Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Governments’ Category

Backward Region Grant Fund: Appraisal of Panchayat Raj by Mani shankar Iyer – Failure of local governments

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2007

மக்களைச் சென்றடையுமா மத்திய அரசின் நிதி?

க. பழனித்துரை

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பாக “”பிற்படுத்தப்பட்ட பகுதி மேம்பாட்டுக்கான நிதி” என்ற தலைப்பில் தில்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் மணிசங்கர் அய்யர், அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவலைக் கூறினார். இந்தியாவில் உள்ள மிகவும் பின்தங்கிய 250 மாவட்டங்களில், வறுமையைக் குறைக்கவும் பஞ்சாயத்துகளுக்கு வலுவூட்டவும் தமது அமைச்சகத்தில் ரூ. 4,600 கோடி நிதி உள்ளது என்று அவர் கூறினார்.

இந்த நிதியைப் பயன்படுத்த மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தயாரித்துத் தரவேண்டும். இத் திட்டத்தில் இரண்டு முக்கியக் குறிக்கோள்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஒன்று – வறுமைக் குறைப்பு; மற்றொன்று – ஊராட்சியை வலுப்படுத்துதல். இதுவரை, ஒரு சில மாவட்டங்கள் மட்டும் 220 கோடி செலவு செய்து பணிகளை நிறைவேற்றியுள்ளன. எஞ்சிய தொகை செலவிடப்படாமல் அமைச்சகத்தில் அப்படியே இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

பணமிருந்தும் தேவை இருந்தும் ஏன் செலவிடப்படவில்லை என்றால், மாவட்டத்திற்கான திட்டத்தைத் தயாரித்துத்தர மாவட்டத் திட்டக்குழுக்களால் இயலவில்லை. இந்தப் புதிய திட்டம் பலருக்குப் புரியவுமில்லை. திட்டமிட்டுச் செயலாற்ற நம் பஞ்சாயத்துகள் இன்னும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை.

உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து திட்டங்களை வாங்கி மாவட்டத் திட்டக்குழு தொகுத்து மாநில அரசின் உயர்நிலைக் குழுவின் ஒப்புதலுடன் அனுப்பினால் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ. 15 கோடி வரை கிடைக்கும். அதேபோல் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த, தலைவர்களையும் அதிகாரிகளையும் பயிற்சியளித்துத் திறன் கூட்டுவதற்கு ஆண்டுக்கு ஒரு கோடி வீதம் ஆறு ஆண்டுகளுக்கு ரூ. 6 கோடி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டமும் ஐந்தாண்டுக்கான திட்டத்தைத் தயாரிக்கும்போது மக்களின் தேவைகளையும் அரசாங்கத்தின் திட்டங்களையும் ஒன்றுசேர்த்து இணைத்துவிடலாம். இதன்மூலம் அரசுத்துறைகள், பஞ்சாயத்துக்கு செய்கின்ற பணிகள் அனைத்தையும் இத்துடன் இணைத்து விடும். அதுமட்டுமல்ல, பஞ்சாயத்துடன் சேர்ந்து வேலைசெய்யவேண்டிய கட்டாயத்திற்கு அரசுத்துறை அலுவலர்களும் வந்துவிடுவார்கள்.

வாய்ப்பிருந்தும் மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் நிதி பெறுவதற்கும் பஞ்சாயத்துகளை வலுப்படுத்தவும் ஏன் பணியாற்றவில்லை என மணிசங்கர் அய்யர் அந்த நிகழ்ச்சியில் ஒரு கேள்வியை எழுப்பினார்.

மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது புலனாகிறது. இந்த நிதியை எப்படியாவது தங்கள் மாவட்டத்திற்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற ஆவல் அனைவரது பேச்சிலும் தொனித்தது. பெரும்பாலான மாநிலங்கள் மாவட்டத் திட்டக்குழுக்களை வலுப்படுத்தவில்லை.

தமிழகத்தைப் பொருத்தவரை,

  • திருவண்ணாமலை,
  • கடலூர்,
  • விழுப்புரம்,
  • திண்டுக்கல்,
  • நாகப்பட்டினம்,
  • சிவகங்கை

ஆகிய மாவட்டங்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுபவை. ஒட்டுமொத்தமாக இந்த ஆறு மாவட்டங்களுக்கும் ரூ. 85.39 கோடி பணிகளுக்காகவும் ரூ. 36 கோடி பயிற்சிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்த ஒதுக்கீட்டில் ரூ. 120 கோடி தமிழகத்துக்கு வரவேண்டும்.
வட மாநிலப் பிரதிநிதிகள் பலர், விரைவில் இதற்கான திட்டத்தினை உருவாக்க முயற்சி செய்கிறோம் என்று உறுதியளித்தனர். அப்பொழுது குறுக்கிட்ட மணிசங்கர் அய்யர், இதுவரை 31 மாவட்டங்கள் திட்டங்களைத் தயாரித்து அனுப்பிவிட்டன என்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மாவட்டத் திட்டக்குழுக்கள் மிக நல்ல திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இப்படி மத்திய அரசு தரும் நிதியை,

  • பஞ்சாயத்து அலுவலகக் கட்டட விரிவாக்கம்,
  • இந்திரா குடியிருப்புத் திட்ட வீடுகளைப் பழுதுபார்த்தல்,
  • பாலவாடி, அங்கன்வாடி கட்டடங்களைப் பழுதுபார்த்தல்,
  • புதிய கட்டடம் கட்டுதல்,
  • பள்ளிக் கட்டடங்கள் சீரமைப்பு,
  • விளையாட்டு மேம்பாட்டிற்கு வசதிகள்,
  • கழிப்பறை,
  • சுற்றுச்சுவர்,
  • மேஜை, நாற்காலி வாங்குதல்
  • மதிய உணவு சமையலறைக் கட்டடம்

உள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என விளக்கினார் அமைச்சர்.
மத்திய அரசு 99 வகையான திட்டங்களின் மூலம் செலவிடும் தொகை ரூ. 81,000 கோடி. இதே திட்டங்களுக்கு வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒதுக்கிய நிதி ரூ. 32,000 கோடி. இன்றைக்கு இந்தத் திட்டங்களில் 10 சிறந்த திட்டங்களின் மூலம் ஊரக வளர்ச்சி அமைச்சகம் கிராம அளவில் மேம்பாட்டுக்காகச் செலவிடும் தொகை ரூ. 65,000 கோடி என்பது குறைவான தொகை அல்ல.

இந்தத் தொகை முழு அளவில் பயனாளிகளைச் சென்றடைய வேண்டும். இந்த நிதி பஞ்சாயத்து மூலமாக மக்களைச் சென்றடைவதில்லை; துறைகள் மூலமாகவே செலவிடப்படுகின்றன. பின்தங்கிய மாவட்ட மேம்பாட்டு நிதித் திட்டத்தில், மாவட்டத்திற்கு ஒரு வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி எல்லா அரசின் திட்டநிதிகளையும் இந்தத் திட்டத்திற்குள் கொண்டுவந்துவிட்டால், பெருமளவில் ஊழலைக் குறைத்துவிடலாம் என அரசு கருதியதால், இத்திட்டத்தை வலியுறுத்தி வருகிறது.

பின்தங்கிய மாவட்ட நிதியுதவி திட்டத்தின் நோக்கம் வறுமையைக் குறைப்பது மட்டுமல்ல; பஞ்சாயத்தையும் மாவட்டத் திட்டத்தையும் வலுப்படுத்துவதும்தான்.

கருத்தரங்கில் நிறைவுரை ஆற்றிய திட்டக்குழுத் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா “”இந்தத் திட்டத்தின் அடிப்படையே மாவட்டத்தில் திட்டமிடுதல்” என்ற வழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்று கூறினார். கிடைக்கும் நிதியை முறைப்படி கிராமங்களிலும் நகரங்களிலும் பயன்படுத்தினால் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கமுடியும். இதைத்தான் உள்ளாட்சிகள் செய்யவேண்டும். இதை உணர்ந்து மாவட்டத்திற்கு ஒரு திட்டத்தினை உருவாக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசின் நிதியை வாங்க ஏன் தயக்கம் என்று வடமாநிலங்களிலிருந்து வந்த சில தலைவர்களையும், அதிகாரிகளையும் கேட்டபோது, பணம் வாங்கத் தயக்கம் இல்லை; மத்திய அரசு வகுத்த விதிமுறைகளைப் பின்பற்றி, ஒரு மாவட்டத் திட்டம் தயாரிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதான வேலை அல்ல என்று கூறினர்.

ஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், நகராட்சி போன்றவற்றிலிருந்து திட்டங்களைப் பெற்று தொகுத்து மாவட்டத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். இதற்குப் புள்ளிவிவரம் தேவை.

அரசின் நலத் திட்டங்களைக் கண்டுபிடித்து தேவைகளுடன் பொருத்தவேண்டும். மத்திய, மாநிலத் திட்டங்கள் மாவட்டத் திட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டால், மாவட்ட அரசுத்துறைகள், அதிகாரிகள் நினைத்தபடி செயல்பட முடியாது. இது, நிதிவிரயத்தைப் பெருமளவில் குறைத்துவிடும். அத்துடன் ஊழலையும் குறைத்துவிடும்.

ஆனால் மாவட்டங்களில் உள்ள திட்டக்குழு, கேரளத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் வலுவாக – அதிகாரிகள், நிபுணர்கள் அடங்கியதாக இல்லை. மாநில அரசின் வளர்ச்சித் துறை அதிகாரிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்றால் திட்டம் தயாரிப்பது என்பது ஒரு கானல்நீர்தான் என்று பதிலளித்தனர் பலர்.

இந்தத் திட்டத்தை மேலோட்டமாகப் பார்த்தால், மத்திய அரசு ஒரு மாவட்டத்திற்கு அளிக்கும் 20 கோடி ரூபாய்க்கு இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய வேண்டுமா எனத் தோன்றும். ஆனால் இந்தத் திட்டம் பணத்திற்காக அல்ல. இந்த நிதி பெரும்பாலும் திட்டத்தில் உள்ள இடைவெளியை அடைப்பதற்காகத்தான்.

மாவட்டத் திட்டம் உருவாக்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஒரு சில மாநிலங்கள் தங்களுக்கான நிதியைப் பெற முயன்றுள்ளன. திட்டங்களைச் சமர்ப்பித்து நிதியையும் பெற்றுவிட்டன. தமிழகம் இப்பொழுதுதான் இந்தத் திட்டத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது. நமது பஞ்சாயத்துகள் விரைந்து செயல்பட்டு, திட்டத்தினை உருவாக்கி நமக்குக் கிடைக்கக்கூடிய 120 கோடி ரூபாயைப் பெற்று வறுமையைக் குறைக்க முயல வேண்டும்.

—————————————————————————————————————————————————

ஐந்தாண்டுத் திட்டம்: தமிழகம் சாதித்தது என்ன?

 எம். ரமேஷ்

ஐந்தாண்டுகளுக்கொரு முறை ஐந்தாண்டு திட் டங்கள் பற்றி பேசப்ப டுகிறது. இது என்ன வென்று எத்தனை பேருக்குத் தெரியும்.
ஏதோ செய்தித்தாளில் 11-வது ஐந்தாண்டு திட்டம் என்றும் அறிவிப்பு வெளியானது.
இதற்குத் திட்ட ஒதுக்கீடாக ரூ. 36 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மட் டும் தெரியும்.
இந்த ஆண்டு செயல்படத் தொடங்கும் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் தமிழ கத்துக்கு மட்டும் ரூ. 85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தில்லியி லிருந்து திரும்பியவுடன் முதல்வர் கருணா நிதி பெருமைபட அறிவித்தார். ஒட்டு மொத்தமாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ. 10 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
சுதந்திர இந்தியாவில் 1950-ம் ஆண்டு பல்வேறு இலக்குகளை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் கொண்டுவரப்பட் டதுதான் ஐந்தாண்டு திட்டம்.
அந்த வகையில் பல்வேறு இலக்குகளை முன்னிறுத்தி 11-வது ஐந்தாண்டு திட்டத் துக்கு மாநில முதல்வர்கள் ஒப்புதல் அளித் துள்ளனர். இதில் முக்கியமாக வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, அனைவருக்கும் கல்வி, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்து தல், அனைத்துக் கிராமங்களுக்கும் சுகாதா ரமான குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத் தும் 2013-ம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டும் என்று 11-வது திட்டக் காலத் தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சரி, புதிய திட்டத்தைச் செயல்படுத்தும் முன் 10-வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு எந்த அளவுக்கு எட்டப்பட்டுள் ளது என்பதை, காலச் சக்கரத்தைப் பின் னோக்கிப் பார்ப்பது, தவறுகளைக் களை வதற்குப் பயன்படும். ஒட்டுமொத்த இந்தி யாவைப் பார்ப்பதைவிட தமிழகத்தில் மட் டும் எத்தகைய வளர்ச்சி எட்டப்பட்டது, எட்டாமல் விடப்பட்டது எவை எவை என்று பார்ப்பது சாலப் பொருத்தம்.
10-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் தமிழகத்தில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எட்டப்பட்டதோ 5.9 சதவீத வளர்ச்சியே.
இலக்கை எட்டாததற்குக் காரணம் இயற்கை சீற்றம் என்று கூறப்படுகிறது.
இதேபோல வேளாண் துறையில் 4 சத வீத வளர்ச்சி எட்டவேண்டும் என்று இலக் கும், உணவு உற்பத்தி இலக்கும் எட்டப்பட வில்லை.
தொழில்துறையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 7.12 சதவீதம். ஆனால் எட்டி யதோ 5.37 சதவீதம்தான். சேவைத் துறை யில் அபரிமித வளர்ச்சி எட்டப்பட்டு 9.77 சதவீதத்தைத் தொட்டது.
பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட முதலீடு 2,62,502 கோடி. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ. 40 ஆயிரம் கோடி. மத்திய அரசின் பங்க ளிப்பு ரூ. 48 ஆயிரம் கோடி. எஞ்சிய ரூ. 1,74,502 கோடி தனியார் மற்றும் அன்னிய முதலீடு மூலம் திரட்ட இலக்கு நிர்ணயிக் கப்பட்டது. ஆனால் இதில் ஓரளவே எட் டப்பட்டது.
மாநில நிதி பற்றாக்குறையை 3.6 சதவீ தத்திலிருந்து 1.5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது.
ஆனால் மாநில நிதி பற்றாக்குறை 2006-07-ம் ஆண்டில் 2.6 சதவீதமாக இருந்தது.
2007-ம் ஆண்டுக்குள் வறுமை ஒழிப்பு 10 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் 2012-க்குள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோதி லும் தமிழகத்தில் ஏழ்மையில் வாடுவோர் நிலை 22 சதவீதம் என்பது வருத்தமளிக்கும் விஷயமே.
பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்திற் குள் அதாவது 2007-க்குள் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் 100 சதவீத கல்வி அளிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ண யிக்கப்பட்டது. ஆனால் தொடக்கக் கல்வி யைப் பாதியிலேயே கைவிடும் சிறுவர்க ளின் சதவீதம் 3.81 ஆகவும் நடுநிலைக் கல் வியைக் கைவிடுவோர் எண்ணிக்கை 7.58 சதவீதமாகவும் உள்ளதே யதார்த்த நிலை.
22,877 சதுர கிலோமீட்டர் பரப்பள வுள்ள வனப் பகுதியை அதிகரிக்க வேண் டும் என்ற இலக்கும் எட்டப்படவில்லை.
அனைத்துக் கிராமங்களுக்கும் 2007-ம் ஆண்டுக்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அளிக்க வேண்டும் என்ற இலக்கில் 968 கிராமங்கள் விடுபட்டு போயுள்ளன.
தமிழகத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகள் மட்டுமே. ஐடி, ஐடிஇஎஸ், பிபிஓ துறைகள் அபரிமித வளர்ச்சியை எட்டியதை மறுக்க முடி யாது. தொழில்துறை வளர்ச்சியை முடுக்கி விட பிரத்யேகத் தொழில் கொள்கையை யும் தமிழக அரசு வெளியிட்டது.
இதேபோல மக்கள் தொகை பெருக்கத் தைக் கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு இலக்கை எட்டியுள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீத பங்களிப்பை அளித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தமி ழகம். அதேபோல தனிநபர் சராசரி வருவா யிலும் நான்காவது இடத்தில் தமிழகம் உள் ளது பெருமையான விஷயமே.
அதேசமயம் ஏழ்மையில் வாடும் மக்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் நான்கா வது இடத்தில் தமிழகம் உள்ளது வருத்தப் பட வேண்டிய விஷயம். தமிழகத்தில் 80 லட்சம் பேர் வறுமையில் வாடுவதாகப் புள் ளிவிவரம் தெரிவிக்கிறது. இது மொத்த மக் கள் தொகையில் 20 சதவீதமாகும். ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களில் 10 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர் என்பதும் அதிர வைக்கும் உண்மைத் தகவல். ஒட்டு மொத்த இந்தியாவில் இது 6.09 சதவீதமே.
முதலாவது ஐந்தாண்டு திட்டக் காலத் துக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ. 2,069 கோடி.

ஐம்பது ஆண்டுகளில் இதற் கான ஒதுக்கீடு பல மடங்கு அதிகரித்துள் ளது. ஆனால் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டக் காலத்திலும் அதன் இலக்கு எட் டப்பட்டதா என்று திட்டத்தை வகுப்ப வர்கள் அலச வேண்டும். இலக்கு எட்ட வில்லையெனில் அதற்குரிய காரண, காரி யங்களைக் கண்டறிய வேண்டும். வெறு மனே நிதியை ஒதுக்கியதோடு தங்களது கடமை முடிந்து விட்டதாக அரசியல்வா திகளும், கடனே என்று திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகளும் முனைந் தால், நூறாண்டுகள் கடந்தாலும் நிர்ண யிக்கப்படும் இலக்கு வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். அதை எட்டவே முடி யாது.

எம். ரமேஷ்

Posted in 5, Administration, ADMK, Allocation, Appraisal, backward, Biz, BPO, Budget, Buildings, Caste, Census, Center, City, Community, Computer, Control, Council, Development, DMK, Economy, Education, Expenses, Exports, family, Finance, Fund, GDP, Governments, Govt, Grant, Growth, Homes, Housing, Hygiene, Improvements, Inaction, Income, Info, InfoTech, infrastructure, investments, IT, ITIS, JJ, Kalainjar, Karunanidhi, Kids, KK, local, Mani, Mani shankar, ManiShankar, Measures, Metrics, Money, NGO, Outsourcing, Panchayat, Panchayat Raj, Panchayath, parliament, Planning, Plans, Play, Playgrounds, Policy, Poor, Population, Progress, Refer, Reference, Region, Residences, Resources, Restrooms, Rich, Rural, Sanitary, Schools, Sector, Services, Software, Spend, Spending, Sports, Stalin, State, Statistics, Statz, Students, TamilNadu, Teach, Teachers, Technology, Telecom, TN, Toilets, Villages, Zones | Leave a Comment »

Ramar sethu, Minority Governments, Politics+Religion: ‘Thuglaq’ Cho Interview in Dinamani

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2007

Thuklaq Cho Interview Ramar Sethu Ram ADams Bridge BJPசேது சமுத்திரத் திட்டத்துக்குத் தாற்காலிகத் தடை விதிக்கப் பட்டிருக்கும் நிலையில், அர சியல் ரீதியாக எழுப்பப்படும் சர்ச்சைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நீதிமன்றம் சேது சமுத்திரத் திட்டத்துக்குத் தடை எதுவும் விதிக்கவில்லை.
ராமர் பாலத்தை இடிப்பதற்குத்தான் தடை விதித்தி ருக்கிறது. வேறு மாற்று வழிகள் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவற்றில் ஏதா வது ஒன்றைத் தேர்ந்தெடுத்து சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்றுவதில் யாருக்கும் ஆட்சே பனை இருப்பதாகத் தெரியவில்லை. யாருமே சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்காதபோது ஏதோ அந்தத் திட்டமே கைவிடப்பட்டதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த தமிழக அரசு, முக்கிய மாகத் திமுக தலைமை முயல்கிறது. ராமர் பாலத்தை இடிப்பதில் அவர்களுக்கு இருக்கும் அக்கறை, சேது சமுத்திரத் திட்டத்தில் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

ராமாயணம் என்பது காவியம் என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடுகள் இல்லை. அதற் குப் புனிதத்தன்மை உண்டா, இல்லையா என்ப தில்தானே விவாதமே? ராமாயணம் ஒரு புனிதமான நூல். அது ஏன் புனிதமானதாகக் கருதப்பட வேண்டும் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தால், மற்ற மதங்களின் புனித நூல்களைப் பற்றியும் கேட்கலாம். உலகில் புனிதம் என்று கருதப்படும் எல்லா விஷயங்க ளைப் பற்றியும் கேட்கலாம். மற்ற மதங்களைப் பற்றிக் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. எப்படி மற்ற மதங்க ளின் நூல்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகின் றனவோ அதேபோல இதுவும் ஏற்றுக்கொள்ளப் பட வேண்டும். எப்படி மற்ற மத நூல்களை விமர்ச னம் செய்து அவர்களது மனம் புண்பட்டு விடக்கூ டாது என்று நினைத்துச் செயல்படுகிறார்களோ } முதல்வர் கலைஞர் எப்படிச் செயல்படுகிறாரோ – அதேபோல இந்துமத நம்பிக்கைகள் விஷயத்தி லும் செயல்பட வேண்டும்.

சேது சமுத்திரத் திட்டம் ராமர் பாலப் பிரச்னை யாக மாறி இப்போது ராமர் கடவுளா கட்டுக்க தையா என்று திசை திருப்பப்பட்டிருக்கிறதே, அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? யார் திசை திருப்பியது?

மத்திய அரசுதான் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில் ராமரும் மற்ற கதாபாத்திரங்க ளும் வெறும் கற்பனையே என்று குறிப்பிட்டது.

அதனால்தான் மத்திய அரசு தனது தவறை உணர்ந்து தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தைத் திரும்பப் பெற்றது. அப்போது ஆரம்பித்ததுதான் இந்த விவாதம். இப்படி ஒரு விவாதத்தை ஆரம் பித்தது ஏன் என்று மத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும்.
இந்த விஷயத்தில் தீர ஆராயாமல் மத்திய அரசு செயல்பட்டது என்று கூறலாமா? ஆராய்ந்தார்களா இல்லையா என்பது தெரி யாது. ஆனால், இதை நாங்கள் ஆராயத் தேவை யில்லை, அதனால் நாங்கள் ஆராய்ச்சி செய்ய வில்லை என்று இந்தியத் தொல்லியல் துறை (Archaeological Survey of India) கூறுகிறது.
அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் புவி இயல் துறை (Geological Survey of India) ஆராய்ச்சி செய்திருக்கிறது என்பது அவர்கள் வாதம். புவி இயல் துறை என்பது ஓர் இடம் அல் லது பொருள் எந்த அளவுக்குப் பழமையானது என்பதைத் தீர்மானிக்கும் துறை. கால நிர்ணயம் செய்வது மட்டும்தான் அவர்களது வேலை. மனித முயற்சி எந்த அளவுக்கு இருந்தது என்பதைத் தீர் மானிக்கக் கூடிய வல்லுனர்களோ செயல்திறனோ அந்தத் துறைக்கு இல்லை என்பது பல நிபுணர்க ளால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் ஒருவரே இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். புவி இயல் துறை யின் ஆராய்ச்சிப்படியே, இந்த ராமர் சேது பல்லா யிரம் ஆண்டுகள் பழமையானது என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அது நமது நம்பிக்கையுடன் ஒத்துப்போகும் விஷயம்.

தொல்லியல் துறையின் ஆராய்ச்சியும் ஆய்வறிக்கையும் இல்லாமல் இது வெறும் மணல் திட்டுகள் என்று கூறுவதை எப்படி விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சி முடிவு என்று கூறுகிறார்கள் என்பது புரியவில்லை.

விஷயம் இப்போது திசைமாறி இறை நம் பிக்கை சார்ந்ததாக மாறிவிட்டது.

ராமர் காவிய நாயகன் மட்டும்தானா அல்லது கடவுளா? நீங் கள் என்ன நினைக்கிறீர்கள்?

இப்போது எல்லா மதங்களாலும் வணங்கப்ப டும் கடவுள்கள் கடவுள்கள்தானா? ஏன் இந்தக் கேள்வி எழுப்பப்படவில்லை? ஏனென்றால், அது நம்பிக்கை. உலகில் மிகச் சிறுபான்மையினர் தவிர மற்ற அனைவரும் ஏதாவது ஒரு கடவுளை வணங் குகிறார்கள். நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை மதிக்கப்பட வேண்டும். அதேபோல, இந்த நம்பிக் கையும் மதிக்கப்பட வேண்டும். இப்படியெல்லாம் பேசும் முதல்வர் கலைஞர், கண்ணகியின் சிலையை அது இருந்த இடத்திலேயே திருப்பி வைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததன் காரணம் என்ன? அந்த இடத்தின் மகிமை, அல்லது புனிதம் என்ன? கண்ணகியின் வரலாற் றில் இருப்பதெல்லாம் உண்மைதானா என்பதை எந்த விஞ்ஞான ரீதியாக நிரூபிப்பது?

அது நம் பிக்கைதான். அந்த நம்பிக்கை எப்படி மதிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அதே போல மற்றவர்கள் நம்பிக்கையும் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் ஏன் நினைப்பதில்லை? எந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கை என்ற பெயரில் கேள்வி கேட்கக் கூடாது என்று சொன் னால் எப்படி? அந்த வாதமே பகுத்தறிவுக்கு ஒவ் வாததாக இருக்கிறதே? இன்றைக்கு நீங்களோ நானோ ஒரு மதத்தை ஸ்தாபிக்க முற்பட்டால் அப்போது, நாம் கூறுகிற விஷயங்கள் பற்றி ஆதாரம் கேட்கலாம். ஆனால், பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இருக்கும் மத நம்பிக்கைகளுக்கு ஆதாரம் கேட்டால் எப் படி?

வால்மீகி ராமாயணத்தில் சேது குறிப்பிடப்ப டுகிறது. பாலம் எப்படிக் கட்டப்பட்டது என்று குறிப்பிடப்படுகிறது, அந்த இடம் புனிதமானது என்றும் சொல்லப்படுகிறது. இதைப் பல்லாயிரம் ஆண்டுகளாக நமது முன்னோர்கள் நம்பினார்கள்.
அன்றிலிருந்து இன்று வரை பெருவாரியானவர் கள் நம்புகிறார்கள்.

வால்மீகி ராமாயணப்படி ராமர் சோமபானம் அருந்தினார், குடிகாரர் என்பது போன்ற முதல்வர் கருணாநிதியின் கருத்துகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வால்மீகி ராமாயணத்தில் ராமர் குடிகாரர் என்று எங்கும், எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.
“சோம’ என்கிற கொடியிலிருந்து எடுக்கப்படும் சாறுதான் இந்தச் சோமபானம். இது அமுதத்துக்கு நிகரானது என்றும் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. அது போதை வஸ்து அல்ல. சோமபானம் பற்றி வேதங்களிலும், புரா ணங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வேடிக்கை என்னவென்றால், அந்த சோமபானத் தைக்கூட ராமர் அருந்தியதாக ராமாயணத்தில் எந்த இடத்திலும் கிடையாது. அனுமன் சீதையி டம் மாமிசம், மது இரண்டையும் ராமர் தொடுவ தில்லை என்று கூறுவதாக வருகிறது. ராமர் பிராம ணன் அல்ல, க்ஷத்திரியன். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அரச குடும்பத்தினர் மாமிசம் சாப்பிடு வதை எந்தத் தர்மமும் வேதமும் தடுக்கவில்லை.

ஆனால், வால்மீகி ராமாயணத்தில் ராமர் மாமிசம் சாப்பிட்டதாகக்கூட எந்த இடத்திலும் இல்லை.
இந்த இடத்தில்கூட, மாமிசம் என்பதற்குப் பழங்க ளிலுள்ள சதைப்பிடிப்பான பாகங்கள் என்பதாகத் தான் அர்த்தம் சொல்லப்பட்டிருக்கிறது.

மது அருந்துவதில்லை என்பதற்கு என்ன விளக்கம்? மது என்பது மலர்களில் இருந்து கிடைக்கும் மக ரந்தம். அதாவது, தேன் என்பது போதை வஸ்து என்கிற அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. சமஸ் கிருதத்தில் மது என்பது தேன். தேன் என்றால் } மகரந்தம், தேன், பால், சுவையுள்ள ரசம் என்றெல்லாம் அர்த்தம். தமிழில் மது என்பது போதை வஸ்து. போதை வஸ்து சுராபானம் அல்லது பானம் என்றுதான் ராமாயணத்திலும் வட மொழி நூல்களிலும் குறிப்பிடப்படுகிறது.
நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கக் கூடாது என்கிறீர்கள். அதனால் ராமர் பாலம் இடிக்கப்படக் கூடாது என்பதுதான் உங்கள் வாதம், சரிதானே? இதுவரை நான் ராமர், ராமர் சேது என்பதெல் லாம் நம்பிக்கையின்பாற்பட்ட விஷயங்கள் என் றும் இதற்கெல்லாம் ஆதாரம் கேட்க முடியாது, என்றும்தான் வாதிட்டு வந்திருக்கிறேன். ஆனால் இன்று இவற்றை எல்லாம் நிரூபிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. “பாரத் க்யான்’ என்ற அமைப்பை நடத்துகிற டி.கே. ஹரி என்பவர் ஒரு பல் ஊடக விளக்கம் (Multi media presentation)- ஐ எனக்குக் காண்பித்தார். அதில் ராமர் வாழ்ந்ததற்கும், இந்த அணை கட்டப்பட்டதற்கும் பகுத்தறிவாளர்கள்கூட மறுக்க முடியாத வலு வான ஆதாரங்கள் உள்ளன. இது இன்னும் ஒரு சில நாட்களில் இணையத்தில் (Internet) கிடைக் கும் என்றும் அது இந்தப் பிரச்சினையில் தெளி வைத் தரும் என்றும் கூற விரும்புகிறேன்.

ராமர் பாலமா மண் திட்டா என்பது அல்ல பிரச்னை. அது எதுவாக இருந்தாலும் வளர்ச்சித் திட்டத்துக்குத் தடையாக இருப்பதை அகற்றுவ தில் என்ன தவறு?

கபாலீஸ்வரர் கோவிலை இடித்து விட்டால் வாகனங்களை நிறுத்த மிகப்பெரிய மைதானம் கிடைக்கும். மைலாப்பூர் மாடவீதிகளில் இருக்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து விடலாம்.

எல்லா நகரங்களிலும் இருக்கும் கோயில்கள், மசூ திகள் மற்றும் மாதா கோயில்களை இடித்து விட் டால் போக்குவரத்து நெரிசலையும் இடப்பற்றாக் குறையையும் தீர்த்து விடலாம். இடித்துவிட வேண்டியதுதானே? செய்து விடுவார்களா? வளர்ச்சிதானே? அதே போல, இதுவும் இடிக்கப்ப டக் கூடாது. அதுவும் நம்பிக்கைக்கு உட்பட்ட விஷயம். இதுவும் நம்பிக்கைக்கு உட்பட்ட விஷ யம். மக்களின் நம்பிக்கையை அலட்சியப் படுத்தக் கூடாது.

இப்படி ஒரு ராமர் பற்றிய சர்ச்சை முதல்வரால் ஏன் எழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? அவருக்கு மத்திய அரசின் மீது அசாத்திய கோபம். மத்திய அரசு முதல்வர் கலைஞரின் வழி காட்டுதலில் நடக்கும் அரசு என்று இவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். அவர்களும் ஆமோ தித்து வருகிறார்கள். இந்த நிலையில், தன் சொல்லை சேது சமுத்திர திட்ட விஷயத்தில் மத் திய அரசு கேட்கவில்லையே என்கிற கோபம் அவ ருக்கு. ராமர் பாலத்தை இடித்தே தீருவோம் என்று உச்ச நீதிமன்றத்தில் சொல்லவில்லையே என்கிற வருத்தம் அவருக்கு.

திமுக கட்டாயப்படுத்தி இருந்தால் மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் அவரது கருத்துப்படி நடந்திருக்காது என்று நினைக்கிறீர்களா?

ஆதரவை வாபஸ் வாங்குகிறேன் என்று காங்கி ரஸ் சொன்னால் இவரது கதி என்ன? இவர் மத்தி யில் ஆதரவை வாபஸ் வாங்கினாலும், இடதுசாரி களின் ஆதரவு இருக்கும்வரை மன்மோகன்சிங் அரசு ஆட்சியில் தொடர முடியும். ஆனால், அதற் குப் பிறகு மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி திமுக ஆட்சியில் இருக்காது. தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் கூட்டணி இவருக்குத் தேவை. அத னால் ஒருபோதும் மத்திய அரசை வற்புறுத்தவோ, ஆதரவை வாபஸ் வாங்கவோ முதல்வர் கலைஞர் துணியமாட்டார்.

வேதாந்தி என்பவர் முதல்வருக்கு விடுத்தி ருக்கும் கொலை மிரட்டல் பற்றி என்ன கூறுகிறீர் கள்?

அது காட்டுமிராண்டித்தனமான செயல். தனது கூற்றுக்கு அவர் பகவத் கீதையைத் துணைக்கு அழைத்திருப்பது அதைவிட அபத்தம். பகவத் கீதையில் எந்த இடத்திலும் கடவுளை நிந்தித்துப் பேசுபவர்களின் கழுத்தை அறுக்க வேண்டும், நாக் கைத் துண்டிக்க வேண்டும் என்று சொல்லப்பட வில்லை. தவறாக எதையோ பேசிவிட்டு, அதற் குத் தவறாக ஒரு காரணத்தையும் கூறுகிறார் அவர். அவர்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுவதுதான் நியாயம் என்று கருதுகி றேன்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் மத்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை என்ன என்று நினைக்கிறீர்கள்?

என்னுடைய அபிப்பிராயத்தில், இப்போது தேர்தல் நடந்தால் காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பில்லை.
இந்த ராமர் பிரச்னையை மேலும் தவறான அணு குமுறைகள் மூலம் பெரிதுபடுத்தாமல் இருக்கும் வரை, காங்கிரசைப் பொருத்தவரை பெரிய அள வில் பாதிப்புகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை.
ஏனென்றால், முக்கிய எதிர்க்கட்சியான பாஜக இன்னமும் உள்கட்சிக் குழப்பங்களில் சிக்கியிருக்கிறது.

அப்படியானால், இப்போது தேர்தல் நடந்தா லும் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக் குக் கூட்டணி அரசு மீண்டும் அமைவதற்கான வாய்ப்புகள்தான் இருக்கிறது என்று கூறுகிறீர் கள், அப்படித்தானே?

காங்கிரஸ் கட்சி அமைத்திருப்பது ஒரு சிறு பான்மை அரசுதான். ஐக்கிய முற்போக்கு கூட் டணி என்பது இடதுசாரிகளின் தயவில் ஆட்சி அமைத்திருக்கும் ஒரு மைனாரிட்டி அரசு, அவ்வ ளவே. கூட்டணியிலுள்ள கட்சிகளும் சரி, பெரிய அளவில் எந்தக் கட்சியும் பலவீனம் அடைந்திருப் பதாகத் தெரியவில்லை. தமிழகத்தைப் பொருத்த வரை, தேர்தல் என்று வந்தால் அரசியல் மாற்றங் கள் எப்படி ஏற்படும் என்று இப்போது சொல்ல முடியாது.

தமிழகத்தில் எப்படி மாற்றம் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்?

ஒருவேளை, அதிமுக ஒரு வலுவான கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டால், திமுக கூட்டணி இங்கே ஒரு பெரிய சரிவைச் சந்திக்கக்கூடும். அதன் விளைவுகள் நிச்சயமாக மத்தியிலுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குச் சாதகமாக இருக்காது. அப்படி ஒரு மாற்றம் ஏற்படுவதை நாம் ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. அதற்கான வாய்ப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.

இப்போது திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள், அணி மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறீர்களா?

ஏன் மாறக்கூடாது? தனக்குப் பலமான ஒரு கூட்டணி வேண்டும் என்று ஜெயலலிதா உணரமாட்டார் என்று ஏன் நினைக்க வேண்டும்? அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய சரிவு ஏற்பட்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. திமுகவுக்கும் சரி, அதிமுகவைவிட அதிகமான வாக்குகள் இருக்கிறதா என்ன? இந்த இரண்டு கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது அவர்கள் அமைக்கும் பலமான கூட்டணிகள்தான் என்பது ஊரறிந்த உண்மை.

கருணாநிதி கூட்டணி கட்சித் தலைவர்களை மதிப்பது, கலந்தாலோசிப்பது என்று செயல்படுவது போல ஜெயலலிதா செயல்பட மாட்டார் என்று அவர்கள் கருதுகிறார்களே?

கலைஞர் மீது பாமகவுக்கும் சரி, இடதுசாரிகளுக்கும் சரி நம்பிக்கை இருப்பது உண்மையானால், இதுபோல அரசுக்கு எதிராக எதுவும் அவர்கள் பேச வேண்டிய அவசியமே இல்லையே! காங்கிரûஸ எடுத்துக்கொண்டாலும் சரி, இந்த ராமர் சேது பிரச்னைக்குப் பிறகு முதல்வர் கலைஞர் மீதும் திமுகவின் மீதும் மிகவும் கோபமாக இருக்கிறார்கள்; வெளியில் சொல்ல முடியவில்லை, அவ்வளவுதான். முதல்வர் கலைஞர் தோழமைக்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவார், மற்றவர்களைப் பேசவிடுவார், ஆனால் அவர்கள் சொல்வது எதையும் செய்ய மாட்டார். ஜெயலலிதாவிடம் அந்தத் தொந்தரவு எதுவும் கிடையாது. பேசவும் மாட்டார், பேசவிடவும் மாட்டார், அவ்வளவுதான்.

விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்களின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்?

சரத்குமாரின் பலம் என்ன என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும். விஜயகாந்தின் தேமுதிகவைப் பொருத்தவரை, வேறொரு கட்சியின் கூட்டணியில் தனது பலத்தைச் சேர்க்க முடியுமே தவிர, தனித்து வெற்றி பெறுமளவுக்கு அவரது கட்சி பலமடைந்திருப்பதாக நான் நினைக்கவில்லை.

தேமுதிகவின் அடிப்படை அரசியலே திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்று என்பதாக இருக்கும்போது அவர் எப்படி இந்தக் கட்சிகளின் கூட்டணியில் இணைந்துகொள்ள முடியும்?

இப்படிச் சொன்ன கட்சிகள் எல்லாமே, திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கின்றன. மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்திருக்கிறார்கள். காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்க முடியுமானால், திமுகவும் மதிமுகவும் கூட்டணி அமைக்க முடியுமானால், தேமுதிக மட்டும் கூட்டணியில் சேர முடியாதா என்ன? தேமுதிக தனித்து நிற்பதால் எந்தப்பயனும் இருக்காது என்பதுதான் எனது கருத்து.

பாரதிய ஜனதா கட்சியின் வருங்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பாரதிய ஜனதா முதலில் தனது உள்கட்சி குழப்பங்களைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். அத்வானி வருவாரா, வாஜ்பாயி வருவாரா என்ற கேள்விக்குத் தெளிவான பதில் இதுவரை வரவில்லை. நரேந்திர மோடியை காங்கிரஸ் தோற்கடிக்காவிட்டாலும் சரி, நாமே தோற்கடிப்பது என்பதில் பாஜகவிலேயே ஒரு கோஷ்டி முனைப்பாக இருக்கிறது. இதுபோன்ற உள்கட்சிப் பிரச்னைகளை எல்லாம் அவர்கள் தீர்த்துக்கொண்டு, பழையபடி கட்டுக்கோப்பான கட்சியாக மக்கள் மன்றத்தைச் சந்தித்தால் நிச்சயமாக அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது.அது எந்த அளவுக்கு சாத்தியம் என்று கேட்டால், கட்சித் தலைமை எந்த அளவுக்குப் பலமாக இருக்கிறதோ அந்த அளவுக்குச் சாத்தியம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சரி, காங்கிரஸ், பாரதிய ஜனதாக்கட்சி இரண்டுமே இல்லாத மூன்றாவது அணி மத்திய அரசியலில் ஏற்படுவதற்கான வாய்ப்பு எப்படி காணப்படுகிறது?

நிச்சயமாக அதற்கான வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் அல்லது பாஜகவின் ஆதரவோ, பங்கேற்போ இல்லாமல் ஓர் ஆட்சி மத்தியில் அமைவது என்பது சாத்தியமே இல்லை. அப்படி ஓர் ஆட்சி அமைவதைவிட, காங்கிரஸ் அல்லது பாஜக தலைமையில் அமையும் கூட்டணி ஆட்சிதான் நிலையான ஆட்சியாக இருக்கும்.

காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தி கட்சிப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பது பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறதா?

என்னுடைய அபிப்ராயத்தில், ராகுல் காந்தியால் பெரிய அளவில் காங்கிரசுக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்துவிட முடியாது. ராஜீவ் காந்தியேகூட, இந்திரா காந்தியின் படுகொலையால் ஏற்பட்ட அனுதாப அலையினால் ஆட்சி அமைக்க முடிந்ததே தவிர, தனிப்பட்ட செல்வாக்கால் அவரால் வெற்றிபெற முடியவில்லை. காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்திக்கு அங்கீகாரம் இருக்கும் என்பதும் கட்சிக்குப் புத்துணர்வு ஏற்படும் என்பதும் உண்மை. அதற்குமேல், இந்திய அரசியலில் ராகுல் காந்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுவார் என்று நான் நம்பவில்லை. நேரு குடும்பத்தினர் மீது மக்களுக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை இப்போது நிச்சயமாக இல்லை. அப்படி இருந்திருந்தால், காங்கிரஸ் கட்சி ஏன் மைனாரிட்டி அரசை அமைக்க வேண்டும்?

தமிழகத்தைப் பொருத்தவரை கருணாநிதி குடும்பத்தின் வாரிசுத் திணிப்பு எந்த அளவுக்கு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?

முதல்வர் கலைஞரின் குடும்ப அரசியல் நிச்சயமாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்றுதான் நான் எதிர்பார்க்கிறேன். இது நிச்சயமாக அதிமுகவுக்கும் ஜெயலலிதாவுக்கும் மிகப்பெரிய பிரசார ஆயுதமாக இருக்கும். எந்த அளவுக்கு அந்தப் பாதிப்பு திமுகவின் வெற்றி தோல்வியைப் பாதிக்கும் என்று இப்போது சொல்ல முடியாது.

கட்சியைப் பொருத்தவரை ஸ்டாலினை அவர்கள் வாரிசாக ஏற்றுக்கொண்டாகிவிட்டது. அவருக்கு எதிராகக் கட்சியில் யாருமே இல்லை என்றுதான் கூற வேண்டும். ஒரு தேர்தலுக்காவது நிச்சயமாக ஸ்டாலினின் தலைமை ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பிறகு, என்ன நடக்கும், எப்படி நடக்கும் என்றெல்லாம் இப்போதே சொல்லிவிட முடியாது.

இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஆளும் கட்சியே இதுபோன்ற அடையாள வேலைநிறுத்தத்தை அறிவிப்பது தவறு என்று நீதிமன்றங்களே பல தீர்ப்புகள் அளித்திருக்கின்றன. ஆனால் அந்தத் தீர்ப்புகள் வந்தும்கூட இது போன்ற அறிவிப்புகள் தொடர்கின்றன என்பது வருத்தப்பட வைக்கும் விஷயம். தமிழக ஆளும் கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் அறிவித்திருக்கும் இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் வேடிக்கை என்னவென்றால் எதை எதிர்த்து இவர்கள் இந்த பந்த் அறிவிப்பைச் செய்திருக்கின்றனர் என்பது எனக்குப் புரியவில்லை.

காரணம் இல்லாமல் அறிவிக்கப்பட்டிருக்கும் பந்த் இது என்கிறீர்களா?

சேது சமுத்திரத் திட்டத்தை அதிமுக, பாஜக உட்பட யாருமே எதிர்க்கவில்லை. நீதிமன்றமும் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு எந்தவிதத் தடையும் விதிக்கவில்லை. சரி, சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்த பந்த் என்று சொன்னால், இவர்கள்தான் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிறார்கள். மத்திய அரசிலும் அங்கம் வகிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சராக இருப்பது திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலுதான். அப்படியிருக்க இப்படி ஒரு பந்த் அறிவிக்கிறார்கள் என்றால் அதற்கு ஒரே ஒரு நோக்கம்தான் இருக்க முடியும். மக்களை இம்சை செய்வது என்பதுதான் அது.

Posted in Adams, ADMK, BJP, Bridge, Cho, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPM, DMK, Governments, Govt, Interview, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, minority, Paalam, PMK, Politics, Ramar, Rameswaram, Religion, Sethu, Setu, Thuglak, Thuglaq, Thuklak, Thuklaq, TN, TR Baalu, TR Balu, Vijaiganth, Vijaikanth, Vijaya T Rajendar, Vijayaganth, Vijayakanth | Leave a Comment »

Environment Issues Topples World Governments – N Ramasubramanian

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 18, 2006

ஆட்சிகளைக் கவிழ்க்கும் சூழல் பிரச்சினை

என். ராமசுப்ரமணியன்

பலவகை மாசுகள் நம் நாட்டைப் பயமுறுத்தினாலும், கார்பன் வாயு வெளியீடு இந்தியாவிலிருந்து 3% என்றும், தொழில் உற்பத்தி நிலை அதிகரித்த நிலையிலும், இந்த அளவே “”கார்பன் வெளியீடு” என்பது கட்டுக்குள் இருக்கும் நிலையே என்று உலகச் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கணித்திருக்கின்றார்கள்.

இருப்பினும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மையால் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளும் தொடர்ந்து, பல்வேறு துயரங்களுக்கு ஆட்பட்டு வருகின்றன. இப் பிரச்சினை உலகையே மிகவும் பயமுறுத்தும் விஷயமாகப் பேசப்படுகின்றது.

சமீபத்தில், இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதலால் சொத்துகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட உயிரிழப்பு என்பது மிகவும் கொடுமையானது. இந்தச் சுனாமி நமது நாட்டையும் தாக்குமோ என்ற அச்சநிலை நிலவியது. நல்ல வேளை இம் முறை நாம் தப்பித்தோம்!

அடிக்கடி இந்தோனேசியப் பகுதியில் கடல் கொந்தளிப்பு, பூகம்பம் எனப் பல்வேறு பாதகங்கள் ஏற்பட்டு வருகின்றன. அமெரிக்க நாட்டுத் தென் பகுதிகளில் சூறாவளிகள் காலம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலியாவில் சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று பேய்க்காற்று வீசிப் பெரும் பீதியையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தியது. ஜப்பான் நாடு தொடர்ந்து இயற்கைச் சீற்றத் தாக்குதலுக்கு ஆளாகின்றது.

சென்ற ஆண்டு, கத்ரீனா, ரீட்டா போன்ற சூறாவளிகளால் அமெரிக்கா நிலை குலைந்து போய்விட்டது. 2004ஆம் ஆண்டு இறுதியில் சுனாமி எனும் பேரலைத் தாக்கம் இந்தியாவின் பல பகுதிகளிலும், இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து போன்ற பல நாடுகளிலும் பேரழிவை ஏற்படுத்தியது.

இமயமலைப் பனிப்பாறைகள் உருகி திடீர்ப் பெருவெள்ளம், ஆர்டிக் அண்டார்டிக் பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் உயர்தல் என்று பல்வேறு சோதனைகளை உலகம் சந்திக்கின்றது.

இத்தகைய பாதகங்கள் மனிதன் இயற்கையைப் பெருமளவு மாசுபடுத்தியதால் ஏற்பட்ட விளைவுகள் – உலகவெம்மை அதிகரிப்பு, ஓசோன் படலத்தில் ஓட்டை என்று கண்டறிந்து, இனியாவது இயற்கையோடு இணைந்து வாழவில்லையெனில், இயற்கையின் தண்டனையை உலகால் தாங்க இயலாததாக இருக்கும் என்று விஞ்ஞான உலகம் உறுதிபடக் கூறி வருகின்றது.

கார்பன் வெளியீட்டைக் குறைக்க வகை செய்யும் கியூடோ ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தராத அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்குப் பெருத்த எதிர்ப்பு அந் நாட்டிலேயே ஏற்பட்டுள்ளது. அமெரிக்கத் துணை அதிபராகப் பணியாற்றி, ஆறு வருடத்திற்கு முன் அமெரிக்க அதிபர் தேர்தலில் மயிரிழை வித்தியாசத்தில் தோல்வியுற்ற அல்கோர், விரைவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அமெரிக்கக் கடமையும் என்ற வகையில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த புத்தகம் வெளியிட உள்ளார்.

உலகின் முதல் மிகப் பெரிய நிறுவனங்களான எக்ஸôன் மொபில் மற்றும் ஷெல், ஷெவ்ரான் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி உலக மக்களுக்கே எடுத்துச் சொல்லிய வண்ணம் உள்ளன.

உலக அளவில் நடைபெறும் பொருளாதார, அரசியல் உச்சி மாநாடுகளில் இரண்டு விஷயங்கள் நிச்சயமாகப் பேசப்படுகின்றன.

1) ஏழை நாடுகளுக்கு எவ்வளவு, எவ்வாறு உதவுவது என்பது

2) சுற்றுச்சூழல் பாதுகாப்பு.

இந்தப் பேச்சுகளெல்லாம் வரவரச் சடங்குகள், சம்பிரதாயங்கள் போல ஆகிவிட்டன என்று உலகப் புகழ்பெற்ற பத்திரிகைகள் தலையங்கம் எழுதுகின்றன.

வெறும் பேச்சுடன் இல்லாமல், சுற்றுச் சூழல் பாதுகாப்பில் முனைப்புடன் செயலாக்கம் இல்லையென்றால், அரசுகள் கவிழும் என்று சில சமீபத்திய வரலாறுகள் தெரிவிக்கின்றன.

சூடான் நாட்டு அனுபவம்: ஆப்பிரிக்க நாடான சூடானின் மேற்குப் பகுதியிலுள்ள டர்ஃபர் மழைப்பொழிவு அதிகமற்ற வறண்ட பூமியைக் கொண்ட பகுதி. இங்கு வாழும் மக்கள் கால்நடைகள், ஆடு, ஒட்டகம் போன்றவற்றை மேய்ச்சல் பகுதிகளில் வளர்த்து, குறைந்த மழையில் கிடைக்கும் தண்ணீரில் விவசாயம் செய்து வந்தனர். அங்கு சுற்றுச் சூழலுக்குப் பங்கமேற்பட்டு மழை பொழிவது மிகவும் குறைந்ததால், ஏழ்மை அதிகரித்து, மக்கள் கூட்டம் இரு பிரிவாகி ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டு கொல்வது 1980-ல் தொடங்கி, அரசியல் மற்றும் ராணுவக் கலவரங்கள் மிகவும் பெருகி விட்டன. இது தற்போது உலக அளவில் கவலையுடன் பேசப்படுகின்ற விஷயமாகிவிட்டது.

ஈக்குவேடார்: சுற்றுச் சூழல் பாதுகாப்பின்மையால் உண்டாகும் “”எல் நினோ” என்பதால் வெள்ளப் பெருக்கு அல்லது பெரும் வறட்சிகள் ஏற்படுகின்றன. 1998-ல் இந்த “எல் நினோ’வினால் ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்கினால், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய உணவுப் பண்டங்கள், மீன் பண்ணைகள் அழிவினால் வங்கிகளிடமிருந்து வாங்கிய கடன்கள் திருப்பிக் கட்டப்படாததால், பொருளாதாரச் சரிவு ஏற்பட்டது. இதன் விளைவாக, ஈக்குவேடார் நாட்டை அப்போது ஆண்ட அரசு தூக்கி எறியப்பட்டது.

இந்தோனேசியா: எல் நினோவின் இந்தோனேசியத் திருவிளையாடல், வரலாறு காணாத வறட்சி. இந்நிலையில் ஆசிய நிதிச் சந்தையும் நிலை குலைந்தது. இதன் விளைவு 31 வருடம் ஆட்சி புரிந்த சுகர்தோவின் அரசுக்கு முடிவு கட்டப்பட்டது.

தட்பவெப்ப மாறுதல்களால், பெரும் வறட்சி, வெள்ளப்பெருக்கு, புயல்கள், பல்வேறு வியாதிகள் அதிகரிப்பு என்று பல கொடிய விளைவுகள் ஏற்படுகின்றன.

ஆயினும் பொது மேடைகளில் அரசியலுக்கே முக்கியத்துவம் தருகின்றோம். சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய சம்பிரதாயமாக ஏதோ பேசுகிறோம். ஆக அரசும் பொதுமக்களும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி சரியாக உணர்ந்ததாகத் தெரியவில்லை.

பொருளாதார வளர்ச்சி, நாட்டுப் பாதுகாப்பு ஆகியவைகளுக்குச் சுற்றுச் சூழல் பாதுகாப்பும் மிக அவசியமாகின்றது.

“”இனி யார் சுற்றுச் சூழலை உண்மையாகப் பாதுகாக்கத் தேர்தல் வாக்குறுதி தருகின்றார்களோ அவர்களுக்கே நமது ஓட்டு (Vote for environment)’’ என்று பொது மக்கள் முடிவெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. அமெரிக்காவில் 20% மக்கள் இப்படிப்பட்ட எண்ணம் கொண்டுள்ளனர் என்று ஒரு கணிப்பு டியூக் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது.

பல்வேறு பொருளாதார, நாட்டு நலப் பணித் திட்டங்களைப் பற்றி பேசும் அரசியல் கட்சிகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மிக அவசியம் என்று உண்மையாக உணர்ந்து, செயலாக்கம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். இதைப்பற்றி உணரத் தவறினால், மக்களின் நலனுக்கும், நாட்டிற்கும் துரோகம் இழைப்பவர்களாகவே ஆவார்கள். மக்கள் இதைப் பற்றி, தீவிரமாகச் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால், ஆட்சி மாற்றங்கள் கட்டாயம் ஏற்படும்.

இது உலக நாடுகள் அனைத்துக்கும் சொல்லப்படுகின்ற அறிவுரை.

ஐ.நா. மிலினியம் ப்ராஜக்ட் இயக்குநர், ஜெஃப்ரி டி.சாச் இது பற்றி எழுதியுள்ள மிகத் தெளிவான, ஆழமான, ஆய்வுக்கட்டுரையை, உலக நாடுகளிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் படித்து, தகுந்த செயல்முறை வடிவங்கள் அமைப்பது, அரசியல் அமைதிக்கு வழிவகுக்கும்.

இயற்கையின் தீவிரவாதம் சுற்றுச் சூழல் பாதுகாப்பின்மையால் ஏற்படும் என்பது உறுதி. இதன் சக்தி முன் யாரும் எதிர்த்து நிற்க முடியாது என்பதும் உறுதி.

இந்நிலையில், “”சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்று தேவையில்லாமல் பயமுறுத்துவோர் எண்ணிக்கையில் அதிகமாகி விட்டனர், இதெல்லாம் சுத்த வெங்காயம், புகைபிடிப்பது ஒன்றும் கெடுதியில்லை, நமக்குப் பிடித்த எந்த உணவையும் (துரித உணவு – Fast food,  Junk food, தண்ட உணவு  ) ஒதுக்காமல் நாவிற்குப் பிடித்ததைச் சாப்பிடுங்கள். போலி ஆர்வலர்களைக் கண்டு மிரளாதீர்கள். இருக்கிற சில நாள் அனுபவிப்போமே! எதுதான் குறைந்து விடும்” என்றும் ஒருசாரார் வாதிட ஆரம்பித்துள்ளனர்.

இது எப்படி இருக்கு? கழுதைக்கு உபதேசம் காததூரமோ?

Posted in Carbon Emissions, Chevron, Earthquakes, Ecuador, El Nino, Environment, Exxon Mobil, Global Warming, Governments, Hurricanes, Indonesia, N Ramasubramanian, Oil Companies, Ozone, Shell, Sudan, Tamil, Tropical Storms, Tsunami, Vote for environment, World | Leave a Comment »