்க்கும் விதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட் விவசாயத் துறைக்குப் போதுமான முக்கியத்துவத்தை தரவில்லை.மத்திய நிதி அமைச்சர் குறிப்பிட்ட விவசாயத் துறைக்கு ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கீடு என்பது, விவசாயத்துக்குக் கடன் அளிக்குமாறு நிதி நிறுவனங்களை வற்புறுத்தும் வழிகாட்டல் மட்டுமே. இந்தக் கடன் முழுமையாக கிடைக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் சேவை வரியை உயர்த்தி, அதன் மூலம் கிடைக்கும் கூடுதல் தொகை மட்டுமே கல்வித் துறைக்குக் கூடுதல் ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறைக்குக் கடந்த ஆண்டை விட ரூ. 13 ஆயிரம் கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியைக் குறைக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி தேசிய விவாதம் மேற்கொள்ள வேண்டும்.

விலைவாசி உயர்வைக் கண்டித்தும், விலைவாசி உயர்வுக்கான மத்திய அரசின் தவறான கொள்கையைக் கண்டித்தும் மார்ச் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார் தா. பாண்டியன்.


அரசின் வரி வருவாய் அதிகரித்ததால் திட்டமிட்டபடி கட்டுப்படுத்தப்பட்டது நிதிப் பற்றாக்குறை: சிதம்பரம்
புதுதில்லி, மார்ச் 2: செழிப்பான பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசின் வரி வருவாய் அதிகரித்தது ஆகிய சாதக அம்சங்களால், நிதிப் பற்றாக்குறையின் அளவை திட்டமிட்டபடி கட்டுப்படுத்த முடிந்துள்ளது என சிதம்பரம் கூறியுள்ளார்.2006-07 நிதியாண்டுக்கு அரசின் நிதிப் பற்றாக்குறையை 3.8 சதவீதமாக கட்டுப்படுத்த வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிடப்பட்டதை விட சிறப்பாக, அது 3.7 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இதேபோல வருவாய் பற்றாக்குறையை 2.1 சதவீதமாகக் கட்டுப்படுத்த வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது. அதுவும் 2 சதவீதமாகவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம், அடுத்த நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறை மேலும் குறைந்து மொத்த உற்பத்தி மதிப்பில் 3.3 சதவீதமாகவும், வருவாய் பற்றாக்குறை 1.5 சதவீதமாகவும் குறையும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.பற்றாக்குறையின் அளவு குறைவதால், அரசு கடனை நம்பியிருக்க வேண்டிய அளவு குறைகிறது. நடப்பு நிதியாண்டின் முடிவில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.83,436 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் இது ரூ.71,478 கோடியாகக் குறையும். இதேபோல நிதிப் பற்றாக்குறை 1,52,328 கோடியில் இருந்து 1,50,948 கோடியாகக் குறையும் என சிதம்பரம் கூறியுள்ளார்.

2007-08 நிதியாண்டுக்கு செலவு ரூ.6,80,521 கோடியாக இருக்கும், வரவு ரூ.4,86,422 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


நாய்களையும் நாய் வளர்ப்போரையும் தவிர யாரையும் மகிழ்விக்காத மத்திய பட்ஜெட்எஸ். குருமூர்த்தி – தமிழில்: லியோ ரொட்ரிகோநாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வுப் பிரச்சினைக்கும் வேளாண் துறை சந்தித்துவரும் நெருக்கடிகளுக்கும் தீர்வுகாணும் திட்டம் எதையும் அளிக்காத தனது படுதோல்வியை 2007~08-ம் நிதியாண்டு பட்ஜெட்டில் மூடிமறைத்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர். சிந்தனை வறட்சியை வார்த்தை ஜாலத்தால் மூடி மறைத்திருக்கும் அந்த பட்ஜெட்டில் தெளிவான அரசியல் பார்வை இல்லை என்பது அதை சாதாரணமாகப் படித்தாலே தெரிகிறது. தனியார் நிறுவன அதிகாரிகள் தமது வரவு ~ செலவுக் கணக்கில் லாபத்தை அதிகமாகக் காட்டுவதற்கு சித்து வேலைகள் செய்வதைப்போலவே, நிதி அமைச்சரும் தனது சாதுர்யத்தைக் காட்டி ஏமாற்றி இருக்கிறார் என்பது பட்ஜெட்டை நுணுக்கமாக ஆராயும்போது தெரிந்துபோகிறது.கவர்ச்சிகரமான வார்த்தைகளையும் திருவள்ளுவரின் குறளையும் பயன்படுத்தி, அது ஏதோ வேளாண்மை வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட பட்ஜெட் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார் நிதி அமைச்சர். வெளிப்படையாக தகவல்களைக் கூறுவதற்குப் பதில், பலவற்றை மூடிமறைத்து தனது சாதுர்யத்தை அவர் காட்டியிருப்பது பட்ஜெட்டை கூர்ந்து நோக்கும்போது தெரிந்துவிட்டது. தனது உரையில் 43-வது பத்தியில் இருந்து 65-வது பத்தி வரையிலான பகுதியில், வேளாண் துறைக்கான 18 அம்சத் திட்டத்தைப் பற்றி அறிவித்துள்ளார். அவற்றில் இரு அம்சங்கள் தொடர்பாகக் கூறுகையில், ஒன்றைப் பற்றிய தகவல்களை எதிர்பார்த்திருக்கிறோம் என்றும் மற்றொன்றைப் பற்றிக் கூறுகையில், வேளாண்மை தொடர்பான அறிக்கையை ஆராய்ந்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.பயறு வகை சாகுபடி, விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல், வேளாண் விரிவாக்கத் திட்டங்களுக்குப் புத்துயிர் அளிப்பது போன்ற 7 அம்சங்கள் வெறும் அறிவிப்பாக மட்டுமே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. மேலும் 7 அம்சங்கள் ஏற்கெனவே நடைமுறையில் இருப்பவை; அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன; இரண்டே இரண்டு திட்டங்கள்தான் ~ கிராமப்புற ஏழைகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டம், நிலத்தடி நீராதாரத்தைப் பெருக்கும் திட்டம் ~ புதியவை. அதிலும்கூட, நீர் சேகரிப்புத் திட்டமானது ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் வெற்றிகரமாக அமல்படுத்திய திட்டமாகும். அதைப் பற்றி நினைவுகூராமல் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் நிதி அமைச்சர்.

உரத்துக்கு அளிக்கப்படும் மானியத் தொகையைக் கழித்துவிட்டுப் பார்த்தால், வேளாண்மைக்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் தொகை ரூ.50,112 கோடிதான்.

2006~07-ம் ஆண்டு ஒதுக்கீட்டுடன் ஒப்பிட்டால் வெறும் 25 சதவீதமே கூடுதல். ஆனால், தனது வார்த்தை ஜாலத்தின் மூலம் ஏதோ வேளாண்மைக்கான நிதி ஒதுக்கீட்டை வரும் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல மடங்கு அதிகரித்துவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார் அவர்.

அது மட்டுமல்ல; வங்கிகள் வழங்கும் கடன் தொகைகளை பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டுடன் சேர்த்து பெரும் தொகை போலக் காட்டியதன் மூலம், வேளாண்மைக்கு ஏராளமாக ஒதுக்கீடு செய்திருப்பதைப் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார் அவர்.

ஏரி, குளங்கள், கண்மாய்கள் போன்ற நீர் ஆதாரங்களை மராமத்து செய்து, பராமரிக்க 3 ஆண்டுகளில் பட்ஜெட்டில் அவர் ஒதுக்கீடு செய்த தொகை வெறும் 100 கோடி ரூபாய். ஆனால், தமது உரையின் 47-வது பத்தியில், “”வறட்சியால் பாதிக்கப்பட்ட 4 மாநிலங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ.16,979 கோடி செலவில் சிறப்புத் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டுவருகிறது; அதில் ரூ.12,400 கோடியானது நீராதாரம் தொடர்பான திட்டங்களாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், நீராதாரம் தொடர்பான திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை வெறும் ரூ.100 கோடி மட்டுமே ஆகும். அதோடு, அது முழுமையாக செயல்படுத்தப்படவும் இல்லை. அதற்கான நிதியை நிதி அமைச்சர் வழங்கப் போவதில்லை; மாறாக உலக வங்கிதான் வழங்கப் போகிறது. அதிலும் தமிழ்நாடுதான் முதலாவதாக உலக வங்கியை அணுகி ரூ.2182 கோடி கடன் தொகையைப் பெறுவதற்கான நடவடிக்கையை எடுத்திருக்கிறது. மற்ற மாநிலங்கள் எல்லாம் இன்னும் அதைப் பற்றி விவாதித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், பட்ஜெட் உரையைப் படித்தால் ஏதோ ரூ.12,400 கோடி பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டின் மூலமாக அந்தச் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டுவிடும்.

“நபார்டு’ வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் இவ்வாறே பட்ஜெட்டில் காட்டியிருக்கிறார். நிதி அமைச்சரின் உரைக்குக் கீழே புதைந்திருப்பதை ஆராயாமல் யாராலும் இதைக் கண்டுபிடிக்க முடியாது.

தனது பட்ஜெட் உரையில் 15 நிமிடங்களை வேளாண் துறையைப் பற்றிய திட்டங்களுக்கு ஒதுக்கிவிட்டதாக அவரே தனது உரையின் 65-வது பத்தியில் குறிப்பிட்டார். 2004~05-ம் ஆண்டில் வேளாண் வளர்ச்சி விகிதம் அமோகமாக இருந்தது. அந்த ஆண்டிலேயே வேளாண்மைத் திட்டங்களுக்காக தனது உரையில் 1635 வார்த்தைகளை ஒதுக்கி இருந்தார். ஆனால், வேளாண் துறை நெருக்கடியில் சிக்கி இருக்கும் இந்த ஆண்டில், 1899 வார்த்தைகளைத்தான் வேளாண் திட்டங்கள் பற்றி அறிவிக்க ஒதுக்கி இருக்கிறார். அப்பொழுதைவிட 264 வார்த்தைகள்தான் அதிகம்.

கடன் சுமையைத் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் பிரச்சினை, வேளாண் துறையில் குறைந்துகொண்டே செல்லும் மூலதன உருவாக்க விகிதம், வேளாண் துறையில் அரசு முதலீடு குறைந்துகொண்டு செல்லும் போக்கு, உணவு தானிய உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகிய வேளாண்மைத் துறை தொடர்பான அதிமுக்கியமான பிரச்சினைகளை அவரது பட்ஜெட்டில் முழுமையாக ஆராயவே இல்லை.

2003~04-ல் உணவு தானிய உற்பத்தி 21.2 கோடி டன்களாக இருந்தது. ஆனால், அது 2006~07-ல் 20.9 கோடி டன்களாகக் குறைந்துவிட்டது. 2004~05-ம் ஆண்டு பட்ஜெட் உரையில், “”உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்துவிட்டோம்; இனி விவசாயிகள் கோதுமைக்குப் பதில் மலர் சாகுபடி போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்” என்று, தனக்கு முன்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியாளர்கள் கூறியதையே சிதம்பரமும் கூறினார். ஆனால், அடுத்த பதினெட்டே மாதங்களில் கோதுமையைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலைமை நமக்கு ஏற்பட்டுவிட்டது. அதன் விளைவு: விலைவாசிகள் தாறுமாறாக ஏறிவிட்டன.

பணவீக்க விகிதம் அதிகரித்திருப்பதற்கு உலகச் சந்தையில் விலை அதிகமாக இருப்பதே காரணம் என்று கூறுகிறார்கள். உலகிலேயே அதிக அளவு கோதுமையைப் பயன்படுத்தும் நாடு, பல லட்சம் டன் கோதுமையை வாங்குவதற்காக உலகச் சந்தைக்குச் சென்றால் விலை ஏறாமல் குறையவா செய்யும்? விலைவாசிப் பிரச்சினையை நிதி அமைச்சர் வெறுமனே தொட்டுவிட்டுச் சென்றாரே தவிர, ஆழமாக அலசவில்லை.

நிதிச் சந்தையில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கியானது கடந்த 12 மாதங்களில் 4800 கோடி டாலர்களை விலைக்கு வாங்கியது குறித்து ஒரு வார்த்தைகூட அவர் தனது பட்ஜெட் உரையில் கூறவில்லை. ஒரு டாலருக்கு ஈடாக ரூபாயின் மதிப்பை ரூ.45 என்ற அளவில் நிலைநிறுத்தி வைப்பதற்காகவே டாலர்களை விலைக்கு வாங்கும் வேலையில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டது. அதன் விளைவாக நிதிச் சந்தையில் பணப் புழக்கம் (ரூபாய்) அதிகரித்தது; இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் விலையும் இதர பொருள்களின் விலைகளும் அதனால் அதிகமாக உள்ளன. வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை உயர்த்தியதன் மூலம் நிதிச் சந்தையில் இருந்து ரூ.14,500 கோடியை ரிசர்வ் வங்கி ஒருபுறம் உறிஞ்சி எடுத்தது. அதே நேரத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை அதே அளவில் வைத்திருப்பதற்காக 700 கோடி டாலர்களை சந்தையில் இருந்து வாங்குவதற்காக ரூ.30,000 கோடியை நிதிச் சந்தையில் இறக்கியது. இப்படிப்பட்ட முரண்பாடான நடவடிக்கைகளால் எவ்வாறு பணவீக்க விகிதம் குறையும்? அதன் ஒட்டுமொத்த விளைவாக விலைவாசிகள் உயர்ந்தன. இதற்கு எல்லாம் காரணமே ஏற்றுமதியாளர் வட்டாரமே ஆகும். அவர்களின் நெருக்குதலால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பானது போலியாகக் குறைத்து அதாவது ரூ.45 ஆகக் காட்டப்பட்டுவருகிறது. அதாவது 35 ரூபாய்க்கு ஒரு டாலர் என்று இருக்க வேண்டியது, 45 ரூபாய்க்கு ஒரு டாலர் என்று காட்டப்பட்டுவருகிறது. அதுவே ஒரு டாலருக்கு ரூ.35 ரூபாய் என்ற நிலை இருக்குமானால் பணவீக்க விகிதமும் 5 சதவீதத்திலேயே இருந்திருக்கும்.

ஆக மொத்தத்தில், நாட்டின் பொருளாதாரத்துக்கு இன்று ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டுவிட்டார் நிதி அமைச்சர். வெறும் ஆண்டுச் சடங்காக நாட்டின் பட்ஜெட்டை மாற்றிவிட்டார் அவர். நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டுவந்த கிராமப்புற வளர்ச்சியும் வேளாண் துறையும் பெரும் நெருக்கடியில் சிக்கிக்கொண்டுவிட்டன; விலைவாசியும் கடுமையாக உயர்ந்துவிட்டது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் தவறியதன் பயங்கர விளைவுகளை விரைவிலேயே நாம் அனுபவிக்கப் போகிறோம்.

நாய், பூனைகள் போன்ற செல்லப் பிராணிகளுக்கான உணவின் மீதான இறக்குமதி வரியைக் குறைத்திருப்பதால், நிதி அமைச்சரே கூறியதைப்போல, இந்த பட்ஜெட்டால் நாய் வளர்ப்போரையும் நாய்களையும் தவிர வேறு யார் மகிழ்ச்சி அடையப் போகிறார்கள்? ஆனால் முலாயம் சிங் போன்ற அரசியல்வாதிகளுக்குத் தெரியும், நாய் வளர்ப்போர் ஓட்டுப் போடப் போவதில்லை; நாய்களுக்கு ஓட்டே இல்லை என்பது.


மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமானவரி உச்சவரம்பு உயர்வு புதுடெல்லி, பிப். 28-பட்ஜெட்டில் கூறப்பட்டி ருப்பதாவது:-மாதசம்பளம் பெறுவோருக்கான வருமான வரியில் இந்தபட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருமானவரி விதிப்பு மற்றும் விரி விகிதத்தில் மாற்றம் இல்லை. ஆனால்சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமானவரி இல்லை. இந்த வருமான உச்சவரம்பில் மேலும் ரூ. 10 ஆயிரம் உயர்த் தப்பட்டுள்ளது.

அதன்படி ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமானவரி இல்லை.

இந்த வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு பெண்களுக்கு ரூ. 1,45,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு இந்த வருமான வரி விலக்கு ரூ.1,95,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2006-07-ல் 9.2 ஆக இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் இது சராசரியாக 8.6 சதவீதம் இருந்தது. உற்பத்தி வளர்ச்சி விகிதம் 11.3 சதவீதமாக உள்ளது.

சேமிப்பு விகிதம் 32.4 சதவீதமாகவும், முதலீட்டு விகிதம் 33.8 சதவீதமாகவும் தொடர்ந்து நீடிக்கும். 2007-ம் நிதி ஆண்டில் சராசரி பண வீக்க விகிதம் 5.2 முதல் 5.4 சதவீதம் வரையில் இருக்கும். பணவீக்கம் கட்டுப்படுத்தப் படும்.

2006-07 நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் வங்கிக்கடன் விகிதம் 29 சதவீதமாக உயர்ந்ததது. கோதுமை, அரிசி தொடர்பாக எந்த புதிய ஒப்பந்தமும் செய்யப்பட மாட்டாது. கூடுதலாக 24 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பாசன வசதி செய்யப்படும்.

ஊரகப்பகுதிகளில் தொலைபேசியை கொண்டு செல்லும் திட்டத்தின் கீழ் 15 ஆயிரத்து 54 கிராமங் களில் போன் வசதி செய்யப் பட்டுள்ளது. உடல் நலத்துக்கான நிதிஒதுக் கீடு 21.9 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கல்விக்கு 34.2 சதவீதமும் கூடுதல் நிதி ஒதுக்கீடு நடப்பாண் டில் கூடுதலாக 2 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப் படுவார்கள். 5 லட்சம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.

மேல்நிலைப்பள்ளி கல்விக் கான உதவித்தொகை ரூ. 1837 கோடியில் இருந்து ரூ.3794 கோடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. ராஜீவ்காந்தி குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.4680 கோடியில் இருந்து ரூ.5850 கோடியாக அதிகரிக் கப்படுகிறது.

பாரத் நிர்மான் திட்டத்தின் கீழ் புதிதாக 15 லட்சம் வீடுகள் கட்டப்படும். தேசிய ஊரக சுகாதார திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு ரூ.8207 கோடியில் இருந்து ரூ.9947 கோடியாக அதிகரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத் துக்கு ரூ. 969 கோடி நிதிஒதுக்கப்படுகிறது.

நாடெங்கும் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்து பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதை தடுக்க தேசிய அளவில் புதிய ஸ்காலர்ஷிப் திட்டம் அமல் படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குழந்தைக்கும் படிப்பைத்தொடர தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

போலியோவை முற்றிலு மாக விரட்ட ரூ.1290 கோடி வழங்கப்படும். உத்தர பிரதேசத்தில் 20 மாவட்டங் களிலும், பீகாரில் 10 மாவட்டங்களிலும் போலியோ ஒழிப்புக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும்.

பொது வினியோக முறை கம்ப்ïட்டர்மயமாக்கப்படும். இந்திய உணவுக்கழக செயல் பாடுகள் கம்ப்ïட்டரில் ஒருங்கிணைக்கப்படும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி.க்களுக்கு மட்டுமே வழங்கப்படும் திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு ரூ.3271 கோடியாக அதிகரிக் கப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி.க்கான உதவித்தொகை நிதி ஒதுக்கீடு ரூ.440 கோடியில் இருந்து ரூ.611 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.

சிறுபான்மை இன மாணவ-மாணவிகளுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தில் மெட்ரிக்கில் படிப்பவர்களுக்கு ரூ.72 கோடியும், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிப்பவர் களுக்கு ரூ.48 கோடியும் வழங்கப்படும்.

வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.12041 கோடியில் இருந்து ரூ.14365 கோடியாக உயர்த்தப்படுகிறது. அதோடு வடகிழக்கு மாநிலங்களுக்கு வரும் மார்ச் 31-ந்தேதிக்குள் புதிய தொழில்கொள்கை தயாரித்து வெளியிடப்படும்.

பெண்கள் மேம்பாட்டுக் கான நிதிஒதுக்கீடு ரூ.22,282 கோடியாக இருக்கும். விவசாயிகளுக்கு ரூ.2,25,000 கோடி பயிர்க்கடன்கள் வழங்க புதிய பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 50 லட்சம் விவசாயிகள் பயன் பெறு வார்கள்.

2006-07-ல் விவசாயி களுக்கு ரூ.1,75,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. இது ரூ.1,90,000 கோடியை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

தேயிலை உற்பத்திக்கு புதிய உத்வேகம் கொடுக்க சிறப்பு நோக்க தேயிலை நிதி உருவாக்கப்படும். இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தேசிய விவசாய இன்சூரன்ஸ் திட்டம் தொடர்ந்து நடை முறைப்படுத்தப்படும்.

மாநில அரசுகளின் உதவியுடன் சமூகநலத்திட்டங் கள் மேம்படுத்தப்படும். இதன் மூலம் ஒரு அங்கமாக 70 லட்சம் குடும்பங்கள் எல்.ஐ.சி. திட்டத்தில் இணைக்கப் படுவார்கள். இவர்களுக்கு 50 சதவீத பிரிமீயத்தொகையாக 200 ரூபாயை மத்திய அரசு வழங்கும். இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.16,261 கோடி கடனாக வழங்கும். தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீடு ரூ.9955 கோடியில் இருந்து ரூ.12,600 கோடியாக அதிகரிக் கப்படுகிறது. டெல்லி, கொல் கத்தா, மும்பை, சென்னை ஆகிய 4 முக்கிய நகரங் களை இணைக்கும் தங்கநாற்கர சாலைத்திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை மேம் பாட்டுத்திட்டத்துக்கு ரூ.405 கோடி வழங்கப்படும்.

கைத்தறித்தொழில் மேம்பாட்டு நிதி ரூ.533 கோடியில் இருந்து ரூ.911 கோடியாக உயர்த்தப்படுகிறது. நெசவாளர்களுக்கான சுகா தார காப்பீட்டுத்திட்டம் இதர சிறு தொழில்களுக்கும் விரிவு படுத்தப்படும். இதற்காக நிதி ஒதுக்கீடு ரூ. 241 கோடியில் இருந்து ரூ.321 கோடியாக அதி கரிக்கப்படும்.

கயிறு தொழிற்சாலை நவீனப்படுத்த ரூ. 23.55 கோடி வழங்கப்படும். சுற்றுலாத் துறைக்கான நிதிஒதுக்கீடு ரூ.423 கோடியில் இருந்து ரூ.520 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

நலிவடைந்த பிரிவின ருக்கு கடன் வழங்க ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப் படுகிறது. அவர்களது வீட்டுக் கடனுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5000 கோடியில் இருந்து 20 ஆயிரம் கோடியாக அதிகரிக் கப்படுகிறது.

தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வராத மாவட்டங்களுக்கு சம்பூர்ணா கிராம வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.800 கோடி ஒதுக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள சொர்ண ஜெயந்தி வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ஒதுக்கீடு ரூ.250 கோடியில் இருந்து ரூ.344 கோடியாக உயர்த்தப்படுகிறது. இந்த நிதி ஆண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 12.5 பில்லியன் டாலர்களாக (ரூ.57 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது. துறை ரீதியான முதலீடுகள் 6.8 பில்லியன் டாலர்கள் தேசிய மழைநீர் பிடிப்புபகுதி மேம்பாட்டு நிறுவன, திட்டங் களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.

ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.96 ஆயிரம் கோடி யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் மூலதன செலவு ரூ.41,922 கோடியும் அடங்கும். நாட்டு பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நிதிஉதவிகளும் செய்யப்படும்.

பிற்பட்ட மண்டல பகுதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.5800 கோடி சிறப்பு நிதி வழங்கப்படும்.

மும்பை நகரை உலகத்தரம் வாய்ந்த நிதி மையமாக மாற்ற உயர் அதிகாரக்குழு ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும்.

உடல்ஊனமுற்றோருக்காக 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நாட்டில் ஏற்பட்டுள்ள சீதோஷ்ண இயற்கை மாற்றத்தின் விளைவை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்று ஏற்படுத் தப்படும். பல்வேறு துறை களில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டு ரூ.1,72,728 கோடியாக இருந்தது. 2007-2008-ம் ஆண்டுக்கான ஒதுக்கீடு ரூ.2,05,100 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் மத்திய திட்டங்களுக்கான ஒதுக்கீடு ரூ.1,54,939 கோடி.

20 மாநிலங்களுக்கு ரூ.8575 கோடி கடன் பாக்கி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்கள் மூலம் மத்திய அரசுக்கு வருவாய் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 450 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.1,20,377 கோடியாக இருந்தது.

அடுத்த நிதி ஆண்டு முதல் தேசிய அளவில் பொருட்கள் மற்றும் சேவைவரி திட்டம் அறிமுகம் செய்யப்படும். நடப்பு நிதி ஆண்டில் நிதிபற்றாக்குறை 3.7 சதவீதமாக இருக்கும். வருவாய் பற்றாக்குறை 2 சதவீதம். மொத்த செலவு ரூ.6,81,521 கோடியாக இருக்கும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

சேவை வரி விலக்கால் 2 லட்சம் பேருக்குபயன்

மத்திய பட்ஜெட்டில் பல சேவை வரிகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத னால் 2 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.

இந்த வரி விலக்கு காரண மாக மத்திய அரசுக்கு ஆண் டுக்கு ரூ.800 கோடி இழப்பு ஏற்படும்.

இதுவரை உயர்தர குடி யிருப்போர் நலச் சங்கங்கள் மீது சேவை வரி விதிக் கப் பட்டிருந்தது. புதிய பட் ஜெட்டில் அதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கம்பெனிகளுக்கான கார்ப் பரேட் வருமான வரியில் சர்சார்ஜ் (ரூ.1 கோடிக்கு கீழ் உள்ளவர்களுக்கு) நீக்கப் படுகிறது.

பாங்கிகளில் போடப்பட்ட பணத்தை எடுக்கும் போது பணபரிமாற்ற வரி (பி.சி.டி.வரி) வசூலிக்கப்பட்டு வந்தது. மத்திய, மாநில அரசு களுக்கு இந்த பண பரிமாற்ற வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தனிப்பட்ட ஒருவர் மற்றும் இந்துகூட்டு குடும்பத்தினர் பாங்கியில் பணம் எடுக்கும் போது ரூ.25 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்கும்போது இந்த வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இனி ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுப்பவர்களுக்கு இந்த பாங்கி பண பரிமாற்ற வரிகிடையாது.


பொது பட்ஜெட் 2007: முக்கிய அம்சங்கள் * சேவை வரி விலக்கால் 2 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.* சிகரெட் மீதான வரி அதிகரிக்கப்படுகிறது.

* தண்ணீர் சுத்திரிக்கும் கருவிகளுக்கு முழு வரி விலக்கு அளிக் கப்படுகிறது.

* பயோ-டீசலுக்கு முழு வரி விலக்கு வழங்கப்படுகிறது.

* சிறு தொழில்களுக்கான சுங்க வரி விலக்கு ரூ.1 கோடியில் இருந்து ரூ.1.5 கோடியாக உயர்கிறது.

* வருமான வரி விலக்கு ஆண்களுக்கு ரூ.1,10,000, பெண் களுக்கு ரூ.1,45,000, மூத்த குடி மக்களுக்கு ரூ.1,95,000 என்ற வகையில் இருக்கும்.

* சூரியகாந்தி எண்ணை மீதான வரி 15 சதவீதமாக குறைக் கப்படுகிறது.

* சமையல் நிலக்கரிக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப் படுகிறது.

* மதிப்பு கூட்டு வரி விதிப்பு காரணமாக மத்திய அரசின் வருவாய் 24.3 சதவீதம் உயர்ந்துள்ளது.

* புனேயில் நடைபெற உள்ள காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுப் போட்டிக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு.

* காமன்வெல்த் போட்டியை நடத்த மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ரூ.150 கோடி வழங்கப்படும்.

* வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை.

* இயற்கை மாற்றத்தை ஆய்வு செய்ய நிபுணர்குழு.

* உடல் ஊனமுற்றோருக்கு 1 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* உலகத்தரம் வாய்ந்த நிதி நகரமாக மும்பை மாற்றப்படும்.

* மத்திய விற்பனை வரியில் 1 சதவீதம் குறைக்கப்படுகிறது.

* விவசாய முதலீடு 2 சதவீதம் அதிகரிக்கும்.

* கிராமத்தில் நிலம் இல்லாத குடும்பங்களுக்கு காப்பீடு திட்டம்.

* ராணுவ செலவுகளுக்கு ரூ.96 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.

* தங்க நாற்கரக திட்டம் நிறைவடைகிறது.

* மூத்த குடிமக்களுக்கு சிறப்பு வீட்டு வசதி திட்டம்.

* பெண்கள் மேம்பாட்டுக்கு ரூ.22,282 கோடி.

====================================================
விவசாயிகள் மத்தியில் பதற்றத்தைத் தணிக்க விவசாயம், தொழில் இரண்டிலும் சமநிலை வளர்ச்சி: பிரணப் வலியுறுத்தல்

கோல்கத்தா, மார்ச் 5: விவசாயம், தொழில் ஆகிய இரு துறைகளிலும் சமநிலையான வளர்ச்சி இருந்தால்தான், விவசாயிகள் மத்தியில் பதற்றத்தைத் தணிக்கவும், வளர்ச்சிக்கு சாதகமான சூழலை உருவாக்கவும் முடியும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி கூறினார்.

மேற்கு வங்கத்தில் சிங்குரிலும், நந்தி கிராமத்திலும் தொழிற்சாலைகளுக்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதால் எழுந்துள்ள பிரச்சினையை மறைமுகமாக சுட்டிக் காட்டும் வகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ராஜர்ஹாட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிப் பேசுகையில் பிரணப் முகர்ஜி கூறியதாவது:

கடந்த மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின்போது போதிய முதலீடு இல்லாத காரணத்தால் விவசாயத் துறை இன்று பின்தங்கிக் கிடக்கிறது.

விவசாயத் துறையிலும் தொழில்துறையிலும் சமநிலையான வளர்ச்சியை ஏற்படுத்த இன்னொரு பசுமைப் புரட்சி அவசியம்.

நாட்டில் விவசாயத் துறையில் வளர்ச்சி விகிதம் தற்போது 2 சதவீதமாக இருக்கிறது. தொழில்துறைக்கு நிகராக விவசாயத் துறையைக் கொண்டு வர வேண்டும் எனில், வளர்ச்சி விகிதத்தை குறைந்தபட்சம் 4 சதவீதமாக உயர்த்த வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் மத்தியில் பதற்றத்தைத் தணிக்க முடியும்.

அதே வேளையில், தொழில்மயம் ஆக்க வேண்டியதன் அவசியத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்ய வேண்டியதும் அரசின் பொறுப்பு என்றார் பிரணப் முகர்ஜி.

====================================================

வரி விதிப்புகளை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை – வேளாண்மை, சுகாதாரம், ஊரக வளர்ச்சியும் சீர்திருத்த நடவடிக்கைதான்: ப.சிதம்பரம்

புது தில்லி, மார்ச் 5: வேளாண் துறை வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள்தான்; தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் மேம்பாடும் அதில் அடங்கும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார்.

மேலும், பட்ஜெட்டில் அறிவித்த வரி விதிப்புகளைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“”ஒரு வரியைத் திரும்பப் பெற்றால், அதற்குப் பதிலாக வேறொரு வரியைத்தான் விதிக்க முடியும். எனவே, ஒருவர் மீதான வரியைத் திரும்பப் பெற்றால் அவர் மகிழ்ச்சி அடைவார். அதையே வேறொருவர் மீது விதிக்கும்போது அவர் வருத்தமடைவார். எனவே, எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்த முடியாது” என்றும் அவர் கூறியுள்ளார்.

பட்ஜெட் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

நாட்டில் அமல்படுத்தப்பட்டுவரும் பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளால் தொழில் துறை நிறுவனங்களும் சேவைத் துறை நிறுவனங்களும் பல ஆண்டுகளாக இரண்டு இலக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன.

நிறுவனங்கள் லாபம் மீதான வரி, இதர சலுகைகள் மீதான வரி, லாப ஈவுத் தொகை மீதான வரி ஆகியவற்றின் மூலம் அரசுக்குச் செலுத்துவது மிகக் குறைந்த தொகையே ஆகும். தொடர்ந்து லாபம் ஈட்டிவரும் தொழில் துறையினர், மற்றவர்களின் நன்மைக்காகவும் சிறிது தொகையை அளிக்க வேண்டும். அதனால் புதிய வரிகளை பெரிய சுமையாக அவை கூற முடியாது.

ஆரம்பக் கல்வி, உயர்நிலைக் கல்வியை வழங்கவும் பிற்படுத்தப்பட்டோருக்கு உயர்கல்வி அளிக்கவும் பணம் தரப் போகிறார்களா, இல்லையா என்பதே கேள்வி. “ஆம்’ என்றால், தொழில் துறையினர் வரி செலுத்தித்தான் ஆக வேண்டும்.

எச்ஐவி பாதிப்பு, எய்ட்ஸ் நோய், இளம்பிள்ளைவாத நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது, நிலத்தடி நீராதாரத்தைப் பெருக்குவது போன்ற பணிகளில் நாம் போதிய கவனத்தைச் செலுத்தாமல் இருந்துவிட்டோம் என்றே கருதுகிறேன்.

நாடு முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட 70 லட்சம் நீர் ஆதாரங்களை சீரமைத்து, பராமரிப்பதும், வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்கான பெரும் திட்டங்களும்கூட பொருளாதார சீர்திருத்தங்களில் அடங்கும்.

வருமான வரி விதிப்புக்கான வருமான வரம்பு ஒரு லட்ச ரூபாயிலிருந்து ரூ.1,10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இதுவரை ரூ.5 லட்சம் ஆண்டு வருமானம் இருந்தவர்கள் செலுத்திவந்த ரூ.5,000 கூடுதல் வரியானது, ரூ.4,120 ஆகக் குறைந்துவிடும். ஆனால், ரூ.5 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பவர்களில் எத்தனை பேர் வரி கட்டுகிறார்கள்?

நாட்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 3 கோடி. அவர்களில் 1.20 லட்சம் பேர்தான் ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுவதாகக் கூறி, வரி கட்டுகிறார்கள்.

பஞ்சாப், உத்தரகண்ட் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே பட்ஜெட் அறிக்கை அச்சாகிவிட்டது. நாலைந்து வார பணவீக்க விகிதத்தைக் கருத்தில் கொண்டு ஓர் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தயாரிக்க முடியாது; தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்படுவதாகும் பட்ஜெட்.

பணவீக்க விகிதத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன; பணவீக்கம் கட்டுக்குள் வந்தவுடன் வட்டி விகிதங்களும் குறையத் தொடங்கும் என்று கூறியுள்ளார் சிதம்பரம்.

====================================================
பணவீக்கத்துக்கு மருந்து

இராம. சீனுவாசன்

“”அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சு”. அப்படித்தான் பணமும்.

ஒரு நாட்டில் ஓரளவுக்கு பணவீக்கம் இருந்தால் மட்டுமே உற்பத்தியாளர்களின் லாபம் உயர்ந்து பொருள்கள் உற்பத்தியும் பெருகும். பணவீக்கம் கட்டுங்கடங்காமல் உயரும்போது, பணத்தின் மதிப்பு குறைந்து பொருளாதார உற்பத்தியும் பாதிப்படைகிறது. எனவே, அதிக பணவீக்கம் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது என்பது அடிப்படை பொருளாதாரக் கோட்பாடு ஆகும்.

இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 2007-ல் ரிசர்வ் வங்கி, நாட்டின் பணவீக்கம் 2007 – 08ல் 5 சதவீதம் முதல் 5.5 சதவீதமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்டது. இதற்கு ஏதுவாக பண அளிப்பின் அளவு 15 சதவீதமாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டது. இதற்கு மாறாக டிசம்பர் 2006 முதல் பணவீக்கம் 5.5 சதவீதத்தைத் தாண்டி உயர்ந்து கொண்டே இருந்தது. தற்போது இது 6.73 சதவீதம் என்ற அளவை பிப்ரவரி 3, 2007 அன்று எட்டியது. உயர்ந்து வரும் பணவீக்கம் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது.

பணவீக்கம் என்பது நாட்டின் பொது விலை மட்டம் உயரும் விகிதம். இது நாட்டில் எல்லாப் பொருள்களின் விலைகளும் சராசரியாக எவ்வளவு சதவீதம் உயர்ந்திருக்கிறது என்பதைக் குறிப்பிடுகிறது.

இந்தியாவில் பணவீக்கம் ஒவ்வொரு வாரமும் கணக்கிடப்பட்டு, முந்தைய ஆண்டில் அதே வாரத்தில் நிலவிய பணவீக்கத்தோடு ஒப்பிடப்படுகிறது.

பணவீக்கத்தின் காரணம் மக்களிடம் உள்ள அதிக பண இருப்பினால், அவர்களின் தேவையும் உயர்ந்து விலைவாசி உயர்வையும் தூண்டுகிறது என்றும், மக்களின் தேவைக்கேற்ப உற்பத்தி பெருகாமல் இருப்பது பணவீக்கத்தின் காரணம் என்று இரு வேறு காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

அதிக அளவு பண அளிப்பும், தேவையை விட குறைவான உற்பத்தி அளவும் ஆகிய இரண்டு காரணங்களும் பணவீக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை ஒப்புக்கொள்வதுபோல ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

“ரெப்போ’ என்பது, வங்கிகள் போதிய பணம் இல்லாதபோது, தங்களிடம் உள்ள கடன் பத்திரங்களை வைத்து ஒரு சில நாள்களுக்குக் கடன் தொகை பெறுவதற்கு ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தமாகும். இதற்காக ரிசர்வ் வங்கி வசூலிக்கும் வட்டி விகிதம் “ரெப்போ ரேட்’ என்று குறிப்பிடப்படும்.

“”ரெப்போ ரேட்” உயரும்போது, வங்கிகள் தாங்கள் கடன் பெறுவதைக் குறைத்து, கடன் கொடுப்பதையும் குறைக்கும். மேலும் வங்கிகள் கொடுக்கும் கடன் மீதான வட்டி வீதம் “ரெப்போ ரேட்டை’விட அதிகமாக இருக்கும்.

“ரிவர்ஸ் ரெப்போ’ என்பது, வங்கிகள் அளவுக்கு அதிகமான பணத்தை, ரிசர்வ் வங்கியிடம் ஒரு சில நாள்களுக்கு வைப்புத் தொகையாகக் கொடுத்து அதற்கான வட்டியைப் பெறும் ஒப்பந்தமாகும். இதற்காக ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி வீதத்துக்குக் குறைவான வட்டியில் வங்கிகள் மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பதில்லை.

பண இருப்பு விகிதம்: வங்கி பெறும் வைப்புத் தொகையின் ஒரு பகுதி பணமாக ரிசர்வ் வங்கியில் வைக்கப்பட வேண்டும். பண இருப்பு விகித அளவை அதிகப்படுத்தும்போது, வங்கியினால் கொடுக்கப்படும் கடன் அளவு குறைந்து பண அளிப்பும் குறையும்.

பணவீக்கத்தைக் குறைக்க “ரெப்போ ரேட்’ பண இருப்பு விகிதம் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. மேலும் வங்கிகள் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளுக்குக் கடன் கொடுப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு புதிய கட்டளைகளையும் பிறப்பித்தது. இதற்கு அவர்கள் கூறும் முக்கியக் காரணம், இந்த ஆண்டு தொடக்கம் வரை நாட்டின் மொத்த பண அளிப்பு எதிர்பார்த்த 15 சதவீதத்தைக் கடந்து 20 சதவீதம் என்ற நிலையை எட்டியுள்ளது. அதேபோல் வங்கிகள் கொடுக்கும் கடன் அளவும் 31 சதவீதம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.

எனவே ரிசர்வ் வங்கியின் பார்வையில் பொருளாதாரத்தில் பண அளிப்பு உயர்ந்தது பண வீக்கத்துக்கான மிக முக்கியக் காரணம் என்ற கருத்தை உருவாக்கியுள்ளது. ரிசர்வ் வங்கி எடுத்து வந்துள்ள இந்த நடவடிக்கைகள் பொருளாதாரத்தில் உண்மை வட்டி விகிதத்தை உயர்த்தும். இதன்மூலம் மக்கள் கடன் பெறும் அளவும் குறைந்து மொத்த பண அளிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி எடுத்து வரும் நடவடிக்கைகள் உடனடியாக பண அளிப்பைக் குறைக்காது என்று ஒருசில பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அதேநேரத்தில் வேறு பலர் தற்போது நிலவி வரும் பணவீக்கத்துக்கு அதிக அளவில் பண அளிப்பு மட்டுமே காரணம் அல்ல, அதைவிட மிக முக்கியமான காரணம் போதுமான அளவிற்கு உற்பத்தி உயராமல் இருப்பதும் காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, பொருளாதாரத்தில் வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம், உற்பத்தித் திறனை மேலும் குறைப்பதற்கான வழிவகைகளை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

பணவீக்கத்தின் மிக முக்கியக் காரணம் பொருளாதாரத்தில் தேவைக்கேற்ப பொருள்களின் உற்பத்தி அளவு இல்லை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக விவசாயப் பொருள்களின் விலைகள் மிக வேகமாக அதிகரித்து வருவது, பொருளாதாரத்தில் தேவைக்கேற்ப பொருள்களின் அளிப்பு உயர்வதில் உள்ள சிக்கல்களை எடுத்துக்காட்டுகின்றது என்பது ஒருசாராரின் கருத்து.

இதை ஒப்புக்கொள்வதுபோல, உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை நிறுத்துவது, இறக்குமதியை ஊக்கப்படுத்துவது, உணவுப் பொருள்கள் ஊக வாணிபங்களை நிறுத்துவது, எல்லா பொருள்களின் உற்பத்திக்கு அடிப்படையாக உள்ள பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைப்பது, சிமெண்ட், அலுமினியம் மீதுள்ள சுங்கத் தீர்வைகளைக் குறைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் எல்லாம் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே. ஏனெனில் பொருள் உற்பத்தி மற்றும் அளிப்பினை மிகக் குறுகிய காலத்தில் குறிப்பாக விவசாயப் பொருள்களின் அளவை உயர்த்த முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. எனவே, பணவீக்கத்தைக் குறைப்பது ஒரு மிக நீண்ட கால முயற்சியாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

நாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கை 1991 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தைச் சீரமைக்கும் நோக்கத்தோடு பல கொள்கை முடிவுகள், குறிப்பாக வரி, தொழில் துறை மற்றும் வியாபாரம் தொடர்பான கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பொருளாதாரச் சீரமைப்பில் விவசாயத் துறை பங்கெடுக்கவில்லை என்பதே பலரின் குற்றச்சாட்டாகும்.

எனவே, வருகின்ற காலங்களில் விவசாயத் துறையை சீரமைத்து விவசாயப் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலமே, நீண்ட கால நோக்கில் பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்க முடியும் என்று பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

பொருள்களின் தேவைக்கேற்ப உள்நாட்டில் உற்பத்தியை உயர்த்தவும், அதேநேரத்தில் இறக்குமதியை உயர்த்தி மொத்த அளிப்பினை அதிகரிக்கும் நோக்கத்தோடும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

உள்நாட்டில் பொருள் உற்பத்தி அதிகரிக்க வேண்டுமெனில், முதலீடுகள் உயர வேண்டும். இதற்கு வட்டி விகிதம் குறைவாக இருத்தல் வேண்டும். ஆனால் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு, வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இது வருகின்ற காலங்களில் புதிய முதலீடுகளை ஏற்படுத்துவதற்குத் தடையாக இருக்கும்.

ரிசர்வ் வங்கி பண அளிப்பினைக் குறைக்க வேண்டுமெனில், மற்ற நாடுகளின் செலாவணியுடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு உயர வேண்டும். இதனால் இந்தியாவில் அந்நிய நாட்டுப் பொருள்களின் விலை குறைந்து, இறக்குமதி உயரும். இதனால், ரிசர்வ் வங்கியினுடைய பண அளிப்பும் குறையும். இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் உண்மை வட்டி விகிதம் குறைந்து, முதலீடுகள் உயர்ந்து, பொருள்கள் உற்பத்தி அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

எனவே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, பொருள் உற்பத்தியை உயர்த்துவது மட்டுமே சிறந்த வழிமுறையாக இருக்கும்.

(கட்டுரையாளர்: முழு நேர உறுப்பினர், மாநிலத் திட்டக் குழு, தமிழ்நாடு).


தனியார் போட்டி அதிகரித்துள்ள நிலையில் தபால் துறை, வானொலி, தூர்தர்ஷனுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைப்பு

வி. கிருஷ்ணமூர்த்தி

சென்னை, மார்ச் 6: மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் தபால் துறை, செய்தி ஒலிபரப்பு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ரயில்வே துறைக்கு அடுத்தபடியாக மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள இத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

2007-08-ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் புதன்கிழமை தாக்கல் செய்தார்.

இதில் அரசின் அனைத்து துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு விவரங்கள் வெளியிடப்பட்டன.

தபால் துறை: இதன்படி, தயாநிதி மாறன் அமைச்சராக உள்ள தபால் துறைக்கு ரூ. 315 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டு ஒதுக்கப்பட்டதை விட ரூ. 104 கோடி குறைவாகும்.

மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளதும், தனியார் போட்டிக்கு இடையே நிதி பற்றாகுறையால் தத்தளிக்கும் துறையாகவும் உள்ள தபால் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல தபால் அலுவலகங்கள் சொந்த கட்டடம் இல்லாமல் வாடகை கட்டடங்களிலும், பழைய தாற்காலிக கட்டடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.

இத் துறையில் ஆண்டுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தபால் அலுவலகங்கள் தேர்தெடுக்கப்பட்டு அவற்று சொந்த கட்டடம் கட்டப்படுகிறது.

இன்னும் பல அலுவலகங்களில் பெரும்பாலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நிதி பற்றாக்குறையே இதற்குக் காரணமாக கூறப்பட்டு வரும் நிலையில் இத் துறைக்கான ஆண்டு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது இத் துறை ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் தெரிவித்தனர்.

கூரியர்கள் மற்றும் பார்சல் சர்வீஸ்கள் என தனியார்துறையின் போட்டியைச் சமாளிக்க வேண்டிய நிலையில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. போட்டியில் தனியார் துறையினர் முந்திச் செல்ல மறைமுகமாக உதவுவதாக அமையும் என்று ஊழியர் சங்கங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.

வானொலி, தூர்தர்ஷன்: தபால் துறைக்கு அடுத்தபடியாக தனியாரின் போட்டியைச் சமாளிக்க வேண்டியுள்ள துறையான அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் ஆகியவற்றை உள்ளடக்கியது செய்தி ஒலிபரப்புத் துறையாகும்.

இத் துறைக்கு ரூ.475 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்டதை விட ரூ. 63 கோடி குறைவாகும்.

இத் துறையில் ஏற்கெனவே பல பிரிவுகள் நிதி பற்றாக் குறையைக் காரணம் காட்டி மூடப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு நிதி ஒதுக்கீட்டை குறைத்திருப்பது இத் துறையை ஒட்டு மொத்தமாக மூட வழிவகுப்பதாக அமையும் என இத் துறையில் உள்ள ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விமான போக்குவரத்து துறைக்கு அதிக நிதி: சாதாரண மக்களுடன் அதிக தொடர்புள்ள துறைகளுக்கு நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ள மத்திய நிதி அமைச்சர், விமான போக்குவரத்து துறைக்கு ரூ. 12 ஆயிரத்து 347 கோடியை ஒதுக்கியுள்ளார். இது இத் துறைக்கு கடந்த நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்டதைவிட ரூ. 9 ஆயிரத்து 300 கோடி அதிகமாகும்.

காலம் கடந்து விடவில்லை: பட்ஜெட் நிறைவேறுவதற்கு முன்னர் அல்லது திருத்திய மதிப்பீடுகள் அடிப்படையில் அரசு நினைத்தால் தபால்துறை, வானொலி, தூர்தர்ஷன் உள்ளிட்ட துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம் என நிதித்துறை வல்லுநர்கள் தெரிவித்தனர்.


வருமான வரி

என்.வி. பாலாஜி (nvbalaji@karra.in)

வருமானம் மற்றும் தொழிலில் இருந்து பெறும் லாபத்திற்கான வரி (முதல் பகுதி)

இந்திய வருமான வரி சட்டத்தில் ஐந்து வகை வருமானங்களில் அதிக பிரிவுகளைக் கொண்டது வணிகம் மற்றும் தொழிலிலிருந்து பெறும் லாபத்தின் மீது விதிக்கப்படும் வரியே ஆகும்.

ஒருவர் வணிகத்திலிருந்து ஈட்டும் லாபம் மற்றும் தொழிலிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கு இந்த பிரிவின் கீழ் வரி விதிக்கப்பட்டு வருகிறது.

வரையறுக்கப்பட்ட செலவுகளை, தொழில்.வணிகத்திலிருந்து ஈட்டும் வருமானத்திலிருந்து கழித்து வரும் தொகை வரிக்கு உட்படுத்த வேண்டிய லாபமாகும்.

இன்று வருமானத்தைப் பற்றி அறிவோம்:

கீழ்க்காணும் வருமானங்கள் இந்த தலைப்பின் கீழ் கொண்டு வரப்படும்.

1. ஒரு வணிகர் தன் வணிகத்தில் பொருட்களை விற்று ஈட்டும் வருமானம்.

2. ஒரு தொழிலாளர் தன் தொழில் மூலம் ஈட்டும் வருமானம்.

3. ஒரு வணிகத்தை, தொழிலை மாற்றியமைக்க பெறும் இழப்பீட்டுத் தொகை.

4. ஒருவருக்கு வியாபாரச் சங்கத்தின் மூலம் வரும் வருமானம்.

5. குறிப்பிட்ட ஏற்றுமதியாளர்களுக்கு, அரசாங்கத்தால் வழங்கப்படும் ஏற்றுமதி, இறக்குமதி உரிமத்தை விற்பதின் மூலம் ஈட்டும் வருமானம்.

6. சுங்க வரி மற்றும் கலால் வரி பாக்கி அரசாங்கத்தால் தளர்த்தப்பட்டால் வருமானமாகக் கருதப்படும்.

7. சுங்க வரி மற்றும் கலால் வரி அரசாங்கத்திற்கு செலுத்தப்பட்டு, பிறகு திருப்பித் தரப்பட்டால் (தங்ச்ன்ய்க்) வணிகத்தில் வருமானமாகக் கருதப்படும்.

8. ஒரு கூட்டாளி, தன் கூட்டாண்மையிலிருந்து பெறும் சம்பளம், லாபம், பங்கு, ஊக்கத் தொகை போன்றவை வருமானமாகக் கருதப்படும்.

9. ஏற்றுமதிக்காக அரசாங்கத்திலிருந்து பெரும் ரொக்கச் சலுகை, மற்றும் இதர சலுகைகள், எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும், வணிகத்தில் வருமானமாகக் கருதப்படும்.

இந்த வருமானங்களுக்கு எதிராக வழங்கப்படும் வரையறுக்கப்பட்ட செலவுகள் பற்றி பிறகு காணலாம்.

வருமானங்கள் மற்றும் லாபங்கள் ஒருவர் தனது கணக்கு புத்தகங்களை சரிவர பராமரித்தால் மட்டுமே கணக்கிடக் கூடும். சிறு தொழிலாளர்கள் தங்கள் செலவு கணக்குகளை சரிவர வகுக்க முடியாது. அப்படி உள்ள நிலையில், சிறு தொழிலாளர்கள் தங்களது வருமானம் 40 லட்சத்திற்கு கீழ் உள்ள நிலையில், தங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை லாபமாகக் காட்டி, அதற்கு வரி செலுத்தலாம். இது கீழ் வருபவைகளுக்கு பொருந்தும்.

1. கட்டடம் கட்டுபவர் அல்லது கட்டடம் கட்டுவதற்காக ஆட்களை ஏற்பாடு செய்து தருபவர், தனது மொத்த வருமானத்தில் 8% லாபமாகக் காட்டி வரி செலுத்தலாம்.

2. சில்லறை வியாபாரி, தனது வருமானத்தில் 5% லாபமாகக் காட்டி வரி செலுத்தலாம்.

3. ஒரு வருடத்தில் 10-க்கு மேற்படாமல் சரக்கு வாகனங்கள் வைத்து இயக்குபவர், தனது வருமானத்தை கீழ்வருமாறு கணக்கிடலாம்.

– ஒரு கனரக சரக்கு வாகனத்திற்கு மாதம் ரூ.3,500.

– இதர வாகனங்களுக்கு மாதம் ரூ.3,150.

இவை அனைத்தும் வருமானம் 40 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த பிரிவின் கீழ் வரும் நபர், தனது லாபம் இப்படி கணக்கிடுவதை விட குறைவாக இருக்கும் என்று எண்ணினால், அதற்கு தகுந்த புத்தகங்களை சமர்ப்பித்து, குறைந்த லாபத்திற்கு வரி செலுத்தலாம்.


Posted in 2007, 2007-08, Accounting, Agriculture, Allocation, Analysis, Assets, Budget, Chidambaram, Commerce, Communist, Congress, CPI, CPI(M), Deflation, Department, Details, Economy, Education, Expenditure, Finance, Government, Gurumoorthy, Gurumurthy, Healthcare, India, Inflation, Information, infrastructure, Mail, markets, Marxist, Minister, P Chidambaram, P Chidhambaram, Pa Chidambaram, Perspectives, Postal, Private, Projects, Public, Radio, Recession, revenue, S Gurumoorthy, S Gurumurthy, Sector, Shares, Statement, Stocks, Tax, TV | 1 Comment »